ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!

+3
T.N.Balasubramanian
Hari Prasath
krishnaamma
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Empty ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!

Post by krishnaamma Thu Feb 02, 2017 10:33 pm

ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!

ஆணின் ஆட்டம்
பதினாறு வரைதான்

பிறந்த போது மட்டுமே கொண்டாடப் பட்டு

வாழ்நாள் முழுவதும் திண்டாட்டத்தை சந்திக்கும் பிறவிதான் ஆண்மகன்.

பத்து வயது வரை பறந்து திரியும்
பறவைபோல இருப்பவன்...

பள்ளிக்கல்வியில் மேலே படிக்கத் தொடங்கும் போது தொடங்குகிறது... சோதனை
"
டேய் இப்போருந்தே ஒழுங்கா படி. இல்லேன்னா 10 க்கு அப்புறம் காலேஜெல்லாம் கெடையாது ஐடிஐ தான்.... தெரிதா?"

ப்ளஸ்1 போகும்போது....
"ரெண்டே ரெண்டு வருஷம் உயிரை விட்டு படிச்சேன்னா... இன்ஜினீயரிங்.

இல்லேன்னா ஏதாவது ஒர்க்ஷாப்தான்.."

உயிரைவிட்டு படித்து ஒரு என்ஜினியரிங் காலேஜில் சேர்ந்தபின்...

" ஒங்க பாட்டன் பூட்டன் எவனும் சொத்து சேத்து வச்சிட்டுப் போகல..

2 லட்சம் பேங்கு லோன்லதான் படிக்கிறங்கற நெனப்பு இருக்கட்டும்...

சும்மா மைனர்களின் வேஷம் போட்டீன்னா குடும்பம் நடுத்தெருவுலதான்.."

நான்கு வருஷம் படிப்பு படிப்பு என உயிரை விட்டால்...
ஏழாவது செம்மில் 'கிலி' பிடிக்கும். Placement ல புடிங்கிடுச்சுன்னா.. எல்லாமே போச்சு.

உசிரோட இருந்து பிரயோஜனமில்ல.(

அப்பா, அம்மா இருவரின் வசனம் அவ்வப்போது மிரட்டும்.
"
பொட்டை புள்ளைன்னா பரவால்ல.

கடனை ஒடனை வாங்கி 10 ங்கறது 20 பவுனா போட்டா எவன் கையிலயாவது புடிச்சுக் குடுத்துட்டு வெடுக்குன்னு இருக்கலாம்.

நீ ஆம்பளை! நாளைக்கு ஒரு நல்ல வேலையிருந்தாத்தான் ஒரு மனுசனா ஊருக்குள்ள தலைநிமிந்து நடக்கமுடியும்.

வாங்குன கடனைக் கட்டனும் உங்க அக்காளை ஒரு நல்ல எடத்துல புடிச்சுக் குடுக்கனும்.

எல்லாம் உங்கையுலதான் இருக்குது..."

ஒரு வழியாக வேலைக்கு சேர்ந்தால்....

பெருநகரத்தில் அகப்பட்ட சிறுமீனாக மிரண்டு அந்த ஆடம்பரங்களில் கரைந்து போகாமல் குடும்பத்தின் கனவுகளை கலைத்துப் போடாமல்..

எந்த ஓட்டலில் குறைந்த விலையில் சோறுகிடைக்கும் என்று அலைந்து..

இரண்டு நாள் விடுமுறைக்கு பஸ்கட்டணத்தை பயத்துடன் கணக் கிட்டு மலிவு கட்டண பஸ்சில் இடுப்பொடிய பயணம் செய்து

கவலையோட விசாரிக்கும் பெற்றோரிடம் மகிழ்ச்சியாக இருப்பதாக நடித்துக் கொண்டு...

உள்ளுக்குள் தனியாக எல்லாவற்றையும்
சமாளித்து....

கல்விக்கடன், குடும்பக்கடன் அனைத்தையும் சமாளித்து மீள்வதற்குள்

"எத்தனை நாளைக்கு இப்படி ஓட்டல்ல சாப்பிட்டு ஒடம்பைக் கெடுத்துக்கவ..

சீக்கிரம்
ஒரு கல்யாணத்தைப் பண்ணீட்டா.. எங்க கடமை முடிஞ்சுறும்..."
இங்கேதான் தொடங்குகிறது..

ஒரு ஆணின் இரண்டாம் கட்டம் ...

திருமணம் நடந்து
மனைவியிடம் அன்பாக நடந்து
கொண்டால்!!!!

"அய்யோ சாமி காணாதக் கண்டவன் மாதிரி இந்தத் தாங்கு தாங்கறான்"
என்று குடும்பத்தினரிடமும்

அதே நேரத்தில் குடும்பத்தில் கொஞ்சம் அக்கறை காட்டினாலும்....

" ஒங்களுக்குன்னு ஒரு குடும்பமாயிருச்சு...

இத்தனை காலம் சம்பாதிச்சதைப் பூராம்
தொடைச்சிப் புடுங்கியாச்சு.. இனிபோதும்"
என்று பெண்டாட்டியிடமிருந்து புறப்படும்
ஒரு உத்தரவு....

வேலை செய்யும் இடத்தில் இருக்கும் நெருக்கடியை வீட்டில் சொல்லக்கூடாது.

வீட்டில் கிளம்பும் புகைச்சலை வெளியில் சொல்லக்கூடாது.

ஆசை 60 நாள் மோகம்30 நாள்...

திருமண வாழ்வில் சிறு சிறு ஊடல்கள் சண்டையாகும் .

பெண்ணின் குரல் ஓங்கும்போது ஆணின் கவுரவம் குன்றிப்போகும்

என்கிற அச்சத்தில் வளைந்து கொடுத்து வளைந்து கொடுத்து முதுகெலும்பு காணாமல் போகும்

பெற்றவர்களையும் விட்டுக் கொடுக்காமல்,

மனைவி பேச்சையும் தட்ட முடியாமல்

இரண்டு பக்கமும் ஆதரவு கொடுத்து

இரண்டுபக்கமும் கெட்ட பெயர் வாங்கி..

பிள்ளைகள் பெற்று வம்சத்தை விருத்திசெய்து,

அவர்களை வளர்த்து ஆளாக்கி அவர்களது ஆசைகளை தேவைகளைப் பூர்த்தி செய்ய அல்லாடும்போது

மனைவியே 'கஞ்சன் ' என்று சொன்னாலும் அதையும் புன்சிரிப்புடன் ஏற்றுக் கொள்ளவில்லை யெனில்

'சிடுமூஞ்சி'யைக் கட்டிகிட்டு சீரழிகிறேன் என்னும் புலம்பலையும் சகித்துக் கொள்ளவேண்டும்.

குடும்பத்தில் விசேஷம் என்றால்

மனைவி மக்களுக்கு நல்லதாய் தேடி தேடி துணிமணி வாங்கிக் கொடுக்கும் ஆண்பிள்ளை

தனக்கு துணி எடுக்க தள்ளுபடிக்காக அலைவான்.

தீபாவளி திருநாள் என்றால் எல்லாருக்கும்
நல்லபடியாக செய்து..

உறவு & நட்பில் வரும்....

கல்யாணம் கருமாதிக்கு மொய் எழுத பொய்சொல்லி கடன் வாங்கி,,

வட்டி கனவில் வந்து மிரட்ட கனவில் கூட பயந்து ஒடுங்க...

கடன் தொல்லைகளால் மனைவியிடம் கலவி மறந்தாலோ?

"ம்க்கும் இந்த வூட்ல நான் ஒரு மனுஷி இருக்கேங்கற நெனப்பே இல்ல...

இந்த ஆம்பளைக்கு..," என்கிற மாபெரும் பழிவரும்.

உறவில் யாராவது சொந்தமாக

ஒரு வீடு வாங்கினாலோ?

கார் வாங்கினாலோ?

அந்த நிமிஷம் புறப்படும் விமரிசனக் கனைகள்...

"ஊரு ஒலகத்துல ஒவ்வொரு ஆம்பளைக எப்படியெல்லாம் சாமர்த்தியமா பொளைச்சு குடும்பத்த மேலுக்குக் கொண்டு வராங்க..

எனக்கும் வாச்சுதே ஒன்னு...

அரைக்காசுக்கு பொறாத மனுசன்...

எல்லாம் நான் வாங்கி வந்த வரம்..

"என்கிற தலைக்கணம் தொடங்கும்.

குடும்பத்தில் குழந்தைகளிடம் கரிசனையாக நடந்து கொண்டால்... '

பிள்ளைகளை செல்லம் கொடுத்து கெடுக்கிறாய்'

கண்டிப்பாக நடந்து கொண்டாலோ?... '

பெத்த புள்ளைங்கன்னு துளியாவது பாசம் இருக்கா???

எப்பப் பாரு கரிச்சுக் கொட்டறது'

அப்பா.. அம்மாவுக்கு வயதாகி அவர்கள் படுக்கையில் விழுந்து

அதை பார்க்கும் நிலை வந்தால்

பெண்களுக்கு
அப்போது வரும் ஒரு தர்ம ஆவேசம்.

'ஒங்க அப்பா அம்மா காடு தோட்டம் காரு பங்களான்னு வாங்கி வெச்சிருக்காங்களா?
என்னால முடியாது ..
வழிக்க..
*
உங்க தம்பிய பாக்கச் சொல்லுங்க..

அமைதியான ஒரு ஆண்மகனுக்கு வாழ்நாளெல்லாம் வசவுதான்,

பழியும், தூசனமும், நிந்தனையும் நிழல் போல அவனைத் தொடர்ந்து வரும்.

ஒருபெண் தன்பிள்ளையை பத்து மாதம் சுமந்து பெற்றுத்தருகிறாள்

அதன் பெருமையையும் உரிமையையும் காலமெல்லாம் அவள் அனுபவிப்பாள்.

ஆனால் வாழ்நாள் முழுவதும்

ஒரு குடும்பத்தையே தன் நெஞ்சில் சுமக்கும்
ஒரு ஆணுக்கு

எந்தக் பெருமையும் இல்லை .

எந்தப்புகழும் இல்லை.

புகழ் வேண்டாம், பழிவராமல் இருந்தால் போதாதா?

இத்தனை சோதனைகளையும் தாண்டி ஒருவன் வாழ்க்கையில் வெற்றி பெற்றால் அப்போதும்
"
நான் மட்டும் இந்த ஆளை கட்லேன்னா.. இந்த மனுசன் ரோடு ரோடா பொறுப்பில்லாம சுத்திகிட்டிருந்திருப்பாரு

இன்னிக்கு இந்த வீடு காரு சொத்து சொகம் எல்லாம் என்னோட ராசி..

என் சாமர்த்தயத்தில நான் கொண்டு வந்தேன் என்பர்!!!!

ஆணாய்ப் பிறந்தவனின் ஆட்டமெல்லாம் *
25 வயது வரைதான்

அதன்பிறகு அவன் சாகும்வரையிலும்

"கண்ணுக்குத் தெரியாத ஒரு நுகத்தடி

அவன் கழுத்தின்மீது ஏறி அமர்ந்து அவனை அழுத்திக் கொண்டேயிருக்கும்...................

whatsup இல் வந்தது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Empty Re: ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!

Post by krishnaamma Sat Feb 04, 2017 7:50 pm

அடப்பாவமே.............யாரும் பின்னூட்டம் போடவில்லையா?.........ஆண்கள் பாவம் என்று பதிவு போட்டிருக்கிறேன், யாரும் சப்போர்ட் செய்ய வில்லையே? ......ஆச்சர்யம் தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Empty Re: ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!

Post by Hari Prasath Sat Feb 04, 2017 7:58 pm

அருமையான பகிர்வு ,படிக்கும்போதே பயமாக இருக்கிறது.



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Empty Re: ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!

Post by Hari Prasath Sat Feb 04, 2017 8:02 pm

krishnaamma wrote:அடப்பாவமே.............யாரும் பின்னூட்டம்   போடவில்லையா?.........ஆண்கள் பாவம் என்று பதிவு போட்டிருக்கிறேன், யாரும் சப்போர்ட் செய்ய வில்லையே? ......ஆச்சர்யம் தான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1233226

ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  AGJxXSeNmYZvAAAAAElFTkSuQmCC நான் இருக்கேன்.
சசி அக்கா வந்துரப்போறாங்க..எஸ்கேப்அய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லை



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Empty Re: ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!

Post by krishnaamma Sat Feb 04, 2017 8:04 pm

Hari Prasath wrote:அருமையான பகிர்வு ,படிக்கும்போதே பயமாக இருக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1233231

பயந்து ஒன்றும் ஆகாது ஹரி...........தைரியமாய் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டியது தான்..........
"உரலில் தலை கொடுத்தாகிவிட்டது.......உலக்கைக்கு பயந்தால் ஆகுமா".....புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Empty Re: ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!

Post by krishnaamma Tue Feb 07, 2017 12:02 am

Hari Prasath wrote:
krishnaamma wrote:அடப்பாவமே.............யாரும் பின்னூட்டம்   போடவில்லையா?.........ஆண்கள் பாவம் என்று பதிவு போட்டிருக்கிறேன், யாரும் சப்போர்ட் செய்ய வில்லையே? ......ஆச்சர்யம் தான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1233226

ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  AGJxXSeNmYZvAAAAAElFTkSuQmCC நான் இருக்கேன்.
சசி அக்கா வந்துரப்போறாங்க..எஸ்கேப்அய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லை

நன்றி ஹரி, சசி இதுவரை இதை பார்க்கவில்லை ஜாலி ஜாலி ஜாலி......@சசி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Empty Re: ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!

Post by T.N.Balasubramanian Tue Feb 07, 2017 1:54 pm

ஞாயிறு அன்றும் பிசி .
திங்களன்றும் பிசி. 
இப்போதுதான் இதை பார்த்தேன்.
வாழ்க்கையை அனுபவித்து யதார்த்த உண்மையை 
கஷ்டப்பட்டு பெற்றோருக்கு தெரியாமல், மனைவிக்கு தெரியாமல் 
எழுதி இருக்கிறார் மனுஷர் பாவம் .
அடுத்த ஜென்மத்தில் பெண்ணாக பிறக்கட்டும் அவர்  அழுகை அழுகை
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Empty Re: ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!

Post by krishnaamma Sun Feb 19, 2017 12:00 pm

T.N.Balasubramanian wrote:ஞாயிறு அன்றும் பிசி .
திங்களன்றும் பிசி. 
இப்போதுதான் இதை பார்த்தேன்.
வாழ்க்கையை அனுபவித்து யதார்த்த உண்மையை 
கஷ்டப்பட்டு பெற்றோருக்கு தெரியாமல், மனைவிக்கு தெரியாமல் 
எழுதி இருக்கிறார் மனுஷர் பாவம் .
அடுத்த ஜென்மத்தில் பெண்ணாக பிறக்கட்டும் அவர்  அழுகை அழுகை
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1233489

ஜாலி ஜாலி ஜாலி ............... ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ................ சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Empty Re: ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!

Post by M.Jagadeesan Sun Feb 19, 2017 2:49 pm


ஆணுக்கு இருக்கின்ற சோதனைகளைக் காட்டிலும் , பெண்ணுக்கு இருக்கின்ற சோதனைகள்தான் அதிகம் . பிறக்கும்போதே ஒரு பெண் வெறுக்கப்படுகிறாள் . கருவறையில் தொடங்கும் அவளது சோதனைகள் , கல்லறை வரையிலும் நீண்டு கொண்டே செல்கிறது .

பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால் -- மிகப்
பீழை யிருக்குதடி தங்கமே தங்கம் .

என்ற பாரதியின் வரிகளைத் தாங்கள் படித்ததில்லையா கிருஷ்ணம்மா ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Empty Re: ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!

Post by T.N.Balasubramanian Sun Feb 19, 2017 7:22 pm

M Jagadeesan wrote:ஆணுக்கு இருக்கின்ற சோதனைகளைக் காட்டிலும் , பெண்ணுக்கு இருக்கின்ற சோதனைகள்தான் அதிகம் . பிறக்கும்போதே ஒரு பெண் வெறுக்கப்படுகிறாள் . கருவறையில் தொடங்கும் அவளது சோதனைகள் , கல்லறை வரையிலும் நீண்டு கொண்டே செல்கிறது .

பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால் -- மிகப் 
பீழை யிருக்குதடி தங்கமே தங்கம் .

என்ற பாரதியின் வரிகளைத் தாங்கள் படித்ததில்லையா கிருஷ்ணம்மா ? 



பாரதி காலம் வேறு 
பார் ரதி நான் .என் சொல் படி நட ......என்கின்ற பெண்கள் காலமிது அய்யா.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Empty Re: ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum