Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி இமாலய வெற்றி
3 posters
Page 1 of 1
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி இமாலய வெற்றி
பெங்களூரு,
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி
20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில்
நேற்றிரவு நடந்தது. இரு அணியிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டன.
இந்திய அணியில் மனிஷ்பாண்டேவுக்கு பதிலாக புதுமுக வீரராக
ரிஷாப் பான்ட் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் டாவ்சன்
நீக்கப்பட்டு பிளங்கெட் இடம் பிடித்தார்.
தொடர்ந்து 3-வது முறையாக ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கேப்டன்
மோர்கன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி விராட்
கோலியும், உள்ளூர் நாயகன் லோகேஷ் ராகுலும் இந்திய அணியின்
இன்னிங்சை தொடங்கினர்.
2-வது ஓவரில் விராட் கோலி (2 ரன், 4 பந்து) தேவையில்லாமல்
ரன்-அவுட் ஆனார். பந்து அவரது காலில் பட்டு எழும்பி சற்று அருகில்
விழுந்தது. அதற்குள் ஒரு ரன் எடுக்க பாதி தூரம் ஓடி விட்டார்.
ஆனால் ராகுல் வேண்டாம் என்று மறுத்தார். திரும்பி வருவதற்குள்
கோலி ரன்-அவுட் செய்யப்பட்டார். ஐ.பி.எல். போட்டியில்
இது கோலியின் சொந்த ஊர் மைதானம் என்பதால் மிகுந்த
ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.
காணாமல் போன பந்து
அடுத்து சுரேஷ் ரெய்னா நுழைந்தார். டைமல் மில்ஸ் வீசிய பந்தை
சிக்சருக்கு தூக்கியடித்து தனது வாணவேடிக்கையை ஆரம்பித்தார்.
ஆடுகளத்தில் பந்து இரு விதமாக அதாவது திடீரென எழும்புவதும்,
தாழ்ந்து வருவதுமாக இருந்தது.
ஆனால் பேட்டிங்குக்கு உகந்த வகையில் காணப்பட்டது. இதை நமது
வீரர்கள் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டனர். ஜோர்டானின்
ஒரே ஓவரில் ரெய்னா 2 சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார்.
மறுமுனையில் ராகுல் அடித்த ஒரு இமாலய சிக்சர் ஸ்டேடியத்தை
விட்டு வெளியே போய் விழுந்தது. அந்த சிக்சரின் தூரம் 98 மீட்டர்
ஆகும். பந்து தொலைந்து போனதால் புதிய பந்து எடுக்கப்பட்டது.
ஸ்கோர் 65 ரன்களை எட்டிய போது, ராகுல் (22 ரன், 18 பந்து,
2 பவுண்டரி, ஒரு சிக்சர்), பென் ஸ்டோக்சின் பந்து வீச்சில் கிளன்
போல்டு ஆனார்.
ரெய்னா-டோனி அரைசதம்
இதை தொடர்ந்து விக்கெட் கீப்பர் டோனி களம் புகுந்தார்.
ரெய்னாவும், டோனியும் கைகோர்த்து இங்கிலாந்தின் பந்து வீச்சை
நொறுக்கியெடுத்தனர். முதல் 10 ஓவர்களில் 78 ரன்கள் எடுத்திருந்த
இந்திய அணிக்கு அதன் பிறகு ஸ்கோர் ஜெட் வேகத்தில் பயணித்தது.
2010-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக 20 ஓவர் போட்டியில்
அரைசதத்தை கடந்த ரெய்னா 63 ரன்களில்(45 பந்து, 2 பவுண்டரி,
5 சிக்சர்) கேட்ச் ஆனார். மொத்தத்தில் ரெய்னாவுக்கு இது 4-வது
அரைசதமாகும். இதன் பிறகு யுவராஜ்சிங் ஆட வந்தார்.
இன்னொரு புறம் ஆக்ரோஷமாக பேட்டை சுழட்டியடித்து ரசிகர்களுக்கு
விருந்து படைத்த டோனி தனது முதலாவது அரைசதத்தை பூர்த்தி செய்து
பிரமாதப்படுத்தினார்.
யுவராஜ்சிங் சிறிது நேரமே நின்றாலும், இங்கிலாந்தை உலுக்கிவிட்டார்.
கிறிஸ் ஜோர்டானின் திடீரென வேகத்தை குறைத்து (ஸ்லோ) பந்து வீசும்
தந்திரம் இந்த ஆட்டத்தில் எடுபடவில்லை. அவரது ஒரே ஓவரில்
யுவராஜ்சிங், 3 சிக்சரும், ஒரு பவுண்டரியும் விரட்ட, மைதானமே ரசிகர்களின்
உற்சாக கரவொலியில் அதிர்ந்தது. 18-வது ஓவரான அந்த ஓவரில் மட்டும்
இந்தியாவுக்கு 24 ரன்கள் கிட்டியது. யுவராஜ்சிங் தனது பங்குக்கு 27 ரன்கள்
(10 பந்து) எடுத்தார்.
இந்தியா 202 ரன் குவிப்பு
கடைசி ஓவரில், டோனி 56 ரன்களில் (35 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம்
இழந்தார். இதன் பின்னர் ஹர்திக் பாண்ட்யா அடித்த சிக்சர் இந்திய அணி
200 ரன்களை தொடுவதற்கு வித்திட்டது. பாண்ட்யா 11 ரன்களில் (4 பந்து)
ரன்-அவுட் ஆனார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு
202 ரன்கள் குவித்தது. பெங்களூரு மைதானத்தில் ஒரு அணி 200 ரன்களை
தாண்டியது இதுவே முதல் முறையாகும். கடைசி 5 ஓவர்களில் மட்டும்
இந்திய வீரர்கள் 70 ரன்களை திரட்டினர். இங்கிலாந்துக்கு எதிராக
இந்தியாவின் 2-வது அதிகபட்ச ஸ்கோராக இது பதிவானது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி
20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில்
நேற்றிரவு நடந்தது. இரு அணியிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டன.
இந்திய அணியில் மனிஷ்பாண்டேவுக்கு பதிலாக புதுமுக வீரராக
ரிஷாப் பான்ட் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் டாவ்சன்
நீக்கப்பட்டு பிளங்கெட் இடம் பிடித்தார்.
தொடர்ந்து 3-வது முறையாக ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கேப்டன்
மோர்கன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி விராட்
கோலியும், உள்ளூர் நாயகன் லோகேஷ் ராகுலும் இந்திய அணியின்
இன்னிங்சை தொடங்கினர்.
2-வது ஓவரில் விராட் கோலி (2 ரன், 4 பந்து) தேவையில்லாமல்
ரன்-அவுட் ஆனார். பந்து அவரது காலில் பட்டு எழும்பி சற்று அருகில்
விழுந்தது. அதற்குள் ஒரு ரன் எடுக்க பாதி தூரம் ஓடி விட்டார்.
ஆனால் ராகுல் வேண்டாம் என்று மறுத்தார். திரும்பி வருவதற்குள்
கோலி ரன்-அவுட் செய்யப்பட்டார். ஐ.பி.எல். போட்டியில்
இது கோலியின் சொந்த ஊர் மைதானம் என்பதால் மிகுந்த
ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.
காணாமல் போன பந்து
அடுத்து சுரேஷ் ரெய்னா நுழைந்தார். டைமல் மில்ஸ் வீசிய பந்தை
சிக்சருக்கு தூக்கியடித்து தனது வாணவேடிக்கையை ஆரம்பித்தார்.
ஆடுகளத்தில் பந்து இரு விதமாக அதாவது திடீரென எழும்புவதும்,
தாழ்ந்து வருவதுமாக இருந்தது.
ஆனால் பேட்டிங்குக்கு உகந்த வகையில் காணப்பட்டது. இதை நமது
வீரர்கள் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டனர். ஜோர்டானின்
ஒரே ஓவரில் ரெய்னா 2 சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார்.
மறுமுனையில் ராகுல் அடித்த ஒரு இமாலய சிக்சர் ஸ்டேடியத்தை
விட்டு வெளியே போய் விழுந்தது. அந்த சிக்சரின் தூரம் 98 மீட்டர்
ஆகும். பந்து தொலைந்து போனதால் புதிய பந்து எடுக்கப்பட்டது.
ஸ்கோர் 65 ரன்களை எட்டிய போது, ராகுல் (22 ரன், 18 பந்து,
2 பவுண்டரி, ஒரு சிக்சர்), பென் ஸ்டோக்சின் பந்து வீச்சில் கிளன்
போல்டு ஆனார்.
ரெய்னா-டோனி அரைசதம்
இதை தொடர்ந்து விக்கெட் கீப்பர் டோனி களம் புகுந்தார்.
ரெய்னாவும், டோனியும் கைகோர்த்து இங்கிலாந்தின் பந்து வீச்சை
நொறுக்கியெடுத்தனர். முதல் 10 ஓவர்களில் 78 ரன்கள் எடுத்திருந்த
இந்திய அணிக்கு அதன் பிறகு ஸ்கோர் ஜெட் வேகத்தில் பயணித்தது.
2010-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக 20 ஓவர் போட்டியில்
அரைசதத்தை கடந்த ரெய்னா 63 ரன்களில்(45 பந்து, 2 பவுண்டரி,
5 சிக்சர்) கேட்ச் ஆனார். மொத்தத்தில் ரெய்னாவுக்கு இது 4-வது
அரைசதமாகும். இதன் பிறகு யுவராஜ்சிங் ஆட வந்தார்.
இன்னொரு புறம் ஆக்ரோஷமாக பேட்டை சுழட்டியடித்து ரசிகர்களுக்கு
விருந்து படைத்த டோனி தனது முதலாவது அரைசதத்தை பூர்த்தி செய்து
பிரமாதப்படுத்தினார்.
யுவராஜ்சிங் சிறிது நேரமே நின்றாலும், இங்கிலாந்தை உலுக்கிவிட்டார்.
கிறிஸ் ஜோர்டானின் திடீரென வேகத்தை குறைத்து (ஸ்லோ) பந்து வீசும்
தந்திரம் இந்த ஆட்டத்தில் எடுபடவில்லை. அவரது ஒரே ஓவரில்
யுவராஜ்சிங், 3 சிக்சரும், ஒரு பவுண்டரியும் விரட்ட, மைதானமே ரசிகர்களின்
உற்சாக கரவொலியில் அதிர்ந்தது. 18-வது ஓவரான அந்த ஓவரில் மட்டும்
இந்தியாவுக்கு 24 ரன்கள் கிட்டியது. யுவராஜ்சிங் தனது பங்குக்கு 27 ரன்கள்
(10 பந்து) எடுத்தார்.
இந்தியா 202 ரன் குவிப்பு
கடைசி ஓவரில், டோனி 56 ரன்களில் (35 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம்
இழந்தார். இதன் பின்னர் ஹர்திக் பாண்ட்யா அடித்த சிக்சர் இந்திய அணி
200 ரன்களை தொடுவதற்கு வித்திட்டது. பாண்ட்யா 11 ரன்களில் (4 பந்து)
ரன்-அவுட் ஆனார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு
202 ரன்கள் குவித்தது. பெங்களூரு மைதானத்தில் ஒரு அணி 200 ரன்களை
தாண்டியது இதுவே முதல் முறையாகும். கடைசி 5 ஓவர்களில் மட்டும்
இந்திய வீரர்கள் 70 ரன்களை திரட்டினர். இங்கிலாந்துக்கு எதிராக
இந்தியாவின் 2-வது அதிகபட்ச ஸ்கோராக இது பதிவானது.
Re: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி இமாலய வெற்றி
![இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி இமாலய வெற்றி I8JtFeLyQUK2m5kYh2Vz+cricket_SECVPF.gif](https://www.filepicker.io/api/file/i8JtFeLyQUK2m5kYh2Vz+cricket_SECVPF.gif.jpg)
-
8 ரன்னில் 8 விக்கெட்
அடுத்து 203 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணியில்
ஜோ ரூட்டும், கேப்டன் மோர்கனும் சிறிது நேரம் மிரட்டினர். ரெய்னாவின்
ஓவரில் மோர்கன் 3 சிக்சர்களை ஓடவிட்டார். ஒரு கட்டத்தில் அந்த அணி
2 விக்கெட்டுக்கு 119 ரன்களுடன் (13.2 ஓவர்) நல்ல நிலையில் இருந்தது.
அதன் பிறகு ஒரே ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல்
இருவரையும் கபளகரம் செய்தார். மோர்கன் 40 ரன்களிலும் (21 பந்து,
2 பவுண்டரி, 3 சிக்சர்), ஜோ ரூட் 42 ரன்களிலும் (37 பந்து, 4 பவுண்டரி,
2 சிக்சர்) வெளியேற்றப்பட்டார்.
தனது அடுத்த ஓவரில் சாஹல் மேலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்த
இங்கிலாந்து முழுமையாக சரண் அடைந்தது. அந்த அணி 16.3 ஓவர்களில்
127 ரன்களில் சுருண்டது. இங்கிலாந்து அணி 18 பந்துகள் இடை
வெளியில் கடைசி 8 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை தாரைவார்த்தது
குறிப்பிடத்தக்கது. மாயாஜாலம் காட்டிய சுழற்பந்து வீச்சாளர் சாஹல்
6 விக்கெட்டுகளை சாய்த்தார்.
தொடரை கைப்பற்றியது
75 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்த இந்திய அணி
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை
2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முன்னதாக முதலாவது 20 ஓவர்
போட்டியில் இங்கிலாந்தும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி
பெற்றிருந்தன.
ரன் வித்தியாசத்தின் அடிப்படை யில் இங்கிலாந்துக்கு எதிராக
இந்தியாவின் 2-வது மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.
ஏற்கனவே டெஸ்ட், ஒரு நாள் தொடர்களை பறிகொடுத்த இங்கிலாந்து
அணி 20 ஓவரையும் இழந்து வெறுங்கையுடன் தாயகம் திரும்புகிறது.
-
--------------------------------
தினத்தந்தி
Re: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி இமாலய வெற்றி
எட்டு ரன்
எட்டு விக்கட்
எட்டியது வெற்றி
சாகச சாகல்
சுழல் பந்துவீச்சு
சுருண்டது எதிரணி
ரமணியன்
எட்டு விக்கட்
எட்டியது வெற்றி
சாகச சாகல்
சுழல் பந்துவீச்சு
சுருண்டது எதிரணி
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி: தொடர் டிரா ஆனது
» தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி ஆறுதல் வெற்றி பெறுமா? - இன்று கடைசி போட்டி
» இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
» மழையால் 8 ஓவர்களாக குறைப்பு: கடைசி 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி தொடரை கைப்பற்றியது
» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
» தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி ஆறுதல் வெற்றி பெறுமா? - இன்று கடைசி போட்டி
» இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
» மழையால் 8 ஓவர்களாக குறைப்பு: கடைசி 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி தொடரை கைப்பற்றியது
» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|