புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_lcapகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_voting_barகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_rcap 
61 Posts - 45%
heezulia
கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_lcapகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_voting_barகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_rcap 
41 Posts - 30%
mohamed nizamudeen
கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_lcapகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_voting_barகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_rcap 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_lcapகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_voting_barகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_lcapகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_voting_barகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_lcapகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_voting_barகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
prajai
கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_lcapகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_voting_barகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_lcapகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_voting_barகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_lcapகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_voting_barகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_lcapகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_voting_barகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_lcapகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_voting_barகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_rcap 
177 Posts - 40%
ayyasamy ram
கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_lcapகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_voting_barகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_lcapகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_voting_barகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_lcapகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_voting_barகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_lcapகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_voting_barகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
prajai
கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_lcapகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_voting_barகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_lcapகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_voting_barகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_lcapகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_voting_barகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_lcapகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_voting_barகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_lcapகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_voting_barகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jan 26, 2017 12:13 am

First topic message reminder :

கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வையே இப்பதிவு.

1. நல்லவர்கள் ஏன் கஷ்டபடுகின்றார்கள்?

2. கெட்டவர்கள் ஏன் எல்லா நலன்களுடன்
வாழ்கின்றார்கள்?

3. ஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒருவனுக்கு ஏன் அதிக கஷ்டம் ஏற்படுகின்றது?

4. கர்மவினைகளை அனுபவித்துதான் தீர்க்க வேண்டுமா?

போன்ற பல கேள்விகளுக்கு முழுவிளக்கமே இப்பதிவு.

பதிவிற்குள் செல்வதற்குமுன் ஒரு கதையை பார்த்துவிடுவோம்.

சித்திரபுரம் என்ற ஊரில் சித்தன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்துவந்தான். அவன் குணத்தில் நல்லவனாகவும் சிறந்த பக்திமானாக இருந்தபோதிலும் அவனுக்கு வாய்ந்த மனைவி கொடுமைக்காரியாக இருந்ததால் அவனது வாழ்க்கை மிகவும் கஷ்டத்திலேயே நகர்ந்தது.

வேலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களை தியானத்திலும் பிராத்தனையிலும் செலவிட்டான். எந்த அளவிற்கு அவன் பக்தியில் மனதை செலுத்துகின்றானோ அந்த அளவிற்கு அவனை கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டன.

அதே ஊரில் அவனுக்கு வித்தன் என்ற சூழ்ச்சி குணமுடைய பணக்கார நண்பன் இருந்தான். தனது இன்பத்திற்காக எந்த ஒரு கொடுமையான செயலையும் குணமுடையவனாக அவனிருந்தான்.

அவனுக்கு நல்ல குணமுடைய பக்தியில் சிறந்த மனைவியும் அமைந்திருந்தாள். இருப்பினும் அவனுக்கு கடவுள் நம்பிக்கை என்பது துளிகூட இல்லை. அவனுக்கு சித்தனின் கடவுள் நம்பிக்கையை கேலி செய்வது என்பது வாடிக்கையான வேலை.

இதன் காரணமாக ஒரு கட்டத்தில் இருவரிடையே சண்டையே வந்துவிட்டது.

கோபத்தில் வெகுண்டெழுந்த சித்தன் இறைவன்மீது தனது பக்தி உண்மையாயிருந்தால் இன்னும் ஒரு வாரத்தில் நீ செய்த தவறுக்கெல்லாம் தண்டனை அனுபவிப்பாய் என்று சாபமிட தொடங்கினான். சிரித்துக்கொண்ட வித்தன் அப்படி நடக்கவில்லை என்றால் நீ ஆன்மீகத்தை கைவிட வேண்டும்
என்ற சவாலுக்கு இழுத்தான்.

இதற்கு ஒப்புக்கொண்ட சித்தன் தீவிரமான பிராத்தனையில் ஈடுபட்டான்.

போட்டியின் கடைசி நாளும் வந்தது. அந்த நாளில் வித்தனோ காட்டிற்கு சென்று தேவைக்கு அதிகமான பறவைகளையும் விலங்குகளையும் வேட்டையாடி கொன்று விருந்திற்காக வீட்டிற்கு எடுத்து வந்து கொண்டிருந்தான். வரும்வழியில் களைப்பு தாங்காமல் ஒரு மரதினடியில் ஓய்வெடுக்க உட்கார்ந்தான். உட்கார்ந்த இடத்தில் எதோ உருத்துவதுபோல் இருந்ததனால் என்ன? என்று விலக்கி பார்த்தான். கணக்கிட முடியாத செல்வம் அங்கு புதைக்க பட்டிருந்ததை பார்த்து, அதையும் மூட்டையாக கட்டிக்கொண்டு இரட்டை சந்தேஷத்துடன் வீடு திரும்பினான்.

இதற்கிடையே வயலில் வேலை செய்துகொண்டிருந்த சித்தனை மாடு முட்டி கடுமையான காயங்களுடன் படுத்தபடுக்கை ஆக்கிவிட்டது விதி. இப்படி ஒரு முட்டாள் கணவனுடன் வாழ்வது  அசிங்கம் என்று சித்தனின் மனைவி அவனைவிட்டு நீங்கினாள்.

தனது நிலையை நினைத்து உள்ளும் வெளியும் ஒவ்வொரு நொடியும் அழுதே தீர்த்தான். தான் பட்ட அவமானத்தால் இனி வாழ்ந்து பயனில்லை என்ற முடிவுக்கு வந்தான் சித்தன். உடல் ஊனத்தால் அவனால் தற்கொலை கூட செய்து கொள்ள முடியவில்லை.

எப்படியோ எழுந்து தன் விட்டிற்கு பின்னாடியுள்ள கிணற்றில் குதித்தான். திடீரென்று தன்னை யாரோ தூக்குவது போல் உணர்ந்தான். ஆம் எந்த தெய்வத்தை அவன் பக்தியுடன் வணங்கினானோ அதே தெய்வம் அவனை காப்பாற்றி காட்சியும் கொடுத்தது. உடலாலும் மனதாலும் அவதிப்பட்ட அவனுக்கு வணங்க தோன்றவில்லை, மாறாக சண்டை போட தொடங்கினான். தனது ஆதங்கத்தையும் ஆத்திரத்தையும் கொட்டி தீர்த்தான்.

அனைத்தையும் பொறுமையுடன் கேட்டுகொண்டிருந்த கடவுளோ அவனை தன்னோடு அனைத்து கொண்டார். அவரின் அரவணைப்பால் சற்று ஆறுதல் பெற்றான் சித்தன். இப்பொழுது கடவுள் பேச தொடங்கினார், சித்தா நீ இப்பிறவியில் நல்லவனாக பிறந்திருந்தாலும் முன்பிறவியில் வித்தனை விட கொடுமைகாரனாக இருந்தாய். நீ உன் மனைவியை மதித்தது கூட கிடையாது. மாறாக வித்தனோ முன்பிறவியில் நல்ல காரியங்களையே செய்து வந்தான், அதனால் இப்பிறவியில் அவனுக்கு சகல நன்மைகளும் கிடைத்தது. மாறாக உனக்கோ நீ செய்த பாவங்களை அனுபவிக்க நேரிட்டது.

என்னை அனுதினமும் நீ வணங்கியதால் நீ அனுபவிக்க வேண்டிய கர்மத்தின் பெருபாலனவையை நானே ஏற்றுகொண்டேன்,.மாறாக நீயோ அதில் சிறு பகுதியையே அனுபவிக்கின்றாய். ஆன்மீகத்தை தொடங்கும் ஒருவன் முதலில் அவனது பாவபதிவையே அனுபவிக்க தொடங்கின்றான், மாறாக அக்கிரமங்கள் செய்யும் ஒருவனுக்கோ அவன் செய்த புண்ணியங்களை அனுபவித்தபின் அவன் பாவபதிவுகள் செயல்பட தொடங்கும்.

வித்தனுக்கு கிடைத்த புதையலே அவனுடைய கடைசி புண்ணிய பதிவாகும்.
அவன் செய்த அனைத்து புண்ணியங்களும் ஒட்டுமொத்தமாக செயல்பட்டு அவனுக்கு புதையலாக கிடைத்தது. இதுவரை நீ அனுபவித்த கஷ்டங்களில் உனது அனைத்து பாவங்களும் கரைந்துவிட்டன. இனி நடக்கவிருப்பதை நீயே உன் கண்ணால் பார்த்து தெரிந்து கொள் என்று சில அறிவுரைகளையும் கூறி மறைந்தார் கடவுள்.

நாட்கள் செல்ல செல்ல சித்தனின் உடல்நிலை நலம் பெற தொடங்கியது. அவனது நெருங்கிய உறவினருக்கு வாரிசு இல்லாததால் அவரது சொத்துக்கள் அனைத்தும் சித்தனுக்கு கிடைத்தது. நல்ல குணமுடைய மனைவியும் சித்தனுக்கு அமைந்தாள். அதே சமயத்தில் வித்தனுக்கோ வினோதமான ஒரு நோய் தாக்கி படுத்தபடுக்கையாகி விட்டான். அவனது மனைவியும் திடீரென்று இறந்துவிட, அவன் கூட இருந்தவர்கள் அவனை ஏமாற்றி அவன் சொத்துக்கள் அனைத்தையும் பரித்துக்கொண்டு வெளியே துரத்திவிட்டனர்.

தனது நண்பனின் நிலை அறிந்து வருந்திய சித்தன், வித்தனையும் தன் இல்லத்திலேயே தங்க செய்து உதவினான்.

கர்மவினை தொடரும்......




கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jan 30, 2017 9:43 pm

T.N.Balasubramanian wrote:
whatsapp  ஐ மெசேஜ்களை எனது மடிக்கணினியில் பார்த்து , ஈகரையில் பதிவிடவேண்டுமெனில் , C & P பண்ணிவிடுகிறேன் . நீங்கள் கூறுகிற ப்ராப்லம் வந்தது இல்லை. 

ரமணியன்
ஆமாம், இப்படி செய்தாலும் கிருஷ்ணாம்மா சொல்லும் பிரச்சனை வருவதில்லை.



கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jan 30, 2017 9:48 pm

ருவன் எந்த செயலை செய்தாலும் அல்லது நினைத்தாலும் அதற்குரிய பலனே வினை எனப்படுவது. அது நல்லதாக இருந்தால் நல்வினை, தீயதாக இருந்தால் தீவினை.

ஆனால் இந்த வினைகளிலிருந்து தப்பிக்க.விதிவிலக்குகளும் உண்டு. அதுதான் "பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்தி விடுவது". இதை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒரு உதாரணத்தை பார்த்துவிடுவோம்.

நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் மீது கல்லை எறிந்தீர்கள் என வைத்துக்கொள்வோம்.

இது நீங்கள் செய்த செயல். அது அவர் காலில் பட்டு இரத்தம் வந்துவிடுகின்றது. இதை வினை என்று எடுத்துக்கொள்வோம். அந்த இடத்திலிருந்து நீங்கள் தப்பித்து ஓடிவிட்டீர்களானால் அந்த நிகழ்வுக்கான எதிர்வினை செயல்படும்.

எப்படியென்றால் நீங்கள் ஒரு தெரு வழியே செல்லும்போது உங்கள் கால் ஒரு கல்லில் மோதி இரத்தம் வர வேண்டும் என்ற ஒரு விதி செயல்படும்.

நீங்கள் அந்த வழியே செல்லும்போது இந்த கர்மவினையிலிருந்து தப்பிக்க நினைத்தால்  அந்த கல்லில் உங்கள் கால் படாமல் செல்ல வேண்டும். ஆனால் கர்மங்களிருந்து ஒருவன் தப்பிக்க நினைக்கும்போது அதாவது அந்த கல்லை தாண்டி செல்ல முற்படும்போது ஒரு மாடோ அல்லது வண்டியோ உங்களை குறுக்கே வந்து தள்ளிவிடும். முடிவாக கால் பட வேண்டிய இடத்தில் தப்பிக்க நினைத்ததனால் தடுக்கி விழுந்து அதே கல்லால் உங்கள் தலையில் அடிபட்டுவிடும்.

ஆனால் அவருக்கு அடிப்பட்ட உடனே அதற்காக வருந்தி அவரிடம் மன்னிப்போ அல்லது மருத்துவ உதவி செய்து விடுகின்றீர்கள் என வைத்து கொள்வோம். இங்கேயும் அதே கர்மவினைதான் செயல்படும்.

அதாவது நீங்கள் அந்த தெரு வழியே செல்லும்போது உங்கள் கால் அந்த கல்லில் மோதி இரத்தம் வர வேண்டும் என்ற அதே விதிதான் செயல்படும்.

ஆனால் அது செயல்படும் விதம்தான் வேறு.

எப்படியென்றால் நீங்கள் அதே தெரு வழியாகதான் செல்வீர்கள், ஆனால் உங்களை அறியாமல் மாட்டு சாணியிலோ அல்லது சேற்றிலோ காலை வைத்துவிடுவீர்கள்.

இதனால் எந்த கல்லால் உங்கள் காலில் அடிபட வேண்டுமோ, அந்த கல்லில் உங்கள் காலில் உள்ள சேற்றை துடைப்பதற்காக தேய்த்துவிட்டு சென்றுவிடுவீர்கள். அதாவது பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்திவிட்டு சென்றுவிடுவீர்கள். இதில் அந்த பொருளுக்கும் உங்களுக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

நீங்கள் செய்த செயலுக்கான விதிப்படி அந்த கல்லிற்கும் உங்கள் காலிற்கும் ஒரு தொடர்பு ஏற்பட வேண்டும். அதை நீங்கள் செய்வதால் அந்த கர்மவினை அங்கேயே முடிவுபெறுகின்றது. இதைதான் " தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது " என்பர் பெரியோர்கள்.

அந்த பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பு ஏற்பட்டுவிட்டால் உங்கள் செயலுக்குரிய எதிர்வினையும் நடந்துமுடிந்து விடுகின்றது. உங்கள் செயலை கொண்டே வினையும், வினையை கொண்டே எதிர்வினையும், அந்த எதிர்வினையை செயல்படுத்த அந்த பொருளும் நிர்ணயிக்க படுகின்றதே தவிர மற்றபடி ஒன்றுமில்லை. இதைத்தான் " தீதும் நன்றும் பிறர் தர வாரா " என்றனர். எந்த செயலுக்கும் வினை ஏற்பட கூடாது என்றால் "நான்" என்பதை விட்டுவிட வேண்டும்.

ஆன்மீகத்தில் இதற்கு பெயர் பூரண சரணாகதி.

அந்த விதிவிலக்கு என்பது கூட இவர்களுக்குதான். தன்னை அறிய முற்படுவதால் அவர்களுக்கு தரப்படும்சலுகைகள்தான் இது. ஏன் அவர்களுக்கு
மட்டும்??

எந்த ஒரு வினைக்கும் நீங்கள் தான் காரணம் என்ற புரிதல் ஏற்படும்போது உங்களை சுற்றி நடக்கும் அனைத்தையும் ஏற்று கொள்வீர்கள்.


கர்மவினை தொடரும்......




கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 30, 2017 10:37 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:இது whats அப் பகிர்வு கிருஷ்ணாம்மா. அவசியமான ஒரு தெளிவை தரும் விஷயங்கள் நிறையவே இருந்தது. அதனாலேயே இங்கு பகிர்ந்து கொள்வோம் என்று நினைத்தே இந்த தொடர்.
மேற்கோள் செய்த பதிவு: 1232393

அத்தனை  பெரிய whatsup  பகிர்வா?..............பகிருங்கள் பகிருங்கள்......படிக்கிறோம் புன்னகை.............எனக்கு வந்த சில பகிர்வுகளை சிரமம் இல்லாமல் இங்கு பகிர முடிந்தது விமந்தினி, சிலவற்றை பகிரும்போது, முன்னோட்டத்தின் போது தெரியும்  எழுத்துகள் பதிவிட்டவுடன் தெரிவது இல்லைசோகம்.........

உங்கள் யாருக்காவது இப்படி ஆனது உண்டா?..............

நானும் அவற்றை, word , நோட்பேட் மற்றும் நோட்பேட்++ என்று எல்லாவற்றிலும் பேஸ்ட் செய்து பிறகு இங்கு போட்டேன் அப்படியும் வரவில்லை........யாராவது உதவ  முடியுமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1232485 


whatsapp  ஐ மெசேஜ்களை எனது மடிக்கணினியில் பார்த்து , ஈகரையில் பதிவிடவேண்டுமெனில் , C & P பண்ணிவிடுகிறேன் . நீங்கள் கூறுகிற ப்ராப்லம் வந்தது இல்லை. 

ரமணியன்

ஓ ... நல்லது ஐயா, எனக்கு அவ்வாறு C & P செய்யும்போது சிலநேரங்களில் வருகிறது , சில நேரங்களில் வருவது இல்லை சோகம் ...... கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 1571444738



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 30, 2017 10:40 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:இது whats அப் பகிர்வு கிருஷ்ணாம்மா. அவசியமான ஒரு தெளிவை தரும் விஷயங்கள் நிறையவே இருந்தது. அதனாலேயே இங்கு பகிர்ந்து கொள்வோம் என்று நினைத்தே இந்த தொடர்.

அத்தனை  பெரிய whatsup  பகிர்வா?..............பகிருங்கள் பகிருங்கள்......படிக்கிறோம் புன்னகை.............எனக்கு வந்த சில பகிர்வுகளை சிரமம் இல்லாமல் இங்கு பகிர முடிந்தது விமந்தினி, சிலவற்றை பகிரும்போது, முன்னோட்டத்தின் போது தெரியும்  எழுத்துகள் பதிவிட்டவுடன் தெரிவது இல்லைசோகம்.........

உங்கள் யாருக்காவது இப்படி ஆனது உண்டா?..............

நானும் அவற்றை, word , நோட்பேட் மற்றும் நோட்பேட்++ என்று எல்லாவற்றிலும் பேஸ்ட் செய்து பிறகு இங்கு போட்டேன் அப்படியும் வரவில்லை........யாராவது உதவ  முடியுமா? புன்னகை

இதுவரை நான் அப்படியே ஈகரையில் copy - paste செய்ததில்லை. முதலில் word ல் copy செய்து, paragraph அரேஞ் செய்து, அலைன் செய்து  மற்றும் எனக்கு தெரிந்த வரை பிழை திருத்தம் செய்த பிறகு தான் இங்கே பதிவிடுவேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1232875

நானும் அப்படித்தான் செய்வேன் விமந்தனி, சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ...ஆனால் அவ்வாறு செய்து இங்கு பதிவிடும் போது சிலது தெரிவதில்லை சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 30, 2017 10:40 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
whatsapp  ஐ மெசேஜ்களை எனது மடிக்கணினியில் பார்த்து , ஈகரையில் பதிவிடவேண்டுமெனில் , C & P பண்ணிவிடுகிறேன் . நீங்கள் கூறுகிற ப்ராப்லம் வந்தது இல்லை. 

ரமணியன்
ஆமாம், இப்படி செய்தாலும் கிருஷ்ணாம்மா சொல்லும் பிரச்சனை வருவதில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1232876

கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 1571444738 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Feb 20, 2017 11:47 pm

னாதன தர்மத்தின் அடிப்படை போதனைகளுள் ஒன்று கர்மநியதி. கர்மா என்றால் வினை என பொருள்படும்.

வினை என்றால் செயலாகும். ஆகவே, கர்மா என்றால் செயல். கர்மநியதி ஒரு பிரபஞ்சநியதி (universal law).

→ கர்மா (காரணம் – விளைவு)

கர்மா என்ற பிரபஞ்சநியதி, காரணம் மற்றும் விளைவு ஆகிய இரண்டின் அடிப்படையில் செயல்படுகின்றது. ஒரு செயலின் காரணம் நன்மையானதாக இருந்தால், அந்த செயல் நன்மையை விளைவிக்கும்.

அதுவே ஒரு செயலின் காரணம் தீமையானதாக இருந்தால், அந்த செயல் தீமையை விளைவிக்கும்.

→ மூன்றுவகை கர்மா
கர்மா மூன்று வகைப்படும்.

அவை:

1) சஞ்சித கர்மா – முந்தைய பல பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள நல்ல மற்றும் தீய கர்மாக்களின் மொத்த மூட்டை தான் சஞ்சித கர்மா.

2) பிராரப்த கர்மா – சஞ்சித கர்மாவின் ஒரு சிறுபகுதி தான் பிராரப்த கர்மா. இது இந்த பிறவியில் அனுபவிக்கவேண்டிய நல்ல மற்றும் தீய கர்மபலன்கள்.

3) ஆகாமி கர்மா – இந்த பிறவியில் செய்யும் நல்ல மற்றும் தீய கர்மாக்கள் ஆகமி கர்மா எனப்படும். இவை பிறவியின் இறுதியில் சஞ்சித கர்மாவோடு சேர்க்கப்படும்.

→நல்ல கர்மா மற்றும் தீய கர்மா

இதுதான் நல்ல கர்மா, இதுதான் தீய கர்மா என்று நிலையாக கூறிவிட இயலாது. செயல் என்பது இடம், சூழ்நிலை ஆகியவற்றை பொறுத்து வேறுபடும். ஒருவன் தன்னுடைய செயலின் காரணம் நன்மையானதா தீமையானதா என்று ஆராய்ந்து அறியும் பக்குவத்தை சனாதன தர்மம் புகட்டுகின்றது.

அதற்காக தான் பல புராணங்களும் இதிகாசங்களும் இந்துதர்மத்தில் உள்ளன. மற்றவர்களின் செயல்களால் நாம் கற்றுக் கொள்ளும் பாடம் அளப்பரியது.

கர்ணனை பலர் மத்தியில் கேலிசெய்து அவமானப்படுத்தினாள் திரௌபதி, அந்த கர்மவினையின் விளைவால் அவள் பலர் மத்தியில் அவமானப்பட நேரிட்டது.

ஒருதீங்கும் இளைக்காதவனை சுட்டுக் கொல்வது தீய கர்மா, ஆனால் நாட்டையே அழிக்கும் நோக்கத்தில் செயல்படும் தீவிரவாதியை ஒரு ராணுவவீரன் கொல்வது தீயகர்மா ஆகாது.

ஏனென்றால், ஒரு ராணுவவீரனின் கடமை என்ன? நாட்டுமக்களைத் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றவேண்டும் என்பதே.

அவனின் கடமையிலிருந்து அவன் பின்வாங்கினால், அதுதான் அவனுக்கு தீயகர்மா. இதனால் தான் திருவள்ளுவர், கொல்லாமை எனும் அதிகாரத்தில் ஓருயிரையும் கொல்லக் கூடாது என்றும்; செங்கோன்மை எனும் அதிகாரத்தில் ”கொடியவர்களைக் கொலைத் தண்டனையால் அழிப்பது பயிர்களைக் காக்க களையைப் பிடுங்குவது போல” எனக் குறிக்கிறார். திருவள்ளுவர் முரணான கருத்துகளைக் கூறுவாரா? இல்லை.

கொல்லாமை எனும் அதிகாரத்தை சன்னியாசிகளுக்கும், செங்கோன்மை எனும் அதிகாரத்தை அரசர்களுக்கும் இயற்றியுள்ளார்.

எந்தவொரு உயிரையும் கொல்லக் கூடாது என்பது சன்னியாசிகளின் தர்மம்; நல்லவர்களைக் காப்பதற்காக தீயவர்களை அழிக்கவேண்டும் என்பது அரசனின் தர்மம். (அரசன் – நாட்டின் தலைவன்; சன்னியாசி – உலகவாழ்வை துறந்தவன்)
ஆகவே, ஒரு செயலை விட அந்த செயலின் பின்னால் இருக்கும் காரணம் தான் மிக முக்கியமாகும்.

ஒரு செயலை எந்த காரணத்திற்காக செய்கிறோம் என்பதை ஆராயவேண்டும். அந்த செயல் சுயநலமற்றதாக இருக்கவேண்டும்; எந்த அப்பாவி உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்காததாக இருக்கவேண்டும்; தர்மநியதிகளையும் இயற்கைநியதிகளையும் மீறாதபடி இருக்கவேண்டும்; சட்டவிதிமுறைகளை மீறாதபடி இருக்கவேண்டும்.

→ கர்மாவும் மறுபிறப்புச் சுழற்சியும்

ஒவ்வொரு ஆன்மாவும் தன்னுடைய செயலின் விளைவுகளை அனுபவித்து, அதனால் பக்குவநிலை அடையவே மீண்டும் மீண்டும் பூலோகத்தில் பிறப்பிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆன்மாவும் செயல்களின் நல்ல மற்றும் தீய விளைவுகளை அனுபவித்து தீரவேண்டும் என்பது பிரபஞ்சநியதி. சில ஆன்மாக்கள் வரம்புமீறிய தீயசெயல்களின் விளைவுகளை அனுபவிக்க நரகலோகங்களுக்கும், அளவற்ற நற்செயல்களின் விளைவுகளை அனுபவிக்க சொர்க்கலோகங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

பிறப்பெடுக்கும் ஆன்மாக்கள் செயலின்றி இருத்தல் இயலாது. செயல் புரியும் பொழுது அதன் வெளிப்பாடு நல்வினை - தீவினைகளாக உருவெடுத்துப் பின் ஆகாமி வினையில் சேர்க்கப்படுகிறது. நல்வினைகள் - தீவினைகள் ஆகிய இரண்டுமே பிறவியில் ஆழ்த்தவல்லது. முக்தி நிலையான பிறவாமைக்கு இவ்விரு வினைகளும் தடைக் கற்கள். இவ்விரு வினைகளையும் ஒழித்தலே முக்திக்கான வழியாம்.

வினைகளின் பலனை அனுபவிக்க பிறப்பெடுத்தே தீர வேண்டும். அது நல்வினைக்கு கிடைக்கும் நற்பலனாகவும் இருக்கலாம், தீவினைக்கு கிடைக்கும் தீயபலனாகவும் இருக்கலாம்.

ஒவ்வொரு ஆன்மாவும் ஏற்று வரும் பிராரப்த கர்மாவை (அதாவது இப்பிறவியில் தீர்த்து முடிக்க வேண்டிய கர்மாக்கள்) பிறவிக் காலத்திற்குள் முழுவதும் அனுபவித்து விடுகிறது. எனினும் ஆகாமிய வினைகளும் (அதாவது இப்பிறவியில் ஆன்மாக்களின் நல்வினைகள்-தீவினைகள்) பெரும் அளவு சேர்ந்து முடிவில் சஞ்சித வினையாக மாறுவதால் சஞ்சித வினைக் குவியல் என்றும் தீர்வதில்லை.

சஞ்சித வினைகள் முழுவதுமாக அனுபவித்துத் தீர்க்கப்படும் வரை ஆன்மாக்களுக்கு பிறவி தொடர்ந்து வரும். பிறவிகளுக்குக் காரணம் கர்மா. கர்மாவுக்குக் காரணம் பிறவிகள். பிறவிச் சுழற்சி என்று பகவத் கீதை இதையே குறிக்கிறது. எண்ணற்ற பிறவிகளுக்குப் பின்னரே ஒரு ஆன்மாவுக்கு மானிடப் பிறவி வாய்க்கிறது என்றும் சாத்திரம் அறிவிக்கிறது. ஆயினும், எப்படி கர்மாக்களை எல்லாம் அழித்து பிறவாமை எனும் நிலையை அடைவது?

பகவத் கீதையில் பகவான் அதற்கான வழியை மிகவும் அழகாக எடுத்துரைக்கிறார்.

எல்லோர்க்கும் நன்மை பயக்கும் காரணங்களை உடைய செயல்களையே புரியவேண்டும். அந்த நற்செயல்களின் பலன்களைத் துறந்துவிட வேண்டும். நல்ல காரியங்கள் செய்வது பின்னாளில் எனக்கு நற்பலன்கள் வருவதற்காக என்று கருதாமல், நல்ல காரியங்கள் செய்வது என்னுடைய ஆத்மதிருப்திக்காக என்ற எண்ணத்தை முழுமையாக கொண்டிருக்க வேண்டும்.

செயல்களின் பலன்களை எல்லாம் இறைவனுக்கு அர்ப்பணித்துவிட வேண்டும்.

இதனால் நம்முடைய கர்மப் பலன்களை எல்லாம் இறைவனே பொறுப்பேற்றுக் கொள்கிறார். இதனால் தான், கண்ணன் கர்ணனிடம் வந்து கர்ணன் ஆற்றிய நற்தொண்டுகளுக்கான பலன்களை எல்லாம் தானமாக கேட்டான். தான் ஆற்றிய நற்தொண்டுகளின் பலன்களை எல்லாம் கர்ணன் இறைவனுக்கே தானமாக கொடுத்துவிட்டு, கர்மங்கள் எல்லாம் தீர்ந்து முக்திநிலை அடைந்தான்.



கர்மவினை தொடரும்......




கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Feb 20, 2017 11:49 pm

டவுளே! எனக்கு ஏன் இப்படி ஒரு வாழ்க்கை? எனக்கு ஏன் இப்படி ஒரு கஷ்டம்? கெட்டவனெல்லாம் நல்லா இருக்கானே! என்ற எண்ணங்கள் மாறி உங்கள் தவறுக்கான வினைகள்தான் தற்போது நீங்கள் அனுபவித்துவரும் கஷ்டங்கள் என்ற ஆழமான புரிதல் ஏற்படும்.

புரிதல் ஏற்படும்போது எதையும் ஏற்றுகொள்ளும் பக்குவம் வந்துவிடும். அப்படிப்பட்ட பக்குவத்தை நீங்கள் அடையும்போது, உங்களின் 95% கர்மங்களை உங்களுக்காக வேறு ஒருவர் அனுபவித்து விடுவார். காரணம்!!

நீங்கள் அவர்மீது கொண்டுள்ள அதிகப்படியான அசைக்கமுடியாத நம்பிக்கையே ஆகும். அந்த அவர் ஏற்கனவே பிறவிக்கடலை கடந்தவராக இருப்பார்.

ஞானி ஒருவர் கூட்டம் நிறைந்த ஒரு தெரு வழியே சென்று கொண்டு இருந்தார். திடீர் என்று அங்கே உள்ள சாக்கடையில் குதித்துவிட்டு பக்கத்தில் உள்ள தண்ணீர் குழாயில் காலை கழுவிவிட்டு சென்றுவிட்டார். இதை பார்த்தவர்களுக்கு அவர் பைத்தியகாரன் என்று தோன்றலாம்.

ஆனால் அவரை பொறுத்தவரை பொருளுக்கும் அவருக்கும் தொடர்பை ஏற்படுத்தி கொள்வது ஆகும். ஆனால் அவர் ஏற்படுத்திய தொடர்பு அவருடையது அல்ல!! அவரை நம்பி இருப்பவர்களின் கர்மவினைகளை தான் அவர் அச்செயலின் மூலம் தீர்த்து வைக்கின்றார்.

இது எப்படி சாத்தியம்?? என்ற கேள்வி வரலாம்!! அந்த ஞானியை பொறுத்தவரை அவர் செய்யும் எந்த செயலுக்கும் வினை என்ற ஒன்று ஏற்படுவது கிடையாது.

காரணம்? அவர் உள்ளே வெறும் வெற்றிடம் தான் உள்ளது.

அதாவது அவருக்கு மனம் என்ற ஒன்று கிடையாது!! உள்ளே சூன்யமாக தான் இருக்கும்!! அவரிடம் எந்த எண்ணங்களும் உதிப்பதும் கிடையாது!! மறைவதும் கிடையாது!! இதுவே " சும்மா இருப்பது " என்று சொல்லப்படுகின்றது.

ஒருவன் அவர்மீது கொண்டுள்ள தீவிர பக்தியால் அந்த வெற்றிடத்தில் இவனது எண்ணங்கள் சுற்றிகொண்டிருக்கும். இவனுக்கு அன்று சாக்கடையில் விழுந்து அடிபட வேண்டும் என்ற விதி இருக்கும், ஆனால் இவன்  உண்மையாக இருப்பதால் இவனுக்கு பதிலாக அந்த ஞானி அந்த விதியை முடித்து வைக்கின்றார்.

மேலும் அவர் மீது நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொருவரின் எண்ண அலைகளும் அங்கே உள்ள வெற்றிடத்தில் சுற்றிக் கொண்டே இருக்கும். இவர்கள் தன் தவறை உணர்ந்து தனக்கு உண்மையாக நடக்க தொடங்கும்போது அந்த ஞானி எதோ ஒரு செயலின் மூலம் இவர்களின் பாவபுண்ணிய கணக்குகளை அழித்துவிடுவார்.

முடிவில் இவர்களும் அந்த ஞானியின் நிலைக்கே வந்துவிடுகின்றனர். அதனால் தான் ஞானிகள் அருகில் இருக்கும்போது எதையும் கேட்காதீர்கள் என்று கூறுவது. காரணம்!!

நீங்கள் கேட்டுதான் பெறவேண்டும் என்ற அவசியமே அங்கு கிடையாது. மாறாக நீங்கள் கேட்க நினைப்பது கூட சிறியதாக தான் இருக்கும். அவர் கொடுக்க நினைப்பதோ கணக்கில் அடங்காதவையாக இருக்கும். இதற்கு அவரிடம் பூரண சரணாகதி அடைந்தலே சிறந்தது ஆகும்.

இதில் பூரண சரணாகதி என்பது இனி அனைத்தும் உன் செயல் என பற்றுகளை துறப்பதுவே ஆகும்.

"நான்" என்ற எண்ணத்திற்கு பதிலாக இனி எல்லாம் "நீ" என்ற எண்ணத்தை கொண்டு வருவதே சரணாகதி.

அதற்குபிறகு உங்களுக்கென்று தனிப்பட்ட எந்தவொரு செயலும் இருக்காது, இருக்கவும் கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அவன் செய்வதாகவே இருக்க வேண்டும்.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு தேவைகள் என்பது மாறிக்கொண்டே இருக்கும். அந்த தேவைகளுக்கு தகுந்தவாறு வேண்டுதல்களும் மாறிக்கொண்டே இருக்கும்.

ஆனால் ஆன்மீகத்தில் ஓரளவு புரிதல் உள்ளவர்களை பொருத்தவரை, அவர்களுடைய வேண்டுதல் என்பது அவர்கள் வாழ்நாளில் "ஒரே ஒருமுறை" தான் இருக்குமே தவிர ஒவ்வொரு முறையும் இருக்காது.

ஏனென்றால் அவர்கள் முடிவான ஒன்றை முதலிலேயே வேண்டியும் விடுவர். அந்த வேண்டுதலில் அத்தனையும் அடங்கியும் விடும். இதை புரிந்துகொள்ள ஒரு சிறு கதையை பார்ப்போம்.

ஒரு ஏழை தாயின் மகனுக்கு படிப்பு அவ்வளவாக வரவில்லை. அவளுக்கு தெரிந்ததெல்லாம் அவள் வழிபடும் தெய்வம் மட்டும்தான். தன் மகன் பரிட்சையில் தேர்ச்சி பெற்று நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பது அவள் கனவு.

கடவுளிடமும் இதை குறித்து வேண்டுதல் வைக்கவே, மகனும் பரிட்சையில் தேர்ச்சி பெற்றான். ஆனால் இவனது வினை வேலை கிடைக்கவே இல்லை. மறுபடியும் கவலை கொண்ட தாய் வேண்டவே மகனுக்கு நல்ல வேலையும் கிடைத்தது.

சிறிது காலம்தான் சென்றது மகனுக்கு விபத்து ஏற்பட்டு படுக்கையில் இருந்தான். அத்தாய்க்கு தெரிந்ததெல்லாம் அவனே என்பதால் மறுபடியும் ஒரு வேண்டுதல்!!

இதுவே அத்தாய் கடவுளே "எனக்கு அமைதியையும் சந்தோஷத்தையும் கொடு" என்று ஒரே ஒருமுறை மட்டும் வேண்டியிருந்தால், அவள் வாழ்க்கை வசந்தமாகி இருக்கும்.

புரியும்படி கூற வேண்டுமென்றால் ஒருவனுடைய வேண்டுதல் என்பது நிரந்தரமான முடிவான ஒன்றாக இருக்க வேண்டும். அத்தாய் வேண்டியது எல்லாமே தற்காலிகமான தீர்வை தரக்கூடியது என்பதால் ஒவ்வொரு முறையும் வேண்ட வேண்டிய அவசியம் இருந்தது.

மேலும் எதிர்வரும் கர்மவினை இதுதான் என்பது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கூடவே எனக்கு இந்த தேவை நிறைவேறினால் நான் நிம்மதியாக இருப்பேன் என்ற தவறான கணக்கை போட்டுக் கொண்டு தற்காலிக தீர்வை நாடுகின்றோம்.

உண்மையில் எந்த ஒன்றில் எல்லாம் அடங்குமோ!! அடக்கமோ!! அந்த ஒன்றை வேண்டுதலாக வைக்க வேண்டும். அப்படி அந்த வேண்டுதல் நிறைவேறும் பொழுது அவனுக்கு அனைத்தும் வசமாகி விடுகின்றது.

எனவே அவனது வேண்டுதல் என்பது ஒரே ஒருமுறையோடு முடிவடைந்து விடுகின்றது.

இதில் உங்களை சுற்றி உள்ளவர்களும் பயன் பெறுவர். எப்படியென்றால் உங்கள் அமைதியும் சந்தோஷமும் உங்களை சுற்றி உள்ளவர்களையும் சார்ந்தே உள்ளது.

உங்கள் தாய்க்கு உடம்பு சரியில்லை என்றாலோ, உங்கள் மனைவி கோபபட்டலோ, உங்கள்முன். ஒரு நாய் குட்டி கஷ்டப்பட்டாலோ, உங்களுக்கு பணக்கஷ்டம் ஏற்பட்டாலோ உங்களால் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க முடியுமா?? முடியாதல்லவா!!

எனவே உங்கள் அமைதி என்ற வேண்டுதல் நிறைவேற.உங்களை சார்ந்த மற்றும் உங்களை சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கை தரமும் நல்லவைகளாக மாற்றம் பெறகின்றன.

இப்பதிவு உங்களுக்கு தெளிவாக புரிந்தால்  இறைவனை நோக்கிய உங்களது
பிராத்தனையும் ஒருமுறைதான்!!



-முற்றும்-




கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 20, 2017 11:51 pm

போட்டுவிட்டீர்களா?......நாளை வந்து படிக்கிறேன்............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Feb 20, 2017 11:53 pm

இவ்வளவு ஓட்டம்....???????????? சிரிப்பு சிரிப்பு



கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 20, 2017 11:56 pm

விமந்தனி wrote:இவ்வளவு ஓட்டம்....???????????? சிரிப்பு சிரிப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1234162

ம்ம்... நேரமாகிவிட்டது.....படுக்க போகணும் புன்னகை ............... மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக