ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

+10
SK
balakarthik
பாலாஜி
சிவனாசான்
ராஜா
விமந்தனி
கவின்
M.Jagadeesan
ayyasamy ram
krishnaamma
14 posters

Page 40 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40

Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 40 Empty படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Mon May 23, 2016 10:56 pm

First topic message reminder :

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! ஜாலி ஜாலி ஜாலி


krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?


சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.

அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.

தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.

தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.

முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.

தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.

சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.

இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.

ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.

மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.

ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
மேற்கோள் செய்த பதிவு: 1208345

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 40 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 40 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 40 3838410834


Last edited by krishnaamma on Thu Feb 23, 2017 10:22 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 40 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Mon Apr 18, 2022 9:16 pm

ஹெல்மெட்' அணிவதற்கு முன்...

இரு சக்கர வாகனத்தை, 'பார்க்கிங்'கில் வைத்து விட்டு, உறவினர் திருமணத்திற்கு சென்றேன். திருமணம் முடிந்து, ஊர் திரும்ப, 'பார்க்கிங்'கிலிருந்து வாகனத்தை எடுத்து சிறிது துாரம் வந்ததும், தலையில் அணிந்திருந்த, 'ஹெல்மெட்'டுக்குள் ஏதோ ஊர்வது போல இருந்தது.

உடனே, வாகனத்தை ஓரம் கட்டி, 'ஹெல்மெட்'டை கழற்றினேன். அதற்குள் தலையில் ஏதோ கடித்து விட்ட உணர்வு. பதட்டமடைந்து, 'ஹெல்மெட்'டை பார்த்த போது, சிறிய தேள் ஒன்று அதற்குள் இருந்ததைக் கண்டு, அதிர்ச்சியடைந்தேன்.

உடனே, மருத்துவமனைக்கு சென்று, ஊசி போட்டுக் கொண்டேன்.
'ஹெல்மெட்'டின், உள் பக்க துணி கிழிந்திருந்ததால், அந்த ஓட்டைக்குள், தேள் புகுந்திருக்கிறது. 'ஹெல்மெட்'டை தலையில் மாட்டியதும், அழுத்தம் ஏற்பட்டு அது வெளியே வந்து கடித்துள்ளது.

வெயில் காலம் துவங்கி விட்ட நிலையில், வெப்பம் தாங்காமல் புழு, பூச்சி, வண்டு போன்ற விஷ ஜந்துக்கள், இதுபோன்ற வெயில் படாத இடங்களில் ஒளிந்து கொள்கின்றன.

ஆகவே, இரு சக்கர வாகனங்களை வெளியே விட்டு எடுத்துச் செல்லும் முன், 'ஹெல்மெட்'டை, ஒரு முறைக்கு இரண்டு முறை, நன்கு சோதித்த பின்னரே பயன்படுத்துங்கள்!

ம. காவியா, கோவை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 40 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Wed Apr 20, 2022 9:07 pm

புதுவிதமான வழிப்பறி!

சமீபத்தில் என் சகோதரி, கோவில் திருவிழாவுக்கு சென்றிருந்தார். நல்ல கூட்டம். அப்போது, என் சகோதரியின் காலில் ஒரு ஜோடி கொலுசு தட்டுப்பட்டுள்ளது. அது, மணலில் பாதி புதைந்து, பாதி வெளியில் தெரிந்தபடி இருந்துள்ளது.சுற்றும் முற்றும் பார்த்தபடி அதை எடுத்து கையில் உள்ள பையில் போட்டுக் கொண்டாள், என் சகோதரி.

இதை வெகு துாரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு வயதான பாட்டி, 'கீழே இருந்து கொலுசைதானே எடுத்தே... நான் அதை பார்த்து விட்டேன். பயப்படாதே, எனக்கு வேண்டாம். நான் கொலுசு போட மாட்டேன். ஆனால், கொலுசை நீ எடுத்துக் கொள். பாதி பணம் தந்து விடு... இது, 6,000 ரூபாய் இருக்கும்; 3,000 கொடு போதும்...' என்றாள்.உடனே, 3,000 ரூபாய் கொடுத்து விட்டு, கொலுசுடன் வீடு வந்தாள், சகோதரி.

மறுநாள் ஆசையுடன் நகை கடைக்கு சென்று கொலுசை காட்டியுள்ளார்.'இது, வெள்ளி முலாம் பூசப்பட்ட கொலுசு. 30 ரூபாய் கூட பெறாது...' என்று கூறியிருக்கிறார், கடை முதலாளி. தான் ஏமாந்து விட்டோம் என, அப்போது தான் தெரிந்தது சகோதரிக்கு. வாசகர்களே... கீழே கிடக்கும் பொருட்களை எடுக்காதீர்கள். திருடர்களே பொருட்களை கீழே போட்டு விட்டு நாடகம் ஆடுகின்றனர்.

— ஆர். சேஷாத்திரி, சென்னை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 40 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Wed Apr 20, 2022 9:08 pm

பணி ஓய்வுக்கு பின், சேவை பணி!

என் நண்பரின் உறவினர் ஒருவர், நெடுஞ்சாலை துறையில் அதிகாரியாக இருந்து, பணி ஓய்வு பெற்றவர். அந்த அதிகாரியை சந்திக்க அழைத்துச் சென்றார், நண்பர். அது வீடா, இல்லை நர்சரி பண்ணையா என்பது போல, வீட்டுக்கு முன்புற தோட்டத்தில், விதவிதமான செடிகள் வளர்ந்து பசுமையாக காட்சியளித்தது.அதுகுறித்து அந்த அதிகாரியிடம் கேட்டேன்.

நான் பணியில் இருந்தபோது, சாலை விரிவாக்கத்திற்காக, சாலையோரம் வளர்ந்து நின்றிருந்த, பழமையான மரங்களை வேரோடு சாய்க்க வேண்டி வந்தது. என்ன தான் அது எங்கள் பணி என்றாலும், உயிர் மரங்களை வெட்டி போட்டது, என் மனதை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியது.'என் மன உறுத்தல் தீரவும், பாரத்தை இறக்கி வைக்கவும், பணி ஓய்வு பெற்ற நாளிலிருந்தே, பலதரப்பட்ட மரக்கன்றுகளை வளர்த்து, உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அன்பளிப்பாக கொடுத்து வருகிறேன்.'

அதுமட்டுமின்றி, 'ஆல், அரசு, வேம்பு, நாட்டு வாகை, புளியன், நாவல்' என, விதை பந்துகள் தயாரித்து தந்து, சாலையோரங்களிலும், வளர்க்க தோதான இடங்களிலும் விதைக்க வேண்டுகோள் வைத்து வருகிறேன்...' என்றார்.எனக்கு விருப்பமான செடிகளோடு, விதை பந்துகளையும் தந்து, எங்களை வழியனுப்பினார். பணி ஓய்வுக்குப் பிறகு, சேவையை பணியாக செய்து வருபவரை, பாராட்டிவிட்டு வந்தேன்.

— ஆர்.ஜெயசங்கரன், வானுார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 40 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Wed Apr 20, 2022 9:09 pm

ஊழியரின் நினைவாக...

என் தோழியை பார்த்து வர, அருகிலுள்ள அவள் ஊருக்கு சென்றேன். செல்லும் வழியில், அவள் குழந்தைக்காக தின்பண்டங்களை வாங்க, டீக்கடையுடன் கூடிய ஒரு பெட்டிக்கடை முன், வாகனத்தை நிறுத்தினேன்.

அந்த டீக்கடையில், அட்டை ஒன்றில், 'ஊழியரின் நினைவாக' என்று தலைப்பிட்டு, அதன் கீழே, 'குழந்தைகள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கையருக்கு, இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு டீ, காபி, பால் இலவசம்...' என, எழுதப்பட்டிருந்தது.இதுபற்றி, அக்கடை உரிமையாளரிடம் வினவினேன்.

'என் நம்பிக்கையான ஊழியராக, 20 ஆண்டுகள் டீ மாஸ்டராக இக்கடையில் பணியாற்றினார். திடீர் மாரடைப்பில் காலமானவரின் நினைவாக, ஆண்டுதோறும் அவரின் நினைவு நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு, இப்படியொரு உதவியை செய்து வருகிறேன்...' என்றார்.

நினைவஞ்சலி என்றாலே, 'போஸ்டர், பிளெக்ஸ் பேனர்' என்று, பணத்தை விரயமாக்குவோர் மத்தியில், பயனுள்ள வகையில் அஞ்சலி செலுத்தி வரும் அவரை, மனதார பாராட்டினேன்.பிரியமானோர் நினைவாக அஞ்சலி செலுத்துவோர், சற்றே நிதானமாக யோசித்தால், இறந்தவரை பெருமைப்படுத்தும் வண்ணம், ஏதாவது நற்காரியங்களை செய்ய முடியும். சிந்திப்பரா!

-டி.பிரேமா, மதுரை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 40 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Wed Apr 20, 2022 9:10 pm

krishnaamma wrote:ஊழியரின் நினைவாக...

என் தோழியை பார்த்து வர, அருகிலுள்ள அவள் ஊருக்கு சென்றேன். செல்லும் வழியில், அவள் குழந்தைக்காக தின்பண்டங்களை வாங்க, டீக்கடையுடன் கூடிய ஒரு பெட்டிக்கடை முன், வாகனத்தை நிறுத்தினேன்.

அந்த டீக்கடையில், அட்டை ஒன்றில், 'ஊழியரின் நினைவாக' என்று தலைப்பிட்டு, அதன் கீழே, 'குழந்தைகள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கையருக்கு, இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு டீ, காபி, பால் இலவசம்...' என, எழுதப்பட்டிருந்தது.இதுபற்றி, அக்கடை உரிமையாளரிடம் வினவினேன்.

'என் நம்பிக்கையான ஊழியராக, 20 ஆண்டுகள் டீ மாஸ்டராக இக்கடையில் பணியாற்றினார். திடீர் மாரடைப்பில் காலமானவரின் நினைவாக, ஆண்டுதோறும் அவரின் நினைவு நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு, இப்படியொரு உதவியை செய்து வருகிறேன்...' என்றார்.

நினைவஞ்சலி என்றாலே, 'போஸ்டர், பிளெக்ஸ் பேனர்' என்று, பணத்தை விரயமாக்குவோர் மத்தியில், பயனுள்ள வகையில் அஞ்சலி செலுத்தி வரும் அவரை, மனதார பாராட்டினேன்.பிரியமானோர் நினைவாக அஞ்சலி செலுத்துவோர், சற்றே நிதானமாக யோசித்தால், இறந்தவரை பெருமைப்படுத்தும் வண்ணம், ஏதாவது நற்காரியங்களை செய்ய முடியும். சிந்திப்பரா!

-டி.பிரேமா, மதுரை.

சூப்பர் .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 40 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Wed May 25, 2022 8:39 pm

குளிர்பானத்தில், போதைப் பொருள்!
என் தோழியினுடைய, 12 வயது மகள், 7ம் வகுப்பு படிக்கிறாள். ஒரு பிரபலமான பள்ளியில் படிக்கும் அந்த சிறுமிக்கு, படிப்பு மட்டுமில்லாமல் விளையாட்டு, கவிதை, கட்டுரை, ஆடல் - பாடல் என, எல்லாமே அத்துப்படி. இத்தனைக்கும் வகுப்புக்கு, அவள் தான் தலைவி.
திறமையான அந்த குழந்தையின் வாழ்வில், புயல் வீச ஆரம்பித்தது. ஒருநாள், அவளுடைய தோழி ஒருத்தி, 'சாப்ட் ட்ரிங்க்ஸ்' வாங்கி கொடுத்து குடிக்கச் சொல்லியிருக்கிறாள். பிரபலமான கம்பெனியின், பானம் அது. சுவையாக இருந்துள்ளதால், விடுமுறை நாட்களில் கூட, அந்த பானத்தை தன் தந்தையை வாங்கி வரச்செய்து, எல்லாரும் சேர்ந்து அதை பருகுவர்.
'இது, எங்கள் பள்ளிக்கு அருகில் விற்பது போல இல்லை...' என்பாள், அச்சிறுமி.
ஆறு மாத காலத்தில், அந்த பானத்திற்கு அடிமையானவள், சாப்பாடு கூட வேண்டாம், எப்போதும் அதையே சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டாள். இதனால், படிப்பில் கவனம் குறைந்தது. விளையாட்டு, கதை, கட்டுரை எல்லாவற்றிலுமே அவள் கலந்து கொள்ளாமல் நடைபிணமாக மாறி விட்டாள்.
ஒருநாள், நிலைமை மோசமாக, பள்ளி அருகிலிருந்த கடையிலிருந்து அந்த பானத்தை வாங்கி வந்து குடித்துப் பார்த்தார், பெண்ணின் தந்தை. மற்ற இடங்களில் வாங்குவதை விட, வித்தியாசமான சுவையில் இருக்கவே, பரிசோதித்து பார்த்ததில், போதைப் பொருள் கலந்து இருப்பது தெரிந்தது. போதைப் பொருளை கலந்து, பள்ளிக் குழந்தைகளுக்கு விற்று, அடிக்கடி வாங்கும்படி செய்துள்ளார், அந்த கடைக்காரர்.
சுதாரித்து, முறையான மருத்துவ சிகிச்சைக்கு பின், கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் பழைய நிலைக்கு வந்து கொண்டிருக்கிறாள், அச்சிறுமி. பள்ளியிலும் புகார் கொடுத்து, அக்கடைக்காரரை கண்டிக்க சொல்லி இருக்கின்றனர்.
பெற்றோர்களே... இனி, உஷாராக இருங்கள்!
சு. உமா, ஆதிச்சபுரம், திருவாரூர் மாவட்டம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 40 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Wed May 25, 2022 8:40 pm

அச்சிறுமி. பள்ளியிலும் புகார் கொடுத்து, அக்கடைக்காரரை கண்டிக்க சொல்லி இருக்கின்றனர்.



கண்டிக்க சொல்வானேன்??? பிடித்து போலீஸில் தர வேண்டாமா???????? கோபம் கோபம் கோபம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 40 Empty குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Wed May 25, 2022 8:40 pm

குலுக்கல் முறையில் வியாபாரம்!

கட்டடத்திற்கு வெள்ளையடிக்கும் வேலை செய்து வந்தார், நண்பர். ஒருநாள், வெள்ளை அடித்துக் கொண்டிருந்தபோது, சாரம் ஒடிந்து கீழே விழுந்ததில், கால் முறிந்தது.

சில நாட்களிலேயே குணமானாலும், வேலைக்கு செல்ல முடியாத நிலை. அதிக நேரம் உட்காரவோ, நிற்கவோ முடியாது. எனவே, இருந்த இடத்திலேயே செய்யக் கூடிய வேலையை தேடி அலைந்தார்.

எதுவும் அமையாததால், வாடகைக்கு தள்ளு வண்டி பிடித்து, வீட்டு வாசலில் நிறுத்தி, வாழைப்பழம் விற்க துவங்கினார். ஆரம்பத்தில் வியாபாரம் சுமாராக இருந்தது. இதை பெரிய அளவில் கொண்டு வர விரும்பினார்.

வாழைப்பழம் வாங்க வரும் வாடிக்கையாளரிடம், மொபைல் எண்ணை வாங்கிக் கொள்வார்.

அன்று முழுதும் பழம் வாங்கியவர்களின் மொபைல் எண்களை தனித்தனி தாளில் எழுதி, குலுக்குவார். வந்த எண்ணிற்கு போன் செய்து, 'உங்களுக்கு, குலுக்கல் முறையில், 2 கிலோ வாழைப்பழம் இலவசமாக வழங்கப்படுகிறது; வந்து வாங்கிச் செல்லுங்கள்...' என்பார்.

இப்படியே தினம் ஒருவருக்கு, குலுக்கல் முறையில் 2 கிலோ வாழைப்பழம் இலவசமாக தந்து விடுவார். இதனால், வாடிக்கையாளர்கள் அதிகளவில் வரத் துவங்கினர்.

'பழம் விற்க ஆரம்பித்த நாட்களில் இரண்டு தார் பழம் தான் விற்கும். இப்போது ஒரு நாளைக்கு, 20 முதல் 25 தார் வாழைப் பழங்கள் விற்பனையாகிறது. கூலி வேலையில் கிடைத்த சம்பளத்தை விட, பன்மடங்கு லாபம் கிடைக்கிறது. மேலும், வேறு இடத்தில் இன்னொரு கடை ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன்...' என்று கூறியதை கேட்டு, சந்தோஷமாக இருந்தது.

சிறு வியாபாரிகளே... வியாபாரம் ஆகவில்லையே என்று புலம்பாமல், மாற்று யோசனை செய்து, உங்கள் வியாபாரத்தை பெருக்கிக் கொள்ளுங்கள்.

- எம்.எம். முத்தையா, திருப்பூர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 40 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Wed May 25, 2022 8:41 pm

krishnaamma wrote:குலுக்கல் முறையில் வியாபாரம்!

கட்டடத்திற்கு வெள்ளையடிக்கும் வேலை செய்து வந்தார், நண்பர். ஒருநாள், வெள்ளை அடித்துக் கொண்டிருந்தபோது, சாரம் ஒடிந்து கீழே விழுந்ததில், கால் முறிந்தது.

சில நாட்களிலேயே குணமானாலும், வேலைக்கு செல்ல முடியாத நிலை. அதிக நேரம் உட்காரவோ, நிற்கவோ முடியாது. எனவே, இருந்த இடத்திலேயே செய்யக் கூடிய வேலையை தேடி அலைந்தார்.

எதுவும் அமையாததால், வாடகைக்கு தள்ளு வண்டி பிடித்து, வீட்டு வாசலில் நிறுத்தி, வாழைப்பழம் விற்க துவங்கினார். ஆரம்பத்தில் வியாபாரம் சுமாராக இருந்தது. இதை பெரிய அளவில் கொண்டு வர விரும்பினார்.

வாழைப்பழம் வாங்க வரும் வாடிக்கையாளரிடம், மொபைல் எண்ணை வாங்கிக் கொள்வார்.

அன்று முழுதும் பழம் வாங்கியவர்களின் மொபைல் எண்களை தனித்தனி தாளில் எழுதி, குலுக்குவார். வந்த எண்ணிற்கு போன் செய்து, 'உங்களுக்கு, குலுக்கல் முறையில், 2 கிலோ வாழைப்பழம் இலவசமாக வழங்கப்படுகிறது; வந்து வாங்கிச் செல்லுங்கள்...' என்பார்.

இப்படியே தினம் ஒருவருக்கு, குலுக்கல் முறையில் 2 கிலோ வாழைப்பழம் இலவசமாக தந்து விடுவார். இதனால், வாடிக்கையாளர்கள் அதிகளவில் வரத் துவங்கினர்.

'பழம் விற்க ஆரம்பித்த நாட்களில் இரண்டு தார் பழம் தான் விற்கும். இப்போது ஒரு நாளைக்கு, 20 முதல் 25 தார் வாழைப் பழங்கள் விற்பனையாகிறது. கூலி வேலையில் கிடைத்த சம்பளத்தை விட, பன்மடங்கு லாபம் கிடைக்கிறது. மேலும், வேறு இடத்தில் இன்னொரு கடை ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன்...' என்று கூறியதை கேட்டு, சந்தோஷமாக இருந்தது.

சிறு வியாபாரிகளே... வியாபாரம் ஆகவில்லையே என்று புலம்பாமல், மாற்று யோசனை செய்து, உங்கள் வியாபாரத்தை பெருக்கிக் கொள்ளுங்கள்.

- எம்.எம். முத்தையா, திருப்பூர்.
மேற்கோள் செய்த பதிவு: 1362684

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 40 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 40 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum