ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹேவிளம்பி ஆண்டு பலன்கள் !

Page 2 of 2 Previous  1, 2

Go down

 ஹேவிளம்பி ஆண்டு  பலன்கள் !  - Page 2 Empty ஹேவிளம்பி ஆண்டு பலன்கள் !

Post by krishnaamma Sun Apr 16, 2017 4:43 pm

First topic message reminder :

மேஷம்

தழைத்துக் குலுங்கும் மரங்களுக்கு ஆதாரமாக விளங்கும் ஆணி வேரைப் போல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதி காப்பவர்களே! யார் மனதும் நோகாமல் பேசும் நீங்கள், சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு கோடை மழையாக கொட்டுவீர்கள். மந்திரி முதல் அடிமட்டத் தொண்டன் வரை அனைவரின் திரைமறைவு வேலைகளையும் சுட்டிக் காட்டிப் பேசுவதால் உங்களை சிலர் அரை கிறுக்கன் என்பார்கள்! உங்கள் ராசிக்கு தனாதிபதியாகிய சுக்கிரன் 12வது வீட்டிலே உச்சம் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஹேவிளம்பி ஆண்டு பிறப்பதால் வீடு, மனை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். ஏற்கனவே வாங்கி வைத்திருக்கக்கூடிய வீட்டுமனையிலே வீடு கட்டத் தொடங்குவீர்கள்.

வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். உங்களுடைய ராசியை சந்திரன் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் அழகு, இளமை அதிகமாகும். உங்களின் பாக்யாதிபதியாகிய குருபகவான் 1.9.2017 வரை 6வது வீட்டிலே மறைந்து காணப்படுவதனால் அதுவரை செலவுகளும், அலைச்சல்களும், கடன் பிரச்னைகளும் இருந்து கொண்டே இருக்கும் 2.9.2017 முதல் 13.2.2018 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டிலே அமர்ந்து உங்கள் ராசியை நேருக்குநேர் பார்க்க இருப்பதனால் பிரிந்திருந்த கணவன்மனைவி ஒன்று சேருவீர்கள்.

மன இறுக்கங்களெல்லாம் விலகும். மகளுக்கு தள்ளிப்போன திருமணம் வெகுவிமர்சையாக நடைபெறும். அரைகுறையாக இருந்த வீட்டை கட்டி முடித்து புது வீட்டிலே மகிழ்ச்சியாக குடிபுகுவீர்கள். வேலையும் கிடைக்கும். குழந்தை பாக்யமும் உண்டாகும். பழைய கடனை பைசல் செய்ய வழி வகைகளும் வந்து சேரும். ஆனால், 14.2.2018 முதல் 13.4.2018 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டிலே சென்று அமர்வதால் அந்த காலக்கட்டத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையெழுத்து போட வேண்டாம். அரசுக்கு செலுத்த வேண்டிய வருமான வரியை தாமதிக்காமல் செலுத்துவது நல்லது. உங்களுடைய ராசிக்கு லாபஸ்தானத்திலே 26.7.2017 வரை கேது அமர்ந்திருப்பதால் பிரபலங்களை பயன்படுத்தி முன்னேறுவீர்கள். மகான்களின் ஆசிர்வாதமும் உங்களுக்கு வந்து சேரும். பணவரவு உண்டு. செல்வாக்கு அதிகரிக்கும், உறவினர்கள், நண்பர்களுக்குள்ளே இருந்து வந்த மனத்தாங்கல் களெல்லாமே விலகும். 26.7.2017 வரை ராகு 5வது வீட்டிலேயே அமர்ந்திருப்பதனால் பிள்ளைகளால் கொஞ்சம் அலைச்சலும், ஏமாற்றங்களும் இருந்து கொண்டேயிருக்கும். பூர்வீகச் சொத்து பிரச்னையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். கொஞ்சம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை ராகு உங்கள் ராசிக்கு 4வது வீட்டிலே அமர்வதால் அதுமுதல் தாயாரின் உடல் நிலை பாதிக்கும்.

தாய்வழி உறவினர்களால் அலைச்சல்களும், தர்ம சங்கடங்களும் வந்துபோகும். சிறு சிறு வாகன விபத்துகளும், பராமரிப்புச் செலவுகளும் வரும். 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை கேது 10வது வீட்டிலே வந்து அமர்வதால் உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகிக் கொண்டே போகும். அதிகாரிகள் மற்றும் சகஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகளை சந்திக்க நேரிடும். உத்யோகத்திலே விரும்பத்தகாத இடமாற்றமெல்லாம் இருக்கும். சனிபகவான் 18.12.2017 வரை உங்களுடைய ராசிக்கு எட்டாவது வீட்டிலே அமர்ந்து அஷ்டமத்துச் சனியாக தொடர்வதனால் அதுவரை மனநிம்மதியற்ற போக்கும், பழைய கசப்பான சம்பவங்களை நினைத்தும் வருந்துவீர்கள். வீண் செலவுகளும் வரக்கூடும்.

திடீரென்று அறிமுகமாகும் நபர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகளும் செய்ய வேண்டாம். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. ஆனால் 19.12.2017 முதல் வருடம் முடியும் வரை சனிபகவான் 9வது வீட்டிலே வந்து அமர்வதால் அதுமுதல் காரியத்தடைகளெல்லாம் விலகும். இழந்த தொகையை மீண்டும் பெறுவீர்கள். வழக்குகள் சாதகமாகும். 14.4.2017 முதல் 26.5.2017 வரை சனியும், செவ்வாயும் நேருக்கு நேர் பார்வையிடுவதாலும், 12.7.2017முதல் 30.8.2017 வரை உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் நீச்சமாகி இருப்பதனாலும் 20.1.2018 முதல் 10.3.2018 வரை செவ்வாய் எட்டில் மறைவதாலும் 11.3.2018 முதல் 13.4.2018 வரை சனியும், செவ்வாயும் ஒன்று சேர்வதனாலும், இந்த காலகட்டத்தில் வீடு, மனை வாங்குவது, விற்பதிலே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வீடு, மனை வாங்குவதாக இருந்தால் தாய்ப்பத்திரத்தை சரிபார்த்து விட்டு பிறகு சொத்து வாங்குங்கள். சகோதரங்களுடன் கருத்து மோதல்கள் வரும். 10.10.2017 முதல் 5.11.2017 வரை உள்ள காலகட்டத்தில் சுக்கிரன் 6வது வீட்டிலே சென்று மறைவதனால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல், வாகன விபத்து, தங்க ஆபரணங்கள் தொலைந்து போகுதல் போன்ற நிகழ்வுகள் நிகழக்கூடும். கவனமாக இருப்பது நல்லது. 17.11.2017 முதல் 15.12.2017 வரை சூரியனும், சனியும் எட்டாவது வீட்டில் அமர்வதால் இந்த காலகட்டத்தில் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டாம். பிள்ளைகளின் திருமண விஷயத்தில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. பூர்வீகச் சொத்து மற்றும் பாகப்பிரிவினை விஷயமாக இந்த காலகட்டத்தில் வழக்கு எதுவும் பதிவு செய்ய வேண்டாம். சுமுகமாக பேசி முடிவெடுப்பது மிகவும் நல்லது.

வியாபாரிகளே! 2.9.2017 முதல் குருபகவான் 7வது வீட்டில் நுழைவதனால் அந்த காலக்கட்டத்திலிருந்து புதிதாக முதலீடு செய்வீர்கள். பங்குதாரர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்களெல்லாம் விலகும். அனுபவமிக்க வேலையாட்களை பணியிலே அமர்த்துவீர்கள். பங்குதாரர்களையும் மாற்றுவீர்கள். நியாயமான வாடகை அதே நேரத்தில் பெரிய இடமாக பார்த்து கடையை மாற்றுவீர்கள்.

உத்யோகஸ்தர்களே! உத்யோகத்தில் ஆகஸ்ட் மாதம் வரை வேலைச்சுமை இருக்கும். செப்டம்பர் மாதம் முதல் குருபகவான் ராசியை பார்க்கயிருப்பதால் செல்வாக்கு அதிகரிக்கும். வெகுநாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு, சம்பள உயர்வையெல்லாம் செப்டம்பர் மாதத்திலே நீங்கள் எதிர்ப்பார்க்கலாம். கூடுதல் சலுகைகளெல்லாம் கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனத்திலும் வேலைக்கு முயற்சிக்கலாம்.

கன்னிப்பெண்களே! காதல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். 18.12.2017 வரை அஷ்டமத்துச் சனியிருப்பதால் அன்பாக பேசுபவர்களெல்லாம் நல்லவர்கள் என்று ஏமாறாதீர்கள். உங்களுடைய பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் விட்டுக்கொடுக்க வேண்டாம். திருமண விஷயத்தில் பெற்றோரை மீறி எதையும் செய்ய வேண்டாம். ஜனவரி மாதத்திலிருந்து உங்களுக்கு வேலைகிடைக்கும், உயர்கல்வியிலும் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். திருமணமும் கூடிவரும்.

மாணவ, மாணவியர்களே! ஆகஸ்ட் மாதம் வரை விளையாட்டின்போது சிறுசிறு காயங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. முன்கோபம் வேண்டாம். வகுப்பறையில் அரட்டைப் பேச்சை தவிர்க்கப் பாருங்கள். செப்டம்பர் மாதம் முதல் மதிப்பெண்கள் அதிகமாகும். நினைவாற்றல் அதிகரிக்கும். நல்லவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பார்த்த கல்வி பிரிவில் சேருவீர்கள்.

கலைத்துறையினரே! அரைகுறையாக நின்ற வேலைகளெல்லாம் செப்டம்பர் மாதத்திலிருந்து விரைந்து முடியும். புதுப்பட வாய்ப்புகளும் வரும். தெலுங்கு, மலையாளம் மொழிப் படங்கள் மூலமாகவும் புகழடைவீர்கள். வருமானமும் கிடைக்கும். கடன் பிரச்னையிலிருந்து மீள்வீர்கள்.

அரசியல்வாதிகளே! ஆகஸ்ட் மாதம் வரை கோஷ்டி பூசல்கள் இருந்து கொண்டிருக்கும். செப்டம்பர் மாதம் முதல் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். எதிர்ப்பார்த்த பதவியும் கிடைக்கும்.

விவசாயிகளே! 18.12.2017 வரை அஷ்டமத்துச் சனி நீடிப்பதனால் அதுவரை பூச்சி, எலி தொந்தரவு இருக்கும். பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ள வேண்டாம். 19.12.2017 முதல் தொந்தரவுகளெல்லாம் குறையும். அடகிலிருந்த நகைகளையும் மீட்பீர்கள். இந்த ஹேவிளம்பி வருடம் முற்பகுதி அலைச்சலையும், செலவுகளையும் தந்தாலும், மையப்பகுதி மனநிறைவையும், பணவரவையும் தருவதாகவும், இறுதிப் பகுதி சுபச்செலவுகளாக அமையும்.

பரிகாரம்:

மதுரைக்கு அருகேயுள்ள திருமோகூர் சக்கரத்தாழ்வாரை தரிசித்து வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


 ஹேவிளம்பி ஆண்டு  பலன்கள் !  - Page 2 Empty Re: ஹேவிளம்பி ஆண்டு பலன்கள் !

Post by krishnaamma Sun Apr 16, 2017 4:48 pm

கும்பம்

எதிரில் இருப்பவர் பேசத் தொடங்கும் போதே அடுத்ததாக அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அறிவதில் கில்லாடிகள் நீங்கள்தான். கவரிமானைப் போல கௌரவம் பார்க்கும் உங்களை பணத்தைக் காட்டி விலைக்கு வாங்க முடியாது. பெற்ற பிள்ளைகள் முதல் வளர்ப்புப் பிராணிகள் வரை வரம்பு மீறி நடந்து கொள்ள அனுமதிக்க மாட்டீர்கள். சுவையான சாப்பாட்டை விரும்பும் நீங்கள், சில நேரங்களில் காடு, மலைகளில் கிடைக்கும் காய், கனிகளில் கூட திருப்தியடைவீர்கள். வாக்குவாதம் என வந்து விட்டால் வரிந்து கட்டி வாதாடுபவர்களே! உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால் மற்றவர்கள் செய்ய முடியாத சவாலான காரியங்களையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் சுக்கிரனும், 3ம் வீட்டில் சூரியனும் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள்.

பிரபலங்களையும் நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்வீர்கள். 1.9.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் இருப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள், சிலர் மீது நம்பிக்கையின்மை, வீண் அலைச்சல் வந்து செல்லும். மறைமுக எதிரிகள் முளைப்பார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். அனாவசியமாக யாரையும் வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை, மனைவி, பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேச முடியாத நிலை வந்து போகும். 2.9.2017 முதல் 13.2.2018 வரை உள்ள காலக்கட்டத்தில் 9ம் வீட்டில் குரு அமர்வதால் இடையூறுகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். சில இடங்களில், சில நேரங்களில் அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள்.

அரசால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் தள்ளிப் போன திருமணம், சீமந்தம், காதுகுத்து போன்ற நிகழ்ச்சிகளெல்லாம் விரைந்து முடியும். ஆனால், 14.2.2018 முதல் 13.4.2018 வரை உள்ள காலக்கட்டத்தில் குரு வக்ரகதியிலும், அதிசாரத்திலும் 10வது வீட்டில் செல்வதனால் தாய்வழி சொத்துப் பிரச்னை தலைதூக்கும். உத்யோகத்திலும் இடமாற்றம் இருக்கும். வி.ஐ.பிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். யாருக்கும் யாரையும் பரிந்துரை செய்யாதீர்கள். மறதியால் விலை உயர்ந்த பொருட்கள், செல் போன் போன்றவற்றை இழக்க நேரிடும். அக்கம்பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் தன் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் ராகுவும், ராசிக்குள்ளேயே கேதுவும் நின்று கொண்டிருப்பதனால் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். யோகா, தியானப் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. முன்கோபத்தைக் குறையுங்கள். மின்சாரம், நெருப்பு இவற்றைக் கவனமாக கையாளுங்கள். அடிக்கடி தலைசுற்றல் வரும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அவ்வப்போது வெளிக் காற்று வாங்குவது நல்லது. மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். கணவன்மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். சந்தேகத்தால் இருவரும் பிரிய வேண்டி வரும். திடீர் நண்பர்களை நம்பி பெரிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். வெளி நபர்களை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன், கேரன்டர் கையெழுத்திட வேண்டாம்.

மனைவிக்கு மாதவிடாய் கோளாறு, தைராய்டு பிரச்னைகள் வரக்கூடும். ஆனால், 27.7.2017 முதல் உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் ராகு அமர்வதால் அரைகுறையாக நின்று போன வீடு கட்டும்பணி முழுமையடையும். தெலுங்கு, ஹிந்தி பேசுபவர்களால் திடீர் யோகமுண்டு. அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். 27.7.2017 முதல் 12ல் கேது நிற்பதால் சில நேரங்களில் அலைச்சல், தூக்கமின்மை வந்துசெல்லும். நெடுநாட்களாக தடைபட்டுக் கொண்டிருந்த குலதெய்வ நேர்த்திக்கடனை செய்து முடிப்பீர்கள்.

21.8.2017 முதல் 15.9.2017 வரை சுக்கிரன் 6ல் மறைவதால் அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். வாகனம் பழுதாகும். கணவன்-மனைவிக்குள் யார் ஜெயிப்பது, யார் தோற்பது என்ற போட்டிகளெல்லாம் வேண்டாம். ஈகோ பிரச்னையை தவிர்க்கப்பாருங்கள். வீண் சந்தேகத்தாலும் சண்டை, சச்சரவுகள் வரக்கூடும். 15.10.2017 முதல் 1.12.2017 வரை உள்ள காலக்கட்டத்தில் செவ்வாய் 8ல் மறைவதனால் கட்டுக்கடங்காத செலவுகள் வந்து கொண்டேயிருக்கும். சொத்துக்குரிய ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சகோதர வகையிலும் போதிய ஒத்துழைப்பு இல்லையே என்று வருத்தப்படுவீர்கள்.

உங்களின் ராசிநாதனாகிய சனிபகவான் உங்கள் ராசிக்கு 18.12.2017 வரை 10வது வீட்டில் தொடர்வதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடல் ஆரோக்யம் சீராகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். உங்களை புகழ்வதைப் போல் இகழ்ந்தவர்களை எல்லாம் ஓரங்கட்டுவீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். என்றாலும் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். 19.12.2017 முதல் வருடம் முடியும் வரை சனி லாப வீட்டில் அமர்வதால் உங்களை தலைநிமிர வைக்கும். செயலில் வேகம் கூடும். வருமானம் உயரும். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்கள் உதவுவார்கள். சுயதொழில் தொடங்கும் முயற்சியில் இறங்குவீர்கள். சொந்த ஊரில் பொதுகாரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் வளரும்.

வியாபாரிகளே! போட்டியாளர்களை முறியடிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். வெளிநாட்டு நிறுவனம், புகழ் பெற்ற நிறுவனம் என்று விளம்பரங்களை நம்பி தீர விசாரிக்காமல் முதலீடு செய்ய வேண்டாம். வேலையாட்களின் குறை, நிறைகளை அன்பாக சுட்டிக் காட்டி திருத்துங்கள். வைகாசி, ஐப்பசி, ஆடி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பழைய பங்குதாரர் விலகுவார்.

உத்யோகஸ்தர்களே! வேலைச்சுமை அதிகரிக்கும். உங்கள் திறமையை மூத்த அதிகாரி பரிசோதிப்பார். அடிக்கடி விடுப்பில் செல்வோரின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே, என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். ஆடி, ஆவணி மாதங்களில் சூழ்ச்சிகளை தாண்டி அதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். கார்த்திகை, மாசி மாதங்களில் அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கன்னிப்பெண்களே! ஆகஸ்ட் மாதம் வரை கனவுத் தொல்லை, முகப்பரு, தலை முடி உதிர்தல் வந்து செல்லும். செப்டம்பர் மாதம் முதல் உங்கள் கனவுகள் நனவாகும். திருமணம் நீங்கள் நினைத்த படி முடிவடையும். புது வேலை கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.

மாணவ, மாணவியர்களே! சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான உழைப்பும் வேண்டும். அன்றன்றைய பாடங்களை அன்றே படியுங்கள். விரும்பிய கோர்ஸில் போராடி சேர்வீர்கள்.

கலைத்துறையினரே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உங்களின் படைப்புக்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். வெளியாகாமல் இருக்கும் படம் ரிலீசாகும்.

அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. ஜெயிக்கும் அணியில் இடம் பிடிப்பீர்கள். தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.

விவசாயிகளே! குறுகிய காலப் பயிர்களை தவிர்த்து விடுங்கள். பக்கத்து நிலத்துக்காரருடன் அனுசரித்துப் போங்கள். எலி, பூச்சித் தொல்லை வந்து நீங்கும். பழைய கடன் குறையும். இந்த புத்தாண்டு ஆடி மாதம் வரை உங்களை அலைக்கழித்தாலும், ஆவணி மாதம் முதல் எதிர்பாராத யோகங்களை தருவதாக அமையும்.

பரிகாரம்:

வேதாரண்யம் தலத்தில் அருளும் வேதாரண்யேஸ்வரர் ஆலயத்திலுள்ள துர்க்கையை வழிபடுங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 ஹேவிளம்பி ஆண்டு  பலன்கள் !  - Page 2 Empty Re: ஹேவிளம்பி ஆண்டு பலன்கள் !

Post by krishnaamma Sun Apr 16, 2017 4:48 pm

மீனம்

தங்கத்தின் தரம் கூட குறையலாம் ஆனால் உங்கள் நடத்தையின் தரம் என்றும் குறையாது. குடிசை வீட்டில் பிறந்தாலும் விண்ணை முட்டும் உயர்ந்த லட்சியங்களுடன் வாழ்பவர்கள் நீங்கள்தான். சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப வளைந்து கொடுத்துப் போவதில் உங்களுக்கு உடன்பாடில்லை. ஏக்கர் கணக்கில் சொத்து சேர்ந்தாலும் ஆறடி நிலம் கூட சொந்தமாவப் போவதில்லை என்ற பிரம்ம சூத்திரத்தை அறிந்திருப்பீர்கள். அதனால்தான் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எல்லோருக்கும் இருப்பதைக் கொடுப்பீர்கள். ராகு 6ம் வீட்டில் நின்று கொண்டிருக்கும் போது இந்த ஹேவிளம்பி ஆண்டு பிறப்பதால் வருமானம் அதிகரிக்கும். கடன் குறையும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். வேற்று மொழிக்காரர்கள் மற்றும் வேற்றுமதத்தைச் சார்ந்தவர்களால் ஆதாயம் உண்டு. ஆடை, ஆபரணங்கள் சேரும். மிடுக்காக உடுத்துவீர்கள்.

செவ்வாய் 3ம் வீட்டில் நிற்கும் போது இந்த ஆண்டு பிறப்பதால் மனோ தைரியம் கூடும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். மூத்த சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகம் ஆவார்கள். புதுத் தொழில் தொடங்குவதற்கு சிலர் உதவுவார்கள். ஆனால் இந்த ஹேவிளம்பி வருடம் உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் பிறப்பதால் எளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூட கொஞ்சம் சிரமப்பட்டு முடிப்பீர்கள். ஒரு பக்கம் பணம் வரும் என்றாலும் செலவுகள் இருமடங்காக இருந்து கொண்டேயிருக்கும். வேலைச்சுமை அதிகரிக்கும். வீட்டில் குடி நீர் குழாய், கழிவு நீர் குழாய் அடைப்பு, மின்னணு, மின்சார சாதனப் பழுது வந்து செல்லும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம்.

1.9.2017 வரை உங்களின் ராசிநாதனாகிய குருபகவான் 7வது வீட்டிலேயே தொடர்வதால் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளாலும், நண்பர்கள், உறவினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். அவ்வப்போது வரும் சிறு சிறு வாக்குவாதங்களை பெரிது படுத்த வேண்டாம். குழந்தை பாக்யம் உண்டு. பிள்ளைகளின் பெருமைகளைச் சொல்லி சொந்த பந்தங்கள் மத்தியில் திருப்தியடைவீர்கள். மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்தை உங்கள் ரசனைக்கேற்ப புதுப்பிப்பீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஆனால், 2.9.2017 முதல் 13.2.2018 வரை குரு ராசிக்கு 8ல் சென்று மறைவதால் வீண் அலைச்சல், வதந்திகள், இனம்புரியாத கவலைகள், ஒருவித பய உணர்வுகள் வந்து செல்லும்.

உங்களை சிலர் விமர்சிப்பார்கள். எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். பிள்ளைகள் கோபப்படுவார்கள். அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீகச் சொத்தை சரியாக பராமரிக்க முடியவில்லையே என வருத்தப்படுவீர்கள். மகனுக்கு உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். வாயுத் தொந்தரவால் நெஞ்சுவலி வரக்கூடும். பயந்து விடாதீர்கள். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். 14.2.2018 முதல் 13.4.2018 வரை உங்களின் பாக்யஸ்தானமான 9ம் வீட்டில் குரு நுழைவதால் இடையூறுகளை கடந்து வெற்றி பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் தள்ளிப்போன சுப நிகழ்ச்சிகளெல்லாம் ஏற்பாடாகும்.

16.9.2017 முதல் 10.10.2017 வரை சுக்கிரன் 6ல் அமர்வதால் அந்த காலகட்டத்தில் கணவன் மனைவிக்குள் சந்தேகத்தால் சின்னச் சின்ன வாக்குவாதங்களும் வரக்கூடும். மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வந்து போக வாய்ப்பிருக்கிறது. 1.12.2017 முதல் 20.1.2018 வரை செவ்வாய் 8ல் அமர்வதால் சகோதர, சகோதரிகளுடன் பகைமை வரும். செலவினங்கள் அதிகமாகும். பழைய கடனை நினைத்தும் அவ்வப்போது அச்சப்படுவீர்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். 26.7.2017 வரை கேது பகவான் உங்கள் ராசிக்கு 12ல் மறைந்திருப்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாகப் போக நினைத்த புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும்.

ஆனால், 27.7.2017 முதல் இந்த வருடம் முடியும்வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் கேது அமர்வதால் எதிர்பார்த்த பணம் வரும். வழக்குகள் சாதகமாகும். வேற்றுமொழி பேசுபவர்கள் உதவுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் மூலமாக சில காரியங்களை சாதிப்பீர்கள். ட்ரஸ்ட் தொடங்குவீர்கள். ஆனால், 5ல் ராகு நிற்பதால் பூர்வீகச் சொத்தில் சட்டச் சிக்கல் வரும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். சில நேரங்களில் மன இறுக்கம் வந்து நீங்கும். தாய்மாமன் வகையில் செலவுகள் அதிகரிக்கும்.

சனிபகவான் 18.12.2017 வரை 9ம் வீட்டில் நீடிப்பதால் குடும்ப வருமானத்தை அதிகப்படுத்துவீர்கள். தன்னம்பிக்கை பிறக்கும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். தந்தையாருடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். ஆனால், 19.12.2017 முதல் 13.4.2017 வரை 10ம் வீட்டில் அமர்வதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடல் ஆரோக்யம் சீராகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். உங்களை சுற்றி உள்ளவர்களில் நல்லவர் யார், கெட்டவர் யார் என இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். என்றாலும் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உத்யோகத்தில் அடிக்கடி இடமாற்றம் வந்து போகும். மேலதிகாரி உங்கள் திறமையை குறைத்து மதிப்பிடுவார். மறைமுக அவமானம் ஏற்படக்கூடும்.

வியாபாரிகளே! தள்ளுபடி விற்பனை மூலம் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். சித்திரை, வைகாசி, ஆவணி மாதங்களில் வியாபாரம் சூடுபிடிக்கும். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அனுபவமிக்க வேலையாட்கள் திடீரென்று பணியை விட்டு விலகுவார்கள். பங்குதாரர்களிடம் வளைந்து கொடுத்துப் போங்கள். மார்கழி, தை மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். அயல்நாட்டு தொடர்புடைய புது பங்குதாரர் வர வாய்ப்பிருக்கிறது. கொடுக்கல், வாங்கலில் நிம்மதி ஏற்படும். உணவு, ஷேர், கல்வி வகைகளால் ஆதாயம் உண்டு.

உத்யோகஸ்தர்களே! உங்கள் கை ஓங்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வைகாசி, ஆனி மாதங்களில் புது வாய்ப்புகள் வரும். உங்கள்மீது வீண்பழி சுமத்திய உயரதிகாரி மாற்றப்படுவார். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சில கூடுதல் சிறப்பு பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் தேங்கிக் கிடந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பதவி உயர்வு உண்டு. எதிர்பார்த்த சம்பள பாக்கியும் கைக்கு வரும்.

கன்னிப் பெண்களே! தடைப்பட்ட கல்யாணம் இனி கூடி வரும். காதல் கனியும். பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். புதிதாக அறிமுகமாகுபவரிடம் கொஞ்சம் தள்ளியே இருப்பது நல்லது.

மாணவ, மாணவியர்களே! மதிப்பெண் உயரும். வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். பெற்றோர் உங்களின் தேவைகளை நிறைவேற்றுவார்கள். கவிதை, கட்டுரை, விளையாட்டுப் போட்டிகளில் பரிசு உண்டு.

கலைத்துறையினரே! பெரிய நிறுவனங்களின் அழைப்பு உங்களைத் தேடி வரும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள்.

அரசியல்வாதிகளே! சகாக்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். கட்சியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

விவசாயிகளே! விளைச்சல் ரெட்டிப்பாகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வேர்கடலை, நெல், சூரிய காந்தி மற்றும் உளுந்து வகைகளால் லாபமடைவீர்கள். இந்த புத்தாண்டு உங்களின் சாதனை பட்டியலை நீளமாக்குவதுடன், அடிப்படை வசதி, வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாக அமையும்.

பரிகாரம்:

திருச்செந்தூர் முருகரை தரிசித்து வரவும். ஏதேனும் ஆலய உழவாரப்பணியை மேற்கொள்ளவும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 ஹேவிளம்பி ஆண்டு  பலன்கள் !  - Page 2 Empty Re: ஹேவிளம்பி ஆண்டு பலன்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum