புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த வாரம்--ஒரு விண்கல் நம்மை அழிக்கப் போகுதாம் Poll_c10அடுத்த வாரம்--ஒரு விண்கல் நம்மை அழிக்கப் போகுதாம் Poll_m10அடுத்த வாரம்--ஒரு விண்கல் நம்மை அழிக்கப் போகுதாம் Poll_c10 
7 Posts - 64%
heezulia
அடுத்த வாரம்--ஒரு விண்கல் நம்மை அழிக்கப் போகுதாம் Poll_c10அடுத்த வாரம்--ஒரு விண்கல் நம்மை அழிக்கப் போகுதாம் Poll_m10அடுத்த வாரம்--ஒரு விண்கல் நம்மை அழிக்கப் போகுதாம் Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
அடுத்த வாரம்--ஒரு விண்கல் நம்மை அழிக்கப் போகுதாம் Poll_c10அடுத்த வாரம்--ஒரு விண்கல் நம்மை அழிக்கப் போகுதாம் Poll_m10அடுத்த வாரம்--ஒரு விண்கல் நம்மை அழிக்கப் போகுதாம் Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த வாரம்--ஒரு விண்கல் நம்மை அழிக்கப் போகுதாம்


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 29, 2017 11:30 am

அடுத்த வாரம் ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய விண்கல் நம்மை அழிக்கப் போகுதாம்.. நல்லா விட்ராங்கய்யா உடான்ஸு!


நாசா: 2016WF9 என்ற பெயர் கொண்ட பெரிய சைஸ் விண்கல் ஒன்று பூமி மீது மோதி பூமியை அழிக்கப் போவதாக ஒரு பெரிய்ய வதந்தி கிளம்பி பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு வாய்ப்பே இல்லை என்று நாசா விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர். இந்த விண்கல்லானது நமது வளிமண்டலத்தை ஊடுறுவி உள்ளே வந்து பூமியை மிகப் பெரிய அளவில் தாக்கி பூமியை சுத்தமாக அழித்து விடும் என்பதுதான் பரவி வரும் செய்தியாகும். ராட்சத அணு குண்டுக்குச் சமமானதாம் இந்த விண்கல்.

அடுத்த வாரம்--ஒரு விண்கல் நம்மை அழிக்கப் போகுதாம் Asteroid454545-27-1485517180





ஆனால் நாசா என்ன சொல்கிறது என்றால் இந்த விண்கல் அடுத்த வாரம் நமது சுற்றுப் பாதையை கடந்து செல்லவுள்ளது என்று மட்டுமே கூறியுள்ளது. அதேசமயம், இந்த விண்கல்லால் நமக்கு எந்த சேதமும் ஏற்பட வாய்ப்பில்லை. காரணம், பூமியிலிருந்து 32 மில்லியன் மைல் தொலைவில்தான் இது கடந்து செல்லவுள்ளது என்று நாசா விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர். இந்த விண்கல்லை வைத்து ஏகப்பட்ட கட்டுக்கதைகளை அவிழ்த்து விட ஆரம்பித்து விட்டனர். நாசா உண்மையை மறைத்துப் பேசுவதாக சிலர் கிளப்பி விட்டு வருகின்றனர். உண்மையில் இந்த விண்கல்லானது பூமி மீது மோதி அழிக்கப் போவதாக அவர்கள் கூறுகின்றனர். 2.2 கிலோமீட்டர் அகலம் கொண்டதாக இந்த விண்கல் உள்ளதாகவும் இந்த விண்கல்லால் பூமிக்கு ஆபத்து என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இதுகுறித்து டாக்டர் டியோமின் டமிர் ஜகரோவிச் என்பவர் கூறுகையில், நாசா வாய் கூசாமல் பொய் சொல்கிறது. இந்த விண்கல் நமது பூமியை அழித்து விடும். ராட்சத அணு ஆயுதத்திற்கு இது சமம். மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். கடல்கள் கொதித்துக் கொந்தளித்து விடும். சுனாமிகள் உலகை சூறையாடும். உண்மையில் நிபுரு என்ற ஒரு கிரகத்திலிருந்துதான் இந்த விண்கல் வந்து கொண்டுள்ளது. இந்த கிரகமானது நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே நம்மை ஒட்டியுள்ளதாகும். இந்த கிரகம் மிகப் பெரிய அபாயகரமானதாகும். இதற்கு X கிரகம் என்றும் பெயர் உள்ளது. இதுதான் பல இயற்கை சீற்றங்கள் பூமியில் ஏற்பட காரணமாகும். இதை நாசா வெளியில் சொல்வதே இல்லை. நிக்கல் தாதுவுடன் கூடிய டைட்டானியம்தான் இந்த விண்கல்லில் உள்ளது. எனவே இது வளி மண்டலத்திற்குள் நுழைந்தாலும் கூட எரிந்து சாம்பலாகாது. அப்படியே உள்ளே வந்து விடும். நிபிரு கிரகத்தால் நமது பூமிக்கு ஒரு நாள் பேராபத்து உண்டு. அதற்கு டீசர் போல இந்த விண்கல்லின் வருகையை நாம் எடுத்துக் கொள்ளலாம். இந்த விண்கல்லால் எந்த இடத்திற்கு ஆபத்து வரும் என்பது நாசாவுக்குத் தெரியும். ஆனால் அது தெரிவிக்காமல் கமுக்கமாக இருப்பதாக குற்றம் சாட்டுகிறார் டியோமின். ஆனால் நாசா விடுத்துள்ள அறிக்கையில், 2016WF9 விண்கல்லின் பாதை சரியாக கணிக்கப்பட்டுள்ளது. அது எந்தப் பாதையில் வந்து கொண்டுள்ளதோ, அதில் மாற்றம் இல்லை. மேலும் விண்கல்லால் பூமிக்கும் எந்த ஆபத்தும் இருப்பதாக தெரியவில்லை என்று கூறியுள்ளது.இ 

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 29, 2017 11:36 am

இந்த பதிவிற்கு அடுத்தவாரம் நாம் மறுமொழி இட்டால், நாசா கூறுவது உண்மை.
அப்பிடி மறுமொழி இடமுடியாவிட்டால் டாக்டர் டியோமின் கூறுவது சரி.
சரி என்றால் பாவம் டியோமின்னும், தான் கூறியது சரியே என்று கூற இருக்கவும் மாட்டார்.

என்ன சோதனையப்பா இது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 29, 2017 11:45 am

இதுபோல நிறைய வதந்திகள் வந்து போய் இருக்கின்றனவே ஐயா..............மொத்த பூமியும் அழிந்து போகாது, என்று தானே நாசா சொல்கிறது...........நாசாவைப் பொறுத்த வரை அமெரிக்காவிற்கு ஒன்றும் ஆகாது என்று அர்த்தம்.......அதற்கு ஏதும் பிரச்சனை என்றால்தான் அவர்கள் அலறுவார்கள்...........பூமி இந்த வேறு பகுதிக்கு பிரச்சனை என்றல், நம்ப ஊர் போலீஸ் போல எல்லாம் நடந்து முடிந்ததும் 'கரெக்ட்டாக' வந்து சேர்வார்கள் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 29, 2017 11:45 am

T.N.Balasubramanian wrote:இந்த பதிவிற்கு அடுத்தவாரம் நாம் மறுமொழி இட்டால், நாசா கூறுவது உண்மை.
அப்பிடி மறுமொழி இடமுடியாவிட்டால் டாக்டர் டியோமின் கூறுவது சரி.
சரி என்றால் பாவம் டியோமின்னும், தான் கூறியது சரியே என்று கூற இருக்கவும் மாட்டார்.

என்ன சோதனையப்பா இது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1232783

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jan 29, 2017 12:30 pm

பிரான்ஸ் நாட்டில் 16 ம் நூற்றாண்டில் வாழ்ந்த நாஸ்ட்ரடாமஸ் என்னும் தீர்க்கதரிசி 400 ஆண்டுகளுக்கு முன்பே , மோடி இந்தியாவின் பிரதமர் ஆவார் என்று லத்தீன் மொழியில் எழுதி வைத்துள்ளாராம் ,

அதேசமயத்தில் தெற்கே தமிழ்நாட்டில் 9 ஆண்டுகளுக்கு ஒரு பெண்ணின் ஆடசி நடக்கும் என்றும் எழுதி வைத்துள்ளாராம் .அதை நினைத்தால்தான் பயமாக உள்ளது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 29, 2017 12:44 pm

M.Jagadeesan wrote:பிரான்ஸ் நாட்டில் 16 ம் நூற்றாண்டில் வாழ்ந்த நாஸ்ட்ரடாமஸ் என்னும் தீர்க்கதரிசி 400 ஆண்டுகளுக்கு முன்பே , மோடி இந்தியாவின் பிரதமர் ஆவார் என்று லத்தீன் மொழியில் எழுதி வைத்துள்ளாராம் ,

அதேசமயத்தில் தெற்கே தமிழ்நாட்டில் 9 ஆண்டுகளுக்கு ஒரு பெண்ணின் ஆடசி நடக்கும் என்றும் எழுதி வைத்துள்ளாராம் .அதை நினைத்தால்தான் பயமாக உள்ளது .
மேற்கோள் செய்த பதிவு: 1232790

ஏற்கனவே நடந்த ஜெயலலிதா வின் ஆட்சியை சொல்லி இருப்பார் ஐயா, பயப்படாதீர்கள் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jan 29, 2017 1:45 pm

ஜெயலலிதாதான் 9 ஆண்டுகளுக்கு மேலாகவே ஆடசி செய்துவிட்டாரே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jan 29, 2017 1:49 pm

அடுத்த வாரம் உலகம் அழியும் என்றால் , மற்றவர்களுக்குக் கடன் கொடுப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 29, 2017 7:52 pm

M.Jagadeesan wrote:பிரான்ஸ் நாட்டில் 16 ம் நூற்றாண்டில்  வாழ்ந்த நாஸ்ட்ரடாமஸ் என்னும் தீர்க்கதரிசி 400 ஆண்டுகளுக்கு முன்பே , மோடி இந்தியாவின் பிரதமர் ஆவார் என்று லத்தீன் மொழியில் எழுதி வைத்துள்ளாராம் ,

அதேசமயத்தில் தெற்கே தமிழ்நாட்டில் 9 ஆண்டுகளுக்கு ஒரு பெண்ணின் ஆடசி நடக்கும் என்றும் எழுதி வைத்துள்ளாராம் .அதை நினைத்தால்தான் பயமாக உள்ளது .
மேற்கோள் செய்த பதிவு: 1232790

நாஸ்ட்ரடாமஸ் எழுதியவை பூடகமாகவே உள்ளன . எது நடக்கப்போகிறது என்று எவராலும் இவர் எழுதியதை வைத்து முன்கூட்டியே விலாவாரியாக கூறமுடியாது. ஒரு செயல் நடந்து முடிந்தவுடன், அந்தப் பக்கத்தில் இப்பிடி எழுதி உள்ளார் என்று நாம் கூறுகிறோம்.இதைத்தான் முன்கூட்டியே கூறி உள்ளார் என்கிறோம்.
நாஸ்ட்ரடாமஸ் எழுதியதை ,இந்த இந்த வருடங்களில் இந்த விஷயங்கள் இந்த இடத்தில் நடக்கும் என்று
எழுதியதை, யாரும் புத்தகமாகவோ /இணையத்திலோ போட்ட மாதிரி தெரியவில்லை. 
நாஸ்ட்ரடாமஸ்  நான் -நம்புவதில்லை  
பயப்படாதீர்கள் Jagadeesan  

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 30, 2017 12:32 am

M.Jagadeesan wrote:அடுத்த வாரம் உலகம் அழியும் என்றால் , மற்றவர்களுக்குக் கடன் கொடுப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் .

ஹா...ஹா..ஹா...எதுக்கு ஐயா, அதுதான் எல்லாம் அழிந்துவிடும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக