புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று தை பூசம்  Poll_c10இன்று தை பூசம்  Poll_m10இன்று தை பூசம்  Poll_c10 
21 Posts - 70%
heezulia
இன்று தை பூசம்  Poll_c10இன்று தை பூசம்  Poll_m10இன்று தை பூசம்  Poll_c10 
6 Posts - 20%
viyasan
இன்று தை பூசம்  Poll_c10இன்று தை பூசம்  Poll_m10இன்று தை பூசம்  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
இன்று தை பூசம்  Poll_c10இன்று தை பூசம்  Poll_m10இன்று தை பூசம்  Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
இன்று தை பூசம்  Poll_c10இன்று தை பூசம்  Poll_m10இன்று தை பூசம்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று தை பூசம்  Poll_c10இன்று தை பூசம்  Poll_m10இன்று தை பூசம்  Poll_c10 
213 Posts - 42%
heezulia
இன்று தை பூசம்  Poll_c10இன்று தை பூசம்  Poll_m10இன்று தை பூசம்  Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
இன்று தை பூசம்  Poll_c10இன்று தை பூசம்  Poll_m10இன்று தை பூசம்  Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்று தை பூசம்  Poll_c10இன்று தை பூசம்  Poll_m10இன்று தை பூசம்  Poll_c10 
21 Posts - 4%
prajai
இன்று தை பூசம்  Poll_c10இன்று தை பூசம்  Poll_m10இன்று தை பூசம்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இன்று தை பூசம்  Poll_c10இன்று தை பூசம்  Poll_m10இன்று தை பூசம்  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
இன்று தை பூசம்  Poll_c10இன்று தை பூசம்  Poll_m10இன்று தை பூசம்  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
இன்று தை பூசம்  Poll_c10இன்று தை பூசம்  Poll_m10இன்று தை பூசம்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இன்று தை பூசம்  Poll_c10இன்று தை பூசம்  Poll_m10இன்று தை பூசம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்று தை பூசம்  Poll_c10இன்று தை பூசம்  Poll_m10இன்று தை பூசம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று தை பூசம்


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Thu Feb 09, 2017 9:42 am

இன்று தை பூசம்
- - அண்ணாமலை சுகுமாரன்

தை பூசம் என்றதுமே பெரும்பாலும் நமக்கு வள்ளல்பெருமானின் வடலூர்மட்டுமே நினைவுக்கு வரும் .
"என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் தானே "என இறவாமைக்கு வழிகூறிய வள்ளலாரை நினைவுறுத்தும் நாள் .இது .
இறவாமையை ஏன் ஒழிக்கவேண்டும் என்றால் அப்போதுதான் பிறவாமை கிடைக்கும் .
பிறவாமை கிடைக்க நம்மிடம் சேர்ந்திருக்கும் கர்ம வினைகள் தீரவேண்டும் .
பிறவாமை எனினில் ஆன்மா உற்பத்தி யாகும் இடத்தில் ஒடுக்குதல் வேண்டும் ,அதுவே தானே இறை ஆகுதல் .நிலை ஆகும்
இதற்க்கு வேண்டிய சன்மார்க்க மார்க்கங்களை அருளிய வள்ளல் தான் அருட்பெருஞ்சோதி ராமலிங்கர் .அவர்கள்

வடலூர் சத்திய தருமச்சாலைக்கு அருகில் ஒரு ஒளித் திருக்கோயிலை 1871-ஆம் ஆண்டு வள்ளலார் அமைக்கத் தொடங்கினார். அந்தத் திருக்கோயிலுக்குச் ‘சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபை‘ என்று பெயர் சூட்டினார்.
25.1.1872, தை மாதம் 13-ஆம் நாள் தைப்பூசத் தினத்தன்று முதல் ஒளி வழிபாட்டு விழா நடைபெற்றது. அது அவரின் அருளால் இன்றுவரை தொடர்கிறது .

ஆயினும் தை பூசத்திருநாள் வடலூரில் மட்டும் கொண்டாடப்படுவதில்லை அது முருகனுக்கும் உகந்த நாள் .
சைவ திருத்தலங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது .
அவர்களைப்பற்றிய வரலாற்று செய்திகளையும் ,இதர செய்திகளையும் இங்கேகாணப்போகிறோம் .

சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கணக்கீட்டிற்கு, சந்திரமானம் என்றும், சூரியனை அடிப்படையாகக் கொண்ட கணக்கீட்டிற்கு, சவுரமானம் என்றும் பெயர்.
தை என்ற சொல், திஷ்யம் என்ற சொல்லில் இருந்து வந்தது.எனப்படுகிரது திஷ்யம் என்றால் பூச நட்சத்திரம்.
திஷ்யம்-தைஷ்யம்- தைசம்- தை என, மாற்றம் கொண்டது.
தைசம் என்றால் பூச நட்சத்திரம் என, கதிரைவேற்பிள்ளையின் சங்கத்து அகராதி கூறுகிறது.
பூச நட்சத்திரத்தில், முழு நிலா வரும் நாள் தான், தைப் பூசம்.
அந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் தான், தை மாதத்திற்கு அந்தப் பெயர் வந்தது. சங்க இலக்கியங்களில், 'தைஇயத் திங்கள்' என, தை மாதம் குறிப்பிடப்படுகிறது. தைசப்பூசத்தன்று, முழுநிலா நாளில், நிலத்தில் நீர் ஊறும் என்பது சங்க கால மக்கள் நம்பிக்கை.
புஷ்யம் என்ற சொல்லுக்கு புஷ்டி என்று அர்த்தம். அந்த அடிப்படையில், தையில் நீர் வளம் பெருகி, உணவு உற்பத்தி அதிகரித்து நாடு நலமாக இருக்க வேண்டும் என, நோற்பது தான் தைந்நீராடல்.

சந்திரமான கணக்கின்படி, மார்கழிப் பவுர்ணமியில் விரதத்தை துவக்கி, தை பவுர்ணமியில் அதாவது தைசப் பூசத்தன்று முடிப்பது தைந்நீராடல். சங்க இலக்கியம் இதனை 'தவத் தைந்நீராடல்' என, குறிப்பிடுகிறது
இந்த விரதத்தை பெண்கள் தான் இருப்பர்.
மேலும் தைப்பூசம் பற்றிய குறிப்பு, மகாவம்சம் என்ற இலங்கை வரலாறு பற்றிய நூலில் முதன்மையாக காணப்படுகிறது. புத்தர் வான்வழியாக இலங்கை சென்ற போது, இலங்கையின் பூர்வ குடிகளான யட்சர்கள், மாவலி கங்கையாற்றின் கரையில், தைப்பூச விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர் என, மகாவம்சம் குறிப்பிடுகிறது. யட்சர்கள், மங்கோலிய இனத்தவர்கள். அவர்களின் தலைவன் குபேரன். மிகப் பழமையான, தர்ம சூத்திர நூலான ஆபஸ்தம்ப சூத்திரத்தில், தைப்பூசத்தன்று, குபேரனுக்கு பால் பொங்கல் படைத்து வழிபடுவது பற்றிய குறிப்பு உள்ளது.அதைக்கொண்டு தைப்பூசம் கொண்டாடும் வழக்கம் மிக நீண்ட காலமாகவே வந்திருக்கிறது என்பது தெரியவருகிறது .

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.
27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும்.
தை மாதத்திலே வரும் பூச நட்சத்திரம் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப்படுகின்றது.
தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக (பூரணை நாளாக) இருக்கும்.

தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமாகும். அன்றைய தினம் அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவார்கள்.
இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில் களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

தேவர்களின் குருவாகக்கொள்ளப்படும்( பிரகஸ்பதி )குரு பகவான்,பூச நட்சத்திரத்தின் தேவதையாகக் கொள்ளப்படுகின்றார். இவர் அறிவின் தேவதையாகவும் போற்றப்படுகின்றார். பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் இருவருக்கும் சிவபிரானாகிய நடராசப்பெருமான் சிவதாண்டமாடிக் காணுப்படி செய்தநாளாகவும் தைப்பூசம் விளங்குகின்றதுஇது நிகழ்ந்த இடம் சிதம்பரம் .
அந்த சிதம்பரத்தில் தை பூசம் சிறப்பாகக்க்கொண்டாடப்பெறுகிறது .
அன்று "திருப்பாவாடை" எனும் மிகுதியான திருவமுது விதவிதமாக செய்து இறைவனை ஆராதிப்பது பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது .
அதற்க்கு தேவையான கட்டளைகளை தக்க சாசனங்கள் மூலம்
தரப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது .சோழர்களின் கல்வெட்டுகளும் இது குறித்து உள்ளதாகக் கூறப்படுகிறது .
ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
இத் தைபூசத்திருநாளிலே தொடங்கும் செயல்கள் தொய்வின்றி இனிதே நிறைவேறும் என்பது காலம் காலமாக நாம் கொண்டுள்ள நம்பிக்கையாகும் “தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்” என்பது பழமொழியாக அமைந்துள்ளது .
இன்று வியாழக்கிழமை பூச முழு நிலவு சேர்ந்து வருவது மிக சிறப்பானது
இவ்வாறு இன்னமும் பல தகவல்கள் தைப்பூசம் பற்றி இருக்கின்றது .
பிறகு காணலாம் .
அண்ணாமலை சுகுமாரன்
9/2/17

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 09, 2017 11:05 am

"தை" விளக்கம் , வடலூர் ஒளி வழிப்பாட்டு திருவிழா,  “தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்”,
செய்திகள் ,பதிவு அருமை. நன்றி சுகுமாரன் அவர்களே.
ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri Feb 10, 2017 8:46 am

தங்கள் பாராட்டுதலுக்கு நன்றி நண்பரே
எனக்கு ஒரு சந்தேகம் பொதுவாக ஈகரையில் கட்டுரைகள் பொது எனும் பிரிவில் நான் பதிவிட்டு வருகிறேன் .
இப்போது வரலாறு என்பதற்குத் தனிப் பிரிவு இருப்பதை காண்கிறேன் .
கட்டுரைகள் பொதுவில் இடும் கட்டுரையை வரலாறு பிரிவிலும் பதிவிடலாமா ?
எழுதினால் வரும் பாவம் படித்தால் தான் போகும்
அதிகம் படித்தால் எழுதியதின் பயன் கிடைக்கும் என நம்புகிறேன்
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 10, 2017 9:26 am

sugumaran wrote:தங்கள் பாராட்டுதலுக்கு நன்றி நண்பரே
எனக்கு ஒரு சந்தேகம் பொதுவாக ஈகரையில் கட்டுரைகள் பொது எனும் பிரிவில் நான் பதிவிட்டு  வருகிறேன் .
இப்போது வரலாறு என்பதற்குத் தனிப் பிரிவு இருப்பதை காண்கிறேன் .
கட்டுரைகள் பொதுவில் இடும்  கட்டுரையை வரலாறு பிரிவிலும் பதிவிடலாமா ?
எழுதினால் வரும் பாவம்   படித்தால் தான் போகும்
அதிகம்  படித்தால்  எழுதியதின் பயன் கிடைக்கும் என நம்புகிறேன்
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
மேற்கோள் செய்த பதிவு: 1233596

இரு பிரிவில் போடவேண்டிய அவசியமில்லை என்றே படுகிறது.
பொது பிரிவில் இடும் கட்டுரைகள் உங்கள் சொந்த கட்டுரையாக இருக்கலாம்.
சொந்த கட்டுரையில் பெரும்பான்மையாக  மத சம்பந்தமான விஷயங்கள் ,புராணங்கள் மேற்கோள் இடும்போது , அவைகளை ஆன்மீக பிரிவில்  போடலாம்.
மத சம்பந்தமற்ற அரசியல் வரலாறுகள் "வரலாறுகள்" பகுதியில் பதிவிடலாம்   
தெளிவு படுத்தி உள்ளேன் என நினைக்கிறேன்.


ரமணியன்  



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக