Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இல்லத்தரசிகளின் உழைப்புக்கும் மதிப்புண்டு!
Page 1 of 1
இல்லத்தரசிகளின் உழைப்புக்கும் மதிப்புண்டு!
இல்லத்தரசிகளின் உழைப்புக்கும் மதிப்புண்டு! உணரலாம் வாருங்கள்....
இந்தியாவில் வீட்டிற்கு வெளியே வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்காமல் வீட்டில் இருக்கும் திருமணமான பெண்ணை , "House Wife" (வீட்டு மனைவி) என அழைக்கின்றார்கள். பெண்ணின் உழைப்பு மதிக்கப்பிழக்க இதுவும் ஒரு காரணம்.
திருமணமாகி கணவன் வீட்டில் இருக்கும் வெளியே வேலைக்கு செல்லாத ஒரு பெண்ணிடம் (திருமணமாகாத பெற்றோர் வீட்டில் இருக்கும் பெண்ணிடமும்) நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என யாராவது கேட்டால், அவர்களில் பெரும்பான்மையானோர் நான் வீட்ல சும்மா தாங்க இருக்கேன் என சொல்வார்கள் .
உண்மையாகவே அவர்கள் வீட்டில் எந்த ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருக்கின்றார்களா என வினவினால், வீட்டில் அவர்கள் தான் சமையல், துணிகளை துவைப்பது, வீட்டை தூய்மைப்படுத்துவது , குழந்தை வளர்ப்பு, வீட்டில் குழந்தைகளுக்கு கல்வியளிப்பது, பல வீடுகளில் கணவன் கொடுக்கும் சம்பள பணத்திற்குள் எல்லா செலவுகளையும் செய்து பொருளாதாரத்தை நிர்வகிப்பது என எல்லா வேலைகளையும் செய்கின்றனர்.
தொடரும்..........
இந்தியாவில் வீட்டிற்கு வெளியே வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்காமல் வீட்டில் இருக்கும் திருமணமான பெண்ணை , "House Wife" (வீட்டு மனைவி) என அழைக்கின்றார்கள். பெண்ணின் உழைப்பு மதிக்கப்பிழக்க இதுவும் ஒரு காரணம்.
திருமணமாகி கணவன் வீட்டில் இருக்கும் வெளியே வேலைக்கு செல்லாத ஒரு பெண்ணிடம் (திருமணமாகாத பெற்றோர் வீட்டில் இருக்கும் பெண்ணிடமும்) நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என யாராவது கேட்டால், அவர்களில் பெரும்பான்மையானோர் நான் வீட்ல சும்மா தாங்க இருக்கேன் என சொல்வார்கள் .
உண்மையாகவே அவர்கள் வீட்டில் எந்த ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருக்கின்றார்களா என வினவினால், வீட்டில் அவர்கள் தான் சமையல், துணிகளை துவைப்பது, வீட்டை தூய்மைப்படுத்துவது , குழந்தை வளர்ப்பு, வீட்டில் குழந்தைகளுக்கு கல்வியளிப்பது, பல வீடுகளில் கணவன் கொடுக்கும் சம்பள பணத்திற்குள் எல்லா செலவுகளையும் செய்து பொருளாதாரத்தை நிர்வகிப்பது என எல்லா வேலைகளையும் செய்கின்றனர்.
தொடரும்..........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இல்லத்தரசிகளின் உழைப்புக்கும் மதிப்புண்டு!
இப்படிக் காலை எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை ஓய்வின்றி உழைக்கும் அவர்கள் ஏன் தங்களை எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருக்கின்றேன் என சொல்கின்றனர் என யோசித்தால், அவர்களின் இந்த உழைப்புக்கு சம்பளம் (பணம்) வழங்கப்படுவதில்லை.
சம்பளம் கொடுக்கப்படாத வேலையை செய்வதால் அவர்கள் தாங்கள் சும்மா இருப்பதாக சொல்கின்றனர்.
பெண்கள் வீட்டில் செய்யும் இந்த வேலைகள் எல்லாம் சம்பளம் கிடைக்காத வேலைகளா எனக்கேட்டால் இல்லை. இந்த வேலைகளை எல்லாம் வேறொரு வீட்டிலோ, நிறுவனத்திலோ செய்தால் சம்பளம் கிடைக்கக்கூடிய வேலைகளாகும்.
இங்கே தான் இந்திய ஆண்கள் எல்லோரும் முதலாளிகளாக மாறுகின்றோம். வீட்டில் பெண்களிடம் இவ்வளவு வேலைகளையும் வாங்கிவிட்டு அதற்கு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுவதுடன் மட்டும் நிற்காமல், அவர்கள் சும்மா இருப்பதாகத் திரும்ப, திரும்பப் பொய்யை சொல்கின்றோம். இப்படியாக மீண்டும் , மீண்டும் சொல்லப்படும் ஒரு பொய்யானது பெண்கள் மனதில் உண்மையாக ஆழப்பதிந்து அவர்களும் அதையே சொல்கின்றனர்.
நடிகை ஜோதிகா நடித்த "36 வயதினிலே" திரைப்படத்தில் வெளிநாடு செல்லும் கணவன், வளர்ந்த பெண் பிள்ளையைத் தன்னுடன் அழைத்து செல்வான். தன்னையும் அழைத்து செல்லுங்கள் என மனைவி ஜோதிகா கேட்கும் பொழுது உனக்கு அங்கு வேலை கிடைக்காமல் எப்படி அழைத்து செல்வது என கேட்டு அவரின் வாயடைத்து விட்டு வெளிநாடு சென்று விடுவான்.
பின்னர் அதே கணவன் இங்கு உணவு சரியில்லை, வீட்டு வேலைக்கு யாரையாவது அழைக்கலாம் என்றால் அதிக சம்பளம் கேட்கின்றார்கள், அதனால் நீ என்னுடன் வெளிநாடு வந்து தங்கி விடுகின்றாயா என கேட்பான். அவனுக்கு அங்கே தேவை மனைவி அல்ல, சம்பளம் வாங்காத ஒரு வேலைக்காரி மட்டுமே. இதை ஜோதிகா மறுக்கும் பொழுது தன் பிள்ளையை விட்டு பேசச் சொல்லி ஒர் உளவியல் தாக்குதல் தொடுப்பான்.
தொடரும்........
சம்பளம் கொடுக்கப்படாத வேலையை செய்வதால் அவர்கள் தாங்கள் சும்மா இருப்பதாக சொல்கின்றனர்.
பெண்கள் வீட்டில் செய்யும் இந்த வேலைகள் எல்லாம் சம்பளம் கிடைக்காத வேலைகளா எனக்கேட்டால் இல்லை. இந்த வேலைகளை எல்லாம் வேறொரு வீட்டிலோ, நிறுவனத்திலோ செய்தால் சம்பளம் கிடைக்கக்கூடிய வேலைகளாகும்.
இங்கே தான் இந்திய ஆண்கள் எல்லோரும் முதலாளிகளாக மாறுகின்றோம். வீட்டில் பெண்களிடம் இவ்வளவு வேலைகளையும் வாங்கிவிட்டு அதற்கு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுவதுடன் மட்டும் நிற்காமல், அவர்கள் சும்மா இருப்பதாகத் திரும்ப, திரும்பப் பொய்யை சொல்கின்றோம். இப்படியாக மீண்டும் , மீண்டும் சொல்லப்படும் ஒரு பொய்யானது பெண்கள் மனதில் உண்மையாக ஆழப்பதிந்து அவர்களும் அதையே சொல்கின்றனர்.
நடிகை ஜோதிகா நடித்த "36 வயதினிலே" திரைப்படத்தில் வெளிநாடு செல்லும் கணவன், வளர்ந்த பெண் பிள்ளையைத் தன்னுடன் அழைத்து செல்வான். தன்னையும் அழைத்து செல்லுங்கள் என மனைவி ஜோதிகா கேட்கும் பொழுது உனக்கு அங்கு வேலை கிடைக்காமல் எப்படி அழைத்து செல்வது என கேட்டு அவரின் வாயடைத்து விட்டு வெளிநாடு சென்று விடுவான்.
பின்னர் அதே கணவன் இங்கு உணவு சரியில்லை, வீட்டு வேலைக்கு யாரையாவது அழைக்கலாம் என்றால் அதிக சம்பளம் கேட்கின்றார்கள், அதனால் நீ என்னுடன் வெளிநாடு வந்து தங்கி விடுகின்றாயா என கேட்பான். அவனுக்கு அங்கே தேவை மனைவி அல்ல, சம்பளம் வாங்காத ஒரு வேலைக்காரி மட்டுமே. இதை ஜோதிகா மறுக்கும் பொழுது தன் பிள்ளையை விட்டு பேசச் சொல்லி ஒர் உளவியல் தாக்குதல் தொடுப்பான்.
தொடரும்........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இல்லத்தரசிகளின் உழைப்புக்கும் மதிப்புண்டு!
இந்தப் படத்தில் கணவன் கதாபாத்திரம் செய்யும் இந்த செயலைத் தான் பெரும்பான்மையான இந்திய ஆண்களாகிய நாம் ஆண்டாண்டு காலமாக செய்து வருகின்றோம். நமக்கு பொருளாதார சிரமங்கள் ஏற்படும் பொழுது கட்டிய மனைவியையே சுமையாக கருதி அவரை அவமானப்படுத்துகின்றோம்.
பின்னர் அவரால் நமக்கு நலன் உண்டாகின்றது எனில் நாம் முன்னர் செய்த தவறுக்கு மன்னிப்பு கூடக்கேட்காமல் எந்த வித கூச்சமுமின்றி "நீ தான் எல்லாம்" என நாகூசாமல் பொய் சொல்கின்றோம். ஒரு தவறை திரும்ப, திரும்ப செய்வதால் அது நம்முடைய பழக்க வழக்கமாக மாறிவிடுகிறது. அதனால் அந்த தவறுகள் நம்முள் எந்த குற்றவுணர்ச்சியையும் ஏற்படுத்துவதில்லை.
அந்தப் படத்தில் வரும் பிள்ளையைப் போலத்தான் இன்று பெரும்பான்மையான பிள்ளைகள்(ஆண்/பெண் குழந்தைகள்) இங்கே வளர்க்கப்படுகின்றனர். அவர்களுக்குத் தங்கள் அன்னையின் உழைப்பு புரிவதில்லை, அதற்கு காரணமும் பணம் தான். அப்பா பணம் சம்பாதிக்கின்றார், அவரே நாம் கேட்கும் பொருட்களை வாங்கித் தருவார் என எண்ணுகின்றனர். பணம் தான் எல்லாம் என வாழும் இன்றைய சமூகத்தில் வளரும் குழந்தைகள் அவர்கள்.
என் மூன்று வயது மகள் இன்பா "டோரா புஜ்ஜி" கார்ட்டூன் பார்த்துவிட்டு தனக்கு உதவி செய்யும் நபர்களுக்கு நன்றி சொல்லத் தொடங்கினார்.
அந்த நன்றி எப்பொழுதும் அப்பாவான எனக்கு மட்டுமே கிடைக்கின்றது. என் மகளைப் பொருத்தவரை நான் தான் அவர் கேட்கும் பொருட்களை எல்லாம் வாங்கித் தருகின்றேன். அவரது அம்மாவிற்கு நன்றி கூறி நான் பார்த்ததில்லை. மூன்று வயது குழந்தை அம்மா பணம் சம்பாதிப்பதில்லை, அதனால் அவர் நமக்கு செய்யும் வேலைகளுக்கு நன்றி சொல்லத் தேவையில்லை என யோசிக்கின்றது.
தொடரும்..........
பின்னர் அவரால் நமக்கு நலன் உண்டாகின்றது எனில் நாம் முன்னர் செய்த தவறுக்கு மன்னிப்பு கூடக்கேட்காமல் எந்த வித கூச்சமுமின்றி "நீ தான் எல்லாம்" என நாகூசாமல் பொய் சொல்கின்றோம். ஒரு தவறை திரும்ப, திரும்ப செய்வதால் அது நம்முடைய பழக்க வழக்கமாக மாறிவிடுகிறது. அதனால் அந்த தவறுகள் நம்முள் எந்த குற்றவுணர்ச்சியையும் ஏற்படுத்துவதில்லை.
அந்தப் படத்தில் வரும் பிள்ளையைப் போலத்தான் இன்று பெரும்பான்மையான பிள்ளைகள்(ஆண்/பெண் குழந்தைகள்) இங்கே வளர்க்கப்படுகின்றனர். அவர்களுக்குத் தங்கள் அன்னையின் உழைப்பு புரிவதில்லை, அதற்கு காரணமும் பணம் தான். அப்பா பணம் சம்பாதிக்கின்றார், அவரே நாம் கேட்கும் பொருட்களை வாங்கித் தருவார் என எண்ணுகின்றனர். பணம் தான் எல்லாம் என வாழும் இன்றைய சமூகத்தில் வளரும் குழந்தைகள் அவர்கள்.
என் மூன்று வயது மகள் இன்பா "டோரா புஜ்ஜி" கார்ட்டூன் பார்த்துவிட்டு தனக்கு உதவி செய்யும் நபர்களுக்கு நன்றி சொல்லத் தொடங்கினார்.
அந்த நன்றி எப்பொழுதும் அப்பாவான எனக்கு மட்டுமே கிடைக்கின்றது. என் மகளைப் பொருத்தவரை நான் தான் அவர் கேட்கும் பொருட்களை எல்லாம் வாங்கித் தருகின்றேன். அவரது அம்மாவிற்கு நன்றி கூறி நான் பார்த்ததில்லை. மூன்று வயது குழந்தை அம்மா பணம் சம்பாதிப்பதில்லை, அதனால் அவர் நமக்கு செய்யும் வேலைகளுக்கு நன்றி சொல்லத் தேவையில்லை என யோசிக்கின்றது.
தொடரும்..........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இல்லத்தரசிகளின் உழைப்புக்கும் மதிப்புண்டு!
இதை நான் கவனிக்கத் தொடங்கியதிலிருந்து அவரிடம் நான் அவரது அம்மா செய்யும் பணிகளைத் திரும்ப, திரும்பச் சொல்லி அதை நாம் மதிக்க வேண்டும் எனப் பேசி வருகின்றேன். குழந்தைகளை வளர்க்கும் நாம் அனைவரும் இதை புரிந்து கொண்டு நம் குழந்தைகளிடம் இன்றிலிருந்தே இதைப் போல பேசத் தொடங்க வேண்டும்.
அதுமட்டுமின்றி நம் மனைவியரிடம் பணத்தைக் கொடுத்துக் குழந்தைகளுக்குத் தேவையானவற்றை வாங்கித் தரச்சொல்ல வேண்டும். அது மட்டுமின்றிப் பணத்தை வைத்து ஒருவர் செய்யும் வேலையை மதிப்பிடக்கூடாது எனவும் சொல்லி நம் குழந்தைகளை நாம் வளர்க்க வேண்டும். இல்லையென்றால் 36 வயதினிலே திரைப்படத்தில் முதல் பாதியில் தன் அம்மா செய்யும் வேலைகளைப் புறக்கணித்து அவரை அவமானப்படுத்தும் பிள்ளையாகத் தான் நம் பிள்ளைகள் வளரும். நிற்க !
அப்படியானால் வீட்டில் பெண்கள் செய்யும் இந்த வேலைகளுக்கெல்லாம் ஆண்கள் எல்லோரும் சம்பளம் கொடுக்கவேண்டும் என சொல்கின்றீர்களா என்ற கேள்வி இயல்பாகவே எல்லோருக்கும் எழும். வாழ்வதற்கே இன்று நமக்கு கிடைக்கும் சம்பளம் கட்டுபடியாகாத சூழலில் நம்மால் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியாது என்பது தான் யதார்த்தம், அதே நேரத்தில் அவர்கள் கூலிக்கு மாரடிக்கவில்லை, நம்முடன் ஏற்பட்டுள்ள திருமண உறவிற்காக அவர்கள் இந்த வேலைகளை எல்லாம் செய்கின்றார்கள்.
அவர்கள் வீட்டில் சும்மா இருக்கின்றார்கள் என நாம் சொல்லும் பொய்யை முதலில் நிறுத்துவோம்.
அலுவலகத்தில் இரவு , பகலாக உழைக்கும் எனது உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என பொருமும் ஆண்களாகிய நாம் வீட்டில் அதைப் போலவே உழைக்கும் நம் வீட்டு பெண்களின் உழைப்பை முதலில் மதிக்கக் கற்றுகொள்ளவேண்டும். நமக்கு என்றாவது உணவு வேண்டாம் என்றால் அதை முதலில் வீட்டில் சொல்வோம். ஏனெனில் அவர்கள் நமக்காக சமைத்து குப்பையில் கொட்டுவது உணவை மட்டுமல்ல, அவர்களது உழைப்பையும் தான்.
தொடரும்............
அதுமட்டுமின்றி நம் மனைவியரிடம் பணத்தைக் கொடுத்துக் குழந்தைகளுக்குத் தேவையானவற்றை வாங்கித் தரச்சொல்ல வேண்டும். அது மட்டுமின்றிப் பணத்தை வைத்து ஒருவர் செய்யும் வேலையை மதிப்பிடக்கூடாது எனவும் சொல்லி நம் குழந்தைகளை நாம் வளர்க்க வேண்டும். இல்லையென்றால் 36 வயதினிலே திரைப்படத்தில் முதல் பாதியில் தன் அம்மா செய்யும் வேலைகளைப் புறக்கணித்து அவரை அவமானப்படுத்தும் பிள்ளையாகத் தான் நம் பிள்ளைகள் வளரும். நிற்க !
அப்படியானால் வீட்டில் பெண்கள் செய்யும் இந்த வேலைகளுக்கெல்லாம் ஆண்கள் எல்லோரும் சம்பளம் கொடுக்கவேண்டும் என சொல்கின்றீர்களா என்ற கேள்வி இயல்பாகவே எல்லோருக்கும் எழும். வாழ்வதற்கே இன்று நமக்கு கிடைக்கும் சம்பளம் கட்டுபடியாகாத சூழலில் நம்மால் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியாது என்பது தான் யதார்த்தம், அதே நேரத்தில் அவர்கள் கூலிக்கு மாரடிக்கவில்லை, நம்முடன் ஏற்பட்டுள்ள திருமண உறவிற்காக அவர்கள் இந்த வேலைகளை எல்லாம் செய்கின்றார்கள்.
அவர்கள் வீட்டில் சும்மா இருக்கின்றார்கள் என நாம் சொல்லும் பொய்யை முதலில் நிறுத்துவோம்.
அலுவலகத்தில் இரவு , பகலாக உழைக்கும் எனது உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என பொருமும் ஆண்களாகிய நாம் வீட்டில் அதைப் போலவே உழைக்கும் நம் வீட்டு பெண்களின் உழைப்பை முதலில் மதிக்கக் கற்றுகொள்ளவேண்டும். நமக்கு என்றாவது உணவு வேண்டாம் என்றால் அதை முதலில் வீட்டில் சொல்வோம். ஏனெனில் அவர்கள் நமக்காக சமைத்து குப்பையில் கொட்டுவது உணவை மட்டுமல்ல, அவர்களது உழைப்பையும் தான்.
தொடரும்............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இல்லத்தரசிகளின் உழைப்புக்கும் மதிப்புண்டு!
அலுவலகத்தில் சம்பளம் வாங்கும் வேலைக்காரனாகவும், வீட்டில் முதலாளியாகவும் நடந்து கொள்ளும் நமது பழக்கத்தை மாற்றுவோம். வீட்டில் நாம் சக பயணியே அன்றி முதலாளிகள் அல்ல, அவர்களும் நம் வேலைக்காரர்கள் அல்ல. அவர்களுக்கு தேவையான உடை போன்ற அத்தியாவசிய செலவுகளுக்கும், அவரது குடும்பத்தினருக்கு தேவையான சின்ன சின்னச் செலவுகளையும் செய்வதற்கும் நமது சம்பளத்தில் ஒரு பகுதியை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். இது அவர்கள் பணம் என்பதையும் நாம் உணர வேண்டும். இதுமட்டும் போதுமா என்றால், போதாது.
நாம்(ஆண்) மட்டும் வெளியே வேலைக்கு செல்லும் குடும்பங்களில் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பும் போது பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் மூழ்கித் திளைக்காமல் மனைவியின் வேலையைப் பகிர்ந்து கொள்வோம்.
ஏனென்றால் ஆண்களாகிய நமக்கு விடுமுறை தினமாக ஞாயிற்றுக் கிழமையாவது உள்ளது, அவர்களுக்கு அந்த நாள் கூட விடுமுறை (ஓய்வு) கிடையாது. ஆண்/பெண் இருவருமே வெளியே வேலைக்கு செல்லும் குடும்பங்களில் கண்டிப்பாக எல்லா வேலைகளையும் இருவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.எனக்குப் பெண்கள் செய்யும் வேலை எதுவும் செய்யத் தெரியாதே என சாக்கு போக்கு சொல்ல வேண்டாம்.
ஏனென்றால் வீட்டில் பெண்கள் செய்யும் இந்த வேலைகளை எல்லாம் (வீட்டிற்கு) வெளியே சம்பளத்திற்காக செய்வது பெரும்பான்மையாக ஆண்களாகிய நாமே. அவர்களை வீட்டு மனைவி (House Wife) என அழைக்கும் நமது கயமையை நிறுத்திவிட்டு, வீட்டை உருவாக்குபவர்கள், நிர்வகிப்பவர்கள் ("Home Maker") என அழைக்கத் தொடங்குவோம். இங்கு நடைபெறுவது பெயர் மாற்றம் மட்டுமல்ல ஆண்களாகிய நமது மனமாற்றமும் தான். நம்முடன் வாழும் சக மனிதர்களாகிய பெண்களை, அவர்களது உழைப்பை மதிப்போம் , அவர்கள் மீது உண்மையான அன்பைப் பொழிவோம்.
"அன்னை, மனைவி, அக்கா, தோழி என என்னுடன் பயணிக்கும் எல்லா பெண்களுக்கும், உலகில் உழைக்கும் பெண்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்".
நன்றி விகடன் !
நாம்(ஆண்) மட்டும் வெளியே வேலைக்கு செல்லும் குடும்பங்களில் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பும் போது பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் மூழ்கித் திளைக்காமல் மனைவியின் வேலையைப் பகிர்ந்து கொள்வோம்.
ஏனென்றால் ஆண்களாகிய நமக்கு விடுமுறை தினமாக ஞாயிற்றுக் கிழமையாவது உள்ளது, அவர்களுக்கு அந்த நாள் கூட விடுமுறை (ஓய்வு) கிடையாது. ஆண்/பெண் இருவருமே வெளியே வேலைக்கு செல்லும் குடும்பங்களில் கண்டிப்பாக எல்லா வேலைகளையும் இருவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.எனக்குப் பெண்கள் செய்யும் வேலை எதுவும் செய்யத் தெரியாதே என சாக்கு போக்கு சொல்ல வேண்டாம்.
ஏனென்றால் வீட்டில் பெண்கள் செய்யும் இந்த வேலைகளை எல்லாம் (வீட்டிற்கு) வெளியே சம்பளத்திற்காக செய்வது பெரும்பான்மையாக ஆண்களாகிய நாமே. அவர்களை வீட்டு மனைவி (House Wife) என அழைக்கும் நமது கயமையை நிறுத்திவிட்டு, வீட்டை உருவாக்குபவர்கள், நிர்வகிப்பவர்கள் ("Home Maker") என அழைக்கத் தொடங்குவோம். இங்கு நடைபெறுவது பெயர் மாற்றம் மட்டுமல்ல ஆண்களாகிய நமது மனமாற்றமும் தான். நம்முடன் வாழும் சக மனிதர்களாகிய பெண்களை, அவர்களது உழைப்பை மதிப்போம் , அவர்கள் மீது உண்மையான அன்பைப் பொழிவோம்.
"அன்னை, மனைவி, அக்கா, தோழி என என்னுடன் பயணிக்கும் எல்லா பெண்களுக்கும், உலகில் உழைக்கும் பெண்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்".
நன்றி விகடன் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இல்லத்தரசிகளின் உழைப்புக்கும் மதிப்புண்டு!
எந்த வீட்டில் மனைவியை, கணவன் மதிப்பாக நடத்துகிறானோ அந்த வீட்டில் தான் பிள்ளைகளும் தாயை மதிப்பார்கள் ........... இதற்கும் ஒரு படத்தை உதாரணமாக காட்டலாம், இங்கிலிஷ் விங்கிலீஷ்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|