ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளியேறுங்க!:கட்சி நடவடிக்கைகளிலிருந்து தினகரனுக்கு நெருக்கடி

2 posters

Go down

வெளியேறுங்க!:கட்சி நடவடிக்கைகளிலிருந்து தினகரனுக்கு நெருக்கடி Empty வெளியேறுங்க!:கட்சி நடவடிக்கைகளிலிருந்து தினகரனுக்கு நெருக்கடி

Post by T.N.Balasubramanian Sat Apr 15, 2017 4:52 am

வெளியேறுங்க!:கட்சி நடவடிக்கைகளிலிருந்து தினகரனுக்கு நெருக்கடி

வெளியேறுங்க!:கட்சி நடவடிக்கைகளிலிருந்து விலகுமாறு தினகரனுக்கு நெருக்கடி:ஒட்டுமொத்தமாய் அனைவரும் பன்னீர் அணிக்கு மாற முடிவு?

'உங்களால் தான், கட்சி பிளவுபட்டது; ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. எனவே, கட்சியை விட்டு நீங்கள் வெளியேறுங்கள்' என, தினகரனுக்கு எதிராக, அமைச்சர்கள் பகிரங்கமாக குரல் எழுப்பியுள்ளனர். 'அதை சொல்ல நீ யார்' என, தினகரன் பாய்ந்ததால், வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள் கடுப்படைந்துள்ளனர்.
விஜயபாஸ்கரின் அமைச்சர் பதவியை பறிக்கும்படியும், அவர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர். ஒட்டுமொத்தமாக, அவர்கள் அனைவரும் பன்னீர் அணிக்கு மாறவும் தயாராகி வருவதாக தெரிகிறது.சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கின. அதன் காரணமாக, இடைத்தேர்தலை, தேர்தல் கமிஷன் ரத்து செய்தது.பிரச்னைக்கு காரணமான விஜயபாஸ்கர், அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என, முதல்வர் பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள் வலியுறுத்தினர். ஆனால், அவர் பதவி விலக மறுத்து விட்டார். அவரை நீக்க, தினகரனும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நேற்று காலை, 11:00 மணிக்கு, அமைச்சர்கள் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயகுமார், சி.வி.சண்முகம், அன்பழகன், எம்.சி.சம்பத், ராஜு, ராஜேந்திர பாலாஜி, பெஞ்சமின், எம்.ஆர்.விஜயபாஸ்கர், வீரமணி உட்பட பல அமைச்சர்கள், தினகரன் வீட்டிற்கு சென்றனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடராஜன், ஓ.எஸ்.மணியன் உட்பட சில அமைச்சர்கள் வரவில்லை. லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், எம்.பி.,க்கள் வைத்தியலிங்கம், வேணுகோபால் மற்றும் நிர்வாகிகள் வந்திருந்தனர்.

தினகரன் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், விஜயபாஸ்கரை பதவியில் இருந்து விலக்க வேண்டும் என, முதல்வரின் ஆதரவு அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி ஆகியோர் வலியுறுத்தினர்.அதற்கு தினகரன் மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள், எதிர்ப்பு தெரிவிக்க, இரு தரப்பினருக்கும் இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரண்டு மணி நேரம் நடந்த விவாதத்தில், கடுமையான வார்த்தைகளை பரிமாறிக் கொண்டனர்.
இறுதியாக, வரும், 17ம் தேதி, மீண்டும் விசாரணைக்கு வரும்படி, விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. அவர் விசாரணைக்கு சென்று வந்த பின், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, முடிவு செய்வோம் என, கலைந்து சென்றனர்.முதல்வர் ஆதரவாளர்களும், தினகரன் ஆதரவாளர்களும், நேரடியாக மோதிக் கொண்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூட்டத்தில் நடந்தது என்ன என்பது குறித்து, கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
கூட்டத்தில், கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர்கள், விஜயபாஸ்கரை நீக்க வேண்டும் என, வலியுறுத்தினர். அப்போது தளவாய் சுந்தரம், 'அதெல்லாம் தேவையில்லை' எனக் கூறியதுடன், தேவையில்லாமல் சில விஷயங்களை பேசினார். உடனே அமைச்சர் தங்கமணி, 'உங்கள் மாவட்டத்தில், கட்சியை நாசம் செய்து விட்டீர்கள். இப்போது, இங்கு வந்து நாசம் செய்ய பார்க்கிறீர்கள்' என, கோபத்துடன் கூறினார். அதை கேட்டு, எரிச்சல் அடைந்த தினகரன், 'என் மீது வழக்கு உள்ளதால், நான் காணாமல் போய் விடுவேன் என, நினைக்கிறீர்கள். என் மீதான வழக்கு, 30 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது; அதை எப்படி முடிக்க வேண்டும் என, எனக்கு தெரியும்; நான், 200 கோடி ரூபாய் செலவழித்ததால் தான், நீங்கள் எல்லாம் அமைச்சர்களாக இருக்கிறீர்கள்' என, கூறினார்.
அப்போது, ஒரு அமைச்சர் குறுக்கிட்டு, 'உங்கள் பணத்தையா செலவு செய்தீர்கள்; கட்சி பணம் தானே' என கேட்க, தினகரன் கோபத்தின் உச்சிக்கு சென்றார். அத்துடன், திவாகரனையும், அவரது மகனையும் குறிப்பிட்ட, அந்த அமைச்சர், 'பணம் செலவு செய்த அப்பாவையும், மகனையும் கூட, நீங்கள் ஓரங்கட்டி விட்டீர்களே' என கேட்க, தினகரனின் கோபம் மேலும் அதிகரித்தது.
உடனே, அமைச்சர் ராதாகிருஷ்ணன் குறுக்கிட்டு, 'அதை சொல்ல நீ யார்' என கேட்டதும், அருகிலிருந்த அமைச்சர் வேலுமணி கொந்தளித்து விட்டார். 'உங்களாலும், விஜயபாஸ்கராலும் தான், இவ்வளவு பிரச்னையும்' என, அவர் ஆவேசத்தில் பேச, இருவருக்கும் இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அவர்களை சமாதானப்படுத்திய தினகரன், 'என் குடும்பத்தினரே, எனக்கு எதிராக செயல்படுகின்றனர். 17ம் தேதி, பெங்களூரு போய் சித்தியை பார்க்க போகிறேன். அதன்பின், நான் முடிவெடுத்துக் கொள்கிறேன். நான் நினைத்தால், நீங்கள் அமைச்சராக இருக்க முடியாது' எனக்கூறி மிரட்டினார்.உடனே வேலுமணி, 'இது நீங்கள் கொடுத்த பதவி அல்ல; அம்மா கொடுத்த பதவி' என, பதிலடி கொடுத்தார்.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஜெயகுமார், தம்பிதுரை ஆகியோர், 'இது, பலமா, பலவீனமா என யோசிக்க வேண்டிய நேரம். மத்திய அரசு, உங்கள் மீது தான் கோபமாக உள்ளது. நீங்கள் ஒதுங்கினால் பிரச்னை தீரும். எனவே, நீங்கள் தான், இப்பிரச்னையில் முடிவெடுக்க வேண்டும்' என, தினகரனிடம் கூறினர். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரும், 'நீங்கள் வெளியேறுங்கள்; உங்களால் தான் கட்சி பிளவுபட்டது; ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. நீங்கள் ஒதுங்கிவிட்டால், நாங்கள் பிரிந்து சென்றவர்களுடன் பேசி, கட்சியையும், ஆட்சியையும் மீட்டெடுத்து விடுவோம்' என்றனர்.இதற்கு, தினகரன் ஆதரவு அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜு, உதயகுமார் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினருக்கும் இடையே காரசாரமாக வாக்குவாதம் நடந்தது. இறுதியாக, எந்த முடிவும் எடுக்கப்படாமல், கூட்டம் கலைந்தது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

காரசார விவாதம் தினகரன் ஒப்புதல்!
ஆலோசனை கூட்டம் குறித்து, தினகரன் கூறியதாவது:
இரட்டை இலை சின்னம் தொடர்பான புகாரை, தேர்தல் கமிஷன் விசாரிக்கிறது. இதில், மத்திய அரசு தலையிடுவதாக தெரியவில்லை. எங்கள் ஆட்சியில், அனைவருக்கும் பேச சுதந்திரம் உள்ளது. அமைச்சரவையில் மாற்றம் எதுவும் வராது. விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்; எதுவும் சிக்கவில்லை. அவர் விசாரணை முடிந்து, ஊருக்கு சென்றுள்ளார்.
புத்தாண்டு வாழ்த்து கூற, என் வீட்டுக்கு அமைச்சர்கள் வந்தனர். அப்போது, பல பிரச்னைகளை ஜாலியாக பேசினோம். சில விஷயம் தொடர்பாக, காரசாரமாக பேசினோம். சிலர் சில தகவல்களை கூறும்போது, காரசாரமாக விவாதம் நடந்தது. விஜயபாஸ்கர் பதவி நீக்கம் செய்யப்படுவதாக கூறப்படுவது, தவறான தகவல்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

- நமது நிருபர் -தினமலர்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வெளியேறுங்க!:கட்சி நடவடிக்கைகளிலிருந்து தினகரனுக்கு நெருக்கடி Empty Re: வெளியேறுங்க!:கட்சி நடவடிக்கைகளிலிருந்து தினகரனுக்கு நெருக்கடி

Post by M.Jagadeesan Sat Apr 15, 2017 9:06 am

"காலை சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது " என்று சொல்வார்கள் .

மன்னார்குடிக் கும்பல் அதிமுகவின் காலை சுற்றிய பாம்பு . அது கட்சியையும் , ஆட் சியையும் கபளீகரம் செய்யாமல் விடாது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

வெளியேறுங்க!:கட்சி நடவடிக்கைகளிலிருந்து தினகரனுக்கு நெருக்கடி Empty Re: வெளியேறுங்க!:கட்சி நடவடிக்கைகளிலிருந்து தினகரனுக்கு நெருக்கடி

Post by T.N.Balasubramanian Sat Apr 15, 2017 5:52 pm

உண்மைதான்.
யார் யார் எவ்வளவு பணம் பண்ணலாம் என்பதிலேயே
குறியாக உள்ளனரே தவிர வேறில்லை.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வெளியேறுங்க!:கட்சி நடவடிக்கைகளிலிருந்து தினகரனுக்கு நெருக்கடி Empty Re: வெளியேறுங்க!:கட்சி நடவடிக்கைகளிலிருந்து தினகரனுக்கு நெருக்கடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum