ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூவத்தூர் ரகசியம் காற்றில் கசிகிறது: அந்த 10 நாட்கள்!

4 posters

Go down

கூவத்தூர் ரகசியம் காற்றில் கசிகிறது: அந்த 10 நாட்கள்! Empty கூவத்தூர் ரகசியம் காற்றில் கசிகிறது: அந்த 10 நாட்கள்!

Post by ayyasamy ram Fri Feb 24, 2017 1:59 pm

சென்னை:
கடந்த ஒரு மாத காலமாக நடந்த தமிழக அரசியல் குழப்பங்களில்
தலைமைச் செயலகத்தை விட கூவத்தூர் கோல்டன் பே நட்சத்திர
விடுதிதான் மிகவும் முக்கிய இடம் வகித்தது.

சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதை
அடுத்து, பிப்ரவரி 8ம் தேதி முதல் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக
எம்எல்ஏக்கள் காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள கோல்டன்
பே விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி,
பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அதாவது
18ம் தேதி வரை அனைத்து எம்எல்ஏக்களும் விடுதியில்தான் தங்க
வைக்கப்பட்டனர்.

இந்த 10 நாட்களில், விடுதிக்குள் வெளி ஆட்கள் யாரும் அனுமதிக்கப்
படவில்லை. அவ்வளவு ஏன், அந்த விடுதியை சுற்றியிருந்த கிராம
மக்கள் கூட அவர்களது வீடுகளுக்குச் செல்ல கெடுபிடிகள்
பின்பற்றப்பட்டன. ஒரு சமயம் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர்.
சசிகலா அடிக்கடி கூவத்தூர் விடுதிக்குச் சென்று எம்எல்ஏக்களை
சந்தித்துப் பேசி வந்தார். இதைத் தவிர வேறு எந்த தகவலும் கூவத்தூர்
விடுதியில் இருந்து வெளியாகவில்லை.

ஆனால் 10 நாள் கூவத்தூர் ரகசியம் தற்போது மெல்ல காற்றில் கலந்து
வருகிறது. அதில் சில அதிர்ச்சியான தகவல்களும் இருக்கத்தான்
செய்கிறது.

அதாவது, இந்த 10 நாட்கள் கூவத்தூர் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்களை
வைத்திருந்ததற்கு ஆன மொத்த செலவு ரூ.70 லட்சமாம்.
இதில், கட்சி தரப்பில் இருந்து ரூ.20 லட்சம் மட்டுமே விடுதி உரிமையாளருக்கு
வழங்கப்பட்டிருக்கிறது. இந்த செலவுத் தொகை குறித்து யாரிடமும்
சொல்லக் கூடாது. விரைவில் மீதித் தொகை அளிக்கப்படும் என்று மிரட்டலும்
விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த பில் தொகையில், அறை வாடகை உள்ளிட்டவை மட்டுமே அடங்கும்,
பொருட்கள் சேதாரத்துக்கு என எந்த கட்டணமும் இடம்பெறவில்லை.
அப்படி என்ன சேதாரம் என்று கேட்கலாம்... அதற்கு விடுதி ஊழியர்கள் தரப்பில்
கூறுவதைக் கேளுங்கள். "விடுதி முழுவதும் நாற்காலி, சேர்கள், சாப்பிடும்
தட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. விடுதி முழுக்க சாப்பிடும் உணவுகள்
சிந்தப்பட்டிருந்தது.

ஏன் விடுதி மாடியில் கூட உணவுகள் கொட்டியிருந்தது. எம்எல்ஏக்கள்
விடுதியில் இருந்து கிளம்பிய பிறகு, இரண்டு நாட்கள் விடுதி மூடப்பட்டது.
பராமரிப்புப் பணிக்காக. விடுதி முழுக்க சுத்தம் செய்து, உடைந்த
பொருட்களை மாற்றினோம். இதுவரை இவ்வளவு பொருட்கள் மாற்றப்பட்டதும்
இல்லை, இவ்வளவு பணிகளை செய்ததும் இல்லை. எங்களுக்கே சற்று
ஓய்வு தேவைப்பட்டது" என்றார்கள்.

விடுதிக்குள் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த போது நடந்தவை
குறித்து இன்னும் பிரம்மிப்பு மாறாமல் கூறுகிறார்கள் அவர்கள்.

சில எம்எல்ஏக்கள் தாங்கள் கேட்ட பொருட்கள் உடனடியாக வர வேண்டும்
என்று சத்தம் போடுவார்கள். சில பெண் எம்எல்ஏக்கள், தங்கள்
குடும்பத்தினரையும் உடன் வைத்துக் கொண்டனர்.

இவ்வளவு கூட்டத்தை எங்களால் சமாளிக்க முடியவில்லை. உணவு
தயாரிக்க முடியாமல் சிரமப்பட்டோம். உடனடியாக சசிகலா தரப்பினர்
சமையலுக்கு ஆட்களை கொண்டு வந்தனர். ஆனாலும் அவர்களை
சமாளிக்க முடியாமல் திணறினோம். இதனால், விடுதி நிர்வாகிகளுக்கு
அதிருப்தி ஏற்பட்டது.

மேலும் வெளியான தகவலில், கோல்டன் பே விடுதி, சென்னையைச்
சேர்ந்த ஒரு குடும்பத்துக்கு சொந்தமானது. அவர்களுக்கும்
அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், விடுதி உரிமையாளர்
சசிகலா அல்லது சேகர் ரெட்டிக்கு சொந்தமானவர் என்று கூறப்பட்டதில்
எந்த உண்மையும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.
-

------------------------------------------தினமணி





ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கூவத்தூர் ரகசியம் காற்றில் கசிகிறது: அந்த 10 நாட்கள்! Empty Re: கூவத்தூர் ரகசியம் காற்றில் கசிகிறது: அந்த 10 நாட்கள்!

Post by krishnaamma Fri Feb 24, 2017 10:15 pm

பாவம் அந்த ரிசாட் பணியாளர்கள் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கூவத்தூர் ரகசியம் காற்றில் கசிகிறது: அந்த 10 நாட்கள்! Empty Re: கூவத்தூர் ரகசியம் காற்றில் கசிகிறது: அந்த 10 நாட்கள்!

Post by T.N.Balasubramanian Sat Feb 25, 2017 11:44 am

சரியான தில்லுமுல்லு சுந்தரி இவள் 
புரியாத மக்களும் புரிந்துகொள்வர்,
ஏசப்பட்ட பீஹாரும்  முன்னேறிடும் 
பேசப்பட்ட தமிழகுமும் பின்னேறும்
இவள் குடும்பம் மட்டும் தமிழகத்தை 
கூறு போட்டு இன்புறும் .
 விழித்துக்கொள்வானா  தமிழன்,
வீணாகியே போவானா ........?
காலம்தான் பதில் கூறும்.


ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கூவத்தூர் ரகசியம் காற்றில் கசிகிறது: அந்த 10 நாட்கள்! Empty Re: கூவத்தூர் ரகசியம் காற்றில் கசிகிறது: அந்த 10 நாட்கள்!

Post by M.Jagadeesan Sun Feb 26, 2017 3:43 pm

மீதித்தொகை தரமாட்டார்கள் . எள்ளுதான் !

பாலு ஜுவெல்லர்ஸ் செட்டியாரை , பணம் தராமல் கொன்ற கூட்டம்தானே இது .

மெரீனா கூட்டத்தைக் காலிசெய்யத் தெரிந்த போலீசுக்கு GOLDEN BAY RESORT கூட்டத்தைக் காலிசெய்யத் தெரியாமல் போனது ஏன் ?

இதுவே முன்னாள் கவர்னர் P . C . ALEXANDER இருந்திருந்தால் நிச்சயம் செய்திருப்பார் . AUTO SANKAR என்ற ரௌடியின் கொலைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததே அவர்தான் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கூவத்தூர் ரகசியம் காற்றில் கசிகிறது: அந்த 10 நாட்கள்! Empty Re: கூவத்தூர் ரகசியம் காற்றில் கசிகிறது: அந்த 10 நாட்கள்!

Post by krishnaamma Sun Feb 26, 2017 6:14 pm

M.Jagadeesan wrote:மீதித்தொகை தரமாட்டார்கள் . எள்ளுதான் !

பாலு ஜுவெல்லர்ஸ் செட்டியாரை , பணம் தராமல் கொன்ற கூட்டம்தானே இது .

மெரீனா கூட்டத்தைக் காலிசெய்யத் தெரிந்த போலீசுக்கு GOLDEN BAY RESORT கூட்டத்தைக் காலிசெய்யத் தெரியாமல் போனது ஏன் ?

இதுவே முன்னாள் கவர்னர் P . C . ALEXANDER இருந்திருந்தால் நிச்சயம் செய்திருப்பார் . AUTO SANKAR என்ற ரௌடியின் கொலைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததே அவர்தான் !
மேற்கோள் செய்த பதிவு: 1234788

ம்ம்.. எல்லோருக்கும் அவரவருக்கு தகுந்த 'சூட்கேசுகள்' தரப்படுகின்றன ஐயா சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கூவத்தூர் ரகசியம் காற்றில் கசிகிறது: அந்த 10 நாட்கள்! Empty Re: கூவத்தூர் ரகசியம் காற்றில் கசிகிறது: அந்த 10 நாட்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum