ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்ச் 1 முதல் 15 வரை ஜோதிடப் பலன்கள் !

Page 2 of 2 Previous  1, 2

Go down

மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! - Page 2 Empty மார்ச் 1 முதல் 15 வரை ஜோதிடப் பலன்கள் !

Post by krishnaamma Wed Mar 01, 2017 11:49 pm

First topic message reminder :

மேஷம்

மார்ச் 1 முதல் 15 வரை

தன்னம்பிக்கைக்கு மதிப்பளித்து அதனால் வெற்றி பெறும் உங்களுக்கு, இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் ராசியில் சஞ்சாரம் செய்கிறார். எனவே மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். குருவின் பார்வையால் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். தொழில் ஸ்தானத்தை அதன் அதிபதியே பார்க்கிறார். மேலும் லாபஸ்தானத்தை குரு பார்க்கிறார்.

தொழில், வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். வாடிக்கையாளர்கள் பற்றிய வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். தொழில் சார்ந்த பயணங்கள் மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணவரத்து திருப்தி தரும். மேலிடத்தின் கனிவான பார்வையால் குதூகலம் பெறுவீர்கள்.

குடும்ப ஸ்தானாதிபதி சுக்கிரன் உச்சமாக இருக்கிறார். குடும்ப ஸ்தானத்தை சனி பார்க்கிறார். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். புத்தி சாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்பதில்லையே என்ற வருத்தம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். வீடு, மனை சார்ந்த முயற்சிகளை எடுக்கும் போது கவனம் தேவை.

பெண்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு ராசிநாதன் சுக்கிரனுடன் சேர்வதும், சுக்கிரன் சுய சாரம் பெறுவதும் மிக நன்மையான காலகட்டமாகத் தெரிகிறது.

தைரியமாக எந்த வேலையையும் செய்து முடிப்பீர்கள். உடன் பணிபுரிபவர்களால் நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு, சூரியன் நீச நிலையில் இருந்தாலும் ராசியைப் பார்ப்பதாலும், சூரியன் இருக்கும் ஸ்தானத்திற்கு ராசிநாதன் செவ்வாய் பாதகஸ்தானத்தில் இருப்பதாலும் புதிய முடிவுகள் எடுக்கும்போது கவனம் தேவை. ரகசியங்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது. கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வீண்கவலையைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காமல் போகலாம். அதிக சிரத்தை எடுப்பது நன்மை தரும்.

பரிகாரம்:

முருகனுக்கு செவ்வரளிப் பூவால் அர்ச்சனை செய்து வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கி மன அமைதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வியாழன், வெள்ளி.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! - Page 2 Empty Re: மார்ச் 1 முதல் 15 வரை ஜோதிடப் பலன்கள் !

Post by krishnaamma Wed Mar 01, 2017 11:54 pm

கும்பம்

மார்ச் 1 முதல் 15 வரை
கொடுத்த வாக்கை எப்பாடு பட்டாவது காப்பாற்றும் உறுதி உள்ள நீங்கள், மிகவும் பொன்னான காலகட்டத்தில் இருக்கிறீர்கள் என சொல்லலாம். ராசியில் சப்தம ஸ்தானாதிபதியுடன் கேதுவும், பஞ்சம மற்றும் அஷ்டமாதிபதி புதனும் சேர்க்கை பெற்று இருக்கிறார்கள். சகோதரர்கள் வகையில் இருந்த மனத்தாங்கல்கள் மறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பூமி தொடர்பான பிரச்னையில் இழுபறியான நிலை காணப்படும். மனத்தெம்பும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். தொழில் ஸ்தானத்தை செவ்வாய் பார்க்கிறார். தொழில், வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை காணப்பட்டாலும் லாபத்திற்கு பஞ்சமிருக்காது. வரவேண்டிய பணம் தாமதமானாலும் கட்டாயம் கைக்குக் கிடைக்கும். போட்டிகளை சமாளிக்க வேண்டி வரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க நேரிடும். நிதானமாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் நல்ல பெயர் கிட்டும். மேலிடத்திலிருந்து அதிகமான சுமைகளைத் தருவார்கள். குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பதாலும், குடும்ப ஸ்தானாதிபதி குரு ராசியைப் பார்ப்பதாலும் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி அமைதி காணப்படும். கணவன்மனைவியிடையே இருந்த பிரச்னைகள் நல்ல முடிவை தரும். பிள்ளைகள் உங்கள் சொற்படி நடப்பதை கண்டு மனம் மகிழ்வீர்கள். நண்பர்கள் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வழக்குகள் இழுபறியாக இருக்கும். பெண்களுக்கு ராசியை குரு பார்ப்பதால் மனதில் தைரியமும் மகிழ்ச்சியும் உண்டாகும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு ராசியை சுக்கிரன் பார்ப்பதால் தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். அரசியல் துறையினர் தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய முன்வருவீர்கள். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம். மாணவர்களுக்கு ராசியில் புதன் கேதுவுடன் இணைந்திருப்பதால் பாடங்களை படிப்பது பற்றிய கவலை அதிகரிக்கும். ஆனாலும் கிரகங்களின் பார்வையால் உற்சாகமான மனநிலை காணப்படும். விளையாட்டு போட்டிகளில் பரிசுகள் கிடைக்கும்.

பரிகாரம்:

வியாழக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு துளசிமாலை அணிவித்து அர்ச்சனை செய்து வணங்க குடும்ப கஷ்டங்கள் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

திங்கள், வியாழன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! - Page 2 Empty Re: மார்ச் 1 முதல் 15 வரை ஜோதிடப் பலன்கள் !

Post by krishnaamma Wed Mar 01, 2017 11:55 pm

மீனம்

மார்ச் 1 முதல் 15 வரை
எப்போதும் அடுத்தவரின் குறைகளைப் போக்க நினைக்கும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் ராசிநாதன் குரு அஷ்டம ஸ்தானத்திலும், ராசியில் சுக்கிரனும் சஞ்சரிப்பதால் நன்மைகள் கிடைக்கும். தன ரீதியில் எல்லா வகையிலும் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் தொடர்ந்து அதனை செய்து முடிக்க மேற்கொள்ளும் முயற்சிகள் சாதகமான பலனை தரும். தொழில், வியாபாரம் சுமாராக இருந்தாலும் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசி அவர்களைத் தக்க வைத்துக் கொள்வது நல்லது. உங்கள் நிறுவன பங்குகள் உயரும்.

உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு கௌரவம் அளிப்பார்கள். மேலிடத்திலிருந்து அனுகூலமான பலன்கள் கிட்டும். குடும்ப ஸ்தானத்தில் அதன் அதிபதியான செவ்வாய் சஞ்சரிக்கிறார். குடும்ப வேலைகளைக் கூடுதல் நேரம் ஒதுக்கி செய்துமுடிக்க நேரிடும். கணவன்மனைவிக்கிடையே இருந்துவந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளுடன் வெளியே சென்று மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். வழக்குகளில் சமாதானமாகப் போவது நல்லது. நிலம், வீடு சம்பந்தமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பெண்களுக்கு நிதானமாகப் பேசி செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். பணவரத்து திருப்தி தரும்.

கலைத்துறையினருக்கு, சுக்கிரன் ராசியில் இருப்பதால் வெளிநாட்டு பயணங்கள் செல்லும் சூழ்நிலை உருவாகலாம். எதிர்பார்த்ததைவிட கூடுதல் செலவு ஏற்படலாம். தொய்வு நீங்கி தொழில் முன்னேற்றமடையும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தாமதமானாலும் வந்து சேரும். உங்கள் செயல்திறமை வெளிப்படும்.
அரசியல் துறையினரின் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். உங்களது ஆலோசனைப்படி உடனிருப்பவர்கள் செயல்படுவது மனதுக்கு இதமளிக்கும். திடீர் செலவு ஏற்படலாம். உங்களது திறமை வெளிப்படும். பாராட்டும் கிடைக்கும். மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும்.

பரிகாரம்:

அம்மனைப் பாடல்கள் பாடி வழிபட துன்பங்கள் விலகும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

புதன், வியாழன், வெள்ளி.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! - Page 2 Empty Re: மார்ச் 1 முதல் 15 வரை ஜோதிடப் பலன்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum