ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

’லிம்கா சாதனைப் புத்தக’த்தில் இடம் பெற்ற சாதனை! ஆந்திராவைப் பார்த்துக் கற்றுக் கொள்வோம்!

2 posters

Go down

’லிம்கா சாதனைப் புத்தக’த்தில் இடம் பெற்ற சாதனை! ஆந்திராவைப் பார்த்துக் கற்றுக் கொள்வோம்! Empty ’லிம்கா சாதனைப் புத்தக’த்தில் இடம் பெற்ற சாதனை! ஆந்திராவைப் பார்த்துக் கற்றுக் கொள்வோம்!

Post by ayyasamy ram Sun Mar 26, 2017 8:38 pm

இப்போது உலகம் எதிர்நோக்கியுள்ள மிகப் பெரிய பிரச்னை..
.தண்ணீர். மூன்றாம் உலகப் போரும் தண்ணீருக்காகவே
நிகழும் என்கிறார்கள்.

கடந்த ஆண்டு தமிழகம் தண்ணீரில் மிதந்தது. இந்த ஆண்டு
வறட்சியால் தவிக்கிறது. தமிழகத்தில், கிடைக்கும் தண்ணீரை
முறையாக பயன்படுத்த வேண்டிய 'நீர் மேலாண்மைத் திட்டம்'
அரசிடம் நிச்சயமாக இல்லை என்றே கூற வேண்டும்.

தூர்ந்து கிடக்கும் குளங்கள், ஏரிகளைக் கண்டால், எந்த
விவசாயிக்கும் வயிறு பற்றிக் கொண்டுதான் வரும்.
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின், இளைஞர்களிடையே
குளங்கள், ஏரிகளை காக்க வேண்டியதன் அவசியம் குறித்த
விழிப்பு உணர்ச்சி ஏற்பட்டுள்ளது.

பல நகரங்களில் இளைஞர்கள் களமிறங்கி குளம், குட்டைகளை
தூர் வாருவதைக் காண முடிகிறது.

நதிகளை இணைத்த சந்திரபாபு நாயுடு

தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியா முழுவதும் உள்ள
நதிகளை இணைப்பதுதான் தீர்வு என்று சொல்லப்படுகிறது.
நதி நீர் இணைப்பு குறித்து பல ஆண்டு காலமாகவே பேசப்படுகிறது.

நேரு காலத்தில் பெரிய நதிகளான பீயாஸ் - சட்லெஜ் நதிகள்
பெரிய கால்வாய் மூலம் இணைக்கப் பட்டுள்ளன. இதேபோல்
சட்லெஜ் நதியையும் யமுனையையும் இணைப்பதற்காக
ஹரியானா , பஞ்சாப் மாநிலங்களில் சில மாவட்டங்களில் கால்வாய்
வெட்டப்பட்டது.
பின்னர், காலிஸ்தான் பிரச்னையால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

’லிம்கா சாதனைப் புத்தக’த்தில் இடம் பெற்ற சாதனை! ஆந்திராவைப் பார்த்துக் கற்றுக் கொள்வோம்! Empty Re: ’லிம்கா சாதனைப் புத்தக’த்தில் இடம் பெற்ற சாதனை! ஆந்திராவைப் பார்த்துக் கற்றுக் கொள்வோம்!

Post by ayyasamy ram Sun Mar 26, 2017 8:38 pm



இதற்கு பின், இந்தியாவில் இரு நதிகளை இணைப்பது சாத்தியம்
இல்லாத விஷயமாக கருதப்பட்டது. ஆனால்,ஆந்திர முதல்வர்
சந்திரபாபு நாயுடு இரு நதிகளை இணைத்து புதிய வரலாற்று
சாதனையை நிகழ்த்திக் காட்டினார் ;

அதுவும் ஒரே ஆண்டுக்குள். ஆந்திராவைப் பொறுத்த வரை
கிருஷ்ணா, கோதாவரி நதிகள் முக்கியமானவை. மஹாராஷ்டிர
மாநிலத்தில் உற்பத்தியாகும் கோதாவரி ஆந்திரா, தெலுங்கானா
மாநிலங்களை வளம் கொழிக்க வைத்து 1,465 கிலோ மீட்டர் தொலைவு
ஓடி வங்கக் கடலில் கலக்கிறது.

கிருஷ்ணா நதி 1,300 கி.மீ நீளம் கொண்டது. இந்த நதி மகாராஷ்ட்ரா ,
கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா வழியாக வங்க கடலில் சென்று
சேர்கிறது.

ஆந்திராவில் ராயலசீமா வறட்சி பாதித்த பகுதி. அதே வேளையில்,
தென்னிந்தியாவிலேயே கோதாவரி நதியில் இருந்துதான் அதிகமானத்
தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கோதாவரி
கடலில் கொண்டு சேர்ப்பது 3 ஆயிரம் டி.எம்.சி தண்ணீர். கோதாவரியை
கிருஷ்ணாவுடன் இணைப்பதால், ராயலசீமா, கிருஷ்ணா டெல்டா
பகுதியில் 7 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பயனடையும்.

இதனால்தான் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரு நதிகளையும்
இணைக்கத் திட்டமிட்டார். நதிநீர் இணைப்பு திட்டத்தின் கோதாவரி
மற்றும் கிருஷ்ணா நதிகளை இணைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

நதிகள் இணைத்த சாதனைக்கு லிம்கா அங்கீகாரம்கடந்த 2015ம்
ஆண்டு ஜனவரி 1ம் தேதி திட்டம் அறிவிக்கப்பட்டது. திட்டத்துக்கானச்
செலவு ரூ. 1,427 கோடி.2015ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி பணிகள்
தொடங்கப்பட்டது. ஹைதரபாத்தைச் சேர்ந்த மெகா இன்ஜீனியரிங்
நிறுவனம் சவாலாக எடுத்து இந்தப் பணியை மேற்கொண்டது.

கேதாவாரி ஆற்றில் பட்டிசீமா என்ற இடத்தில் பிரமாண்டமான
'பம்ப் ஹவுஸ்' அமைக்கப்பட்டது. ஆசியாவிலேயே இந்த பம்ப்
ஹவுஸ்தான் பெரியது. 24 பிரமாண்ட பம்புகள்
( 24 vertical turbine pumps) இங்கு பொருத்தப்பட்டன.

ஒவ்வொரு பம்பும் 4,611 குதிரைத் திறன் கொண்டது. இதனால்,
நாள் ஒன்றுக்கு 8,500 கியூபிக் தண்ணீரும் எடுக்க முடியும். இந்த பம்ப்
ஹவுஸ் 173 நாட்களில் கட்டப்பட்டடது.

கோதாவரியில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக கால்வாயில் தண்ணீர்
பாய்ச்ச முதல் திட்டம் தயாரானது.

பட்டீசீமா பகுதியில் இருந்து 174 கி.மீ தொலைவில் விஜயவாடா
அருகே போலாவரம் என்ற இடத்தின் அருகே கிருஷ்ணா நதி ஓடுகிறது.
போலாவரம் வரை கால்வாய் வெட்டப்பட்டது. கோதாவரி பம்ப்
ஹவுஸில் இருந்து எடுக்கப்படும் நீர் கால்வாய் வழியாக ஓடி போலாவரம்
அருகே கிருஷ்ணாவில் கலக்க வைப்பதுதான் திட்டம். பணிகள்
அனைத்தும் மின்னல் வேகத்தில் நடந்தன.

ஒரே ஆண்டுக்குள் பணிகள் அனைத்தும் நிறைவடைந்தன. பணிகள்
நடைபெறும் இடங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
ஆந்திர முதல்வர் அதனை தலைமைச் செயலகத்தில் இருந்து
கண்காணித்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்தியாவிலேயே இவ்வளவு விரைவாக ஒரு நதி மற்றொரு நதியுடன்
இணைக்கப்பட்டது இதுவே முதன்முறை.

கடந்த 2015 மார்ச் 29ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. 2016ம் ஆண்டு
மார்ச் 30ம் தேதிக்குள் பணிகள் நிறைவடைந்தன. கடந்த
ஆகஸ்ட் 15ம் தேதி இந்தத் திட்டத்தை சந்திரபாபு நாயுடு நாட்டுக்கு
அர்ப்பணித்து வைத்தார்.

தற்போது இந்த சாதனை 'லிம்கா' புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
கோதாவரி நதியில் இருந்து கடலில் கலக்கும் 80 டி.எம்.சி தண்ணீரை
ஆந்திரா மிச்சப்படுத்தியுள்ளது.
-
--------------------

நன்றி- விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

’லிம்கா சாதனைப் புத்தக’த்தில் இடம் பெற்ற சாதனை! ஆந்திராவைப் பார்த்துக் கற்றுக் கொள்வோம்! Empty Re: ’லிம்கா சாதனைப் புத்தக’த்தில் இடம் பெற்ற சாதனை! ஆந்திராவைப் பார்த்துக் கற்றுக் கொள்வோம்!

Post by krishnaamma Mon Mar 27, 2017 12:37 am

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துகள்..............நம்ம ஊரு அரசியல் வாதிகள் இந்த செய்திகளை எல்லாம் படிக்க மாட்டார்களா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

’லிம்கா சாதனைப் புத்தக’த்தில் இடம் பெற்ற சாதனை! ஆந்திராவைப் பார்த்துக் கற்றுக் கொள்வோம்! Empty Re: ’லிம்கா சாதனைப் புத்தக’த்தில் இடம் பெற்ற சாதனை! ஆந்திராவைப் பார்த்துக் கற்றுக் கொள்வோம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum