புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
Page 25 of 40 •
Page 25 of 40 • 1 ... 14 ... 24, 25, 26 ... 32 ... 40
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே!
வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே!
மேற்கோள் செய்த பதிவு: 1208345krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?
சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.
அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.
தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.
தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.
முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.
தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.
சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.
இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.
ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.
மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.
ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1261550krishnaamma wrote:மணப்பெண்ணின் தைரியம்!
என் உறவினர் ஒருவர், எந்த விஷயத்திலும் எளிதில் திருப்தி அடைய மாட்டார். அவர் மகனுக்கு திருமணத்திற்கு வரன் பார்த்து வருகிறார். சமீபத்தில், ஜாதகம் பொருந்தி, எல்லாம் கூடி வந்த நிலையில் பெண்ணை நிச்சயம் செய்ய தயங்கவே, பெண்ணின் தந்தை, 'நீங்க எதிர்பார்த்தபடியே என் பெண் இருக்கிறாள்; நீங்க கேட்ட சீர்வரிசையையும் செய்ய சம்மதிச்சுட்டோம்; அப்புறம் என்ன தயக்கம்...' என்று கேட்டார்.
அதற்கு உறவினர், 'பெண்ணோட அம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறதா சொன்னீங்களே... இது, கொஞ்ச காலம் கழிச்சு பெண்ணுக்கும் வர வாய்ப்பிருக்கு; அதான் யோசிக்கிறேன்...' என்று சொல்ல, உடனே, அனைவர் முன்னிலையிலும், மணப்பெண் அதிரடியாக, 'இந்த மாப்பிள்ளை வேண்டாம்ப்பா... மாப்பிள்ளையோட அப்பாவுக்கு சந்தேக புத்தி இருக்கு; இது கொஞ்ச காலம் கழிச்சு, மாப்பிள்ளைக்கும் வர வாய்ப்பிருக்கு. அப்படி வர்றப்ப நான் நிம்மதியா வாழ முடியாது. அதனால, வேற இடம் பாருங்கப்பா...' என்று சத்தமாக சொல்ல, உறவினர் ஆடிப் போனார்.
இப்போதெல்லாம் பேயறைந்தது போல் திரிகிறார் அந்த உறவினர். பெண் வீட்டார் தம்மை எதிர்த்து பேச மாட்டார்கள் என்ற தைரியத்தில், வாய்க்கு வந்தபடி பேசும் மாப்பிள்ளை வீட்டாருக்கு, இது, சரியான சாட்டையடி!
ஆர்.பிரபு, கோவை.
சபாஷ் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உழைப்பின் பரிசு!
சிலர், இருசக்கர வாகனங்களின் பின், 'இட்ஸ் மை மாம்ஸ் கிப்ட், இட்ஸ் மை டாட்ஸ் கிப்ட்...' என்று எழுதியிருப்பதை பார்த்திருப்போம். சமீபத்தில் ஒரு இரு சக்கர வாகனத்தில், 'இட் இஸ் எ கிப்ட் பார் மை ஹார்டு ஒர்க்' என்று எழுதியிருந்ததை பார்த்தேன்.
சிக்னலில், அந்த இருசக்கர வாகனம் நின்ற போது, அதில் அமர்ந்திருந்த இளைஞனிடம், 'தம்பி... உன்னை பார்த்தால் மாணவன் போல தெரியுது. இந்த பைக், நீ சுயமாக சம்பாதிச்சு வாங்கியதா?' எனக் கேட்டேன். அதற்கு அந்த இளைஞன், 'ஆமாம் சார்... நான் கல்லுாரியில் படிக்கிறேன்; மாலையில், பகுதி நேர வேலை செய்து சம்பாதித்ததில், இந்த பைக்கை வாங்கினேன்...' என்றான்.
இரு சக்கர வாகனங்களில், அம்மா, அப்பா வாங்கிக் கொடுத்தது என்றும், காதலை பற்றியும், பெண்களை பற்றியும் எழுதும் இளைஞர்கள், இதுபோன்ற பயனுள்ள விஷயங்களை எழுதி, மற்றவர்களை ஊக்கப் படுத்தலாமே!
ஜெ.கண்ணன், சென்னை.
சிலர், இருசக்கர வாகனங்களின் பின், 'இட்ஸ் மை மாம்ஸ் கிப்ட், இட்ஸ் மை டாட்ஸ் கிப்ட்...' என்று எழுதியிருப்பதை பார்த்திருப்போம். சமீபத்தில் ஒரு இரு சக்கர வாகனத்தில், 'இட் இஸ் எ கிப்ட் பார் மை ஹார்டு ஒர்க்' என்று எழுதியிருந்ததை பார்த்தேன்.
சிக்னலில், அந்த இருசக்கர வாகனம் நின்ற போது, அதில் அமர்ந்திருந்த இளைஞனிடம், 'தம்பி... உன்னை பார்த்தால் மாணவன் போல தெரியுது. இந்த பைக், நீ சுயமாக சம்பாதிச்சு வாங்கியதா?' எனக் கேட்டேன். அதற்கு அந்த இளைஞன், 'ஆமாம் சார்... நான் கல்லுாரியில் படிக்கிறேன்; மாலையில், பகுதி நேர வேலை செய்து சம்பாதித்ததில், இந்த பைக்கை வாங்கினேன்...' என்றான்.
இரு சக்கர வாகனங்களில், அம்மா, அப்பா வாங்கிக் கொடுத்தது என்றும், காதலை பற்றியும், பெண்களை பற்றியும் எழுதும் இளைஞர்கள், இதுபோன்ற பயனுள்ள விஷயங்களை எழுதி, மற்றவர்களை ஊக்கப் படுத்தலாமே!
ஜெ.கண்ணன், சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கேரி பேக்'கை தவிர்க்கலாமே!
கடந்த வாரம், என் சினேகிதியின் வீட்டிற்கு சென்றிருந்த போது, அவள் வாழை இலைகளை சின்ன சின்னதாக, நறுக்கிக் கொண்டிருந்தாள். நான் அதுபற்றி கேட்ட போது, 'எங்க தெரு பூக்காரம்மாவும், நானும், கேரி பேக் பயன்பாட்டை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அப்ப, 'கேரி பேக் பயன்படுத்துறத முற்றிலும் தவிர்க்க முடியாது; ஆனால், இயன்ற வரை குறைக்கலாம். நீங்க கூட, அந்த காலம் மாதிரி, வாழை இலையில் பூவை வைச்சு, நாரால் கட்டி கொடுக்கலாம்...' என்றேன். அதற்கு அவர், 'நீங்க சொல்றபடி செய்யலாம்; ஆனால், வாழை இலை அடிக்கடி கிடைக்கிறதில்ல; அதோட, எனக்கும் கட்டுப்படி ஆகாது...' என்றார்.
'உடனே, 'எங்க வீட்டில் இருக்கும் வாழை மரத்திலிருந்து வாழை இலைகளை பறித்து தர்றேன்'னு சொல்லி, வாழை இலைகளை பறித்து, இதுபோல் நறுக்கி கொடுக்கிறேன்; ஏதோ என்னால் முடிந்த சிறு உதவி...' என்றாள். அவளின் முயற்சியை மனதார பாராட்டினேன்!
ஸ்.பி.சுசீலாதேவி, சென்னை.
கடந்த வாரம், என் சினேகிதியின் வீட்டிற்கு சென்றிருந்த போது, அவள் வாழை இலைகளை சின்ன சின்னதாக, நறுக்கிக் கொண்டிருந்தாள். நான் அதுபற்றி கேட்ட போது, 'எங்க தெரு பூக்காரம்மாவும், நானும், கேரி பேக் பயன்பாட்டை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அப்ப, 'கேரி பேக் பயன்படுத்துறத முற்றிலும் தவிர்க்க முடியாது; ஆனால், இயன்ற வரை குறைக்கலாம். நீங்க கூட, அந்த காலம் மாதிரி, வாழை இலையில் பூவை வைச்சு, நாரால் கட்டி கொடுக்கலாம்...' என்றேன். அதற்கு அவர், 'நீங்க சொல்றபடி செய்யலாம்; ஆனால், வாழை இலை அடிக்கடி கிடைக்கிறதில்ல; அதோட, எனக்கும் கட்டுப்படி ஆகாது...' என்றார்.
'உடனே, 'எங்க வீட்டில் இருக்கும் வாழை மரத்திலிருந்து வாழை இலைகளை பறித்து தர்றேன்'னு சொல்லி, வாழை இலைகளை பறித்து, இதுபோல் நறுக்கி கொடுக்கிறேன்; ஏதோ என்னால் முடிந்த சிறு உதவி...' என்றாள். அவளின் முயற்சியை மனதார பாராட்டினேன்!
ஸ்.பி.சுசீலாதேவி, சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
டூ - வீலர் திருட்டில் இதுவும் ஒரு விதம்!
அண்மையில், என் பைக் திருடு போனது. போலீசில் புகார் கொடுத்து, கவலையோடு இருந்த என்னை, தன், டூ - வீலரில், பேருந்து மற்றும் ரயில் நிலையம், அருகிலுள்ள சைக்கிள் ஸ்டாண்ட் என, எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்று, பைக் இருக்கிறதா என்று தேடச் சொன்னான், என் நண்பன்.
பல ஸ்டாண்டுகளில் தேடியபோது, ஒரு சைக்கிள் ஸ்டாண்டில் என் பைக் இருப்பதை கண்டுபிடித்தேன். உடனே, போலீசில் தகவல் சொல்லி, என் பைக் ஆவணங்களை காட்டி, அதை மீட்டேன்.
'திருடு போன பைக், சைக்கிள் ஸ்டாண்டில் இருக்க வாய்ப்பிருக்கிறது என்பது உனக்கு எப்படி தெரியும்?' என்று என் நண்பனிடம் கேட்டபோது, 'டூ - வீலர்களை கள்ளச் சாவி போட்டு திருடுவோர், அதை, சைக்கிள் ஸ்டாண்டில் நிறுத்தி விடுவர்.
'டூ - வீலரை பறிகொடுத்தவர், ஊர் முழுவதும் தேடி அலுத்து விடுவர்; ஒரு வாரம் சென்றதும், சைக்கிள் ஸ்டாண்டிலிருந்து எடுத்து அதை விற்று விடுவான், டூ - வீலர் திருடியவன்...' என்றான்.
சைக்கிள் மற்றும் டூ - வீலரை பறிகொடுத்தோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் இது!
ந.சக்திவேல், ஸ்ரீவில்லிபுத்துார்.
அண்மையில், என் பைக் திருடு போனது. போலீசில் புகார் கொடுத்து, கவலையோடு இருந்த என்னை, தன், டூ - வீலரில், பேருந்து மற்றும் ரயில் நிலையம், அருகிலுள்ள சைக்கிள் ஸ்டாண்ட் என, எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்று, பைக் இருக்கிறதா என்று தேடச் சொன்னான், என் நண்பன்.
பல ஸ்டாண்டுகளில் தேடியபோது, ஒரு சைக்கிள் ஸ்டாண்டில் என் பைக் இருப்பதை கண்டுபிடித்தேன். உடனே, போலீசில் தகவல் சொல்லி, என் பைக் ஆவணங்களை காட்டி, அதை மீட்டேன்.
'திருடு போன பைக், சைக்கிள் ஸ்டாண்டில் இருக்க வாய்ப்பிருக்கிறது என்பது உனக்கு எப்படி தெரியும்?' என்று என் நண்பனிடம் கேட்டபோது, 'டூ - வீலர்களை கள்ளச் சாவி போட்டு திருடுவோர், அதை, சைக்கிள் ஸ்டாண்டில் நிறுத்தி விடுவர்.
'டூ - வீலரை பறிகொடுத்தவர், ஊர் முழுவதும் தேடி அலுத்து விடுவர்; ஒரு வாரம் சென்றதும், சைக்கிள் ஸ்டாண்டிலிருந்து எடுத்து அதை விற்று விடுவான், டூ - வீலர் திருடியவன்...' என்றான்.
சைக்கிள் மற்றும் டூ - வீலரை பறிகொடுத்தோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் இது!
ந.சக்திவேல், ஸ்ரீவில்லிபுத்துார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மருத்துவமனைக்கு செல்லும்போது...
நோயாளி உறவினரை காண, மருத்துவமனை செல்ல நேர்ந்தது. வழக்கமாக பழங்கள், ஹார்லிக்ஸ் எடுத்துச் செல்லவில்லை. ஒரு ஹாட் பேக்கில், வீட்டில் தயார் செய்த சப்பாத்தி, காய்கறி கூட்டு மற்றும் வெங்காய சட்னி எடுத்துச் சென்றேன். இதைப் பார்த்த நோயாளியுடன் இருந்த உறவுக்கார பெண்மணி, 'அம்மாடி... உப்பு சப்பு இல்லாத கேன்டீன் உணவு சாப்பிட்டு, நாக்கு செத்துப் போச்சு. வீட்டிற்கும் போக முடியாது; இங்குதான் இருக்க வேண்டிய நிலை. இந்த சப்பாத்தியும், சட்னியும் அமிர்தமாய் இருக்கு...' என்று கூறி சாப்பிட்டார்.
பெரிய பிளாஸ்கில், மணக்க மணக்க கொண்டு சென்ற காபியை, அருகில் இருந்த உறவினர்கள், ஆளுக்கு ஒரு மடக்கு குடித்து, என்னை கொண்டாடி விட்டனர்.
நோயாளிக்கு, மருத்துவமனையிலேயே உணவு கிடைக்கும். உடன் இருக்கும் உதவியாளருக்கு, நாம் உணவு கொண்டு செல்வது நல்ல உதவி தானே!
சீனு சந்திரா, சென்னை.
நோயாளி உறவினரை காண, மருத்துவமனை செல்ல நேர்ந்தது. வழக்கமாக பழங்கள், ஹார்லிக்ஸ் எடுத்துச் செல்லவில்லை. ஒரு ஹாட் பேக்கில், வீட்டில் தயார் செய்த சப்பாத்தி, காய்கறி கூட்டு மற்றும் வெங்காய சட்னி எடுத்துச் சென்றேன். இதைப் பார்த்த நோயாளியுடன் இருந்த உறவுக்கார பெண்மணி, 'அம்மாடி... உப்பு சப்பு இல்லாத கேன்டீன் உணவு சாப்பிட்டு, நாக்கு செத்துப் போச்சு. வீட்டிற்கும் போக முடியாது; இங்குதான் இருக்க வேண்டிய நிலை. இந்த சப்பாத்தியும், சட்னியும் அமிர்தமாய் இருக்கு...' என்று கூறி சாப்பிட்டார்.
பெரிய பிளாஸ்கில், மணக்க மணக்க கொண்டு சென்ற காபியை, அருகில் இருந்த உறவினர்கள், ஆளுக்கு ஒரு மடக்கு குடித்து, என்னை கொண்டாடி விட்டனர்.
நோயாளிக்கு, மருத்துவமனையிலேயே உணவு கிடைக்கும். உடன் இருக்கும் உதவியாளருக்கு, நாம் உணவு கொண்டு செல்வது நல்ல உதவி தானே!
சீனு சந்திரா, சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நம்மூரிலும் வருமா?
அரபு நாடுகள், சிலவற்றின் மருத்துவ மனைகளில், பிரசவம் என்பது நேச்சுரலாக, சுகப் பிரசவமாகத்தான் நடத்தப் பட வேண்டும்; எக்காரணம் கொண்டும், 'சிசேரியன்' செய்யக் கூடாது. அவ்வாறு செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக, அம்மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுமாம்.
இந்த விஷயத்தில், அந்நாடுகளின் அரசு நிர்வாகத்தை பாராட்டியே ஆக வேண்டும். காரணம், நம் நாட்டில், ஆயிரம் பிரசவங்கள் நடைபெற்றால் அதில், 990 பிரசவங்கள் அறுவை சிகிச்சையே செய்யப்படுகிறது. பல கர்ப்பிணிப் பெண்களும், அவர்களது உறவினர்களும் கூட, பணத்தாசை பிடித்த ஜோதிடர்களின் அறிவுரையைக் கேட்டு, அதன்படி, பிரசவ நேரத்தை, மருத்துவமனைகளில் குறித்துக் கொடுத்து, அந்த நேரத்தில் சிசேரியன் மூலம் குழந்தையை பிறக்க வைக்க வற்புறுத்துகின்றனர்.
அதனால், பெண்களின் உடலில் ஏற்படும் பின் விளைவுகளையும், பாதிப்புக்கள் குறித்தும் கொஞ்சமும் கவலைப்படுவதேயில்லை. அரபு நாடுகளின் நடைமுறையை நம் நாட்டிலும் கடைப்பிடிக்க, அரசு ஆவன செய்யலாமே!
எம்.பக்தவத்சலம்,கோபாலபுரம், சென்னை.
அரபு நாடுகள், சிலவற்றின் மருத்துவ மனைகளில், பிரசவம் என்பது நேச்சுரலாக, சுகப் பிரசவமாகத்தான் நடத்தப் பட வேண்டும்; எக்காரணம் கொண்டும், 'சிசேரியன்' செய்யக் கூடாது. அவ்வாறு செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக, அம்மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுமாம்.
இந்த விஷயத்தில், அந்நாடுகளின் அரசு நிர்வாகத்தை பாராட்டியே ஆக வேண்டும். காரணம், நம் நாட்டில், ஆயிரம் பிரசவங்கள் நடைபெற்றால் அதில், 990 பிரசவங்கள் அறுவை சிகிச்சையே செய்யப்படுகிறது. பல கர்ப்பிணிப் பெண்களும், அவர்களது உறவினர்களும் கூட, பணத்தாசை பிடித்த ஜோதிடர்களின் அறிவுரையைக் கேட்டு, அதன்படி, பிரசவ நேரத்தை, மருத்துவமனைகளில் குறித்துக் கொடுத்து, அந்த நேரத்தில் சிசேரியன் மூலம் குழந்தையை பிறக்க வைக்க வற்புறுத்துகின்றனர்.
அதனால், பெண்களின் உடலில் ஏற்படும் பின் விளைவுகளையும், பாதிப்புக்கள் குறித்தும் கொஞ்சமும் கவலைப்படுவதேயில்லை. அரபு நாடுகளின் நடைமுறையை நம் நாட்டிலும் கடைப்பிடிக்க, அரசு ஆவன செய்யலாமே!
எம்.பக்தவத்சலம்,கோபாலபுரம், சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1261556krishnaamma wrote:நம்மூரிலும் வருமா?
அரபு நாடுகள், சிலவற்றின் மருத்துவ மனைகளில், பிரசவம் என்பது நேச்சுரலாக, சுகப் பிரசவமாகத்தான் நடத்தப் பட வேண்டும்; எக்காரணம் கொண்டும், 'சிசேரியன்' செய்யக் கூடாது. அவ்வாறு செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக, அம்மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுமாம்.
இந்த விஷயத்தில், அந்நாடுகளின் அரசு நிர்வாகத்தை பாராட்டியே ஆக வேண்டும். காரணம், நம் நாட்டில், ஆயிரம் பிரசவங்கள் நடைபெற்றால் அதில், 990 பிரசவங்கள் அறுவை சிகிச்சையே செய்யப்படுகிறது. பல கர்ப்பிணிப் பெண்களும், அவர்களது உறவினர்களும் கூட, பணத்தாசை பிடித்த ஜோதிடர்களின் அறிவுரையைக் கேட்டு, அதன்படி, பிரசவ நேரத்தை, மருத்துவமனைகளில் குறித்துக் கொடுத்து, அந்த நேரத்தில் சிசேரியன் மூலம் குழந்தையை பிறக்க வைக்க வற்புறுத்துகின்றனர்.
அதனால், பெண்களின் உடலில் ஏற்படும் பின் விளைவுகளையும், பாதிப்புக்கள் குறித்தும் கொஞ்சமும் கவலைப்படுவதேயில்லை. அரபு நாடுகளின் நடைமுறையை நம் நாட்டிலும் கடைப்பிடிக்க, அரசு ஆவன செய்யலாமே!
எம்.பக்தவத்சலம்,கோபாலபுரம், சென்னை.
அரபு நாடுகளின் சட்ட திட்டங்களில் சில இங்கும் வந்தால் நன்றாகத்தான் இருக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பயன் தரும் சமையல் வகுப்பு!
என் நண்பனின் மனைவி இன்னும் ஒரு மாதத்தில் ஓய்வு பெற இருக்கிறார். அவரிடம், 'ரிட்டையர்மென்ட் வாழ்க்கைய எப்படி அமைச்சுக்கப் போறீங்க..' என்று கேட்டேன்.
'கல்லுாரி மாணவியருக்கு பாரம்பரிய சமையலை சொல்லித்தரலாம்ன்னு இருக்கேன். திருமணத்திற்கு பின், அது, அவங்களுக்கு உதவியாக இருக்கும். முறுக்கு, ஜாங்கிரி, நார்த்த இலை பொடி, பொரிவிளங்காய் உருண்டை போன்றவற்றோடு, பருப்பு ரசம், மிளகு, சீரகம், வெந்தயம் மற்றும் வேப்பம் பூ ரச வகைகளையும், பலவகை குழம்பு மற்றும் துவையல் வகைகளையும் கற்றுத் தரலாம்ன்னு இருக்கேன். ஆண் பிள்ளைகள் கற்று கொள்ள வந்தாலும், சொல்லித்தர தயார்...' என்றார்.
பணி ஓய்வு நாட்களை, பயனுள்ளதாக ஆக்க நண்பரின் மனைவி தீர்மானித்துள்ளதை நினைக்கும்போது பெருமையாக இருந்தது!
என்.கிருஷ்ணமூர்த்தி, மதுரை.
என் நண்பனின் மனைவி இன்னும் ஒரு மாதத்தில் ஓய்வு பெற இருக்கிறார். அவரிடம், 'ரிட்டையர்மென்ட் வாழ்க்கைய எப்படி அமைச்சுக்கப் போறீங்க..' என்று கேட்டேன்.
'கல்லுாரி மாணவியருக்கு பாரம்பரிய சமையலை சொல்லித்தரலாம்ன்னு இருக்கேன். திருமணத்திற்கு பின், அது, அவங்களுக்கு உதவியாக இருக்கும். முறுக்கு, ஜாங்கிரி, நார்த்த இலை பொடி, பொரிவிளங்காய் உருண்டை போன்றவற்றோடு, பருப்பு ரசம், மிளகு, சீரகம், வெந்தயம் மற்றும் வேப்பம் பூ ரச வகைகளையும், பலவகை குழம்பு மற்றும் துவையல் வகைகளையும் கற்றுத் தரலாம்ன்னு இருக்கேன். ஆண் பிள்ளைகள் கற்று கொள்ள வந்தாலும், சொல்லித்தர தயார்...' என்றார்.
பணி ஓய்வு நாட்களை, பயனுள்ளதாக ஆக்க நண்பரின் மனைவி தீர்மானித்துள்ளதை நினைக்கும்போது பெருமையாக இருந்தது!
என்.கிருஷ்ணமூர்த்தி, மதுரை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முதல் குழந்தைக்கும் பரிசு கொடுக்கலாமே!
சமீபத்தில், என் உறவினர், தனக்கு இரண்டாவதாக மகன் பிறந்திருப்பதாக கூறி, அவர் வீட்டிற்கு அழைத்தார். அதனால், நானும், என் மனைவியும் பிறந்த குழந்தைக்கு பரிசு பொருள் வாங்க சென்றோம். அப்போது, என் மனைவி, உறவினருக்கு மூத்த மகன் இருப்பதை நினைவுபடுத்தி, 'இக்காலத்து குழந்தைக, தங்களோட தங்கை, தம்பிக்கு கிடைக்கிற பொருட்கள் தனக்கும் வேணும்ன்னு ஆசைப்படுவாங்க.
அப்படி கிடைக்கலன்னா, அந்த கோபத்தை அவங்க மீது, காட்டுவாங்க. அதனால, உங்க உறவினரோட ஐஞ்சு வயசு மூத்த மகனுக்கும் ஏதாவது ஒரு பரிசு பொருளை வாங்குங்க...' என்றாள். அதேபோன்று, அவனுக்கும் பரிசுப் பொருள் வாங்கி, உறவினர் வீட்டுக்கு சென்றோம்.
பிறந்த குழந்தைக்கு வாங்கி வந்திருந்த உடை மற்றும் பொம்மைகளை உறவினரின் மனைவியிடம் கொடுத்த பின், அவர்களுடைய, மூத்த மகனிடம் நாங்கள் அவனுக்கு வாங்கி சென்றிருந்த பரிசு பொருளை கொடுத்து, 'இது உனக்கு...' என்று கூறினோம். அதை வாங்கியதும், அந்த குழந்தை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதை, எல்லாரிடமும் காண்பித்து, சந்தோஷப்பட்டான். நாங்கள் கிளம்பும் வரை, அந்த பரிசு பொருளை கீழே வைக்கவே இல்லை.
இந்நிகழ்ச்சி மூலம் நாங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால், எதற்காவது பரிசுப் பொருள் வாங்கும் போது, அவ்வீட்டில் உள்ள எல்லா குழந்தைகளுக்கும், 'கிப்டு' வாங்கி செல்வது என்று முடிவு செய்தோம்.
தி.பிரபு, பெங்களூரு.
சமீபத்தில், என் உறவினர், தனக்கு இரண்டாவதாக மகன் பிறந்திருப்பதாக கூறி, அவர் வீட்டிற்கு அழைத்தார். அதனால், நானும், என் மனைவியும் பிறந்த குழந்தைக்கு பரிசு பொருள் வாங்க சென்றோம். அப்போது, என் மனைவி, உறவினருக்கு மூத்த மகன் இருப்பதை நினைவுபடுத்தி, 'இக்காலத்து குழந்தைக, தங்களோட தங்கை, தம்பிக்கு கிடைக்கிற பொருட்கள் தனக்கும் வேணும்ன்னு ஆசைப்படுவாங்க.
அப்படி கிடைக்கலன்னா, அந்த கோபத்தை அவங்க மீது, காட்டுவாங்க. அதனால, உங்க உறவினரோட ஐஞ்சு வயசு மூத்த மகனுக்கும் ஏதாவது ஒரு பரிசு பொருளை வாங்குங்க...' என்றாள். அதேபோன்று, அவனுக்கும் பரிசுப் பொருள் வாங்கி, உறவினர் வீட்டுக்கு சென்றோம்.
பிறந்த குழந்தைக்கு வாங்கி வந்திருந்த உடை மற்றும் பொம்மைகளை உறவினரின் மனைவியிடம் கொடுத்த பின், அவர்களுடைய, மூத்த மகனிடம் நாங்கள் அவனுக்கு வாங்கி சென்றிருந்த பரிசு பொருளை கொடுத்து, 'இது உனக்கு...' என்று கூறினோம். அதை வாங்கியதும், அந்த குழந்தை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதை, எல்லாரிடமும் காண்பித்து, சந்தோஷப்பட்டான். நாங்கள் கிளம்பும் வரை, அந்த பரிசு பொருளை கீழே வைக்கவே இல்லை.
இந்நிகழ்ச்சி மூலம் நாங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால், எதற்காவது பரிசுப் பொருள் வாங்கும் போது, அவ்வீட்டில் உள்ள எல்லா குழந்தைகளுக்கும், 'கிப்டு' வாங்கி செல்வது என்று முடிவு செய்தோம்.
தி.பிரபு, பெங்களூரு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பிடித்ததை செய்ய வயது தடையில்லை!
என் தோழிக்கு, எழுத்துத் திறமை உண்டு. ஆனால், பல காரணங்களால், நேரம் ஒதுக்கி, எழுத முடியாமல் போயிற்று. இப்போது, பணியிலிருந்து ஓய்வுபெற்று விட்டாள். குழந்தைகளும் செட்டிலாகி விட்டனர். கணவரும், வீட்டு வேலைகளில் உதவி புரிவதால், இப்போது, எழுத ஆரம்பித்து விட்டாள்.
இது, அவளோடு அரட்டையடிக்கும் பெண்களுக்கு பிடிக்கவில்லை. அதனால், அவள் எழுத முற்படும்போதெல்லாம்,'உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை... இந்த வயசுல எழுதி, மாசம் ஆயிரம் ரூபாய் சம்பாதிச்சுடுவியா... எட்டாத பழத்திற்கு கொட்டாவி விட்டாற்போல் இருக்கிறது உன் கனவு...' என கூறி, கிண்டலடித்துள்ளனர்.
ஆனால், அதை, காதில் போட்டு கொள்ளாமல், நேரம் கிடைக்கும்போதெல்லாம், பல்வேறு பத்திரிகைகளுக்கு எழுதி, மாதம், ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டாள், தோழி.
இதைப் பார்த்ததும், அவளை கிண்டலடித் தவர்களுக்கு, 'பொட்டிலடித்தாற்போல்' இருக்கவே, இப்போதெல்லாம் வீண் அரட்டை, வெட்டிப் பேச்சுகளை நிறுத்தி, தாங்கள் இளம் வயதில் செய்ய விரும்பிய கிராப்ட் ஒர்க், படம் வரைதல், சமையல் கலை, டியூஷன் எடுத்தல், தோட்ட பராமரிப்பு என்று ஜமாய்க்கின்றனர்.
தோழியின் விடாமுயற்சியும், அக்கறையும், எல்லாரையும் திருத்தி, உருப்படியான செயல் செய்ய வைத்ததில், மனமகிழ்ந்து போனேன்.
இந்திராணி தங்கவேல், சென்னை.
என் தோழிக்கு, எழுத்துத் திறமை உண்டு. ஆனால், பல காரணங்களால், நேரம் ஒதுக்கி, எழுத முடியாமல் போயிற்று. இப்போது, பணியிலிருந்து ஓய்வுபெற்று விட்டாள். குழந்தைகளும் செட்டிலாகி விட்டனர். கணவரும், வீட்டு வேலைகளில் உதவி புரிவதால், இப்போது, எழுத ஆரம்பித்து விட்டாள்.
இது, அவளோடு அரட்டையடிக்கும் பெண்களுக்கு பிடிக்கவில்லை. அதனால், அவள் எழுத முற்படும்போதெல்லாம்,'உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை... இந்த வயசுல எழுதி, மாசம் ஆயிரம் ரூபாய் சம்பாதிச்சுடுவியா... எட்டாத பழத்திற்கு கொட்டாவி விட்டாற்போல் இருக்கிறது உன் கனவு...' என கூறி, கிண்டலடித்துள்ளனர்.
ஆனால், அதை, காதில் போட்டு கொள்ளாமல், நேரம் கிடைக்கும்போதெல்லாம், பல்வேறு பத்திரிகைகளுக்கு எழுதி, மாதம், ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டாள், தோழி.
இதைப் பார்த்ததும், அவளை கிண்டலடித் தவர்களுக்கு, 'பொட்டிலடித்தாற்போல்' இருக்கவே, இப்போதெல்லாம் வீண் அரட்டை, வெட்டிப் பேச்சுகளை நிறுத்தி, தாங்கள் இளம் வயதில் செய்ய விரும்பிய கிராப்ட் ஒர்க், படம் வரைதல், சமையல் கலை, டியூஷன் எடுத்தல், தோட்ட பராமரிப்பு என்று ஜமாய்க்கின்றனர்.
தோழியின் விடாமுயற்சியும், அக்கறையும், எல்லாரையும் திருத்தி, உருப்படியான செயல் செய்ய வைத்ததில், மனமகிழ்ந்து போனேன்.
இந்திராணி தங்கவேல், சென்னை.
- Sponsored content
Page 25 of 40 • 1 ... 14 ... 24, 25, 26 ... 32 ... 40
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 25 of 40
|
|