ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன செய்தார் ராமானுஜர் .....

Go down

என்ன செய்தார் ராமானுஜர் ..... Empty என்ன செய்தார் ராமானுஜர் .....

Post by krishnaamma Sun Jan 29, 2017 10:56 am

என்ன செய்தார் ராமானுஜர் (1)

சுமார் 950 வருடங்களுக்கு முன்பே பெண்களை ஆலய நிர்வாகத்தில் ஈடுபடுத்தி,சமூகமே அறியும் வண்ணம் பெண்களுக்குப் பல சமயப்பொறுப்பு  கொடுத்து..

அத்துழாய்,
ஆண்டாள்,
பொன்னாச்சி,
தேவகி,
அம்மங்கி,
பருத்திக் கொல்லை அம்மாள்,
திருநறையூர் அம்மாள்,
எதிராச வல்லி…

என்று எத்தனை எத்தனை பெண்கள், அவர் அரங்கத்து குழாமில்!

பெண் குலம் தழைக்க வந்த பெரும்பூதூர் மாமுனிகள்

இராமானுசன் திருவடிகளே சரணம் !

:வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்


Last edited by krishnaamma on Sun Jan 29, 2017 11:05 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்ன செய்தார் ராமானுஜர் ..... Empty Re: என்ன செய்தார் ராமானுஜர் .....

Post by krishnaamma Sun Jan 29, 2017 10:57 am

என்ன செய்தார் ராமானுஜர்?(2)

இஸ்லாம் பெண்ணுக்கு, இந்துக் கோயிலில் பூஜைகள்!

அரங்கன் காலடியில், “துலுக்கப் பொண்ணு” பிரதிஷ்டை…

கனவிலும் நினைத்துப் பார்க்க முடியுமா?

அதுவும் சுமார் ஆயிரம் ஆண்டுக்கு முன்பு?

அறிவியல் யுகமான இன்றைக்கு எழுதினாலே, பலருக்குப் பிடிக்க மாட்டேங்கிறது! ஆயிரம் ஆண்டுக்கு முன்பு?

அரங்கனுக்கு லுங்கி கட்டி, ரொட்டி நைவேத்தியம் செய்வித்தாரே! எந்த சாஸ்திரத்தில் உள்ளது?
எந்த ஆகமத்தில் உள்ளது?

துலக்கா நாச்சியாரைக் கொண்டாடிய
எங்கள் சமரச சன்மார்க்க வள்ளல்.

இராமானுசன் திருவடிகளே தஞ்சம்!

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்ன செய்தார் ராமானுஜர் ..... Empty Re: என்ன செய்தார் ராமானுஜர் .....

Post by krishnaamma Sun Jan 29, 2017 10:58 am

என்ன செய்தார் ராமானுஜர்? (3)

மேலக்கோட்டையில் தலித் ஆலயப் பிரவேசம்…

இன்றைக்குப் பெரிய விஷயமில்லை!
ஆனால் சுமார் 1000 ஆண்டுக்கு முன்னால்?

இன்றைக்கும்…

கண்டதேவி என்னும் ஊரில், தலித்துக்கள் தேர் இழுக்க முடியாமல், ஆயிரம் நாடகங்கள் போராட்டங்கள் நடத்தப்படுகிறது!

அரசே ஒன்று செய்யும் முடியாத நிலைமை!

ஆனால் ஆயிரம் ஆண்டுக்கும் முன்னால்..
காந்தியடிகள் “அரிசனம்” என்ற வார்த்தையை உருவாக்கும் முன்னால்…

மேலக்கோட்டையில் அனைவரையும், “திருக்குலத்தார்” என்று அழைத்து.ஆலயத்தின் உள்ளே நுழைத்துக் காட்டிய வள்ளல்…

சாதி இல்லா இறைமையை சாதித்துக் காட்டிய..

இராமானுசன் திருவடிகளே சரணம் !

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்ன செய்தார் ராமானுஜர் ..... Empty Re: என்ன செய்தார் ராமானுஜர் .....

Post by krishnaamma Sun Jan 29, 2017 10:59 am

என்ன செய்தார் ராமானுஜர்?(4)

திருக்கச்சி நம்பிகளின்  சாதி பார்க்காது,அவரை வீட்டுக்குள் உணவருந்தி வைத்து,

தன்னை அவர் சீடனாக ஏற்றுக் கொள்ளத் தயங்கினாலும், அவர் உண்டதைத் தானும் உண்டு, சீடத் தன்மையாச்சும் ஏற்றிக் கொள்வோம் என்று எண்ணி…

அதனால் தன் ஆச்சாரம் மிக்க மனைவியால், குடும்பத்தில் குழப்பம்  ஏற்பட்டு…

எம்பெருமானின்  அடியவருக்காக,

தனது குடும்ப வாழ்க்கையை விட்டு,
ஸ்ரீ வைஷ்ணவத்தையும்,சம்பிரதாயத்தையும் காக்கநின்ற…

இராமானுசன் உள்ளத்தை என்னவென்று சொல்லுவது?

இராமானுசன் உள்ளமே தஞ்சம்!

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்ன செய்தார் ராமானுஜர் ..... Empty Re: என்ன செய்தார் ராமானுஜர் .....

Post by krishnaamma Sun Jan 29, 2017 11:00 am

என்ன செய்தார் ராமானுஜர்? (5)

எங்கோ வயல் வேலை செய்யும் ஒரு விவசாயி…
யாத்திரை போகும் போது, நான்கு ரோடு சந்திக்கும் சாலையில, காஞ்சிபுரம் செல்ல எந்த வழிப்பா?-என்று கேட்க

அவரும் சரியான வழி சொன்னதுக்கு…

மோட்சத்துக்கு வழி காட்டி நிற்கிறான் வரதன் பேர்ருளாளன்

அந்த வழிகாட்டியை காண எனக்கு வழிகாட்டிய விவசாயி இவன்…என்று

ஒரு வேளாளனைக் கீழே வீழ்ந்து வணங்கிய வள்ளல்தான் நம்  ராமானுஜர்…

நம் இராமானுஜர் திருவடிகளே சரணம் !

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்ன செய்தார் ராமானுஜர் ..... Empty Re: என்ன செய்தார் ராமானுஜர் .....

Post by krishnaamma Sun Jan 29, 2017 11:01 am

என்ன செய்தார் ராமானுஜர்? (6)

எப்போதோ..  ஆண்டாள் பாடிய பாட்டு

“நூறு தடா அக்கார அடிசில்
வாய் நேர்ந்து பராவி வைத்தேன்”

அந்த வேண்டுதல் பாட்டோடு முடிஞ்சி போயிருக்கும்!

கோதை “பொய்” சொல்லி விட்டாள்!
சும்மானா வேண்டிக் கொண்டாள்! வேண்டுதலை நிறைவேற்றலை என்ற பேர் வராது… அந்த வேண்டுதலைக் காத்துக் கொடுத்தார்!

ஆண்டாளின் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்ற யோசனை யாருக்காச்சும் தோன்றிற்றா?

வெறும் பாட்டாக மட்டும் பார்க்காது…
அதை பக்தியோடு  சுவாசிக்கும் உள்ளம்…

எங்கள் இராமானுஜர் திருவடிகளே தஞ்சம்!

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்ன செய்தார் ராமானுஜர் ..... Empty Re: என்ன செய்தார் ராமானுஜர் .....

Post by krishnaamma Sun Jan 29, 2017 11:02 am

என்ன செய்தார் ராமானுஜர்? (7)

குழந்தைகள் ஆடும் “சொப்பு” விளையாட்டுப் பெருமாளை…

ஊரறிய கீழே விழுந்து கும்பிட்ட
அந்த மெல்லிய உள்ளம் வேறு யாருக்கு வரும்?

அரங்கன் ஆலயத்தில் ஆகமவிதிகளை  ஏற்படுத்திய ராமானுஜர், அரங்கத்தில்காவிரி கரையில் ஆகமம் என்றால் என்னவென்று தெரியாத, சிறிய குழந்தைகளின்,சொப்பு விளையாட்டுப் பெருமாளுக்கு மரியாதை கொடுத்து விழுந்து வணங்கிய இந்த உள்ளம்..

வேதத்துக்கு பாஷ்யமும் எழுத வல்ல வேதாந்த உள்ளம்!

அதே சமயம், தமிழ்-அன்பினால் கரைந்து வாழும் ஆழ்வார் உள்ளம்!

இரு உள்ளங்களும் ஒருங்கே பெற்ற உடையவர்..

இராமானுசன் திருவடிகளே தஞ்சம்!

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்ன செய்தார் ராமானுஜர் ..... Empty Re: என்ன செய்தார் ராமானுஜர் .....

Post by krishnaamma Sun Jan 29, 2017 11:03 am

என்ன செய்தார் ராமானுஜர்? (8)

திருமலை திருப்பதியில் = எம்பெருமான் திருவேங்கடமுடையான்;அவன் தமிழ்-முல்லைத் தெய்வமான மாயோன் திருமாலே என்று..

புறநானூறு., கலித்தொகை., சிலப்பதிகாரம்
…என்று சங்க இலக்கியங்கள் வாயிலாகத் தரவு காட்டிய

வீண் கும்மிகளை அன்றே ஒழித்துக் கட்டிய பான்மை…

அப்பனுக்குச் சங்காழி அளித்த அண்ணல் .

ராமானுசன் திருவடிகளே தஞ்சம்!

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்ன செய்தார் ராமானுஜர் ..... Empty Re: என்ன செய்தார் ராமானுஜர் .....

Post by krishnaamma Sun Jan 29, 2017 11:04 am

என்ன செய்தார் இராமானுஜர் (9)

இன்றைக்கு அனைத்து மடாதிபதிகளும்,சொகுசு வாகனங்களில், பல்லக்கில், செல்கிறார்கள்!
கேட்டால் பட்டினப் பிரவேசமாம்!

ஆனால் தன் வாழ்நாள் முழுவதும் 120  வருடங்களும்,கால்நடையாகவே அலைந்து அலைந்து ஸ்ரீ வைஷ்ணவத்தை வளர்த்த கால்கள்!

சோழன் துரத்தத் துரத்த ஓடிய கால்கள்!
மேலக்கோட்டை செல்வப் பிள்ளையின் சிலையைப் பெற, வடநாடு ஓடிய கால்கள்

திருப்பதியில் பெருமாளா? சிவனா? ஏன் முருகனா? என்று வம்பு வந்த போது, வயதான காலத்திலும், அங்கு ஓடிய கால்கள்

தி்ருக்கோட்டியூருக்கு 18 முறை நடையாய் நடந்த கால்கள்… திரு மந்திர இரகசியம் அறிய

அதைக் கோபுரத்தின் மேலேறி
ஊருக்கே மந்திரத்தை வெட்ட வெளிச்சம் ஆக்கிய கால்கள்!

சொகுசான மடாதிபதியாய் இருக்காது…
அலைந்து அலைந்தே திரிந்த அந்தத் “திருவடிகள்”

இராமானுசன் திருவடிகளே சரணம்  !

உய்ய ஒரே வழி.... உடையவர் திருவடியே !

ஜெய் ஶ்ரீ ராமானுஜா ராமானுஜா...


:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்ன செய்தார் ராமானுஜர் ..... Empty Re: என்ன செய்தார் ராமானுஜர் .....

Post by krishnaamma Mon Jan 30, 2017 10:27 pm

பின்னூட்டம் எழுதுங்க பின்னூட்டம் எழுதுங்க பின்னூட்டம் எழுதுங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்ன செய்தார் ராமானுஜர் ..... Empty Re: என்ன செய்தார் ராமானுஜர் .....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  புரட்சித்துறவி ராமானுஜர்: இன்று ராமானுஜர் 1,002வது ஜெயந்தி
» என்ன தவறு செய்தார் கருணாநிதி
» டோக்லாமை சீனா ஆக்கிரமித்துவிட்டது என செயற்கைக்கோள் தரவுகள்; மோடி என்ன செய்தார்? காங்கிரஸ் கேள்வி
»  சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம் ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?
» இன்று ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum