புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 12 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 12 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 12 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 12 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 12 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 12 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 12 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 12 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 12 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 12 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 12 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 12 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 12 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 12 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 12 Poll_c10 
21 Posts - 4%
prajai
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 12 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 12 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 12 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 12 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 12 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 12 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 12 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 12 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 12 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 12 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 12 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 12 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 12 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 12 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 12 Poll_c10 
7 Posts - 1%
mruthun
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 12 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 12 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 12 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!


   
   

Page 12 of 40 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 26 ... 40  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 23, 2016 10:56 pm

First topic message reminder :

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! ஜாலி ஜாலி ஜாலி


krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?


சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.

அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.

தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.

தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.

முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.

தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.

சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.

இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.

ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.

மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.

ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
மேற்கோள் செய்த பதிவு: 1208345

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 12 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 12 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 12 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 23, 2017 10:22 pm

krishnaamma wrote:கோவில்களிலும் நடைமுறைப்படுத்தலாமே!

திருவாரூர் அருகில் உள்ள, எண்கண் திருத்தல முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். அர்ச்சனை பொருட்களை, ஒயர் கூடையில் வைத்து, எடுத்துச் சென்றிருந்தோம்.

எங்கள் பின்னால் வந்த குடும்பத்தினர், அர்ச்சனை பொருட்களை பாலிதீன் பையில் வைத்து, அர்ச்சகரிடம் கொடுக்க, அவர் பொறுமையாக, 'அர்ச்சனை பொருட்களை எங்கம்மா வாங்குனீங்க... கோவில் வாசல்ல வாங்கியிருந்தா, பிளாஸ்டிக் கூடை அல்லது மூங்கில் தட்டுல வச்சு கொடுத்திருப்பாங்க. வெளியில் வாங்குனீங்களாம்மா... பரவாயில்ல அம்பாள் சன்னதி பக்கம் தாம்பாளத் தட்டு ஏதாவது இருக்கும். அதுல வச்சு எடுத்துட்டுவாங்க... இனி, எந்த கோவிலுக்கு போனாலும், வீட்டுல இருந்து கூடை, தட்டு, தாம்பாளம் எடுத்துட்டு போங்க...' என்று கூற, அவர்களும் கோவிலில் இருந்த பித்தளை தாம்பாளத்தில் வைத்து, எடுத்து வந்த பின், அர்ச்சனை செய்து கொடுத்தார்.

ஓரளவு புகழ் பெற்ற கோவில் என்றாலும், சிறு கிராமத்தில் இருக்கும் இக்கோவிலில், இந்த அளவு விழிப்புணர்வு இருப்பது, மிகவும் மகிழ்ச்சியை தந்தது. பல பெரிய கோவில்களில், பாலிதீன் பைகளில் கொண்டு செல்லும் அர்ச்சனையை ஏற்றுக் கொள்வதில்லை. அதுபோல், எல்லா கோவில்களிலும் கனிவு காட்டி, உரிய மாற்று ஏற்பாடு செய்து, கண்டிப்புடன் கடைப்பிடித்தால், அது நாட்டுக்கு நன்மை தரும்.

எஸ்.லெட்சுமிபிரியா, திருவாரூர்.
மேற்கோள் செய்த பதிவு: 1234499

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 23, 2017 10:25 pm

krishnaamma wrote:இருப்பதை கொண்டு, சிறப்புடன் சேவை!

சமீபத்தில், என் நண்பனை காண, அவன் ஊருக்கு சென்றிருந்தேன். இருவரும் இளமை கால நினைவுகளை, பேசிக் கொண்டிருந்த போது, எதிர் வீட்டு திண்ணையில், சிறுவர், சிறுமியர் அணியக் கூடிய காலணிகளும், சட்டைகளும், ஒரு கயிற்றில் தொங்க விடப்பட்டிருந்தன. அது, எனக்கு சற்று வித்தியாசமாகப் படவே, அதைப் பற்றி, நண்பரிடம் கேட்டேன். நண்பர் பதில் சொல்வதற்குள், தற்செயலாக, ஒரு வயதான மூதாட்டி, தன் பேரனை கையில் பிடித்தபடி அவ்வீதி வழியே சென்றார். அதைப் பார்த்ததும், 'இப்ப, அங்க நடக்கப் போறதப் பார்...' என்றார்.

அப்பையனின் காலில் செருப்பு இல்லாததைக் கவனித்து, திண்ணையில் அமர்ந்திருந்த பெரியவர், 'ஏன்ம்மா... பையனுக்கு, செருப்பு இல்லையா... வெறும் காலோட நடந்து வர்றானே...' என்று கேட்க, அந்த மூதாட்டி, 'சாப்பாட்டிற்கே வழியில்லாதபோது, செருப்புக்கு எங்கய்யா போறது...' என்றார். உடனே, அவர்களைக் கூப்பிட்டு, கயிற்றில் தொங்கியவற்றில், பையனுக்குகேற்ற காலணிகளையும், சட்டைகளையும் கொடுத்து, அணிந்து கொள்ள சொன்னார். அதைப் பெற்ற இருவரும், மகிழ்வுடன் அவரை வாழ்த்திச் சென்றனர்.

அப்பெரியவரிடம் சென்று, இதைப் பற்றி கேட்ட போது, 'எனக்கு பேரப் பிள்ளைகள், நிறைய பேர் இருக்காங்க; அவங்க வேணாம்ன்னு புறக்கணித்தவைகளை குப்பையில் போட மனமில்லாமல், ஏழைக் குழந்தைகளுக்கு கொடுக்கிறேன். இதில் எனக்கு ஆத்ம திருப்தியும், மன நிறைவும் கிடைக்கிறது. இதனால், எனக்கிருந்த மன அழுத்தம், ரத்தக் கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய் போன்றவை குறைந்து விட்டது...' என்றார்.

ஒரு நல்ல மனிதரை சந்தித்ததாக எனக்கு தோன்ற வில்லை; மாறாக, பெரிய மகானை சந்தித்ததாக தோன்றியது.

என்.பாலமுருகன், சென்னை.
மேற்கோள் செய்த பதிவு: 1234498

நல்ல சேவை தான் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 23, 2017 10:28 pm

கல்யாணப் பரிசு!

தன் மூத்த மகன் திருமணத்தின் போது, யாரும் பரிசுப் பொருள் கொணடு வரக் கூடாது என்று பத்திரிகையிலேயே, அச்சடித்து இருந்தார், பணக்கார நண்பர் ஒருவர். ஆனால், இரண்டாம் மகனின் திருமணத்தின் போது, அவ்வாறு எதுவும் குறிப்பிடவில்லை இது பற்றி, அவரிடம் விசாரித்த போது, 'பரிசுப் பொருள் வேண்டாம் என்றதும், வெறும் கையோடு வர கூடாது என்று, பலர் விலை உயர்ந்த, பூங்கொத்துகளை வாங்கி வந்து விட்டனர். நூற்றுக்கணக்கில் குவிந்த இப்பூங்கொத்துகளுக்காக, செலவிடப்பட்ட தொகை மிக அதிகம்; ஓரிரு நாட்கள் மட்டுமே வைத்திருக்க முடியுமெனதால் எல்லாம் வீணாயின.

'அதனால், இம்முறை வரும் பரிசுப் பொருட்களை, அனாதை இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு கொடுக்க இருக்கிறேன். இதைத் தவிர, வரும் பரிசு தெகையோடு, மேலும் கொஞ்சம் பணம் போட்டு, பஸ் ஸ்டாண்டில் நிழல் குடையும், குடிநீர் டாங்கும் வைத்து, அதில், மணமக்களின் பெயரைப் போட்டு, திருமண நாள் அன்று அமைத்தது என, பெரிதாக எழுதலாம்ன்னு இருக்கேன். அதை பார்த்து, யாராவது ஒருவருக்காவது இது போல செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பபட்டால் போதும்...' என்றார். அவர் கூறியது நல்ல யோசனையாக இருந்தது; அத்துடன், விசேஷ நாளின் போது, கோவில் மற்றும் சாலையோரங்களில் மரம் நடலாமே !

பி.சிவராமன், விருதுநகர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 23, 2017 10:42 pm

krishnaamma wrote:கல்யாணப் பரிசு!

தன் மூத்த மகன் திருமணத்தின் போது, யாரும் பரிசுப் பொருள் கொணடு வரக் கூடாது என்று பத்திரிகையிலேயே, அச்சடித்து இருந்தார், பணக்கார நண்பர் ஒருவர். ஆனால், இரண்டாம் மகனின் திருமணத்தின் போது, அவ்வாறு எதுவும் குறிப்பிடவில்லை இது பற்றி, அவரிடம் விசாரித்த போது, 'பரிசுப் பொருள் வேண்டாம் என்றதும், வெறும் கையோடு வர கூடாது என்று, பலர் விலை உயர்ந்த, பூங்கொத்துகளை வாங்கி வந்து விட்டனர். நூற்றுக்கணக்கில் குவிந்த இப்பூங்கொத்துகளுக்காக, செலவிடப்பட்ட தொகை மிக அதிகம்; ஓரிரு நாட்கள் மட்டுமே வைத்திருக்க முடியுமெனதால் எல்லாம் வீணாயின.

'அதனால், இம்முறை வரும் பரிசுப் பொருட்களை, அனாதை இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு கொடுக்க இருக்கிறேன். இதைத் தவிர, வரும் பரிசு தெகையோடு, மேலும் கொஞ்சம் பணம் போட்டு, பஸ் ஸ்டாண்டில் நிழல் குடையும், குடிநீர் டாங்கும் வைத்து, அதில், மணமக்களின் பெயரைப் போட்டு, திருமண நாள் அன்று அமைத்தது என, பெரிதாக எழுதலாம்ன்னு இருக்கேன். அதை பார்த்து, யாராவது ஒருவருக்காவது இது போல செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பபட்டால் போதும்...' என்றார். அவர் கூறியது நல்ல யோசனையாக இருந்தது; அத்துடன், விசேஷ நாளின் போது, கோவில் மற்றும் சாலையோரங்களில் மரம் நடலாமே !

பி.சிவராமன், விருதுநகர்.
மேற்கோள் செய்த பதிவு: 1234502

நல்ல ஐடியா தான் ! சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 26, 2017 6:15 pm

இளம் பெண்களே...

மென்பொருள் துறையில், வேலை பார்க்கும் என் பேத்திக்கு, திடீரென, கை விரல்களில் விறைப்பு ஏற்பட்டு, வலிப்பதாக கூறினாள்.

உடனே, மருத்துவரிடம் சென்று காண்பித்த போது, 'நாள் முழுவதும், கணினியில் வேலை செய்வதுடன், விடுமுறை நாட்களிலும் மொபைல்போனில், 'சாட்' செய்வதன் விளைவு இது...' என்று கூறி, மாத்திரை மற்றும் விரலில் தடவ க்ரீமும் தந்து, விரல்களை நீட்டி, மடக்கும் பயிற்சியையும் சொல்லி தந்தார்.
மூன்று மாதங்களுக்கு பின், வலி சற்று குறைந்தாலும், விரல்கள் பழையபடி, ஆகவில்லை.

காரணம், வேலைப் பளுவினால், அவளால் தொடர்ந்து விரல் பயிற்சியை செய்யமுடியவில்லை. இதனால், காலையில் அலுவலகம் செல்லும் முன், ஐந்து நிமிடம் கோலமாவால், சிறிய கோலம் போடச் சொன்னேன். அதேபோன்று, இரவு உணவுக்கு பின், 'டிவி' பார்த்தபடியே, உதிரிப்பூக்களை தொடுக்கச் சொல்லிக் கொடுத்தேன்.

முதலில், 'இதெல்லாம் சுத்த போர்...' என்று மறுத்தாள். நைசாகப் பேசி, கோலம் போடுவது, பூ கட்டுவது போன்றவற்றை தொடர்ந்து செய்யுமாறு, பார்த்துக் கொண்டேன். அத்துடன், விடுமுறை நாட்களில், துணி துவைக்கும் போது, துணியை பிழிய வைப்பது, சமையலுக்கு புளி கரைப்பது போன்ற வேலைகளிலும் அவளை ஈடுபடுத்தினேன்.

என்ன ஆச்சரியம்... இரண்டே மாதத்தில், விரல்கள், பழைய நிலைக்கு வந்து விட்டன.
'பாட்டி... நீங்கள் சொல்லி தந்த வேலைகளால், விரல்கள் சரியானதோடு, என் மன அழுத்தமும் வெகுவாக குறைந்து விட்டது...' என்று, கூறினாள், பேத்தி.

நாம், முன்பு வீட்டில் செய்து வந்த சிறிய இலகுவான வேலைகளை கூட, இப்போது செய்ய மறுப்பதே இத்தகைய பிரச்னைகளுக்கு காரணம்.

இளம் தலைமுறையினரே... விடுமுறை நாட்களில் உங்கள் உடல் உறுப்புகளுக்கு, கணினி மற்றும் மொபைல் போனிலிருந்து, ஓய்வு கொடுங்கள். தேவையான உடற்பயிற்சி செய்து, வீட்டில் சின்னச் சின்ன வேலைகளை செய்து, குடும்பத்தினரோடு மனம் விட்டு பேசி, மகிழ்ச்சியாக இருந்து, ஆரோக்கியத்தை பேணி காத்திடுங்கள்!

கலா ஜெயக்குமார், சென்னை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 26, 2017 6:18 pm

//காலையில் அலுவலகம் செல்லும் முன், ஐந்து நிமிடம் கோலமாவால், சிறிய கோலம் போடச் சொன்னேன். அதேபோன்று, இரவு உணவுக்கு பின், 'டிவி' பார்த்தபடியே, உதிரிப்பூக்களை தொடுக்கச் சொல்லிக் கொடுத்தேன்.//

நிஜம், நிறைய இளம் பெண்களுக்கு, விரல்களால் செய்யும் வேலைகள் செய்ய வருவது இல்லை.....உதாரணமாக, பூக்கள் தொடுப்பது, கோலம் போடுவது, தைப்பது, பாவாடைகளில் நாடா கோர்ப்பது, காய்கறி களை அரிவாள் மனை இல் நறுக்குவது, ( அரிவாள் மனை இல் , கீழே உட்கார்ந்து நெருங்குவதால் அடிவயிறு பெருக்காது புன்னகை ), பேப்பரில் பொட்டலம் கட்டுவது போன்றவை...இவைகளை செய்வதால் விரல்களுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும்........ஹும்...........யார் சொல்வது?????? சோகம்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 26, 2017 6:19 pm

பலே விவசாயி!

எங்கள் ஊரில், காட்டுப் பகுதிக்குள் உள்ள கோவிலுக்கு சென்று, வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். எதிரே, டூவீலரில் வந்தார், விவசாயி ஒருவர். அவரது டூவீலரில், பிய்ந்து போன தேங்காய் நார் மெத்தை ஒன்று கட்டப்பட்டிருந்ததைப் பார்த்து, அவரை நிறுத்தி, 'இந்த மெத்தையை எதற்கு கொண்டு போறீங்க...' என்று கேட்டேன்.

'கிழிந்து போனதால் தூக்கி எறியப்படும் இந்த தேங்காய் நார் மெத்தைகளை தென்னை விவசாயத்துக்கு பயன்படுத்துவேன்...' என்று சொல்லி, ஆச்சரியப்படுத்தினார்.

'எப்படி?' என்று கேட்ட போது, 'இவற்றை பாளம் பாளமாக அறுத்து, தென்னை மரத்தடியில் குழி தோண்டி பரப்பி உப்பு, மணல் மற்றும் மண்ணுடன் சேர்த்து, சிறிது தண்ணீர் பாய்ச்சுவேன். இந்த கலவைக்கு, தண்ணீரை சேமித்து வைக்கும் சக்தி உண்டு. அப்படியே மக்கி போனாலும், அந்த மண்ணுக்கும், நீரை தக்க வைக்கும் சக்தி உண்டு. சிறிய மழை பெய்தாலும் தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளும். இதனால், தண்ணீர் செலவு அதிகமிருக்காது; தென்னையில் நல்ல மகசூலும் கிடைக்கிறது...' என்றார்.

வீணாய் எறியப்பட்டு, வீதியை நாசமாக்கும் தேங்காய் நார் மெத்தைகளை, சரியாகப் பயன்படுத்தி, மகசூல் பெறும் விவசாயியை பாராட்டினேன். இவரைப் போலவே மற்ற தென்னை விவசாயிகளும் பின்பற்றலாமே!

மீனா குமரவேல், ராஜபாளையம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 26, 2017 6:20 pm

விரிசலை தடுக்க என்ன வழி!

ஆசை, எதிர்பார்ப்பு மற்றும் கனவுகளுடன், உற்றார் உறவினர் புடை சூழ, ஓர் ஆணும், பெண்ணும் புதியதோர் உறவை ஏற்படுத்தி கொள்ளும் புனிதமான பந்தமே, திருமணம்.

இப்பந்தம் தொய்வில்லாமல் தொடர, குறிப்பிட்ட காலம் வரை, இருவரின் உடல்நலமும் சிறப்பாக இருப்பது அவசியம். அது குறையும் பட்சத்தில், பிரச்னைகள் உருவாக வழி வகுக்கிறது.
இன்றைய திருமணங்களில் ஜாதகத்திற்கு முக்கியத்துவம் தரப்படும் அளவிற்கு, உடல் நலத்திற்கு முக்கியத்துவம் தருவதில்லை.

ஒரு பெண் உடலாலும், உள்ளத்தாலும் மிக வலிமையாக இருந்தாலும், ஜாதகத்தில் சில குறைபாடுகள் இருப்பதாக கூறி, திருமணத்தையே நிறுத்தி விடுகின்றனர். அத்துடன், அப்பெண் ஒதுக்கப்படும் கொடுமையும் சில இடங்களில் நிகழ்கின்றன.

பெண்ணின் பெற்றோரும், வரனின் படிப்பு, வேலை, சம்பளத்தை மட்டுமே பெரிதாக பார்க்கின்றனரே தவிர, அவர் எந்த அளவு ஆரோக்கியமாக, கெட்ட பழக்கவழக்கங்கள் இன்றி இருக்கிறார் என்பதை பார்ப்பதில்லை.

ஆணின் பெற்றோரும், தங்கள் பையனுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலும், திருமணத்திற்கு பின் சரியாகி விடும் என்று சுயநலமாக சிந்தித்து, அதை மூடி மறைத்து விடுகின்றனர். இதுவே பிற்காலத்தில் பிரச்னைகள் ஏற்பட வழிவகுக்கிறது.

இதைத் தவிர்க்க, திருமணம் செய்யவிருக்கும் இருவரின் உடல் நிலை குறித்து பெற்றோர், தீர விசாரிப்பது அவசியம்.அப்போது தான், திருமண வாழ்வு மகிழ்ச்சிகரமாக தொடரும்!

ந.தேவதாஸ்,சென்னை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Feb 27, 2017 6:22 am

ஆண் ஒருவன் , உடல் அளவில் திடகாத்திரமாக இருக்கிறான் என்பதை அறிந்துகொள்ள நம் முன்னோர்கள்

ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்குவது

வெண்ணெய்க் கல் தூக்குவது

போன்ற போட்டிகளை நடத்தினார்கள் . அதில் வென்றவனுக்கே பெண்ணை மணம் செய்து கொடுப்பர் .

ஆனால் பெண் ஒருத்தி உடலளவில் திடகாத்திரமாக இருக்கிறாள் என்பதை அறிந்துகொள்ள நம் முன்னோர்கள் என்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Feb 27, 2017 11:20 am

M.Jagadeesan wrote:ஆனால் பெண் ஒருத்தி உடலளவில் திடகாத்திரமாக இருக்கிறாள் என்பதை அறிந்துகொள்ள நம் முன்னோர்கள் என்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை .


பூரிக்கட்டை , கரண்டி போன்றவற்றை சுழற்ற கற்றுக்கொடுத்தார்கள் என்று நினைக்கிறேன் சுட்டுத்தள்ளூ! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

Spoiler:




ஈகரை தமிழ் களஞ்சியம் படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 12 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 12 of 40 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 26 ... 40  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக