ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

+10
SK
balakarthik
பாலாஜி
சிவனாசான்
ராஜா
விமந்தனி
கவின்
M.Jagadeesan
ayyasamy ram
krishnaamma
14 posters

Page 27 of 40 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 33 ... 40  Next

Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 27 Empty படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Mon May 23, 2016 10:56 pm

First topic message reminder :

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! ஜாலி ஜாலி ஜாலி


krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?


சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.

அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.

தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.

தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.

முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.

தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.

சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.

இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.

ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.

மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.

ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
மேற்கோள் செய்த பதிவு: 1208345

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 27 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 27 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 27 3838410834


Last edited by krishnaamma on Thu Feb 23, 2017 10:22 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 27 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Fri Apr 06, 2018 12:01 pm

வியாபார தந்திரம்!

ஒரு ஞாயிறன்று முடிவெட்டிக் கொள்ள சலுானுக்கு சென்றிருந்தேன். வெளியே ஒருவர் அமர்ந்து, மருத்துவமனையில், முன்பதிவு செய்ய டோக்கன் தருவதுபோல, டோக்கன் வழங்கி, 50 ரூபாய் முன் பணமாக பெற்று, அமரச் சொன்னார்.

அவரிடம் காரணம் கேட்ட போது, 'கூட்டம் அதிகமாக இருப்பதைப் பார்த்து, பலர் முடி வெட்டிக் கொள்ளாமல் திரும்பி விடுகின்றனர்; 'அட்வான்ஸ்' வாங்கி விட்டால் காத்திருந்து, முடி வெட்டி செல்வர்...' என்றார். 

என்னே ஒரு வியாபார தந்திரம் என்று வியந்து, 'அட்வான்ஸ்' கொடுத்து விட்டதால், வேறு வழியின்றி, அங்கேயே முடி வெட்டி வந்தேன்.


சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 27 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Fri Apr 06, 2018 12:02 pm

krishnaamma wrote:வியாபார தந்திரம்!

ஒரு ஞாயிறன்று முடிவெட்டிக் கொள்ள சலுானுக்கு சென்றிருந்தேன். வெளியே ஒருவர் அமர்ந்து, மருத்துவமனையில், முன்பதிவு செய்ய டோக்கன் தருவதுபோல, டோக்கன் வழங்கி, 50 ரூபாய் முன் பணமாக பெற்று, அமரச் சொன்னார்.

அவரிடம் காரணம் கேட்ட போது, 'கூட்டம் அதிகமாக இருப்பதைப் பார்த்து, பலர் முடி வெட்டிக் கொள்ளாமல் திரும்பி விடுகின்றனர்; 'அட்வான்ஸ்' வாங்கி விட்டால் காத்திருந்து, முடி வெட்டி செல்வர்...' என்றார். 

என்னே ஒரு வியாபார தந்திரம் என்று வியந்து, 'அட்வான்ஸ்' கொடுத்து விட்டதால், வேறு வழியின்றி, அங்கேயே முடி வெட்டி வந்தேன்.


சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்.
மேற்கோள் செய்த பதிவு: 1265336

முன்பு அவர் திருப்பதி இல் வேலை பார்த்திருப்பார் போல ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 27 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Fri Apr 06, 2018 12:03 pm

குத்துப் பாட்டுக்கு பதிலாக...

என் உறவினர் இல்லத் திருமணத்திற்காக, சென்னையிலிருந்து, சேலத்திற்கு தனியார் பேருந்தில் பயணித்தேன். பேருந்தில், 'சர்க்கரையை வெல்வோம்' எனும் தலைப்பில், குறுஞ்செய்தி ஒலிபரப்பானது. அதில், சர்க்கரை நோய் வராமல் தடுக்க, கையாளும் முறைகள், சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளக் கூடிய உணவு முறைகள், தவிர்க்க வேண்டிய உணவுகள் என, பல பயனுள்ள தகவல்கள் ஒலிபரப்பாயின. 



பெரும்பாலும், தனியார் பேருந்துகளில் திரைப்படங்கள் மற்றும் சினிமா பாடல்களை தான் ஒலி - ஒளிபரப்புவர். அதற்கு மாறான இந்த ஒலிபரப்பு, பாராட்டும்படியும், வரவேற்க தக்கதாகவும் இருந்தது.
இதை, மற்ற பேருந்துகளிலும் பின்பற்றலாமே!


பிரேமா சாந்தாராம், சென்னை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 27 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Fri Apr 06, 2018 12:03 pm

பேருந்து குப்பை தொட்டி அல்ல!


சமீபத்தில், அரசு பேருந்தில் பயணம் மேற்கொண்டேன், வழியில் ஒரு இடத்தில், சிறிது நேரம் நின்றது. அப்போது, நடுத்தர வயதுடைய வியாபாரி ஒருவர், ஜன்னலோரமாய் வந்து, உரிக்காத வேக வைத்த வேர்க்கடலையை விற்றார். நான் உட்பட, பலர் வேர்க்கடலை பொட்டலங்களை வாங்கினோம். பொட்டலத்தோடு ஒரு காகிதமும் தந்தார். 




'இது எதற்கு?' என்றதற்கு, 'சார்... வேர்க்கடலையை உரிச்சு, தோலை கீழே போடாம, இந்த காகிதத்துல வச்சு, பஸ்சிலிருந்து இறங்கும்போது, குப்பை தொட்டியில் போடுங்க...' என்றார்.


வேர்க்கடலையை உரித்து சாப்பிட்டு, பேருந்துக்குள்ளேயே தோலை போட்டு, குப்பை வண்டி போல ஆக்கிவிடக் கூடாது என்ற அக்கறையுடன் நடந்து கொண்ட அவரின் பொறுப்புணர்வு என்னை ஆச்சரியப்படுத்தியது.




கே.ராஜேந்திரன், வேலுார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 27 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Wed Nov 21, 2018 9:03 am

அப்பாவியை மிரட்டிய, 'ஸ்கூட்டர் மோகினி!'


சொந்த வேலையாக சென்னை வந்த உறவினர், வேலை முடிந்ததும், ஊருக்கு செல்ல, பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, ஸ்கூட்டரில் வந்த, 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், உறவினர் அருகே வண்டியை நிறுத்தி, அதில் ஏற சொல்லியிருக்கிறாள்.


'நான் போய் கொள்கிறேன்...' என, ஸ்கூட்டரில் ஏற மறுத்துள்ளார், உறவினர்.


அந்த பெண், மீண்டும் வற்புறுத்தவும், 'இது என்னடா வம்பு...' என்று, அருகிலிருந்த ஆட்டோ ஸ்டாண்டை நோக்கி நடந்துள்ளார்.
உறவினரை பின் தொடர்ந்த, ஸ்கூட்டர் மோகினி, 'இப்ப நீ வரமாட்டேல்ல... என்னை பார்த்து சிரித்து, ஏன் கூப்பிட்ட... பதில் சொல்லு...' என்றாள். 


'எங்க சிரிச்சேன்... நானா கூப்பிட்டேன்...' என, உறவினர் பதற... 'நீ, என்னை பார்த்து சிரிச்சு, கூப்பிட்ட, போலீசை கூப்பிடவா... இல்ல, 500 ரூபாயை எடுக்கறியா...' என, மிரட்டியுள்ளாள், அப்பெண்.


'என்னிடம் பணம் இல்லை...' என்றதும், 'மோதிரம், செயினெல்லாம் போட்டிருக்கே... பணம் இல்லன்ற... இருக்கற பணத்தை எடுக்கறியா... இல்ல, நடப்பதே வேறு...' என்று மேலும் மிரட்டியுள்ளாள்.


எதிரில் வந்த ஒருவரை, 'சார்...' என்று உதவிக்கு அழைக்க, வேகமாக அங்கிருந்து பறந்துள்ளார், ஸ்கூட்டர் மோகினி.
'நேரம் சரியில்லை...' என்று வீட்டுக்கு திரும்பிய உறவினர், நடந்த சம்பவத்தை எங்களிடம் கூறினார்.


பெண்களிடம், 'சில்மிஷம்' செய்யும் ஆண்களுக்கு எதிராக, கடுமையான சட்டம் இயற்றினால், அந்த சட்டத்தையே தங்களுக்கு பாதுகாப்பு கவசமாக்கி, ஆண்களை மிரட்டி, பணம் பறிக்கும் இதுபோன்ற, 'மோகினி'களை என்னவென்பது!


மன்னை ஜி.நீலா, கும்பகோணம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 27 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Wed Nov 21, 2018 9:05 am

உறவுகளை இப்படியும் புதுப்பிக்கலாம்!

என் உறவினர் ஒருவர், வெளி மாநிலத்தில் இருக்கிறார். அவருக்கு, எங்கள் குடும்பங்களில் நடக்கும் விசேஷங்களுக்கு பத்திரிகை அனுப்புவோம்; ஆனால், அவர் வருவதில்லை.
சமீபத்தில் ஊருக்கு வந்த அவர், உறவினர் வீடுகளுக்கு செல்ல வேண்டும் எனவும், தன்னுடன் துணைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார்; அதன்படி அவருடன் சென்றேன்.


அப்போது, அவர் கையில் பழைய அழைப்பிதழ்கள் நிறைய இருந்ததை கண்டு, அவரிடம் விசாரித்தேன். அதற்கு அவர், 'வெளி மாநிலத்தில் இருக்கும் எனக்கும், ஊரில் உள்ள உறவினர்களுக்கும் இடைவெளி வந்துவிட கூடாது என்பதற்காக, அவர்களிடம் இருந்து வந்த அழைப்பிதழ்களை பத்திரப்படுத்தியவை தான் இவை... இப்போது சம்பந்தப்பட்ட உறவினர்களை சந்தித்து, அவர்களை வாழ்த்தி, பரிசு கொடுத்து வரலாம் என, முடிவு செய்திருக்கிறேன். இதனால், எனக்கும், உறவினர்களுக்குமான இடைவெளி குறைவதோடு, அவர்களும் என்னை துாரத்தில் வைத்து பார்க்க மாட்டார்கள்...' என்றார். 


வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருப்பவர்கள், உறவுகளை இப்படியும் புதுப்பிக்கலாமே!


— மகேஷ் அப்பாசுவாமி, கன்னியாகுமரி.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 27 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Wed Nov 21, 2018 9:09 am

ஒன்று போதுமே!

திருமண விழாவுக்கு சென்ற நானும், என் கணவரும் மணமக்களை வாழ்த்தினோம். அன்பளிப்பு வழங்கி, பழங்கள் மற்றும் ஐஸ்கிரீமுடன் வயிறார விருந்துண்டோம். 


திருமணத்துக்கு வந்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், திருமண வீட்டார், தாம்பூலப் பையை வழங்குகின்றனர். 


ஆனால், கணவன் - மனைவி இருவரும், தனித்தனி பை வாங்குவது மற்றும் குடும்பத்தில் எத்தனை பேர் போனாலும், கூச்சமில்லாமல் ஆளுக்கொன்று வாங்கி வருவது, பலரது வழக்கமாக உள்ளது.


திருமணம் என்றாலே, மண்டப வாடகை, பூ அலங்காரம், விருந்து, பிற செலவுகள் என, பெரும் பொருட் செலவில், திருமண வீட்டார் திண்டாடித் தவிப்பதை நாம் அறிவோம்!


இந்நிலையில், திருமணத்திற்கு செல்பவர்கள், பெருந்தன்மையுடன் ஒரே ஒரு பை மட்டும் பெற்று வருவது தான் நியாயம். சிந்தியுங்களேன்!


- சங்கரி சண்முகம், சென்னை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 27 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Wed Nov 21, 2018 9:10 am

krishnaamma wrote:ஒன்று போதுமே!

திருமண விழாவுக்கு சென்ற நானும், என் கணவரும் மணமக்களை வாழ்த்தினோம். அன்பளிப்பு வழங்கி, பழங்கள் மற்றும் ஐஸ்கிரீமுடன் வயிறார விருந்துண்டோம். 


திருமணத்துக்கு வந்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், திருமண வீட்டார், தாம்பூலப் பையை வழங்குகின்றனர். 


ஆனால், கணவன் - மனைவி இருவரும், தனித்தனி பை வாங்குவது மற்றும் குடும்பத்தில் எத்தனை பேர் போனாலும், கூச்சமில்லாமல் ஆளுக்கொன்று வாங்கி வருவது, பலரது வழக்கமாக உள்ளது.


திருமணம் என்றாலே, மண்டப வாடகை, பூ அலங்காரம், விருந்து, பிற செலவுகள் என, பெரும் பொருட் செலவில், திருமண வீட்டார் திண்டாடித் தவிப்பதை நாம் அறிவோம்!


இந்நிலையில், திருமணத்திற்கு செல்பவர்கள், பெருந்தன்மையுடன் ஒரே ஒரு பை மட்டும் பெற்று வருவது தான் நியாயம். சிந்தியுங்களேன்!


- சங்கரி சண்முகம், சென்னை.
ம்ம்..சொல்வது சரிதான் என்றாலும் , நாங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி வெத்தலை பாக்கு தருவோம்...குழந்தைகளுக்குத்தான் எதுவும் இல்லை புன்னகை .......என்றாலும் எத்தனையோ செலவு செய்யும்போது, ஒரு நாலு பேருக்கு வெத்திலை பாக்கு தருவதால் குறைந்து விடமாட்டோம் என்பது என் கருத்து...நிறைய புண்ணியம்தான் சேரும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 27 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Wed Nov 21, 2018 12:43 pm

தினமும் மருத்துவ, 'டிப்ஸ்!'
நெருங்கிய நண்பர், துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக உள்ளார். தினமும் காலை, பள்ளி வழிபாட்டில், 'நோயும், தீர்வும்' என்ற தலைப்பில், மாணவர்களை வாசிக்க செய்வார்.
தமிழ் தாய் வாழ்த்து, குறள் விளக்கம், பொன்மொழிகள், அறிவுக்கு விருந்து மற்றும் செய்தி தாள் வாசிப்பு, வழக்கப்படி நடக்கும். அதன் பின், 'நோயும், தீர்வும்' என்ற தலைப்பில், ஒரு நோயின் பெயரை சொல்லி, அது, எதனால் வருகிறது, அதன் அறிகுறி, அந்நோயிலிருந்து விடுபடுவதற்கான எளிய சிகிச்சை முறையை, 'மைக்'கில் பேசி விளக்குவான், மாணவன் ஒருவன்.
அனைத்து மாணவர்களும் இதை கவனிப்பதுடன், அவ்வழியே செல்லும் பொதுமக்களும் கேட்டு செல்வர். தினசரி மருத்துவ குறிப்புகள் வழங்குவதால், மாணவர்கள் மட்டுமின்றி, பொது மக்களும் பயன் பெறும் வகையில் மாற்றிய, ஆசிரிய நண்பரின் புது முயற்சியை வெகுவாக பாராட்டினேன்.
அனைத்து ஆசிரிய பெருமக்களும், தங்கள் பள்ளிகளில் இதை அமல்படுத்தலாமே!
— கா.முத்துசாமி, தொண்டி.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 27 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Wed Nov 21, 2018 12:47 pm

இது, வித்தியாசம்...
உறவினர் இல்ல கிரகப்பிரவேசத்திற்கு சென்றிருந்தோம்; வழக்கம்போல விழா முடிந்த பின், வந்திருந்தோர், காலை உணவுக்கு பின், அவரவர் வாங்கி வந்திருந்த, பரிசு பொருட்களையும், மொய் கவர்களையும் கொடுத்து, கிளம்ப தயாராயினர்.
வீடு கிரகப்பிரவேசம் நடத்தியவர்கள், வந்திருந்த விருந்தினர்களுக்கு, கண்ணை கவரும் விதத்தில், அழகிய சிறு பெட்டி ஒன்றை, 'ரிட்டன் கிப்ட்' ஆக வழங்கினர்.
உள்ளே என்ன இருக்கும் என்ற ஆவலில் வீடு சென்றதும் பிரித்து பார்த்தோம்; அதனுள், ஒரு விதைப் பந்தும், அச்சிட்ட சிறு குறிப்பும் இருந்தது. அதில், இது, என்ன மரத்தின் விதை என்றும், 'வீட்டில் பயிரிட இடம் இல்லாதோர், கோவில், நெடுஞ்சாலை ஓரம், வயல், ஆறு, வாய்கால் கரையோரம் மற்றும் இடைஞ்சல் இல்லாத பொது இடங்களில் எறிந்தால், மழைக் காலங்களில், இயற்கையாகவே வளரும் தன்மையுள்ளது; நாடு மழை வளம்பெற, மரம் வளர்க்க எங்களால் ஆன சிறு உதவி... என, அச்சிடப்பட்டிருந்தது. 
திருமணம் மற்றும் விசேஷங்களின் போது, மரக்கன்று, பூச்செடிகள் தருவதை பார்த்திருக்கிறோம்; ஆனால், இது, வித்தியாசமானதாக இருந்தது. 
— எம்.பாலச்சந்திரன், கன்னியாகுமரி.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 27 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 27 of 40 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 33 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum