புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:21 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 9:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 2:08 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் I_vote_lcapகேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் I_voting_barகேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram
கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் I_vote_lcapகேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் I_voting_barகேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் I_vote_rcap 
48 Posts - 42%
mohamed nizamudeen
கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் I_vote_lcapகேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் I_voting_barகேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் I_vote_rcap 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் I_vote_lcapகேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் I_voting_barகேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் I_vote_lcapகேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் I_voting_barகேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் I_vote_lcapகேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் I_voting_barகேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram
கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் I_vote_lcapகேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் I_voting_barகேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் I_vote_rcap 
48 Posts - 42%
mohamed nizamudeen
கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் I_vote_lcapகேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் I_voting_barகேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் I_vote_rcap 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் I_vote_lcapகேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் I_voting_barகேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் I_vote_lcapகேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் I_voting_barகேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Mon Feb 27, 2017 1:53 am

கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள். இரவு நேர இனிமைக்கு.........
அம்புக்கு குறி மூலம் அடுத்த பாடலுக்கு செல்லவும்.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 27, 2017 8:56 am

சரணடைந்தேன் ------பகிர்விற்கு.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்  நன்றி மூர்த்தி .

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 27, 2017 12:12 pm

கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் 103459460 கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் 3838410834
-

காணொளியில் இடம்பெற்றுள்ள பாரதியாரின்
பாடல் வரிகளையும் இதே திரியில் பதிந்தால்
பாடலை ரசிப்பவர்களுக்கு கூடுதல் நன்மையாக
இருக்கும்



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 27, 2017 5:11 pm

நன்றாக இருக்கிறது ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Tue Feb 28, 2017 1:08 am



பாடல்களை ஒரே இடத்தில் தந்த லக்ஷ்மன் சுருதி இசைக் குழுவினருக்கு நன்றி.


1.கண்ணம்மா-என் காதலி

மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே

வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;

மூலைக் கடலினையவ் வான வளையம்

முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்;

நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,

நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே

சாலப் பலபலநற் பகற் கனவில்

தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்.



ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே,

ஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே,

பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன்,

பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்;

ஓங்கி வருமுவகை யூற்றி லறிந்தேன்;

ஒட்டு மிரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்;

‘வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா!

மாய மெவரிடத்தில்?’என்று மொழிந்தேன்.



சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே.

திருமித் தழுவி“என்ன செய்தி சொல்”என்றேன்;

“நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்?

நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?

திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?

சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?

பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே.

பெற்ற நலங்கள் என்ன?பேசுதி”என்றாள்.



“நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;

நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;

திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;

சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;

பிரித்துப் பிரிந்துநிதம் மேகம் அளந்தே,

பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;

 சிரித்த ஒலியினில்ன் கைவி லக்கியே,




2.முழுப் பாடலும்.

சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா !

செல்வ களஞ்சியமே !

என்னைக் கலி தீர்த்தே - உலகில்

ஏற்றம் புரிய வந்தாய் !



பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா !

பேசும்பொற் சித்திரமே !

அள்ளி யணைத்திடவே - என் முன்னே

ஆடி வருந் தேனே !



ஓடி வருகையிலே - கண்ணம்மா !

உள்ளங் குளிரு தடீ !

அடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்

ஆவி தழுவு தடீ !



உச்சி தனை முகந்தால் - கருவம்

ஓங்கி வளரு தடீ !

மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்

மேனி சிலர்க்குதடீ !



கண்ணத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்

கள்வெறி கொள்ளு தடீ !

உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா !

உன்மத்த மகுதடீ !



சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது

சஞ்சல மாகு தடீ !

நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு

நெஞ்சம் பதைக்கு தடீ !



உன்கண்ணில் நீர்வழிந்தால் - எந்நெஞ்சில்

உதிரம் கொட்டு தடீ !

எங்கண்ணிற் பாவையன்றோ ? - கண்ணம்மா !

என்னுயிர் நின்ன தன்றோ ?



சொல்லும் மழலையிலே - கண்ணம்மா

துன்பங்கள் திர்த்திடு வாய்

முல்லைச் சிரிப்பாலே - எனது

மூர்க்கந் தவிர்த்திடு வாய் ,



இன்ப கதைகளெல்லாம் - உன்னைப்போல்

ஏடுகள் சொல்வ துண்டோ ?

அன்பு தருவதிலே - உனைநேர்

ஆகுமோர் தெய்வ முண்டோ ?



மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல்

வைர மணிக ளுண்டோ ?

சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல்

செல்வம் பிறிது முண்டோ ?




3.கண்ணம்மா-எனது குல தெய்வம்

நின்னைச் சரணடைந்தேன்-கண்ணம்மா!

நின்னைச் சரணடைந்தேன்!



பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்

என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று



மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்

குடிமை புகுந்தன,கொன்றவை போக்கென்று



தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு

நின்செயல் செய்து நிறைவு பெறும்வணம்



துன்ப மினியில்லை.சோர்வில்லை,தோற்பில்லை,

அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட



நல்லதுதீயது நாமறியோம் அன்னை

நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!




4.முழுப் பாடலும்.

பொழுது புலர்ந்தது, யாம்செய்த தவத்தால்,

புன்மை யிருட்கணம் போயின யாவும்,

எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி

எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி,

தொழுதுனை வாழ்த்தி வனங்குதற்கு இங்குஉன்

தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம்

விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே

வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே!



புள்ளினம் ஆர்த்தன! ஆர்த்தன முரசம்,

பொங்கியது எங்குஞ் சுதந்திர நாதம்

வெள்ளிய சங்கம் முழங்கின, கேளாய்!

வீதியெ லாம்அணு குற்றனர் மாதர்!

தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன்

சீர்த்திரு நாமமும் ஓதி நிற் கின்றார்,

அள்ளிய தெள்ளமு தன்னை எம் அன்னை!

ஆருயிரே! பள்ளி யெழுந்தரு ளாயே!



பருதியின் பேரொளி வானிடைக் கண்டோம்,

பார்மிசை நின்னொளி காணுதற்கு அளந்தோம்,

கருதிநின் சேவடி அணிவதற்கு என்றே

கனிவுறு நெஞ்சக மலர்கொடு வந்தோம்

சுருதிகள் பயந்தனை! சாத்திரம் கோடி

சொல்லரு மாண்பின ஈன்றனை, அம்மே!

நிருதர்கள் நடுக்குறச் சூல்கரத்து ஏற்றாய்!

நிர்மலையே! பள்ளி யெழுந்தரு ளாயே!



நின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள்

நெஞ்சகத்து ஆவலை நீயறி யாயோ?

பொன்னனை யாய்! வெண் பனிமுடி யிமயப்

பொருப்பினன் ஈந்த பெருந்தவப் பொருளே!

என்ன தவங்கள் செய்து எத்தனை காலம்

ஏங்குவம் நின்னருட்கு ஏழையம் யாமே?

இன்னமும் துயிலுதி யேல்இது நன்றோ?

இன்னுயிரே? பள்ளி யெழுந்தரு ளாயே!



மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ?

மாநிலம் பெற்றவள் இஃதுண ராயோ?

குதலை மொழிக்கிரங் காதொரு தாயோ?

கோமகளே! பெரும் பாரதர்க் கரசே!

விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி

வேண்டிய வாறுஉனைப் பாடுதும் காணாய்

இதமுற வந்துஎமை ஆண்டருள் செய்வாய்!

ஈன்றவளே! பள்ளி யெழுந்தரு ளாயே!




5.

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

குறை ஒன்றும் இல்லை கண்ணா

குறை ஒன்றும் இல்லை கோவிந்தா



குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

குறை ஒன்றும் இல்லை கண்ணா

குறை ஒன்றும் இல்லை கோவிந்தா



கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா

கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா



வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க

வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா



திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா

கண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை

மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்

என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா



குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா

குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா



கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி

நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி

நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா



யாதும் மறுக்காத மலையப்பா

யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்

ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை

என்றும் இருந்திட ஏது குறை எனக்கு

என்றும் இருந்திட ஏது குறை எனக்கு



ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா

ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா




6.

பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும்விழி நானுனக்கு;

தோயும்மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு;

வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;

தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!



வீணையடி நீ எனக்கு, மேவும்விரல் நானுனக்கு;

பூணும்வட நீயெனக்கு, புதுவயிரம் நானுனக்கு;

காணுமிடந் தோறுநின்றன் கண்ணினொளி வீசுதடி!

மாணுடைய பேரரசே! வாழ்வுநிலையே! கண்ணம்மா!



வானமழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;

பானமடி நீ எனக்கு, பாண்டமடி நானுனக்கு;

ஞானவொளி வீசுதடி, நங்கைநின்றன் சோதிமுகம்;

ஊனமறு நல்லழகே! ஊறுசுவையே! கண்ணம்மா!



வெண்ணிலவு நீ யெனக்கு, மேவுகடல் நானுனக்கு;

பண்ணுசுதி நீ யெனக்கு, பாட்டினிமை நானுனக்கு;

எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே:

கண்ணின்மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா!



வீசுகமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;

பேசுபொருள் நீ யெனக்கு, பேணுமொழி நானுனக்கு;

நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?

ஆசைமதுவே, கனியே, அள்ளுசுவையே! கண்ணம்மா!



காதலடி நீ யெனக்கு, காந்தமடி நானுனக்கு;

வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;

போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!

நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!



நல்லவுயிர் நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;

செல்வமடி நீ யெனக்கு, சேமநிதி நானுனக்கு;

எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!

முல்லைநிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா!



தாரையடி நீ யெனக்கு, தண்மதியம் நானுனக்கு;

வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;

தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்

ஓருருவ மாய்ச்சமைந்தாய்! உள்ளமுதமே! கண்ணம்மா!




7.முழுப் பாடலும்.


வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,

வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;

கொள்ளை யின்பம் குலவு கவிதை

கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்;

உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே

ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;

கள்ள முற்ற முனிவர்கள் கூறும்

கருணை வாசக்த் துட்பொரு ளாவாள்.



மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,

மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;

கீதம் பாடும் குயிலின் குரலைக்

கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்;

கோத கன்ற தொழிலுடைத் தாகிக்

குலவு சித்திரம் கோபுரம் கோயில்

ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்

இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்.



வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு

வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்;

வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர்

வித்தை யோர்ந்திடு சிற்பியர்,தச்சர்,

மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்,

வீர மன்னர்பின் வேதியர் யாரும்

தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்

தரணி மீதறி வாகிய தெய்வம்.



தெய்வம் யாவும் உணர்ந்திடுந் தெய்வம்,

தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்;

உய்வ மென்ற கருத்துடை யோர்கள்

உயிரி னுக்குயி ராகிய தெய்வம்;

செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்

செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்

கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்

கவிஞர் தெய்வம்,கடவுளர் தெய்வம்



செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்!

சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!

வந்த னம்இவட் கேசெய்வ தென்றால்

வாழி யஃதிங் கெளிதன்று கண்டீர்!

மந்தி ரத்தை முணுமுணுத் தேட்டை

வரிசை யாக அடுக்கி அதன்மேல்

சந்த னத்தை மலரை இடுவோர்

சாத்திரம் இவள் பூசனை யன்றாம்.



வீடு தோறும் கலையின் விளக்கம்,

வீதி தோறும் இரண்டொரு பள்ளி;

நாடு முற்றிலும் உள்ளவ வூர்கள்

நகர்க ளெங்கும் பலபல பள்ளி;

தேடு கல்வியி லாததொ ரூரைத்

தீயி னுக்கிரை யாக மடுத்தல்

கேடு தீர்க்கும் அமுதமென் அனனை

கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்,



ஊணர் தேசம் யவனர்தந் தேசம்

உதய ஞாயிற் றொளிபெறு நாடு;

சேண கன் றதோர் சிற்றடிச் சீனம்

செல்வப் பார சிகப்பழந் தேசம்

தோண லத்த துருக்கம் மிசிரம்

சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்

காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்

கல்வித் தேவின் ஒளிமிகுந்தோங்க.



ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்

நல்ல பாரத நாட்டை வந்தீர்!

ஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்!

ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்!

மான மற்று விலங்குக ளொப்ப

மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?

போன தற்கு வருந்துதல் வேண்டா

புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்!



இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்

அனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்;

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்

ஆல யம்பதி னாயிரம் நாட்டல்.

பின்ன ருள்ள தருமங்கள் யாவும்

பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,

அன்ன யாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்



நிதிமி குத்தவர் பொற்குவை தாரீர்!

நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்!

அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!

ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்!

மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்

வாணி பூசைக் குரியன பேசீர்!

எதுவும் நல்கியிங் வ்வகை யானும்

இப்பெருந் தொழில நாட்டுவம் வாரீர்!




8.பையின் தாலாட்டு (Pi's Lullaby )


கண்ணே, கண்மணியே

கண்ணுறங்காய், பொன்னே

மயிலோ, தோகை மயிலோ

குயிலோ, கூவும் குயிலோ

நிலவோ, நிலவின் ஒளியோ

இமையோ, இமையின் கனவோ

ராராரோ, .. ராராரோ

ராராரோ, .. ராராரோ

மலரோ, மலரின் அமுதோ

கனியோ, செங்கனியின் சுவையோ

ராராரோ, .. ராராரோ




M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 28, 2017 10:13 am

ayyasamy ram wrote:கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் 103459460 கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் 3838410834
-

காணொளியில் இடம்பெற்றுள்ள பாரதியாரின்
பாடல் வரிகளையும் இதே திரியில் பதிந்தால்
பாடலை ரசிப்பவர்களுக்கு கூடுதல் நன்மையாக
இருக்கும்

மேற்கோள் செய்த பதிவு: 1234874

உண்மைதான் பாரதியாரின் பாடல் வரிகள் சாகா வரம்பெற்றவை .

" தருமத்தின் வாழ்வுதனை சூது  கவ்வும்

மீண்டும்  தருமமே வெல்லும் "

இந்த வரிகளைச் சொல்லாத அரசியல்வாதி உண்டா ?

இதில் வேடிக்கை என்னவென்றால் நீதிமன்றத்தால் குற்றவாளி என்று முத்திரை குத்தப்பட்ட அயோக்கியர்களும் இந்த வரிகளை அடிக்கடி சொல்வதுதான் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 02, 2017 12:45 am

M.Jagadeesan wrote:
ayyasamy ram wrote:கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் 103459460 கேட்கக் கேட்க இனிக்கும் பாரதியார் பாடல்கள் 3838410834
-

காணொளியில் இடம்பெற்றுள்ள பாரதியாரின்
பாடல் வரிகளையும் இதே திரியில் பதிந்தால்
பாடலை ரசிப்பவர்களுக்கு கூடுதல் நன்மையாக
இருக்கும்

மேற்கோள் செய்த பதிவு: 1234874

உண்மைதான் பாரதியாரின் பாடல் வரிகள் சாகா வரம்பெற்றவை .

" தருமத்தின் வாழ்வுதனை சூது  கவ்வும்

மீண்டும்  தருமமே வெல்லும் "

இந்த வரிகளைச் சொல்லாத அரசியல்வாதி உண்டா ?

இதில் வேடிக்கை என்னவென்றால் நீதிமன்றத்தால் குற்றவாளி என்று முத்திரை குத்தப்பட்ட அயோக்கியர்களும் இந்த வரிகளை அடிக்கடி சொல்வதுதான் !
மேற்கோள் செய்த பதிவு: 1235003

ஆமாம் ஐயா, அதுதான் கொடுமை யிலும் கொடுமை ! கோபம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Sat Mar 04, 2017 12:48 am

மேலும் இரண்டு பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இசையில் ஆர்வம் உள்ளவர்கள் கேட்கலாம். அதற்கான பாடல் வரிகள் இவை.

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ...பாரதி தாசன்.


துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ

இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்

கின்பம் சேர்க்க மாட்டாயா? - நல்

அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ

அல்லல் நீக்க மாட்டாயா? - கண்ணே

அல்லல் நீக்க மாட்டாயா?



வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே

வாழ்வின் உணர்வு சேர்க்க - எம்

வாழ்வின் உணர்வு சேர்க்க - நீ

அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்

ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே

ஆடிக் காட்ட மாட்டாயா?



அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே

அறிகிலாத போது - யாம்

அறிகிலாத போது - தமிழ்

இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்

இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ

இயம்பிக் காட்ட மாட்டாயா?



புறம் இதென்றும் நல் அகம் இதென்றுமே

புலவர் கண்ட நூலின் - தமிழ்ப்

புலவர் கண்ட நூலின் - நல்
திறமை காட்டி உனை ஈன்ற எம்உயிர்ச்

செல்வம் ஆகமாட்டாயா? தமிழ்ச்

செல்வம் ஆக மாட்டாயா?



என்ன தவம் செய்தனை-பாபநாசம் சிவன்


என்ன தவம் செய்தனை!
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா

எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை

ஈரேழு புவனங்கள் படைத்தவனை
ஈரேழு புவனங்கள் படைத்தவனை

ஈரேழு புவனங்கள் படைத்தவனை கையில்
ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட
ஈரேழு புவனங்கள் படைத்தவனை கையில்
ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட
ஈரேழு புவனங்கள் படைத்தவனை கையில்
ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட நீ

என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம்  அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை!

பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள
பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள
பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள
பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள

உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்ச வைத்தாள் கண்ணனை
உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்ச வைத்தாள் கண்ணனை
உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்ச வைத்தாள் தாயே

என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை!

சனகாதியர் தவயோகம் செய்தே வருந்தி
சாதித்ததைப் புனிதமாக எளிதில் பெற
என்ன தவம் செய்தனை!
சனகாதியர் தவயோகம் செய்தே வருந்தி
சாதித்ததைப் புனிதமாக எளிதில் பெற

என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை!




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 04, 2017 9:59 am


துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ....

-
இந்த பாடல் ஓர் இரவு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
ஆனால் இயற்றியவர் பாரதிதாசன் என தேன்கிண்ணம்
வலைத்தளம் குறிப்பிட்டுள்ளது
-
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?
எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா?

அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா? கண்ணே
அல்லல் நீக்க மாட்டாயா?

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க - எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க - நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே
ஆடிக் காட்ட மாட்டாயா?


அறமிதென்றும் மறமிதென்றுமே அறிகிலாதபோது
யாம் அறிகிலாதபோது
தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
இயம்பிக் காட்ட மாட்டாயா - நீ
இயம்பிக் காட்ட மாட்டாயா

நீ அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே
ஆடிக் காட்ட மாட்டாயா?
-
படம் : ஓர் இரவு (1951)
பாடியவர் : எம்.எஸ்.ராஜேஸ்வரி, வி.ஜே. வர்மா
பாடலாசிரியர் : பாரதிதாசன்
இசை :சுதர்சனம்[/color]

avatar
Guest
Guest

PostGuest Sat Mar 04, 2017 2:17 pm

நன்றி ஐயா. மேலே உள்ள வரிகளில் நானும் அப்படித்தான்-பாரதிதாசன் -என போட்டிருக்கிறேன்.
காணொளித் தொகுப்பில் பாரதியார் என முன்பே போடப்பட்டதால் மாற்றவில்லை.. மாற்றி விடுகிறேன்.

ஒரே இடத்தில் இனிய பாடல்களை சேர்க்க/கேட்க விரும்பினால் தெரிவிக்கலாம்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக