Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
+10
SK
balakarthik
பாலாஜி
சிவனாசான்
ராஜா
விமந்தனி
கவின்
M.Jagadeesan
ayyasamy ram
krishnaamma
14 posters
Page 28 of 40
Page 28 of 40 • 1 ... 15 ... 27, 28, 29 ... 34 ... 40
படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
First topic message reminder :
வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே!
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 28 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே!
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
மேற்கோள் செய்த பதிவு: 1208345krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?
சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.
அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.
தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.
தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.
முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.
தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.
சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.
இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.
ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.
மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.
ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 28 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 28 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 28 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
Last edited by krishnaamma on Thu Feb 23, 2017 10:22 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
அரசு ஆவன செய்யுமா?
நம்ம ஊரு போலாகுமா?
மேலை நாடுகளின் கலாசாரத்தையே உயர்வான நாகரிகமாக கருதி, மக்கள் உடை, சிகை அலங்காரம், கல்வி, உணவு வரை பின்பற்றுகின்றனர்.
மேலும், காலையில் ஓட்ஸ் முதல் இரவு பீட்சா வரை சாப்பிட்டவர்கள், வியாதிகள் பெருகிய பின், பீதியாகி, எந்த ஊரு போனாலும், நம் ஊரு போலாகுமா என்பது போல், அலோபதியை வெறுத்து, பாட்டி கால வாழ்க்கை முறையான, சித்த மருத்துவம் மீது மோகம் கொண்டுள்ளனர்.
செக்கு எண்ணெய்க்கு திடீர் மவுசு, ஓட்டல்களில், 'விறகு அடுப்பில் தான் சமைக்கிறோம்' என்று விளம்பரம் செய்கின்றனர்.
வீதிக்கு வீதி ஆர்கானிக், சிறு தானிய கடைகள் மற்றும் உப்பு, கரி மற்றும் வேம்பு சேர்த்த பற்பசை...இந்த மாற்றம் மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனால், உள்ளூர் காய்கறி, செக்கு எண்ணெய், தானியங்களை, ஆர்கானிக் என்ற பெயரில், தனியார் வணிக நிறுவனங்கள், அதிக விலை வைத்து கொள்ளையடிக்கின்றன.
இந்த கொள்ளையை தடுக்க, கிராமங்களில் செக்கு எண்ணெய் தொழிலை ஊக்குவிக்கலாம்; மலைவாழ் மக்களின், சிறு தானியங்களை, அரசே கொள்முதல் செய்து, ரேஷனில் கொடுக்கலாம்.
இதனால் நம் மக்களும் பொருளாதார வளர்ச்சி பெறுவர்.
அரசு ஆவன செய்யுமா?
மல்லிகா அன்பழகன், சென்னை
மேலை நாடுகளின் கலாசாரத்தையே உயர்வான நாகரிகமாக கருதி, மக்கள் உடை, சிகை அலங்காரம், கல்வி, உணவு வரை பின்பற்றுகின்றனர்.
மேலும், காலையில் ஓட்ஸ் முதல் இரவு பீட்சா வரை சாப்பிட்டவர்கள், வியாதிகள் பெருகிய பின், பீதியாகி, எந்த ஊரு போனாலும், நம் ஊரு போலாகுமா என்பது போல், அலோபதியை வெறுத்து, பாட்டி கால வாழ்க்கை முறையான, சித்த மருத்துவம் மீது மோகம் கொண்டுள்ளனர்.
செக்கு எண்ணெய்க்கு திடீர் மவுசு, ஓட்டல்களில், 'விறகு அடுப்பில் தான் சமைக்கிறோம்' என்று விளம்பரம் செய்கின்றனர்.
வீதிக்கு வீதி ஆர்கானிக், சிறு தானிய கடைகள் மற்றும் உப்பு, கரி மற்றும் வேம்பு சேர்த்த பற்பசை...இந்த மாற்றம் மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனால், உள்ளூர் காய்கறி, செக்கு எண்ணெய், தானியங்களை, ஆர்கானிக் என்ற பெயரில், தனியார் வணிக நிறுவனங்கள், அதிக விலை வைத்து கொள்ளையடிக்கின்றன.
இந்த கொள்ளையை தடுக்க, கிராமங்களில் செக்கு எண்ணெய் தொழிலை ஊக்குவிக்கலாம்; மலைவாழ் மக்களின், சிறு தானியங்களை, அரசே கொள்முதல் செய்து, ரேஷனில் கொடுக்கலாம்.
இதனால் நம் மக்களும் பொருளாதார வளர்ச்சி பெறுவர்.
அரசு ஆவன செய்யுமா?
மல்லிகா அன்பழகன், சென்னை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
மேற்கோள் செய்த பதிவு: 1286683krishnaamma wrote:இது, வித்தியாசம்...
உறவினர் இல்ல கிரகப்பிரவேசத்திற்கு சென்றிருந்தோம்; வழக்கம்போல விழா முடிந்த பின், வந்திருந்தோர், காலை உணவுக்கு பின், அவரவர் வாங்கி வந்திருந்த, பரிசு பொருட்களையும், மொய் கவர்களையும் கொடுத்து, கிளம்ப தயாராயினர்.
வீடு கிரகப்பிரவேசம் நடத்தியவர்கள், வந்திருந்த விருந்தினர்களுக்கு, கண்ணை கவரும் விதத்தில், அழகிய சிறு பெட்டி ஒன்றை, 'ரிட்டன் கிப்ட்' ஆக வழங்கினர்.
உள்ளே என்ன இருக்கும் என்ற ஆவலில் வீடு சென்றதும் பிரித்து பார்த்தோம்; அதனுள், ஒரு விதைப் பந்தும், அச்சிட்ட சிறு குறிப்பும் இருந்தது. அதில், இது, என்ன மரத்தின் விதை என்றும், 'வீட்டில் பயிரிட இடம் இல்லாதோர், கோவில், நெடுஞ்சாலை ஓரம், வயல், ஆறு, வாய்கால் கரையோரம் மற்றும் இடைஞ்சல் இல்லாத பொது இடங்களில் எறிந்தால், மழைக் காலங்களில், இயற்கையாகவே வளரும் தன்மையுள்ளது; நாடு மழை வளம்பெற, மரம் வளர்க்க எங்களால் ஆன சிறு உதவி... என, அச்சிடப்பட்டிருந்தது.
திருமணம் மற்றும் விசேஷங்களின் போது, மரக்கன்று, பூச்செடிகள் தருவதை பார்த்திருக்கிறோம்; ஆனால், இது, வித்தியாசமானதாக இருந்தது.
— எம்.பாலச்சந்திரன், கன்னியாகுமரி.
அருமையான முயற்சி....பாராட்டுக்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
இரவு நேரம் காரில் பயணம் செய்கிறீர்களா?
இரவு நேரத்தில் நெடுஞ்சாலையில் காரில் பயணம் செய்யும் போது, கார் கண்ணாடியில் ஏதோ விழுந்து, நீங்கள் தொடர்ந்து காரை ஓட்ட முடியாமல் போனால், உடனே காரை நிறுத்தி விடாதீர்கள். காரின் வேகத்தை குறைத்து, கொஞ்சம் சமாளித்து, தொடர்ந்து காரை ஓட்டுங்கள். சில கி.மீ., தூரம் சென்ற பின், காரை நிறுத்தி, என்ன ஏது என்று பாருங்கள்; உடனே இறங்கினால், கொள்ளையர்களிடம் சிக்கி கொள்வீர்.
சமீபகாலமாக, நெடுஞ்சாலைகளில் காரில் பயணம் செய்பவர்களிடம், ஒரு நூதன கொள்ளை நடந்து வருகிறது... கொள்ளையர்கள் ஒளிந்திருந்து, கார் கண்ணாடி மீது, அழுகிய முட்டையை வீசுகின்றனர்.
கார் கண்ணாடியை சரியாக பார்க்க முடியாமல், காரை நிறுத்தி, நீங்கள் கீழே இறங்கினால், உங்கள் கதி அதோ கதி தான். உங்கள் பணம், நகை, மொபைல்போன் போன்றவற்றை கொள்ளையர்கள் பிடுங்கிக் கொள்வர். சமயத்தில், காரையும் ஓட்டி சென்று விடுவர்.
கார் கண்ணாடியை துடைக்கும், 'வைப்பரை'யும், இந்த சமயத்தில் உபயோகப்படுத்தக் கூடாது. அதை உபயோகப்படுத்தினால், அழுகிய முட்டை, கண்ணாடி முழுவதும் பரவி, பாதை சுத்தமாக தெரியாமல் போய் விடும்.
இரவு நேரத்தில், நெடுஞ்சாலையில் காரில் பயணம் செய்பவர்கள், இந்த புது வித கொள்ளையில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
ஜெ.கண்ணன், சென்னை.
இரவு நேரத்தில் நெடுஞ்சாலையில் காரில் பயணம் செய்யும் போது, கார் கண்ணாடியில் ஏதோ விழுந்து, நீங்கள் தொடர்ந்து காரை ஓட்ட முடியாமல் போனால், உடனே காரை நிறுத்தி விடாதீர்கள். காரின் வேகத்தை குறைத்து, கொஞ்சம் சமாளித்து, தொடர்ந்து காரை ஓட்டுங்கள். சில கி.மீ., தூரம் சென்ற பின், காரை நிறுத்தி, என்ன ஏது என்று பாருங்கள்; உடனே இறங்கினால், கொள்ளையர்களிடம் சிக்கி கொள்வீர்.
சமீபகாலமாக, நெடுஞ்சாலைகளில் காரில் பயணம் செய்பவர்களிடம், ஒரு நூதன கொள்ளை நடந்து வருகிறது... கொள்ளையர்கள் ஒளிந்திருந்து, கார் கண்ணாடி மீது, அழுகிய முட்டையை வீசுகின்றனர்.
கார் கண்ணாடியை சரியாக பார்க்க முடியாமல், காரை நிறுத்தி, நீங்கள் கீழே இறங்கினால், உங்கள் கதி அதோ கதி தான். உங்கள் பணம், நகை, மொபைல்போன் போன்றவற்றை கொள்ளையர்கள் பிடுங்கிக் கொள்வர். சமயத்தில், காரையும் ஓட்டி சென்று விடுவர்.
கார் கண்ணாடியை துடைக்கும், 'வைப்பரை'யும், இந்த சமயத்தில் உபயோகப்படுத்தக் கூடாது. அதை உபயோகப்படுத்தினால், அழுகிய முட்டை, கண்ணாடி முழுவதும் பரவி, பாதை சுத்தமாக தெரியாமல் போய் விடும்.
இரவு நேரத்தில், நெடுஞ்சாலையில் காரில் பயணம் செய்பவர்கள், இந்த புது வித கொள்ளையில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
ஜெ.கண்ணன், சென்னை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
ஆயாம்மாக்களை கவுரவித்த மாணவர்கள்!
தனியார் பள்ளி ஆசிரியையாக பணிபுரிகிறேன், நான். பள்ளி ஆண்டு விழாவில், இங்கு படித்த முன்னாள் மாணவர்களை, ஆண்டு அடிப்படையில் வரவழைத்து, விழா நடத்துவது வழக்கம். அவர்களும், தம்மை உருவாக்கிய, செதுக்கிய, ஏணியாக இருந்த ஆசிரியர்களை பெருமைப்படுத்தி கவுரவிப்பர்.
இந்த ஆண்டு நடந்த விழாவில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள், பள்ளியில் இன்று வரை, ஆயாம்மாவாக வேலை பார்க்கும் மூன்று பெண்களை மேடைக்கு அழைத்தனர்.
'எங்களை சிறந்த நிலைக்கு உருவாக்கியது ஆசிரியர்கள் தான். அதே சமயம், நாங்கள், எல்.கே.ஜி.,யில் சேர்ந்தபோது, கழிவறை சென்றால் கழுவி விடுவது, சாப்பாடு ஊட்டி விடுவது, உடல்நிலை சரியில்லை என்றால், அன்பாகவும், ஆதரவாகவும், ஒரு தாயாக இருந்து எங்களை கவனித்துக் கொண்டோர், இவர்கள் தான். எனவே, இவர்களையும் மறக்காமல் கவுரவிக்க ஏற்பாடு செய்தோம்...' என்றனர்.
முன்னாள் மாணவர்கள் சார்பில், மூன்று பெண்களுக்கும், தலா, 0.5 சவரன், தோடு வாங்கி கொடுத்து, மேடையிலேயே அதை அணிய வைத்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத அவர்களின் கண்களில் கண்ணீர் பெருகியது. மாணவர்களின் வித்தியாசமான இச்செயலால், பள்ளி வளாகமே அதிர்ந்தது. ஆசிரியர்களும், அந்த மாணவர்களை பாராட்டினர்.
மாணவர்களின் வெற்றிக்கு பின், ஆசிரியர்கள் மட்டுமின்றி, ஆயாம்மாக்களும் இருக்கின்றனர் என்பதை மறுக்க முடியுமா!
— வி.சாந்தி, சென்னை.
தனியார் பள்ளி ஆசிரியையாக பணிபுரிகிறேன், நான். பள்ளி ஆண்டு விழாவில், இங்கு படித்த முன்னாள் மாணவர்களை, ஆண்டு அடிப்படையில் வரவழைத்து, விழா நடத்துவது வழக்கம். அவர்களும், தம்மை உருவாக்கிய, செதுக்கிய, ஏணியாக இருந்த ஆசிரியர்களை பெருமைப்படுத்தி கவுரவிப்பர்.
இந்த ஆண்டு நடந்த விழாவில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள், பள்ளியில் இன்று வரை, ஆயாம்மாவாக வேலை பார்க்கும் மூன்று பெண்களை மேடைக்கு அழைத்தனர்.
'எங்களை சிறந்த நிலைக்கு உருவாக்கியது ஆசிரியர்கள் தான். அதே சமயம், நாங்கள், எல்.கே.ஜி.,யில் சேர்ந்தபோது, கழிவறை சென்றால் கழுவி விடுவது, சாப்பாடு ஊட்டி விடுவது, உடல்நிலை சரியில்லை என்றால், அன்பாகவும், ஆதரவாகவும், ஒரு தாயாக இருந்து எங்களை கவனித்துக் கொண்டோர், இவர்கள் தான். எனவே, இவர்களையும் மறக்காமல் கவுரவிக்க ஏற்பாடு செய்தோம்...' என்றனர்.
முன்னாள் மாணவர்கள் சார்பில், மூன்று பெண்களுக்கும், தலா, 0.5 சவரன், தோடு வாங்கி கொடுத்து, மேடையிலேயே அதை அணிய வைத்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத அவர்களின் கண்களில் கண்ணீர் பெருகியது. மாணவர்களின் வித்தியாசமான இச்செயலால், பள்ளி வளாகமே அதிர்ந்தது. ஆசிரியர்களும், அந்த மாணவர்களை பாராட்டினர்.
மாணவர்களின் வெற்றிக்கு பின், ஆசிரியர்கள் மட்டுமின்றி, ஆயாம்மாக்களும் இருக்கின்றனர் என்பதை மறுக்க முடியுமா!
— வி.சாந்தி, சென்னை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
மேற்கோள் செய்த பதிவு: 1287130krishnaamma wrote:ஆயாம்மாக்களை கவுரவித்த மாணவர்கள்!
தனியார் பள்ளி ஆசிரியையாக பணிபுரிகிறேன், நான். பள்ளி ஆண்டு விழாவில், இங்கு படித்த முன்னாள் மாணவர்களை, ஆண்டு அடிப்படையில் வரவழைத்து, விழா நடத்துவது வழக்கம். அவர்களும், தம்மை உருவாக்கிய, செதுக்கிய, ஏணியாக இருந்த ஆசிரியர்களை பெருமைப்படுத்தி கவுரவிப்பர்.
இந்த ஆண்டு நடந்த விழாவில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள், பள்ளியில் இன்று வரை, ஆயாம்மாவாக வேலை பார்க்கும் மூன்று பெண்களை மேடைக்கு அழைத்தனர்.
'எங்களை சிறந்த நிலைக்கு உருவாக்கியது ஆசிரியர்கள் தான். அதே சமயம், நாங்கள், எல்.கே.ஜி.,யில் சேர்ந்தபோது, கழிவறை சென்றால் கழுவி விடுவது, சாப்பாடு ஊட்டி விடுவது, உடல்நிலை சரியில்லை என்றால், அன்பாகவும், ஆதரவாகவும், ஒரு தாயாக இருந்து எங்களை கவனித்துக் கொண்டோர், இவர்கள் தான். எனவே, இவர்களையும் மறக்காமல் கவுரவிக்க ஏற்பாடு செய்தோம்...' என்றனர்.
முன்னாள் மாணவர்கள் சார்பில், மூன்று பெண்களுக்கும், தலா, 0.5 சவரன், தோடு வாங்கி கொடுத்து, மேடையிலேயே அதை அணிய வைத்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத அவர்களின் கண்களில் கண்ணீர் பெருகியது. மாணவர்களின் வித்தியாசமான இச்செயலால், பள்ளி வளாகமே அதிர்ந்தது. ஆசிரியர்களும், அந்த மாணவர்களை பாராட்டினர்.
மாணவர்களின் வெற்றிக்கு பின், ஆசிரியர்கள் மட்டுமின்றி, ஆயாம்மாக்களும் இருக்கின்றனர் என்பதை மறுக்க முடியுமா!
— வி.சாந்தி, சென்னை.
அருமை அருமை அருமை......
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
வறுமையை வென்ற திறமை!
சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற நான், காய்கறி வாங்கி வர, கடைக்கு சென்றேன். காலை, 7:00 மணியளவில், குறிப்பிட்ட அந்த கடையில் மட்டும் ஏக கூட்டம். கூட்டத்தின் காரணம் அறிந்ததும், வியப்பும், ஆச்சரியமும் அளித்தது.
அப்போது தான் பறித்த காய்கறி விற்பனை ஒருபுறம் என்றால், மறுபுறம், கீரைகள், வாழைத்தண்டு, கேரட், அவரை மற்றும் பீன்ஸ் ஆகியவை, நறுக்கி தரப்பட்டது.
ஒரு மணி நேரத்தில் சுடிதார் தைத்து கொடுப்பது போல், காய்கறி வாங்கி கொடுத்துச் சென்றால், கழுவி சுத்தபடுத்தி நறுக்கி தருகின்றனர். சாம்பார், கூட்டு, பொரியலுக்கு தேவையான காய்கறிகளை, 15 நிமிடம் முதல், ஒரு மணி நேரத்திற்குள் நறுக்கி, அதற்கு ஆகும் நேரம் மற்றும் அளவை பொறுத்து, விலை நிர்ணயிக்கின்றனர்.
விசாரித்ததில், அவர்களின், 'கேட்டரிங் சர்வீஸ்' பிரபலம் என்பதால், வேலை கேட்டு வரும், வறுமையில் வாடும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, வேலை கொடுக்கின்றனர். வருமானத்துக்கு வருமானமும் ஆச்சு, வறியவர்களுக்கு உதவிய புண்ணியமும் கிடைக்கிறது, என்றார் கடை உரிமையாளர்.
தி.பூபாலன், காவேரிப்பாக்கம்.
சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற நான், காய்கறி வாங்கி வர, கடைக்கு சென்றேன். காலை, 7:00 மணியளவில், குறிப்பிட்ட அந்த கடையில் மட்டும் ஏக கூட்டம். கூட்டத்தின் காரணம் அறிந்ததும், வியப்பும், ஆச்சரியமும் அளித்தது.
அப்போது தான் பறித்த காய்கறி விற்பனை ஒருபுறம் என்றால், மறுபுறம், கீரைகள், வாழைத்தண்டு, கேரட், அவரை மற்றும் பீன்ஸ் ஆகியவை, நறுக்கி தரப்பட்டது.
ஒரு மணி நேரத்தில் சுடிதார் தைத்து கொடுப்பது போல், காய்கறி வாங்கி கொடுத்துச் சென்றால், கழுவி சுத்தபடுத்தி நறுக்கி தருகின்றனர். சாம்பார், கூட்டு, பொரியலுக்கு தேவையான காய்கறிகளை, 15 நிமிடம் முதல், ஒரு மணி நேரத்திற்குள் நறுக்கி, அதற்கு ஆகும் நேரம் மற்றும் அளவை பொறுத்து, விலை நிர்ணயிக்கின்றனர்.
விசாரித்ததில், அவர்களின், 'கேட்டரிங் சர்வீஸ்' பிரபலம் என்பதால், வேலை கேட்டு வரும், வறுமையில் வாடும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, வேலை கொடுக்கின்றனர். வருமானத்துக்கு வருமானமும் ஆச்சு, வறியவர்களுக்கு உதவிய புண்ணியமும் கிடைக்கிறது, என்றார் கடை உரிமையாளர்.
தி.பூபாலன், காவேரிப்பாக்கம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
- Code:
கார் கண்ணாடியை சரியாக பார்க்க முடியாமல், காரை நிறுத்தி, நீங்கள் கீழே இறங்கினால், உங்கள் கதி அதோ கதி தான். உங்கள் பணம், நகை, மொபைல்போன் போன்றவற்றை கொள்ளையர்கள் பிடுங்கிக் கொள்வர். சமயத்தில், காரையும் ஓட்டி சென்று விடுவர்.
தகவலுக்கு நன்றி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
மேற்கோள் செய்த பதிவு: 1287144பழ.முத்துராமலிங்கம் wrote:நூதன திருட்டு பார்த்து தான் போகணும்.
- Code:
கார் கண்ணாடியை சரியாக பார்க்க முடியாமல், காரை நிறுத்தி, நீங்கள் கீழே இறங்கினால், உங்கள் கதி அதோ கதி தான். உங்கள் பணம், நகை, மொபைல்போன் போன்றவற்றை கொள்ளையர்கள் பிடுங்கிக் கொள்வர். சமயத்தில், காரையும் ஓட்டி சென்று விடுவர்.
தகவலுக்கு நன்றி
ஆமாம் ஐயா, ரூம்போட்டு யோசிக்கிறார்கள் ....
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
-படித்ததில் பிடித்தது !
எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை.
எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.
எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை.
மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.
மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.
*நன்கு ஞாபகம் வைத்துக் கொள்வோம்
முதுமை என்று எதுவும் இல்லை.
நோய் என்று எதுவும் இல்லை.
இயலாமை என்று எதுவுமில்லை.
எல்லாம் நமது மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது.
சிந்தனையை மாற்றுவோம் ஆரோக்கியமாக வாழ்வோம்
நாம் எதை நம்புகிறோமோ அதுவாகவே ஆகிறோம்.
நான்... நான்... நான்...
நான் சம்பாதித்தேன்,
நான் காப்பாற்றினேன்,
நான் தான் வீடு கட்டினேன்,
நான் தான் உதவி செய்தேன்,
நான் உதவி செய்யலனா? அவர் என்ன அவ்வளவுதான்.
நான் பெரியவன்,
நான் தான் வேலை வாங்கி கொடுத்தேன்,
நான் நான் நான் நான் என்று மார்தட்டி கொள்ளுகிறோம்
நான் தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா?
நான் தான் என் மூளையை இயக்குகிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா?
நான் தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா?
நான் தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் கலக்குகிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா??
நான் தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா ?
இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே "நான்" என்று சொல்வதற்கு அதிகாரமும் உரிமையும் உண்டு..
ஆகையால் நான் என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் அன்பாக இருப்போம்.
உலகைப்பற்றிக்கவலைப்பட வேண்டாம் ஏனெனில் அது இறைவனுக்குரியது.
உணவைப்பற்றி கவலைப்பட வேண்டாம் அது இறைவனிடமிருந்தே கிடைக்கிறது.
எதிர்காலம் குறித்தும் கவலைப்பட வேண்டாம் அதுவும் இறைவனின் கரத்தில் தான் உள்ளது
நமக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்க வேண்டாம் தாழ்வு மனப்பான்மை வரும்.
நமக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்க வேண்டாம் தலைக்கனம் வரும்.
நம்மை யாரோடும் ஒப்பிடாமல் நாம் நாமாகவே இருப்போம் தன்னம்பிகை வரும்.....
-படித்ததில் பிடித்தது !
எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.
எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை.
மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.
மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.
*நன்கு ஞாபகம் வைத்துக் கொள்வோம்
முதுமை என்று எதுவும் இல்லை.
நோய் என்று எதுவும் இல்லை.
இயலாமை என்று எதுவுமில்லை.
எல்லாம் நமது மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது.
சிந்தனையை மாற்றுவோம் ஆரோக்கியமாக வாழ்வோம்
நாம் எதை நம்புகிறோமோ அதுவாகவே ஆகிறோம்.
நான்... நான்... நான்...
நான் சம்பாதித்தேன்,
நான் காப்பாற்றினேன்,
நான் தான் வீடு கட்டினேன்,
நான் தான் உதவி செய்தேன்,
நான் உதவி செய்யலனா? அவர் என்ன அவ்வளவுதான்.
நான் பெரியவன்,
நான் தான் வேலை வாங்கி கொடுத்தேன்,
நான் நான் நான் நான் என்று மார்தட்டி கொள்ளுகிறோம்
நான் தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா?
நான் தான் என் மூளையை இயக்குகிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா?
நான் தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா?
நான் தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் கலக்குகிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா??
நான் தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா ?
இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே "நான்" என்று சொல்வதற்கு அதிகாரமும் உரிமையும் உண்டு..
ஆகையால் நான் என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் அன்பாக இருப்போம்.
உலகைப்பற்றிக்கவலைப்பட வேண்டாம் ஏனெனில் அது இறைவனுக்குரியது.
உணவைப்பற்றி கவலைப்பட வேண்டாம் அது இறைவனிடமிருந்தே கிடைக்கிறது.
எதிர்காலம் குறித்தும் கவலைப்பட வேண்டாம் அதுவும் இறைவனின் கரத்தில் தான் உள்ளது
நமக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்க வேண்டாம் தாழ்வு மனப்பான்மை வரும்.
நமக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்க வேண்டாம் தலைக்கனம் வரும்.
நம்மை யாரோடும் ஒப்பிடாமல் நாம் நாமாகவே இருப்போம் தன்னம்பிகை வரும்.....
-படித்ததில் பிடித்தது !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 28 of 40 • 1 ... 15 ... 27, 28, 29 ... 34 ... 40
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில்
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது !!
» படித்ததில் பிடித்தது...!!
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது !!
» படித்ததில் பிடித்தது...!!
Page 28 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|