Latest topics
» கருத்துப்படம் 27/09/2024by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் பார்வை: போகன் - இணைந்த கைகளின் மேஜிக்!
2 posters
Page 1 of 1
முதல் பார்வை: போகன் - இணைந்த கைகளின் மேஜிக்!
தனி நபரின் தணியாத பணத்தாசையும், அதனால் வரும்
சிக்கல்களும், அதற்கான விளைவுகளுமே 'போகன்'.
-
மன்னர் பரம்பரையைச் சேர்ந்த அரவிந்த்சாமி எப்போதும்
அரசனைப் போல ஆடம்பரமாக வாழவே ஆசைப்படுகிறார்.
அதற்காக பணத்தைக் கொள்ளையடிக்கிறார்.
-
அப்படி ஒரு கொள்ளை சம்பவத்தின்போது போலீஸ் அதிகாரி
ஜெயம்ரவியின் அப்பா நரேன் கைதாகிறார். இதிலிருந்து
தந்தையை ஜெயம்ரவி எப்படிக் காப்பாற்றுகிறார், குற்றவாளியை
கண்டுபிடித்தாரா, அவருக்கு சரியான பாடம் புகட்டினாரா என்று
வேகம் எடுக்கிறது திரைக்கதை.
-
'ரோமியோ ஜூலியட்' படத்துக்குப் பிறகு கமர்ஷியல் ஆக்ஷன்
படத்தை இயக்கிய விதத்தில் இயக்குநர் லட்சுமண் கவனம்
ஈர்க்கிறார்.
-
அரவிந்த்சாமியும், ஜெயம் ரவியும் படத்தை மொத்தமாக தங்கள்
தோள்களில் தாங்கி நிறுத்துகிறார்கள். அரவிந்த்சாமியின் குரல்,
உடல்மொழி, சொடுக்கு போடும் ஸ்டைல், கூர்மையான பார்வை,
போகிற போக்கில் எளிய மக்களின் மொழியில் பேசுவது என
எந்த அலட்டலும் இல்லாமல் ஸ்கோர் செய்கிறார்.
-
காருக்குள் அமர்ந்துகொண்டு தமிழ்ப் பாடல்களுக்கு டான்ஸ்
ஆடுவதாக கைகளை அசைக்கும்போது அரவிந்தசாமிக்கு அப்ளாஸ்
அள்ளுகிறது
-
ஜெயம் ரவி பொறுப்பான போலீஸ் அதிகாரியாகவும், சிக்கல் மிகுந்த
சூழலைக் கையாளும் வேறு நபராகவும் இருவித பரிமாணங்களை
சிறப்பாக செய்திருக்கிறார். ரொமான்ஸ், பாசம், கோபம், ஆதங்கம்,
சமயோசிதம் எல எல்லாவற்றிலும் தன் முத்திரையைப் பதிக்கிறார்.
-
அரவிந்த்சாமிக்கு ஈடாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதிலும்,
திரையில் ஆக்கிரமிப்பு செய்வதிலும் ஜெயம் ரவி கம்பீரம்.
-
ஹன்சிகாவின் நடிப்பு துருத்தாமல், உறுத்தாமல் ரசிக்க வைக்கிறது.
சின்ன சின்ன நுட்பமான அசைவுகளிலும் அவரின் மெனக்கெடல்
தெரிகிறது. பின்னணிக் குரலும் சரியாகப் பொருந்துகிறது.
-
பொன்வண்ணன், 'ஆடுகளம்' நரேன், நாசர், அக்ஷரா,
நாகேந்திர பிரசாத், வருண் ஆகியோர் பொருத்தமான பாத்திர
வார்ப்புகள்.
-
சவுந்தர்ராஜனின் கேமரா படத்தின் செழுமைக்கு முழு ஒத்துழைப்பு
அளித்துள்ளது. இமான் இசையில் வாராய் நீ வாராய், கூடுவிட்டு கூடு
பாயும், செந்தூரா பாடல்கள் ரசனை. டமாலு பாடலைக் கொஞ்சம்
குறைத்திருக்கலாம். பின்னணியிலும் இமான் இன்னிசை
அளித்திருக்கிறார்.
-
அரவிந்த்சாமி கொள்ளை அடிக்கும் விதம், கனவுப் பாடல் முடிந்ததும்
அதற்கு அரவிந்த்சாமி அளிக்கும் கமென்ட், ஒரு கட்டத்தில் இப்படியே
இருந்துவிடுவதாக அரவிந்த்சாமியிடம் ஜெயம்ரவி சொல்வது என
இயக்குநரின் புத்திசாலித்தனம் படத்தில் தெரிகிறது.
-
பொன்வண்ணன், நாசர், அக்ஷரா என்று ஒவ்வொருவராக அடுத்தடுத்து
கொலை செய்யப்படுவதை போலீஸ் கண்டுபிடிக்காதா? டெல்லியில்
இருந்த நரேன் சென்னை வந்து சிக்குவது எப்படி? ஹன்சிகா கமிஷனர்
அலுவலகத்துக்குள் திடீரென எப்படி வந்தார்?
-
எல்லோரிடமும் நடந்ததைச் சொல்லி தன்னை நிரூபிக்க முயற்சி
செய்யும் ஜெயம் ரவி, ஹன்சிகாவிடம் மட்டும் அப்படிச் செய்யாமல்
வெறுமனே பேசிக் கொண்டிருப்பது ஏன்? அந்த ஆன்மா வித்தை எப்படி
தொலைதூரத்திலிருந்தும் செயல்பட முடிகிறது போன்ற சில கேள்விகள்
எழுகின்றன.
-
இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் 'போகன்' படம் அரவிந்த்சாமி,
ஜெயம்ரவியின் இணைந்த கைகளால் மேஜிக் நிகழ்த்துகிறது.
-
----------------------------------
தி இந்து
sujathakarthik- புதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 25/01/2017
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|