Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழவைத்தவரின் வாழ்க்கையை முடித்த நாகப் பாம்பு
4 posters
Page 1 of 1
வாழவைத்தவரின் வாழ்க்கையை முடித்த நாகப் பாம்பு
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் எதற்கும் அஞ்சாமல் தனியாளாக கொடிய பாம்புகளை பிடித்து வந்தவர், பூனம்சந்த் வயது 45. கடலூர் மக்களால் ‘பாம்பு பிடி மன்னன்’ என்று அழைக்கப்பட்டவர். எந்த வகை பாம்பு என்றாலும், எவ்வளவு பெரிதாக இருந்தாலும் துணிச்சலாக கையாலே பிடித்துவிடுவார். அதனால் நள்ளிரவு நேரத்திலும் இவரது செல்போனுக்கு அழைப்பு வரும், தங்கள் வீட்டில் பாம்பு புகுந்திருக்கிறது என்று!
இவர் ஓடி ஓடிப்போய் பாம்புகளை பிடித்ததற்கு, அவைகள் மீது இவர் வைத்திருந்த பாசம்தான் காரணம். பெரும்பாலானவர்கள் பாம்பை பார்த்தால் பயந்து போய் அடித்துக்கொன்றுவிடுவதால், அவைகளை பிடித்து பாதுகாத்து, காட்டுக்குள் கொண்டுபோய்விடும் பொறுப்பான சேவையை பூனம்சந்த் செய்துகொண்டிருந்தார். ஆனால் ஏராளமான பாம்புகளை வாழவைத்த அவரது வாழ்க்கையை ஒரு நாகப்பாம்பு முடித்துவிட்டது. அவரது மனைவியையும், அவர்களது பிஞ்சுக்குழந்தைகள் மூவரையும் அனாதையாக்கி அழவைத்திருக்கிறது. பாம்புகள் மீது வைத்திருந்த பாசம் பரிதாபமாய் முடிந்திருக்கிறது.
எப்படி நடந்தது இந்த சோகம்?
முதலில் பூனம்சந்த்தின் பூர்வீகம். இவரது மூதாதையர்கள் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள். ஆனால் பூனம்சந்த் வெகுகாலமாக கடலூரிலேயே வசித்து வந்தார். அவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விதிஷ்டா என்ற பெண்ணை காதலித்து மணந்தார். அவர்களுக்கு கோவர்தனி, கோமுகி என்ற இரண்டரை வயது இரட்டைக் குழந்தைகளும், தனுஸ்ரீ என்ற 7 மாத கைக்குழந்தையும் உள்ளது.
பாம்பு பிடி வீரரின் வாழ்க்கையில் ஏற்பட்ட பரிதாப முடிவு அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்த நாம் அவரது வீடு தேடி சென்றோம். வசிக்கும் வாடகை வீட்டிலும் சில பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதால், குழந்தைகளோடு மரத்தடியில் அமர்ந்துகொண்டு விதிஷ்டா கண்ணீர் மல்க நம்மிடம் பேசினார்.
“நான் கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்குமாரமங்கலம் என்ற ஊரில் பிறந்தேன். ஆறு பெண்களில் நான் மூன்றாவதாக பிறந்தேன். 5 ஆண்டுகளுக்கு முன்பு பூனம்சந்த் கடலூரில் உள்ள ஒரு வீட்டில் பாம்பு பிடிக்க சென்றார். அப்போது அவரை அங்கிருந்த கருநாகம் கடித்தது. அங்கிருந்தவர் களிடம் 10 நிமிடத்தில் மருத்துவமனையில் சேர்த்தால் மட்டுமே நான் உயிர் பிழைப்பேன் என்று கூறியிருக்கிறார். உடனடியாக அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் ஒன்றரை மாதத்திற்கு மேல் சிகிச்சை பெறவேண்டியதிருந்தது. அந்த காலகட்டத்தில் நான் அவரது அண்ணனின் கடையில் தையல் வேலை செய்துவந்தேன்.
அவரை மருத்துவமனையில் கவனிக்க ஆள் இல்லாத நிலையில் நான், அவ்வப்போது அங்கு சென்று அவரை பார்த்தேன். அதுவே காதலானது. அவரை காதலித்ததற்கு எங்கள் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் நான் வீட்டை விட்டு வெளியேறினேன். அவரது நண்பர்கள் முன்னிலையில் எங்கள் திருமணம் நடந்தது. எங்கள் காதலுக்கு பாம்புதான் காரணம். அவர் இரவு-பகல் பாராது பாம்பு பிடித்து மக்களுக்கு உதவியதால் அவர் மீது ஈடுபாடுகொண்டு கல்யாணத்திற்கு சம்மதித்தேன். அப்படிப்பார்த்தால் எங்கள் திருமணத்திற்கும் பாம்புதான் காரணம்.
எங்கள் திருமணத்திற்கு பின்பும் அவர் பாம்புகள் மீதான காதலை விடவில்லை. எந்த நேரத்தில் யார் அழைத்தாலும் உடனடியாக சென்று பாம்புகளை பிடித்து வருவார். அவர் நான்காம் வகுப்பு படித்தபோது, அவரது வீட்டிற்குள் புகுந்த பாம்பை பயமின்றி பிடித்திருக்கிறார். அதை பார்த்த குடும்பத்தினர் வியப்பாக பேச, பின்பு அதுவே அவர் வாழ்க்கையாகிப்போனது. ‘பாம்புகளை பாதுகாக்க தனி அமைப்புகள் இல்லை. மக்கள் பாம்புகள் மீது உள்ள அச்சத்தின் காரணமாக அதை கண்டதும் அடித்து கொன்று விடுகின்றனர். அவைகளை காப்பாற்றவேண்டும்’ என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது. பாம்புகளின் பாதுகாவலனாகவே வாழ்ந்து வந்தார். ஆனால் அதுவே அவருக்கு எமனாகி விட்டது” என்றார்.
பூனம்சந்த் தான் பிடித்த பாம்புகளை அரசு அனுமதியோடு சில நாட்கள் தன் வீட்டில் வைத்து பாதுகாத்து, 2 வாரத்திற்கு ஒருமுறை வேப்பூரில் உள்ள வனப்பகுதியில் கொண்டு போய் விட்டு வந்திருக்கிறார். இதற்காக கடலூர் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு போன்றவர்கள் முன்பு வாகனங்கள் கொடுத்து உதவி யிருக்கிறார்கள். பின்பு சேவை மனம்கொண்ட நண்பர்களின் வாகனங்களை அதற்காக பயன்படுத்தி வந்திருக்கிறார்.
இவ்வாறாக பாம்புகளை நேசித்து வந்த இவர், தனது குடும்பத்தையும் நேசிக்க தவறியதில்லை. வீட்டில் இருந்தபோது தனது குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்திருக்கிறார். மரணமடைவதற்கு ஒரு நாளுக்கு முன்பு வரை அந்த மகிழ்ச்சி நீடித்திருக் கிறது.
பூனம்சந்த் மரணமடைந்தது மார்ச் 15-ந் தேதி. அன்று என்ன நடந்தது என்று விதிஷ்டா சொல்கிறார்!
“அவர் பாம்பு பிடிக்க செல்வதற்கு நான் ஒருபோதும் தடைபோட்டதில்லை. அதற்கு யாரிடமும் பணம் வாங்க மாட்டார். அதை மக்கள் மற்றும் பாம்புகளுக்கான சேவையாக செய்துவந்தார். நான் முதலில் பாம்புகளை பார்த்து பயந்தேன். காலப்போக்கில் அந்த பயம் போய்விட்டது. என் குழந்தைகளும் பாம்புக்கு பயப்பட மாட்டார்கள்.
அவரை 19 முறை பாம்புகள் கடித்திருக்கின்றன. 18 முறை காப்பாற்றிவிட்டோம். இந்த முறை விதி ஜெயித்துவிட்டது. நான் அவருக்கு ஆபத்தை பற்றி உணர்த்தியபோதெல்லாம், ‘கடவுள் எனக்கு பாம்பை பிடிக்கும் தைரியத்தையும், ஆற்றலையும் கொடுத்து இருக்கிறார். எனவே எனது உயிரை மட்டும் பார்க்க கூடாது’ என்று கூறி என்னை வாயடைக்கவைத்துவிடுவார்.
வேலை எதுவும் இல்லாமல் சேவை செய்துகொண்டிருந்த அவருக்கு, கடந்த டிசம்பர் மாதம் 15-ந்தேதி முதல் ஆமை முட்டைகளை சேகரிக்க வனத்துறையில் இருந்து தற்காலிகமாக வேலை வழங்கினர். அதற்கு மாத ஊதியமாக ரூ.5,500 வழங்கினர். இரவு மட்டும் தான் அந்த வேலை. இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி அவரது மோட்டார் சைக்கிள் காணாமல் போய்விட்டது. அதனால் வேலைக்கு போக முடியாமல் 3 நாட்கள் வீட்டில் எங்களுடன்தான் இருந்தார்.
15-ந் தேதி காலையிலும் வழக்கம்போல் சிலர் பாம்பு பிடிக்க செல்போனில் அழைத்தனர். நண்பர் ஒருவரிடம் மோட்டார் சைக்கிளை இரவல் வாங்கிச் சென்று, 3 இடங்களில் பாம்பு பிடித்து விட்டு மதியம் 1 மணிக்கு வீட்டுக்கு வந்தார். அப்போது கைக்குழந்தை தனுஸ்ரீயை எடுத்து கொஞ்சிக்கொண்டு இருந்தவர் திடீரென சோர்ந்து காணப்பட்டார். ஏன் சோர்வாக இருக் கிறீர்கள் என்று கேட்ட போது உடல்நிலை சரியில்லை என்று கூறியபடி மயங்கி விட்டார்.
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் அவர் இறந்துவிட்டார் என்று டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். அவரை அன்று பாம்பு கடித்தது எங்களுக்கு முதலில் தெரியாது. டாக்டர்கள்தான் அவரது முதுகு பகுதியில் பாம்பு கடித்ததற்கான அடையாளம் இருப்பதாக சொன்னார்கள். விஷம் நிறைந்த நாகப்பாம்பு அவர் உயிரை எடுத்துவிட்டது. வசிக்க வீடுகூட இல்லாத நாங்கள் அனாதையாகிவிட்டோம். எந்த உதவியும் இல்லாமல் நிர்கதியாக நிற்கிறோம்” என்று அழுகிறார். அம்மா ஏன் அழுகிறார் என்ற காரணம் தெரியாமல் குழந்தைகளும் அழுகின்றன.
-தினத்தந்தி
இவர் ஓடி ஓடிப்போய் பாம்புகளை பிடித்ததற்கு, அவைகள் மீது இவர் வைத்திருந்த பாசம்தான் காரணம். பெரும்பாலானவர்கள் பாம்பை பார்த்தால் பயந்து போய் அடித்துக்கொன்றுவிடுவதால், அவைகளை பிடித்து பாதுகாத்து, காட்டுக்குள் கொண்டுபோய்விடும் பொறுப்பான சேவையை பூனம்சந்த் செய்துகொண்டிருந்தார். ஆனால் ஏராளமான பாம்புகளை வாழவைத்த அவரது வாழ்க்கையை ஒரு நாகப்பாம்பு முடித்துவிட்டது. அவரது மனைவியையும், அவர்களது பிஞ்சுக்குழந்தைகள் மூவரையும் அனாதையாக்கி அழவைத்திருக்கிறது. பாம்புகள் மீது வைத்திருந்த பாசம் பரிதாபமாய் முடிந்திருக்கிறது.
எப்படி நடந்தது இந்த சோகம்?
முதலில் பூனம்சந்த்தின் பூர்வீகம். இவரது மூதாதையர்கள் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள். ஆனால் பூனம்சந்த் வெகுகாலமாக கடலூரிலேயே வசித்து வந்தார். அவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விதிஷ்டா என்ற பெண்ணை காதலித்து மணந்தார். அவர்களுக்கு கோவர்தனி, கோமுகி என்ற இரண்டரை வயது இரட்டைக் குழந்தைகளும், தனுஸ்ரீ என்ற 7 மாத கைக்குழந்தையும் உள்ளது.
பாம்பு பிடி வீரரின் வாழ்க்கையில் ஏற்பட்ட பரிதாப முடிவு அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்த நாம் அவரது வீடு தேடி சென்றோம். வசிக்கும் வாடகை வீட்டிலும் சில பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதால், குழந்தைகளோடு மரத்தடியில் அமர்ந்துகொண்டு விதிஷ்டா கண்ணீர் மல்க நம்மிடம் பேசினார்.
“நான் கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்குமாரமங்கலம் என்ற ஊரில் பிறந்தேன். ஆறு பெண்களில் நான் மூன்றாவதாக பிறந்தேன். 5 ஆண்டுகளுக்கு முன்பு பூனம்சந்த் கடலூரில் உள்ள ஒரு வீட்டில் பாம்பு பிடிக்க சென்றார். அப்போது அவரை அங்கிருந்த கருநாகம் கடித்தது. அங்கிருந்தவர் களிடம் 10 நிமிடத்தில் மருத்துவமனையில் சேர்த்தால் மட்டுமே நான் உயிர் பிழைப்பேன் என்று கூறியிருக்கிறார். உடனடியாக அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் ஒன்றரை மாதத்திற்கு மேல் சிகிச்சை பெறவேண்டியதிருந்தது. அந்த காலகட்டத்தில் நான் அவரது அண்ணனின் கடையில் தையல் வேலை செய்துவந்தேன்.
அவரை மருத்துவமனையில் கவனிக்க ஆள் இல்லாத நிலையில் நான், அவ்வப்போது அங்கு சென்று அவரை பார்த்தேன். அதுவே காதலானது. அவரை காதலித்ததற்கு எங்கள் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் நான் வீட்டை விட்டு வெளியேறினேன். அவரது நண்பர்கள் முன்னிலையில் எங்கள் திருமணம் நடந்தது. எங்கள் காதலுக்கு பாம்புதான் காரணம். அவர் இரவு-பகல் பாராது பாம்பு பிடித்து மக்களுக்கு உதவியதால் அவர் மீது ஈடுபாடுகொண்டு கல்யாணத்திற்கு சம்மதித்தேன். அப்படிப்பார்த்தால் எங்கள் திருமணத்திற்கும் பாம்புதான் காரணம்.
எங்கள் திருமணத்திற்கு பின்பும் அவர் பாம்புகள் மீதான காதலை விடவில்லை. எந்த நேரத்தில் யார் அழைத்தாலும் உடனடியாக சென்று பாம்புகளை பிடித்து வருவார். அவர் நான்காம் வகுப்பு படித்தபோது, அவரது வீட்டிற்குள் புகுந்த பாம்பை பயமின்றி பிடித்திருக்கிறார். அதை பார்த்த குடும்பத்தினர் வியப்பாக பேச, பின்பு அதுவே அவர் வாழ்க்கையாகிப்போனது. ‘பாம்புகளை பாதுகாக்க தனி அமைப்புகள் இல்லை. மக்கள் பாம்புகள் மீது உள்ள அச்சத்தின் காரணமாக அதை கண்டதும் அடித்து கொன்று விடுகின்றனர். அவைகளை காப்பாற்றவேண்டும்’ என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது. பாம்புகளின் பாதுகாவலனாகவே வாழ்ந்து வந்தார். ஆனால் அதுவே அவருக்கு எமனாகி விட்டது” என்றார்.
பூனம்சந்த் தான் பிடித்த பாம்புகளை அரசு அனுமதியோடு சில நாட்கள் தன் வீட்டில் வைத்து பாதுகாத்து, 2 வாரத்திற்கு ஒருமுறை வேப்பூரில் உள்ள வனப்பகுதியில் கொண்டு போய் விட்டு வந்திருக்கிறார். இதற்காக கடலூர் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு போன்றவர்கள் முன்பு வாகனங்கள் கொடுத்து உதவி யிருக்கிறார்கள். பின்பு சேவை மனம்கொண்ட நண்பர்களின் வாகனங்களை அதற்காக பயன்படுத்தி வந்திருக்கிறார்.
இவ்வாறாக பாம்புகளை நேசித்து வந்த இவர், தனது குடும்பத்தையும் நேசிக்க தவறியதில்லை. வீட்டில் இருந்தபோது தனது குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்திருக்கிறார். மரணமடைவதற்கு ஒரு நாளுக்கு முன்பு வரை அந்த மகிழ்ச்சி நீடித்திருக் கிறது.
பூனம்சந்த் மரணமடைந்தது மார்ச் 15-ந் தேதி. அன்று என்ன நடந்தது என்று விதிஷ்டா சொல்கிறார்!
“அவர் பாம்பு பிடிக்க செல்வதற்கு நான் ஒருபோதும் தடைபோட்டதில்லை. அதற்கு யாரிடமும் பணம் வாங்க மாட்டார். அதை மக்கள் மற்றும் பாம்புகளுக்கான சேவையாக செய்துவந்தார். நான் முதலில் பாம்புகளை பார்த்து பயந்தேன். காலப்போக்கில் அந்த பயம் போய்விட்டது. என் குழந்தைகளும் பாம்புக்கு பயப்பட மாட்டார்கள்.
அவரை 19 முறை பாம்புகள் கடித்திருக்கின்றன. 18 முறை காப்பாற்றிவிட்டோம். இந்த முறை விதி ஜெயித்துவிட்டது. நான் அவருக்கு ஆபத்தை பற்றி உணர்த்தியபோதெல்லாம், ‘கடவுள் எனக்கு பாம்பை பிடிக்கும் தைரியத்தையும், ஆற்றலையும் கொடுத்து இருக்கிறார். எனவே எனது உயிரை மட்டும் பார்க்க கூடாது’ என்று கூறி என்னை வாயடைக்கவைத்துவிடுவார்.
வேலை எதுவும் இல்லாமல் சேவை செய்துகொண்டிருந்த அவருக்கு, கடந்த டிசம்பர் மாதம் 15-ந்தேதி முதல் ஆமை முட்டைகளை சேகரிக்க வனத்துறையில் இருந்து தற்காலிகமாக வேலை வழங்கினர். அதற்கு மாத ஊதியமாக ரூ.5,500 வழங்கினர். இரவு மட்டும் தான் அந்த வேலை. இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி அவரது மோட்டார் சைக்கிள் காணாமல் போய்விட்டது. அதனால் வேலைக்கு போக முடியாமல் 3 நாட்கள் வீட்டில் எங்களுடன்தான் இருந்தார்.
15-ந் தேதி காலையிலும் வழக்கம்போல் சிலர் பாம்பு பிடிக்க செல்போனில் அழைத்தனர். நண்பர் ஒருவரிடம் மோட்டார் சைக்கிளை இரவல் வாங்கிச் சென்று, 3 இடங்களில் பாம்பு பிடித்து விட்டு மதியம் 1 மணிக்கு வீட்டுக்கு வந்தார். அப்போது கைக்குழந்தை தனுஸ்ரீயை எடுத்து கொஞ்சிக்கொண்டு இருந்தவர் திடீரென சோர்ந்து காணப்பட்டார். ஏன் சோர்வாக இருக் கிறீர்கள் என்று கேட்ட போது உடல்நிலை சரியில்லை என்று கூறியபடி மயங்கி விட்டார்.
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் அவர் இறந்துவிட்டார் என்று டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். அவரை அன்று பாம்பு கடித்தது எங்களுக்கு முதலில் தெரியாது. டாக்டர்கள்தான் அவரது முதுகு பகுதியில் பாம்பு கடித்ததற்கான அடையாளம் இருப்பதாக சொன்னார்கள். விஷம் நிறைந்த நாகப்பாம்பு அவர் உயிரை எடுத்துவிட்டது. வசிக்க வீடுகூட இல்லாத நாங்கள் அனாதையாகிவிட்டோம். எந்த உதவியும் இல்லாமல் நிர்கதியாக நிற்கிறோம்” என்று அழுகிறார். அம்மா ஏன் அழுகிறார் என்ற காரணம் தெரியாமல் குழந்தைகளும் அழுகின்றன.
-தினத்தந்தி
Re: வாழவைத்தவரின் வாழ்க்கையை முடித்த நாகப் பாம்பு
இந்த பிஞ்சு குழந்தைகளின் முகத்தை பார்க்கும்போது மனம் கனக்கிறது
Re: வாழவைத்தவரின் வாழ்க்கையை முடித்த நாகப் பாம்பு
" பாம்போடு பழகேல் " என்பது ஒளவையின் ஆத்திசூடி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: வாழவைத்தவரின் வாழ்க்கையை முடித்த நாகப் பாம்பு
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» 2 கம்ப்யூட்டர் டிப்ளமோ முடித்த 11 வயது சிறுமி
» பாம்பு போன்ற கால்சட்டையை அணிந்த மனைவி; நிஜ பாம்பு என நினைத்து சரமாரியாகத் தாக்கிய கணவர்
» 10 மணி நேர கடும் இழுபறிக்குப் பின் தொகுதி ஒதுக்கீட்டை முடித்த அதிமுக
» குளித்து முடித்த பின்பும்...
» 2 நாள் சென்னை பயணத்தை முடித்த சீன அதிபர் ஜி ஜின்பிங் நேபாளம் பயணம்
» பாம்பு போன்ற கால்சட்டையை அணிந்த மனைவி; நிஜ பாம்பு என நினைத்து சரமாரியாகத் தாக்கிய கணவர்
» 10 மணி நேர கடும் இழுபறிக்குப் பின் தொகுதி ஒதுக்கீட்டை முடித்த அதிமுக
» குளித்து முடித்த பின்பும்...
» 2 நாள் சென்னை பயணத்தை முடித்த சீன அதிபர் ஜி ஜின்பிங் நேபாளம் பயணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|