Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
+10
SK
balakarthik
பாலாஜி
சிவனாசான்
ராஜா
விமந்தனி
கவின்
M.Jagadeesan
ayyasamy ram
krishnaamma
14 posters
Page 6 of 40
Page 6 of 40 • 1 ... 5, 6, 7 ... 23 ... 40
படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
First topic message reminder :
வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே!
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 6 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே!
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
மேற்கோள் செய்த பதிவு: 1208345krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?
சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.
அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.
தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.
தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.
முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.
தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.
சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.
இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.
ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.
மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.
ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 6 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 6 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 6 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
Last edited by krishnaamma on Thu Feb 23, 2017 10:22 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
சிங்கர்!
சிறுவர்கள் பாடும், திரையிசை பாடல்கள் நிகழ்ச்சி, இப்போது, அனைத்து, 'டிவி' சேனல்களிலும் ஒளிப்பரப்படுகிறது.
மழலை குரலில் அவர்கள் பாடுவதைக் கேட்கும் போது, மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. சில குழந்தைகளின் இசை ஞானமும், குரல்களின் வசீகரமும், உணர்ச்சி பாவனைகளும், நெஞ்சை விட்டு நீங்குவதில்லை. குரல் தேர்வுக்கு பிள்ளைகளுடன், பெற்றோரும் கடுமையான பயிற்சி மேற்கொள்கின்றனர்; இது, இந்த தலைமுறைக்கான வரப்பிரசாதம் என்று கூட சொல்லலாம்.
ஆனால், தற்போது உள்ள பாடல்களில் பெரும்பாலானவை தரமானவை இல்லை என்றாலும், சில விரல் விட்டு எண்ணக்கூடிய, நல்ல பாடல்களும் இருக்கின்றன. பெற்றோரும், போட்டி நடத்தும், 'டிவி' சேனல்களும், தலைமை தாங்குபவர்களும் (நீதிபதிகள்) இத்தகைய நல்ல பாடல்களை தேர்வு செய்து, குழந்தைகளுக்கு வழிகாட்டியாக திகழ வேண்டும்.
பிள்ளைகளின் எதிர்காலத்தில், பெற்றோரை தவிர, வேறு யாருக்கும் அதிகமான அக்கறை இருக்க முடியாது. அதனால், தன் பிள்ளை இறுதி சுற்றுக்கே சென்றாலும், ஏன், முதல் பரிசை தவற விடும் வாய்ப்பு ஏற்பட்டாலும், தரமற்ற பாடல்களை பாடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும், பெற்றோர்.
ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கிட, நம் பண்பாடு, கலாசாரம் மற்றும் நம் மண்ணின் மகிமையை நிலைநிறுத்த, நம்மால் இயன்ற, சிறு உதவியாக இதைச் செய்யலாமே!
பரிசு பொருட்களுக்காக ஒரு தலைமுறையினரை அழிவு பாதைக்கு கொண்டு செல்வதை நிறுத்தி, எதிர்கால சிற்பிகளை, அழகான, உயிரோட்டம் உள்ள சிலைகளை வடிக்க உதவி செய்வது, நம் சமுதாய பொறுப்பு! செய்வீரா!
மு.தமிழரசி, சென்னை.
சிறுவர்கள் பாடும், திரையிசை பாடல்கள் நிகழ்ச்சி, இப்போது, அனைத்து, 'டிவி' சேனல்களிலும் ஒளிப்பரப்படுகிறது.
மழலை குரலில் அவர்கள் பாடுவதைக் கேட்கும் போது, மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. சில குழந்தைகளின் இசை ஞானமும், குரல்களின் வசீகரமும், உணர்ச்சி பாவனைகளும், நெஞ்சை விட்டு நீங்குவதில்லை. குரல் தேர்வுக்கு பிள்ளைகளுடன், பெற்றோரும் கடுமையான பயிற்சி மேற்கொள்கின்றனர்; இது, இந்த தலைமுறைக்கான வரப்பிரசாதம் என்று கூட சொல்லலாம்.
ஆனால், தற்போது உள்ள பாடல்களில் பெரும்பாலானவை தரமானவை இல்லை என்றாலும், சில விரல் விட்டு எண்ணக்கூடிய, நல்ல பாடல்களும் இருக்கின்றன. பெற்றோரும், போட்டி நடத்தும், 'டிவி' சேனல்களும், தலைமை தாங்குபவர்களும் (நீதிபதிகள்) இத்தகைய நல்ல பாடல்களை தேர்வு செய்து, குழந்தைகளுக்கு வழிகாட்டியாக திகழ வேண்டும்.
பிள்ளைகளின் எதிர்காலத்தில், பெற்றோரை தவிர, வேறு யாருக்கும் அதிகமான அக்கறை இருக்க முடியாது. அதனால், தன் பிள்ளை இறுதி சுற்றுக்கே சென்றாலும், ஏன், முதல் பரிசை தவற விடும் வாய்ப்பு ஏற்பட்டாலும், தரமற்ற பாடல்களை பாடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும், பெற்றோர்.
ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கிட, நம் பண்பாடு, கலாசாரம் மற்றும் நம் மண்ணின் மகிமையை நிலைநிறுத்த, நம்மால் இயன்ற, சிறு உதவியாக இதைச் செய்யலாமே!
பரிசு பொருட்களுக்காக ஒரு தலைமுறையினரை அழிவு பாதைக்கு கொண்டு செல்வதை நிறுத்தி, எதிர்கால சிற்பிகளை, அழகான, உயிரோட்டம் உள்ள சிலைகளை வடிக்க உதவி செய்வது, நம் சமுதாய பொறுப்பு! செய்வீரா!
மு.தமிழரசி, சென்னை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
இரவில் ரயில் பயணமா?
இரவில், ரயிலில் பயணிக்கும் போது, 'இறங்க வேண்டிய இடத்தை தவற விட்டு விடுவோமோ...' என்ற கவலையும், பயமும் ஏற்படுகிறதா? இனி, அந்தக் கவலை வேண்டாம்.
உங்கள் மொபைல் போனிலிருந்து, 139 என்ற எண்ணுக்கு, 'டயல்' செய்யுங்கள். அதில் வரும் வழிமுறைகளின்படி, பயண டிக்கெட்டில் இருக்கும் உங்கள் பி.என்.ஆர்., எண்ணை பதிவு செய்யுங்கள்.
நீங்கள் இறங்க வேண்டிய இடம் நெருங்கியதும், உங்களுக்கு, எச்சரிக்கை அழைப்பு வரும். இதனால், நீங்கள் இறங்க வேண்டிய இடம் குறித்து கவலையில்லாமல், நிம்மதியாக பயணம் செய்யலாம்!
ஹெச்.டி.முனவர் ஜஹான், மதுரை.
இரவில், ரயிலில் பயணிக்கும் போது, 'இறங்க வேண்டிய இடத்தை தவற விட்டு விடுவோமோ...' என்ற கவலையும், பயமும் ஏற்படுகிறதா? இனி, அந்தக் கவலை வேண்டாம்.
உங்கள் மொபைல் போனிலிருந்து, 139 என்ற எண்ணுக்கு, 'டயல்' செய்யுங்கள். அதில் வரும் வழிமுறைகளின்படி, பயண டிக்கெட்டில் இருக்கும் உங்கள் பி.என்.ஆர்., எண்ணை பதிவு செய்யுங்கள்.
நீங்கள் இறங்க வேண்டிய இடம் நெருங்கியதும், உங்களுக்கு, எச்சரிக்கை அழைப்பு வரும். இதனால், நீங்கள் இறங்க வேண்டிய இடம் குறித்து கவலையில்லாமல், நிம்மதியாக பயணம் செய்யலாம்!
ஹெச்.டி.முனவர் ஜஹான், மதுரை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
'மெமரி கார்டு' விபரீதம் உஷார்!
சமீபத்தில், பஸ்சில் பயணம் செய்த போது, கல்லூரி மாணவர்கள் சிலர், கலாட்டா செய்தபடி வந்தனர். அப்போது, ஒரு மாணவன், தன் மொபைல்போனில், யாரோ ஒரு மாணவியிடம், 'ஏய்... நான் உன்கிட்ட கொடுத்த, 'மெமரி கார்டை' மொபைலில் போட்டு பாத்திடாதே... அது, என் நண்பனோடது. அந்த ராஸ்கல், அதில, 'பலான பிட்' படத்தை வச்சிருக்கானாம். அந்த பன்னாடை, இப்பத் தான் அதை என்கிட்ட சொன்னான். ப்ளீஸ்... என்னை தப்பா நினைக்காதே... தயவுசெய்து அதைப் பாத்திடாதே... நாளைக்கு வந்து அதை வாங்கிக்கறேன்...' என்று பலமுறை மன்னிப்பு கேட்டு, பேச்சை முடித்தான்.
அவனது செயலை கண்ட நான், 'பரவாயில்லையே... இவன் ரொம்ப நல்ல பையன் போலிருக்கிறதே...' என்று நினைத்தேன்.
அப்போது, அவனது நண்பர்கள், 'என்ன மேட்டருடா?' என்று கேட்க, அந்த மாணவன், 'டேய் மாப்ளே... இதெல்லாம், 'பிகரை' கவிழ்க்கிற டெக்னிக்குடா... பொண்ணுங்ககிட்ட, மெமரி கார்டில், 'பலான' படத்தை, 'டவுன்லோடு' செய்து கொடுத்துட்டு, 'அதை பாக்காதே'ன்னு 'பீலா' விட்டா கண்டிப்பாக அதை பாப்பாங்க. அப்புறம், ஈசியா நாம அவங்களை கவிழ்த்திடலாம்...' என்றான்.
அப்போது தான் தெரிந்தது, அவன் பசுத்தோல் போர்த்திய புலி என்று!
ஆண் நண்பர்களிடம் பழகும் பெண்களே... உஷாரா இருங்க; மெமரி கார்டில், 'பலான' வெடிகுண்டு இருக்கும்!
ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு.
சமீபத்தில், பஸ்சில் பயணம் செய்த போது, கல்லூரி மாணவர்கள் சிலர், கலாட்டா செய்தபடி வந்தனர். அப்போது, ஒரு மாணவன், தன் மொபைல்போனில், யாரோ ஒரு மாணவியிடம், 'ஏய்... நான் உன்கிட்ட கொடுத்த, 'மெமரி கார்டை' மொபைலில் போட்டு பாத்திடாதே... அது, என் நண்பனோடது. அந்த ராஸ்கல், அதில, 'பலான பிட்' படத்தை வச்சிருக்கானாம். அந்த பன்னாடை, இப்பத் தான் அதை என்கிட்ட சொன்னான். ப்ளீஸ்... என்னை தப்பா நினைக்காதே... தயவுசெய்து அதைப் பாத்திடாதே... நாளைக்கு வந்து அதை வாங்கிக்கறேன்...' என்று பலமுறை மன்னிப்பு கேட்டு, பேச்சை முடித்தான்.
அவனது செயலை கண்ட நான், 'பரவாயில்லையே... இவன் ரொம்ப நல்ல பையன் போலிருக்கிறதே...' என்று நினைத்தேன்.
அப்போது, அவனது நண்பர்கள், 'என்ன மேட்டருடா?' என்று கேட்க, அந்த மாணவன், 'டேய் மாப்ளே... இதெல்லாம், 'பிகரை' கவிழ்க்கிற டெக்னிக்குடா... பொண்ணுங்ககிட்ட, மெமரி கார்டில், 'பலான' படத்தை, 'டவுன்லோடு' செய்து கொடுத்துட்டு, 'அதை பாக்காதே'ன்னு 'பீலா' விட்டா கண்டிப்பாக அதை பாப்பாங்க. அப்புறம், ஈசியா நாம அவங்களை கவிழ்த்திடலாம்...' என்றான்.
அப்போது தான் தெரிந்தது, அவன் பசுத்தோல் போர்த்திய புலி என்று!
ஆண் நண்பர்களிடம் பழகும் பெண்களே... உஷாரா இருங்க; மெமரி கார்டில், 'பலான' வெடிகுண்டு இருக்கும்!
ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
krishnaamma wrote:'மெமரி கார்டு' விபரீதம் உஷார்!
சமீபத்தில், பஸ்சில் பயணம் செய்த போது, கல்லூரி மாணவர்கள் சிலர், கலாட்டா செய்தபடி வந்தனர். அப்போது, ஒரு மாணவன், தன் மொபைல்போனில், யாரோ ஒரு மாணவியிடம், 'ஏய்... நான் உன்கிட்ட கொடுத்த, 'மெமரி கார்டை' மொபைலில் போட்டு பாத்திடாதே... அது, என் நண்பனோடது. அந்த ராஸ்கல், அதில, 'பலான பிட்' படத்தை வச்சிருக்கானாம். அந்த பன்னாடை, இப்பத் தான் அதை என்கிட்ட சொன்னான். ப்ளீஸ்... என்னை தப்பா நினைக்காதே... தயவுசெய்து அதைப் பாத்திடாதே... நாளைக்கு வந்து அதை வாங்கிக்கறேன்...' என்று பலமுறை மன்னிப்பு கேட்டு, பேச்சை முடித்தான்.
அவனது செயலை கண்ட நான், 'பரவாயில்லையே... இவன் ரொம்ப நல்ல பையன் போலிருக்கிறதே...' என்று நினைத்தேன்.
அப்போது, அவனது நண்பர்கள், 'என்ன மேட்டருடா?' என்று கேட்க, அந்த மாணவன், 'டேய் மாப்ளே... இதெல்லாம், 'பிகரை' கவிழ்க்கிற டெக்னிக்குடா... பொண்ணுங்ககிட்ட, மெமரி கார்டில், 'பலான' படத்தை, 'டவுன்லோடு' செய்து கொடுத்துட்டு, 'அதை பாக்காதே'ன்னு 'பீலா' விட்டா கண்டிப்பாக அதை பாப்பாங்க. அப்புறம், ஈசியா நாம அவங்களை கவிழ்த்திடலாம்...' என்றான்.
அப்போது தான் தெரிந்தது, அவன் பசுத்தோல் போர்த்திய புலி என்று!
ஆண் நண்பர்களிடம் பழகும் பெண்களே... உஷாரா இருங்க; மெமரி கார்டில், 'பலான' வெடிகுண்டு இருக்கும்!
ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு.
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
இதெல்லாம் ஏற்கனவே தமிழ் சினிமாவில் வந்த விஷயம் தானே , அப்ப வீடியோ கேசட் கொடுத்துட்டு பிறகு வந்து வாங்குவார்கள் , இப்ப மெமரி கார்டு .... பெண்கள் தான் உஷாரா இருக்கணும்....
இந்தக்காலத்தில் சில விஷயங்களை போன தலைமுறை போல மூடி மறைக்க முடியாது ஆண்கள் ஆனாலும் பெண்கள் ஆனாலும் இவற்றை பற்றி தெரிந்துகொள்ள நேரிட்டாலும் just like that ஒதுக்கி தள்ளிட்டு போயிடனும்..
இன்று நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி பார்த்தேன் ஒரு சிறு பெண் Btech படிக்கிறாளாம் நான் எது பண்ணிலாலும் எங்க அம்மா "அவ செய்தா சரியா தான் இருக்கும்னு நம்புவாங்க , அதனால் நான் சரியா தான் செய்வேன் " என்று சொல்லுவதை கேட்கும் போது உண்மையிலேயே ரொம்ப பிடித்திருந்தது
இந்தக்காலத்தில் சில விஷயங்களை போன தலைமுறை போல மூடி மறைக்க முடியாது ஆண்கள் ஆனாலும் பெண்கள் ஆனாலும் இவற்றை பற்றி தெரிந்துகொள்ள நேரிட்டாலும் just like that ஒதுக்கி தள்ளிட்டு போயிடனும்..
இன்று நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி பார்த்தேன் ஒரு சிறு பெண் Btech படிக்கிறாளாம் நான் எது பண்ணிலாலும் எங்க அம்மா "அவ செய்தா சரியா தான் இருக்கும்னு நம்புவாங்க , அதனால் நான் சரியா தான் செய்வேன் " என்று சொல்லுவதை கேட்கும் போது உண்மையிலேயே ரொம்ப பிடித்திருந்தது
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
எல்லா மெம்மரி பதிவுகளும், அறிவார்தமான அவசியமான பதிவுங்க >>>>>>>>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
மேற்கோள் செய்த பதிவு: 1213003krishnaamma wrote:ஓட்டுப் போட கை நீட்டினால்...
தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஜூன் மாதம் சம்பளம் வாங்கும் போது, அதிர்ச்சியாக இருந்தது. காரணம், தேர்தல் அன்று விடுமுறை அளித்ததற்கு, சம்பளத்தை, 'கட்' செய்திருந்தனர்.
எங்கள் நிறுவன மேனேஜரிடம், 'அரசு, சம்பளத்தோடு தானே விடுமுறை அளித்தனர்; ஏன் சம்பளம் தரவில்லை?' என்று எல்லாரும் கேட்டதற்கு, அவர் கூறிய பதில் என்ன தெரியுமா...
'நானும் முதலாளியிடம் கேட்டேன். அவர், எல்லாரும் இலவசமாகவா ஓட்டு போட்டாங்க... ஆயிரம் ஆயிரமா பணத்தை வாங்கிட்டு தானே ஓட்டு போட்டாங்க. அரசியல்வாதிகள் தரும் பணம் எல்லாம், எங்களைப் போன்ற தொழிலதிபர்களிடம் வாங்கிய நிதி தானே... தேர்தலில் லாபம் அடைஞ்சிட்டு, சம்பளம் வேறு கேட்கின்றனரா...' என்றாராம் முதலாளி.
அவர் கூறிய பதில், செருப்பால் அடித்தது போல இருந்தது. ஓட்டு போட கை நீட்டி காசு வாங்கினால், இப்படியெல்லாம் அசிங்கமும், அவமானமும் தான் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.
கடைசி வரை போராடியும், சம்பளம் தரவில்லை எங்கள் முதலாளி.
பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர்.
முத(லை)லாளி அண்ணே சில கேள்வி
அனைவருமே காசு வாங்கி ஒட்டு போட்டனர் என்பதை எப்படி முடிவு செய்தீர் .
தொழிலதிபர்களிடம் வாங்கிய நிதி அப்படி என்றால் , ஆட்சி ஏற்றவுடன் அதன்முலம் என்ன சலுகை உங்களுக்கு கிடைத்தது .
இது அராஜகம் ....
ஆனால் நீங்க காசு வாங்கி ஒட்டு அளித்தீர் என்பதை ஒப்புக்கொண்டுள்ளீர் . எனவே உங்களுக்கும் அவரை குறை சொல்ல தகுதி இல்லை .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
அடிக்கடி, 'சிம்' மாற்றினால் ஆபத்து!
மொபைல்போன் எண்ணை அடிக்கடி மாற்றும் பழக்கம் உடையவர், என் நண்பர். ஒவ்வொரு கம்பெனியும், 'மூன்றிலிருந்து, ஆறு மாதங்கள் இலவசமாக பேசலாம் அல்லது 'ரேட் கட்டர்' இல்லாமலேயே, குறைந்த கட்டணத்தில் பேசலாம்...' என, சலுகை தருவதை பயன்படுத்தி, மொபைல் எண்களை மாற்றுவார். குறிப்பிட்ட கால அளவு முடிந்ததும், அதை, எறிந்து விடுவர்.
சமீபத்தில், இவரின் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே, தகவல் தெரிவிக்க, நண்பரை தொடர்பு கொண்ட போது, தொடர்பு கிடைக்கவில்லை. காரணம், அதற்கு முதல் நாள் தான், புதிய எண்ணுக்கு மாறி இருந்தார். வீட்டில் யாருக்கும் புதிய எண் தெரியவில்லை. பின், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன், அக்குழந்தை காப்பாற்றப்பட்டது.
நீண்ட நேரம் கழித்து, நடந்த விஷயம் எதுவும் தெரியாததால், யாருடனோ போனில் சிரித்து பேசியபடி, வீட்டுக்கு வந்த நண்பருக்கு, மனைவி மற்றும் உறவினர்கள் என, அனைவரும் அர்ச்சனை செய்ய, அப்போது தான் தன் தவறை உணர்ந்தார்.
இப்படி சலுகையை பயன்படுத்தும் நபர்கள், எப்போதும் நிலையான ஒரு எண்ணுடன் இருப்பது அவசியம்.
தற்போது, சாதாரண விலையில் கிடைக்கும் மொபைல்போனில் கூட, இரண்டு, 'சிம்' பொருத்திக் கொள்ளும் வசதி உள்ளது. ஒரு, 'சிம்' சலுகைக்கும், மற்றொரு, 'சிம்' நிரந்தரமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்; அவசரத்துக்கு பயன்படும்!
எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.
மொபைல்போன் எண்ணை அடிக்கடி மாற்றும் பழக்கம் உடையவர், என் நண்பர். ஒவ்வொரு கம்பெனியும், 'மூன்றிலிருந்து, ஆறு மாதங்கள் இலவசமாக பேசலாம் அல்லது 'ரேட் கட்டர்' இல்லாமலேயே, குறைந்த கட்டணத்தில் பேசலாம்...' என, சலுகை தருவதை பயன்படுத்தி, மொபைல் எண்களை மாற்றுவார். குறிப்பிட்ட கால அளவு முடிந்ததும், அதை, எறிந்து விடுவர்.
சமீபத்தில், இவரின் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே, தகவல் தெரிவிக்க, நண்பரை தொடர்பு கொண்ட போது, தொடர்பு கிடைக்கவில்லை. காரணம், அதற்கு முதல் நாள் தான், புதிய எண்ணுக்கு மாறி இருந்தார். வீட்டில் யாருக்கும் புதிய எண் தெரியவில்லை. பின், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன், அக்குழந்தை காப்பாற்றப்பட்டது.
நீண்ட நேரம் கழித்து, நடந்த விஷயம் எதுவும் தெரியாததால், யாருடனோ போனில் சிரித்து பேசியபடி, வீட்டுக்கு வந்த நண்பருக்கு, மனைவி மற்றும் உறவினர்கள் என, அனைவரும் அர்ச்சனை செய்ய, அப்போது தான் தன் தவறை உணர்ந்தார்.
இப்படி சலுகையை பயன்படுத்தும் நபர்கள், எப்போதும் நிலையான ஒரு எண்ணுடன் இருப்பது அவசியம்.
தற்போது, சாதாரண விலையில் கிடைக்கும் மொபைல்போனில் கூட, இரண்டு, 'சிம்' பொருத்திக் கொள்ளும் வசதி உள்ளது. ஒரு, 'சிம்' சலுகைக்கும், மற்றொரு, 'சிம்' நிரந்தரமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்; அவசரத்துக்கு பயன்படும்!
எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
பஸ் ஸ்டாப் அறிவிப்பு!
சமீபத்தில், தனியார் பேருந்தில், பழநிக்கு சென்றேன். பேருந்தில், 'டிவி'யில் படம் ஓடியது. திடீரென படத்தை நிறுத்தி, 'ரெட்டியார் சத்திரம் இறங்கும் பயணிகள் தயாராகவும்...' என்ற அறிவிப்பை ஒலிபரப்பினர். அதேபோன்றே, ஆங்காங்கே, ஒவ்வொரு பஸ் ஸ்டாப்பின் பெயர்களை குறிப்பிட்டதுடன், 'பயணிகள் டிக்கெட்களை கேட்டு வாங்கவும், படியில் நின்று பயணிக்க வேண்டாம்...' என்பது போன்ற அறிவிப்புகளையும், ஒலிபரப்பினர்.
இது, பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பயணத்தின் போது, சிலர் தூங்கியபடியும், மற்றும் சிலர் அந்த வழித்தடத்தில், புதிதாக பயணிப்பவர்களாகவும் இருப்பர். இத்தகைய அறிவிப்புகள் இவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.
இதுபோன்ற முயற்சியை மற்ற தனியார் மற்றும் அரசு பேருந்துகளிலும், முக்கியமாக ரயில்களில் செய்தால், மிகவும் பயனுள்ளதாக இருக்குமே செய்வார்களா?
எம்.ஆர்.ஜெயச்சந்திரன், திண்டுக்கல்.
சமீபத்தில், தனியார் பேருந்தில், பழநிக்கு சென்றேன். பேருந்தில், 'டிவி'யில் படம் ஓடியது. திடீரென படத்தை நிறுத்தி, 'ரெட்டியார் சத்திரம் இறங்கும் பயணிகள் தயாராகவும்...' என்ற அறிவிப்பை ஒலிபரப்பினர். அதேபோன்றே, ஆங்காங்கே, ஒவ்வொரு பஸ் ஸ்டாப்பின் பெயர்களை குறிப்பிட்டதுடன், 'பயணிகள் டிக்கெட்களை கேட்டு வாங்கவும், படியில் நின்று பயணிக்க வேண்டாம்...' என்பது போன்ற அறிவிப்புகளையும், ஒலிபரப்பினர்.
இது, பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பயணத்தின் போது, சிலர் தூங்கியபடியும், மற்றும் சிலர் அந்த வழித்தடத்தில், புதிதாக பயணிப்பவர்களாகவும் இருப்பர். இத்தகைய அறிவிப்புகள் இவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.
இதுபோன்ற முயற்சியை மற்ற தனியார் மற்றும் அரசு பேருந்துகளிலும், முக்கியமாக ரயில்களில் செய்தால், மிகவும் பயனுள்ளதாக இருக்குமே செய்வார்களா?
எம்.ஆர்.ஜெயச்சந்திரன், திண்டுக்கல்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
மேற்கோள் செய்த பதிவு: 1215258krishnaamma wrote:பஸ் ஸ்டாப் அறிவிப்பு!
சமீபத்தில், தனியார் பேருந்தில், பழநிக்கு சென்றேன். பேருந்தில், 'டிவி'யில் படம் ஓடியது. திடீரென படத்தை நிறுத்தி, 'ரெட்டியார் சத்திரம் இறங்கும் பயணிகள் தயாராகவும்...' என்ற அறிவிப்பை ஒலிபரப்பினர். அதேபோன்றே, ஆங்காங்கே, ஒவ்வொரு பஸ் ஸ்டாப்பின் பெயர்களை குறிப்பிட்டதுடன், 'பயணிகள் டிக்கெட்களை கேட்டு வாங்கவும், படியில் நின்று பயணிக்க வேண்டாம்...' என்பது போன்ற அறிவிப்புகளையும், ஒலிபரப்பினர்.
இது, பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பயணத்தின் போது, சிலர் தூங்கியபடியும், மற்றும் சிலர் அந்த வழித்தடத்தில், புதிதாக பயணிப்பவர்களாகவும் இருப்பர். இத்தகைய அறிவிப்புகள் இவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.
இதுபோன்ற முயற்சியை மற்ற தனியார் மற்றும் அரசு பேருந்துகளிலும், முக்கியமாக ரயில்களில் செய்தால், மிகவும் பயனுள்ளதாக இருக்குமே செய்வார்களா?
எம்.ஆர்.ஜெயச்சந்திரன், திண்டுக்கல்.
வரவேற்கத் தக்கது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 6 of 40 • 1 ... 5, 6, 7 ... 23 ... 40
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில்
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது !!
» படித்ததில் பிடித்தது...!!
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது !!
» படித்ததில் பிடித்தது...!!
Page 6 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|