ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழநியில் தொடங்கியது பங்குனி உத்திரத் திருவிழா!

2 posters

Go down

பழநியில் தொடங்கியது பங்குனி உத்திரத் திருவிழா! Empty பழநியில் தொடங்கியது பங்குனி உத்திரத் திருவிழா!

Post by ayyasamy ram Wed Apr 05, 2017 10:58 am

பழநி முருகன் கோயிலில் இன்று பங்குனி உத்திர விழாவுக்கான
கொடியேற்றம் தொடங்கியது. தமிழ் கடவுளான முருகனின்
அறுபடை வீடுகளில் மூன்றாவது படைவீடாகத் திகழ்வது
திருஆவினன்குடி.

பழனி மலைக்கோயிலின் நுழைவாயிலாக உள்ள இந்த கோயில்தான்
மூன்றாம் படை வீடு. முருகனுக்கான அனைத்து விழாக்களும்
இங்குதான் தொடங்கும்.

ஆண்டுதோறும் நடைபெறும் தைப் பூசம் மற்றும் பங்குனி உத்திரம்
ஆகிய திருவிழாக்கள் புகழ்பெற்றவை. இந்த ஆண்டுக்கான தைப்பூசம்
நிறைவடைந்த நிலையில், பங்குனி உத்திரத்துக்கான கொடியேற்று
விழா இன்று தொடங்கியது.
-
பழநியில் தொடங்கியது பங்குனி உத்திரத் திருவிழா! R7oix8FbTvWfOeO3CNFQ+IMG-20170403-WA0018_14069
-
பழநி

பழனி மலைக்கோயிலில் உள்ள மூலவர் சிலை போகரால்
உருவாக்கப்பட்டது. நவபாஷாணங்களால் உருவாக்கப்பட்ட
இந்தச் சிலை, சந்தனக் காப்பு மூலமாக குளிர்விக்கப்படும்.

அதிக வெப்பத்தால் சிலையின் தன்மையில் மாற்றம் ஏற்பட
வாய்ப்புள்ளது என்பதால், இந்த ஏற்பாடு. நம்மைப்போலவே
இறைவனையும் பாவித்து வழிபடுவது பக்தியின் உயர்ந்த
நிலை.

அந்த வகையில் கோடை வெயிலின் தாக்கத்தில்
இருந்து முருகனைப் பாதுகாத்து, குளிர்விக்கவேண்டும் என்ற
பக்தி மேலீட்டின் காரணமாக, ஈரோடு மாவட்டம் கொடுமுடி
ஆற்றில் இருந்து நீரை எடுத்து அதை தீர்த்தக் காவடியாக
கொண்டு வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்யும் விழா
பங்குனி உத்திரவிழா.
-
பழநியில் தொடங்கியது பங்குனி உத்திரத் திருவிழா! XhHLQlLGQfydZ0X2sJzL+IMG-20170403-WA0016_14388
-
பழநியில், இன்று காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன்
பங்குனி உத்திர விழா தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள்
நடைபெறும் விழாவில், தினமும் காலை 8 மணிக்கு தந்த
பல்லக்கில் முக்கிய வீதிகளில் வள்ளி-தெய்வானையுடன்
முத்துக்குமாரசுவாமி திருவுலா காட்சியும்,

இரவு 8 மணிக்கு காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்க மயில்,
வெள்ளை யானை, தங்கக் குதிரை, வெள்ளி மயில், புதுச்சேரி
சப்பரம் போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடக்கும்.
வரும் 8-ம் தேதி மாலை 6:30 மணிக்கு முத்துக்குமார சுவாமி,
வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்கு
திருமணக்கோலத்தில் வெள்ளி ரதத்தில் முக்கிய வீதிகளில்
திருவுலாக் காட்சியும் நடைபெறும்.

9-ம் தேதி அதிகாலை 4:30 மணிக்கு தீர்த்தவாரிக்கு எழுந்தருளுதல்,
6 மணிக்கு தீர்த்தம் வழங்குதல் நடைபெறும். அன்று மாலை
4:20 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். 10-ம் தேதி இரவு தங்கக்
குதிரை வாகனத்தில் திருவுலா, 11-ம் தேதி மஞ்சள் நீராடல்
நிகழ்ச்சி, 12-ம் தேதி கொடி இறக்குதல் நிகழ்ச்சியுடன் பங்குனி
உத்திர விழா நிறைவுபெற இருக்கிறது.

பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை இந்து அறநிலையத்
துறையும், திருக்கோயில் நிர்வாகமும் செய்துள்ளன.
-
-------------------------------

- ஆர்.குமரேசன்
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பழநியில் தொடங்கியது பங்குனி உத்திரத் திருவிழா! Empty Re: பழநியில் தொடங்கியது பங்குனி உத்திரத் திருவிழா!

Post by krishnaamma Wed Apr 05, 2017 11:42 pm

அரோகரா ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum