ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 22 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 22 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 22 Poll_c10 
VENKUSADAS
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 22 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 22 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 22 Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 22 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 22 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 22 Poll_c10 
VENKUSADAS
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 22 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 22 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 22 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

+10
SK
balakarthik
பாலாஜி
சிவனாசான்
ராஜா
விமந்தனி
கவின்
M.Jagadeesan
ayyasamy ram
krishnaamma
14 posters

Page 22 of 40 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 31 ... 40  Next

Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 22 Empty படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Mon May 23, 2016 10:56 pm

First topic message reminder :

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! ஜாலி ஜாலி ஜாலி


krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?


சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.

அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.

தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.

தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.

முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.

தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.

சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.

இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.

ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.

மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.

ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
மேற்கோள் செய்த பதிவு: 1208345

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 22 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 22 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 22 3838410834


Last edited by krishnaamma on Thu Feb 23, 2017 10:22 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 22 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Fri Dec 22, 2017 9:21 pm

கவுரவம் கிடைக்குமே!

கடந்த வாரம், மாலையில் கடைவீதிக்கு சென்ற போது, ஒரு கடையில், வாசலைப் பெருக்கி, தண்ணீர் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருந்தார், ஒரு திருநங்கை.


அவரைப் பற்றி, அங்குள்ளவர்களிடம் விசாரித்தபோது, 'தினமும் கடை கடையா ஏறி, இறங்கி காசு வசூல் செய்வார். 'ஏதாவது வேலை பார்த்து கவுரவமாக பிழைக்கலாமே...' என்று நாங்கள் சொன்னபோது, 'யாரும் வேலை தர மாட்டேங்கிறாங்க...' என்றார் வருத்தத்துடன்!


'அதனால், வியாபாரிகள் சங்கத்தில் இணைந்திருக்கும் கடைகளின் வாசலை பெருக்கி சுத்தம் செய்யும் வேலையை கொடுத்தோம். இதை பார்த்த சிலர், தங்கள் வீடுகளில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுதல், கார் கழுவுதல், வீட்டை பராமரித்தல், கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருதல் போன்ற வேலைகளுக்கு அழைத்து, சம்பளம் கொடுக்கின்றனர்...' என்றார். 


திருநங்கைகள் கவுரவமாக பிழைக்க வழிவகை செய்த வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் அப்பகுதி மக்களை பாராட்டினேன்.


ஜெ.ஆர்.ஜான்சி, சென்னை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 22 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Fri Dec 22, 2017 9:22 pm

krishnaamma wrote:முதியோருக்கு சில வார்த்தைகள்... 
சமீபத்தில், மூத்த குடிமக்களுக்கான கருத்தரங்கில் கலந்து கொள்ள நேரிட்டது. அங்கு, பேச்சாளர் ஒருவர் பகிர்ந்த கருத்துகள் சிலவற்றை, வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
*ஓய்வூதியம் மற்றும் வங்கி டிபாசிட்களிலிருந்து வரும் வட்டியில் வாழ்க்கை நடத்தலாம். கூடிய வரை சொந்த வீட்டில் வசிப்பது நலம்; வயதான காலத்தில் அடிக்கடி வாடகை வீட்டை மாற்றுவது சிரமம்.
* தானும், தன் மனைவியும் உயிரோடு இருக்கும் வரை, வாரிசுகளின் பெயரில் சொத்து மாற்றம் செய்வதை தவிர்க்கவும். நமக்கு தேவைப்படும்போது, அது கிடைக்காமல் போகலாம். ஆனால், உயில் எழுதி வைப்பது அவசியம்.
* உடம்பில் தெம்பு இருக்கும்போதே, புண்ணிய தலங்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் சென்று வருவது நலம்.
* உடல் நலத்தை நன்றாக பேண வேண்டும்; அவ்வப்போது மருத்துவ ஆலோசனை, ஹெல்த் செக்கப் செய்வது, அவசியம்.
* வாழ்க்கையின் முடிக்கு வந்து விட்டோம் என்று விரக்தியடையாமல், வாழும் நாட்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வது வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும். நிறைய படிப்பது, ஆன்மிகத்தில் ஈடுபாடு கொள்வது, தொலைக்காட்சியில் நல்ல நிகழ்ச்சிகளை பார்ப்பது ஆகியவை மகிழ்ச்சி தரும் விஷயங்கள்.
* சம வயது மூத்தவர்களின் நட்பை பெறுவது நல்லது; பரஸ்பரம் கருத்துகளை பரிமாறிக் கொள்ளவும், ஆலோசனை பெறவும் இந்த தோழமை உதவியாக இருக்கும்.
* தான் பெற்ற பிள்ளையாகவே இருந்தாலும், அனாவசிய அறிவுரை தருவதை தவிர்க்கவும். நம்மை விட அவர்கள் விபரமானவர்கள், தற்போதைய நடப்பை அறிந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ளவும். அதேபோன்று, அவர்களிடம் எதையும் எதிர்பார்ப்பதையும் தவிர்க்கவும்!
அருமையான அறிவுரைகள் தானே!
— ஆர்.ரகோத்தமன், பெங்களூரு.
மேற்கோள் செய்த பதிவு: 1254416


சூப்பர் !  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 22 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Fri Dec 22, 2017 9:23 pm

krishnaamma wrote:கவுரவம் கிடைக்குமே!

கடந்த வாரம், மாலையில் கடைவீதிக்கு சென்ற போது, ஒரு கடையில், வாசலைப் பெருக்கி, தண்ணீர் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருந்தார், ஒரு திருநங்கை.


அவரைப் பற்றி, அங்குள்ளவர்களிடம் விசாரித்தபோது, 'தினமும் கடை கடையா ஏறி, இறங்கி காசு வசூல் செய்வார். 'ஏதாவது வேலை பார்த்து கவுரவமாக பிழைக்கலாமே...' என்று நாங்கள் சொன்னபோது, 'யாரும் வேலை தர மாட்டேங்கிறாங்க...' என்றார் வருத்தத்துடன்!


'அதனால், வியாபாரிகள் சங்கத்தில் இணைந்திருக்கும் கடைகளின் வாசலை பெருக்கி சுத்தம் செய்யும் வேலையை கொடுத்தோம். இதை பார்த்த சிலர், தங்கள் வீடுகளில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுதல், கார் கழுவுதல், வீட்டை பராமரித்தல், கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருதல் போன்ற வேலைகளுக்கு அழைத்து, சம்பளம் கொடுக்கின்றனர்...' என்றார். 


திருநங்கைகள் கவுரவமாக பிழைக்க வழிவகை செய்த வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் அப்பகுதி மக்களை பாராட்டினேன்.


ஜெ.ஆர்.ஜான்சி, சென்னை.
மேற்கோள் செய்த பதிவு: 1254417

மிக அருமை !  படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 22 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 22 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 22 3838410834


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 22 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Fri Dec 22, 2017 9:49 pm

பாட்டியின் தாலாட்டு பாட்டு! 
குழந்தை பெற்று மூன்று மாதங்களாகிவிட்ட என் மகளின் தோழியைக் காண, நானும், என் மகளும் சென்றிருந்தோம். குழந்தைக்காக வாங்கிச் சென்ற, 'கிப்ட்'டை கொடுத்த போது, துாக்கத்துக்கு குழந்தை அழவே, குழந்தையை தொட்டிலிட்டு, 'கண்ணும் நீயே... காற்றும் நீயே...' பாடலை, மொபைல் போனில் ஆன் செய்து, தொட்டிலை ஆட்டியபடி எங்களுடன் பேசிக் கொண்டிருந்தாள், என் மகளின் தோழி; ஆனாலும், குழந்தை துாங்காமல், அழுதது. அச்சமயம், ஓர் அறைக்குள் இருந்து வெளிப்பட்ட அவளது பாட்டி, பேத்தியை திட்டி, 'ஆரிராரோ' பாட்டை பாட ஆரம்பித்து, தொட்டிலை ஒரே சீராக ஆட்டத் துவங்கினார். ஆச்சரியமாக, அழுகையை நிறுத்தி, துாங்க ஆரம்பித்தது, குழந்தை. 
இந்நிகழ்ச்சி, குடும்பத்தில் முதியோரின் பங்கை எனக்கு உணர்த்தியது. அதிலும், குழந்தை தாயின் குரலை கேட்டபடி தான் துாங்கி, வளர வேண்டும் என்று அறிவுரையும் கூறினார், அந்த பாட்டி.
இளம் தாய்மார்களே... உணருங்கள்!
— சி.மாரீஸ்வரி சந்திரன், காஞ்சிபுரம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 22 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Sun Dec 24, 2017 7:01 pm

பின்னூட்டம் எழுதுங்க பின்னூட்டம் எழுதுங்க பின்னூட்டம் எழுதுங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 22 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Tue Jan 02, 2018 10:43 pm

சுவாமி படங்களை தவிர்க்கலாமே!
புத்தாண்டு காலண்டரில் சுவாமி படம் இருந்தால் சந்தோஷம் தான். ஆனால், அந்த ஆண்டு முடிந்ததும், சுவாமி படத்தை, குப்பை தொட்டியிலும், தெருவிலும் வீசி விடுகின்றனர். இது, மிகவும் தர்மசங்கடமாக உள்ளது. பூஜை அறையில் சுவாமி படத்தை வைத்து கும்பிட்டால் போதுமே... காலண்டரில் அச்சிட வேண்டுமா... அதற்கு பதில், இயற்கை காட்சிகள், பூக்கள் மற்றும் பறவைகள் படத்தை அச்சிட்டு விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கை வாசகங்களை இடம்பெற செய்யலாமே...
காலண்டர் தயாரிப்பாளர்கள், இயற்கை எழில் கொஞ்சும் படத்தை அச்சிட்டு, பார்ப்போர் கண்ணுக்கு விருந்தளிக்க முன்வருவரா?
— ஏ.ராஜகோபால், சென்னை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 22 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Tue Jan 02, 2018 10:44 pm

ஆன்மா சாந்தியடைய, மதுவை தானமாக கொடுக்கலாமா?

கடந்த வாரத்தில் ஒருநாள், காய்கறி வாங்க கடை வீதிக்கு சென்றிருந்தேன். அப்போது, ஆட்டோவில் வந்த ஒருவர், அங்கிருந்த டாஸ்மாக் கடைக்கு வருவோரிடம், ஆட்டோவில் இருந்த மூட்டையிலிருந்து பாட்டில்களை எடுத்து வினியோகித்தார். பாட்டில்கள் தீர்ந்ததும், ஆட்டோவில் ஏறப் போனார். 


நான் அவரிடம், 'தம்பி... அவங்களுக்கு எல்லாம் ஏதோ ஜூஸ் பாட்டில் கொடுத்தீங்களே... அது என்ன?' என்று கேட்டேன். 'அது, ஜூஸ் இல்ல மேடம்... இது வேறே...' என்றார். புரிந்து கொண்ட நான், அவரிடம், 'எதற்கு இம்மாதிரி இலவசமாக மதுபானம் வழங்குறீங்க... ஏதாவது பிரார்த்தனையா...' என, வேடிக்கையாக கேட்டேன்.


அதற்கு அவர், 'என் தகப்பனார் மதுப் பிரியர்; அவர் இறந்துட்டார். வாழ்நாளில், அவர் அதிகம் விரும்பியது, மதுவைத் தான். மதுவிலக்கு அமலில் இருந்தபோது கூட, பர்மிட் வாங்கி குடிப்பார். இன்னைக்கு அவரது ஆண்டு திதி; இறந்து போனவருக்கு எது அதிக விருப்பமான பொருளோ, அதை, தானமாக கொடுத்தால், அவரது ஆன்மா சாந்தியடைந்து, அவரது ஆசி, அவரது சந்ததியினருக்கு கிடைக்கும்ன்னு பெரியவங்க சொன்னாங்க; அதுதான் அவர் மிகவும் விரும்பிய மதுவை தானமாக கொடுத்தேன்...' என்றார்.


'ஏன் சார் இப்படி அப்பாவியா இருக்கிறீங்க... யாரோ உங்களுக்கு தவறான அறிவுரை கொடுத்திருக்காங்க.. மது அருந்துவது, பஞ்சமா பாதகம்ன்னு சாஸ்திரம் சொல்லுது. சாஸ்திர விரோதமான காரியத்தை செய்தால், உங்க தந்தையோட ஆன்மா மட்டுமல்ல, மூதாதையரின் ஆன்மாவும் சாந்தி அடையாது. 



மாறாக, பித்ருக்களின் சாபம் தான் கிடைக்கும். திதி அன்னைக்கு, உங்களால் முடிஞ்ச அளவுக்கு ஏழைகளுக்கு சாப்பாடு போடுங்க; துணிமணிக எடுத்துக் கொடுங்க. ஏழை மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வாங்கிக் கொடுங்க. அந்த புண்ணியத்தால், உங்க தந்தையின் ஆத்மா சாந்தி அடைவதோடு, உங்க குடும்பமும் நல்லா இருக்கும்...' என்று அறிவுரை கூறினேன்.

அவர் நெகிழ்ந்து போய், 'தெரியாமல் செய்துட்டேன் அம்மா... நீங்க சொன்ன மாதிரியே செய்றேன்... ரொம்ப நன்றி...' என்று சொல்லி, போனார்.


என் வயது, 75; எனக்கும் ஒரு நல்ல காரியம் செய்த திருப்தி கிடைத்தது!


— ஆர்.ராஜலட்சுமி, கோவிலம்பாக்கம்


Last edited by krishnaamma on Tue Jan 02, 2018 10:47 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 22 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Tue Jan 02, 2018 10:46 pm

உறவுகள் மேம்பட, மொபைல் போன் வேண்டாமே!

தன் இல்லத் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க வந்திருந்தார், என் உறவினர். அழைப்பிதழில், 'தயவுசெய்து, அன்று ஒருநாள் மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள்...' என்று எழுதியிருக்கவே, 'என்ன இது... புதுசா இருக்கு...' என்றேன்.
அதற்கு அவர், 'கல்யாணத்திற்கு வர்றவங்க, சீட்டில் உட்கார்ந்து, மொபைல் போனை பாக்க ஆரம்பிச்சா, கல்யாணத்தைக் கூட பாக்காமல் அதிலேயே மூழ்கிப் போயிடுறாங்க. 



உறவுகள சந்திக்க கிடைக்கும் அந்த ஒரு நாள்ல கூட, இந்த போன் தேவையா... அதோட, கல்யாணத்தன்னைக்கு, குழந்தை களுக்கென்று விளையாட்டு போட்டி நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். பிள்ளைங்க, மொபைல் போனை துாக்கி எறிஞ்சுட்டு விளையாடணும்ன்னா, நாமும், மொபைல் போனை அளவா பயன்படுத்தணும்; முக்கியமான நிகழ்ச்சிகளின் போது கூட, மொபைல் போன் ஸ்கிரீனை முறைச்சுப் பாத்துட்டு இருக்கக் கூடாது...' என்றார்.
அவரின் யோசனை, மிகவும் சரியெனப் பட்டது. 


திருமணத்தன்று, பெரும்பாலானோர், மொபைல் போன் எடுக்காமல் சென்றிருந்தோம். அதனால், ஒருவரை ஒருவர் கேலி கிண்டல் செய்து, சிரித்துப் பேசி மகிழ்ந்தோம். குழந்தைகள் ஓடியாடி விளையாடியது பார்ப்பதற்கே சந்தோஷமாக இருந்தது. அவசியம் என்று, மொபைல் போனை கொண்டு வந்த ஒரு சிலர் கூட, 'சுவிட்ச் ஆப்' செய்து, பேச்சில் கலந்து கொண்டனர்.


தனித் தனிக் குடும்பமாக வாழ்வதால், நெருங்கிய உறவுகள் தவிர, மற்ற துாரத்து உறவு முறைகள் எவருக்கும் தெரிவதில்லை. எல்லாரும் கூடும் இத்தகைய திருமண விழாக்களில், உறவுகளை அறிமுகப்படுத்தி, சொந்த பந்தங்களுடன் பேசி, மகிழலாமே... எங்களுக்கு அன்று கிடைத்த இன்பம், உங்களுக்கும் கிடைக்கும்!


— எம்.கவிதா, மதுரை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 22 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by SK Wed Jan 03, 2018 1:29 pm

அருமையான தொடர் பதிவு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 22 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Sun Jan 07, 2018 3:55 pm

நகையை அடகு வைக்கப் போகிறீர்களா?

வங்கிக்கு சென்றிருந்தேன்; அங்கு, என் நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவரோடு பேசிக் கொண்டிருக்கையில், அவரது கையில் நகைகளின் புகைப்படம் இருந்ததை கவனித்து, 'என்ன இது... நகைகள் போட்டோ?' என, வினவினேன்.


அதற்கு அவர், 'இந்த நகையெல்லாம் இங்க அடகுல இருக்கு... மீட்க வந்திருக்கேன். எப்பவும் அடகு வைக்கிறப்போ, நகைகளை போட்டோ எடுத்து வெச்சுக்குவேன்; நகைகளை மீட்கும் போது, போட்டோவுடன் ஒப்பிட்டு பார்த்துக்குவேன். 



நகை மாறிப் போகாம நம்ம கைக்கு வர, போட்டோ சரியான ஆதாரம்; இதைக் காண்பிச்சு எந்த பிரச்னையும் இல்லாம நகையை மிட்டுக்கலாம்...' எனக் கூறினார். இது, நல்ல யோசனை தானே!

வி.அமுதன், வேதாரண்யம்.


Last edited by krishnaamma on Sun Jan 07, 2018 3:56 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 22 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 22 of 40 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 31 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum