Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
+10
SK
balakarthik
பாலாஜி
சிவனாசான்
ராஜா
விமந்தனி
கவின்
M.Jagadeesan
ayyasamy ram
krishnaamma
14 posters
Page 34 of 40
Page 34 of 40 • 1 ... 18 ... 33, 34, 35 ... 40
படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
First topic message reminder :
வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே!
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 34 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே!
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
மேற்கோள் செய்த பதிவு: 1208345krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?
சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.
அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.
தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.
தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.
முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.
தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.
சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.
இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.
ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.
மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.
ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 34 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 34 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 34 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
Last edited by krishnaamma on Thu Feb 23, 2017 10:22 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
krishnaamma wrote:வேலியே பயிரை மேயலாமா?
சென்னையில் நடந்த உறவினர் இல்ல திருமணத்திற்கு சென்று விட்டு, கோவையில் வசிக்கும் மகள் குடும்பத்தினரை பார்க்க, எழும்பூரில், எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினேன்.
இரவு, 10:00 மணிக்கு ரயில் கிளம்பியது. டி.டி.ஆர்., வந்து, டிக்கெட் பரிசோதித்த பின் துாங்கலாம் என்று காத்திருந்தேன். நேரம் ஆக ஆக, எங்கள் பெட்டியில் ஒவ்வொருவராக துாங்கத் துவங்கினர். நானும் பொறுமையிழந்து, விளக்கை அணைத்து, படுத்து விட்டேன்.
நள்ளிரவில், இயற்கை உபாதை கழிக்க, கழிப்பறை போய் திரும்பும்போது, கண்ட காட்சி, என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இளம்பெண் ஒருவர், மார்பு சேலை விலகியது தெரியாமல், 'லோயர் பர்த்'தில், அயர்ந்து துாங்கிக் கொண்டிருந்ததை, கள்ளத்தனமாக ரசித்துக் கொண்டிருந்தார், டி.டி.ஆர்., என்னை பார்த்ததும், சட்டென்று சுதாரித்து, 'எல்லாரும் டிக்கெட் காட்டுங்க...' என்றார்.
அகாலத்தில் எழுப்புவதால், ஆழ்ந்த துாக்கம் பறிபோவதோடு, நேரம் கடந்து, டி.டி.ஆர்., தங்கள் பணியை செய்ய முற்படுவது, வேலியே பயிரை தாண்டுவது போல் உள்ளது.
இவர்களை போன்ற, 'ஜொள் மன்னர்'களை பொறுப்புள்ள பதவியில் அமர்த்தும் முன், ரயில்வே நிர்வாகம், தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும்.
- சி. ரகுபதி, திருவண்ணாமலை.
சரிதான் என்றாலும்,பெண்களுக்கும் கொஞ்சம் அடக்கம் வேண்டும்......
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
நாங்களும் வாழ்ந்து காட்டுவோம்!
நாங்களும் வாழ்ந்து காட்டுவோம்!
உறவினர் பெண்ணின் திருமணத்திற்காக, பிளவுஸ் தைக்க கொடுக்க சென்றவளுடன், நானும் சென்றேன். ராசியான கடை என்று ஒரு சிறிய கடைக்குள் நுழைந்தாள். அங்கு தைத்துக் கொண்டிருந்தவர், ஒரு திருநங்கை. அவருக்கு உதவியாக, இன்னொரு திருநங்கை.
'இவங்க விதவிதமான டிசைன்ல, பேஷனா பிளவுஸ் தைச்சு தருவாங்க. அதுவும், கல்யாண பெண்ணுக்கு அலங்காரமா தச்சு தர்ற பிளவுஸ் ரொம்ப அழகா இருக்கும்...' என்று பாராட்டினாள், உறவினப் பெண்.
'எங்களை போல இருக்கிறவங்களா சேர்ந்து, 'சுய நங்கையர் குழு'ன்னு வச்சிருக்கோம். எங்களுக்காக, தமிழக அரசு, நல வாரியம் ஒன்று வைத்து, தொழில் பயிற்சி கொடுக்கிறாங்க.
'ஆட்டோ ஓட்டுதல், டிபன் சென்டர், சோப்பு, நாப்கின் தயாரிக்கிறதுன்னு அவரவருக்கு இஷ்டமான தொழிலை கத்துக்கிறோம். 'டெய்லரிங், ஆரி எம்ப்ராய்டரி'ன்னு கத்துகிட்டு, நான் இந்த தொழில் பண்றேன்.
'வங்கி கடனுக்கும் ஏற்பாடு பண்ணித் தர்றாங்க. கல்யாண பெண்களுக்காக, நான் தைச்சு தர்ற பிளவுஸ் ரொம்ப அழகா, ராசியா இருக்குன்னு என்னைத் தேடி நிறைய வாடிக்கையாளர்கள் வர்றாங்க... 'ஆர்டர்' நிறைய வர்ற சமயத்துல, உதவிக்கு ஆள் வச்சுக்குவேன். மாச செலவு போக, 20 ஆயிரம் ரூபாய் வரை கையில மிஞ்சுது.
'நாங்களும் உங்களைப் போல மனுஷங்க தான். நாங்களும் சுயமாக வாழ்ந்து காட்டுவோம்...' என்றவரின் நிறைவான பேச்சு, அவர் முகத்துக்கு தனி பொலிவை கொடுத்தது.
திருநங்கையர் என்றாலே விலகிப் போவது, கிண்டல் பண்ணுவது என்ற நிலைமை, இவர்களை போன்றவர்களால் மாறிக் கொண்டிருப்பதை சொல்லி, அவரை பாராட்டி வந்தேன்.
என். விஜயலட்சுமி, மதுரை.
உறவினர் பெண்ணின் திருமணத்திற்காக, பிளவுஸ் தைக்க கொடுக்க சென்றவளுடன், நானும் சென்றேன். ராசியான கடை என்று ஒரு சிறிய கடைக்குள் நுழைந்தாள். அங்கு தைத்துக் கொண்டிருந்தவர், ஒரு திருநங்கை. அவருக்கு உதவியாக, இன்னொரு திருநங்கை.
'இவங்க விதவிதமான டிசைன்ல, பேஷனா பிளவுஸ் தைச்சு தருவாங்க. அதுவும், கல்யாண பெண்ணுக்கு அலங்காரமா தச்சு தர்ற பிளவுஸ் ரொம்ப அழகா இருக்கும்...' என்று பாராட்டினாள், உறவினப் பெண்.
'எங்களை போல இருக்கிறவங்களா சேர்ந்து, 'சுய நங்கையர் குழு'ன்னு வச்சிருக்கோம். எங்களுக்காக, தமிழக அரசு, நல வாரியம் ஒன்று வைத்து, தொழில் பயிற்சி கொடுக்கிறாங்க.
'ஆட்டோ ஓட்டுதல், டிபன் சென்டர், சோப்பு, நாப்கின் தயாரிக்கிறதுன்னு அவரவருக்கு இஷ்டமான தொழிலை கத்துக்கிறோம். 'டெய்லரிங், ஆரி எம்ப்ராய்டரி'ன்னு கத்துகிட்டு, நான் இந்த தொழில் பண்றேன்.
'வங்கி கடனுக்கும் ஏற்பாடு பண்ணித் தர்றாங்க. கல்யாண பெண்களுக்காக, நான் தைச்சு தர்ற பிளவுஸ் ரொம்ப அழகா, ராசியா இருக்குன்னு என்னைத் தேடி நிறைய வாடிக்கையாளர்கள் வர்றாங்க... 'ஆர்டர்' நிறைய வர்ற சமயத்துல, உதவிக்கு ஆள் வச்சுக்குவேன். மாச செலவு போக, 20 ஆயிரம் ரூபாய் வரை கையில மிஞ்சுது.
'நாங்களும் உங்களைப் போல மனுஷங்க தான். நாங்களும் சுயமாக வாழ்ந்து காட்டுவோம்...' என்றவரின் நிறைவான பேச்சு, அவர் முகத்துக்கு தனி பொலிவை கொடுத்தது.
திருநங்கையர் என்றாலே விலகிப் போவது, கிண்டல் பண்ணுவது என்ற நிலைமை, இவர்களை போன்றவர்களால் மாறிக் கொண்டிருப்பதை சொல்லி, அவரை பாராட்டி வந்தேன்.
என். விஜயலட்சுமி, மதுரை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
உயிருடன் விளையாடாதீர்!
சமீபத்தில், நண்பரின் வீட்டிற்கு நானும், கணவரும் சென்றிருந்தோம். அங்கே, என் கணவரின் கழுத்து வலி குறித்து பேச்சு வர, குறிப்பிட்ட ஒரு மாத்திரையின் பெயரை சொல்லி, மருந்து கடையில் வாங்கி போட வலியுறுத்தினார், நண்பர்.
டாக்டரின் பரிந்துரை இல்லாமல், மருந்து கடையில் வாங்கிச் சாப்பிடும் வழக்கம் எங்களுக்கு இல்லாததால், அதை தவிர்த்து விட்டோம். அன்றே மருத்துவரிடம் சென்றோம். வேறு ஒரு மருந்தை பரிந்துரை செய்தார், மருத்துவர்.
மருந்து சீட்டை கையில் வாங்கியதும், சிறிது தயக்கத்துடன், நண்பர் பரிந்துரைத்த மாத்திரை பற்றி மருத்துவரிடம் விசாரித்தேன்.
வெகுண்டெழுந்த மருத்துவர், 'உங்களுக்கு யார் அந்த மாத்திரையை பரிந்துரைத்தது...' என, கேள்வி எழுப்பியதோடு, 'அது, குறிப்பிட்ட வலி நிவாரணி மாத்திரை தான். ஆனால், நோயாளியின் வயது, உடல் திறன், நோயின் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டே மாத்திரையை பரிந்துரைப்போம்.
'எங்கேயோ, யாருக்காகவோ பரிந்துரைக்கப்பட்ட மாத்திரையை பயன்படுத்துவது முற்றிலும் தவறு. அதிலும், அந்த மாத்திரை வீரியமிக்கது. டாக்டரின் அறிவுரையில்லாமல் அந்த மாத்திரையை பயன்படுத்தினால் பக்க விளைவுகள் ஏராளம்...' என, எடுத்துரைத்தார்.
நாங்கள் புரிந்துகொண்டோம்.
கண்டதையும், கேட்டதையும் வைத்து, மருத்துவரை போல மருந்துகளை பரிந்துரைத்து, மற்றவர்களின் உயிரோடு விளையாடும் இதுபோன்ற நபர்கள் என்று தான் திருந்துவரோ?
- தனுஜா ஜெயராமன், சென்னை.
சமீபத்தில், நண்பரின் வீட்டிற்கு நானும், கணவரும் சென்றிருந்தோம். அங்கே, என் கணவரின் கழுத்து வலி குறித்து பேச்சு வர, குறிப்பிட்ட ஒரு மாத்திரையின் பெயரை சொல்லி, மருந்து கடையில் வாங்கி போட வலியுறுத்தினார், நண்பர்.
டாக்டரின் பரிந்துரை இல்லாமல், மருந்து கடையில் வாங்கிச் சாப்பிடும் வழக்கம் எங்களுக்கு இல்லாததால், அதை தவிர்த்து விட்டோம். அன்றே மருத்துவரிடம் சென்றோம். வேறு ஒரு மருந்தை பரிந்துரை செய்தார், மருத்துவர்.
மருந்து சீட்டை கையில் வாங்கியதும், சிறிது தயக்கத்துடன், நண்பர் பரிந்துரைத்த மாத்திரை பற்றி மருத்துவரிடம் விசாரித்தேன்.
வெகுண்டெழுந்த மருத்துவர், 'உங்களுக்கு யார் அந்த மாத்திரையை பரிந்துரைத்தது...' என, கேள்வி எழுப்பியதோடு, 'அது, குறிப்பிட்ட வலி நிவாரணி மாத்திரை தான். ஆனால், நோயாளியின் வயது, உடல் திறன், நோயின் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டே மாத்திரையை பரிந்துரைப்போம்.
'எங்கேயோ, யாருக்காகவோ பரிந்துரைக்கப்பட்ட மாத்திரையை பயன்படுத்துவது முற்றிலும் தவறு. அதிலும், அந்த மாத்திரை வீரியமிக்கது. டாக்டரின் அறிவுரையில்லாமல் அந்த மாத்திரையை பயன்படுத்தினால் பக்க விளைவுகள் ஏராளம்...' என, எடுத்துரைத்தார்.
நாங்கள் புரிந்துகொண்டோம்.
கண்டதையும், கேட்டதையும் வைத்து, மருத்துவரை போல மருந்துகளை பரிந்துரைத்து, மற்றவர்களின் உயிரோடு விளையாடும் இதுபோன்ற நபர்கள் என்று தான் திருந்துவரோ?
- தனுஜா ஜெயராமன், சென்னை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
மாற்றி யோசிக்கலாம்!
மகளின் திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்தான், நண்பன்.
அழைப்பிதழில், மணமகன் தேவை என, சிலரது பெயருடன், படிப்பு, பணி செய்யும் இடம் சம்பளம், தொலைபேசி எண்கள் தரப்பட்டிருந்தது. அதேபோல, இன்னொரு பக்கத்தில், மணமகள் தேவை என, சிலரது பெயரும், படிப்பு, பணி செய்யும் இடமும் கொடுக்கப்பட்டிருந்தது.
இதைக்கண்டு வியந்து, 'என்ன நண்பரே... கல்யாண பத்திரிகையிலயே வரன் தேடலா?' என்றேன்.
'ஆமாம் நண்பா... உறவினர்கள் வழியில், சில பெண்களுக்கும், பையன்களுக்கும் வரன் தேடி வருகிறோம். ஆயிரம் பத்திரிகைகள் அச்சடித்துள்ளேன். துாரத்து உறவினர்கள் பலருக்கும் அழைப்பிதழ் கொடுத்துள்ளேன்.
'இதில், பலர் வரன் தேடிக் கொண்டிருக்கலாம். இதற்காக ஆயிரக்கணக்கில் புரோக்கர்களுக்கும், 'மேட்ரிமோனியல்' நிறுவனத்தாருக்கும் பணம் செலவழித்து வரன் பார்ப்பதை விட, எளிதான வழிமுறை என்பதற்காகவே இதை முன்னெடுத்துள்ளேன்...' என்றார்.
நண்பரின் யோசனை சிறப்பாக தோன்றியது. உங்களுக்கு...
பெ.பாண்டியன், காரைக்குடி
மகளின் திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்தான், நண்பன்.
அழைப்பிதழில், மணமகன் தேவை என, சிலரது பெயருடன், படிப்பு, பணி செய்யும் இடம் சம்பளம், தொலைபேசி எண்கள் தரப்பட்டிருந்தது. அதேபோல, இன்னொரு பக்கத்தில், மணமகள் தேவை என, சிலரது பெயரும், படிப்பு, பணி செய்யும் இடமும் கொடுக்கப்பட்டிருந்தது.
இதைக்கண்டு வியந்து, 'என்ன நண்பரே... கல்யாண பத்திரிகையிலயே வரன் தேடலா?' என்றேன்.
'ஆமாம் நண்பா... உறவினர்கள் வழியில், சில பெண்களுக்கும், பையன்களுக்கும் வரன் தேடி வருகிறோம். ஆயிரம் பத்திரிகைகள் அச்சடித்துள்ளேன். துாரத்து உறவினர்கள் பலருக்கும் அழைப்பிதழ் கொடுத்துள்ளேன்.
'இதில், பலர் வரன் தேடிக் கொண்டிருக்கலாம். இதற்காக ஆயிரக்கணக்கில் புரோக்கர்களுக்கும், 'மேட்ரிமோனியல்' நிறுவனத்தாருக்கும் பணம் செலவழித்து வரன் பார்ப்பதை விட, எளிதான வழிமுறை என்பதற்காகவே இதை முன்னெடுத்துள்ளேன்...' என்றார்.
நண்பரின் யோசனை சிறப்பாக தோன்றியது. உங்களுக்கு...
பெ.பாண்டியன், காரைக்குடி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
நண்பரின் நல்லெண்ணம்!
எங்கள் உறவினர், வசதியானவர். மகளின் மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக நடத்தினார். வீட்டிலிருந்து பெண்ணை மண்டபத்திற்கு அழைத்துச் செல்லும்போது, நாட்டுப்புற கலைகளான மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்றவற்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிகழ்வை ரசித்து பார்த்தனர், ஊர் மக்கள். சிறிய திருவிழா நடப்பது போல் இருந்தது.
இதுகுறித்து அவரிடம் கேட்டேன்.
'நாட்டுப்புற கலைகளை மறந்து வருகின்றனர், நம் மக்கள். இன்றைய தலைமுறையினரும், இதுபற்றி தெரிந்து கொள்ள வேண்டும். நாட்டுப்புற கலைஞர்களும் வாழ வேண்டும்; நாட்டுப்புற கலையும் வளர வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாட்டை செய்தேன்...' என்றார்.
- ஏ.சையத், நெல்லை.
எங்கள் உறவினர், வசதியானவர். மகளின் மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக நடத்தினார். வீட்டிலிருந்து பெண்ணை மண்டபத்திற்கு அழைத்துச் செல்லும்போது, நாட்டுப்புற கலைகளான மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்றவற்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிகழ்வை ரசித்து பார்த்தனர், ஊர் மக்கள். சிறிய திருவிழா நடப்பது போல் இருந்தது.
இதுகுறித்து அவரிடம் கேட்டேன்.
'நாட்டுப்புற கலைகளை மறந்து வருகின்றனர், நம் மக்கள். இன்றைய தலைமுறையினரும், இதுபற்றி தெரிந்து கொள்ள வேண்டும். நாட்டுப்புற கலைஞர்களும் வாழ வேண்டும்; நாட்டுப்புற கலையும் வளர வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாட்டை செய்தேன்...' என்றார்.
- ஏ.சையத், நெல்லை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மூத்தோரிடம் பேசினால்...
மூத்தோரிடம் பேசினால்...
சமீபத்தில் உறவினரின் வீட்டுக்கு, மனைவியுடன் சென்றிருந்தேன்.
உறவினர் மற்றும் அவருடைய மனைவி, பிள்ளைகளிடம் நான் பேசிக் கொண்டிருந்தேன். மனைவி மட்டும் உறவினரின் வயதான அம்மாவிடம் உரையாடிக் கொண்டிருந்தார்.
அங்கிருந்து புறப்பட்டு வீடு திரும்பும் வழியில், 'உறவினர் வீட்டு பாட்டியிடம், வெகுநேரம் அப்படி என்ன பேசினாய்?' என்று, மனைவியிடம் கேட்டேன்.
'விருந்தினராக உறவினர் வீடுகளுக்கு செல்லும் பலரும், அவ்வீட்டு பெரியவர்களிடம் கலந்துரையாடுவதை தவிர்க்கின்றனர். ஆனால், மூத்தோரிடம் உரையாடுவது எவ்வளவு உபயோகமானது என்பதை மறந்து விடுகின்றனர். நாம் அவர்களுடன் பேசுவதால், முதலில், யாரும் தம்மோடு பேசுவதில்லை என்ற, மூத்த குடிமக்களின் தனிமைத் துயர் போகும்.
'அடுத்து, அனுபவமிக்கவர்களிடம் இருந்து, குடும்ப நிர்வாகம், வரவு - செலவு மேலாண்மை, கை வைத்தியம் போன்ற நமக்கு தேவையான பயனுள்ள பல தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது. சிலசமயம், நம் பிரச்னைக்கு தீர்வும் கிடைக்கும்...' என்றார்.
மனைவியின் சாமர்த்தியமான செயலை மெச்சினேன்.
பல அரிய அனுபவ தகவல்களின் பெட்டகமாக திகழும், மூத்தோரிடம் மனம் விட்டு பேசுங்கள். அது, அவர்களை மகிழ்விப்பதோடு, நமக்கும் பலனளிக்கும்.
ஆர்.செந்தில்குமார், மதுரை.
சமீபத்தில் உறவினரின் வீட்டுக்கு, மனைவியுடன் சென்றிருந்தேன்.
உறவினர் மற்றும் அவருடைய மனைவி, பிள்ளைகளிடம் நான் பேசிக் கொண்டிருந்தேன். மனைவி மட்டும் உறவினரின் வயதான அம்மாவிடம் உரையாடிக் கொண்டிருந்தார்.
அங்கிருந்து புறப்பட்டு வீடு திரும்பும் வழியில், 'உறவினர் வீட்டு பாட்டியிடம், வெகுநேரம் அப்படி என்ன பேசினாய்?' என்று, மனைவியிடம் கேட்டேன்.
'விருந்தினராக உறவினர் வீடுகளுக்கு செல்லும் பலரும், அவ்வீட்டு பெரியவர்களிடம் கலந்துரையாடுவதை தவிர்க்கின்றனர். ஆனால், மூத்தோரிடம் உரையாடுவது எவ்வளவு உபயோகமானது என்பதை மறந்து விடுகின்றனர். நாம் அவர்களுடன் பேசுவதால், முதலில், யாரும் தம்மோடு பேசுவதில்லை என்ற, மூத்த குடிமக்களின் தனிமைத் துயர் போகும்.
'அடுத்து, அனுபவமிக்கவர்களிடம் இருந்து, குடும்ப நிர்வாகம், வரவு - செலவு மேலாண்மை, கை வைத்தியம் போன்ற நமக்கு தேவையான பயனுள்ள பல தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது. சிலசமயம், நம் பிரச்னைக்கு தீர்வும் கிடைக்கும்...' என்றார்.
மனைவியின் சாமர்த்தியமான செயலை மெச்சினேன்.
பல அரிய அனுபவ தகவல்களின் பெட்டகமாக திகழும், மூத்தோரிடம் மனம் விட்டு பேசுங்கள். அது, அவர்களை மகிழ்விப்பதோடு, நமக்கும் பலனளிக்கும்.
ஆர்.செந்தில்குமார், மதுரை.
Last edited by krishnaamma on Tue Dec 28, 2021 9:41 pm; edited 1 time in total (Reason for editing : மூத்தோரிடம் பேசினால்...)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
நல்ல சிந்தனை!
சமீபத்தில், புதிதாக தொழில் துவங்கிய உறவினரை சந்திக்கச் சென்றேன். அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர், அவர். அவரைப் போலவே ஓய்வு பெற்ற நண்பர்களுடன் சேர்ந்து, நகரத்தின் முக்கிய சாலையில், வாடகைக்கு இடம் பிடித்து, 'மெஸ்' ஒன்றை ஆரம்பித்திருந்தார்.
அவரிடம், 'பணி ஓய்வுக்கு பிறகு, வீட்டில் நிம்மதியாக பொழுதைக் கழிப்பதை விட்டு விட்டு, இப்படி சிரமப்பட வேண்டுமா?' என்றேன்.
அதற்கு, 'பணி ஓய்வு கிடைத்து விட்டது என்பதற்காக, தெம்பாக இருக்கும் உடம்புக்கு ஓய்வு தருவது தவறு. மேலும், எந்த வேலையுமின்றி சும்மாவே வீட்டில் இருப்பது நோய்களுக்கு இடம் கொடுக்கும். தினமும் பலரோடு பழக வாய்ப்புள்ள, இது போன்ற தொழிலில் ஈடுபடுவதால் மனமும், உடலும் சுறுசுறுப்பாக இருக்கும்.
'மேலும், ஓய்வூதியம் அனைத்தையும், வட்டிக்காக வங்கியில், 'பிக்செட் டிபாசிட்' செய்வது மற்றும் 'ரிஸ்க்'கான முதலீடுகளில் ஈடுபடுவதை விடவும், ஆர்வமுள்ள ஏதேனும் தொழிலில் போட்டு, வருமானம் ஈட்ட வேண்டும் என்ற எங்கள் எண்ணத்தில் உருவானது தான், இந்தத் தொழில்...' என்றார்.
அவரோடு பேசி புறப்படும் போது தான், கல்லாவின் பின்புற சுவரில் மாட்டப்பட்டிருந்த, அமெரிக்க தொழிலதிபரும் முதலீட்டாளருமான, 'வாரன் பபெட்'டின் படத்தை கவனித்தேன். அப்படத்தின் அடியில், 'பணத்தை உங்களுக்காக வேலை செய்ய பழக்குங்கள். சேமிப்பதற்காக சேமிக்காதீர்கள்; முதலீட்டிற்காக சேமியுங்கள்' என்ற, அவரது பொன்மொழியும் எழுதப்பட்டிருந்தது.
உறவினரை சந்திக்கச் சென்று, வாழ்க்கைக்கு தேவையான நல்ல சிந்தனையோடு திரும்பினேன்.
-எஸ்.விஜயன், கடலுார்.
சமீபத்தில், புதிதாக தொழில் துவங்கிய உறவினரை சந்திக்கச் சென்றேன். அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர், அவர். அவரைப் போலவே ஓய்வு பெற்ற நண்பர்களுடன் சேர்ந்து, நகரத்தின் முக்கிய சாலையில், வாடகைக்கு இடம் பிடித்து, 'மெஸ்' ஒன்றை ஆரம்பித்திருந்தார்.
அவரிடம், 'பணி ஓய்வுக்கு பிறகு, வீட்டில் நிம்மதியாக பொழுதைக் கழிப்பதை விட்டு விட்டு, இப்படி சிரமப்பட வேண்டுமா?' என்றேன்.
அதற்கு, 'பணி ஓய்வு கிடைத்து விட்டது என்பதற்காக, தெம்பாக இருக்கும் உடம்புக்கு ஓய்வு தருவது தவறு. மேலும், எந்த வேலையுமின்றி சும்மாவே வீட்டில் இருப்பது நோய்களுக்கு இடம் கொடுக்கும். தினமும் பலரோடு பழக வாய்ப்புள்ள, இது போன்ற தொழிலில் ஈடுபடுவதால் மனமும், உடலும் சுறுசுறுப்பாக இருக்கும்.
'மேலும், ஓய்வூதியம் அனைத்தையும், வட்டிக்காக வங்கியில், 'பிக்செட் டிபாசிட்' செய்வது மற்றும் 'ரிஸ்க்'கான முதலீடுகளில் ஈடுபடுவதை விடவும், ஆர்வமுள்ள ஏதேனும் தொழிலில் போட்டு, வருமானம் ஈட்ட வேண்டும் என்ற எங்கள் எண்ணத்தில் உருவானது தான், இந்தத் தொழில்...' என்றார்.
அவரோடு பேசி புறப்படும் போது தான், கல்லாவின் பின்புற சுவரில் மாட்டப்பட்டிருந்த, அமெரிக்க தொழிலதிபரும் முதலீட்டாளருமான, 'வாரன் பபெட்'டின் படத்தை கவனித்தேன். அப்படத்தின் அடியில், 'பணத்தை உங்களுக்காக வேலை செய்ய பழக்குங்கள். சேமிப்பதற்காக சேமிக்காதீர்கள்; முதலீட்டிற்காக சேமியுங்கள்' என்ற, அவரது பொன்மொழியும் எழுதப்பட்டிருந்தது.
உறவினரை சந்திக்கச் சென்று, வாழ்க்கைக்கு தேவையான நல்ல சிந்தனையோடு திரும்பினேன்.
-எஸ்.விஜயன், கடலுார்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
மஞ்சள் நீராட்டு விழா !!
இன்னமும் ஊரறிய இதையெல்லாம் பறைசாற்றிக் கொண்டாடுகிறார்களா?
இன்னமும் ஊரறிய இதையெல்லாம் பறைசாற்றிக் கொண்டாடுகிறார்களா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
மஞ்சள் நீராட்டு விழாவையெல்லாம் தவிர்க்கலாம்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Page 34 of 40 • 1 ... 18 ... 33, 34, 35 ... 40
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில்
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது !!
» படித்ததில் பிடித்தது...!!
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது !!
» படித்ததில் பிடித்தது...!!
Page 34 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|