Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 4:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!
தமிழர்களின் தனிப்பெரும் உணவுச் சின்னமாக இருக்கும் இட்லி, தமிழக உணவுகளின் ராணியாகவே இருக்கிறது. நீராவியில் வேகவைக்கப்படும் இட்லி, எல்லா வயதினருக்கும் ஏற்றது; எளிதாக செரிமானமாகி தெம்பளிக்கும் சீரான உணவு. வயிற்றுக்கு பாதகம் செய்யாத பாதுகாப்பான இந்த உணவு, புரதச்சத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் உள்ளிட்ட சத்துகளை தன்னகத்தேகொண்டது. இவை நாம் அறிந்த வரலாறு என்றாலும், இந்த நீண்ட பீடிகைக்குக் காரணம் இல்லாமல் இல்லை. உடலுக்குப் பாதுகாப்பான உணவாகக் கருதப்படும் இட்லியிலும் நோய்க்கிருமிகள் ஊடுருவிவிட்டன என்பது அண்மைக்கால அதிர்ச்சி!.
இட்லி
நான்குக்கு ஒன்று (4:1) என்ற விகிதத்தில் அரிசியையும், உளுந்தையும் தனித்தனியாக அரைத்து, கலக்க வேண்டும். அரிசி கொரகொரப்பாகவும், உளுந்து பஞ்சு போலவும் இருக்க வேண்டும். 8 முதல் 10 மணி நேரம் வரை நொதிக்கவிட்டால், மாவு பஞ்சுபோல பொங்கும். இந்த மாவை இட்லித் தட்டுகளில் வேகவைத்தால், மல்லிகைப்பூ இட்லி ரெடி. இதில், தண்ணீர், உப்பு போன்றவற்றை சரியாகச் சேர்க்கத் தவறினால், மென்மையான இட்லிக்கு உத்தரவாதமில்லை.
அம்மிக்கல், ஆட்டுக்கல் போன்ற பாரம்பர்ய இயந்திரங்களைக் கண்டிராத, இன்றைய தலைமுறை இல்லத்தரசிகள், மிக்ஸி, கிரைண்டர்களுக்கும் ஓய்வு கொடுக்கத் தொடங்கிவிட்டனர். இட்லிக்குப் பதம் பார்த்து மாவு அரைத்து எடுப்பதற்கெல்லாம் பெருநகர அவசர வாழ்க்கை அவகாசமளிப்பதில்லை. இவர்களுக்காகவே, தெருவுக்கு தெரு ரெடிமேட் இட்லி மாவுக் கடைகள் முளைத்துள்ளன. தேவைக்கேற்ப மாவு வாங்கி, இட்லி அவித்துக்கொள்ளலாம் அல்லது தோசை வார்த்துக்கொள்ளலாம்.
......................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!
இதில்தான் வில்லங்கம் ஒளிந்துகொண்டிருக்கிறது. இட்லிக்கான மாவு பக்குவமாக மட்டுமல்ல, சுத்தமாகவும் இருக்க வேண்டும். ஆனால், பல இட்லி மாவுக் கடைகள் சுகாரதார முறைகளைக் கடைபிடிப்பதில்லை என்பதுதான் ஜீரணிக்க முடியாத உண்மை.
தோசை
முறையாகச் சுத்தப்படுத்தப்படாத மெகா சைஸ் கிரைண்டர்கள், பாத்திரங்கள், மாவு அரைக்கப் பயன்படுத்தப்படும் சுகாதாரமற்ற தண்ணீர் போன்றவற்றில் ஈகோலி (E-Coli) என்ற பாக்டீரியாக்கள் இருக்கும். இது மனிதன் மற்றும் விலங்குகளின் கழிவில் இருக்கக்கூடிய பாக்டீரியா இது. மாவு அரைக்கும்போது, சுகாதாரமற்ற தண்ணீரோடு சேர்ந்து இட்லி, தோசை மாவில் இந்த பாக்டீரியாக்கள் தஞ்சமடைகின்றன.
மனிதனின் உடலை சொகுசு பங்களாக்களாகக் கருதும் இந்த பாக்டீரியாக்கள் அங்கே சகல சௌபாக்கியங்களுடனும் வசிக்கத் தொடங்குகின்றன. பின்னர், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், உடல் வறட்சி, வாந்தி, மயக்கம், இரைப்பை நோய், தலைசுற்றல் ஆகியவற்றை வரிசைகட்டி அனுப்புகின்றன. சில ஈகோலி பாக்டீரியா ரத்தச்சோகை, சிறுநீரக செயலிழப்பு, சிறுநீர் பாதைத் தொற்று போன்றவற்றைக்கூட ஏற்படுத்தும்.
`இட்லி மாவை ஆவியில் நன்றாக வேகவைத்துத்தானே சாப்பிடுகிறோம்... அப்போது ஈகோலி பாக்டீரியாக்கள் இறந்துவிடாதா?’ என்ற கேள்வி எழலாம். என்னதான், வேகவைத்தாலும், குற்றுயிரும் குலையுயிருமாக மனித உடலுக்கு ஊடுருவிவிட்டால், அந்தப் பாக்டீரியாக்களுக்கு பின்னர் சுக்ர திசைதான்.
......................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!
"என் மகளுக்கு 4 வயது. அவளுக்கு அடிக்கடி வாந்தி மற்றும் காய்ச்சல் வரும் பிரச்னை இருந்தது. இட்லி, தோசைதானே சாப்பிடுகிறாள் ஏன் அவளுக்கு வாந்தி வருகிறது எனப் புரியாமல் இருந்தோம். காரணம் தெரியாமல் ஒவ்வொரு முறையும் மருத்துவரிடம் சென்று காண்பித்தோம். மருத்துவரும் சிகிச்சை கொடுத்து அவளைத் தேற்றுவார். பின்னாளில் ஏன் இப்படி வருகிறது எனக் கண்டுபிடிக்கையில், எங்கள் வீட்டு கிரைண்டர் ரிப்பேரானதால், அருகில் உள்ள கடையில் தோசை மாவு வாங்கும் பழக்கத்தில் இருந்தோம். அந்த மாவில் தோசையோ இட்லியோ செய்து கொடுத்தால், அவளுக்கு ஒத்துகொள்ளாமல் வாந்தி வருகிறது, பின்னர் காய்ச்சலும் வருகிறது எனக் கண்டுபிடித்தோம்" என்கிறார் கோயம்பேட்டைச் சேர்ந்த கிருஷ்ணன்.
மாவு
`சாதாரண தெருமுனைக் கடைகளில் மாவு வாங்கினால்தானே பிரச்னை... சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்கிக்கொள்ளலாம்’ என்று அதிமேதாவித்தனமாகத் தோன்றும் யோசனைகளும் வேண்டாம். அவையும் தரமானவை தானா என்பதில் மாற்றுக் கருத்துகள் இருக்கின்றன.
அலங்கார பாக்கெட்டுகளில் அடைத்த சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் மாவிலும் பிரச்னைகள் இருக்கவே செய்கின்றன. மாவு நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கவும், உடனடியாக புளிக்காமல் இருக்கவும் கால்சியம் சிலிகேட் (Calcium Silicate) சேர்க்கப்படுகிறது. இதுவும் செரிமான மண்டலத்துக்குப் பிரச்னை தரக்கூடிய ஒன்றுதான்.
அவசரத் தேவைக்காக அவஸ்தைகளை விலைகொடுத்து வாங்காமல், கூடுமானவரை இட்லி தோசை மாவை வீட்டிலேயே தயாரித்துக்கொள்வது, வருமுன் காப்பதற்கான எளிய வழி!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!
மேற்கோள் செய்த பதிவு: 1235678ஜாஹீதாபானு wrote:நல்ல தக்வலமா பகிர்வுக்கு நன்றி
ம்ம் .படித்தாலே பகீர் என்று இருக்கு பானு..... எந்த ஒரு வேலையும் மனசாட்ச்சிப் படி செய்யமாட்டோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்பவர்கள் பெருகியதால் வந்த விளைவு இது .....நாட்டுக்கே கேடு தான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!
வீட்டிலே இருக்கும் பெண்கள் கிரைண்டரில் மாவு அரைப்பதற்கு விரும்புவதில்லை ; காரணம் TV தான் . மாவு அரைக்கும்போது பக்கத்திலேயே இருக்கவேண்டும் ; அடிக்கடி தண்ணீர் ஊற்றி , கிரைண்டர் சீராக இயங்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் . கிரைண்டர் பக்கத்திலேயே இருந்தால் , சீரியல்களில் பல முக்கியமான நிகழ்வுகளைப் பார்க்கமுடியாமல் போய்விடுமே என்ற கவலை பெண்களுக்கு .
அடுப்பிலே பாலை வைத்துவிட்டு , அது பொங்கி வழிந்து , அடிபிடிக்கும் வரையில் , கவனிக்காமல் தீய்ந்துபோன வாசனை வந்தபின்தான் சில பெண்களுக்கு அடுப்பிலே பால் வைத்த ஞாபகம் வரும் . அந்த அளவுக்கு சீரியல்களில் ஒன்றிப் போய்விடுகிறார்கள் .
அடுப்பிலே பாலை வைத்துவிட்டு , அது பொங்கி வழிந்து , அடிபிடிக்கும் வரையில் , கவனிக்காமல் தீய்ந்துபோன வாசனை வந்தபின்தான் சில பெண்களுக்கு அடுப்பிலே பால் வைத்த ஞாபகம் வரும் . அந்த அளவுக்கு சீரியல்களில் ஒன்றிப் போய்விடுகிறார்கள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!
கிரைண்டரில் மாவு அரைக்க தள்ள பயன்படும் பிளாஸ்டிக் தடுப்பு, அரைக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவு, மாவில் கலந்துவிடுகிறது. எங்கே சுகாதாரம்!
GunasekarenS- பண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016
Re: இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: இன்ஸ்டன்ட் இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்!
M.Jagadeesan wrote:வீட்டிலே இருக்கும் பெண்கள் கிரைண்டரில் மாவு அரைப்பதற்கு விரும்புவதில்லை ; காரணம் TV தான் . மாவு அரைக்கும்போது பக்கத்திலேயே இருக்கவேண்டும் ; அடிக்கடி தண்ணீர் ஊற்றி , கிரைண்டர் சீராக இயங்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் . கிரைண்டர் பக்கத்திலேயே இருந்தால் , சீரியல்களில் பல முக்கியமான நிகழ்வுகளைப் பார்க்கமுடியாமல் போய்விடுமே என்ற கவலை பெண்களுக்கு .
அடுப்பிலே பாலை வைத்துவிட்டு , அது பொங்கி வழிந்து , அடிபிடிக்கும் வரையில் , கவனிக்காமல் தீய்ந்துபோன வாசனை வந்தபின்தான் சில பெண்களுக்கு அடுப்பிலே பால் வைத்த ஞாபகம் வரும் . அந்த அளவுக்கு சீரியல்களில் ஒன்றிப் போய்விடுகிறார்கள் .
அடாடா............இன்னுமா பாலை பொங்கி வழிய விடுகிறார்கள்? ..................ம்ம்...நானும் கேள்விப்பட்டேன் ஐயா, நிறைய பெண்கள் வீட்டில் கிரைண்டர் இருந்தும் மாவு அரைக்க சோம்பல் பட்டுக்கொண்டு கடை இல் மாவாகவே வாங்கி விடுகிறார்கள் என்று
.
..
குடும்ப நபர்கள் மீது அக்கறை இருக்கும் எந்தப் பெண்ணும் இதை செய்யமாட்டாள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
» பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
» இட்லி மாவு மிஞ்சிப் போனால்
» இட்லி, தோசை மாவில் கலக்கும் விஷம்
» • தோசைமாவு, இட்லி மாவு புளித்துப் போய்விட்டால் -சமையல் டிப்ஸ்…
» பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
» இட்லி மாவு மிஞ்சிப் போனால்
» இட்லி, தோசை மாவில் கலக்கும் விஷம்
» • தோசைமாவு, இட்லி மாவு புளித்துப் போய்விட்டால் -சமையல் டிப்ஸ்…
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|