ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 1,135 காட்டு யானைகள் உயிரிழப்பு!

Go down

தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 1,135 காட்டு யானைகள் உயிரிழப்பு! Empty தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 1,135 காட்டு யானைகள் உயிரிழப்பு!

Post by ayyasamy ram Wed Mar 01, 2017 6:25 am

தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 1,135 காட்டு யானைகள் உயிரிழப்பு! 7Wc8hvDQyYYmLepC2fcg+elephant
-
தமிழகத்தில் 2001 முதல் 2016-ஆம் ஆண்டு வரை 1,135 காட்டு
யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்திருப்பது
தெரியவந்துள்ளது.

இவற்றில் வேட்டையாடப்பட்டதன் மூலம் 28 யானைகளும்,
மின்வேலி மின்சாரம் பாய்ந்ததன் காரணமாக 65 யானைகளும்
பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

இந்தத் தகவல்கள், வனத் துறையிடம் தகவல் பெறும் உரிமைச்
சட்டத்தின் மூலம் தகவல் கேட்கப்பட்டதில் தெரியவந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக 2013-ஆம் ஆண்டில் மட்டும் 126 யானைகள்
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில்
உயிரிழந்துள்ளன. கோவையில் மட்டும் ரயில் மோதியும், கிருமித்
தொற்று காரணமாகவும் கடந்தாண்டு 22 யானைகள்
உயிரிழந்துள்ளன.

இதுமட்டுமல்லாமல் தமிழகக் காடுகளில் 2003 முதல் 2016-ஆம்
ஆண்டு வரை உயிரிழந்துள்ள புலி மற்றும் சிறுத்தைகளின்
புள்ளிவிவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதில் தமிழகக் காடுகளில் 2003 முதல் 2016-ஆம் ஆண்டு வரை
53 புலிகள் உயிரிழந்துள்ளன. இதில் விஷம் வைக்கப்பட்டு
9 புலிகள் கொல்லப்பட்டுள்ளன. மேலும் மின்வேலி மின்சாரத்தால்
ஒரு புலியும், ஆட்கொல்லி என சுடப்பட்டு 3 புலிகளும்
உயிரிழந்துள்ளன.

தமிழகக் காடுகளைப் பொருத்தவரை 2014-ஆம் ஆண்டு
கணக்கெடுப்பின்படி 229 புலிகள் உள்ளன.

தமிழகக் காட்டின் பரப்பளவு சுருங்குவதால் பல மலைக்
கிராமங்கள் சிறுத்தையின் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன.
இதில் 2001 முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலும் 207 சிறுத்தைகள்
பலியாகியுள்ளன. இதில் 201 சிறுத்தைகள் இயற்கையான
முறையில் உயிரிழந்துள்ளன.

யானைகள் உயிரிழப்பு:

-
தமிழகத்தில் கணக்கெடுப்பின்படி 4,200 யானைகள் இருக்கலாம்
எனத் தெரிவிக்கப்படுகிறது. வனப் பகுதிகளில் தந்தத்துக்காக
யானைகள் கொல்லப்படுவதைவிட, மின்சாரம் தாக்கி அதிக
அளவில் யானைகள் உயிரிழக்கின்றன.

முக்கியமாக, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, கோவை,
நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய இடங்களில் தனியார்
ஆக்கிரமித்துள்ள எஸ்டேட்டுகளில் போடப்பட்டுள்ள மின்வேலிகள்
காரணமாக யானைகள் அதிகமாக உயிரிழந்துள்ளன. 2010 முதல்
2015-ஆம் ஆண்டு வரையில் 22 யானைகள் மின்வேலியில் மின்சாரம்
தாக்கியே உயிரிழந்துள்ளன.

யானைகள் மின்சாரம் பாய்ந்து இறப்பதற்குக் காரணம் என்ன?


விளைநிலங்களில் வன விலங்குகள் சேதப்படுத்துவதைத் தடுக்க
9 முதல் 12 வாட்ஸ் மின்சாரம் மட்டுமே மின்வேலிகளில் செலுத்தப்
படலாம்.

இந்த மின்வேலியை தொடும் யானைகள், மான்கள், காட்டுப்
பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு அதிர்வை ஏற்படுத்தும்.
ஆனால் பாதிப்பு ஏற்படாது. இதனால் அவை பயத்தால் மீண்டும்
வேலி அருகே வராது.

தற்செயலாக கிராம மக்கள் மின்வேலியைத் தொட்டு விட்டாலும்,
பாதிப்பில்லாமல் பாதுகாப்பாக இருக்கலாம்.

இருப்பினும், சில தனியார் எஸ்டேட் முதலாளிகள் நிர்ணயித்த
அளவைவிட யானைகளிடமிருந்து தங்களது தோட்டத்தைப்
பாதுகாப்பதற்காக மின்வேலிகளில் கூடுதல் வாட்ஸில்
மின்சாரத்தைச் செலுத்துகின்றனர். இதனால் வன விலங்குகள்
மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கின்றன என வனத் துறை அதிகாரிகள்
தெரிவிக்கின்றனர்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 1,135 காட்டு யானைகள் உயிரிழப்பு! Empty Re: தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 1,135 காட்டு யானைகள் உயிரிழப்பு!

Post by ayyasamy ram Wed Mar 01, 2017 6:25 am


கொல்லப்படும் புலிகள்:

2014-ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான்
அதிகப்படியான புலிகள் இறந்துள்ளன. தமிழகத்தில் மட்டும்
15 புலிகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளன.
இதில் 9 புலிகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளன.

அதே நேரத்தில், 2015- ஆம் ஆண்டில் தமிழகத்தில் 6 புலிகள் மட்டுமே
உயிரிழந்துள்ளன. புலிகள் உயிரிழப்புக்கான காரணம் குறித்து
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. புலிகளின் உயிரிழப்பு
தொடர்ந்தாலும், முதுமலை, சத்தியமங்கலம் காடுகளில் அவற்றின்
எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக வன்ததுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 1,135 காட்டு யானைகள் உயிரிழப்பு! B1DUv65DTJGfzVsVxvrg+tiger
-----------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 1,135 காட்டு யானைகள் உயிரிழப்பு! Empty Re: தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 1,135 காட்டு யானைகள் உயிரிழப்பு!

Post by ayyasamy ram Wed Mar 01, 2017 6:28 am

10 ஆண்டுகளில் 400 பேர் பலி!-
-
தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 1,135 காட்டு யானைகள் உயிரிழப்பு! QyGUCEwsT96woxSC0h2v+ele
-
தமிழகத்தில் மனிதன் - வன விலங்குகள் மோதல் காரணமாக
2006-2015-ஆம் ஆண்டு வரை 400-க்கும் மேற்பட்டோர்
பலியாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் கோவை மாவட்டத்தில் மட்டும் யானை தாக்கி 200 பேர்
உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கிருஷ்ணகிரி
மாவட்டம் ஓசூரில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

வன விலங்கு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு
தமிழக அரசு இதுவரை ரூ.19 கோடியை நிவாரணத் தொகையாக
வழங்கியுள்ளது.

முதுமலையில் வறட்சி இல்லை!
--
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மாயாறு நதி
வற்றாததால், வறட்சி பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்று
தலைமை வனப் பாதுகாவல் (நீலகிரி) மற்றும் திட்ட இயக்குநர்
(மலைப் பகுதிகள்) ஸ்ரீனிவாஸ் ரெட்டி கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் நிலவும் பரவலான
வறட்சி முதுமலையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
முதுமையில் பாயும் மாயாறு நதி வற்றவில்லை. இதனால் வன
விலங்குகளுக்கு நீர் தட்டுப்பாடு ஏதுமில்லை.

ஆனால், காப்பகத்தில் இருக்கும் நீர் குட்டைகள் வறண்டுவிட்டன.
இந்தக் குட்டைகள், லாரிகள் மூலம் நீர் கொண்டு வரப்பட்டு
நிரப்பப்படுகின்றன. யானைகளுக்கு இப்போதிருக்கும் நீர்
தேவையான அளவைவிட சற்று குறைவாக இருக்கிறது.

மேலும், யானை ஓரிடத்தில் மட்டும் இருக்கக் கூடிய விலங்கு இல்லை
என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். யானைகள்
முதுமலையில் தனது குட்டிகளுடன் வலம் வந்துகொண்டுதான்
இருக்கின்றன. மேலும், கோடைக் காலங்களில் உணவும், நீரும் தேடி
முதுமலை காப்பகத்தை விட்டு வெளியே செல்லும் யானைகள்
ஆகஸ்ட் மாதத்துக்கு பின்பு காப்பகத்துக்கு திரும்பும்.
இது வழக்கமான நிகழ்வுதான் என்றார் ஸ்ரீனிவாஸ் ரெட்டி.

--------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 1,135 காட்டு யானைகள் உயிரிழப்பு! Empty Re: தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 1,135 காட்டு யானைகள் உயிரிழப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum