ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

+10
SK
balakarthik
பாலாஜி
சிவனாசான்
ராஜா
விமந்தனி
கவின்
M.Jagadeesan
ayyasamy ram
krishnaamma
14 posters

Page 21 of 40 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 30 ... 40  Next

Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 21 Empty படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Mon May 23, 2016 10:56 pm

First topic message reminder :

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! ஜாலி ஜாலி ஜாலி


krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?


சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.

அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.

தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.

தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.

முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.

தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.

சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.

இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.

ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.

மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.

ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
மேற்கோள் செய்த பதிவு: 1208345

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 21 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 21 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 21 3838410834


Last edited by krishnaamma on Thu Feb 23, 2017 10:22 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 21 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Thu Dec 21, 2017 8:32 pm

பென்ஷன் டியூட்டி! 


எங்கள் தெருவில், ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் இருக்கிறார். சமீபத்தில், வழியில் எதிர்பட்டவரிடம், 'என்ன சார், ஊர் சுத்த கிளம்பியாச்சா...' என்று வேடிக்கையாக கேட்டேன். 'ஆமா தம்பி, கவர்மென்ட், 30 ஆயிரம் ரூபாய் பென்ஷன் தருது; வீட்ல சும்மா இருக்க முடியுமா... வாங்குற பென்ஷனுக்கு, 'டியூட்டி' பாக்க வேண்டாமா; அதான் கிளம்பிட்டேன்...' என்றார். 'இன்னிக்கு, டியூட்டி எங்கே...' என்றேன். 'தாலுகா ஆபீசுக்கு போறேன்; அங்கே மனு எழுத வர்றவங்களுக்கு மனு எழுதி கொடுத்து, உதவி செய்ய போறேன்...' என்றார்.
இதேபோல, தினமும் வங்கி, போஸ்ட் ஆபீஸ் மற்றும் முனிசிபாலிடி ஆபீஸ் என, பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு சென்று, மனு எழுதி கொடுக்கிறார். 


பொது மக்களுக்கு உதவும் இவரது செயல், பென்ஷன்தாரர்களுக்கு முன் மாதிரியாக உள்ளது.
பொழுது போகாத பென்ஷன்தாரர்கள் இவர் வழியை பின்பற்றலாமே!
— கே.அருணாசலம், தென்காசி.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 21 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Thu Dec 21, 2017 8:37 pm

krishnaamma wrote:பென்ஷன் டியூட்டி! 


எங்கள் தெருவில், ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் இருக்கிறார். சமீபத்தில், வழியில் எதிர்பட்டவரிடம், 'என்ன சார், ஊர் சுத்த கிளம்பியாச்சா...' என்று வேடிக்கையாக கேட்டேன். 'ஆமா தம்பி, கவர்மென்ட், 30 ஆயிரம் ரூபாய் பென்ஷன் தருது; வீட்ல சும்மா இருக்க முடியுமா... வாங்குற பென்ஷனுக்கு, 'டியூட்டி' பாக்க வேண்டாமா; அதான் கிளம்பிட்டேன்...' என்றார். 'இன்னிக்கு, டியூட்டி எங்கே...' என்றேன். 'தாலுகா ஆபீசுக்கு போறேன்; அங்கே மனு எழுத வர்றவங்களுக்கு மனு எழுதி கொடுத்து, உதவி செய்ய போறேன்...' என்றார்.
இதேபோல, தினமும் வங்கி, போஸ்ட் ஆபீஸ் மற்றும் முனிசிபாலிடி ஆபீஸ் என, பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு சென்று, மனு எழுதி கொடுக்கிறார். 


பொது மக்களுக்கு உதவும் இவரது செயல், பென்ஷன்தாரர்களுக்கு முன் மாதிரியாக உள்ளது.
பொழுது போகாத பென்ஷன்தாரர்கள் இவர் வழியை பின்பற்றலாமே!
— கே.அருணாசலம், தென்காசி.
மேற்கோள் செய்த பதிவு: 1254219

அருமையான சேவை!  சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 21 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Thu Dec 21, 2017 8:38 pm

லட்சிய புருஷன்! 
அண்மையில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கு என் உறவினர் ஒருவர், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, நீண்டகால சிகிச்சைக்கு பின், உயிர் பிழைத்த தன் மனைவியையும் கைத்தாங்கலாக அழைத்து வந்திருந்தார். கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை காரணமாக தலைமுடி கொட்டி, மெலிந்து, உருவமே மாறிப் போயிருந்தாள், அப்பெண்.
'இவளை வீட்டில் விட்டுட்டு, நீ மட்டும் வந்திருக்க வேண்டியது தானே...' என, உறவினர்கள் சிலர், அவரிடம் சொன்னபோது, 'நோயின் தாக்கத்திலிருந்து இவ, மீண்டு விட்டாலும், மனசளவில் பலவீனமாக இருக்கிறாள். இதுபோன்று உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் மூலம், சொந்தங்களை பார்த்து, அவங்க கிட்ட மனம் விட்டு பேசுறதாலயும், அடிக்கடி கோவில், பார்க், சினிமான்னு செல்றதாலயும், மன மாற்றம் ஏற்பட்டு, இயல்பு நிலைக்கு திரும்பிடுவான்னு நம்புறேன். அதனால் தான், இப்படி உறவினர்கள் வீட்டு விசேஷங்களுக்கு அழைச்சுட்டு வர்றேன்; நான் நினைச்சது போலவே படிப்படியாக நல்ல மாற்றம் ஏற்பட்டு வருகிறது...' என்றார்.
அந்த பெண்ணும், தன் உடல் பாதிப்பு, சிகிச்சை எல்லாம் மறந்து, அனைவரிடமும் மனம் விட்டுப் பேசி, கலகலப்பாக இருந்ததை பார்த்த போது, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்படியொரு கணவன் கிடைக்க, அந்த பெண் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று அவளது காதுபடவே பேசினர், உறவினர்கள். 
இம்மாதிரியான நேரங்களில், மனைவியை புறக்கணிக்காமல், அன்பாக நடத்துவதும், பரிவுடன் கவனிப்பதும், அவள் மனநிலை அறிந்து நடந்து கொள்வதும் தானே நல்ல கணவனுக்கு அழகு. அனைவரது கண்ணுக்கும் லட்சிய புருஷனாக காட்சியளித்த அவரை, அனைவரும் வெகுவாக பாராட்டினர்!
— டி.சரண்யா, ஸ்ரீவில்லிபுத்துார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 21 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Thu Dec 21, 2017 8:39 pm

krishnaamma wrote:லட்சிய புருஷன்! 
அண்மையில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கு என் உறவினர் ஒருவர், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, நீண்டகால சிகிச்சைக்கு பின், உயிர் பிழைத்த தன் மனைவியையும் கைத்தாங்கலாக அழைத்து வந்திருந்தார். கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை காரணமாக தலைமுடி கொட்டி, மெலிந்து, உருவமே மாறிப் போயிருந்தாள், அப்பெண்.
'இவளை வீட்டில் விட்டுட்டு, நீ மட்டும் வந்திருக்க வேண்டியது தானே...' என, உறவினர்கள் சிலர், அவரிடம் சொன்னபோது, 'நோயின் தாக்கத்திலிருந்து இவ, மீண்டு விட்டாலும், மனசளவில் பலவீனமாக இருக்கிறாள். இதுபோன்று உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் மூலம், சொந்தங்களை பார்த்து, அவங்க கிட்ட மனம் விட்டு பேசுறதாலயும், அடிக்கடி கோவில், பார்க், சினிமான்னு செல்றதாலயும், மன மாற்றம் ஏற்பட்டு, இயல்பு நிலைக்கு திரும்பிடுவான்னு நம்புறேன். அதனால் தான், இப்படி உறவினர்கள் வீட்டு விசேஷங்களுக்கு அழைச்சுட்டு வர்றேன்; நான் நினைச்சது போலவே படிப்படியாக நல்ல மாற்றம் ஏற்பட்டு வருகிறது...' என்றார்.
அந்த பெண்ணும், தன் உடல் பாதிப்பு, சிகிச்சை எல்லாம் மறந்து, அனைவரிடமும் மனம் விட்டுப் பேசி, கலகலப்பாக இருந்ததை பார்த்த போது, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்படியொரு கணவன் கிடைக்க, அந்த பெண் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று அவளது காதுபடவே பேசினர், உறவினர்கள். 
இம்மாதிரியான நேரங்களில், மனைவியை புறக்கணிக்காமல், அன்பாக நடத்துவதும், பரிவுடன் கவனிப்பதும், அவள் மனநிலை அறிந்து நடந்து கொள்வதும் தானே நல்ல கணவனுக்கு அழகு. அனைவரது கண்ணுக்கும் லட்சிய புருஷனாக காட்சியளித்த அவரை, அனைவரும் வெகுவாக பாராட்டினர்!
— டி.சரண்யா, ஸ்ரீவில்லிபுத்துார்.
மேற்கோள் செய்த பதிவு: 1254223


இதை படித்ததும் எனக்கு எங்க அம்மா அப்பா நினைவு வந்துவிட்டது........ அழுகை அழுகை அழுகை எங்க அப்பாவும் இது போலத்தான் எங்க அம்மாவை கடைசி வரை வெளியே அழைத்து சென்று கொண்டிருந்தார்....புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 21 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Thu Dec 21, 2017 8:40 pm

ஐஸ் பிரியாணி சாப்பிடுங்கள்! 
பிரியாணி கேள்விப்பட்டுள்ளோம்.. அது என்ன ஐஸ் பிரியாணி என்று கேட்கிறீர்களா... பழைய சோறு தான், ஐஸ் பிரியாணி!
முதலில், இதில் உள்ள நன்மைகளை பார்ப்போம்...
பழைய சாதத்தில் தான் வைட்டமின், பி6 மற்றும் வைட்டமின், பி 12 உள்ளது. இது, உடல் சூட்டை தணித்து, மலச்சிக்கலை போக்கும். குடல் புண், வயிற்று வலியை குணமாக்கும். அது மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்...
பழைய சாதத்தில், மீன் குழம்பு ஊற்றி சாப்பிட்டால் சூப்பர் காம்பினேஷன். பழைய சாதத்தில் சின்ன வெங்காயம் வைத்து சாப்பிட்டால், அதன் ருசியே தனி!
எங்கள் வீட்டில், வாரத்தில் இரண்டு நாட்கள், காலையில், பழைய சாதம் தான் சாப்பிடுவோம். பழைய சாதத்தில் உள்ள பயன்களை தெரிந்து, இனி வாரத்தில் ஒரு வேளையாவது பழைய சாதம் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்திருப்போம்..
அ. கவுசியாபானு, நெய்வேலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 21 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Thu Dec 21, 2017 8:41 pm

krishnaamma wrote:ஐஸ் பிரியாணி சாப்பிடுங்கள்! 
பிரியாணி கேள்விப்பட்டுள்ளோம்.. அது என்ன ஐஸ் பிரியாணி என்று கேட்கிறீர்களா... பழைய சோறு தான், ஐஸ் பிரியாணி!
முதலில், இதில் உள்ள நன்மைகளை பார்ப்போம்...
பழைய சாதத்தில் தான் வைட்டமின், பி6 மற்றும் வைட்டமின், பி 12 உள்ளது. இது, உடல் சூட்டை தணித்து, மலச்சிக்கலை போக்கும். குடல் புண், வயிற்று வலியை குணமாக்கும். அது மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்...
பழைய சாதத்தில், மீன் குழம்பு ஊற்றி சாப்பிட்டால் சூப்பர் காம்பினேஷன். பழைய சாதத்தில் சின்ன வெங்காயம் வைத்து சாப்பிட்டால், அதன் ருசியே தனி!
எங்கள் வீட்டில், வாரத்தில் இரண்டு நாட்கள், காலையில், பழைய சாதம் தான் சாப்பிடுவோம். பழைய சாதத்தில் உள்ள பயன்களை தெரிந்து, இனி வாரத்தில் ஒரு வேளையாவது பழைய சாதம் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்திருப்போம்..
அ. கவுசியாபானு, நெய்வேலி
மேற்கோள் செய்த பதிவு: 1254227


ம்ம்.. நல்லா இருக்கே இது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 21 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by SK Fri Dec 22, 2017 10:48 am

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 21 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 21 3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 21 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Fri Dec 22, 2017 9:16 pm

கூட்டுக் குடும்பமா - பணமா?
அமெரிக்காவில் வேலை பார்க்கும் நான், அங்கேயே காதல், கல்யாணம், குடும்பம், குழந்தை என செட்டிலாகி விட்டேன். தமிழ் தெரியாததால், மனைவியும், குழந்தைகளும் அமெரிக்காவை விட்டு வர விரும்புவதில்லை. கிராமத்தை விட்டு, என் பெற்றோரும் வர மறுத்து விட்டதால், ஆண்டிற்கு ஒரு முறை ஊருக்கு வந்து, அவர்களை பார்த்து, திரும்புவேன். சமீபத்தில், அவ்வாறு ஊருக்கு வந்த போது, வழியில், ஓர் ஓட்டலில் சாப்பிடச் சென்றேன். அங்கே, சப்ளையராக இருந்தான், பள்ளிக் காலத்து, நண்பன்.
அவனின் வற்புறுத்தலை அடுத்து, இரண்டு நாட்கள் அவன் வீட்டில் தங்கியிருந்தேன். அவன், வீட்டிற்கு ஒரே பையன்; அவனது மனைவியும் ஒரே பெண். எவ்வித மன வேறுபாடுமின்றி இருவரும் அவரவர் பெற்றோரை பேணி காப்பாற்றுகின்றனர். நண்பரின் இரண்டு குழந்தைகள், தாத்தா, பாட்டி, மாமனார், மாமியார், கணவன் - மனைவி என்று ஒற்றுமையுடன் சந்தோஷமாக, கூட்டுக் குடும்பமாக வாழ்வதை பார்த்த போது, கொஞ்சம் பொறாமையாக இருந்தது. வெளிநாட்டு மோகம் என்னை தனிமைப்படுத்தியிருப்பதை உணர்ந்தேன்.
வறுமையிலும் செம்மையாக வாழும் அவன் எங்கே... டாலர்களை மட்டும் சம்பாதிக்கும் நான் எங்கே? 
அவன் வீட்டிலிருந்த இரண்டு நாட்களும் மன நிறைவோடு இருந்தேன்; உறவுகள் பிரிந்திருப்பது தப்பானது என்பதும் புரிந்தது. 
— சிவராமகிருஷ்ணன், சென்னை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 21 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Fri Dec 22, 2017 9:16 pm

SK wrote:படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 21 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 21 3838410834
நன்று !  அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 21 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Fri Dec 22, 2017 9:18 pm

முதியோருக்கு சில வார்த்தைகள்... 
சமீபத்தில், மூத்த குடிமக்களுக்கான கருத்தரங்கில் கலந்து கொள்ள நேரிட்டது. அங்கு, பேச்சாளர் ஒருவர் பகிர்ந்த கருத்துகள் சிலவற்றை, வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
*ஓய்வூதியம் மற்றும் வங்கி டிபாசிட்களிலிருந்து வரும் வட்டியில் வாழ்க்கை நடத்தலாம். கூடிய வரை சொந்த வீட்டில் வசிப்பது நலம்; வயதான காலத்தில் அடிக்கடி வாடகை வீட்டை மாற்றுவது சிரமம்.
* தானும், தன் மனைவியும் உயிரோடு இருக்கும் வரை, வாரிசுகளின் பெயரில் சொத்து மாற்றம் செய்வதை தவிர்க்கவும். நமக்கு தேவைப்படும்போது, அது கிடைக்காமல் போகலாம். ஆனால், உயில் எழுதி வைப்பது அவசியம்.
* உடம்பில் தெம்பு இருக்கும்போதே, புண்ணிய தலங்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் சென்று வருவது நலம்.
* உடல் நலத்தை நன்றாக பேண வேண்டும்; அவ்வப்போது மருத்துவ ஆலோசனை, ஹெல்த் செக்கப் செய்வது, அவசியம்.
* வாழ்க்கையின் முடிக்கு வந்து விட்டோம் என்று விரக்தியடையாமல், வாழும் நாட்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வது வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும். நிறைய படிப்பது, ஆன்மிகத்தில் ஈடுபாடு கொள்வது, தொலைக்காட்சியில் நல்ல நிகழ்ச்சிகளை பார்ப்பது ஆகியவை மகிழ்ச்சி தரும் விஷயங்கள்.
* சம வயது மூத்தவர்களின் நட்பை பெறுவது நல்லது; பரஸ்பரம் கருத்துகளை பரிமாறிக் கொள்ளவும், ஆலோசனை பெறவும் இந்த தோழமை உதவியாக இருக்கும்.
* தான் பெற்ற பிள்ளையாகவே இருந்தாலும், அனாவசிய அறிவுரை தருவதை தவிர்க்கவும். நம்மை விட அவர்கள் விபரமானவர்கள், தற்போதைய நடப்பை அறிந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ளவும். அதேபோன்று, அவர்களிடம் எதையும் எதிர்பார்ப்பதையும் தவிர்க்கவும்!
அருமையான அறிவுரைகள் தானே!
— ஆர்.ரகோத்தமன், பெங்களூரு.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 21 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 21 of 40 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 30 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum