ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது !

3 posters

Go down

நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Empty நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது !

Post by M.Jagadeesan Tue Mar 07, 2017 10:42 pm

அந்த இளம் தம்பதியினர் பஸ்ஸுக்காகக் காத்திருந்தனர் . நீண்ட நேரம் காத்திருந்தனர் . எந்த பஸ்ஸும் வரவில்லை . சிறிதுநேரம் கழித்து ஒரு பஸ் வந்தது . கையைக் காட்டி பஸ்ஸை நிறுத்தினர் தம்பதியினர் .
பஸ் நின்றதும் தம்பதிகள்  ஏற  முயன்றனர் . உடனே கண்டக்டர் அவர்களை பார்த்து ,

" பஸ்ஸுல இடம் இல்லை ; Seating மொத்தம் 60 பேர்தான் . எல்லாம் Full ஆகிவிட்டது . நீங்கள் வருவதனால் நின்றுகொண்டுதான் வரவேண்டும் . சம்மதம் என்றால் ஏறிக்கொள்ளுங்கள் ; இல்லையென்றால் அடுத்த பஸ் வரும்வரையில் காத்திருங்கள் " என்று சொன்னார் .

இதைக்கேட்ட தம்பதிகள் ,  நீண்ட தூரம் பயணம் செய்யவேண்டியதைக் கருத்தில்கொண்டு

" கண்டக்டர் ! நீங்க போங்க ! நாங்க அடுத்த பஸ்ஸில் வருகிறோம் " என்று சொன்னார்கள் .

சிறிதுநேரம் கழித்து மற்றோர் பஸ் வந்தது . அதிலும் அதே கதைதான் . வண்டி முழுவதும் பயணிகள் உட்கார்ந்திருந்தனர் . பஸ் நின்றது . உடனே கண்டக்டர்

" மொத்தம் இருந்த 60  சீட்டுகளும் Full ஆகிவிட்டது . நின்றுகொண்டு வர சம்மதமா ? " என்று கேட்டார் .

உடனே தம்பதிகள்   ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர் . இனி வருகின்ற எல்லா பஸ்ஸுகளிலும் இதேபோல கூட்டம் இருந்தால் என்ன செய்வது ? என்று யோசித்தனர் . எனவே வேறு வழியின்றி பஸ்ஸில் ஏறி நின்றுகொண்டனர் .

தம்பதிகள் ஏறியவுடன் பஸ் வேகமாகச் செல்லத் தொடங்கியது . அவர்கள் முதலில் தவறவிட்ட பஸ் சற்றுமுன்னே சென்றுகொண்டிருந்தது .

பஸ் நீண்டதூரம் சென்றவுடன் நடுவில் ஒரு ஆறு குறுக்கிட்டது . அந்த ஆற்றைக் கடப்பதற்கு , ஆற்றின் குறுக்கே ஒரு மரப்பாலம் போடப்பட்டிருந்தது .  முதல்நாள் பெய்த மழையில்  ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது . மரப்பாலம் இற்றுப்போய் இருந்தது . முதலில் சென்ற பஸ் ஆற்றைக்கடந்து பாதுகாப்பாக மறுகரையை அடைந்தது . அடுத்து தம்பதிகள் ஏறிய பஸ் ஆற்றைக் கடக்கத் தொடங்கியது .

மரப்பாலத்தின் நடுவில் சென்றதுதான் தாமதம் . பேரிரைச்சலோடு பாலம் முறிந்தது . அடுத்தகணம் அந்த கோர விபத்து  நடந்தது . பஸ் தலைகுப்புற ஆற்றில் விழுந்தது .

" ஐயோ ! அம்மா ! காப்பாத்துங்க ! என்ற ஓலம் எங்கும் எதிரொலித்தது . காட்டாற்று  வெள்ளத்தை எதிர்த்து பஸ்ஸிலே மாட்டிக்கொண்டவர்கள் என்ன செய்யமுடியும் ? தம்பதிகள் இருவரைத்தவிர பயணிகள் 60 பேர் , கண்டக்டர் ,டிரைவர் எல்லோருக்கும் சிவலோக பதவி கிடைத்தது .

நின்றுகொண்டிருந்த காரணத்தினால் ,அதிர்ஷ்டவசமாக  தம்பதிகள் இருவரும் , பஸ்ஸின் வெளியிலே விழுந்தனர் . ஆற்று வெள்ளத்தில் நீந்திக் கரையேறி உயிர் தப்பினர் . ஆனாலும் கண்ணெதிரே நடந்த கோர விபத்து அவர்கள் நெஞ்சை உலுக்கிவிட்டது . உடனே அவர்கள்

" பேருந்தில் நாம்  ஏறி இருக்கக்கூடாது ! " என்று சொன்னார்கள் .

அவர்கள் ஏன் அப்படிச் சொன்னார்கள் ? காரணம் தெரிகிறதா ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Empty Re: நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது !

Post by T.N.Balasubramanian Wed Mar 08, 2017 2:25 pm

அய்யய்யோ மறுபடியும் முதலில் இருந்தா  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Empty Re: நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது !

Post by krishnaamma Thu Mar 09, 2017 1:44 am

T.N.Balasubramanian wrote:அய்யய்யோ மறுபடியும் முதலில் இருந்தா  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1235671

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது பதிலே சொல்லாமல் ஓடிவிட்டிர்களே ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Empty Re: நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது !

Post by M.Jagadeesan Thu Mar 09, 2017 5:28 pm

விடையை நானே கூறிவிடுகிறேன் !

முதலில் சென்ற பேருந்தில் பிரயாணிகள் 60 பேர் , கண்டக்டர் , டிரைவர் இருவரையும் சேர்த்தால் மொத்தம் 62 பேர் . அந்த பேருந்து மரப்பாலத்தைக் கடந்து சென்றுவிட்டது .

தம்பதிகள் சென்ற பேருந்தில் மொத்தம் 64 பேர் . முதலில் சென்ற பேருந்தில் உள்ள எண்ணிக்கையை விட இரண்டுபேர் அதிகம் . அந்த இரண்டு பேரின் அதிகப்படியான எடையை , மரப்பாலத்தால் தாங்க முடியவில்லை ; எனவே பாலம் உடைந்து பஸ் கவிழ்ந்துவிட்டது .

எனவேதான் தம்பதிகள் " நாம் இருவரும் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது " என்று சொன்னார்கள் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Empty Re: நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது !

Post by krishnaamma Sun Mar 12, 2017 12:42 am

M.Jagadeesan wrote:விடையை நானே கூறிவிடுகிறேன் !

முதலில் சென்ற பேருந்தில் பிரயாணிகள் 60 பேர் , கண்டக்டர் , டிரைவர் இருவரையும் சேர்த்தால் மொத்தம் 62 பேர் . அந்த பேருந்து மரப்பாலத்தைக் கடந்து சென்றுவிட்டது .

தம்பதிகள் சென்ற பேருந்தில் மொத்தம் 64 பேர் . முதலில் சென்ற பேருந்தில் உள்ள எண்ணிக்கையை விட இரண்டுபேர் அதிகம் . அந்த இரண்டு பேரின் அதிகப்படியான எடையை , மரப்பாலத்தால் தாங்க முடியவில்லை ; எனவே பாலம் உடைந்து பஸ் கவிழ்ந்துவிட்டது .

எனவேதான் தம்பதிகள் " நாம் இருவரும் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது " என்று சொன்னார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1235768

ம்ம்.. புரிகிறது ஐயா...நன்றி ! அன்பு மலர் நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Empty Re: நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது !

Post by T.N.Balasubramanian Sun Mar 12, 2017 11:05 am

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:விடையை நானே கூறிவிடுகிறேன் !

முதலில் சென்ற பேருந்தில் பிரயாணிகள் 60 பேர் , கண்டக்டர் , டிரைவர் இருவரையும் சேர்த்தால் மொத்தம் 62 பேர் . அந்த பேருந்து மரப்பாலத்தைக் கடந்து சென்றுவிட்டது .

தம்பதிகள் சென்ற பேருந்தில் மொத்தம் 64 பேர் . முதலில் சென்ற பேருந்தில் உள்ள எண்ணிக்கையை விட இரண்டுபேர் அதிகம் . அந்த இரண்டு பேரின் அதிகப்படியான எடையை , மரப்பாலத்தால் தாங்க முடியவில்லை ; எனவே பாலம் உடைந்து பஸ் கவிழ்ந்துவிட்டது .

எனவேதான் தம்பதிகள் " நாம் இருவரும் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது " என்று சொன்னார்கள் .  
மேற்கோள் செய்த பதிவு: 1235768

ம்ம்.. புரிகிறது ஐயா...நன்றி ! அன்பு மலர் நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1235898

குற்றம் கண்டுபிடிப்பதாக எண்ணவேண்டாம்.
முதல் பஸ்ஸில் உள்ளவர்கள்  எடையும் 2ம் பஸ்ஸில் இருந்தவர்கள் -2 பேர் எடையும் அதிகமாகவும் இருந்து இருக்கலாம். குறைவாகவும் இருந்திருக்கலாம்.  முதல் பஸ்ஸில் குண்டானவர்கள் யாருமே இல்லையா ?
இரண்டாம் பஸ்ஸில் ஒல்லியானவர்களே இல்லையா ?  எடைதான் முக்கியம் என்கிறபோது எண்ணிக்கை அர்த்தமற்றதாக ஆகிவிடுகிறது .எடைக்கருவி கொண்டே பிரயாணிகளை ஏற்றி இருக்கவேண்டும்.  எனக்கென்னவோ உங்கள் விடையுடன் ஒத்து போகமுடியவில்லை.  .நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! 1757813334
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Empty Re: நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது !

Post by M.Jagadeesan Mon Mar 13, 2017 1:07 pm

ஐயாவின் கருத்துக்கு நன்றி !

சில லிப்டுகளில் இத்தனை பேர்தான் ஏறவேண்டும் என்று போட்டிருப்பார்கள் . அளவுக்கு அதிகமாக ஏறினால் LIFT நின்றுவிடும் என்பதற்காக .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Empty Re: நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது !

Post by T.N.Balasubramanian Mon Mar 13, 2017 2:54 pm

M.Jagadeesan wrote:ஐயாவின் கருத்துக்கு நன்றி !

சில லிப்டுகளில் இத்தனை பேர்தான் ஏறவேண்டும் என்று போட்டிருப்பார்கள் . அளவுக்கு அதிகமாக ஏறினால் LIFT நின்றுவிடும்   என்பதற்காக .
மேற்கோள் செய்த பதிவு: 1235963

நன்றி Jagadeesan .
லிஃபிட்டுகளில்  கூர்ந்து  கவனித்தால் , ஆட்களின் எண்ணிக்கையுடன் அனுமதிக்கப்பட்ட எடையும் தெரிவித்து இருப்பார்கள்.எங்கள் வீட்டு லிஃப்டில் 5 ஆட்கள் 340 kg என்று இருக்கிறது.
ஆட்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு ஏன்? சில லிஃப்டுகளில் கதவுகள் மூட கதவில் சென்சார்கள் உண்டு. ஆட்கள் அதிகமானால், சென்சார்கள் பாதை மறைக்கப்பட்டு, கதவுகள் மூடாது. அதற்காகதான்  எண்ணிக்கை.

எடை, அதிகமானால், மேலே இழுக்கும் மோட்டார், இழுப்பதற்கு தடுமாறும். 
எங்கள் லிப்ட்டில் collapsible grill கேட். சென்சார் கிடையாது.ஒல்லியான ஆட்கள் 7 பேர் ./பள்ளிப் போகும் மாணவ மாணவியர் 10 கூட போகலாம். 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Empty Re: நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum