ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

+10
SK
balakarthik
பாலாஜி
சிவனாசான்
ராஜா
விமந்தனி
கவின்
M.Jagadeesan
ayyasamy ram
krishnaamma
14 posters

Page 33 of 40 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 36 ... 40  Next

Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 33 Empty படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Mon May 23, 2016 10:56 pm

First topic message reminder :

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! ஜாலி ஜாலி ஜாலி


krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?


சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.

அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.

தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.

தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.

முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.

தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.

சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.

இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.

ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.

மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.

ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
மேற்கோள் செய்த பதிவு: 1208345

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 33 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 33 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 33 3838410834


Last edited by krishnaamma on Thu Feb 23, 2017 10:22 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 33 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Tue Sep 22, 2020 9:55 pm

பெண்களுக்கு வலை விரிக்காதீர்!
சமீபத்தில், பல்பொருள் அங்காடிக்கு சென்றிருந்தேன். ஒவ்வொரு பொருளாக தேடித் தேடி எடுப்பது, சற்று சிரமமாக இருந்தது. அதோடு, வயதாகி விட்டதால், சாதாரணமாக நடக்கவே சற்று சிரமமாக இருந்தது.
என் மீது, யாராவது எதிர்பாராது இடித்து, நான் தடுமாறி விட்டால் விபரீதமாகி விடுமே என நினைத்து, அங்கிருந்த இளம் பெண் ஊழியரிடம், என்னிடமிருந்த, 'லிஸ்ட்'டை காண்பித்து, 'இவற்றை எடுத்து தர முடியுமா...' என்று கேட்டேன்.
'நீங்க, இப்படி ஓரமாக இருங்கள். நான் எடுத்து வந்து தருகிறேன்...' என்று கூறி, உதவினாள்.
எல்லாவற்றையும் விரைவில் எடுத்துக் கொடுத்த அவளுக்கு, நன்றி கூறி, 'பரவாயில்லையே... உன் வீட்டில், உனக்கு சின்ன வயசுலேயே திருமணம் செய்து வைத்து விட்டனரே... தீர்க்க சுமங்கலியாய் இரு...' என, வாழ்த்தினேன்.
அவள் உடனே, 'என் கழுத்தில் டாலர் கட்டியுள்ள மஞ்சள் கயிறும், உச்சி பொட்டும், இங்கு வேலை செய்கிற சில வக்கிர ஆண்களின் பருந்து பார்வையிலிருந்து தப்பிக்க தான். சிலர், திருமணமாகாத என்னை போன்ற சின்ன பெண்களிடம், ஆபாச வார்த்தைகளை கூறி, 'சில்மிஷம்' செய்ய முற்படுவதால் தான், இந்த வேஷம்.
'அத்தை சொல்லித் தந்த ஐடியா. அதோடு, எனக்கு, தாய் மாமாவுடன் நேற்று நிச்சயதார்த்தம் நடந்து விட்டது; இன்னும் ஒரு மாதத்தில் திருமணம். மஞ்சள் கயிற்றில், டாலருக்கு பதில் மாங்கல்யம் ஏறிவிடும். பெங்களூரு சென்று விடுவேன்...' என்று கூறி, நகர்ந்து விட்டாள்.
அவள் கூறியதை கேட்டதும், மனதுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. பொருளாதார பிரச்னையால் வேலைக்கு வரும் இளம் பெண்களுக்கு, இப்படியொரு பிரச்னையா...
வக்கிர புத்தியுள்ள ஆண்களே... உங்களுடன் பணிபுரியும் சக இளம்பெண்களுக்கு, விளையாட்டாக கூட வலை விரிக்காதீர்.
- என். கிருஷ்ணமூர்த்தி, சென்னை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 33 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Tue Sep 22, 2020 9:56 pm

krishnaamma wrote:பெண்களுக்கு வலை விரிக்காதீர்!
சமீபத்தில், பல்பொருள் அங்காடிக்கு சென்றிருந்தேன். ஒவ்வொரு பொருளாக தேடித் தேடி எடுப்பது, சற்று சிரமமாக இருந்தது. அதோடு, வயதாகி விட்டதால், சாதாரணமாக நடக்கவே சற்று சிரமமாக இருந்தது.
என் மீது, யாராவது எதிர்பாராது இடித்து, நான் தடுமாறி விட்டால் விபரீதமாகி விடுமே என நினைத்து, அங்கிருந்த இளம் பெண் ஊழியரிடம், என்னிடமிருந்த, 'லிஸ்ட்'டை காண்பித்து, 'இவற்றை எடுத்து தர முடியுமா...' என்று கேட்டேன்.
'நீங்க, இப்படி ஓரமாக இருங்கள். நான் எடுத்து வந்து தருகிறேன்...' என்று கூறி, உதவினாள்.
எல்லாவற்றையும் விரைவில் எடுத்துக் கொடுத்த அவளுக்கு, நன்றி கூறி, 'பரவாயில்லையே... உன் வீட்டில், உனக்கு சின்ன வயசுலேயே திருமணம் செய்து வைத்து விட்டனரே... தீர்க்க சுமங்கலியாய் இரு...' என, வாழ்த்தினேன்.
அவள் உடனே, 'என் கழுத்தில் டாலர் கட்டியுள்ள மஞ்சள் கயிறும், உச்சி பொட்டும், இங்கு வேலை செய்கிற சில வக்கிர ஆண்களின் பருந்து பார்வையிலிருந்து தப்பிக்க தான். சிலர், திருமணமாகாத என்னை போன்ற சின்ன பெண்களிடம், ஆபாச வார்த்தைகளை கூறி, 'சில்மிஷம்' செய்ய முற்படுவதால் தான், இந்த வேஷம்.
'அத்தை சொல்லித் தந்த ஐடியா. அதோடு, எனக்கு, தாய் மாமாவுடன் நேற்று நிச்சயதார்த்தம் நடந்து விட்டது; இன்னும் ஒரு மாதத்தில் திருமணம். மஞ்சள் கயிற்றில், டாலருக்கு பதில் மாங்கல்யம் ஏறிவிடும். பெங்களூரு சென்று விடுவேன்...' என்று கூறி, நகர்ந்து விட்டாள்.
அவள் கூறியதை கேட்டதும், மனதுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. பொருளாதார பிரச்னையால் வேலைக்கு வரும் இளம் பெண்களுக்கு, இப்படியொரு பிரச்னையா...
வக்கிர புத்தியுள்ள ஆண்களே... உங்களுடன் பணிபுரியும் சக இளம்பெண்களுக்கு, விளையாட்டாக கூட வலை விரிக்காதீர்.
- என். கிருஷ்ணமூர்த்தி, சென்னை.

கடவுளே... பெண்கள் எப்படியெல்லம் தங்களை க்காத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது...சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 33 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Tue Sep 22, 2020 9:57 pm

பயனுள்ள பயிற்சி!
சில நாட்களுக்கு முன், விடுமுறை நாளில், தோழியை சந்திக்க, அவள் வீட்டிற்கு சென்றிருந்தேன். வரவேற்ற தோழி, என்னை சமையலறைக்கு அழைத்துச் சென்றாள். அங்கே, தோழியின் பதின்பருவ மகள், சமையல் செய்து கொண்டிருந்தாள்.
சமையலறையில் ஒரு சேரை போட்டு என்னை உட்கார வைத்த தோழி, மகள் அருகே சென்றாள்.
வெங்காயம், தக்காளி, உப்பு, மஞ்சள், மிளகு என, ஒவ்வொன்றையும் என் தோழியிடம் காட்டி, பின், அவற்றை எடுத்து, சாம்பார், ரசம் என, தயாரித்தாள், தோழியின் மகள்.
தோழியும் அருகிலிருந்து அவ்வப்போது திருத்தங்களை கூறி, சமையல் முடித்து, மகளை அனுப்பி வைத்தாள்.
'என்னடி, 'டிரெயினிங்'கா...' என்றேன்.
'ஆமாம்...' என்றவள், 'ஒவ்வொரு விடுமுறை தினத்திலும், விதவிதமாக சமைக்க சொல்லி தருகிறேன். பதிலுக்கு அவள், 'பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், ஆன்லைன் பர்சேஸ்' மற்றும் 'நெட் பேங்கிங்' முதலியவற்றை கற்றுத் தருகிறாள்.
'கால மாற்றத்திற்கு ஏற்ப, நாமும் பல விஷயங்களை கற்றுக்கொள்ளா விட்டால், பின்தங்கி விடுவோம். மேலும், மகளும், நானும் தோழிகள் போல பழகுகிறோம்...' என்றாள்.
இதைக் கேட்ட நான், தோழியை மனதார பாராட்டினேன்.
- கே. ஸ்ரீலதா, சென்னை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 33 Empty சேமிப்பின் அருமை!

Post by krishnaamma Tue Sep 22, 2020 9:57 pm

சேமிப்பின் அருமை!

சமீபத்தில், எங்கள் வீட்டு வேலைக்கார பெண்மணியின் மகளுக்கு திருமணம் நடந்தேறியது.

கூலி வேலை செய்யும் கணவன், இரண்டு வீடுகளில் வேலை செய்து சம்பாதிக்கும், மனைவி, இருவரால், எப்படி ஒரு திருமணத்தை நடத்தி முடிக்க முடிந்தது என, எனக்கு ஒரே வியப்பு. அவளிடமே கேட்டபோது, அவள் சொன்னது தான் இது:

'வீட்டு வேலை செய்து, மாதம், 6,000 ரூபாய் கிடைக்கிறது. ஆனால், மாதம், 2,000 ரூபாய் மட்டுமே கிடைப்பதாக கணவரிடம் பொய் சொல்லி, 4,000 ரூபாய் சேமித்து விடுவேன். மாதம், 6,000 கிடைக்கிறது என சொன்னால், அவர், கூலி வேலைக்கு போகாமல் இருந்து விடுவார். அவர் கொண்டு வரும் கூலி பணத்தை வைத்து, குடும்பம் நடத்தி விடுகிறேன்.

'என் சேமிப்பில், 2 லட்சம் சேர்ந்திருந்தது. மகளிர் குழு மூலம், 50 ஆயிரம் கடன் கிடைத்தது. உங்களை போன்றோரும், உறவினர் மற்றும் நண்பர்களும், 50 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து உதவினர். 3 லட்சம் ரூபாய் செலவில், சிக்கனமாக திருமணத்தை நடத்தி முடித்து விட்டேன்...' என்றாள்.

சேமிப்பு என்ற பழக்கத்தால், மகளின் திருமணத்தை நடத்தி முடித்த, இவளின் கதை, அதிக சம்பளம் வாங்கியும், அனாவசிய ஆடம்பர செலவுகளால், சேமிப்பு இல்லாது, திருமணம் மற்றும் மருத்துவ செலவு சமயங்களில், கடன் வாங்கி அல்லாடும் நம் போன்றோருக்கு, அருமையான படிப்பினை.

சேமித்து, சிறப்பாக வாழ்வோம்!

- அப்ரோஸ் பானு, அரக்கோணம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 33 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Wed Sep 23, 2020 10:07 pm

திராட்சை பழம் கிலோ எவ்வளவு என்றேன்
60 ரூ. என்றார்
அதே கூடையில் உதிர்ந்த திராட்சை ரூ.30.என்றார்
அதற்கும் , இதற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டேன்
இரண்டும் ஒரே ரகம்தான் , இது உதிர்ந்தது - அது கொத்தாக இருக்கிறது
இரண்டும் ஒரே ருசிதான் என்றார்

யோசித்தேன்.......

சேர்ந்து இருப்பதால் தரமும் , விலை உயர்வாகவும் இருக்கிறது
பிரிந்து விட்டால் தரமும் தாழ்ந்துபோய்விடுகிறது.
இது போலத் தானே நட்பும் , உறவும் ..


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 33 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Sat Mar 13, 2021 10:50 pm

வியக்க வைத்த பெண்!
நண்பனின் மகனுக்கு பெண் பார்க்க, நானும், மனைவியும் உடன் சென்றோம். பெண்ணை அனைவருக்கும் பிடித்து விட்டது.
எங்களை வணங்கி, 'என்னை, எல்லாரும் மன்னித்து, இரண்டு நிமிடம் நான் சொல்வதை கேளுங்கள்... கணவராக வரப்போகிறவரை தேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கும் உண்டு.
'என் பெற்றோரை ஒருபோதும் உதாசீனம் செய்ய மாட்டேன். அவர்கள் தேர்வு செய்யும் மாப்பிள்ளையை தான் மணந்து கொள்வேன். மாப்பிள்ளையை, எனக்கு பிடித்து விட்டது.
'ஆனால், இவர் அலுவலகம் முடிந்து, நேராக வீட்டிற்கு வருவதில்லை. இரவு, 7:00 மணி முதல் 9:00 மணி வரை நண்பர்களுடன் சீட்டு விளையாடுகிறார். அதோடு, மதுவும் - சிகரெட்டும் இவருக்கு துணை.
'மிகவும் சிரமப்பட்டு தான், இந்த தகவல்களை சேகரித்தேன். அத்தனையும் உண்மை. சிறிதளவும் பொய் இல்லை. எல்லா கெட்ட பழக்கங்களையும் விட்டால் தான், இவரை திருமணம் செய்து கொள்வேன். இது, என்னுடைய திடமான முடிவு...' என்று கூறி, வீட்டுக்குள் சென்று விட்டாள்.
இப்படி பேசுவாள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அப்பெண் சொன்னது முற்றிலும் உண்மை; எங்களால் மறுக்க முடியவில்லை.
அவளின் துணிச்சலையும், நேர்மையையும் கண்டு வியந்தேன். பெண் சமுதாயம் விழித்துக் கொண்டது! உஷார், ஆண்களே!
- எஸ்.பி.கன்னையா, மானாமதுரை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 33 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Sat Mar 13, 2021 10:50 pm

தேனீர் கடைக்காரரின் தெளிவு!
நண்பர் ஒருவர் தேனீர் கடை வைத்துள்ளார். சமீபத்தில், அவரை காண சென்றிருந்தேன். நலம் விசாரித்து, அவர் தந்த தேனீரை அருந்தியபடியே கடையை நோட்டமிட்டேன்.
கடையின் சுவரில், ஆங்காங்கே நகலெடுத்து ஒட்டப்பட்டிருந்த கையெழுத்து பிரதிகளைப் பார்த்து, அதுபற்றி கேட்டேன்.
'இது, தேர்தல் காலம். மக்களாட்சியின் மகத்துவத்தை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளவும், வாக்காளர் ஒவ்வொருவரும், ஓட்டளிப்பதன் முக்கியத்துவத்தை உணரவும், பணம் வாங்கி, ஓட்டளிப்பதன் பின் விளைவை அறிந்திடவும், என் கைப்பட எழுதிய கருத்துக்களை, நகலெடுத்து ஒட்டி வைத்துள்ளேன்...' என்றார்.
அதிகம் படிக்காத தேனீர் கடைக்காரரே, இவ்வளவு தெளிவாக சிந்திக்கும்போது, மெத்தப் படித்தோர், தங்கள் ஓட்டுகளை பணத்திற்கு விலை பேசுவது சரியா?
வரும் தேர்தலில், கண்மூடித்தனமாகவோ, காசு வாங்கிக் கொண்டோ ஓட்டளிக்க எண்ணாமல், நாட்டின் நலன், எதிர்கால வளர்ச்சி குறித்து சிந்தித்து, ஓட்டளியுங்கள்.
அவசியம் அனைவரும், ஓட்டளிக்கும் கடமையை நிறைவேற்றுங்கள்.
— ஆர். செந்தில்குமார், மதுரை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 33 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Sat Mar 13, 2021 10:54 pm

நண்பரின் நல்லெண்ண முயற்சி!
எங்கள் பகுதியில், புத்தகம், 'கைடு' மற்றும் எழுது பொருட்கள் விற்பனையகம் வைத்திருக்கும் நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். 'கடையில் பகுதி நேரம் பணிபுரிய, கல்லுாரி மாணவ - மாணவியர் இருவர் தேவை; தெரிந்த ஏழை பிள்ளைகள் இருந்தால் கூறுங்கள்...' என்றார்.
பகுதி நேர பணிக்கு, கல்லுாரி மாணவ - மாணவியரை தேர்ந்தெடுக்கும் காரணம் கேட்டேன்.
'உழைத்து, ஊதியம் ஈட்டியபடியே பயிலும் அவர்களுக்கு ஊக்கம் கிடைப்பதோடு, குடும்பத்திற்கும் உதவ முடியும். மேலும், வீண் பொழுதுபோக்குகளில் மனதை அலைபாய விடாமல், இங்கிருக்கும் புத்தகங்களை இலவசமாகவே படித்து, அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராக முடியும்.
'ஏற்கனவே, இங்கு பகுதி நேரம் பணிபுரிந்த ஆறு மாணவ - மாணவியர், அவ்வாறு படித்து, போட்டி தேர்வெழுதி, அரசு பணிக்கு சென்றுள்ளனர். அதனால் தான், கல்லுாரி மாணவ - மாணவியரை பணிக்கு அமர்த்துகிறேன்...' என்றார்.
தங்கள் தொழிலுக்கு உதவியாக ஆட்களை அமர்த்தி, அடிமை போல, வேலை வாங்குவோர் மத்தியில், வித்தியாசமானவராகவும், மனிதாபிமானியாகவும் விளங்கும் நண்பரின் செயலை மெச்சினேன்.
தெரிந்த, மாணவ - மாணவியரை அனுப்புவதாக உறுதியளித்தேன். மேலும், அவரது நல்லெண்ண முயற்சி தொடர வாழ்த்து கூறி வந்தேன்.
- சி. அருள்மொழி, கோவை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 33 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Sat Mar 13, 2021 10:54 pm

காலி மனையில், பசுஞ்சோலைகள்...
எங்கள் தெருவில், 10 சென்ட் காலி மனை ஒன்றில், புதர் மண்டி, கருவேல மரங்கள் மட்டுமின்றி, இதர செடிகளும் இருந்தன; இதனால், விஷ பூச்சிகளின் தொல்லையும் அதிகமாக இருந்தது.
'காலி மனையை, வீணாக இப்படி போட்டு வைப்பதை விட, மனையின் உரிமையாளரிடம் பேசி, சுத்தப்படுத்தி, வேலி போட்டு வைக்கலாம் அல்லது காய்கறி, கீரை வகைகள், பயனுள்ள செடிகளை நடலாம்.
'அவரவர் சக்திக்கேற்ப உடல் உழைப்பால் பயிர் செய்து, வருகின்ற பலனை பங்கீட்டு அனுபவித்து கொள்வதோடு, இட உரிமையாளருக்கும் அவைகளை கொடுத்து உதவலாம். இடமும், தோட்டம் போல் காட்சியளிக்கும்; உடல் உழைப்பால் நாமும் உடற்பயிற்சி செய்தது போல் இருக்கும்...' என்றனர், பகுதி மக்கள். உடனே, மனையின் உரிமையாளரை அணுகினோம்.
'இந்த இடத்தில், நான் வீடு கட்டப் போவதில்லை. முதலீட்டுக்காக தான் வாங்கிப் போட்டுள்ளேன். சும்மா கிடக்கும் இடத்தை, பயனுள்ளதாய் மாற்றி அமைத்துக் கொள்வதில், எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை...' என்றார்.
தற்போது, அந்த இடத்தை சுத்தப்படுத்தி, காய்கறி மற்றும் கீரை வகைகளை விளைவித்ததன் மூலம், இப்பகுதி மக்கள் மட்டுமின்றி, நானும் பயன்பெறுகிறேன். வாசகர்களே... உங்கள் பகுதியில், காலி மனைகள் இருந்தால், முறைப்படி உரிமையாளரிடம் பேசி, பசுஞ்சோலைகளாக மாற்றி, நீங்களும் பயன் பெறுங்கள்!
— கே. ஜெகதீசன், கோவை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 33 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Sat Mar 13, 2021 10:54 pm

வேலியே பயிரை மேயலாமா?
சென்னையில் நடந்த உறவினர் இல்ல திருமணத்திற்கு சென்று விட்டு, கோவையில் வசிக்கும் மகள் குடும்பத்தினரை பார்க்க, எழும்பூரில், எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினேன்.
இரவு, 10:00 மணிக்கு ரயில் கிளம்பியது. டி.டி.ஆர்., வந்து, டிக்கெட் பரிசோதித்த பின் துாங்கலாம் என்று காத்திருந்தேன். நேரம் ஆக ஆக, எங்கள் பெட்டியில் ஒவ்வொருவராக துாங்கத் துவங்கினர். நானும் பொறுமையிழந்து, விளக்கை அணைத்து, படுத்து விட்டேன்.
நள்ளிரவில், இயற்கை உபாதை கழிக்க, கழிப்பறை போய் திரும்பும்போது, கண்ட காட்சி, என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இளம்பெண் ஒருவர், மார்பு சேலை விலகியது தெரியாமல், 'லோயர் பர்த்'தில், அயர்ந்து துாங்கிக் கொண்டிருந்ததை, கள்ளத்தனமாக ரசித்துக் கொண்டிருந்தார், டி.டி.ஆர்., என்னை பார்த்ததும், சட்டென்று சுதாரித்து, 'எல்லாரும் டிக்கெட் காட்டுங்க...' என்றார்.
அகாலத்தில் எழுப்புவதால், ஆழ்ந்த துாக்கம் பறிபோவதோடு, நேரம் கடந்து, டி.டி.ஆர்., தங்கள் பணியை செய்ய முற்படுவது, வேலியே பயிரை தாண்டுவது போல் உள்ளது.
இவர்களை போன்ற, 'ஜொள் மன்னர்'களை பொறுப்புள்ள பதவியில் அமர்த்தும் முன், ரயில்வே நிர்வாகம், தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும்.
- சி. ரகுபதி, திருவண்ணாமலை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 33 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 33 of 40 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 36 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum