Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
+10
SK
balakarthik
பாலாஜி
சிவனாசான்
ராஜா
விமந்தனி
கவின்
M.Jagadeesan
ayyasamy ram
krishnaamma
14 posters
Page 9 of 40
Page 9 of 40 • 1 ... 6 ... 8, 9, 10 ... 24 ... 40
படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
First topic message reminder :
வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே!
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 9 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே!
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
மேற்கோள் செய்த பதிவு: 1208345krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?
சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.
அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.
தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.
தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.
முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.
தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.
சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.
இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.
ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.
மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.
ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 9 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 9 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 9 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
Last edited by krishnaamma on Thu Feb 23, 2017 10:22 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
தேவை அலாரம்; கேமரா அல்ல!
சமீபத்தில், என் நண்பரின் வீட்டுக்கு சென்றிருந்தேன். நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது, வீட்டின் பின்புற கதவை, யாரோ திறந்து மூடியதும், 'கிணு கிணு...' என்ற அலார ஒலி கேட்டது. இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு, 'இதன் பெயர், 'பர்க்ளர்' அலாரம். அமெரிக்காவில் உள்ள என் மகன் வீட்டிற்கு சென்றிருந்த போது, அங்கு எல்லா வீடுகளிலும் இந்த அலாரத்தை பொருத்தி இருந்தனர். இக்காலகட்டத்திற்கு இது ரொம்ப அவசியம்.
'இப்போது எங்கு பார்த்தாலும் வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் நடக்கின்றன. கொள்ளையர்களின் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போய் விட்டது. கேமரா பொருத்தி என்ன பயன்? புகைப்படத்தை வைத்து, போலீசார் திருடர்களை கண்டுபிடிப்பதற்குள், அவர்கள் வேறு மாநிலத்துக்கு ஓடி விடுவர் அல்லது நகைகளை விற்றோ, அடகு வைத்தோ விடுவர்.
'வீட்டைச் சுற்றி, மின்சார வேலியும் அமைக்க முடியாது; காரணம், யாராவது அதில் சிக்கி, ஏதேனும் ஆகிவிட்டால், நம் கதி அதோகதி தான்.
'இதை தவிர்க்க, 'பர்க்ளர்' அலாரத்தில் இரு விதமான, 'மெனு'க்கள் இருக்கின்றன. தீ விபத்து ஏற்படும் போதும், திருடர்கள் கதவை திறந்தோ, ஜன்னலை உடைத்தோ, உள்ளே வரும் போதும், அலாரம் உச்ச ஸ்தாயியில் ஒலித்து, திருடர்களை விரட்டி விடுகிறது.
'கம்பெனியின் அலுவலகத்திலும் அலார சத்தம் உடனடியாக பதிவாகும். இதன் மூலம் அவர்கள், போலீசுக்கு தகவல் தருவர். அலாரம் இருப்பது, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரிவதாலும், அடிக்கடி சோதனை செய்வதாலும், திருடர்கள் நம் வீட்டுக்கு வர யோசிப்பர். மேலும், திருடர்கள் வெளியில் தெரியும், 'ஸ்பீக்கரை' அல்லது 'ஒயர்'களை சிதைத்தாலும், உடனே, கம்பெனிக்காரர்களுக்கு எச்சரிக்கை சென்று விடும்...' என்று விளக்கினார்.
திருட்டை தவிர்க்க, அலாரம் பொருத்துதல் நல்லது தானே!
ஏ.ஸ்ரீவாஸ், சென்னை.
சமீபத்தில், என் நண்பரின் வீட்டுக்கு சென்றிருந்தேன். நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது, வீட்டின் பின்புற கதவை, யாரோ திறந்து மூடியதும், 'கிணு கிணு...' என்ற அலார ஒலி கேட்டது. இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு, 'இதன் பெயர், 'பர்க்ளர்' அலாரம். அமெரிக்காவில் உள்ள என் மகன் வீட்டிற்கு சென்றிருந்த போது, அங்கு எல்லா வீடுகளிலும் இந்த அலாரத்தை பொருத்தி இருந்தனர். இக்காலகட்டத்திற்கு இது ரொம்ப அவசியம்.
'இப்போது எங்கு பார்த்தாலும் வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் நடக்கின்றன. கொள்ளையர்களின் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போய் விட்டது. கேமரா பொருத்தி என்ன பயன்? புகைப்படத்தை வைத்து, போலீசார் திருடர்களை கண்டுபிடிப்பதற்குள், அவர்கள் வேறு மாநிலத்துக்கு ஓடி விடுவர் அல்லது நகைகளை விற்றோ, அடகு வைத்தோ விடுவர்.
'வீட்டைச் சுற்றி, மின்சார வேலியும் அமைக்க முடியாது; காரணம், யாராவது அதில் சிக்கி, ஏதேனும் ஆகிவிட்டால், நம் கதி அதோகதி தான்.
'இதை தவிர்க்க, 'பர்க்ளர்' அலாரத்தில் இரு விதமான, 'மெனு'க்கள் இருக்கின்றன. தீ விபத்து ஏற்படும் போதும், திருடர்கள் கதவை திறந்தோ, ஜன்னலை உடைத்தோ, உள்ளே வரும் போதும், அலாரம் உச்ச ஸ்தாயியில் ஒலித்து, திருடர்களை விரட்டி விடுகிறது.
'கம்பெனியின் அலுவலகத்திலும் அலார சத்தம் உடனடியாக பதிவாகும். இதன் மூலம் அவர்கள், போலீசுக்கு தகவல் தருவர். அலாரம் இருப்பது, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரிவதாலும், அடிக்கடி சோதனை செய்வதாலும், திருடர்கள் நம் வீட்டுக்கு வர யோசிப்பர். மேலும், திருடர்கள் வெளியில் தெரியும், 'ஸ்பீக்கரை' அல்லது 'ஒயர்'களை சிதைத்தாலும், உடனே, கம்பெனிக்காரர்களுக்கு எச்சரிக்கை சென்று விடும்...' என்று விளக்கினார்.
திருட்டை தவிர்க்க, அலாரம் பொருத்துதல் நல்லது தானே!
ஏ.ஸ்ரீவாஸ், சென்னை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
இப்படியும் ஒரு விழா!
சமீபத்தில், எங்களது அபார்ட்மென்ட்டின், மூன்றாவது ஆண்டு விழா நடைபெற்றது. அதற்கு, சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என, சிலர் வந்திருந்தனர்.
கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் என, கலகலப்பாக நிகழ்ச்சி நடைபெற்று வந்த நிலையில், விருந்தினராக கலந்து கொண்ட காவல்துறை அதிகாரி, யாருக்கோ போன் செய்தார். சில நிமிடங்களில், 'மப்டி'யில் மூன்று காவலர்கள் வந்தனர்.
இரு சக்கர வாகனத்தில் அவர்கள் நிகழ்த்தி காட்டிய சாகசம், அனைவரையும் அசர வைத்தது. 'இவர்கள் மட்டுமல்ல, பெண் காவலர்களுக்கும் இது போன்ற சாகசங்கள் அத்துப்படி...' என்றபடி, இரு பெண்களை அழைத்தார், காவல்துறை அதிகாரி.
அவர்கள், பெண்களிடம், எவ்வாறு திருடர்கள் சங்கிலி பறிப்பர் என்பதை, பல்வேறு விதமாக நிகழ்த்திக் காட்டி, அதிலிருந்து எப்படி தங்களை தற்காத்துக் கொள்வது, எவ்வாறு மற்றவரை உதவிக்கு அழைப்பது மற்றும் எப்படி எதிரியை தாக்குவது என்பதைப் பற்றியும் விளக்கினர்.
இறுதியில், அபார்ட்மென்ட்களில் நடக்கும் கொலை, கொள்ளை சம்பவங்கள் பற்றியும், அது சம்பந்தமான தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.
இவை அனைத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது. மற்ற அடுக்குமாடி குடியிருப்புவாசிகளும், இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தலாமே!
டி.தவமணி, பெங்களூரு.
சமீபத்தில், எங்களது அபார்ட்மென்ட்டின், மூன்றாவது ஆண்டு விழா நடைபெற்றது. அதற்கு, சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என, சிலர் வந்திருந்தனர்.
கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் என, கலகலப்பாக நிகழ்ச்சி நடைபெற்று வந்த நிலையில், விருந்தினராக கலந்து கொண்ட காவல்துறை அதிகாரி, யாருக்கோ போன் செய்தார். சில நிமிடங்களில், 'மப்டி'யில் மூன்று காவலர்கள் வந்தனர்.
இரு சக்கர வாகனத்தில் அவர்கள் நிகழ்த்தி காட்டிய சாகசம், அனைவரையும் அசர வைத்தது. 'இவர்கள் மட்டுமல்ல, பெண் காவலர்களுக்கும் இது போன்ற சாகசங்கள் அத்துப்படி...' என்றபடி, இரு பெண்களை அழைத்தார், காவல்துறை அதிகாரி.
அவர்கள், பெண்களிடம், எவ்வாறு திருடர்கள் சங்கிலி பறிப்பர் என்பதை, பல்வேறு விதமாக நிகழ்த்திக் காட்டி, அதிலிருந்து எப்படி தங்களை தற்காத்துக் கொள்வது, எவ்வாறு மற்றவரை உதவிக்கு அழைப்பது மற்றும் எப்படி எதிரியை தாக்குவது என்பதைப் பற்றியும் விளக்கினர்.
இறுதியில், அபார்ட்மென்ட்களில் நடக்கும் கொலை, கொள்ளை சம்பவங்கள் பற்றியும், அது சம்பந்தமான தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.
இவை அனைத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது. மற்ற அடுக்குமாடி குடியிருப்புவாசிகளும், இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தலாமே!
டி.தவமணி, பெங்களூரு.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
அர்த்தமுள்ள புத்தாண்டு கொண்டாட்டம்!
கடந்த ஆங்கில புத்தாண்டு அன்று, என் நண்பன் போன் செய்து, 'உடனே புறப்பட்டு வா... ஆஸ்பத்திரிக்கு போகணும்...' என்று சொல்ல, என்னமோ ஏதோவென நினைத்து, அவசர அவசரமாக, அவன் வீட்டுக்கு சென்றேன்.
ஆனால், அவனோ, பிஸ்கட் பாக்கெட், பிரட், வாட்டர் பாட்டில்களை அட்டை பெட்டிகளில், அடுக்கியவாறு இருந்தான்.
'எதுக்கு என்னை அவசரமா கூப்பிட்டே... இதையெல்லாம் எங்கே கொண்டு போகப் போற...' என்றேன்.
'புத்தாண்டுக்கு செலவுக்கு, எங்க அப்பா, 2,000 ரூபாயும், அம்மா, 1,000 ரூபாயும் தந்தாங்க; என்கிட்ட கொஞ்சம் பணம் இருந்துச்சு. எல்லா பணத்தையும் போட்டு இதெல்லாம் வாங்கினேன். அரசு ஆஸ்பத்திரிக்கு போயி, ஏழை நோயாளிகளுக்கு இதை கொடுத்துட்டு வருவோம், வா...' என்றான்.
புத்தாடை, மது, வெடி என்று காசை வீணடிக்கும் இளைஞர்களுக்கு மத்தியில், என் நண்பன் விடிவெள்ளியாக தெரிந்தான்.
புத்தாண்டு கொண்டாடுவோர், இதுபோன்ற சேவையில் ஈடுபடலாமே!
எம்.வடுகநாதன், வேதாரண்யம்.
கடந்த ஆங்கில புத்தாண்டு அன்று, என் நண்பன் போன் செய்து, 'உடனே புறப்பட்டு வா... ஆஸ்பத்திரிக்கு போகணும்...' என்று சொல்ல, என்னமோ ஏதோவென நினைத்து, அவசர அவசரமாக, அவன் வீட்டுக்கு சென்றேன்.
ஆனால், அவனோ, பிஸ்கட் பாக்கெட், பிரட், வாட்டர் பாட்டில்களை அட்டை பெட்டிகளில், அடுக்கியவாறு இருந்தான்.
'எதுக்கு என்னை அவசரமா கூப்பிட்டே... இதையெல்லாம் எங்கே கொண்டு போகப் போற...' என்றேன்.
'புத்தாண்டுக்கு செலவுக்கு, எங்க அப்பா, 2,000 ரூபாயும், அம்மா, 1,000 ரூபாயும் தந்தாங்க; என்கிட்ட கொஞ்சம் பணம் இருந்துச்சு. எல்லா பணத்தையும் போட்டு இதெல்லாம் வாங்கினேன். அரசு ஆஸ்பத்திரிக்கு போயி, ஏழை நோயாளிகளுக்கு இதை கொடுத்துட்டு வருவோம், வா...' என்றான்.
புத்தாடை, மது, வெடி என்று காசை வீணடிக்கும் இளைஞர்களுக்கு மத்தியில், என் நண்பன் விடிவெள்ளியாக தெரிந்தான்.
புத்தாண்டு கொண்டாடுவோர், இதுபோன்ற சேவையில் ஈடுபடலாமே!
எம்.வடுகநாதன், வேதாரண்யம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
அன்பளிப்பு கொடுக்க போகிறீர்களா?
சமீபத்தில், என் சகோதரி மகளுக்கு, குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என, பலரும் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். வழக்கமாக, குழந்தைக்கு வேண்டிய, பேபி ஆயில், சோப் மற்றும் டிரஸ் உள்ளிட்ட பொருட்கள், பரிசாக வந்தன. அப்போது, ஆசிரிய நண்பர் ஒருவர் அளித்த பரிசுப் பொருள், மிகவும் பயனுள்ளதாகவும், மறக்க முடியாத பொருளாகவும் இருந்தது.
அது, வசம்பு, தேன், குழந்தையின் கழுத்தில் அணிவிக்கும் சிறிய பாசி மணி மற்றும் கையில் அணிவிக்கும் திருஷ்டி கறுப்பு வளையல்கள் போன்றவைகள்!
சமய சஞ்சீவி போன்று தேடிப் பிடித்து, அவற்றை வாங்கிக் கொடுத்த நண்பரை, பாராட்டாதவர்கள் இல்லை. பரிசு என்றால் இதுவல்லவோ!
ஜி.நிர்மலா கிருஷ்ணன், கிருஷ்ணகிரி.
சமீபத்தில், என் சகோதரி மகளுக்கு, குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என, பலரும் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். வழக்கமாக, குழந்தைக்கு வேண்டிய, பேபி ஆயில், சோப் மற்றும் டிரஸ் உள்ளிட்ட பொருட்கள், பரிசாக வந்தன. அப்போது, ஆசிரிய நண்பர் ஒருவர் அளித்த பரிசுப் பொருள், மிகவும் பயனுள்ளதாகவும், மறக்க முடியாத பொருளாகவும் இருந்தது.
அது, வசம்பு, தேன், குழந்தையின் கழுத்தில் அணிவிக்கும் சிறிய பாசி மணி மற்றும் கையில் அணிவிக்கும் திருஷ்டி கறுப்பு வளையல்கள் போன்றவைகள்!
சமய சஞ்சீவி போன்று தேடிப் பிடித்து, அவற்றை வாங்கிக் கொடுத்த நண்பரை, பாராட்டாதவர்கள் இல்லை. பரிசு என்றால் இதுவல்லவோ!
ஜி.நிர்மலா கிருஷ்ணன், கிருஷ்ணகிரி.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
வருமானத்துக்காக பொய் சொல்லாதீர்!
என் தோழிக்கு, திருமணமாகி, மூன்று ஆண்டுகளாகியும், குழந்தை இல்லை; மருத்துவரிடம் பரிசோதனை செய்ததில், 'பிரச்னை எதுவும் இல்லை; விரைவில், குழந்தை பிறக்கும்...' என்று, கூறியுள்ளார். ஆனால், புகுந்த வீட்டினரோ, அதையெல்லாம் பொருட்படுத்தாமல், அவளை, ஒரு ஜோதிடரிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.
அவரோ, 'இதற்கு முன், இவள் ஒரு கருவை கலைத்து இருக்கிறாள்; அந்த பாவம் தான், இப்போது, இவளுக்கு சாபமாக உள்ளது...' என்று, வாய்க்கு வந்ததை உளறி, பரிகாரம் என்ற பெயரில், பணத்தையும் பிடுங்கியுள்ளார்.
அவர் சொன்னதை நம்பிய தோழியின் புகுந்த வீட்டினர், 'நீ, திருமணத்துக்கு முன் தவறு செய்துள்ளாய்...' என்று சந்தேகப்பட்டு கூறி, சண்டை போட்டு, விவாகரத்து வரை சென்றுள்ளனர். பின், உறவினர்கள் பேசி, சமாதானப்படுத்தி, சேர்த்து வைத்துள்ளனர்.
ஜோதிடர்களே... வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இம்மாதிரி கண்டதைச் சொல்லி, அடுத்தவர் வாழ்க்கையை கெடுத்து, பரிகாரமே இல்லாத பாவத்தை சம்பாதிக்காதீர்!
பிரேமா கார்த்திகேயன், சென்னை.
என் தோழிக்கு, திருமணமாகி, மூன்று ஆண்டுகளாகியும், குழந்தை இல்லை; மருத்துவரிடம் பரிசோதனை செய்ததில், 'பிரச்னை எதுவும் இல்லை; விரைவில், குழந்தை பிறக்கும்...' என்று, கூறியுள்ளார். ஆனால், புகுந்த வீட்டினரோ, அதையெல்லாம் பொருட்படுத்தாமல், அவளை, ஒரு ஜோதிடரிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.
அவரோ, 'இதற்கு முன், இவள் ஒரு கருவை கலைத்து இருக்கிறாள்; அந்த பாவம் தான், இப்போது, இவளுக்கு சாபமாக உள்ளது...' என்று, வாய்க்கு வந்ததை உளறி, பரிகாரம் என்ற பெயரில், பணத்தையும் பிடுங்கியுள்ளார்.
அவர் சொன்னதை நம்பிய தோழியின் புகுந்த வீட்டினர், 'நீ, திருமணத்துக்கு முன் தவறு செய்துள்ளாய்...' என்று சந்தேகப்பட்டு கூறி, சண்டை போட்டு, விவாகரத்து வரை சென்றுள்ளனர். பின், உறவினர்கள் பேசி, சமாதானப்படுத்தி, சேர்த்து வைத்துள்ளனர்.
ஜோதிடர்களே... வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இம்மாதிரி கண்டதைச் சொல்லி, அடுத்தவர் வாழ்க்கையை கெடுத்து, பரிகாரமே இல்லாத பாவத்தை சம்பாதிக்காதீர்!
பிரேமா கார்த்திகேயன், சென்னை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
மேற்கோள் செய்த பதிவு: 1231072krishnaamma wrote:வருமானத்துக்காக பொய் சொல்லாதீர்!
என் தோழிக்கு, திருமணமாகி, மூன்று ஆண்டுகளாகியும், குழந்தை இல்லை; மருத்துவரிடம் பரிசோதனை செய்ததில், 'பிரச்னை எதுவும் இல்லை; விரைவில், குழந்தை பிறக்கும்...' என்று, கூறியுள்ளார். ஆனால், புகுந்த வீட்டினரோ, அதையெல்லாம் பொருட்படுத்தாமல், அவளை, ஒரு ஜோதிடரிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.
அவரோ, 'இதற்கு முன், இவள் ஒரு கருவை கலைத்து இருக்கிறாள்; அந்த பாவம் தான், இப்போது, இவளுக்கு சாபமாக உள்ளது...' என்று, வாய்க்கு வந்ததை உளறி, பரிகாரம் என்ற பெயரில், பணத்தையும் பிடுங்கியுள்ளார்.
அவர் சொன்னதை நம்பிய தோழியின் புகுந்த வீட்டினர், 'நீ, திருமணத்துக்கு முன் தவறு செய்துள்ளாய்...' என்று சந்தேகப்பட்டு கூறி, சண்டை போட்டு, விவாகரத்து வரை சென்றுள்ளனர். பின், உறவினர்கள் பேசி, சமாதானப்படுத்தி, சேர்த்து வைத்துள்ளனர்.
ஜோதிடர்களே... வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இம்மாதிரி கண்டதைச் சொல்லி, அடுத்தவர் வாழ்க்கையை கெடுத்து, பரிகாரமே இல்லாத பாவத்தை சம்பாதிக்காதீர்!
பிரேமா கார்த்திகேயன், சென்னை.
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
அதிசய பிறவி!
சமீபத்தில், இரவு பேருந்தில் சொந்த ஊருக்கு பயணித்த போது, என் அருகில் அமர்ந்திருந்த பெண்மணி, தண்ணீர் குடித்த போது, என்னிடம் திரும்பி, 'வேண்டுமா...' என்று கேட்டார். தாகமாயிருந்ததால், 'கொடுங்கள்...' என்றேன். அவரோ, புதிய பாட்டிலை நீட்ட, 'வேணாம்; ஓப்பன் செய்த பாட்டிலையே கொடுங்க...' என்றேன்.
'இல்ல; இது, எச்சில் செய்தது. உங்களை போன்றவர்களுக்கு கொடுப்பதற்கென்றே, இன்னொன்றை வாங்கி வைத்திருக்கேன்...' என்று கூறி கொடுத்தார். நான், ஆச்சரியமாக அவரைப் பார்க்க, 'எப்போதும், ரெண்டு, மூணு தண்ணீர் பாட்டில்கள் வாங்கி வைத்து,
தேவைப்படுவோருக்கு கொடுப்பேன். அதே போன்று, கைப்பையில், 'ஆஸ்ப்ரின்' மாத்திரைகள், மிட்டாய்கள் வைத்திருப்பேன். யாருக்காவது, திடீரென்று மாரடைப்பு வந்தாலோ, சர்க்கரை நோயாளிகளுக்கு, மயக்கம் ஏற்பட்டாலோ கொடுக்க பயன்படும்...' என்றார்.
எவ்வகையிலாவது, பிறருக்கு உதவ வேண்டுமென, முன்னேற்பாட்டோடு இருக்கும் அப்பெண்ணைப் பார்த்த போது, பிரமிப்பாக இருந்தது. இவரைப் போன்றோர், அதிசய பிறவிகள் தானே! நாமும், ஏதாவது ஒரு வகையில், தினமும் ஒருவருக்காவது உதவ வேண்டுமென்பதை, புத்தாண்டு சபதமாக கொண்டுள்ளேன்.
மல்லிகா அன்பழகன், சென்னை.
சமீபத்தில், இரவு பேருந்தில் சொந்த ஊருக்கு பயணித்த போது, என் அருகில் அமர்ந்திருந்த பெண்மணி, தண்ணீர் குடித்த போது, என்னிடம் திரும்பி, 'வேண்டுமா...' என்று கேட்டார். தாகமாயிருந்ததால், 'கொடுங்கள்...' என்றேன். அவரோ, புதிய பாட்டிலை நீட்ட, 'வேணாம்; ஓப்பன் செய்த பாட்டிலையே கொடுங்க...' என்றேன்.
'இல்ல; இது, எச்சில் செய்தது. உங்களை போன்றவர்களுக்கு கொடுப்பதற்கென்றே, இன்னொன்றை வாங்கி வைத்திருக்கேன்...' என்று கூறி கொடுத்தார். நான், ஆச்சரியமாக அவரைப் பார்க்க, 'எப்போதும், ரெண்டு, மூணு தண்ணீர் பாட்டில்கள் வாங்கி வைத்து,
தேவைப்படுவோருக்கு கொடுப்பேன். அதே போன்று, கைப்பையில், 'ஆஸ்ப்ரின்' மாத்திரைகள், மிட்டாய்கள் வைத்திருப்பேன். யாருக்காவது, திடீரென்று மாரடைப்பு வந்தாலோ, சர்க்கரை நோயாளிகளுக்கு, மயக்கம் ஏற்பட்டாலோ கொடுக்க பயன்படும்...' என்றார்.
எவ்வகையிலாவது, பிறருக்கு உதவ வேண்டுமென, முன்னேற்பாட்டோடு இருக்கும் அப்பெண்ணைப் பார்த்த போது, பிரமிப்பாக இருந்தது. இவரைப் போன்றோர், அதிசய பிறவிகள் தானே! நாமும், ஏதாவது ஒரு வகையில், தினமும் ஒருவருக்காவது உதவ வேண்டுமென்பதை, புத்தாண்டு சபதமாக கொண்டுள்ளேன்.
மல்லிகா அன்பழகன், சென்னை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
மேற்கோள் செய்த பதிவு: 1231074krishnaamma wrote:அதிசய பிறவி!
சமீபத்தில், இரவு பேருந்தில் சொந்த ஊருக்கு பயணித்த போது, என் அருகில் அமர்ந்திருந்த பெண்மணி, தண்ணீர் குடித்த போது, என்னிடம் திரும்பி, 'வேண்டுமா...' என்று கேட்டார். தாகமாயிருந்ததால், 'கொடுங்கள்...' என்றேன். அவரோ, புதிய பாட்டிலை நீட்ட, 'வேணாம்; ஓப்பன் செய்த பாட்டிலையே கொடுங்க...' என்றேன்.
'இல்ல; இது, எச்சில் செய்தது. உங்களை போன்றவர்களுக்கு கொடுப்பதற்கென்றே, இன்னொன்றை வாங்கி வைத்திருக்கேன்...' என்று கூறி கொடுத்தார். நான், ஆச்சரியமாக அவரைப் பார்க்க, 'எப்போதும், ரெண்டு, மூணு தண்ணீர் பாட்டில்கள் வாங்கி வைத்து,
தேவைப்படுவோருக்கு கொடுப்பேன். அதே போன்று, கைப்பையில், 'ஆஸ்ப்ரின்' மாத்திரைகள், மிட்டாய்கள் வைத்திருப்பேன். யாருக்காவது, திடீரென்று மாரடைப்பு வந்தாலோ, சர்க்கரை நோயாளிகளுக்கு, மயக்கம் ஏற்பட்டாலோ கொடுக்க பயன்படும்...' என்றார்.
எவ்வகையிலாவது, பிறருக்கு உதவ வேண்டுமென, முன்னேற்பாட்டோடு இருக்கும் அப்பெண்ணைப் பார்த்த போது, பிரமிப்பாக இருந்தது. இவரைப் போன்றோர், அதிசய பிறவிகள் தானே! நாமும், ஏதாவது ஒரு வகையில், தினமும் ஒருவருக்காவது உதவ வேண்டுமென்பதை, புத்தாண்டு சபதமாக கொண்டுள்ளேன்.
மல்லிகா அன்பழகன், சென்னை.
எல்லாம் சரிதான் , ஆனால் பிஸ்கட் திருடர்கள் உள்ள ஊர் ஆயிற்றே இது?
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
சபாஷ் கிராமம்!
சமீபத்தில், என் நண்பனை சந்திக்க, அவனது கிராமத்திற்கு சென்றிருந்தேன். ஊருக்குள் நுழைந்ததும், முக்கிய இடத்தில் அனைவரது பார்வையிலும் படும்படி, கொட்டை எழுத்துக்களில், 'மாட்டின் கொம்புகளில், கட்சி கொடியின் வண்ணத்தை பூசுபவர்களுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்; அத்துடன், மாட்டின் கொம்பில், உள்ள அவ்வண்ணத்தை அழிக்கா விட்டால், அவர்கள் வீட்டு விசேஷத்தில், ஊர்க்காரர்கள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள்...' என்ற பலகை வைக்கப்பட்டிருந்தது.
அதுபற்றி, என் நண்பனிடம் கேட்ட போது, 'தங்களது மாடுகளின் கொம்புகளில், தாங்கள் சார்ந்த கட்சிக் கொடியின் வண்ணத்தை பூசுவதால், அவர்கள் போடும் அரசியல் சண்டையில், அப்பாவி மாடுகளை வெறித்தனமாக தாக்குகின்றனர். இதை தடுக்கவே, எங்கள் கிராமத்தில், இப்படி, ஊர் கட்டுப்பாடு விதித்திருக்கிறோம்...' என்றான்.
விவசாயம் மற்றும் வண்டி இழுக்க என, நமக்காக உதவும் மாடுகளை, அரசியல் காரணம் காட்டி, வதை செய்வது, தடுக்கப்பட வேண்டிய செயல் தான்; அதை தடை செய்த அக்கிராமத்தினரை, மனமாரப் பாராட்டினேன்.
எஸ்.தங்கமுடிராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர்.
சமீபத்தில், என் நண்பனை சந்திக்க, அவனது கிராமத்திற்கு சென்றிருந்தேன். ஊருக்குள் நுழைந்ததும், முக்கிய இடத்தில் அனைவரது பார்வையிலும் படும்படி, கொட்டை எழுத்துக்களில், 'மாட்டின் கொம்புகளில், கட்சி கொடியின் வண்ணத்தை பூசுபவர்களுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்; அத்துடன், மாட்டின் கொம்பில், உள்ள அவ்வண்ணத்தை அழிக்கா விட்டால், அவர்கள் வீட்டு விசேஷத்தில், ஊர்க்காரர்கள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள்...' என்ற பலகை வைக்கப்பட்டிருந்தது.
அதுபற்றி, என் நண்பனிடம் கேட்ட போது, 'தங்களது மாடுகளின் கொம்புகளில், தாங்கள் சார்ந்த கட்சிக் கொடியின் வண்ணத்தை பூசுவதால், அவர்கள் போடும் அரசியல் சண்டையில், அப்பாவி மாடுகளை வெறித்தனமாக தாக்குகின்றனர். இதை தடுக்கவே, எங்கள் கிராமத்தில், இப்படி, ஊர் கட்டுப்பாடு விதித்திருக்கிறோம்...' என்றான்.
விவசாயம் மற்றும் வண்டி இழுக்க என, நமக்காக உதவும் மாடுகளை, அரசியல் காரணம் காட்டி, வதை செய்வது, தடுக்கப்பட வேண்டிய செயல் தான்; அதை தடை செய்த அக்கிராமத்தினரை, மனமாரப் பாராட்டினேன்.
எஸ்.தங்கமுடிராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
மேற்கோள் செய்த பதிவு: 1231076krishnaamma wrote:சபாஷ் கிராமம்!
சமீபத்தில், என் நண்பனை சந்திக்க, அவனது கிராமத்திற்கு சென்றிருந்தேன். ஊருக்குள் நுழைந்ததும், முக்கிய இடத்தில் அனைவரது பார்வையிலும் படும்படி, கொட்டை எழுத்துக்களில், 'மாட்டின் கொம்புகளில், கட்சி கொடியின் வண்ணத்தை பூசுபவர்களுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்; அத்துடன், மாட்டின் கொம்பில், உள்ள அவ்வண்ணத்தை அழிக்கா விட்டால், அவர்கள் வீட்டு விசேஷத்தில், ஊர்க்காரர்கள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள்...' என்ற பலகை வைக்கப்பட்டிருந்தது.
அதுபற்றி, என் நண்பனிடம் கேட்ட போது, 'தங்களது மாடுகளின் கொம்புகளில், தாங்கள் சார்ந்த கட்சிக் கொடியின் வண்ணத்தை பூசுவதால், அவர்கள் போடும் அரசியல் சண்டையில், அப்பாவி மாடுகளை வெறித்தனமாக தாக்குகின்றனர். இதை தடுக்கவே, எங்கள் கிராமத்தில், இப்படி, ஊர் கட்டுப்பாடு விதித்திருக்கிறோம்...' என்றான்.
விவசாயம் மற்றும் வண்டி இழுக்க என, நமக்காக உதவும் மாடுகளை, அரசியல் காரணம் காட்டி, வதை செய்வது, தடுக்கப்பட வேண்டிய செயல் தான்; அதை தடை செய்த அக்கிராமத்தினரை, மனமாரப் பாராட்டினேன்.
எஸ்.தங்கமுடிராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர்.
தலையெழுத்து............இவங்க போடும் சண்டை போறது என்று மாட்டை வைத்து வேறு சண்டையா?.........இதுக்கு ஒரு போர்டு, பஞ்சாயத்து.....அதுக்கு ஒரு சபாஷ் வேறு...........கடவுளே !.....
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 9 of 40 • 1 ... 6 ... 8, 9, 10 ... 24 ... 40
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில்
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது !!
» படித்ததில் பிடித்தது...!!
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது !!
» படித்ததில் பிடித்தது...!!
Page 9 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|