Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
+10
SK
balakarthik
பாலாஜி
சிவனாசான்
ராஜா
விமந்தனி
கவின்
M.Jagadeesan
ayyasamy ram
krishnaamma
14 posters
Page 7 of 40
Page 7 of 40 • 1 ... 6, 7, 8 ... 23 ... 40
படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
First topic message reminder :
வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே!
வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே!
மேற்கோள் செய்த பதிவு: 1208345krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?
சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.
அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.
தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.
தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.
முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.
தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.
சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.
இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.
ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.
மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.
ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
Last edited by krishnaamma on Thu Feb 23, 2017 10:22 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
திறமையுள்ள திருநங்கை!
சமீபத்தில், என் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த போது, பக்கத்து அப்பார்ட்மென்டில் வாசல் பெருக்கி, தண்ணீர் தெளித்து, கோலம் போட்டவரை பார்த்து, ஆச்சரியமடைந்தேன். காரணம், அவர் திருநங்கை!
அதுபற்றி அவரிடம் விசாரித்த போது, 'தினமும் கடை கடையாக ஏறி, இறங்கி, காசு வசூல் செய்ய, மனம் இடம் தரவில்லை.
வேலை பார்த்து, கவுரவமாக பிழைக்கலாம் என்று எண்ணி, ஒருவரிடம் வேலை கேட்டேன். அவர், அப்பார்ட்மென்ட் மற்றும் கடைகளின் வாசலை பெருக்கி, சுத்தம் செய்யும் வேலையை வாங்கி கொடுத்தார். சில வீடுகளில், கார் கழுவுதல், செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற வேலைகளையும் செய்து சம்பாதிக்கிறேன்...' என்றார்.
இக்காலத்தில், வேலை செய்வதை சுமையாக கருதும் ஆண்கள் - பெண்களுக்கு மத்தியில், உழைத்து வாழ நினைக்கும் திருநங்கையை, அப்பகுதி மக்கள் பாராட்டி, வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருகின்றனர். திருநங்கை மீது அக்கறை கொண்டு, கவுரவமாக வாழ வழிவகை செய்த அந்த நல்ல மனதை, எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
கே.முருகேஸ்வரி, காரைக்குடி.
சமீபத்தில், என் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த போது, பக்கத்து அப்பார்ட்மென்டில் வாசல் பெருக்கி, தண்ணீர் தெளித்து, கோலம் போட்டவரை பார்த்து, ஆச்சரியமடைந்தேன். காரணம், அவர் திருநங்கை!
அதுபற்றி அவரிடம் விசாரித்த போது, 'தினமும் கடை கடையாக ஏறி, இறங்கி, காசு வசூல் செய்ய, மனம் இடம் தரவில்லை.
வேலை பார்த்து, கவுரவமாக பிழைக்கலாம் என்று எண்ணி, ஒருவரிடம் வேலை கேட்டேன். அவர், அப்பார்ட்மென்ட் மற்றும் கடைகளின் வாசலை பெருக்கி, சுத்தம் செய்யும் வேலையை வாங்கி கொடுத்தார். சில வீடுகளில், கார் கழுவுதல், செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற வேலைகளையும் செய்து சம்பாதிக்கிறேன்...' என்றார்.
இக்காலத்தில், வேலை செய்வதை சுமையாக கருதும் ஆண்கள் - பெண்களுக்கு மத்தியில், உழைத்து வாழ நினைக்கும் திருநங்கையை, அப்பகுதி மக்கள் பாராட்டி, வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருகின்றனர். திருநங்கை மீது அக்கறை கொண்டு, கவுரவமாக வாழ வழிவகை செய்த அந்த நல்ல மனதை, எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
கே.முருகேஸ்வரி, காரைக்குடி.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
மேற்கோள் செய்த பதிவு: 1215260krishnaamma wrote:திறமையுள்ள திருநங்கை!
சமீபத்தில், என் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த போது, பக்கத்து அப்பார்ட்மென்டில் வாசல் பெருக்கி, தண்ணீர் தெளித்து, கோலம் போட்டவரை பார்த்து, ஆச்சரியமடைந்தேன். காரணம், அவர் திருநங்கை!
அதுபற்றி அவரிடம் விசாரித்த போது, 'தினமும் கடை கடையாக ஏறி, இறங்கி, காசு வசூல் செய்ய, மனம் இடம் தரவில்லை.
வேலை பார்த்து, கவுரவமாக பிழைக்கலாம் என்று எண்ணி, ஒருவரிடம் வேலை கேட்டேன். அவர், அப்பார்ட்மென்ட் மற்றும் கடைகளின் வாசலை பெருக்கி, சுத்தம் செய்யும் வேலையை வாங்கி கொடுத்தார். சில வீடுகளில், கார் கழுவுதல், செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற வேலைகளையும் செய்து சம்பாதிக்கிறேன்...' என்றார்.
இக்காலத்தில், வேலை செய்வதை சுமையாக கருதும் ஆண்கள் - பெண்களுக்கு மத்தியில், உழைத்து வாழ நினைக்கும் திருநங்கையை, அப்பகுதி மக்கள் பாராட்டி, வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருகின்றனர். திருநங்கை மீது அக்கறை கொண்டு, கவுரவமாக வாழ வழிவகை செய்த அந்த நல்ல மனதை, எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
கே.முருகேஸ்வரி, காரைக்குடி.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
பெண் பார்க்க போகிறீர்களா...
ஓர் ஆண்டுக்கு முன், என் நண்பனுக்கு திருமணம் நிச்சயம் ஆனது. திருமணத்திற்கு முதல் நாள் இரவு, தன் காதலனுடன், ஊரை விட்டு ஓடி விட்டாள் மணமகள். திருமணம் நின்று போன விரக்தியில், நொந்து நூலாகி, இன்று வரை, பெண் பார்க்க மறுத்து வருகிறான், நண்பன்.
ஓடிப்போன அப்பெண்ணை, சமீபத்தில், ஒரு பொது இடத்தில், தற்செயலாக பார்த்துள்ளான், நண்பன். தனியாக வந்திருந்த அவளிடம், 'உனக்கு என்ன பாவம் செய்தேன்... ஏன் இப்படி என்னையும், என் குடும்பத்தாரையும் அவமானப்படுத்தினே... உன் வீட்ல எல்லார்கிட்டயும் கேட்டு தானே, திருமணத்துக்கு ஏற்பாடு செய்தோம். ஏன் இப்படி எல்லார் முகத்துலயும் கரியை பூசுன...' என்று ஆதங்கத்தோடு கேட்டுள்ளான்.
அதற்கு அவள், 'எங்க வீட்ல எங்கப்பா, அம்மா, அண்ணன், சித்தப்பா, சித்தின்னு எல்லார்கிட்டயும் சம்மதம் கேட்டீங்க... வாழப் போற என்கிட்ட நீங்களோ, உங்க பெற்றோரோ ஒரு வார்த்தை கேட்டீங்களா... அப்படி கேட்டிருந்தால், என் கண்ணீரைக் காட்டி, சூசகமாகவாவது என் நிலையை உணர்த்தியிருப்பேனே..' என்று கூலாக சொல்லி, போய் விட்டாள்.
அதன்பின் தான், அவனுக்கு தன் தவறு உறைத்துள்ளது. பெண் பார்க்க செல்வோர், இதை கவனத்தில் கொள்வது அவசியம்!
ஆர்.பிரபு, கோவை.
ஓர் ஆண்டுக்கு முன், என் நண்பனுக்கு திருமணம் நிச்சயம் ஆனது. திருமணத்திற்கு முதல் நாள் இரவு, தன் காதலனுடன், ஊரை விட்டு ஓடி விட்டாள் மணமகள். திருமணம் நின்று போன விரக்தியில், நொந்து நூலாகி, இன்று வரை, பெண் பார்க்க மறுத்து வருகிறான், நண்பன்.
ஓடிப்போன அப்பெண்ணை, சமீபத்தில், ஒரு பொது இடத்தில், தற்செயலாக பார்த்துள்ளான், நண்பன். தனியாக வந்திருந்த அவளிடம், 'உனக்கு என்ன பாவம் செய்தேன்... ஏன் இப்படி என்னையும், என் குடும்பத்தாரையும் அவமானப்படுத்தினே... உன் வீட்ல எல்லார்கிட்டயும் கேட்டு தானே, திருமணத்துக்கு ஏற்பாடு செய்தோம். ஏன் இப்படி எல்லார் முகத்துலயும் கரியை பூசுன...' என்று ஆதங்கத்தோடு கேட்டுள்ளான்.
அதற்கு அவள், 'எங்க வீட்ல எங்கப்பா, அம்மா, அண்ணன், சித்தப்பா, சித்தின்னு எல்லார்கிட்டயும் சம்மதம் கேட்டீங்க... வாழப் போற என்கிட்ட நீங்களோ, உங்க பெற்றோரோ ஒரு வார்த்தை கேட்டீங்களா... அப்படி கேட்டிருந்தால், என் கண்ணீரைக் காட்டி, சூசகமாகவாவது என் நிலையை உணர்த்தியிருப்பேனே..' என்று கூலாக சொல்லி, போய் விட்டாள்.
அதன்பின் தான், அவனுக்கு தன் தவறு உறைத்துள்ளது. பெண் பார்க்க செல்வோர், இதை கவனத்தில் கொள்வது அவசியம்!
ஆர்.பிரபு, கோவை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
மேற்கோள் செய்த பதிவு: 1215262krishnaamma wrote:பெண் பார்க்க போகிறீர்களா...
ஓர் ஆண்டுக்கு முன், என் நண்பனுக்கு திருமணம் நிச்சயம் ஆனது. திருமணத்திற்கு முதல் நாள் இரவு, தன் காதலனுடன், ஊரை விட்டு ஓடி விட்டாள் மணமகள். திருமணம் நின்று போன விரக்தியில், நொந்து நூலாகி, இன்று வரை, பெண் பார்க்க மறுத்து வருகிறான், நண்பன்.
ஓடிப்போன அப்பெண்ணை, சமீபத்தில், ஒரு பொது இடத்தில், தற்செயலாக பார்த்துள்ளான், நண்பன். தனியாக வந்திருந்த அவளிடம், 'உனக்கு என்ன பாவம் செய்தேன்... ஏன் இப்படி என்னையும், என் குடும்பத்தாரையும் அவமானப்படுத்தினே... உன் வீட்ல எல்லார்கிட்டயும் கேட்டு தானே, திருமணத்துக்கு ஏற்பாடு செய்தோம். ஏன் இப்படி எல்லார் முகத்துலயும் கரியை பூசுன...' என்று ஆதங்கத்தோடு கேட்டுள்ளான்.
அதற்கு அவள், 'எங்க வீட்ல எங்கப்பா, அம்மா, அண்ணன், சித்தப்பா, சித்தின்னு எல்லார்கிட்டயும் சம்மதம் கேட்டீங்க... வாழப் போற என்கிட்ட நீங்களோ, உங்க பெற்றோரோ ஒரு வார்த்தை கேட்டீங்களா... அப்படி கேட்டிருந்தால், என் கண்ணீரைக் காட்டி, சூசகமாகவாவது என் நிலையை உணர்த்தியிருப்பேனே..' என்று கூலாக சொல்லி, போய் விட்டாள்.
அதன்பின் தான், அவனுக்கு தன் தவறு உறைத்துள்ளது. பெண் பார்க்க செல்வோர், இதை கவனத்தில் கொள்வது அவசியம்!
ஆர்.பிரபு, கோவை.
ம்ம்... பெண்களையும் சம்மதம் கேட்கும் வழக்கம் பழக்கத்துக்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டதே? ........நிறைய படங்களில் இப்படி காட்சிகள் வருகிறதே..........இந்த பையன் பார்க்க வில்லை போல இருக்கிறது........பாவம் .........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
படித்ததில் பிடித்தது - தொடர் பதிவு
ஒரு நல்ல விஷயத்தைச் செய்யும்போது நமக்கு
வேண்டியவர்களையெல்லாம் துணைக்கு
அழைத்துக் கொள்ளவேண்டும்.
அந்த செயலின் முடிவில் கிடைக்கும் வெற்றியை
தனக்கும் சிறிது வைத்துக் கொண்டு மீதியை துணை
நின்ற அனைவருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும்.
–
-ரஜினிகாந்த்
——————————
வேண்டியவர்களையெல்லாம் துணைக்கு
அழைத்துக் கொள்ளவேண்டும்.
அந்த செயலின் முடிவில் கிடைக்கும் வெற்றியை
தனக்கும் சிறிது வைத்துக் கொண்டு மீதியை துணை
நின்ற அனைவருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும்.
–
-ரஜினிகாந்த்
——————————
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
சாக்ரடீஸ் Dialogues நூலில் குறிப்பிடுகிறார்.
காதலியை ஒரு போதும் புகழக் கூடாது.
அது அவர்களின் அகந்தையை பெரிதாக்கி உங்கள்
மீது வெறுப்பை உண்டு பண்ணும் என்கிறார்.
இதற்கு தீர்வு புகழ்ந்து விட்டு உடனே கொஞ்சம்
மட்டம் தட்டி விடுவது. இது நிலைமையை சமனம்
செய்ய உதவும். “திமிர்” அடங்கி விடும்.
–
————————————–
காதலியை ஒரு போதும் புகழக் கூடாது.
அது அவர்களின் அகந்தையை பெரிதாக்கி உங்கள்
மீது வெறுப்பை உண்டு பண்ணும் என்கிறார்.
இதற்கு தீர்வு புகழ்ந்து விட்டு உடனே கொஞ்சம்
மட்டம் தட்டி விடுவது. இது நிலைமையை சமனம்
செய்ய உதவும். “திமிர்” அடங்கி விடும்.
–
————————————–
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
அறுவடை செய்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணைக்
குறித்து வில்லியம் வேட்ஸ்வொர்த் `சாலிட்டரி ரீப்பர்'
எழுதிய கவிதை உலகப் புகழ் வாய்ந்தது
-
இந்தக் கவிதையை பிளஸ் 2-ல் கவிதை பிரிவில்
சேர்த்திருந்தார்கள்...
-
பாடலை அர்த்தப்படுத்தி கற்பித்த தலைமை
ஆசிரியர் அப்போது சொன்னார்:
-
தேர்வில் மதிப்பெண் பெற வேண்டும் என்ற நோக்கில்
இப்பாடலைக் குறித்து நீங்கள் படிப்பதற்கும்,
பிற்காலத்தில் இதே பாடலை ஏதோவொரு சந்தர்ப்பத்தில்
படிக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியும் வேறாக
இருக்கும்...
என்றார்
-
இது எவ்வளவு பெரிய உண்மை என்பதை உணர்ந்தவர்கள்
தொடரலாம்....
-
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
இந்த திரியை ஏற்கனவே இருக்கும் திரியுடன் இணைத்து விடுகிறேன் ராம் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
இவர்களையும் உற்சாகப்படுத்தலாமே!
காலையில் வாசலில் கோலம் போடும் போது, ஒரு இளைஞன், சைக்கிளில் வந்து, தினசரி பேப்பர் போட்டுச் செல்வான்.
சில தினங்களுக்கு முன், எங்கள் எதிர்வீட்டில் ரொம்ப நேரம் நின்று பேசியவன், கையில் ஏதோ வாங்கிச் செல்வதை கவனித்தேன். அன்று மாலை, எதிர் வீட்டு பெண்ணை பார்த்து, 'நீயும், உன் கணவரும் பேப்பர் போடும் பையனிடம், ரொம்ப நேரம் பேசிட்டு இருந்த மாதிரி இருந்ததே...' என்றேன்.
அதற்கு அவள், 'நாங்க இந்த வீட்டுக்கு குடி வந்த இந்த ரெண்டு வருஷத்துல, ஒருநாள் கூட லீவு போடாம, சரியான நேரத்துக்கு பேப்பர் போடுவதை கவனித்த என் கணவர், அந்த பையனை பாராட்டி, கை கடிகாரம் பரிசா கொடுத்தாரு. முதல்ல தயங்கியவன், வற்புறுத்திய பின் வாங்கினான்...' என்றாள்.
தினமும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மற்றும் விடுப்பு போடாமல் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்களை பாராட்டி, பரிசு வழங்குகின்றனர். ஆனால், நமக்காக சேவை செய்யும் பால், காஸ், கூரியர், தபால்காரர் மற்றும் பேப்பர் பாய் போன்றோரின் தொழில் சுத்தத்தையும், நேர்மையையும் பாராட்ட ஏனோ மறந்து விடுகிறோம்.இவர்களையும் உற்சாகப்படுத்தலாமே!
எம்.ராஜம், விளக்குத்தூண்.
காலையில் வாசலில் கோலம் போடும் போது, ஒரு இளைஞன், சைக்கிளில் வந்து, தினசரி பேப்பர் போட்டுச் செல்வான்.
சில தினங்களுக்கு முன், எங்கள் எதிர்வீட்டில் ரொம்ப நேரம் நின்று பேசியவன், கையில் ஏதோ வாங்கிச் செல்வதை கவனித்தேன். அன்று மாலை, எதிர் வீட்டு பெண்ணை பார்த்து, 'நீயும், உன் கணவரும் பேப்பர் போடும் பையனிடம், ரொம்ப நேரம் பேசிட்டு இருந்த மாதிரி இருந்ததே...' என்றேன்.
அதற்கு அவள், 'நாங்க இந்த வீட்டுக்கு குடி வந்த இந்த ரெண்டு வருஷத்துல, ஒருநாள் கூட லீவு போடாம, சரியான நேரத்துக்கு பேப்பர் போடுவதை கவனித்த என் கணவர், அந்த பையனை பாராட்டி, கை கடிகாரம் பரிசா கொடுத்தாரு. முதல்ல தயங்கியவன், வற்புறுத்திய பின் வாங்கினான்...' என்றாள்.
தினமும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மற்றும் விடுப்பு போடாமல் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்களை பாராட்டி, பரிசு வழங்குகின்றனர். ஆனால், நமக்காக சேவை செய்யும் பால், காஸ், கூரியர், தபால்காரர் மற்றும் பேப்பர் பாய் போன்றோரின் தொழில் சுத்தத்தையும், நேர்மையையும் பாராட்ட ஏனோ மறந்து விடுகிறோம்.இவர்களையும் உற்சாகப்படுத்தலாமே!
எம்.ராஜம், விளக்குத்தூண்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
பூஜை பொருட்களில் கலப்படம்!
சமீபத்தில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, மதுரை சென்றிருந்தோம். அங்குள்ள கோவில்களை பார்க்க வேண்டும் என்பதால், திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பாகவே சென்று, பல கோவில்களை தரிசித்தோம். இந்நிலையில், திருமணத்திற்கு முதல்நாள் இரவு, என் மகளின் கண், கோவைப்பழம் போல சிவந்து விட்டது. 'மெட்ராஸ் ஐ' வந்து விட்டதாக நினைத்து, எல்லாருக்கும் பரவி விடுமே என, பயந்தோம்.
மருத்துவரிடம் சென்று காண்பித்ததில், அவர், 'கலப்பட குங்குமம் இட்டுக் கொண்டதன் காரணமாக ஏற்பட்ட அலர்ஜி...' என்று கூறி, சொட்டு மருந்து கொடுத்தார். கோவில்களில் கொடுக்கப்பட்ட குங்குமத்தை நெற்றியில் இட்டது நினைவுக்கு வந்தது.
நான்கு நாட்கள் கண் அலர்ஜியால் அவஸ்தைப்பட்டது மட்டுமில்லாமல், 'மெட்ராஸ் ஐ' என நினைத்து, எல்லாரும் எங்களை நெருங்கவே பயந்தனர். திருமண நிகழ்ச்சியில், மகிழ்ச்சியாக கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது.
கோவில்களுக்கு செல்லும் போது, தரமான பூஜைப் பொருட்களையே வாங்க வேண்டும்.
பூஜை பொருட்களை விற்பனை செய்வோரும், அவை, பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது என்பதை மனதில் கொண்டு, தரமான பொருட்களை விற்று, புண்ணியம் தேடிக் கொள்ளலாமே!
ந.விசாலாட்சி, கோல்கட்டா.
சமீபத்தில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, மதுரை சென்றிருந்தோம். அங்குள்ள கோவில்களை பார்க்க வேண்டும் என்பதால், திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பாகவே சென்று, பல கோவில்களை தரிசித்தோம். இந்நிலையில், திருமணத்திற்கு முதல்நாள் இரவு, என் மகளின் கண், கோவைப்பழம் போல சிவந்து விட்டது. 'மெட்ராஸ் ஐ' வந்து விட்டதாக நினைத்து, எல்லாருக்கும் பரவி விடுமே என, பயந்தோம்.
மருத்துவரிடம் சென்று காண்பித்ததில், அவர், 'கலப்பட குங்குமம் இட்டுக் கொண்டதன் காரணமாக ஏற்பட்ட அலர்ஜி...' என்று கூறி, சொட்டு மருந்து கொடுத்தார். கோவில்களில் கொடுக்கப்பட்ட குங்குமத்தை நெற்றியில் இட்டது நினைவுக்கு வந்தது.
நான்கு நாட்கள் கண் அலர்ஜியால் அவஸ்தைப்பட்டது மட்டுமில்லாமல், 'மெட்ராஸ் ஐ' என நினைத்து, எல்லாரும் எங்களை நெருங்கவே பயந்தனர். திருமண நிகழ்ச்சியில், மகிழ்ச்சியாக கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது.
கோவில்களுக்கு செல்லும் போது, தரமான பூஜைப் பொருட்களையே வாங்க வேண்டும்.
பூஜை பொருட்களை விற்பனை செய்வோரும், அவை, பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது என்பதை மனதில் கொண்டு, தரமான பொருட்களை விற்று, புண்ணியம் தேடிக் கொள்ளலாமே!
ந.விசாலாட்சி, கோல்கட்டா.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 7 of 40 • 1 ... 6, 7, 8 ... 23 ... 40
Similar topics
» அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில்
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது...
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது...
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
Page 7 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|