புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_c10‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_m10‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_c10 
21 Posts - 70%
heezulia
‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_c10‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_m10‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_c10‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_m10‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_c10 
1 Post - 3%
viyasan
‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_c10‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_m10‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_c10‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_m10‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_c10‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_m10‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_c10 
213 Posts - 42%
heezulia
‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_c10‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_m10‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_c10‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_m10‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_c10‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_m10‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_c10 
21 Posts - 4%
prajai
‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_c10‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_m10‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_c10‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_m10‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_c10‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_m10‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_c10 
8 Posts - 2%
Guna.D
‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_c10‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_m10‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_c10‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_m10‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_c10 
7 Posts - 1%
mruthun
‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_c10‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_m10‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 25, 2017 10:41 am

பாத்திமா பாபு - அ.தி.மு.க-வின் நீண்டநாள் உறுப்பினர், நட்சத்திரப் பேச்சாளர், ஜெயா டிவியின் செய்திவாசிப்பாளர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சினிமா சார்ந்து மிக நெருக்கமானவராக அறியப்பட்டவர். அவர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று , ஓ.பன்னீர்செல்வத்தின் அணியில் கை கோத்திருக்கிறார்.

ஓ.பி.எஸ் அணியில் இன்று இணைந்த 1000 மதிமுக தொண்டர்களுடன், பாத்திமாபாபுவும் அணி சேர்ந்துள்ளார். கிட்டதட்ட 10 ஆண்டு காலம் ஜெயா டிவியின் ஆஸ்தான செய்திவாசிப்பாளராகப் பணியாற்றியவர் பாத்திமா பாபு. இந்த திடீர் முடிவுக்கான காரணத்தை அவரிடமே கேட்டோம்.

பாத்திமா பாபு ஜெயா டிவி

‘‘எதனால் இந்த திடீர் முடிவு?”

‘‘அம்மாவால் வளர்க்கப்பட்ட அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கணும்ங்கறதுதான் என்னோட ஆசை. உண்மையான அ.தி.மு.க, பொருளாளராக இருந்த பன்னீர் செல்வம், அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் இவர்கள் கையில்தான் தற்போது இருக்கிறது.

மக்கள் முதல்வராக இப்போதும் பன்னீர் செல்வம்தான் திகழ்ந்து கொண்டிருக்கிறார். அம்மா அவர்கள் காபந்து முதலமைச்சராக எப்போதும் பன்னீர்செல்வத்தைத்தான் கைகாட்டியுள்ளார். அம்மா மறைந்த பிறகு, அவர் முதல்வராக நியமிக்க விரும்பிய பன்னீர் செல்வம் அந்த இடத்துக்கு வந்தது இயல்பான ஒன்று. அதே நேரம், எதிர்த்தரப்பினரைப் பொறுத்தவரையில் அம்மா யாரையெல்லாம் வேண்டாம் என்று ஒதுக்கினாரோ அவர்கள்தான் பதவிக்கு வரத் துடிக்கின்றனர்.

2007-ம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினராக இருந்த டி.டி.வி தினகரனை எந்த அவை நடவடிக்கைகளிலும் பங்கு கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தார் அம்மா. 2011-ம் ஆண்டு வரையில் அம்மா அவரை எந்த அரசியல் நடவடிக்கையிலும் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆனால், மன்னிப்புக் கடிதம் கொடுத்த அரைமணி நேரத்தில் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்படுகின்றார் என்றால், அது எந்தவிதத்தில் நியாயம்?

அம்மாவின் மறைவுக்குப் பிறகு, அவர் ஒதுக்கி வைத்த குடும்பத்தைச் சேர்த்துக் கொள்வதில் தவறில்லை. அது அவர்களது தனிப்பட்ட விஷயம். ஆனால், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எத்தனையோ தொண்டர்கள் வளர்த்த கட்சியைப் பங்குபோட்டுக் கொடுப்பது என்பதை எந்த அ.தி.மு.க தொண்டராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. நானும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.”

“ஜெயலலிதா இருந்த காலகட்டத்திலும், இப்போதும் அந்த குடும்பத்தின் ஆதிக்கம் எப்படி இருக்கிறது?”

“பல்வேறு விஷயங்கள் இருந்தாலும், அதற்கு உதாரணமாக ஒன்றைச் சொல்லலாம். அம்மா உயிருடன் இருந்தவரைக்கும் அவரை அடைமொழியிட்டு ‘புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா’ என்றெல்லாம் செய்தியில் சொல்லியதே இல்லை. அது தலைப்புச் செய்தியோ, விரிவான செய்தியோ அவரை செல்வி.ஜெ.ஜெயலலிதா என்றே சொல்லியிருக்கிறோம். குறிப்பிட்டிருக்கிறோம்.

அதனாலேயே கட்சி மீட்டிங்கில் பேசும்போது அவரை அம்மா என்றோ, புரட்சித்தலைவி என்றோ குறிப்பிடவே, நிதானித்துத்தான் பேசுவேன். காரணம், செய்தியில் நான் அவரைப் பெயர் சொல்லி வாசித்துப் பழகி இருந்தது. பொதுவெளியில் அவருடைய பெயரைச் சொல்லிப் பேசிவிடக்கூடாது என்று மெனக்கெடுவேன். அந்தளவுக்கு செய்திகளில் அவரது பெயர்தான் குறிப்பிடப்படும். இது அவர்களுடைய உத்தரவு.

ஆனால், சசிகலா கட்சிக்கு வந்தவுடன், பொதுச்செயலாளராக பதவியேற்றவுடன் அவரை எப்படிக் குறிப்பிட வேண்டும்? ஜெயலலிதாவை எப்படிப் பெயர் சொல்லி செய்திகளில் குறிப்பிட்டோமோ அதேபோன்று திருமதி.வி.கே.சசிகலா என்றுதானே வாசிக்கப்பட வேண்டும்?

ஆனால், அவர் பதவியேற்ற உடனேயே அவரை மட்டும் சின்னம்மா என்று அழைக்கச் சொல்லியது நெருடலை ஏற்படுத்தியது. அப்படி என்றால் ஜெயா டிவி அம்மாவுடையது இல்லையா? இவ்வளவு நாளாக யார் கையில் ஜெயா டிவி இருந்தது என்றெல்லாம் ஆதங்கம் எழுந்தது. அதனாலேயே மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவளிப்பதே எனக்குச் சரியாகத் தோன்றியது.”

”அ.தி.மு.க தலைமையின் பெரும்பான்மையைத் தாண்டி ஓ.பி.எஸ்ஸால் ஜெயிக்க முடியுமா?”

“மக்களுக்காக இறங்கி வந்து பணியாற்றும் பண்பும், மக்களோடு மக்களாகப் பழகும் தன்மையும், பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் குணமும் பன்னீர் செல்வத்திடம்தான் இருக்கிறது. தற்போதைய கட்சித் தலைமை வேண்டுமானால் மக்கள் பிரதிநிதிகள் 122 பேரைக் கொண்ட கட்சியாக இப்போதைக்கு இருக்கலாம்.

ஆனால், ஒன்றரைக் கோடி கட்சித் தொண்டர்களும், ஏழு கோடிக்கும் மேலான தமிழக மக்களும் அம்மா வழி நடக்கும் பன்னீர் செல்வத்தின் பக்கம்தான் இருக்கிறார்கள். அதனால் மக்கள் செல்வாக்கும், உண்மையான அ.தி.மு.க கட்சியும் ஓ.பி.எஸ் வசம்தான் இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.”

“ஜெயா டிவி உங்களுக்கு ஒரு தாய்வீடு மாதிரி இருந்தது. இனி அது இல்லை. அந்த உணர்வு எப்படி இருக்கிறது?”

“உண்மைதான். ஆனால், எல்லா சமயத்திலும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் எனக்கு மாதம்தோறும் வந்துகொண்டிருந்த கணிசமான சம்பளம் இனிமேல் வராது. அதற்காகப் பணத்தை மட்டுமே நோக்கமாக வைத்து நம்முடைய உணர்வுகளை எடைபோட முடியாதே.

அவங்களா, இவங்களா என்று ஒத்தையா, இரட்டையா பார்க்கும் கும்பலில் நம்மால் இருக்க முடியாது. அப்படித்தான் அமைச்சராக இருந்த மா.பா.பாண்டியராஜன் பதவியைத் துச்சமாக நினைத்து வெளியில் வந்து ஓ.பி.எஸ்-க்குத் தோள் கொடுத்தார்.

ஜெயா டி.வி.யில் செய்தி வாசித்துக் கொண்டிருக்கிறோம் என்பதற்காக மக்கள் முடிவு செய்த முதல்வரான பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு கொடுக்காமல் இருந்தது எனக்கு உறுத்தலாக இருந்தது. அதனால் எடுக்கப்பட்டதுதான் இந்த முடிவு. இதற்காக நான் கலங்கவுமில்லை. ஏனெனில், நான் மக்கள் பக்கம்தான் இருக்கிறேன்.” என்று ஆவேசமாகத் தன்னுடைய உணர்வுகளைக் கொட்டி முடித்தார் பாத்திமா பாபு.
-
பா.விஜயலட்சுமி
விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக