Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
+10
SK
balakarthik
பாலாஜி
சிவனாசான்
ராஜா
விமந்தனி
கவின்
M.Jagadeesan
ayyasamy ram
krishnaamma
14 posters
Page 8 of 40
Page 8 of 40 • 1 ... 5 ... 7, 8, 9 ... 24 ... 40
படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
First topic message reminder :
வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே!
வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே!
மேற்கோள் செய்த பதிவு: 1208345krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?
சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.
அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.
தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.
தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.
முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.
தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.
சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.
இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.
ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.
மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.
ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
Last edited by krishnaamma on Thu Feb 23, 2017 10:22 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
மேற்கோள் செய்த பதிவு: 1216368krishnaamma wrote:இவர்களையும் உற்சாகப்படுத்தலாமே!
காலையில் வாசலில் கோலம் போடும் போது, ஒரு இளைஞன், சைக்கிளில் வந்து, தினசரி பேப்பர் போட்டுச் செல்வான்.
சில தினங்களுக்கு முன், எங்கள் எதிர்வீட்டில் ரொம்ப நேரம் நின்று பேசியவன், கையில் ஏதோ வாங்கிச் செல்வதை கவனித்தேன். அன்று மாலை, எதிர் வீட்டு பெண்ணை பார்த்து, 'நீயும், உன் கணவரும் பேப்பர் போடும் பையனிடம், ரொம்ப நேரம் பேசிட்டு இருந்த மாதிரி இருந்ததே...' என்றேன்.
அதற்கு அவள், 'நாங்க இந்த வீட்டுக்கு குடி வந்த இந்த ரெண்டு வருஷத்துல, ஒருநாள் கூட லீவு போடாம, சரியான நேரத்துக்கு பேப்பர் போடுவதை கவனித்த என் கணவர், அந்த பையனை பாராட்டி, கை கடிகாரம் பரிசா கொடுத்தாரு. முதல்ல தயங்கியவன், வற்புறுத்திய பின் வாங்கினான்...' என்றாள்.
தினமும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மற்றும் விடுப்பு போடாமல் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்களை பாராட்டி, பரிசு வழங்குகின்றனர். ஆனால், நமக்காக சேவை செய்யும் பால், காஸ், கூரியர், தபால்காரர் மற்றும் பேப்பர் பாய் போன்றோரின் தொழில் சுத்தத்தையும், நேர்மையையும் பாராட்ட ஏனோ மறந்து விடுகிறோம்.இவர்களையும் உற்சாகப்படுத்தலாமே!
எம்.ராஜம், விளக்குத்தூண்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
சபலிஸ்ட்டுகளிடமிருந்து தப்ப...
கணவனை இழந்த என் தோழி, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தாள். கணவனை இழந்தவள் என்பதை அறிந்த சபலிஸ்ட்டுகள் சிலர், அவளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பிக்க, அவளும் பல்வேறு கம்பெனிகள் மாறியும் அதே நிலை தொடரவே, தன்னை தற்காத்துக்கொள்ள எரிந்து விழ ஆரம்பித்தாள். இதனால், அவளை பழி வாங்கும் விதமாக, வேண்டுமென்றே வேலைப் பளுவை கூட்டி, அவளாகவே வேலையை விட்டு செல்லும்படி செயல்பட்டனர்.
வெறுத்துப் போய், வேலையை விட்டு நின்றவள், தையல் கற்று, வீட்டிலேயே ஜாக்கெட், சுடிதார் தைக்க ஆரம்பித்தாள். அதில், நல்ல வருமானம் வரவே, தன் போன்று கணவனை இழந்த பெண்களுக்கு தையல் கற்றுக் கொடுத்து வருவதுடன், தற்போது, பெரிய அளவில் டெய்லர் கடை நடத்தி, மாதம், 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறாள்.
அவளிடம், வேலை செய்யும் பெண்களும், தங்களது பாதுகாப்பை உணர்ந்து, நல்ல முறையில் வேலை செய்கின்றனர்.
கணவனை இழந்து, மறுமணம் செய்யாமல் வாழும் இளம் பெண்கள், சுய தொழில் செய்ய வேண்டும் அல்லது பெண் நிர்வகிக்கும் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும். அதுதான், அவர்களுக்கு பாதுகாப்பையும், நிம்மதியையும் தரும் என்பதற்கு என் தோழியின் வாழ்க்கையே உதாரணம்!
- பே.ராமலட்சுமி, ஆர்.ஜே. பாளையம்.
கணவனை இழந்த என் தோழி, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தாள். கணவனை இழந்தவள் என்பதை அறிந்த சபலிஸ்ட்டுகள் சிலர், அவளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பிக்க, அவளும் பல்வேறு கம்பெனிகள் மாறியும் அதே நிலை தொடரவே, தன்னை தற்காத்துக்கொள்ள எரிந்து விழ ஆரம்பித்தாள். இதனால், அவளை பழி வாங்கும் விதமாக, வேண்டுமென்றே வேலைப் பளுவை கூட்டி, அவளாகவே வேலையை விட்டு செல்லும்படி செயல்பட்டனர்.
வெறுத்துப் போய், வேலையை விட்டு நின்றவள், தையல் கற்று, வீட்டிலேயே ஜாக்கெட், சுடிதார் தைக்க ஆரம்பித்தாள். அதில், நல்ல வருமானம் வரவே, தன் போன்று கணவனை இழந்த பெண்களுக்கு தையல் கற்றுக் கொடுத்து வருவதுடன், தற்போது, பெரிய அளவில் டெய்லர் கடை நடத்தி, மாதம், 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறாள்.
அவளிடம், வேலை செய்யும் பெண்களும், தங்களது பாதுகாப்பை உணர்ந்து, நல்ல முறையில் வேலை செய்கின்றனர்.
கணவனை இழந்து, மறுமணம் செய்யாமல் வாழும் இளம் பெண்கள், சுய தொழில் செய்ய வேண்டும் அல்லது பெண் நிர்வகிக்கும் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும். அதுதான், அவர்களுக்கு பாதுகாப்பையும், நிம்மதியையும் தரும் என்பதற்கு என் தோழியின் வாழ்க்கையே உதாரணம்!
- பே.ராமலட்சுமி, ஆர்.ஜே. பாளையம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
விவசாயத்தை மறக்காதவர்!
எங்கள் நிறுவனத்தில் எச்.ஆர்., அதிகாரியாக பணியாற்றும் இளைஞர், கிராமத்திலிருந்து படித்து, பதவிக்கு வந்தவர். பண்பிலும், பழக்கத்திலும், மிக எளிமையானவர்; தனியே அறை எடுத்து தங்கினாலும், புகை, மது என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர்.
அவர் பணியில் சேர்ந்த இந்த சில மாதங்களில், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மதியம் அவரது கிராமத்திற்கு கிளம்பிச் சென்று விடுவார்.
ஒருநாள், விளையாட்டாக, 'என்ன சார்... சனிக்கிழமையானா ஊருக்கு கிளம்பிடுறீங்களே, ஏதாவது அத்தைப் பொண்ணு, மாமா பொண்ணைப் பாக்க போறீங்களோ... ஏதும், 'கமிட்மென்ட்' இருக்கா...' என்றேன்.
பலமாக சிரித்தவர், 'அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க... ஊர்ல எங்களுக்கு கொஞ்சம் நிலமும், ஆடு, மாடுகளும் இருக்கு; அதில், அப்பாவும், அண்ணனும் விவசாயம் செய்றாங்க. ஓய்வு, பொழுதுபோக்குன்னு எதுவும் அவங்களுக்கு கிடையாது; எப்பவும் உழைப்பு தான்.
அதான், நான் கிளம்பிப் போய், அவங்களுக்கு ஒரு நாள் வேலை பளுவை குறைத்து, ஓய்வு, கொடுப்பேன். என்ன தான் படித்து, பதவியில் இருந்தாலும், அவங்களோட உழைப்புக்கு முன், நாமெல்லாம் கால் தூசு தானே...' என்றார்.
இதைக் கேட்டதும், ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனேன். தன் குடும்பம், விவசாயம், கால்நடை வளர்ப்பு மீது, அவர் வைத்திருந்த அலாதி ஈடுபாடு, என்னை வியக்க வைத்ததோடு, இயற்கையோடு ஒன்றிணைந்து வாழும் விவசாயிகளின் மீது, தனி மரியாதையையும் வரவழைத்தது.
- அ. ஜோசப், மதுரை.
எங்கள் நிறுவனத்தில் எச்.ஆர்., அதிகாரியாக பணியாற்றும் இளைஞர், கிராமத்திலிருந்து படித்து, பதவிக்கு வந்தவர். பண்பிலும், பழக்கத்திலும், மிக எளிமையானவர்; தனியே அறை எடுத்து தங்கினாலும், புகை, மது என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர்.
அவர் பணியில் சேர்ந்த இந்த சில மாதங்களில், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மதியம் அவரது கிராமத்திற்கு கிளம்பிச் சென்று விடுவார்.
ஒருநாள், விளையாட்டாக, 'என்ன சார்... சனிக்கிழமையானா ஊருக்கு கிளம்பிடுறீங்களே, ஏதாவது அத்தைப் பொண்ணு, மாமா பொண்ணைப் பாக்க போறீங்களோ... ஏதும், 'கமிட்மென்ட்' இருக்கா...' என்றேன்.
பலமாக சிரித்தவர், 'அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க... ஊர்ல எங்களுக்கு கொஞ்சம் நிலமும், ஆடு, மாடுகளும் இருக்கு; அதில், அப்பாவும், அண்ணனும் விவசாயம் செய்றாங்க. ஓய்வு, பொழுதுபோக்குன்னு எதுவும் அவங்களுக்கு கிடையாது; எப்பவும் உழைப்பு தான்.
அதான், நான் கிளம்பிப் போய், அவங்களுக்கு ஒரு நாள் வேலை பளுவை குறைத்து, ஓய்வு, கொடுப்பேன். என்ன தான் படித்து, பதவியில் இருந்தாலும், அவங்களோட உழைப்புக்கு முன், நாமெல்லாம் கால் தூசு தானே...' என்றார்.
இதைக் கேட்டதும், ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனேன். தன் குடும்பம், விவசாயம், கால்நடை வளர்ப்பு மீது, அவர் வைத்திருந்த அலாதி ஈடுபாடு, என்னை வியக்க வைத்ததோடு, இயற்கையோடு ஒன்றிணைந்து வாழும் விவசாயிகளின் மீது, தனி மரியாதையையும் வரவழைத்தது.
- அ. ஜோசப், மதுரை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
பெயர் சொல்லும் பரிசுப் பொருள்!
சமீபத்தில், என் சகோதரிக்கு, தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. பிரசவம் முடிந்து, வீட்டிற்கு கிளம்பும் போது, மருத்துவமனை சார்பாக, ஒரு பூச்செடியையும், மரக் கன்றையும் பரிசாக கொடுத்தனர்.
எங்களுக்கு மட்டுமல்ல, அங்கு பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும், இதுபோல் அன்பளிப்பு கொடுப்பது வழக்கமாம். இப்பரிசு வித்தியாசமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. அங்கு இருந்தவர்களிடம், 'இந்த யோசனை எப்படி வந்தது...' என்று கேட்டேன்.
'நாம் கொடுக்கும் பரிசு பொருள், ஒருநாள் காணாமலோ அல்லது பயனற்றதாகவோ ஆகிவிடும். ஆனால், இதுபோன்ற பூச்செடி, மரக் கன்றை கொடுக்கும் போது, நாளை அது பூவோ, கனியோ கொடுக்கும் போது, இன்னார் கொடுத்த செடியில் வந்த பொருள் என்று காலத்திற்கும் பேசுவர்.
'குழந்தையை எடுத்துச் செல்லும் போது, செடியை கொடுப்பதால், அச்செடிகளை குழந்தையைப் போல் பார்த்துக்குவாங்க. பின்னாளில், குழந்தை வயதையும், செடி வயதையும் ஞாபகம் வைத்து பேசுவர்...' என்றனர்.
உண்மையில், பெயர் சொல்லும் பரிசுப் பொருள் என்பது இதுதானே!
- க.நாகராணி, உடுமலை.
சமீபத்தில், என் சகோதரிக்கு, தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. பிரசவம் முடிந்து, வீட்டிற்கு கிளம்பும் போது, மருத்துவமனை சார்பாக, ஒரு பூச்செடியையும், மரக் கன்றையும் பரிசாக கொடுத்தனர்.
எங்களுக்கு மட்டுமல்ல, அங்கு பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும், இதுபோல் அன்பளிப்பு கொடுப்பது வழக்கமாம். இப்பரிசு வித்தியாசமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. அங்கு இருந்தவர்களிடம், 'இந்த யோசனை எப்படி வந்தது...' என்று கேட்டேன்.
'நாம் கொடுக்கும் பரிசு பொருள், ஒருநாள் காணாமலோ அல்லது பயனற்றதாகவோ ஆகிவிடும். ஆனால், இதுபோன்ற பூச்செடி, மரக் கன்றை கொடுக்கும் போது, நாளை அது பூவோ, கனியோ கொடுக்கும் போது, இன்னார் கொடுத்த செடியில் வந்த பொருள் என்று காலத்திற்கும் பேசுவர்.
'குழந்தையை எடுத்துச் செல்லும் போது, செடியை கொடுப்பதால், அச்செடிகளை குழந்தையைப் போல் பார்த்துக்குவாங்க. பின்னாளில், குழந்தை வயதையும், செடி வயதையும் ஞாபகம் வைத்து பேசுவர்...' என்றனர்.
உண்மையில், பெயர் சொல்லும் பரிசுப் பொருள் என்பது இதுதானே!
- க.நாகராணி, உடுமலை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
சென்னையில் வசிப்பவர்கள் பூச்செடியை எங்கு நடுவது?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
மேற்கோள் செய்த பதிவு: 1229315M.Jagadeesan wrote:சென்னையில் வசிப்பவர்கள் பூச்செடியை எங்கு நடுவது?
நலமா ஐயா?...........உங்கள் பதிவுகளுக்கான என் பதில்கள் பார்த்தீர்களா ஐயா?
.
.
.
பிளாட் என்றாலும், பால்கனி இல் வைக்கலாமே ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
நான் நலமாக இருக்கின்றேன் !
நீங்கள் நலமா ? உங்கள் கண் நலமா ?
இரண்டு நாட்களுக்கு முன்புதான் எனக்கு இணைய இணைப்புக் கிடைத்தது .இன்னும் உங்கள் பதிவுகளை பார்க்கவில்லை . பார்த்தவுடன் பதில் போடுகிறேன் .
நீங்கள் நலமா ? உங்கள் கண் நலமா ?
இரண்டு நாட்களுக்கு முன்புதான் எனக்கு இணைய இணைப்புக் கிடைத்தது .இன்னும் உங்கள் பதிவுகளை பார்க்கவில்லை . பார்த்தவுடன் பதில் போடுகிறேன் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
மேற்கோள் செய்த பதிவு: 1229331M.Jagadeesan wrote:நான் நலமாக இருக்கின்றேன் !
நீங்கள் நலமா ? உங்கள் கண் நலமா ?
இரண்டு நாட்களுக்கு முன்புதான் எனக்கு இணைய இணைப்புக் கிடைத்தது .இன்னும் உங்கள் பதிவுகளை பார்க்கவில்லை . பார்த்தவுடன் பதில் போடுகிறேன் .
நலம் ஐயா, கண் இப்போது நன்றாக தேவலாம் ...........பொறுமையாக படியுங்கள் ஐயா ! ......இந்த முறையும் மழை புயல் ரொம்பவும்தான் புரட்டிப் போட்டுவிட்டது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
பெற்றோரே... பிள்ளைகளை நம்புங்கள்!
சமீபத்தில், ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை குடும்பத்துடன் அமர்ந்து, 'டிவி' பார்த்துக் கொண்டிருந்த போது, என் மகளைத் தேடி வந்தனர், ஒரு தம்பதி. என் மகளை அழைத்த அப்பெண், 'எங்கடி என் பொண்ணு?' என்று கோபமாக கேட்டாள். 'அவ இங்க வரலையே ஆன்டி...' என்று என் மகள் சொன்னதும், 'என்னடி விளையாடுறியா... என் பொண்ணை, எவனோடு அனுப்பி வச்ச... காலையில போனவ இன்னும் வீட்டுக்கு வரல; உங்கூடத்தான் சினிமாவுக்கு போறதா சொன்னா... அவ, எங்க இருக்கான்னு சொல்லு...' என்று கத்தினாள்.
இதனால், கோபமான நான், 'காலையிலிருந்து என் பொண்ணு வீட்ல தான் இருக்கா; அவ எங்கேயும் வெளியே போகல. உங்க பொண்ணு எங்க போனாளோ அங்கே போய் தேடுங்க...' என்று சத்தம் போட்டதும், கண்ணீரோடு கிளம்பிப் போனவள், எங்கள் தெருவிலுள்ள அவள் மகளின் வகுப்பு தோழியரின் வீட்டிலும் தேடிய பின், அவள் வீட்டுக்கு திரும்பியுள்ளாள்.
வீட்டில் மகள் இருக்கவே, 'எங்கே போனாய்.
..' என்று கேட்டுள்ளாள். என் மகளின் பெயருடைய வேறொரு தோழியுடன் சினிமாவுக்கு போனதாக கூறியுள்ளாள். இதை புரிந்து கொள்ளாமல், மகளை சந்தேகப்பட்டதுடன் அல்லாமல், அவள் யாருடனோ சென்று விட்டாள் எனக் கூறி, தன் மகளையே அசிங்கப்படுத்தி விட்டாள், அப்பெண்.
பெற்றோரே... முதலில் உங்கள் பிள்ளைகளை நம்புங்கள். பெண் பிள்ளைகள் விஷயத்தில், அவசரப்பட்டு தவறான முடிவு எடுக்காதீர்கள்!
எஸ்.தட்சிணாமூர்த்தி, தஞ்சாவூர்.
சமீபத்தில், ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை குடும்பத்துடன் அமர்ந்து, 'டிவி' பார்த்துக் கொண்டிருந்த போது, என் மகளைத் தேடி வந்தனர், ஒரு தம்பதி. என் மகளை அழைத்த அப்பெண், 'எங்கடி என் பொண்ணு?' என்று கோபமாக கேட்டாள். 'அவ இங்க வரலையே ஆன்டி...' என்று என் மகள் சொன்னதும், 'என்னடி விளையாடுறியா... என் பொண்ணை, எவனோடு அனுப்பி வச்ச... காலையில போனவ இன்னும் வீட்டுக்கு வரல; உங்கூடத்தான் சினிமாவுக்கு போறதா சொன்னா... அவ, எங்க இருக்கான்னு சொல்லு...' என்று கத்தினாள்.
இதனால், கோபமான நான், 'காலையிலிருந்து என் பொண்ணு வீட்ல தான் இருக்கா; அவ எங்கேயும் வெளியே போகல. உங்க பொண்ணு எங்க போனாளோ அங்கே போய் தேடுங்க...' என்று சத்தம் போட்டதும், கண்ணீரோடு கிளம்பிப் போனவள், எங்கள் தெருவிலுள்ள அவள் மகளின் வகுப்பு தோழியரின் வீட்டிலும் தேடிய பின், அவள் வீட்டுக்கு திரும்பியுள்ளாள்.
வீட்டில் மகள் இருக்கவே, 'எங்கே போனாய்.
..' என்று கேட்டுள்ளாள். என் மகளின் பெயருடைய வேறொரு தோழியுடன் சினிமாவுக்கு போனதாக கூறியுள்ளாள். இதை புரிந்து கொள்ளாமல், மகளை சந்தேகப்பட்டதுடன் அல்லாமல், அவள் யாருடனோ சென்று விட்டாள் எனக் கூறி, தன் மகளையே அசிங்கப்படுத்தி விட்டாள், அப்பெண்.
பெற்றோரே... முதலில் உங்கள் பிள்ளைகளை நம்புங்கள். பெண் பிள்ளைகள் விஷயத்தில், அவசரப்பட்டு தவறான முடிவு எடுக்காதீர்கள்!
எஸ்.தட்சிணாமூர்த்தி, தஞ்சாவூர்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
பிரசவத்திற்கு கால் டாக்சி இலவசம்!
எங்கள் பகுதியில் ஓடும் கால்டாக்சி ஒன்றில், 'பிரசவத்திற்கு இலவசம்' என்று, எழுதியிருந்தது. முன்பு, ஆட்டோக்களில் தான் இப்படி எழுதி இருப்பர். அதனால், கால் டாக்சி உரிமையாளரிடம் கேட்ட போது, 'பெரும்பாலான ஏழை கர்ப்பிணி பெண்கள் ஆட்டோவில் தான் பயணம் செய்கின்றனர்; ஆட்டோக்களோ சாலையில் குலுங்கி குலுங்கி செல்கிறது. டாக்சி என்றால் குலுங்காமல் செல்லும். கர்ப்பிணி பெண்களுக்கு, இது, சவுகரியமாக இருக்கும்.
'தினமும், ஒரு கர்ப்பிணி பெண்ணையாவது, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறேன். ஏதோ என்னால் ஆன உதவி...' என்றார்.
அவரின் நல்ல உள்ளத்தை வாழ்த்தினேன். இதுபோல, மற்ற கால் டாக்சி உரிமையாளர்களும், உதவ முன் வரலாமே!
யோ.ஜெயந்தி, குனியமுத்தூர்.
எங்கள் பகுதியில் ஓடும் கால்டாக்சி ஒன்றில், 'பிரசவத்திற்கு இலவசம்' என்று, எழுதியிருந்தது. முன்பு, ஆட்டோக்களில் தான் இப்படி எழுதி இருப்பர். அதனால், கால் டாக்சி உரிமையாளரிடம் கேட்ட போது, 'பெரும்பாலான ஏழை கர்ப்பிணி பெண்கள் ஆட்டோவில் தான் பயணம் செய்கின்றனர்; ஆட்டோக்களோ சாலையில் குலுங்கி குலுங்கி செல்கிறது. டாக்சி என்றால் குலுங்காமல் செல்லும். கர்ப்பிணி பெண்களுக்கு, இது, சவுகரியமாக இருக்கும்.
'தினமும், ஒரு கர்ப்பிணி பெண்ணையாவது, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறேன். ஏதோ என்னால் ஆன உதவி...' என்றார்.
அவரின் நல்ல உள்ளத்தை வாழ்த்தினேன். இதுபோல, மற்ற கால் டாக்சி உரிமையாளர்களும், உதவ முன் வரலாமே!
யோ.ஜெயந்தி, குனியமுத்தூர்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 8 of 40 • 1 ... 5 ... 7, 8, 9 ... 24 ... 40
Similar topics
» அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில்
» படித்ததில் பிடித்தது ..
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது....!!!!!!!!!!
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது ..
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது....!!!!!!!!!!
» படித்ததில் பிடித்தது
Page 8 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|