Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு
Page 1 of 1
Re: தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு
கட்சித் தாவல் தடை சட்டம் பாயுமா?
-
அதிமுக கொறடா ராஜேந்திரனின் உத்தரவுக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏ.க்களின் மீது கட்சித்தாவல் தடை சட்டம் பாயுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
ஆளும்கட்சி சார்பில் பேரவைத் தலைவரிடம் அதுகுறித்து கடிதம் அளிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட உறுப்பினர்களிடம் பேரவைத் தலைவர் மூலமாக விளக்கம் கோரப்படும். இதன் பிறகே, அவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டம் பாய்ந்து பதவி பறிபோக வாய்ப்பு ஏற்படும்.
-
ஆனால், இதுவரை ஆளும்கட்சி சார்பில் அத்தகைய கடிதங்கள் ஏதும் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம், அவருக்கு ஆதரவு அளித்த பாண்டியராஜனைத் தவிர மற்ற ஒன்பது உறுப்பினர்களின் இருக்கைகள் ஏதும் மாற்றப்படவில்லை. அவர்கள் அதிமுக உறுப்பினர்களுக்கு அருகிலேயே அமர்ந்திருந்தனர்.
-
இதனால், அவர்கள் மீது ஆளும் கட்சி சார்பில் எந்தவொரு நடவடிக்கைக்கும் வாய்ப்பில்லை என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், பாண்டியராஜன் மீது நடவடிக்கைகள் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தினமணி
-
அதிமுக கொறடா ராஜேந்திரனின் உத்தரவுக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏ.க்களின் மீது கட்சித்தாவல் தடை சட்டம் பாயுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
ஆளும்கட்சி சார்பில் பேரவைத் தலைவரிடம் அதுகுறித்து கடிதம் அளிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட உறுப்பினர்களிடம் பேரவைத் தலைவர் மூலமாக விளக்கம் கோரப்படும். இதன் பிறகே, அவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டம் பாய்ந்து பதவி பறிபோக வாய்ப்பு ஏற்படும்.
-
ஆனால், இதுவரை ஆளும்கட்சி சார்பில் அத்தகைய கடிதங்கள் ஏதும் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம், அவருக்கு ஆதரவு அளித்த பாண்டியராஜனைத் தவிர மற்ற ஒன்பது உறுப்பினர்களின் இருக்கைகள் ஏதும் மாற்றப்படவில்லை. அவர்கள் அதிமுக உறுப்பினர்களுக்கு அருகிலேயே அமர்ந்திருந்தனர்.
-
இதனால், அவர்கள் மீது ஆளும் கட்சி சார்பில் எந்தவொரு நடவடிக்கைக்கும் வாய்ப்பில்லை என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், பாண்டியராஜன் மீது நடவடிக்கைகள் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தினமணி
Re: தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு
வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதது ஏன்? எம்.எல்.ஏ. அருண்குமார் விளக்கம்
-
-
தினதனியொரு குடும்பத்தின் பின்னால் அதிமுக செல்வதை
எனது மனசாட்சி ஏற்றுக்கொள்ளாததால், சட்டப் பேரவையில்
சனிக்கிழமை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து
கொள்ளவில்லை என்று அதிமுகவின் கோவை மாநகர்
மாவட்டச் செயலாளரும், கோவை வடக்கு சட்டப் பேரவை
உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் தெரிவித்தார்.
கூவத்தூர் விடுதியில் தங்கியிருந்த அருண்குமார் வெள்ளிக்
கிழமை மதியம் 2 மணி அளவில் புறப்பட்டு
பெரியநாயக்கன்பாளையம் வந்தடைந்தார். இதுகுறித்து தகவல்
தெரிந்ததும் அதிமுக தொண்டர்கள் அவரை
சனிக்கிழமை சந்தித்தனர்.
இது குறித்து அவர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜெயலலிதா இறந்த பின்னர் அதிமுகவில் நிலைமை சரியில்லை.
குடும்ப அரசியலுக்கு துணை போகவேண்டாம் என தொகுதி
மக்கள் தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர்.
எனவே, எனது மனசாட்சிப்படி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல்
வீடு திரும்பி விட்டேன். பதவிக்காகவும், பணத்துக்காகவும் நான்
கட்சியில் இல்லை. ஓ.பி.எஸ்., தீபாவுக்கு ஆதரவு தெரிவிப்பது பற்றி
தொண்டர்களுடன் கூடி ஆலோசித்து முடிவெடுப்பேன் என்றார்.
-
------------------------------
தினமணி
-
-
தினதனியொரு குடும்பத்தின் பின்னால் அதிமுக செல்வதை
எனது மனசாட்சி ஏற்றுக்கொள்ளாததால், சட்டப் பேரவையில்
சனிக்கிழமை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து
கொள்ளவில்லை என்று அதிமுகவின் கோவை மாநகர்
மாவட்டச் செயலாளரும், கோவை வடக்கு சட்டப் பேரவை
உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் தெரிவித்தார்.
கூவத்தூர் விடுதியில் தங்கியிருந்த அருண்குமார் வெள்ளிக்
கிழமை மதியம் 2 மணி அளவில் புறப்பட்டு
பெரியநாயக்கன்பாளையம் வந்தடைந்தார். இதுகுறித்து தகவல்
தெரிந்ததும் அதிமுக தொண்டர்கள் அவரை
சனிக்கிழமை சந்தித்தனர்.
இது குறித்து அவர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜெயலலிதா இறந்த பின்னர் அதிமுகவில் நிலைமை சரியில்லை.
குடும்ப அரசியலுக்கு துணை போகவேண்டாம் என தொகுதி
மக்கள் தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர்.
எனவே, எனது மனசாட்சிப்படி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல்
வீடு திரும்பி விட்டேன். பதவிக்காகவும், பணத்துக்காகவும் நான்
கட்சியில் இல்லை. ஓ.பி.எஸ்., தீபாவுக்கு ஆதரவு தெரிவிப்பது பற்றி
தொண்டர்களுடன் கூடி ஆலோசித்து முடிவெடுப்பேன் என்றார்.
-
------------------------------
தினமணி
Re: தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு
பதவிக்காகவும், ஆட்சிக்காவும் அதிகாரப் போட்டியில் அதிமுகவும், திமுகவும் தனது நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், '' சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகளை காணும் போது அவை அனைத்தும் சட்டப்பேரவை மரபுகளை முற்றிலும் மறந்து நடைபெற்ற செயல்களாகவே உள்ளது. பதவிக்காகவும், ஆட்சிக்காவும் அதிகாரப் போட்டியில் அதிமுகவும், திமுகவும் தனது நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன என்பது இந்த நிகழ்வுகளில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
ஆட்சிக்கு வந்ததும் திடீரென பால் விலை உயர்வு, பேருந்து பயண கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை தேர்தல் அறிக்கையில் கூறாமல், பின் ஏன் உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று தேமுதிக எதிர்க்கட்சியாக இருந்தபோது சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, மக்கள் பிரச்சினைக்காக கேள்வி எழுப்பிய தேமுதிக உறுப்பினர்கள் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதையும், அவையில் இருந்து அகற்றப்பட்ட நிகழ்வுகளையும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
ஆனால், தற்போது நடந்த நிகழ்வுகளை பார்க்கும் போது கட்சி பிளவுப்பட்டு இருக்கின்ற வேளையில், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள அதிமுகவினரும், திமுகவை பொறுத்தவரை அதிமுகவின் இந்த நிலையை பயன்படுத்தி, சந்தடி சாக்கில் உள்ளே புகுந்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக சட்டப்பேரவையில் நடந்த குழப்பத்தை பயன்படுத்த முயன்றது தெளிவாக அத்தனை மக்களுக்கும் புரிந்துள்ளது.
பேரவை தலைவர் தான் தாக்கப்பட்டதாகவும், தன் சட்டை கிழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறார். ஆனால், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியே வந்து பத்திரிகையாளர் மத்தியில், தனது சட்டை கிழிக்கப்பட்டதாக சபாநாயகர் நீலிக்கண்ணீர் வடிப்பதாகக் கூறுகிறார். தனது சட்டையை தானே அவிழ்த்து விட்டதோடு, பத்திரிகையாளர்களை அழைத்து நடந்த சம்பவங்களை தெரிவிப்பது போன்ற ஒரு நாடகத்தை கட்டவிழ்த்துள்ளார் மு.க.ஸ்டாலின்.
எப்படியாவது ஆட்சியை கலைத்து தனது கனவை நிறைவேற்றிக்கொள்ள ஸ்டாலின் திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகம் இது. அவரது கனவு பலிக்காததால், யார் மீதாவது பழியை போட்டுவிட்டு ஆதாயம் தேடவேண்டும் என்று நினைக்கிறார். இரு கட்சிகளும் நடத்தும் நாடகங்களை வாக்களித்த தமிழக மக்கள், அனைத்தையும் கவனித்து கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் கொடுத்துள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கு நன்மை செய்ய முடியுமா என்பதைத் தான் ஆட்சியாளர்கள் பார்க்க வேண்டும். சபாநாயகரை பேசவிடாமல் திமுகவினர் தடுப்பது, மைக்கை பிடுங்கி அவரிடம் நீட்டி பேசு பேசு என அராஜகத்தில் ஈடுபடுவது, கையை பிடித்து இழுப்பது, சட்டையை கிழிப்பது போன்ற சட்டமன்ற நிகழ்வுகளை பார்க்கும்போது திமுக என்றாலே தில்லுமுல்லு கட்சி என என்றாகிவிட்டது.
பேரவைத் தலைவர், உறுப்பினர்களால் செயல்படவிடாமல் தடுக்கப்பட்டுள்ளார். கட்சிகளுக்கும் ஜாதி பேதங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலையோடு செயல்பட வேண்டிய சட்டப்பேரவை தலைவர், சாதியை முன்னிறுத்தி பேசி இருப்பது கண்டனத்துக்குரியது. இரண்டு கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க தயாராகி விட்டார்கள்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
-
தி இந்து
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், '' சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகளை காணும் போது அவை அனைத்தும் சட்டப்பேரவை மரபுகளை முற்றிலும் மறந்து நடைபெற்ற செயல்களாகவே உள்ளது. பதவிக்காகவும், ஆட்சிக்காவும் அதிகாரப் போட்டியில் அதிமுகவும், திமுகவும் தனது நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன என்பது இந்த நிகழ்வுகளில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
ஆட்சிக்கு வந்ததும் திடீரென பால் விலை உயர்வு, பேருந்து பயண கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை தேர்தல் அறிக்கையில் கூறாமல், பின் ஏன் உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று தேமுதிக எதிர்க்கட்சியாக இருந்தபோது சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, மக்கள் பிரச்சினைக்காக கேள்வி எழுப்பிய தேமுதிக உறுப்பினர்கள் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதையும், அவையில் இருந்து அகற்றப்பட்ட நிகழ்வுகளையும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
ஆனால், தற்போது நடந்த நிகழ்வுகளை பார்க்கும் போது கட்சி பிளவுப்பட்டு இருக்கின்ற வேளையில், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள அதிமுகவினரும், திமுகவை பொறுத்தவரை அதிமுகவின் இந்த நிலையை பயன்படுத்தி, சந்தடி சாக்கில் உள்ளே புகுந்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக சட்டப்பேரவையில் நடந்த குழப்பத்தை பயன்படுத்த முயன்றது தெளிவாக அத்தனை மக்களுக்கும் புரிந்துள்ளது.
பேரவை தலைவர் தான் தாக்கப்பட்டதாகவும், தன் சட்டை கிழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறார். ஆனால், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியே வந்து பத்திரிகையாளர் மத்தியில், தனது சட்டை கிழிக்கப்பட்டதாக சபாநாயகர் நீலிக்கண்ணீர் வடிப்பதாகக் கூறுகிறார். தனது சட்டையை தானே அவிழ்த்து விட்டதோடு, பத்திரிகையாளர்களை அழைத்து நடந்த சம்பவங்களை தெரிவிப்பது போன்ற ஒரு நாடகத்தை கட்டவிழ்த்துள்ளார் மு.க.ஸ்டாலின்.
எப்படியாவது ஆட்சியை கலைத்து தனது கனவை நிறைவேற்றிக்கொள்ள ஸ்டாலின் திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகம் இது. அவரது கனவு பலிக்காததால், யார் மீதாவது பழியை போட்டுவிட்டு ஆதாயம் தேடவேண்டும் என்று நினைக்கிறார். இரு கட்சிகளும் நடத்தும் நாடகங்களை வாக்களித்த தமிழக மக்கள், அனைத்தையும் கவனித்து கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் கொடுத்துள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கு நன்மை செய்ய முடியுமா என்பதைத் தான் ஆட்சியாளர்கள் பார்க்க வேண்டும். சபாநாயகரை பேசவிடாமல் திமுகவினர் தடுப்பது, மைக்கை பிடுங்கி அவரிடம் நீட்டி பேசு பேசு என அராஜகத்தில் ஈடுபடுவது, கையை பிடித்து இழுப்பது, சட்டையை கிழிப்பது போன்ற சட்டமன்ற நிகழ்வுகளை பார்க்கும்போது திமுக என்றாலே தில்லுமுல்லு கட்சி என என்றாகிவிட்டது.
பேரவைத் தலைவர், உறுப்பினர்களால் செயல்படவிடாமல் தடுக்கப்பட்டுள்ளார். கட்சிகளுக்கும் ஜாதி பேதங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலையோடு செயல்பட வேண்டிய சட்டப்பேரவை தலைவர், சாதியை முன்னிறுத்தி பேசி இருப்பது கண்டனத்துக்குரியது. இரண்டு கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க தயாராகி விட்டார்கள்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
-
தி இந்து
Re: தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு
நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும். சட்டப்பேரவையில் மறுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்
என்று ஆளுநரிடம் வலியுறுத்தியதாக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
இன்று ஓபிஎஸ் அணியினர் ஆளுநரை சந்தித்தனர். அதற்குப் பிறகு இன்று மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''நேற்றைய பேரவை நிகழ்வுகள் குறித்து ஆளுநரிடம் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் விளக்கினார். நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும், சட்டப்பேரவையில் மறுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தினோம்.
எதிர்க்கட்சிகள் இன்றி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு ஜனநாயக முறைக்கு எதிரானது என்பதையும், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அங்கீகாரம் அளிக்கக்கூடாது என்றும் ஆளுநரிடம் வலியுறுத்தினோம்.
ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரும் 5 நாட்கள் தொகுதிக்கு சென்று வந்த பின் ரகசிய வாக்கெடுப்பு நடத்த ஆளுநரிடம் கோரிக்கை வைத்தோம். மக்களிடம் கருத்துக்களை கேட்க எம்.எல்.ஏக்களை வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தோம்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொகுதிக்கு செல்ல வேண்டும். எம்எல்ஏக்கள் மக்களை சந்திக்க செல்லும்போது தான் பிரச்சினையின் தீவிரம் புரியும்.
ஆளுநர் நல்ல முடிவை அறிவிப்பார் என நம்பிக்கை உள்ளது. ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் நாங்கள் வெற்றி பெறுவோம்'' என்று மாஃபா பாண்டியராஜன் கூறினார்.
-
தி இந்து
என்று ஆளுநரிடம் வலியுறுத்தியதாக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
இன்று ஓபிஎஸ் அணியினர் ஆளுநரை சந்தித்தனர். அதற்குப் பிறகு இன்று மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''நேற்றைய பேரவை நிகழ்வுகள் குறித்து ஆளுநரிடம் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் விளக்கினார். நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும், சட்டப்பேரவையில் மறுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தினோம்.
எதிர்க்கட்சிகள் இன்றி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு ஜனநாயக முறைக்கு எதிரானது என்பதையும், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அங்கீகாரம் அளிக்கக்கூடாது என்றும் ஆளுநரிடம் வலியுறுத்தினோம்.
ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரும் 5 நாட்கள் தொகுதிக்கு சென்று வந்த பின் ரகசிய வாக்கெடுப்பு நடத்த ஆளுநரிடம் கோரிக்கை வைத்தோம். மக்களிடம் கருத்துக்களை கேட்க எம்.எல்.ஏக்களை வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தோம்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொகுதிக்கு செல்ல வேண்டும். எம்எல்ஏக்கள் மக்களை சந்திக்க செல்லும்போது தான் பிரச்சினையின் தீவிரம் புரியும்.
ஆளுநர் நல்ல முடிவை அறிவிப்பார் என நம்பிக்கை உள்ளது. ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் நாங்கள் வெற்றி பெறுவோம்'' என்று மாஃபா பாண்டியராஜன் கூறினார்.
-
தி இந்து
Re: தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு
பிப்ரவரி 20
-
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன்
சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை
வரும் 27ம் தேதி நடைபெறும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன்
சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை
வரும் 27ம் தேதி நடைபெறும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Re: தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு
அரசு அலுவலங்களில் ஜெ. படத்தை அகற்றக் கோரி மக்கள் அதிகாரம் அமைப்பு ஆர்ப்பாட்டம்
-
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட
ஜெயலலிதாவின் படத்தை அரசு அலுவலகங்கள், பாடப்
புத்தகங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று மக்கள்
அதிகாரம் அமைப்பினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மெரீனா கடற்கரை அருகே நல்லடக்கம் செய்யப்பட்ட
ஜெயலலிதாவின் உடலை அங்கிருந்து அகற்றுமாறும் இந்த அமைப்பு
தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
-----------------
தமிழ் ஒன் இந்தியா
-
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட
ஜெயலலிதாவின் படத்தை அரசு அலுவலகங்கள், பாடப்
புத்தகங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று மக்கள்
அதிகாரம் அமைப்பினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மெரீனா கடற்கரை அருகே நல்லடக்கம் செய்யப்பட்ட
ஜெயலலிதாவின் உடலை அங்கிருந்து அகற்றுமாறும் இந்த அமைப்பு
தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
-----------------
தமிழ் ஒன் இந்தியா
Re: தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு
பிப்ரவரி 21
-
திமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்பு
-
சட்டப்பேரவையில் நிகழ்ந்த ஜனநாயக விரோத செயல்களைக்
கண்டித்து திமுக நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில்
காங்கிரஸ் பங்கேற்கும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர்
திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
--
-
திமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்பு
-
சட்டப்பேரவையில் நிகழ்ந்த ஜனநாயக விரோத செயல்களைக்
கண்டித்து திமுக நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில்
காங்கிரஸ் பங்கேற்கும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர்
திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
--
Similar topics
» தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு
» தற்போதைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
» செய்திகள் - தொடர் பதிவு
» செய்திகள் - தொடர் பதிவு
» தற்போதைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
» செய்திகள் - தொடர் பதிவு
» செய்திகள் - தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|