ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat 7 Sep 2024 - 16:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

+10
SK
balakarthik
பாலாஜி
சிவனாசான்
ராஜா
விமந்தனி
கவின்
M.Jagadeesan
ayyasamy ram
krishnaamma
14 posters

Page 19 of 40 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 29 ... 40  Next

Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 19 Empty படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Tue 24 May 2016 - 0:26

First topic message reminder :

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! ஜாலி ஜாலி ஜாலி


krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?


சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.

அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.

தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.

தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.

முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.

தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.

சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.

இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.

ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.

மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.

ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
மேற்கோள் செய்த பதிவு: 1208345

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 19 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 19 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 19 3838410834


Last edited by krishnaamma on Thu 23 Feb 2017 - 23:52; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 19 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Thu 1 Jun 2017 - 13:17

நித்திரை போன யாத்திரை!

மூன்று மாதங்களுக்கு முன், உறவினர்களுடன் வடமாநிலங்களுக்கு சுற்றுலா சென்றிருந்தேன். பத்ரிநாத், கேதார்நாத் மற்றும் ஹரித்துவார் என திட்டமிட்டிருந்தோம். எங்களுடன் வந்த இளம்பெண் ஒருவர், சரியான, 'செல்பி' பைத்தியம். போகும் இடம் எல்லாம், 'செல்பி' எடுத்து, யாருக்கோ அனுப்பிக் கொண்டிருந்தாள். வழக்கம் போல், திரிவேணி சங்கமம் கூடும், முப்பெரி அணையை ஒன்றிணைக்கும் இடத்தில், 'செல்பி' எடுக்க முயன்ற போது, ஆற்றில் தவறி விழுந்து விட்டாள்.

உடனே, நாங்கள் கூக்குரலிட்டு, எப்படியோ அவளை காப்பாற்றி, டில்லி கொண்டு வந்து, மேற்கொண்டு சிகிச்சை அளிக்க, இரு நாட்கள், எங்கள் அனைவரின் நித்திரையும் போய் விட்டது. பின், ஒரு வழியாக, அவளுக்காக, எங்கள், 'புரோகிராமை' குறைத்து, விரைவில் ஊர் வந்து சேரும்படி ஆயிற்று.

செல்பி பிரியர்களே... எங்காவது நாலு பேருடன் சேர்ந்து பொது இடங்களுக்கோ, புனித யாத்திரைக்கோ போகும்போது, உங்கள், 'செல்பி' பித்தத்தை கட்டுப்படுத்தி வையுங்கள். அதில், ஏதாவது கோளாறு ஏற்பட்டால், நீங்கள் மட்டுமல்ல, கூட வரும் அனைவரும், கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சி.எஸ்.ராஜேஸ்வரி, குனியமுத்தூர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 19 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Thu 1 Jun 2017 - 13:20

இப்படியும் சில பெண்கள்!

லண்டனில், ஐ.டி., துறையில் பணி புரிகிறான், என் நண்பன். அவனுக்கு வரன் தேடிய போது, பிரபல திருமண தகவல் மையம் ஒன்றின் வலைதளத்தில், ஐதராபாத்தை சேர்ந்த, தமிழ் பெண்ணை பற்றிய தகவல் கிடைத்தது.

தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, 'எனக்கு தந்தை இல்லை; நானும், என் தாய் மட்டும் தான். பொறியியல் படித்து, பிரபல நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறேன்...' என்று கூறியுள்ளாள், அப்பெண்.
இருவருக்கும் பிடித்து விட்டதால், தொலைபேசியிலேயே காதலை வளர்த்து வந்துள்ளனர்.

ஆறு மாதங்கள் சென்ற நிலையில், நண்பனிடம், அப்பெண், 'லண்டனில் மேற்படிப்பிற்காக விண்ணப் பித்திருந்தேன்; இப்போது, அங்கே, 'அட்மிஷன்' கிடைத்துள்ளது. ஆனால், கல்லூரியில் சேரவும், லண்டன் வரவும், 20 லட்சம் ரூபாய் தேவைப்படுது. எங்களுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்கிறோம்; அதில், 40 லட்சம் ரூபாய் கிடைக்கும். பணம் கைக்கு வந்த உடன், திருப்பி கொடுத்து விடுகிறேன்...' என்று கூறியுள்ளாள்.

மேலும், 'லண்டனுக்கு வந்து கல்லூரியில் சேர்ந்தவுடன், திருமணம் செய்து கொள்வோம்...' என்றதை அடுத்து, 20 லட்சம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளான், நண்பன். அதன்பின், அப்பெண், கொஞ்சம் கொஞ்சமாக பேசுவதை குறைத்து, ஒரு கட்டத்தில், நண்பனை முழுவதுமாகவே தவிர்க்க ஆரம்பித்தாள். சுதாரித்து, திருமண தகவல் மையத்தில் விசாரித்த போது, அந்த மையத்திலிருந்து, அவள் விலகியிருந்தது தெரிந்தது. ஏமாந்து போன நண்பன், தற்போது, போலீசில் புகார் கொடுத்துள்ளான்.

திருமணத்திற்கு வரன் தேடுவோர், இனி, தீவிரமாக விசாரிப்பதோடு, சிரமம் பார்க்காமல் நேரிலும் சென்று, உண்மை நிலையை அறிவது நல்லது.

—ஜி.கார்த்திகேயன், சென்னை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 19 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Thu 1 Jun 2017 - 13:20

krishnaamma wrote:இப்படியும் சில பெண்கள்!

லண்டனில், ஐ.டி., துறையில் பணி புரிகிறான், என் நண்பன். அவனுக்கு வரன் தேடிய போது, பிரபல திருமண தகவல் மையம் ஒன்றின் வலைதளத்தில், ஐதராபாத்தை சேர்ந்த, தமிழ் பெண்ணை பற்றிய தகவல் கிடைத்தது.

தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, 'எனக்கு தந்தை இல்லை; நானும், என் தாய் மட்டும் தான். பொறியியல் படித்து, பிரபல நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறேன்...' என்று கூறியுள்ளாள், அப்பெண்.
இருவருக்கும் பிடித்து விட்டதால், தொலைபேசியிலேயே காதலை வளர்த்து வந்துள்ளனர்.

ஆறு மாதங்கள் சென்ற நிலையில், நண்பனிடம், அப்பெண், 'லண்டனில் மேற்படிப்பிற்காக விண்ணப் பித்திருந்தேன்; இப்போது, அங்கே, 'அட்மிஷன்' கிடைத்துள்ளது. ஆனால், கல்லூரியில் சேரவும், லண்டன் வரவும், 20 லட்சம் ரூபாய் தேவைப்படுது. எங்களுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்கிறோம்; அதில், 40 லட்சம் ரூபாய் கிடைக்கும். பணம் கைக்கு வந்த உடன், திருப்பி கொடுத்து விடுகிறேன்...' என்று கூறியுள்ளாள்.

மேலும், 'லண்டனுக்கு வந்து கல்லூரியில் சேர்ந்தவுடன், திருமணம் செய்து கொள்வோம்...' என்றதை அடுத்து, 20 லட்சம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளான், நண்பன். அதன்பின், அப்பெண், கொஞ்சம் கொஞ்சமாக பேசுவதை குறைத்து, ஒரு கட்டத்தில், நண்பனை முழுவதுமாகவே தவிர்க்க ஆரம்பித்தாள். சுதாரித்து, திருமண தகவல் மையத்தில் விசாரித்த போது, அந்த மையத்திலிருந்து, அவள் விலகியிருந்தது தெரிந்தது. ஏமாந்து போன நண்பன், தற்போது, போலீசில் புகார் கொடுத்துள்ளான்.

திருமணத்திற்கு வரன் தேடுவோர், இனி, தீவிரமாக விசாரிப்பதோடு, சிரமம் பார்க்காமல் நேரிலும் சென்று, உண்மை நிலையை அறிவது நல்லது.

—ஜி.கார்த்திகேயன், சென்னை.
மேற்கோள் செய்த பதிவு: 1243399

ம்ம்.. கிட்ட தட்ட நான் இதேபோல் ஒரு கதை எழுதி உள்ளேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 19 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Thu 1 Jun 2017 - 13:21

எங்கும், எதிலும் முன்னெச்சரிக்கை தேவை!

சமீபத்தில், என் நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்தேன். லாட்ஜில், 'ரூம்' போடச் சென்ற போது, 'ரூம் பதிவு செய்வதற்கு முன், அறையை பார்த்து விட்டு போடலாம்...' என்றேன்.

என் முன்னெச்சரிக்கையை கண்டு சிரித்தபடியே, சாவி, கொடுத்து அனுப்பினார், ஓட்டல் மேனேஜர். பின், நாங்கள் சென்று பார்த்து வந்து, 'எல்லாம் சரியாக இருக்கிறது; இப்போது, 'புக்' செய்யுங்கள்...' என்றேன்.
என் நடவடிக்கை, நண்பர்களுக்கு கவுரவ குறைவாக தோன்ற, 'நாம தங்கப் போறது ரொம்ப சாதாரண ஓட்டல்; இதுக்கு இந்த, 'பில்டப்' தேவையா...' என்றனர்.

'இது, 'பில்டப்' இல்ல; முன்னெச்சரிக்கை. இதுக்கு முன், திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக, வெளியூரில் உள்ள ஒரு ஓட்டலில் குடும்பத்துடன் தங்கிய பாத்ரூமில் கழிவு நீர் வந்ததுடன் குழாய் உடைந்து, தண்ணீர் கொட்டியது. அக்குழாயை, நாங்கள் தான் உடைத்ததாக பழி சுமத்தி, புது குழாய்க்கான தொகையையும் வசூலித்து விட்டனர்.

'அன்றிலிருந்து எங்கு சென்றாலும், உடனே அறையை, 'புக்' செய்யாமல், அறையில் எல்லாம் சரியா இருக்கிறதான்னு சரி பார்த்த பின், தங்குவதை கடைப்பிடித்து வர்றேன்...' என்றேன்.

வாசகர்களே... இதை நீங்களும் பின்பற்றி, தேவையற்ற மன உளைச்சலை தவிர்த்திடுங்கள்!

— எஸ்.பிர்தவ்ஸ் ராஜா, கீழக்கரை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 19 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Thu 1 Jun 2017 - 13:21

திருப்தியான பிறந்தநாள்!

தோழியின் பிறந்த நாளை முன்னிட்டு, முதியோர் இல்லத்திற்கு, ஒருநாள் உணவை நாமே தயாரித்து கொடுக்கலாம் என்று முடிவெடுத்து, எவ்வளவு பேர் இருக்கின்றனர் என்று பார்த்து வர, முதியோர் இல்லம் சென்றோம். உடன் வந்த தோழி, 'உங்களுக்கு என்ன வேணும்ன்னு சொல்லுங்க; அதையே, நாங்க சமைத்து எடுத்து வர்றோம்...' என்றாள்.

அதற்கு ஒரு பெரியவர், 'நாங்க ௌல்லாம் நல்லா சாப்பிட்டவங்கம்மா... பசங்களால பாத்துக்க முடியாம, இங்க கொண்டு வந்து விட்டுட்டாங்க. நிறைய பேர் சாப்பாடு தர்றாங்க; ஆனா, என்ன வேணும்ன்னு யாரும் கேட்டதில்ல. நாங்க அசைவம் சாப்பிட்டு, ரொம்ப நாளாச்சு; உங்களுக்கு வசதிப்பட்டா, அதை சமைத்து தர முடியுமா?' என்று, தயங்கியபடியே கேட்டார்.

'அவ்ளோதானே கண்டிப்பா கொண்டு வர்றோம்...' என சொல்லி, அதேபோல, அடுத்தநாள் சமைத்து, எடுத்துப் போனோம்.

சந்தோஷமாக, ஆசையாக சாப்பிட்டு, மனதார வாழ்த்தினர்; எங்களுக்கும் திருப்தியாக இருந்தது.
நண்பர்களே... உதவி செய்ய முடிவெடுத்தால், என்ன வேணும்ன்னு கேட்டு செய்யலாமே!
— உமா செந்தில், கோவை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 19 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Thu 1 Jun 2017 - 13:22

உயிரை காப்பாற்றிய பொது அறிவு!

என் நண்பர் புத்தகப் பிரியர். மாதத்திற்கு, இரண்டு புத்தகமாவது படித்து விடுவார். 'எதற்காக இப்படி நேரத்தை வீணாக்குகிறாய்; படிக்கும் நேரத்தில், ஏதாவது வேலை செய்தால், பணமாவது கிடைக்கும்...' என்று, அவரை திட்டுவர், உறவினர்.

சமீபத்தில், தன் உறவினர் சிலருடன், மூணாறுக்கு சுற்றுலா சென்றுள்ளார், நண்பர். அங்கு, எதிர்பாராமல் அவர்களில் இருவர், காட்டு யானையிடம் சிக்க, அதை, தூரத்திலிருந்து கவனித்த நண்பர், அவர்களிடம் சத்தமாக, 'யானையிடமிருந்து தப்பிக்க நேராக ஓடாம, குறுக்கும், நெடுக்குமா, வேகமாக ஓடுங்க; யானையால குறுக்கும், நெடுக்குமா, வேகமாக ஓட முடியாது... அதனால, ஈசியா தப்பிச்சுடலாம்...' என்று சொல்ல, அதன்படியே செய்து, யானையிடமிருந்து உயிர் தப்பினர்.

'இந்த யோசனை உனக்கு எப்படி வந்தது...' என்று எல்லாரும் அவரிடம் கேட்க, 'புத்தகத்தில் படித்தது...' என்று கூறியுள்ளார். ஊருக்கு திரும்பும் போது, ஆளுக்கு, 500 ரூபாய்க்கு அவருக்கு புத்தகங்கள் வாங்கி தந்துள்ளனர்.

புத்தகம் படிப்பதால், அறிவு வளர்வதுடன், நாம் படித்த விஷயங்கள், இதுமாதிரி ஆபத்து சமயங்களில் உதவும் என்பதை, அனைவரும் உணர்ந்து, படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்!
— என்.சக்திவேல், ஸ்ரீவில்லிபுத்தூர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 19 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Thu 1 Jun 2017 - 13:22

கிளீனர் பையனின் புத்திசாலித்தனம்!

சமீபத்தில், சென்னையிலிருந்து, கோவைக்கு தனியார் பேருந்தில், இரவு நேரத்தில் பயணமானேன். நள்ளிரவில், ஏதோ ஒரு ஊரில், இயற்கை உபாதையை கழிப்பதற்காக, பேருந்து நிறுத்தப்பட்டது.

அரைத்தூக்கத்தோடு இறங்கினோம். அப்போது, அப்பேருந்தின் கிளீனர் பையன், எங்களிடம் ஆளுக்கு ஒரு சிறு அட்டையை தந்து, திரும்பி வரும் போது, கொடுக்கச் சொன்னான். அது எதற்கென்று புரியாமலேயே அவசரம் காரணமாக, அதை வாங்கி சென்றோம்.

திரும்பும் போது தான் தெரிந்தது... அந்த இடத்தில், இருபதிற்கும் அதிகமாக, ஒரே மாதிரியான தனியார் பேருந்துகள் நின்றிருந்தன. இதில், நாங்கள் வந்த பேருந்து எது என்ற குழப்பம் வர, அப்போது தான் அந்த கிளீனர் பையன் தந்த அட்டையை கவனித்தோம்; அதில், பேருந்தின் பதிவு எண்ணும், எங்களின் இருக்கை எண்ணும் எழுதப்பட்டிருந்தது. எவ்வித சிரமமும் இன்றி, எங்கள் வண்டியை அடைந்தோம். கிளீனர் பையனின் புத்திசாலித்தனத்தை மெச்சினோம்.

ஆயிரக்கணக்கில் செலவு செய்து பயணிப்பவர்கள், நள்ளிரவில் தடுமாறாமல் இருக்க, இதை, ஒவ்வொரு தனியார் பேருந்தும் பின்பற்றலாமே!

— சசி பிரபு, சென்னை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 19 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Thu 1 Jun 2017 - 13:39

அன்பான அணுகுமுறை!

உடல் நலமில்லாது, மருத்துவமனையில் இருந்த என் மாமியாருடன் தங்கி இருந்தேன். பொதுவாக, மருத்துவமனைகளில், மன இறுக்கம், வருத்தம் மற்றும் கவலை படிந்த முகங்களைத் தான் பார்க்க முடியும். இதற்கு நேர்மாறாக, அன்பாக பேசுவதும், இனிமையாக பழகுவதுமாக இருந்தார், நர்ஸ் ஒருவர்.

ஒவ்வொரு நாளும் அன்றலர்ந்த மலராய் உள்ளே வந்து, 'ராத்திரி நல்லா தூங்கினீங்களா?' என்று, நோயாளியை மட்டுமல்ல, உடன் தங்கியிருப்பவர்களையும் அக்கறையான குரலில் விசாரிப்பார்.
நோயாளியின் தோளை அணைத்து, மலர்ந்த முகத்துடன், 'எப்படிம்மா இருக்கீங்க... சரியா தூங்க முடியலயா... இப்ப, நான் தர்ற மருந்தை சாப்பிடுங்க; வலி குறைஞ்சு, நல்ல தூக்கம் வரும்...' என, மென்மையாக, நம்பிக்கை ஊட்டும் விதமாய் பேசுவார்.

வசூல் ராஜா படத்தில் வருவது போன்ற கட்டிப்பிடி வைத்தியத்தை, இங்கு கண்கூடாக பார்த்தேன். வெறுமனே, கடமைக்காக மாத்திரைகள் தராது, அதை எதற்கு தருகின்றனர் என விளக்கி, நம்பிக்கை ஊட்டி, 'உங்கள சுத்தி இத்தனை நல்லவங்க இருக்கும் போது கவலைப்படலாமா... நம்பிக்கையா இருங்க; நல்லதே நடக்கும்...' என, ஒவ்வொரு நோயாளியிடமும் சொல்வார்.

மருந்து, மாத்திரை மட்டுமே நோயை குணப்படுத்தாது; அன்பான அணுகுமுறையும், 'பாசிடிவான' வார்த்தைகளும் தான், நோயின் தீவிரத்தை குறைக்கும் என்பதை புரிந்து நடந்த அந்த நர்சை, இப்போது நினைத்தாலும் மனம் நெகிழ்கிறது. இவரைப் போன்றவர்களால் தான், ப்ளாரென்ஸ் நைட்டிங்கேல், மதர் தெரசா போன்று மிளிர முடியும்!

மல்லிகா குரு, சென்னை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 19 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Thu 1 Jun 2017 - 13:40

செலவைக் குறைத்த கோடைமழை!

சமீபத்தில், பழனியில் உள்ள என் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன். சில நாட்களுக்கு முன், அங்கு, நன்கு மழை பெய்திருந்ததாக, செய்தித்தாளின் வாயிலாக அறிந்திருந்தேன்.

உறவினரிடம் பேசிக் கொண்டிருந்த போது, 'கோடைமழை, எனக்கு சில ஆயிரங்களை மிச்சப்படுத்தி விட்டது...' என்றார்.

'எப்படி?' என்றதற்கு, எட்டாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் சேமிப்பு கீழ்மட்ட தொட்டியை, திறந்து காண்பித்தார்; அதில், நீர் நிரம்பி இருந்தது. 'மாடியில் இருந்து வெளியேறும் தண்ணீரை அப்படியே தொட்டியில் சேகரித்து, 'குளோரின் பவுடர்' கலந்து, சூரிய ஒளி படாதபடி, மூடி வைத்திருக்கிறேன். தொட்டி நிரம்பியது போக, வெளியேறிய தண்ணீர், ஆழ்துளைக்கிணறு அருகில், மழை நீர் சேமிப்பு தொட்டிக்கு (உறிஞ்சு குழி) அனுப்பப்பட்டது...' என்று உற்சாகமாக விளக்கினார்.

அத்துடன், மழைநீர் சேமிப்பு, உறிஞ்சு குழிக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமா அதே அளவு, தொட்டிகளை தயார்படுத்தி வைத்திருக்க வேண்டும் என்றார். தற்போதுள்ள வறட்சியின் அவலம் கருதி அனைவரும் இதை கடைப்பிடிக்க வேண்டும்.

பொய்க்கும் வான் மழை, நமக்கு பல பாடங்களை கற்றுத் தருகிறது.
— வி.எஸ்.ராமு, திண்டுக்கல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 19 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Thu 1 Jun 2017 - 13:40

முத்திரை திருவிழா!

என் நண்பனின் கிராமத்தில், ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவிற்கு, வீட்டுக்கு இவ்வளவு என்று வரி விதிப்பர். வழக்கமாக, 500 ரூபாய் வரிக்கு பதிலாக, இந்த ஆண்டு, 1,000 ரூபாய் வரி விதித்து, வசூல் செய்வதை கேள்விப்பட்டு, 'இந்த ஆண்டு திருவிழாவுக்கு, பெரிய கச்சேரி, செண்டை மேளம் என ஏற்பாடு செய்து, திருவிழாவை, 'ஜாம் ஜாம்' என்று நடத்தப் போறீங்களா?' என்று அவனிடம் கேட்டேன்.

அதற்கு அவன், 'வழக்கத்திற்கு மாறாக, இந்த ஆண்டு, திருவிழாவை மிகவும் எளிமையாக நடத்த இருக்கிறோம். வரி வசூலில் வரும் பணத்தில், பொக்லைன் இயந்திரம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி, எங்கள் கிராமத்திற்குள் இருக்கிற எல்லா சீமைக் கருவேல மரங்களை, வேரோடு அகற்ற, முடிவு செய்திருக்கோம்...' என்றான்.

அவனது கிராமத்தினரை நினைத்து, மனதிற்குள் ஒரு சபாஷ் போட்டேன். இதை, அனைத்து கிராமத்தினரும் பின்பற்றலாமே!

அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 19 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 19 of 40 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 29 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum