புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாடகமே உலகம் Poll_c10நாடகமே உலகம் Poll_m10நாடகமே உலகம் Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
நாடகமே உலகம் Poll_c10நாடகமே உலகம் Poll_m10நாடகமே உலகம் Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
நாடகமே உலகம் Poll_c10நாடகமே உலகம் Poll_m10நாடகமே உலகம் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
நாடகமே உலகம் Poll_c10நாடகமே உலகம் Poll_m10நாடகமே உலகம் Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
நாடகமே உலகம் Poll_c10நாடகமே உலகம் Poll_m10நாடகமே உலகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாடகமே உலகம் Poll_c10நாடகமே உலகம் Poll_m10நாடகமே உலகம் Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
நாடகமே உலகம் Poll_c10நாடகமே உலகம் Poll_m10நாடகமே உலகம் Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
நாடகமே உலகம் Poll_c10நாடகமே உலகம் Poll_m10நாடகமே உலகம் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
நாடகமே உலகம் Poll_c10நாடகமே உலகம் Poll_m10நாடகமே உலகம் Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
நாடகமே உலகம் Poll_c10நாடகமே உலகம் Poll_m10நாடகமே உலகம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடகமே உலகம்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 04, 2017 4:14 am

நாடகமே உலகம்

கூத்து என்னும் சொல் முதலில் நடனத்தையும், பின்பு கதை, தழுவி வரும் கூத்தாகிய நாடகத்தையும் குறித்தது.
இயற்றமிழைப் புலவரும், இசைத் தமிழைப் பாணரும் பேணி வளர்த்தாற் போலவே, நடனத்தையும் நாடகத்தையும் கூத்தர்
என்போர் பேணி வளர்த்தனர். நடனம் ஆடும் மகளிர் விறலியர் எனப்பட்டனர். உள்ளக் குறிப்புப்புறத்தில் தோன்றும்படி திறம்பட
நடிப்பவள் விறலி (திருச்சிரப்பள்ளிக்கு அண்மையில் உள்ள விறலி மலை என்பது இன்று தவறாக 'விறாலிமலை' என வழங்குகிறது)
எனப்பட்டாள்.கூத்தி, கூத்தர் ஆகிய இவர்கள் கதை தழுவி வரும் கூத்துக்களை ஆடினர். அங்ஙனம் ஆடிய ஆண்மகன் பொருநன் என்றும்
பெயர் பெற்றான்.தமிழ் தொன்றுதொட்டு இயல், இசை, நாடகம் என்னும் மூன்று பிரிவுகளைப் பெற்றிருந்தது. சிலப்பதிகாரம் ஒன்றே
இன்று நாடகக் காப்பியமாக இருந்து வருகிறது. சிலப்பதிகார காலத்தில் வடமொழியாளர் கூட்டுறவு தமிழகத்தில் மிகுதியாக இருந்தது.
அக்காலத்தில் நாடகம் என்னும் சொல், கூத்து என்னும் சொல் போன்றே நடனத்தையும், கதை தழுவி வரும் கூத்தையும் குறித்தது.
கோவில் விழாக்களிலேயே நாடகம் தோற்றம் எடுத்தது என்பது அறிஞர் கருத்து. ஆடல், பாடல் என்னும் இரண்டின் சேர்க்கையாக
முதலில் நாடகம் அமைந்திருந்தது. பின்பு, பாட்டாலமைந்த உரைநடை இடையிடையே கலந்தது. அதன் பிறகு பேச்சு நடையிலமைந்த
உரைநடை சேர்ந்தது. எனவே, ஆடல், பாடல் வடிவில் அமைந்த உரைநடை, பேச்சு உரைநடை என்பன சேர்ந்து நாடகத்தை அழகு செய்தன.
இங்ஙனம் வளரத் தலைப்பட்ட நாடகம், அரசருக்கு என்றும், பொதுமக்களுக்கு என்றும் இருவகையாகப் பிரிந்தது.
அவை, 'வேத்தியல்,' 'பொதுவியல்' எனப்பட்டன.நாடகம் நன்முறையில் வளர்ந்து வந்த பொழுது,
இந்நாட்டில் வந்து தங்கிச் செல்வாக்குப் பெற்ற ஆரியரும், சமணரும் நாடகம் காமத்தை மிகுதிப்படுத்துவதென்று தவறாக எண்ணினர்;
அதனால், நுால்களில் நாடகத்தின் மதிப்பைக் குறைத்தனர். அவர்கள் செல்வாக்கு மிகுதிப் பட்டிருந்த காலத்தில்,
நாடகத் தமிழை வளர விடாமல் தடுத்தனர். எனவே, நாடக வளர்ச்சி படிப்படியாகக் குறைந்தது.பல்லவர் காலத்தில்
கி.பி. 7ம் நுாற்றாண்டில் பல்லவ மகேந்திரவர்மன், 'மத்த விலாசப் பிரகசனம்' என்னும் வேடிக்கை நாடகத்தை வடமொழியில் எழுதினான்.
வடமொழியில் சிறு நாடகங்கள் சில இராசசிம்ம பல்லவன் காலத்தில் செய்யப்பட்டன. பக்தி இயக்கம் பரவத் தொடங்கிய
அக்காலத்தில் சமயம் தொடர்பான நாடகங்கள் தலைதுாக்கின என்பது தெரிகிறது. கி.பி. 8ம் நுாற்றாண்டில் செய்யப்பெற்ற
உதயணன் வரலாற்றைக் கூறும் 'பெருங்கதை'யிலும் நாடகத்தைப் பற்றிய செய்திகள் சில காணப் படுகின்றன.சோழர் காலத்தில்
கி.பி. 10ம் நுாற்றாண்டில் தோன்றிய சீவக சிந்தாமணி, நாடகம் காமத்தை மிகுவிக்கின்றது என்று கூறியுள்ளது.
“இளைமையங் கழனிச் சாயம்
ஏறுழு தெரிபொன் வேலி
வளைமுயங் குருவ மென்றோள்
வரம்புபோய் வனப்பு வித்திக்
கிளைநரம்(பு) இசையும் கூத்தும்
கேழ்ததெழுந் தீன்ற காம
விளைபயன் இனிதின் துய்த்து
வீணைவேந்(து) உறையு மாதோ.”
“நாடகத்தை விரும்பிக் காண்பவர் கண்களைத் தோண்டியும்.......
இவ்வாறு பிறரை ஐம்பொறியால் நுகராமல் தடுத்து யாமும் நுகர்ச்சியைக் கைவிட்டேம்” என வரும் தொடர்,
சமணர் நாடகத்தை எந்த அளவு வெறுத்தனர் என்பதை நன்கு காட்ட வல்லது.”
“நாடகம் நயந்து காண்பார் நலங்கிளர் கண்கள் சூன்றும்”

-முத்தி இலம்பகம்

இவற்றால், சிந்தாமணி எழுதப்பெற்ற கி.பி. 10ம் நுாற்றாண்டில் நாடகங்கள் தமிழ்நாட்டில் நடிக்கப்பெற்றன
என்னும் உண்மையை உணரலாம்.

சோழருக்குப் பின்

கி.பி.14ம் நுாற்றாண்டில், மாலிக்-கபூர் படையெடுப்புக்குப் பிறகு சேர, சோழ, பாண்டிய அரசுகள் நிலை தளர்ந்தன.
விஜயநகர வேந்தர் ஆட்சி சிறிதுகாலம் சமயத்தைப் பாதுகாத்தது.
அப்பொழுது இசை, நடனம், நாடகம் முதலிய கலைகள் புத்துயிர் பெற்றன. தென்னாட்டில் நாயக்கராட்சி மறையும்
வரை இக்கலைகள் ஓரளவு உயிர்பெற்று வாழ்ந்தன. 17ம் நுாற்றாண்டுக்குப் பிறகு நாடு பல துறைகளிலும் அல்லற்பட்ட
காரணத்தால் நாடகம் முதலிய கலைகள் கவனிப்பாரற்றுக் கிடந்தன.
கி.பி.19ம் நுாற்றாண்டின் முற்பாதியில் கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர் தஞ்சையை ஆண்ட சரபோஜிமன்னர்
மீது பாடிய குறவஞ்சி நாடகம் குறிப்பிடத்தக்கது.
அந்நாடகம் தஞ்சைப் பெரிய கோவிலில் நடிக்கப்பட்டு வந்தது. அதே நுாற்றாண்டின் கடைப் பகுதியில் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை
பாடிய மனோன்மணிய நாடகமும் போற்றத்தக்கதுவே.

இருபதாம் நுாற்றாண்டில்


இருபதாம் நுாற்றாண்டின் முற்பாதியில் நாடகக்கலை நன்கு வளர்ந்தது. பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் எழுதியுள்ள
பல நாடகங்கள் நாடெங்கும் நடிக்கப்பட்டன. சிறந்த நாடக ஆசிரியரான சங்கரதாஸ் சுவாமிகள் எழுதியுள்ள நாடகங்கள் பல.
அவற்றுள், அபிமன்யு சுந்தரி, பார்வதி கல்யாணம், பிரபுலிங்க லீலை, வள்ளி திருமணம், பாதுகா பட்டாபிஷேகம், இலங்கா தகனம்,
அல்லியர்ச்சுனா, சிறுத்தொண்டர், சதி அனுசூயா, பவளக்கொடி, மணிமேகலை, மிருச்சகடி, சீமந்தனி, சாவித்திரி, கோவலன்,
பிரகலாதன் என்பன குறிக்கத்தக்கவை.
கண்ணைய நாயுடு நாடகக் குழுவினர் நடித்து வந்த கிருஷ்ணலீலை, தசாவதாரம், ஆண்டாள் முதலிய நாடகங்கள்
முப்பது ஆண்டுகளுக்கு முன் நாட்டில் சிறந்து விளங்கின.
நவாப் இராசமாணிக்கத்தின் குழுவினர் வள்ளி திருமணம், சம்பூர்ண ராமாயணம் முதலிய நாடகங்களை நடித்து வந்தனர்.
காலத்திற்கேற்ற சீர்திருத்தங்களைக் கொண்டு நாடகங்கள் பல இப்பொழுது பலரால் நடிக்கப்பட்டு வருகின்றன.
என்.எஸ்.கிருஷ்ணன் குழுவினர், எம்.ஜி.ராமச்சந்திரன் குழுவினர், எஸ்.எஸ்.ராஜேந்திரன் குழுவினர், கே.ஆர்.ராமசாமி குழுவினர்,
சிவாஜி கணேசன் குழுவினர், எம்.ஆர்.ராதா குழுவினர், சகஸ்ரநாமம் குழுவினர், கே.ஏ.தங்கவேலு குழுவினர் முதலியோர்
பயன்தரத்தக்க நாடகங்களை நடத்தி வந்தனர்.


நன்றி.
தினமலர்.


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 04, 2017 9:03 am

நாடகமே உலகம் 103459460
-
ஆர்.எஸ்.மனோகர்
-------------------------------------
* பல படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
ஆனாலும், நாடகத்தின் மீதான காதலால்
'நேஷனல் தியேட்டர்ஸ்' நாடக நிறுவனத்தை 1954-ல்
தொடங்கினார்.

'இன்ப நாள்', 'உலகம் சிரிக்கிறது' ஆகிய சமூக நாடகங்களை
அரங்கேற்றினார்.

பின்னர் பிரம்மாண்ட இதிகாச, வரலாற்று நாடகங்களை
அரங்கேற்றினார்.
-

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக