ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமக்கெலாம் காப்பு!

2 posters

Go down

நமக்கெலாம் காப்பு! Empty நமக்கெலாம் காப்பு!

Post by ayyasamy ram Wed Mar 29, 2017 11:46 am

நமக்கெலாம் காப்பு! AJxrX3vrTNamuKkpuoMl+ramanujar
-
(ஆச்சார்யர் ஸ்ரீமத் இராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு- 2016-17)
--------------------
திருப்பெரும்புதூரில் அவதரித்த

திருமாலின் இளையவன்.

திருக்கச்சியுறை வரதராசனின்

ஆணைவழி நடந்த அடியவன்.

திருவரங்கம் கோயில் புதுமை செய்த

கைங்கர்ய வல்லுநன்.

திருவேங்கடத்தைப் பேரரசாக்கிய

திண்மை மிக்க மன்னவன். 1

.

சங்கு, சக்கரம் தோள்களில் பொறித்து

சங்கல்பம் நிறைவேற்றிய சநாதனன்.

தாழ்த்தப்பட்டோரையும் கோயிலில் நுழைத்து

சாதனை செய்த புரட்சியாளன்.

திவ்யப் பிரபந்தங்களை பிரபலப்படுத்த

தெய்வம் அருளிய தமிழ் முனி.

வடமொழியில் கரைகண்ட வேதவித்து.

ஸ்ரீபாஷ்யம் கண்ட வைணவ முத்து. 2

.

உலகில் பிறந்த அனைவரும் அடியார்.

உடையவன் முன்னால் அனைவரும் சமமே.

மானுட வேற்றுமை மாதவன் அறியான்.

மாய இருளை நீக்கும் கதிரோன்

அனைவருக்கும் பொது உடைமையென

திண்ணமாய் உரைத்த மனிதன்.

திருக்குலத்தோரை அரவணைத்து

சமுதாய ஒருமைப்பாடு கண்ட இனியன். 3

.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே,

தீண்டாமைக்கு கொள்ளி வைத்தவன்.

பொருளாதார ஏற்றத் தாழ்வுகள்

பக்திக்கு இல்லையென புள்ளி வைத்தவன்.

திருக்கோயில்கள் திறம்பட இயங்க

வழிமுறைகளைச் சொல்லி வைத்தவன்.

அகங்காரம் என்னும் மாயப்பேயை

தன்னிடமிருந்து தள்ளி வைத்தவன். 4

.

இல்லறம் தன்னில் சிறுமை கண்டதும்

துறவு பூண்ட தூயவன்.

இல்லறத்தாரை மடாதிபதியாக்கி

இயக்கம் வளர்த்த மாயவன்.

விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை

விளக்க வந்த வேதியன்.

ஜீயர் படையுடன் திக்கெலாம் வென்ற

திருவருள் பெற்ற சோதியன். 5

.

திருவாய்மொழியைப் பரவலாக்கிய

நம்மாழ்வாரின் ஓதுவன்.

பாவை பாடிய கோதையின் ஆசையை

நிறைவேற்றிய சோதரன்.

அருகில் வருவோர் அனைவரும் உயர

நல்வழி காட்டும் சாதகன்.

சரணாகதியை முதன்மைப்படுத்தி

துறவுக்கு இலக்கணமான யதிராஜன். 6

.

பலரிடம் கற்ற அந்தப் பரமன்,

குருவை விஞ்சிய சிஷ்யன்.

குருநாதர்களையே சீடனாகப் பெற்ற

அரிதினும் அரிய அவதார புருஷன்.

ஆளவந்தாரின் ஆசைகளை

பூர்த்தி செய்த புன்ணியன்.

ஆச்சார்ய பரம்பரையில் அவரது அடியொற்றி

ஆன்மிகம் புதுப்பித்த சூரியன். 7

.

அந்த இளைஞன் கோயில் மதிலேறி நின்றபோது

வைணவம் திருப்புமுனை கண்டது.

இறைவனை அடையும் ரகசிய வழியை

உணர்ந்தவுடனே உத்வேகம் பிறந்தது.

குருநாதர் சொல்லை மீறி அவன்

எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தபோது

அங்கு ஒரு திருக்கோஷ்டி உருவானது.

இறைவனின் அடியார் படைக்குக் கருவானது. 8

.

தானொருவன் நரகம் புக்கினும்

மானுடர் அனைவரும் வைகுந்தம் ஏக

தன்னை அளித்த தயாபரனை

அப்போது உலகம் கண்டது.

எம்பெருமானாரின் கருணை மழை

எல்லோரையும் நனைத்தது.

சௌமிய நாராயணர் திருத்தலம்

ராமானுஜனால் பேறு பெற்றது! 9

.

ராமானுஜன் நாமம் நல்லவை அருளும்.

ராமானுஜன் நினைவு நற்கதி அளிக்கும்.

ராமானுஜன் வழியே நாட்டைக் காக்கும்.

ராமானுஜன் வாழ்வே நமக்கெலாம் காப்பு. 10

--------------

குறிப்பு:

கவிஞர் குழலேந்தி
தேசிய சிந்தனைக் கழகத்தின்
மாநில பொதுச்செயலாளர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நமக்கெலாம் காப்பு! Empty Re: நமக்கெலாம் காப்பு!

Post by krishnaamma Wed Mar 29, 2017 12:04 pm

இராமானுஜன் திருவடிகளே சரணம் ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum