புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 5 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 5 I_voting_barபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 5 I_vote_rcap 
30 Posts - 83%
heezulia
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 5 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 5 I_voting_barபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 5 I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 5 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 5 I_voting_barபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 5 I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 5 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 5 I_voting_barபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 5 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 5 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 5 I_voting_barபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 5 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!


   
   

Page 5 of 40 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 22 ... 40  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 23, 2016 10:56 pm

First topic message reminder :

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! ஜாலி ஜாலி ஜாலி


krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?


சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.

அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.

தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.

தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.

முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.

தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.

சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.

இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.

ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.

மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.

ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
மேற்கோள் செய்த பதிவு: 1208345

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 5 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 5 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 5 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 21, 2016 11:41 am

பால் அபிஷேகம் வேண்டாம்!

உடல் நலக்குறைவால், அரசு மருத்துவமனையில், 'அட்மிட்' ஆகியிருந்த உறவினரை காண சமீபத்தில் சென்றிருந்தேன்.

அங்கு, பிரபல நடிகர் ஒருவரது படம் பதித்த அட்டையை, சட்டையில் குத்தியிருந்த அவரது ரசிகர்கள், 10 பேர், ரொட்டி, பிஸ்கட் மற்றும் பழம் அடங்கிய கவரை, நோயாளிகளுக்கு வினியோகம் செய்தபடி இருந்தனர். அவர்களில் ஒருவரிடம், 'என்ன விசேஷம்?' என்று கேட்டதற்கு, 'இன்று எங்கள் நடிகரின், புதிய படம் வெளியாகிறது; அதனால், நோயாளிகளுக்கு இதை வழங்குகிறோம்...' என்றார்.

'கட் - அவுட்'டுக்கு பால் அபிஷேகம் செய்து, பணம் மற்றும் பொருளை வீணாக்காமல், தங்களுக்கும், தம் தலைவருக்கும் நற்பெயர் சம்பாதிக்க அவர்கள் மேற்கொண்ட முயற்சியை மனதார பாராட்டினேன்.

நடிகர்களே... 'கட் - அவுட்'களுக்கு பாலாபிஷேகம் மற்றும் பட்டாசு வெடித்தல் என்று பணத்தை வீணாக்காமல், உங்களது ரசிகர்களையும் இப்படி நற்காரியத்தில் ஈடுபடும்படி அன்பு கட்டளை இடலாமே!
செய்வீர்களா?

உ.குணசீலன்,திருப்பூர்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 21, 2016 11:42 am

தீ விபத்தை தடுப்பது எப்படி?
சமீபத்தில், என் நண்பர் வேலை செய்யும் கம்பெனியில், தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வண்டி வருவதற்கு காலதாமதம் ஆனதால், முற்றிலும் எரிந்து சாம்பலாகியது. தொழிலாளர்கள் சிலர், சிறு காயத்துடன் உயிர் தப்பினர்.

தீயணைப்பு வீரர்கள் வந்து, தீயை அணைத்து முடிந்ததும், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தொழிலாளர்கள், 'முதல்ல, 'ஷார்ட் சர்கியூட்' மூலம், சிறு தீப்பொறி ஏற்பட்டது. அருகில் இருந்த, 'பயர் எக்ஸ்சஸ்சரை' எடுத்து அணைக்க நினைச்ச போது தான், அதை எப்படி பயன்படுத்துறதுன்னு எங்களுக்கு தெரியாமப் போச்சு. அதற்குள், தீ, 'மளமள' வென பரவி விட்டது...' என்று கூறியது, அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.

பல நிறுவனங்களில் ஆயிரக்கணக்கில் செலவு செய்து, தீயணைப்பு கருவிகளை வைத்திருந்தாலும், அவைகளை பயன்படுத்தும் முறை பற்றி சொல்லி தருவது இல்லை. சொல்லிக் கொடுத்திருந்தால், இம்மாதிரி விபத்தை தடுத்திருக்கலாமே! சம்பந்தப்பட்டவர்கள் யோசிப்பரா?

உ.அரசு, புதுச்சேரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 21, 2016 11:44 am

krishnaamma wrote:தீ விபத்தை தடுப்பது எப்படி?

சமீபத்தில், என் நண்பர் வேலை செய்யும் கம்பெனியில், தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வண்டி வருவதற்கு காலதாமதம் ஆனதால், முற்றிலும் எரிந்து சாம்பலாகியது. தொழிலாளர்கள் சிலர், சிறு காயத்துடன் உயிர் தப்பினர்.

தீயணைப்பு வீரர்கள் வந்து, தீயை அணைத்து முடிந்ததும், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தொழிலாளர்கள், 'முதல்ல, 'ஷார்ட் சர்கியூட்' மூலம், சிறு தீப்பொறி ஏற்பட்டது. அருகில் இருந்த, 'பயர் எக்ஸ்சஸ்சரை' எடுத்து அணைக்க நினைச்ச போது தான், அதை எப்படி பயன்படுத்துறதுன்னு எங்களுக்கு தெரியாமப் போச்சு. அதற்குள், தீ, 'மளமள' வென பரவி விட்டது...' என்று கூறியது, அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.

பல நிறுவனங்களில் ஆயிரக்கணக்கில் செலவு செய்து, தீயணைப்பு கருவிகளை வைத்திருந்தாலும், அவைகளை பயன்படுத்தும் முறை பற்றி சொல்லி தருவது இல்லை. சொல்லிக் கொடுத்திருந்தால், இம்மாதிரி விபத்தை தடுத்திருக்கலாமே! சம்பந்தப்பட்டவர்கள் யோசிப்பரா?

உ.அரசு, புதுச்சேரி
மேற்கோள் செய்த பதிவு: 1211968

அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கு...எங்க அப்பர்ட்மெண்ட் இல் சமையல் ரூமில் வைத்துக்கொள்ள சின்ன சைஸ் 'பயர் எக்ஸ்சஸ்சரை' வைத்திருக்காங்க, அதை பயன்படுத்துவது எப்படி என்று எங்களுக்கே கிளாஸ் எடுத்தார்கள்.ஆனால் ஒரு கம்பெனியில் இல் எடுக்கலை என்றால்???????????? அநியாயம் அநியாயம் அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 21, 2016 11:48 am

பேருந்தில் பாட்டு அவசியமா?

சமீபத்தில் நானும், என் கணவரும் மதுரையிலிருந்து தஞ்சாவூருக்கு செல்ல பேருந்து ஏறினோம். பேருந்து புறப்பட்டதிலிருந்து நடத்துனரும், ஓட்டுனரும் பேருந்தில் இணைக்கப்பட்டுள்ள பாட்டு ஒலிபரப்பும் இயந்திரத்தை சரி செய்வதிலும், அதன் ஒலியை கூட்டி குறைத்து சோதனை செய்வதிலுமே கவனமாக இருந்தனர்.

கடைசியில், பாட்டு ஒலி பரப்பும் இயந்திரத்தை சரி செய்து, உச்ச ஒலியில் ஒலிபரப்பினர்.
இதனால், முதியவர்களும், குழந்தைகளும் சிரமப்பட்டனர். மேலும், அந்நேரம் கைபேசி அழைப்பு வந்து, பேசுவதற்கும் தடையாக இருந்தது.

இதுகுறித்து, நடத்துனரிடம் என் கணவர், 'பாட்டின் ஒலியை குறையுங்கள். தொந்தரவாக இருக்கு...' என்றார். ஆனால், நடத்துனரோ, 'எங்கள் வசதிக்காகவும், எங்களுக்கு தூக்கம் வராமல் இருப்பதற்காகவும், பாட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; உங்கள் வசதிக்காக அல்ல...' என்றார். அவரின் இத்தகைய பதிலால், நாங்கள் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.

பொதுவாக, அரசு பேருந்துகளில் பாட்டு ஒலிபரப்பும் இயந்திரத்தை பொருத்துவதில்லை. இதனாலேயே பலர் தனியார் பேருந்துகளில் செல்லாமல், அரசு பேருந்துகளில் பயணிக்கின்றனர். ஆனால், நடத்துனரின் பதிலிலிருந்து பொது மக்களுக்கு அவர் சொல்லும் செய்தி... 'பேருந்தும், அதிலுள்ள வசதிகளும் பொதுமக்களுக்கு அல்ல; நடத்துனர், ஓட்டுனருக்கு மட்டுமே!

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தினால் நல்லது. செய்வரா?

பெயர் வெளியிட விரும்பாத மதுரை வாசகி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 21, 2016 11:49 am

பக்கத்து வீட்டாரிடம் பகைமை பாராட்டாதீர்!

சமீபத்தில், என் தோழியை சந்திக்க, அவளது ஊருக்கு சென்றிருந்தேன். அவளது பக்கத்து வீட்டில் சிறுமி ஒருத்தியின் அழுகைச் சத்தம் கேட்டது. காரணம் கேட்டதற்கு, 'அந்த வீட்டிலுள்ள, 12 வயது சிறுமி திடீரென வயசுக்கு வந்திட்டா.

இவளுக்கு பள்ளிக் கூடத்துல லீவு கிடைக்கலங்கிறதுக்காக, வயசான பாட்டிய மட்டும், இவளுக்கு துணைக்கு வச்சுட்டு, எல்லாரும் வெளியூரில் இருக்கும் சொந்தக்காரங்க வீட்டுக்கு போயிருக்காங்க. இந்த நேரத்துல இப்படி ஆயிட்டதால, வயசான பாட்டியால ஒண்ணும் செய்ய முடியல...' என்றாள் தோழி.

'அக்கம், பக்கத்து வீட்டு பெண்கள் அந்தச் சிறுமிக்கு உதவலாம்ல...' என்றதற்கு, 'அந்த வீட்டுல இருக்கிறவங்க யார் கிட்டயும் பேசவோ, பழகவோ மாட்டாங்க. அக்கம், பக்கத்துல நடக்கும் நல்லது, கெட்டதுகளில் கலந்துக்க மாட்டாங்க. என் மாமனார் இறந்த போது கூட, அந்த வீட்டிலிருந்து யாரும் எட்டிப் பாக்கலை. இதையெல்லாம் மறந்து, மனிதாபிமானத்தோடு அந்த வீட்டிற்கு செல்லலாம்ன்னா, அவங்க வந்ததும், வீட்டிலுள்ள பொருட்களை காணலைன்னு சண்டைக்கு வருவாங்க. ஏற்கனவே, அவர்கள் வீட்டில் காணாமல் போன பொருட்களுக்கு, அக்கம், பக்கத்தவர் மீது போலீஸ் ஸ்டேஷன்ல புகார் தந்து, தொந்தரவு கொடுத்துள்ளனர்...' என்றாள்.

தோழிகளே... நமக்கு எவ்வளவு சொந்த, பந்தங்கள் இருந்தாலும், அருகில் வசிப்பவர்கள் தான் நெருங்கிய உறவினர்கள். இதை உணர்ந்து அவர்களுடன் அன்புடன் பழகுங்கள். ஏனெனில், நமக்கு ஏதாவது உதவி தேவை என்றால், உடனே வருபவர்கள் அவர்கள் தான். பகைமை பாராட்டாமல், நட்புறவுடன் அவர்களின் சுக, துக்கங்களில் பங்கெடுத்தால் தான், அவர்கள் நம் இன்ப, துன்பங்களில் உரிமையுடன் பங்கேற்பர் என்பதை மறந்து விடாதீர்.

பி.கவிதா, கோவை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 21, 2016 11:54 am

எங்கே போகிறோம் நாம்?

ஒரு காலத்தில், பத்தாம் வகுப்பில், 215 மற்றும் பிளஸ் 2வில், 550 மதிப்பெண் எடுத்தாலே மகிழ்ச்சியுடன், ஊரெல்லாம் சாக்லெட் கொடுத்து மகிழ்வர். ஆனால், இன்றோ, 480 - 1,170 மதிப்பெண் எடுத்தும் தற்கொலை முடிவை எடுக்கின்றனரே மாணவர்கள்...

மதிப்பெண் என்பது, மாணவர்களின் திறமைக்கு தரப்படுவது என்பதை தாண்டி, பெற்றோரின், கவுரவம் சார்ந்ததாக மாறிவிட்டதே இதற்கு காரணம்.

இதைத் தவிர்க்க, குழந்தைகளுக்கு, தோல்வியையும் கற்றுத் தர வேண்டும்.

'வீடியோ கேம்' விளையாடும்போது, தோற்கிற நிலை வந்தால், அந்த விளையாட்டை அத்துடன் நிறுத்தி, வேறு ஒரு புது, 'கேம்' விளையாட ஆரம்பித்து விடுகின்றனர், இன்றைய இளம் தலைமுறையினர். விளையாட்டிற்கு கூட, தோற்க கூடாது என்ற எண்ணம் அவர்கள் மனதில் விபரீதமாய் ஆழப்பதிந்துள்ளது.
அக்கால பரமபத விளையாட்டில், பாம்பில் தோல்வியையும், ஏணியில் வெற்றியும் கற்றோம்.

பெற்றோர்களே... கொத்தமல்லி செடியில், தேக்கு மரத்தை எதிர்பார்க்காதீர்கள். ஏனெனில், நம் கண்மணிகள், நம் கருவேப்பிலை கொத்து என்பதை மறந்து விடாதீர். மனதிற்கு நல்ல மருந்து இடுங்கள்!

நா.கி.பிரசாத், கோவை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 21, 2016 11:57 am

//ஒரு காலத்தில், பத்தாம் வகுப்பில், 215 மற்றும் பிளஸ் 2வில், 550 மதிப்பெண் எடுத்தாலே மகிழ்ச்சியுடன், ஊரெல்லாம் சாக்லெட் கொடுத்து மகிழ்வர். ஆனால், இன்றோ, 480 - 1,170 மதிப்பெண் எடுத்தும் தற்கொலை முடிவை எடுக்கின்றனரே மாணவர்கள்...

மதிப்பெண் என்பது, மாணவர்களின் திறமைக்கு தரப்படுவது என்பதை தாண்டி, பெற்றோரின், கவுரவம் சார்ந்ததாக மாறிவிட்டதே இதற்கு காரணம்.

இதைத் தவிர்க்க, குழந்தைகளுக்கு, தோல்வியையும் கற்றுத் தர வேண்டும்.

'வீடியோ கேம்' விளையாடும்போது, தோற்கிற நிலை வந்தால், அந்த விளையாட்டை அத்துடன் நிறுத்தி, வேறு ஒரு புது, 'கேம்' விளையாட ஆரம்பித்து விடுகின்றனர், இன்றைய இளம் தலைமுறையினர். விளையாட்டிற்கு கூட, தோற்க கூடாது என்ற எண்ணம் அவர்கள் மனதில் விபரீதமாய் ஆழப்பதிந்துள்ளது.

அக்கால பரமபத விளையாட்டில், பாம்பில் தோல்வியையும், ஏணியில் வெற்றியும் கற்றோம். //


ம்ம்.. இந்த செய்யலை நான் கூட பார்த்திருக்கிறேன் சில பசங்களிடம் சோகம் .எப்பவுமே , எல்லாத்திலேயுமே ஜெயித்துக்கொண்டே இருக்க முடியாது என்று குழந்தைகளுக்கு புரிய வைக்கணும் நாம் !




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2016 11:53 am

சின்ன வேலையோ, பெரிய வேலையோ...

கோடிகளில் ஒப்பந்தம் எடுத்து, வீடுகள் கட்டித்தரும் ஒப்பந்ததாரர் அவர். சமீபத்தில், ஒரு இடத்தில், துணைக்கு ஒரு ஆளை வைத்து, சிறிய வேலையை செய்தபடி இருந்ததை. ஆச்சரியமாக பார்த்தேன்.
'உடைஞ்சு போன, பழைய, 'ஸ்லாப்'பை எடுத்துட்டு, புதுசு போடணும்ன்னாங்க.

இம்மாதிரி சின்ன சின்ன வேலைகளுக்கு, 'பிட்' வேலைன்னு பேரு. 3,000 முதல், 10,000 ரூபாய் வரைக்குமான, 'பட்ஜெட்'ல நடக்கும். ஒரு மணி நேரத்திலிருந்து அதிகபட்சம் அரை நாளில் முடிந்து விடும். 'மெட்டீரியல்' மற்றும் ஆள் கூலி போக, நமக்கு, 30 சதவீதம் வரை லாபம் கிடைக்கும்.

'பெரிய வாய்ப்பு எப்போதாவதுதான் வரும்; சின்ன வேலைகள் எப்போதும் இருக்கும். வேலையில் சின்ன வேலை, பெரிய வேலைன்னு எதுவும் கிடையாது. வேலை செய்துக்கிட்டிருக்கணும்; பணம் சம்பாதிச்சிட்டிருக்கணும்; அதுதான் முக்கியம்...' என்று, உழைப்பின் மகத்துவத்தை கூறினார்.
எல்லாரும் கற்றுக் கொள்ள வேண்டிய மனோபாவம்; கடைப்பிடிக்க வேண்டிய கொள்கையும் கூட!
செய்வோமா?

எஸ்.ஆனந்த், சென்னை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2016 11:53 am

வாழ்க்கைக்கு உதவாத பொறியியல் பட்டம்!

என் உறவுக்கார பெண், மென்பொருள் துறையில், பொறியியல் பட்டம் பெற்று, வேலைக்கு முயற்சி செய்து வருகிறாள். சமீபத்தில், அவளுக்கு பிரபல நிறுவனத்திடமிருந்து, பி.பி.ஓ., பணிக்கு, நேர்காணல் அழைப்பு வந்தது.

மென்பொருள் துறையில், வேலை கிடைக்காததால், பி.பி.ஓ., வேலைக்காவது முயற்சி செய்வோம் என்று, அப்பெண் நேர்காணலில் கலந்து கொண்டாள். அவளுக்கு துணையாக, நானும் சென்றிருந்தேன். அங்கு, எனக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

மென்பொருள் துறையில் பொறியியல் பட்டம் பெற்ற பலர், அந்த நேர்காணலுக்கு வந்திருந்தனர். அவர்களிடம் பேச்சு கொடுத்த போது, தாங்கள் படித்த துறையில் வேலை எதுவும் கிடைக்காததால், இந்த நேர்காணலுக்கு வந்திருப்பதாக தெரிவித்தனர்.

'பி.பி.ஓ., வேலையும் கிடைக்காவிட்டால், என்ன செய்வீர்கள்...' என்ற என் கேள்விக்கு அவர்களிடமிருந்து, எந்த பதிலும் இல்லை.

மென்பொருள் துறையில், பொறியியல் பட்டம் பெற்றால், அதிகம் சம்பாதிக்கலாம் என்ற நப்பாசையில், ஏதோ ஒரு சுமாரான கல்லூரியில் சேர்ந்து, பட்டம் பெற்று, இன்று வேலைக்காக அல்லாடும் இவர்களின் நிலையை கண்டு, மிகவும் வருந்தினேன்.

சில நாடுகளில் குடும்பத்துக்கு ஒருவர் ராணுவத்தில் பணியாற்றுவர். இன்று, நம் நாட்டிலோ, குடும்பத்திற்கு ஒருவர், பொறியியல் பட்டதாரி!

மாணவர்களே... பொறியியல் மோகத்திலிருந்து வெளியே வாருங்கள்!

ஜெ.கண்ணன், சென்னை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2016 11:54 am

ஓட்டுப் போட கை நீட்டினால்...

தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஜூன் மாதம் சம்பளம் வாங்கும் போது, அதிர்ச்சியாக இருந்தது. காரணம், தேர்தல் அன்று விடுமுறை அளித்ததற்கு, சம்பளத்தை, 'கட்' செய்திருந்தனர்.
எங்கள் நிறுவன மேனேஜரிடம், 'அரசு, சம்பளத்தோடு தானே விடுமுறை அளித்தனர்; ஏன் சம்பளம் தரவில்லை?' என்று எல்லாரும் கேட்டதற்கு, அவர் கூறிய பதில் என்ன தெரியுமா...

'நானும் முதலாளியிடம் கேட்டேன். அவர், எல்லாரும் இலவசமாகவா ஓட்டு போட்டாங்க... ஆயிரம் ஆயிரமா பணத்தை வாங்கிட்டு தானே ஓட்டு போட்டாங்க. அரசியல்வாதிகள் தரும் பணம் எல்லாம், எங்களைப் போன்ற தொழிலதிபர்களிடம் வாங்கிய நிதி தானே... தேர்தலில் லாபம் அடைஞ்சிட்டு, சம்பளம் வேறு கேட்கின்றனரா...' என்றாராம் முதலாளி.

அவர் கூறிய பதில், செருப்பால் அடித்தது போல இருந்தது. ஓட்டு போட கை நீட்டி காசு வாங்கினால், இப்படியெல்லாம் அசிங்கமும், அவமானமும் தான் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.
கடைசி வரை போராடியும், சம்பளம் தரவில்லை எங்கள் முதலாளி.

பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 5 of 40 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 22 ... 40  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக