Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வியாதியை பற்றியே பேசும் வியாதி!
2 posters
Page 1 of 1
வியாதியை பற்றியே பேசும் வியாதி!
எங்கள் உறவினர் வட்டத்தில், ஒரு பெரியவர் இருக்கிறார். அவரிடம், 'ஐயா எப்படி இருக்கீங்க, சவுக்கியமா...' என்று கேட்டால் போதும், 'நரம்பை இழுக்குது; இடுப்பை புடிக்குது; தலை, விண்ணு விண்ணுங்குது; சாப்பிட, தூங்க முடியலை; செலவு வேற எக்கச்சக்கமா ஆகுது... பாருங்க, இந்த மருந்து பில்களை... படிங்க இந்த மருத்துவ பைலை...' என்று, நீட்டி முழக்கி, ஏன் தான் கேட்டோமோ என்று நினைக்கும்படி செய்து விடுவார்.
என் நண்பரின் மகளுக்கு, புற்றுநோய்; ஆயுள் மற்றும் ஆரோக்கியம் கேள்விக்குறி தான்! ஆனாலும், அப்பெண்ணை பார்த்து, நலம் விசாரிக்கும் போதெல்லாம், 'இப்ப பரவாயில்லை... நல்லா தூங்குறேன்; ஒழுங்கா சாப்பிடுறேன்...' என்று, பதில் சொல்வார்.
பொதுவாகவே, நமக்கு மற்றவர்களின் பாராட்டை பெற வேண்டும் என்ற உணர்வுக்கு இணையாக, மற்றவர்களின் அனுதாபத்தை சம்பாதிக்கும் எண்ணமும், அதிகம் உள்ளது.
நம் சுண்டு விரலில் உள்ள, சிறு பிளாஸ்திரியை பற்றி கூட, பார்க்கிற அத்தனை பேரும் கேட்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு, நமக்குள் இருக்கிறது.
சந்தித்து, சிறிது நேரம் ஆகியும், அவர்கள் கேட்காவிட்டால், அவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக, அவர்களின் கண்களில் படும்படியாக, சுண்டு விரலை காட்டி, அவர்களது கவனத்தை ஈர்க்கும், தவறான போக்கும் சிலரிடம் உள்ளது.
உடல் நல குறைவு என்றதும், நேரில் வந்தோ, தொலைபேசியிலாவதோ விசாரிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு, நம்மில் பெரும்பாலோருக்கு உண்டு.
அது மட்டுமல்ல, அவ்வாறு விசாரிப்பவர்கள் தான் நம் மீது உண்மையான பாசம் கொண்டவர்கள்; மற்றவர்கள், அக்கறையற்றவர்கள் என்கிற முடிவிற்கு வந்து, விசாரிக்காதவர்களை கறுப்பு பட்டியலில் தள்ளுகிற மனநிலையும், பலருக்கு உண்டு!
'என் வியாதி பற்றி எல்லாருக்கும் தெரிய வேண்டும்; அதுபற்றி, அவர்கள் அக்கறை காட்ட வேண்டும்...' என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறதல்லவா, இது, அடிப்படையில் தவறானது.
நம் துன்பம் கண்டு, பிறர் துன்புற வேண்டும் என்கிற எண்ணமே, வாழ்க்கை குறித்த தவறான கண்ணோட்டமாகும்.
ஒரு சினிமா பாடல் வரி இது...'எந்தன் சோகம் உன்னை தாக்கும் என்றெண்ணும் போது, என் அழுகை நின்றது...' இதுவன்றோ, ஆரோக்கிய மன நிலை! முடிந்த வரை, மற்றவர்களுடன், இனிய, மகிழ்ச்சியான செய்திகளை, பகிர்ந்து கொள்ள வேண்டுமே தவிர, நம் வியாதியைப் பற்றி பேசி, பிறரை துன்புறுத்தக் கூடாது.
'கையில என்ன இவ்வளவு பெரிய கட்டு...' என்று, ஒருவர் பதறினால், 'அது ஒண்ணுமில்லை, சின்ன விபத்து; அது கிடக்குது விடுங்க. உங்க பையன் வேலை என்னாச்சு...' என்று, விஷயத்தை திசை திருப்ப வேண்டும்.
'சே... எவ்வளவு வலி, வேதனையிலும், நம் பிரச்னை பற்றி, அக்கறைபடுகிறாரே...' என்று, அவர்கள் உள்ளுக்குள் நெகிழ வேண்டும்.
'நான், என்ன தவறு செய்தேனோ, இப்படியொரு வியாதியில் மாட்டி கொண்டேன்; இது, மற்றவர்களுக்கு வரக் கூடாது. நான், இந்த மருத்துவமனையில் போய் மாட்டி கொண்டேனே... இப்படி அநியாயமாய், 'பில்' தீட்டி விட்டனரே...' என்கிற கோணத்தில், வியாதி புராணம் பாடலாம்; தவறில்லை.
மாறாக, கேட்கிறவர்களிடம் எல்லாம், அப்போது தான், முதல் முறை சொல்வது போல், நூற்றி ஓராவது முறையும், புராணம் பாட வேண்டியதில்லை.
வியாதி பற்றியே பேசும் வியாதிக்கு, நிவாரணம் சொல்லி விட்டேன்; ஜீரணித்து ஏற்பீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.
லேனா தமிழ்வாணன்
என் நண்பரின் மகளுக்கு, புற்றுநோய்; ஆயுள் மற்றும் ஆரோக்கியம் கேள்விக்குறி தான்! ஆனாலும், அப்பெண்ணை பார்த்து, நலம் விசாரிக்கும் போதெல்லாம், 'இப்ப பரவாயில்லை... நல்லா தூங்குறேன்; ஒழுங்கா சாப்பிடுறேன்...' என்று, பதில் சொல்வார்.
பொதுவாகவே, நமக்கு மற்றவர்களின் பாராட்டை பெற வேண்டும் என்ற உணர்வுக்கு இணையாக, மற்றவர்களின் அனுதாபத்தை சம்பாதிக்கும் எண்ணமும், அதிகம் உள்ளது.
நம் சுண்டு விரலில் உள்ள, சிறு பிளாஸ்திரியை பற்றி கூட, பார்க்கிற அத்தனை பேரும் கேட்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு, நமக்குள் இருக்கிறது.
சந்தித்து, சிறிது நேரம் ஆகியும், அவர்கள் கேட்காவிட்டால், அவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக, அவர்களின் கண்களில் படும்படியாக, சுண்டு விரலை காட்டி, அவர்களது கவனத்தை ஈர்க்கும், தவறான போக்கும் சிலரிடம் உள்ளது.
உடல் நல குறைவு என்றதும், நேரில் வந்தோ, தொலைபேசியிலாவதோ விசாரிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு, நம்மில் பெரும்பாலோருக்கு உண்டு.
அது மட்டுமல்ல, அவ்வாறு விசாரிப்பவர்கள் தான் நம் மீது உண்மையான பாசம் கொண்டவர்கள்; மற்றவர்கள், அக்கறையற்றவர்கள் என்கிற முடிவிற்கு வந்து, விசாரிக்காதவர்களை கறுப்பு பட்டியலில் தள்ளுகிற மனநிலையும், பலருக்கு உண்டு!
'என் வியாதி பற்றி எல்லாருக்கும் தெரிய வேண்டும்; அதுபற்றி, அவர்கள் அக்கறை காட்ட வேண்டும்...' என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறதல்லவா, இது, அடிப்படையில் தவறானது.
நம் துன்பம் கண்டு, பிறர் துன்புற வேண்டும் என்கிற எண்ணமே, வாழ்க்கை குறித்த தவறான கண்ணோட்டமாகும்.
ஒரு சினிமா பாடல் வரி இது...'எந்தன் சோகம் உன்னை தாக்கும் என்றெண்ணும் போது, என் அழுகை நின்றது...' இதுவன்றோ, ஆரோக்கிய மன நிலை! முடிந்த வரை, மற்றவர்களுடன், இனிய, மகிழ்ச்சியான செய்திகளை, பகிர்ந்து கொள்ள வேண்டுமே தவிர, நம் வியாதியைப் பற்றி பேசி, பிறரை துன்புறுத்தக் கூடாது.
'கையில என்ன இவ்வளவு பெரிய கட்டு...' என்று, ஒருவர் பதறினால், 'அது ஒண்ணுமில்லை, சின்ன விபத்து; அது கிடக்குது விடுங்க. உங்க பையன் வேலை என்னாச்சு...' என்று, விஷயத்தை திசை திருப்ப வேண்டும்.
'சே... எவ்வளவு வலி, வேதனையிலும், நம் பிரச்னை பற்றி, அக்கறைபடுகிறாரே...' என்று, அவர்கள் உள்ளுக்குள் நெகிழ வேண்டும்.
'நான், என்ன தவறு செய்தேனோ, இப்படியொரு வியாதியில் மாட்டி கொண்டேன்; இது, மற்றவர்களுக்கு வரக் கூடாது. நான், இந்த மருத்துவமனையில் போய் மாட்டி கொண்டேனே... இப்படி அநியாயமாய், 'பில்' தீட்டி விட்டனரே...' என்கிற கோணத்தில், வியாதி புராணம் பாடலாம்; தவறில்லை.
மாறாக, கேட்கிறவர்களிடம் எல்லாம், அப்போது தான், முதல் முறை சொல்வது போல், நூற்றி ஓராவது முறையும், புராணம் பாட வேண்டியதில்லை.
வியாதி பற்றியே பேசும் வியாதிக்கு, நிவாரணம் சொல்லி விட்டேன்; ஜீரணித்து ஏற்பீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.
லேனா தமிழ்வாணன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வியாதியை பற்றியே பேசும் வியாதி!
இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது . நம் வியாதியைப்பற்றி நாலுபேரிடம் சொன்னால்தான் , அதற்கு சரியான தீர்வுசொல்லுவார்கள் .
கிருஷ்ணம்மா அவர்கள் கண் ஆபரேஷன் செய்துகொள்ள மிகவும் பயந்தார்கள் . ஈகரை உறுப்பினர்கள் தைரியம் சொன்னதோடு மட்டுமல்லாமல் ,பிரார்த்தனையும் செய்தார்கள் ; எல்லாம் நல்லபடியாக முடிந்தது .
எனவே நோயாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்தத் துன்பமாக இருந்தாலும் சரி உறவினர்களோடும் , நண்பர்களோடும் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து .
" தோழனோடும் ஏழைமை பேசேல் " என்பது முதுமொழி . நம் வறுமையை மட்டும் யாரிடமும் காட்டிக்கொள்ளக் கூடாது . வறுமை உற்ற காலத்து செம்மாந்து நிற்கவேண்டும் .
கிருஷ்ணம்மா அவர்கள் கண் ஆபரேஷன் செய்துகொள்ள மிகவும் பயந்தார்கள் . ஈகரை உறுப்பினர்கள் தைரியம் சொன்னதோடு மட்டுமல்லாமல் ,பிரார்த்தனையும் செய்தார்கள் ; எல்லாம் நல்லபடியாக முடிந்தது .
எனவே நோயாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்தத் துன்பமாக இருந்தாலும் சரி உறவினர்களோடும் , நண்பர்களோடும் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து .
" தோழனோடும் ஏழைமை பேசேல் " என்பது முதுமொழி . நம் வறுமையை மட்டும் யாரிடமும் காட்டிக்கொள்ளக் கூடாது . வறுமை உற்ற காலத்து செம்மாந்து நிற்கவேண்டும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: வியாதியை பற்றியே பேசும் வியாதி!
மேற்கோள் செய்த பதிவு: 1231453M.Jagadeesan wrote:இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது . நம் வியாதியைப்பற்றி நாலுபேரிடம் சொன்னால்தான் , அதற்கு சரியான தீர்வுசொல்லுவார்கள் .
கிருஷ்ணம்மா அவர்கள் கண் ஆபரேஷன் செய்துகொள்ள மிகவும் பயந்தார்கள் . ஈகரை உறுப்பினர்கள் தைரியம் சொன்னதோடு மட்டுமல்லாமல் ,பிரார்த்தனையும் செய்தார்கள் ; எல்லாம் நல்லபடியாக முடிந்தது .
எனவே நோயாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்தத் துன்பமாக இருந்தாலும் சரி உறவினர்களோடும் , நண்பர்களோடும் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து .
" தோழனோடும் ஏழைமை பேசேல் " என்பது முதுமொழி . நம் வறுமையை மட்டும் யாரிடமும் காட்டிக்கொள்ளக் கூடாது . வறுமை உற்ற காலத்து செம்மாந்து நிற்கவேண்டும் .
ஆமாம் ஐயா , நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ..........நோயாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்தத் துன்பமாக இருந்தாலும் சரி உறவினர்களோடும் , நண்பர்களோடும் பகிர்ந்து கொள்வதால் நம் மனச்சுமை குறைவதோடு, தன்னம்பிக்கையும் தைரியமும் கூடும். தெரியாத பல விஷயங்களும் தெரியவரும்....."ஓ... இது மிகச்சாதாரணம் தான், நமக்கு மட்டும் ஏதோ நடக்கக் கூடாதது நடந்துவிடவில்லை.." என்கிற தெம்பு கிடைக்கும் .............மேலும், நமக்கு வேண்டியவர்கள், நம் நலனில் அக்கறை கொண்டவர்கள் நம்முடன் இந்த துன்ப நேரத்தில் இருக்கிறார்கள் என்கிற மனா பலமே நிறைய நேர்மறை அலைகளை நம்மைசுற்றி பரவ விடும் .....நல்லதே நடக்கும் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» இதழ்களால் பற்றியே - கவிதை
» ஆப்பிள் பழ தோல் அல்சீமர்ஸ் வியாதியை கட்டுப்படுத்தும்: ஆய்வில் தகவல்
» சர்க்கரை வியாதி
» குற்றமே காணும் வியாதி
» விட்டதைப் பிடிக்கும் வியாதி
» ஆப்பிள் பழ தோல் அல்சீமர்ஸ் வியாதியை கட்டுப்படுத்தும்: ஆய்வில் தகவல்
» சர்க்கரை வியாதி
» குற்றமே காணும் வியாதி
» விட்டதைப் பிடிக்கும் வியாதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|