புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_m10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_m10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10 
3 Posts - 7%
heezulia
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_m10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_m10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_m10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 03, 2017 7:25 am


பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மனை
கயத்தாறில், புளியமரத்தில் மேஜர் பானர்மேன் துாக்கிலிட்டான்.
அப்போது அந்த மாவீரனின் வயது 39.

அதன் பின் அந்த மாவீரனின் உடல் என்னவாயிற்று? என்று இதுவரை
கண்டுபிடிக்க முடியவில்லை.

கட்டபொம்மன் கடைசி காலத்தில் வைத்திருந்த ஆயுதங்கள் பற்றி
தற்போது சில விபரங்கள் தெரியவந்துள்ளன.ஆங்கிலேயருக்கு வரி
செலுத்தாததால் ஆங்கிலேய பிரதிநிதி மேஜர் பானர்மேன் 1799ல்
பாஞ்சாலங்குறிச்சியை தாக்கினான்.

முதல் நாள் போரில் கட்டபொம்மன் வெற்றி பெற்றான். இதை அறிந்த
பானர்மேன், திருநெல்வேலி, கயத்தாறு, பிரிட்டிஷ் கோட்டைகளிலிருந்து
பீரங்கி படைகளைக் கொண்டு வந்து பாஞ்சாலங்குறிச்சியின் மீது
வெறித் தாக்குதல் தொடங்கத் திட்டமிட்டான்.

பீரங்கித் தாக்குதலால் பாஞ்சாலங்குறிச்சி மக்களுக்கு பெரும் உயிர்
சேதம் ஏற்படும் என்று வருந்திய கட்டபொம்மன், தன் தம்பி ஊமத்துரை,
மந்திரி தானாதிபதி மற்றும் சில வீரர்களுடன் பாஞ்சாலங்குறிச்சி
கோட்டையை விட்டு தப்பித்து சென்றான்.
-
தப்பிக்க காரணம் :

-
பானர்மேனின் ஆட்களிடமும், பிரிட்டிஷ்க்கு அடிபணியும் பாளையக்
காரர்களிடமிருந்தும் கட்டபொம்மன் தப்பி, திருச்சியில் ஆங்கிலேய
ஏகாதிபத்திய அதிகார மையத்தின் கவர்னர் ஜெனரலை சந்திக்க
எண்ணினான்.

ஏனென்றால் அப்போது இருந்த மேஜர் ஜெனரல், ஜாக்ஷன்துரைக்கும்,
கட்டபொம்மனுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பை அறிந்தவர்.
குற்றாலத்திலிருந்து ராமநாதபுரம் வரை படை பரிவாரங்களோடு
கட்டபொம்மனை வீணாக அலைக்கழித்து, ஜாக்ஷன்துரை அவமானப்
படுத்தியதை அந்த கவர்னர் ஜெனரல் நன்கு அறிவார்.

ஒரு பாளையக்காரனை அலைய வைத்தது அவருக்கு எரிச்சலை தந்து,
ஜாக்ஷன்துரையை பதவி நீக்கம் செய்தார். எனவே இவரிடம் பானர்மேனின்
கொடுஞ்செயலை கூறி நீதி கேட்கவே கட்டபொம்மன் தப்பிச்செல்ல
வேண்டிய சூழல் உருவானது.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 03, 2017 7:26 am


பானர்மேன் கடிதம் :

-
கட்டபொம்மன் தப்பியதை அறிந்த பானர்மேன், அவரை மிக பெரிய தேசத்
துரோகியாக சித்தரித்து எல்லா பாளையக்காரர்களுக்கும், 'கட்டபொம்மன்,
உடன் உள்ள ஊமத்துரை, தானாதிபதி மற்றும் அவனிடம் உள்ளவர்களுக்கு
அடைக்கலமோ, உதவியோ கொடுக்க கூடாது.

மேலும் கட்டபொம்மனை பிடிக்க பிரிட்டிஷ் அரசுக்கு உதவி செய்ய வேண்டும்.
அதற்கு தக்க சன்மானம் வழங்கப்படும். மீறினால் அடைக்கலம் கொடுத்த
பாளையக்காரரும், அவர் பாளையமும் பீரங்கி தாக்குதலுக்கு உள்ளாகும்,'
என்று எழுதினான்.
-
தானாதிபதி கைதும் .. எட்டப்பன் செயலும் ..

-
தப்பிய கட்டபொம்மனும், மற்றவர்களும், கோல்வார்பட்டியில் உள்ள
அரண்மனையில் தங்கியுள்ளனர் என்ற செய்தியை அறிந்த எட்டப்பன்,
பானர்மேனிடம் தனக்கு சில ஆங்கிலேய சிப்பாய்களின் உதவியை வேண்டினார்.
பானர்மேனும் எட்டப்பனுடன் சிப்பாய்களை அனுப்பினார். அவர்கள் துணையுடன்
கோல்வார்பட்டி கோட் டையை எட்டப்பன் தாக்க, தானாதிபதி மட்டும் பிடிபட
மற்றவர்கள் தப்பி சென்றனர்.

தானாதிபதி கைதை எட்டப்பன் பானர்மேனுக்கு தெரிவிக்க, பானர்மேன்
விருப்பப்படி நாகலாபுரம் கடை வீதிக்கு தெற்கில் உள்ள கணேசர் கோவில்
அருகில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் துாக்கிலிட்டான்.

தானாதிபதியின் தலையை துண்டித்து பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில்
மக்கள் பார்வை படும்படி எட்டப்பன் வைத்தார்.காட்டிக்கொடுத்த
தொண்டைமான்கோல்வார்பட்டியிலிருந்து தப்பிய கட்டபொம்மன் கூட்டம்,
திருக்களம்பூரில் உள்ள அடர்த்தி யான குமாரபட்டி காட்டில் மறைவாக
இருந்துள்ளார்கள்.

இந்தக்காடு, புதுக்கோட்டை அரசர் தொண்டைமானின் ஆளுகைக்கு உட்பட்டது.
மேலும் முத்து வைரவன் என்ற தொண்டைமானின் தளபதி கண்காணிப்பில்
இருந்தது.

அந்த காலத்தில் வெளி ஆட்கள் நடமாட்டம் இருந்தால் எளிதில் தெரிந்து
விடும். குமார பட்டி காட்டில் அன்னிய நடமாட்டம் இருப்பதை அறிந்த
புதுக்கோட்டை மன்னர், அந்நி யர்கள், பானர்மேன் கடிதத்தில் குறிப்பிட்ட
கட்டபொம்மு பாளையக்காரராக இருக்கும், அவர்கள் தன் ஆளுகைக்கு
உட்பட்ட எல்லைக்குள் இருந்து, பிரிட்டிஷ் படை கைது செய்தால்,
தன் பாளையம் பிரிட்டிஷ் பீரங்கி தாக்குதலுக்கு ஆளாகுமோ என்று அஞ்சி,
பானர்மேனுக்கு உடனே தகவல் கொடுத்தார். அதையடுத்து பிரிட்டிஷ் படை
உடனே வந்து சுற்றிவளைத்து கட்டபொம்மன், ஊமத்துரை மற்றும்
அவர்களுடன் இருந்தவர்களையும் கைது செய்தது.
-
நிராயுதபாணியாக அவர்கள் மதுரை வழியாக கயத்தாறு கொண்டு
செல்லப்பட்டு, பானர்மேனிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலியான விசாரணை
மூலம் கட்டபொம்மன் பானர்மேனால் துாக்கிலிடப்பட்டார்.திருக்களம்பூர்
குமாரபுரம் காட்டில் கட்டபொம்மனையும், ஊமத்துரையையும் பிரிட்டிஷ்காரர்கள்
கைது செய்தனர்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 03, 2017 7:26 am


கட்டபொம்மன் தற்காப்புக்காக வைத்திருந்த ஆயுதங்கள் என்னவாயிற்று
என்று ஆராயும்போது இன்றும், அவர் பயன்படுத்திய ஆயுதங்களான கத்தி,
ஈட்டி, களரி, குத்துவாள், கட்டாரி போன்றவற்றை முத்துவைரவன் வாரிசுகள்
வீட்டில் வைத்து வழிபடுகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜையன்று
அவ்வாயுதங்களை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைத்து பயபக்தியுடன்
பூஜை செய்கின்றனர்.
-
ஊமையன் கோவில்
-

இவ்வூர் மக்கள் திருக்களம்பூர் குமாரப்பட்டி காட்டில் ஊமத்துரைக்கு ஒரு
மேற்கூரை இல்லாத கோயில் கட்டி வழிபடுகின்றனர். அடர்த்தியான
இக்காட்டிற்குள் ஆடு மேய்ப்பவர்கள் துணையுடன், நான் கள ஆய்வு
செய்தபோது இக்காடு சுமார் 30 ஏக்கர் அளவில் உள்ளது. இக்காட்டில் பழ
மரங்கள், தண்ணீர் தடாகமும் இருந்துள்ளன. இங்கு உள்ள மக்கள்
இக்காட்டிலிருந்து காய்ந்த மரங்களை கூட எக்காரணம் கொண்டும் வெட்ட
மாட்டார்களாம்.
-
மேலும் குதிரையில் அமர்ந்த நிலையில் ஊமத்துரை போல் பதுமைகள் செய்து
நேர்த்திக்கடன் செய்கின்றனர்.தங்கள் விளை நிலங்களில் விளைந்தவற்றை
முதலில் ஊமையன் கோயிலுக்குபடைக்கும் வழக்கத்தை வைத்து உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பவுர்ணமியை அடுத்து வரும் வெள்ளியன்று
ஊமயனுக்கு விழா எடுக்கின்றனர். அப்போது கட்டா யமாக வீரபாண்டிய
கட்டபொம் மன் நாடகத்தையும் நடத்துகின்றனர்.
-
காட்டிக்கொடுத்தது யார்?
-

கள ஆய்வின் மூலம், 'கட்டபொம்மனையும், அவனை சார்ந்த வர்களையும்
பிரிட்டிஷ் சிப்பாய்கள் தான் கைது செய்திருக்க வேண்டும்,' என்று அறிய முடிகிறது.
ஆனால் வரலாற்றில் கட்டபொம்மனை கட்டிக்கொடுத்தது எட்டப்பன் என்று
எவ்வாறு பதிவு செய்தனர் என்று தெரியவில்லை.எட்டப்பன் கைது செய்தது
கட்டபொம்மனின் மதியூக மந்திரி தானாதிபதியை தான் என தெரிகிறது.

கட்டபொம்மனை தேடுவதற்கு உதவி செய்த பாளையக்காரர்களுக்கு பானர்மேன்
வெகுமதி வழங்கியுள்ளான். எட்டப்பருக்கும் சில கிராமங்கள் வெகுமதியாக
கிடைத்துள்ளன. 3.1.1760ல் பிறந்த கட்டபொம்மன், 16.10.1799ல் வீர மரணமடைந்தார்.
அவர் 39 ஆண்டுகள் வாழ்ந்தாலும் நுாறாண்டுகளுக்கு மேலாக அவரது வீரம் இன்றும்
போற்றப்படுகிறது.
-
--------------------------------------

- முனைவர்கே.கருணாகரப்பாண்டியன், வரலாற்று ஆய்வாளர்
தினமணி


Ravi Gopal
Ravi Gopal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 29/12/2016

PostRavi Gopal Tue Jan 03, 2017 12:41 pm

தகவல் தந்தமைக்கு நன்றி திரு அய்யாசாமி ராம்

இப்படிக்கு
ரவி கோபால்
சவூதி அரேபியா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 04, 2017 10:44 am

மிக்க நன்றி ராம் அண்ணா! ............. வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... 103459460

படம் மட்டுமே மிஸ்ஸிங் புன்னகை.............(எனக்கு எந்த படமும் நெட் லிருந்து டவுன்லோட் செய்ய முடியவில்லை, எனவே, என்னால் படம் எதுவும் போட முடியவில்லை அண்ணா சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக