புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! I_vote_lcapபொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! I_voting_barபொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! I_vote_lcapபொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! I_voting_barபொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! I_vote_lcapபொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! I_voting_barபொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! I_vote_lcapபொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! I_voting_barபொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! I_vote_lcapபொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! I_voting_barபொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! I_vote_lcapபொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! I_voting_barபொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! I_vote_lcapபொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! I_voting_barபொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! I_vote_lcapபொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! I_voting_barபொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! I_vote_lcapபொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! I_voting_barபொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! I_vote_lcapபொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! I_voting_barபொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !


   
   

Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 14, 2017 1:56 am

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000 மாவது ஆண்டு கொண்டாடப்படுவதால் தினமலரில் 108  நாட்களுக்கு ஒரு தொடர் வருகிறது. அதை இங்கு பகிர விரும்புகிறேன். படித்து மகிழுங்கள் !

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! CVQDaTLrRZS6bKX1DYcx+ramanujar

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! IcQ0c5fS3GOBeFIzAanW+poliga_poliga_ramanujar



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 14, 2017 1:57 am

நாளை அவன் வருவான்! (1)

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! V6LAtf5CT9mdxs8HIqog+wall5

விடியும் நேரம்; அவர் சாரங்கபாணி கோயிலை நோக்கி விரைந்து கொண்டிருந்தார். குடந்தைத் திருநகரில் கோயில் கொண்ட பெருமாள்; மல்லாண்ட திண்தோள் மணிவண்ணன், மல்லாக்கப் படுத்த கோலத்தில் காட்சியளிக்கிற தலம் அது. எத்தனை தொன்மையானது! எத்தனை ஆழ்வாரால் பாடப்பெற்ற தலம்!

காட்டுமன்னார்கோயிலில் இருந்து குடந்தைக்கு வருகிற வழியிலெல்லாம், அவருக்கு வேறு நினைவே இல்லை. 'சார்ங்கமெனும் வில்லாண்ட பெருமானை தரிசிக்கப் போகிறோம்' என்கிற நினைவே, அவருக்கு சகலத்தையும் மறக்கச் செய்துவிட்டது.

அவரால் பசி, தூக்கம் போன்ற உணர்வுகளை மட்டுமல்ல; ஐம்புலன்களை மட்டுமல்ல; அதற்கும் மேலே, சிந்தனைக் குதிரையையும் அடக்கி ஓரிடத்தில் நிறுத்தி வைக்க முடியும். தேவைப்பட்டால், அதை இல்லாமலேயே அடித்து வீழ்த்தவும் முடியும். அவர் ஒரு யோகி. மிகப் பெரிய யோகி. எட்டு அங்கங்கள் கொண்ட யோகக்கலையை முற்றிலும் பயின்றவர். அனைத்தினும் மேலாக, பக்தி யோகத்தில் தன்னைக் கரைத்தவர்!

பட்டு விரித்துக் காட்டும் சேலை வியாபாரியின் லாகவத்தில், இயற்கை விரித்திருந்த அகண்ட பெரும் காவிரிக் கரையோரம் அவர் நடந்து கொண்டிருந்தபோது, குடந்தையின் அழகு அவர் கண்ணில் படவில்லை.

சலசலத்து ஓடும் நதியின் கரையெங்கும் விரிந்த வயல்வெளிகளும், அவற்றுக்கு அரண் போலச் சூழ்ந்து நின்ற தென்னையும், வாழையும், யாரையும் ஒரு கணம் நின்று நோக்கச் செய்யும். ஆனால், அவர் நிற்கவில்லை. 'பெருமானே! பெருமானே!' என்று பரிதவித்து விரைந்து கொண்டிருந்தார்.

கோயிலை நெருங்கியபோது, அவரது நடை மேலும் வேகம் கொண்டது. பாய்ந்து சென்று பெருமானைத் தூக்கி விழுங்கி விடும் வேகம். அது, கண்ணின் பசி. எண்ணமெங்கும் வியாபித்திருப்பவனை ஏந்தியெடுத்து நெஞ்சுக்குள் சீராட்டும் பேரழகுப் பசி.

அவருக்கு, வாயாரக் கொஞ்ச வேண்டும்; நெக்குருகிப் பாட வேண்டும்; பக்திப் பரவசத்தில், தன்னைக் கற்பூரமாக்கிக் கரைத்துக் காணாமல் செய்துவிட வேண்டும். ஆனால், மொழி தோற்கடித்து விடுகிறது. 'பெருமானே! பெருமானே!' என்று கதறுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடிவதில்லை.

'ஆழ்வார்கள் பாடியிருக்கிறார்களாமே? அது மொத்தம் நாலாயிரமாமே? ஒவ்வொரு வரியிலும் உயிரைச் சேமித்து வைத்திருக்கிறார்களாமே? எல்லாம் சொல்லக் கேள்வி. 'ஒன்றும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. என்ன பிறப்போ, என்ன வாழ்க்கையோ!' எண்ணியபடி அவர் சன்னிதிக்குள் நுழைந்த போது, 'பொளேர்..' என, பிடறியில் யாரோ அடித்தாற் போல அப்படியே திகைத்து நின்று விட்டார். உள்ளே, யாரோ பாடிக் கொண்டிருந்தார்கள்.

'ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய
உருக்குகின்ற நெடுமாலே...'

ஆரா அமுதம்! ஐயோ, இந்த பெறற்கரிய பெருங்கருணையாளனை வேறெப்படி வருணிப்பது? இதைவிடப் பொருத்தமான ஒரு முதல்சொல் இருந்துவிட முடியுமா!

அப்படியே கண்மூடி நின்றார். அவர்கள் பாடிக்கொண்டே இருந்தார்கள். பத்துப் பாசுரங்கள் பாடி முடித்து, தீர்த்தப் பிரசாதம் வாங்கிக்கொண்டு வெளியே
வந்தவர்களை அவர் நெருங்கினார்.

'ஐயா இது என்ன? குருகூர்ச் சடகோபன் சொன்ன ஓராயிரத்தில் பத்து என்று முடித்தீர்களே; மிச்சம் தொள்ளாயிரத்தித் தொண்ணூறு பாசுரங்களும் உங்களுக்குத் தெரியுமா?'
'இது நம்மாழ்வாரின் திருவாய் மொழி. மொத்தம் ஆயிரத்துக்கும் சற்று மேலே என்கிறார்கள். எங்களுக்கு இந்தப் பத்துதான் தெரியும்.'

'என்றால், அனைத்தும் யாருக்குத் தெரியும்?'

'தெரியவில்லை ஐயா!'அவர் கண்களிலிருந்து கரகரவென நீர் வழிந்தது. அர்த்த ரூபமான ஆயிரம் பாடல்களில் வெறும் பத்து! அதுகூடத் தனக்கு இத்தனைக் காலம் தெரிந்திருக்கவில்லை. என்ன பிறப்பு இது!

அவர்களுக்கு, அந்த யோகியின் மனம் புரிந்து போனது. பக்தியின் மிகக் கனிந்த பேரானந்த நிலையில் இருப்பவர். பாசுரத்தின் அழகில் எப்படித் தன்னைக் கரைத்துக் கொண்டு விட்டார்!

'ஐயா, கவலைப்படாதீர்கள். நாதமுனி என்றொரு மகான் இந்த மண்ணில் பிறப்பார் என்றும், அவர் மூலம் ஆழ்வார்களின் அத்தனை பாசுரப் பாற்கடல்களும் இப்பூவுலகில் மீண்டும் பாயும் என்றும் எங்கள் முன்னோர்கள் எங்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள். அக்காலம் வரும்வரை நாம் பொறுத்து இருப்போம்! அது கிடைக்கும் போது அள்ளிப் பருகுவோம்' அவர் திகைத்து விட்டார்.

நாதமுனி! நானா.... நானே தானா?! என்னைத்தான் சொல்கிறார்களா! எனக்கா அந்தக் கொடுப்பினை! இவர்கள் சொல்வது நிஜமா?

அவரால் நம்ப முடியவில்லை. அடுத்தக் கணம், அவர் காவிரிக் கரையை விடுத்து, தாமிரவருணி பாயும் கரையை நோக்கிப் பாய்ந்து விட்டார். நம்மாழ்வார் அவதரித்த குருகூர்.

'ஐயனே, ஒரு பாசுரம் என்னை இங்கு இழுத்து வந்தது. காலத்தின் காற்றுப் பைகளில் பொதிந்திருக்கும் உமது பாசுரங்கள் முழுவதையும் புகட்டி அருள மாட்டீரா?' நம்மாழ்வார், பிறந்தது முதலே பேசாத ஞானி. பிற்பாடு அவரைத் தேடி மதுரகவி ஆழ்வார் குருகூருக்கு வந்தபோது, எண்ணி நாலு வார்த்தை பேசியவர். ஆனால், நான்கு வேதங்களின் பொருளையும், தமது நான்கு நூல்களின் சாரமாக்கித் தந்தவர்.
ஆண்டாண்டு காலமாக மோனத்தவமிருந்து, ஆனிப் பொன்னே போல் வந்து நின்ற நாதமுனியிடம், மானசீகத்தில் அவர் திருவாய் மலர்ந்தார்.

'எழுதிக்கொள் நாதமுனி! நான் புனைந்தவை மட்டுமல்லாது, பன்னிரு ஆழ்வார்களின் அத்தனைப் பாசுரங்களும் உன் மூலம் உலகை அடைய வேண்டும் என்பதே உன் பிறப்பின் சாரம்.' நெக்குருகிப் போன நாதமுனி, பரபரவென அவர் சொல்லச் சொல்ல எழுதத் தொடங்கினார். திருவாய் மொழியில் தொடங்கியது அது.

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த
நமனுக்கிங் கியாதொன்று மில்லை
கலியும் கெடும்கண்டு கொள்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்திசை பாடி யாடி யுழிதரக் கண்டோம்.

சொல்லிக்கொண்டே வந்தபோது, நாதமுனியின் கையில் ஒரு சிலை வந்து அமர்ந்தது!
'என்ன பார்க்கிறாய்? இது உன் காலத்துக்கு முன் பிறந்த ஒருவரின் சிலையல்ல; உன் காலத்தைச் சேர்ந்தவரின் சிலையுமல்ல; உனக்கு இரு நூற்றாண்டுகளுக்குப் பிறகு வரவிருக்கிற ஒருவரின் சிலை. உன்மூலம் உயிர் பெறவிருக்கும் இப்பாசுரங்களை, உலகெல்லாம் ஒலிக்கச் செய்யப் போகிறவரின் சிலை.'

ராமானுஜரின் பெயர் அங்கு பேசப்படவில்லை. ஆனால், கலியின் வலிவைத் தகர்க்கப் போகிற பெரும் சக்தியாக பின்னாளில் அவர் உதிக்கவிருப்பதற்குக் கட்டியம் கூறிய சம்பவம் அது!

(தொடரும்...)



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 14, 2017 2:01 am

துறக்கப் பிறந்தேன்! ( 2 )

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! VnPRehzRJeVOveJALK3f+ramanujar


'சரி, துறந்து விடலாம்' என்று ராமானுஜர் முடிவு செய்தார். ஊரே அதிர்ந்து நிற்கப் போகிறது. உறவு ஜனம் மொத்தமும் பழிக்கப் போகிறது. தஞ்சம்மா பிழிந்து பிழிந்து அழுவாள். அவளது பெற்றோர் வாய்விட்டுக் கதறுவார்கள். வயிறெரிந்து சபிப்பார்கள். அக்னி சாட்சியாக மணந்த ஒரு பெண்ணை, மனப்பூர்வமாக விட்டு விலகிச் செல்வது எப்பேர்ப்பட்ட பாவம் என்று சாஸ்திர உதாரணங்களுடன் கூடிக் கூடிப் பேசிக்கொள்வார்கள். எல்லாம் நடக்கும். எதையும் தவிர்க்க முடியாது.

'ஆனால் நான் இதனைச் செய்தே தீர வேண்டும் தாசரதி! இது, நான் எனக்கே இட்டுக் கொண்டிருக்கும் கட்டளை. அர்த்தமற்ற இல்லற வாழ்வில், எனது தினங்களை வீணடித்துக் கொண்டிருப்பது பெரும் பிழை. தஞ்சம்மாவுக்கு வாழ்க்கை புரியவில்லை.

மனிதர்களைப் புரியவில்லை. மனிதர் வாழ்வை மலரச் செய்வதற்காகவே பிறந்திருக்கும் மகான்களை, இனம் காணத் தெரியவில்லை. அவள் ஜாதி பார்க்கிறாள். 'குலத்தில் உயர்ந்தவனா; குடியில் உயர்ந்தவனா' என்று யோசிக்கிறாள். என்னால் தாங்க முடியவில்லை.'அவர் குமுறிக் கொண்டிருந்தார். தாசரதிக்குப் புரிந்தது. கூரத்தாழ்வானுக்குப் புரிந்தது. ஏனெனில், அவர்கள் வைணவம் புரிந்தவர்கள்.

ராமானுஜரின் நிழலைப் போல் உடன் செல்பவர்கள். வருணங்களை அவர் பொருட்படுத்துவதில்லை. வாழ்க்கைத் தரம் பார்ப்பதில்லை. 'நீ ஒரு பாகவதனா? உன்னைச் சேவித்து, உனக்குத் தொண்டாற்றுவதே என் முதற்பணி' என்று முடிவு செய்து வாழ்ந்து கொண்டிருப்பவர்!தஞ்சம்மாவின் பிரச்னை வேறு. பக்தராக இருந்தாலும், அவர் பிராமணரா என்று பார்க்கிறவள் அவள். பிழை அவள் மீதல்ல; வளர்ப்பு அப்படி; சூழல் அப்படி; காலம் அப்படி; குல வழக்கம் அப்படி!

அன்றைக்கு அது நடந்தது.'ஐயா, இன்று என் வீட்டுக்கு நீங்கள் சாப்பிட வர வேண்டும்.'காஞ்சிப் பேரருளாளப் பெருமாள் சன்னிதியில், விசிறி வீசும் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த திருக்கச்சி நம்பியிடம் ராமானுஜர் கேட்டார். அவர் மனதில், சில திட்டங்கள் இருந்தன. பிறப்பால் வைசியரான திருக்கச்சி நம்பி, தமது பக்தியால், பரமனுக்கு மிக நெருக்கத்தில் இருந்தவர். காஞ்சி அருளாளனுடன், தனியே மானசீகத்தில் உரையாடக் கூடியவர்.

அவர் பேசுவது பெரிதல்ல; அவன் பதில் சொல்லுவான்; அதுதான் பெரிது! இது ஊருக்கே தெரிந்த விஷயம். எத்தனையோ பேர் அவரிடம் வந்து, 'பெருமாளிடம் கேட்டுச் சொல்லுங்கள்' என்று தமது சொந்தப் பிரச்னைகளை சொல்லி, தீர்வு கேட்டுப் போவார்கள். திருக்கச்சி நம்பியை குருவாகப் பெற்று, அவரிடம், 'பஞ்ச சம்ஸ்காரம்' செய்து கொள்ள வேண்டும் என்று ராமானுஜர் விரும்பினார். 'பஞ்ச சம்ஸ்காரம்' என்றால், ஐந்து அங்கங்கள் கொண்ட ஒரு சடங்கு.

அதனைச் செய்து கொண்டால்தான் வைணவ நெறிக்கு உட்பட்டு வாழத் தொடங்குவதாக அர்த்தம்.வலது தோளில் சக்கரமும், இடது தோளில் சங்கும் தரிப்பது முதலாவது. நெற்றி, வயிறு, மார்பு, கழுத்து, இரு தோள்கள், பின் கழுத்து, பின் இடுப்புப் பகுதிகளில், பெருமாளின் திருநாமங்களைச் சொல்லி, திருமண் தரிப்பது அடுத்தது. மூன்றாவது, பிறந்தபோது வைத்த பெயரை விடுத்து, தாஸ்ய நாமம் பெறுவது.

அடுத்தது மந்திரோபதேசம். இறுதியாக, திரு ஆராதனம் என்று சொல்லப்படுகிற யாக சம்ஸ்காரம்.எளிய சடங்குகள்தாம். ஆனால், குருமுகமாக இவற்றை ஏற்றுக் கடைபிடிப்பதே மரபு.'என்னை ஆட்கொள்வீர்களா? எனக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைப்பீர்களா?' என்று அவரிடம் கேட்க வேண்டும். அதற்காகத்தான் ராமானுஜர் திருக்கச்சி நம்பியை வீட்டுக்கு அழைத்தார்.

'அதற்கென்ன, வருகிறேன்' என்றார் திருக்கச்சி நம்பி.ராமானுஜர் பரபரப்பானார். 'ஆசார்யர் வருகிறார். அமுது தயாராகட்டும்' என்று மனைவியிடம் சொல்லிவிட்டு, இலை பறித்து வர தோட்டத்துக்குப் போனார். அவர் போய்த் திரும்பும் நேரத்துக்குள், நம்பி அவரது வீட்டுக்கு வந்துவிட்டது தான் விதி!

'வாருங்கள்' என்றாள் தஞ்சம்மா.'ராமானுஜன் என்னை அழைத்திருந்தார்.''தெரியும், உட்காருங்கள்.''அவர் வீட்டில் இல்லையா?''இப்போது வந்துவிடுவார். காத்திருக்கலாமா அல்லது...''எனக்குக் கோயிலில் வேலை இருக்கிறது. அதிகம் தாமதிக்க முடியாது.'எனவே அவர் சாப்பிட அமர்ந்தார். எனவே தஞ்சம்மா பரிமாறினாள். சில நிமிடங்களில், உண்டு முடித்துவிட்டு அவர் கிளம்பி விட்டார்.'நல்லது. அவர் வந்தால் சொல்லி விடுங்கள்.' - போய் விட்டார்.தஞ்சம்மா,

அவர் அமர்ந்து உண்ட இடத்தில் சாணமிட்டு எச்சில் பிரட்டினாள். அவருக்காகச் சமைத்த பாத்திரங்களை கிணற்றடிக்கு எடுத்துச் சென்று, கழுவிக் கவிழ்த்து வைத்தாள். தலைக்குக் குளித்து வீட்டுக்குள் வந்து மீண்டும் தமக்காக சமைக்கத் தொடங்கினாள்.அதிர்ந்து போனார் ராமானுஜர். எப்பேர்ப்பட்ட பாவம் இது!

அவர் மகானல்லவா! குருவல்லவா! அவர் அமர்ந்த இடத்தைத் துடைத்து, அவருக்காகச் சமைத்ததில் மீதம் வைக்காமல் கழுவிக் கவிழ்த்து, தலைக்குக் குளித்து...'வேறென்ன செய்வார்கள்? அவர் வைசியரல்லவா?' என்றாள் தஞ்சம்மா.நொறுங்கிப் போனார்.'தவறு தஞ்சம்மா! குலத்தில் என்ன இருக்கிறது? பிறப்பால் ஒருவருக்கு எந்த ஏற்றமும் கிடையாது. எப்படி வாழ்கிறார்கள் என்று பார்.

வாழ்க்கையை எத்தனை அர்த்தமுள்ளதாக்குகிறார்கள் என்று பார். அவர் பேரருளாளனுக்கு நெருங்கியவர். நாம் அவருக்கு நெருக்கமாகவாவது இருக்க வேண்டாமா?'அவள் மரபுக்கு நெருக்கமாக இருக்க மட்டுமே விரும்பினாள். சொல்லிக் கொடுத்த ஆசார ஒழுக்கங்களுக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க எண்ணினாள்.

மீண்டும் ஒரு சம்பவம். இம்முறை, ஓர் ஏழைத் தொழிலாளி.'பசிக்கிறது என்கிறான். வீட்டில் என்ன இருக்கிறது?' என்று உள்ளே வந்து கேட்டார் ராமானுஜர்.'உங்களுக்கு இதே வேலையாகப் போய்விட்டது. இங்கே கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை. இனி சமைத்தால்தான் உண்டு.''பழைய சாதம் இருக்கிறதா பார்.

அதுகூடப் போதும். பாவம், பசியில் கண்ணடைத்து நிற்கிறான்.''பழைய சாதமா? அதுவும் இல்லை' என்று சொல்லிவிட்டு தஞ்சம்மா போய்விட்டாள்.ராமானுஜருக்கு சந்தேகம். எதற்கும் தேடிப் பார்ப்போம் என்று சமையல் கட்டுக்குச் சென்று இருந்தவற்றைத் திறந்து பார்த்தார்.

நிறையவே இருந்தது.ஆக, பொய் சொல்லி இருக்கிறாள்! கடவுளே, பசிக்கு மருந்திடுவது அனைத்திலும் உயர்ந்த தருமம் அல்லவா! இதைக்கூடவா இவள் செய்ய மாட்டாள்?அப்போதே அவர் மனம் வெறுத்துப் போனார். உச்சமாக இன்னொரு சம்பவம் அடுத்தபடி நடந்தேறியது. அன்று முடிவு செய்ததுதான்.சரி, துறந்து விடலாம்.

பா. ராகவன்

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 15, 2017 11:25 am

பின்னூட்டம் எழுதுங்க ............ பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! 1571444738



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 15, 2017 11:29 am

நீரால் ஆனது!-3

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! ZaQpJeuSkuTbRGjvYbWg+wall5

ராமானுஜருக்கு, திருக்கச்சி நம்பியிடம் சீடனாகச் சேர வேண்டும் என்பது விருப்பம். கடவுளோடு பேசுகிற நம்பி, கைங்கர்யமே வாழ்க்கையாக இருக்கிற நம்பி, அவர் சாப்பிட வந்த போது தான், தஞ்சம்மா அபசாரம் செய்து விட்டாள்.

ஆனாலும், அவர் பெரியவர். சிறுமைகளால் சலனப்படுகிற மனிதரல்லர். தவிரவும், அவருக்கு ராமானுஜரைப் பற்றித் தெரியும். அவரது பண்பு தெரியும். பக்தி தெரியும். பணிவு தெரியும். தவறாக எடுக்க மாட்டார்.

ராமானுஜர், அவர் தாள்பணிந்து விருப்பத்தை சொன்னார். 'சுவாமி, என்னை தாங்கள் சீடனாக ஏற்க வேண்டும். எனக்கு, ‛பஞ்ச சமஸ்காரம்' செய்து வைக்க வேண்டும்.'

அவர் யோசித்தார். ‛நாளை வாருங்கள். பேரருளாளனிடம் கேட்டுச் சொல்கிறேன்.'

ஆனால், கடவுள் சித்தம் வேறாக இருந்தது. ‛ உம்மை திருவரங்கம் பெரிய நம்பியிடம் போகச் சொல்லி அருளாளன் உத்தரவு கொடுத்திருக்கறான்' என்றார் திருக்கச்சி நம்பி.

‛பெரிய நம்பியா! வைணவ குலத்தின் ஒப்பற்ற பெருந்தலைவரான ஆளவந்தாரின் சீடரா?'
‛ ஆம். அவரேதான்.'

மறுவினாடியே புறப்பட்டு விட்டார் ராமானுஜர். வீட்டுக்கு போகவில்லை. மனைவியிடம் சொல்லவில்லை. மாற்றுத் துணிகூட எடுத்துக் கொள்ளவில்லை. தனது குரு யாரென்று தெரிந்துவிட்டபிறகு, மற்ற அனைத்தும் அர்த்தமற்றதாகி விட்டது!

காஞ்சியில் கிளம்பி, அன்று மாலைக்குள் அவர் மதுராந்தகம் வரைநடந்து விட்டார்.
அது, தேடிப் போன தெய்வம் குறுக்கே வந்த தருணம். எதிரே வருவது யார்? பெரிய நம்பியா? அவரேதானா? கடவுளே!

‛இதை என்னால் நம்ப முடியவில்லை சுவாமி. என்னைத் தேடியா நீங்கள் இங்கு வந்து கொண்டிருக்கிறீர்கள்?'

‛ஆம். எதையும் நாம் தீர்மானிப்பதில்லை. அரங்கன் சித்தம். ஆசார்ய சித்தம்.'

ராமானுஜர் ஒரு கணம் கண்மூடி நின்றார். அவருக்கு அனைத்தும் புரிந்தது. வைணவ உலகின் நிகரற்ற பெரும் ஆசார்யராக விளங்கிய ஆளவந்தார் காலமாகி விட்டார். ‛அடுத்து ஆள வருவார் யார்?' என, வைணவ உலகமே எதிர்பார்த்து நின்ற வேளை. இதோ,‛அரங்க நகருக்கு வா' என்று பெரிய நம்பி வந்துநிற்கிறார்.

‛என்னை உங்கள் சீடனாக ஏற்றுக்கொண்டு, எனக்கு நீங்கள் பஞ்ச சமஸ்கரங்களைச் செய்து வைக்க வேண்டும். இது, பேரருளாளன் சித்தம் என்று திருக்கச்சி நம்பி சொன்னார்.'

‛அதற்கென்னா? இப்போதே காஞ்சிக்குப் போவோம். அருளாளன் சன்னதியில் நடக்கட்டும்.'
‛இல்லை சுவாமி. அந்த தாமதத்தைக் கூட என்னால் பொறுக்க இயலாது. இன்றே, இங்கே, இப்போதே.'
பெரிய நம்பி புன்னகை செய்தார். மதுராந்தகம், ஏரி காத்த ராமர் சன்னதியில் அது நடந்தது.
ராமானுஜரின் மனம், பக்திப் பரவசத்தில் விம்மிக் கொண்டிருந்தது. இந்த தருணத்துக்காக எத்தனை காலம் ஏங்கிக் கொண்டிருந்தேன்! எத்தனைப் பாடுகள்; எவ்வளவு இடர்கள்; எண்ணிப் பார்த்தாலே, கண்கள் நிறைந்து விடும்.

‛சுவாமி, என் இல்லத்தில் தங்கி, நீங்கள் எனக்கு சில காலம் பாடம் சொல்லித்தர வேண்டும்.'
‛அதற்கென்னா? செய்து விடலாமே?' என்றார். ஆசார்யர். தமது பத்தினியுடன் ராமானுஜரின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

வீட்டில் திருவாய் மொழிப் பாடம் ஆரம்பானது. வரி வரியாகச் சொல்லி, பொருள் விளக்கி ஆசார்யர்போதித்து கொண்டிருந்த நாட்கள். இனிதாகவே இறுதிவரை சென்றிருக்க வேண்டும். விதி யாரை விட்டது?

அன்றைக்கு, நஞ்சம்மாவும், குரு பத்தினி விஜயாவும் ஒன்றாக கிணற்றில் நீர் எடுத்து கொண்டிருந்தார்கள். குரு பத்தினியின் குடத்தில் இருந்து, சில சொட்டுநீர்த் துளிகள் நஞ்சம்மாவின் குடத்துக்குள் விழுந்து வைத்ததில் ஆரம்பித்தது பிரச்னை.

‛என்ன! நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்? ஆசாரம் தெரியாதா உங்களுக்கு? என் குடத்தில் உங்கள் குடத்து நீர்த்துளிகள் விழுந்துவிட்டன பாருங்கள்! ஜாதி வித்தியாசம் பாராமல்,யார் யாரையோ வீட்டுக்கு அழைத்து வந்து உட்கார வைத்தால் இப்படித் தான் அபத்தமாகும்'வெடித்துக் குமறி விட்டாள் நஞ்சம்மா.
அழுக்கு முதல் பாவம் வரை, அனைத்தையும் கரைக்கிற நீர்; அது நிறமற்றது; மணமற்றது; அனாதியானது; அள்ளி எடுக்கும் போது மட்டும் எனது, உனது! என்ன விசித்திரம்!

‛ நாம் இதற்கு மேலும் இங்கே இருக்கத் தான் வேண்டுமா?' விஜயா தனது கணவரிடம் கேட்ட போது, பெரிய நம்பி யோசித்தார். சம்பவம் நடந்த போது ராமானுஜர் வீட்டில் இல்லை. நடந்திருப்பது குரு அபசாரம். சர்வ நிச்சயமாக ராமானுஜரால் இதனைத் தாங்கிக் கொள்ள முடியாது.

‛நாம் கிளம்பி சென்றுவிட்டால், நஞ்சம்மா இந்த சம்பவத்தை அவரிடம் சொல்லாமலே இருந்து விடுவாள். அவர்களுக்குள் பிரச்னை வராது' என்றார். அவரது மனைவி.
‛ஆம் , நீ சொல்வது சரி.' கிளம்பிவிட்டார்கள்.

வீட்டுக்கு ராமானுஜர் வந்த போது, குருவும் இல்லை; குரு பத்தினியும் இல்லை.
‛நஞ்சம்மா... நம்பிகள் எங்கே சென்று விட்டார்?'
அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

சொற்கள் கைவிட்ட தருணம். ஒருமாதிரி தன்னை திடப்படுத்திக் கொண்டு, ‛நாம் என்ன ஜாதி; அவர்கள் என்ன ஜாதி? கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாமா? கிணற்றிலிருந்து நீர் இறைக்கக்கூடத் தெரியவில்லை உங்கள் குரு பத்தினிக்கு.‛ நடந்த சம்பவம், அவளது விவரிப்பில் மீண்டும் நிகழ்ந்தது. நொறுங்கிப் போனார் ராமானுஜர்.

‛உன்னைத் திருத்திவிட முடியும் என்று நினைத்தேன். ஆனால், தேடிவந்த ஞானக்கடலைத் திருப்பி அனுப்பி இருக்கிறாய். இந்த பாவத்தில் என் பங்கைக் களைய, நான் எத்தனை பிறப்பு எடுத்துப் பிராயச் சித்தம் செய்தாலும் போதாது.'

அந்த விரக்தி தான் அவரைத் துறவு நோக்கித் திருப்பியது. அந்தக் கோபம் தான் அவரை வீட்டை விட்டு வெளியே போக வைத்தது. இந்த இயலாமை தந்த அவமான உணர்வுதான், அவரை வீறுகொண்ட இரும்பு மனிதராக்கியது.

விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தார். பேரருளாளப் பெருமாள் சன்னதியில், திருக்கச்சி நம்பி கைங்கர்யத்தில் இருந்தார். இழுத்து நிறுத்தி, தடாலென்று காலில் விழுந்தார்.
‛சுவாமி, எனக்கு சன்னியாச ஆசிரமத்தை வழங்கி அருளுங்கள். ‛அது நடந்தேறி விட்டது.

அத்தி வரதர் உறங்கும் அனந்த புஷ்கரணியில் அவர் குளித்தெழுந்தார். தூய காவியுடை தரித்து முக்கோல் பிடித்தார். ‛ துறந்தேன், துறந்தேன், துறந்தேன்' என்று மூன்று முறை சொல்லி முற்றிலும் வேறொருவராக மாறிப்போனார்.

தொடரும்.............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 17, 2017 10:13 am

நெஞ்சில் நிறைந்தவன்! - 4

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! OBEoqPESPSLZDNgwUQRF+CdvNe4gUEAAtOGy

நான் உங்களை இனி மாமா என்று அழைக்க முடியாதல்லவா? பேரருளாளனே உங்களை யதிராஜன் (துறவிகளின் அரசன்) என்று சொல்லி விட்டான்!'

தாசரதி தயங்கி தயங்கித்தான் பேசினான். ராமானுஜர் புன்னகை செய்தார். வாய் திறந்து அவர் சொல்லவில்லை. 'துறந்தேன், துறந்தேன், துறந்தேன்' என்று மும்முறை சொல்லி மூழ்கி எழுந்த போது 'முதலியாண்டானைத் தவிர' என்று அவர்தம் மனதிற்குள் சொல்லிக் கொண்டதை நினைத்துப் பார்த்தார்.

வைணவத்தை வாழ்க்கையாக ஏற்றதில் தாசரதி ராமானுஜருக்கு முன்னோடி, தமக்கையின் மகன். சிறுவயதில் இருந்தே ராமானுஜரின் நிழலாகத் தொடர்ந்து வருகிறவன். அவரது ஞானத்தின் ஜீவப் பிரவாகம் பெருக்கெடுக்கும் போதெல்லாம் முந்தி வந்து முக்குளித்தவன்.

'முதலியாண்டான்! உறவென்பது நமக்கு இனி அவன் ஒருவனோடு மட்டுமே. ஆனால், அவன் உலகம் உண்ட பெருவாயனாக இருக்கும்போது உறவில்லை என்று யாரைச் சொல்ல முடியும்?'

தாசரதியிடம் மேலும் சில் வினாக்கள் இருந்தன. அவற்றுள் முதன்மையானது, துறவு ஏற்ற மறுகணம் ராமானுஜர் யாரை நினைத்தார் என்பது தன்னையா? தன்னைக் காட்டிலும் உயர்ந்த பாகவதோத்தமரான கூரத்தாழ்வானையா? அல்லது இன்னொரு தமக்கையின் மகனான வரத தேசிகனையா?

மூவருமே ராமானுஜர் துறவு கொண்டதும் முதன்முதலில் வந்து சீடர்களானவர்கள். அவரது உயிர்மூச்சு போல் உடனிருப்பவர்கள். இரவும் பகலும் அவர்களுக்கு யதிராஜரைத் தவிர வேறு நினைவே கிடையாது. அவருக்குச் சேவை செய்வதைக் காட்டிலும் வேறு திருப்பணி கிடையாது. ராமானுஜர் துறவுக் கோலம் கொள்வதற்கு முன்பிருந்தே அப்படித்தான்! அது ஞானத்தின் காந்த வடிவம். ஈர்க்கும் வல்லமை இயல்பிலேயே உண்டு.

'தயவு செய்து சொல்லுஙண்கள். ஒருவேளை வேறு யாரையாவது நினைத்தீர்களோ?'
தனது மானசீகத்தில் என்றோ குருவாக வரித்துவிட்ட ஆளவந்தாரையே கூட ராமானுஜர் எண்ணியிருக்கலாம். எப்பேர்ப்பட்ட தருணம்! எத்தனை பேருக்கு இதெல்லாம் வாய்க்கும்!
'சொல்லி விடுங்கள். நீங்கள் யாரை நினைத்தீர்கள்?'

மீண்டும் புன்னகை. அர்த்தம் பொதிந்த பேரமைதி. சொல்லலாமா? முதலியாண்டான் கேட்கிறான். என்னிடம் இருக்கிற பதில் அவனை எவ்விதமாக பாதிக்கும்? அவர் கண்மூடி, தன் நினைவில் மூழ்கத் தொடங்கினார்.

கண்ணுக்குள் மிதந்து வந்தது கோவிந்தனின் உருவம். கோவிந்த பட்டராகக் காளஹஸ்தியில் சிவஸ்மரணையில் கிடக்கிற பூர்வாசிரமத்துத் தம்பி. சித்தி மகன். ஒரு கணம் ராமானுஜருக்கு சிலிர்த்து விட்டது. கோவிந்தன் இல்லாவிட்டால் அவர் கிடையாது. பதினெட்டு வயதிலேயே கங்கையில் போயிருக்கக்கூடும்.

'ராமானுஜா, எழுந்திரு. உடனே என்னோடு வா. இவர்கள் உன்னை கொல்லத் திட்டம் தீட்டி இருக்கிறார்கள்.'
அசரீரி போல் உட்செவியில் மீண்டும் ஒலிக்கிற அதே குரல்.

கோவிந்தனைக் கடைசியாகப் பார்த்தது அன்றைக்குத்தான். குருவும் சீடர்களுமாகப் புனித யாத்திரை போய்க் கொண்டிருந்த தினங்களில் ஒரு நள்ளிரவுப் பொழுது. தன்னை எழுப்பி, தப்பிக்க வைத்து திரும்பிச் சென்ற கோவிந்தன், அதன்பிறகு திரும்பவேயில்லை. ஒரு செய்தி மட்டும் வந்தது.

'ராமானுஜா! உன் சித்தி மகன் கங்கையில் குளிக்கிறபோது அவனுக்கு ஒரு சிவலிங்கம் கிடைத்ததாம். திரும்பி வருகிற வழியில் காளஹஸ்தியில் பெருமானைச் சேவித்து, அங்கேயே கைங்கர்யம் செய்யத் தீர்மானித்து இருந்து விட்டான்!'

இது எப்படி, எப்படி எனறு ராமானுஜருக்கு ஆறவேயில்லை. தன்னினும் உயர்ந்த வைணவசீலராக கோவிந்தன் வரக்கூடுமென்று அவர் நினைத்திருந்தார். சட்டென்று எங்கோ தடம் மாறிவிட்டது.
எத்தனை முறை பேசியிருப்பேன்; எத்தனை விவாதித்திருப்போம். அத்வைதமும் அதன் ஏற்கவியலாத எல்லைப்பாடுகளும்.

யாதவப் பிரகாசரிடம் ராமானுஜர் பாடம் படிக்கச் சென்றபோது கோவிந்தனும் அதே பள்ளியில் வந்து சேர்ந்தவன்தான். காஞ்சியில் யாதவரைக் காட்டிலும் சித்தாந்தங்களில் கரை கண்டவர் யாருமில்லை என்று ஊரே சொல்லிக் கொண்டிருந்தது.

என்னவோ, ராமானுஜருக்கு மட்டும் ஆசாரியருடன் ஆரம்பத்தில் இருந்தே ஒத்துப் போகவில்லை. கோவிந்தனுக்கு அது தெளிவாகப் புரிந்தது. இவன் வேறு. இவன் சிந்தனை வேறு. இவனது வார்ப்பு வேறு. ஒரு சுயம்புவை ஆராய்ந்து அறிவது கடினம்!

அன்றைக்கு சாந்தோக்ய உபநிடதப் படம் நடந்து கொண்டிருந்தது. யாதவப் பிரகாசர் வரி வரியாக சொல்லி பொருள் விளக்கிக் கொண்டிருந்தார். கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ராமானுஜருக்கு, சட்டென்று ஓரிடத்தல் ஆசிரியர் விளக்கிய பொருள் திடுக்கிட வைத்தது.
கப்யாஸம் புண்டரீகம் ஏவ மக்ஷிணி.

'கப்யாஸம் என்றால் குரங்கின் பின்புறம்' என்றார் யாதவப் பிரகாசர். அவர் படித்தது அதுதான். பிழை அவர் மீதல்ல. வழி வழியாகச் சொல்லித் தரப்பட்ட அர்த்தம். 'ஆனால் குருவே, இது அனர்த்தமாக அல்லாவா உள்ளது' 'கப்யாஸம் என்பதை கபி ஆஸம் என்று ஏன் பிரிக்கிறீர்கள்? அதை கம் - பிப்தி - இதி - ஆஸ:' என்று பிரித்துப் பாருங்கள். சுடர்மிகு சூரிய மண்டலத்தில் உறையும் பரம்பொருளின் நயனங்களுக்கு உவமை சொல்லும் விதமாக இது புதுப்பிறப்பு எடுக்கும்! கதிரவனைக் கண்டு தாமரை மலர்வது போல விரிந்தவை பரமனின் கண்கள் என்கிறது இந்தப் பதம்.
யாதவர் திடுக்கிட்டுப் போனார். 'இங்கே நான் குருவா; நீ குருவா?' என்று கேட்டார்.

மீண்டும் வேறொரு நாள், இப்போது தைத்திரிய உபநிடதம்.
'சத்யம் ஞானம் அனந்தம் பிரம்ம' என்றார் யதவர். சத்தியம், ஞானம் உளளிட்ட அனைத்தும் பிரம்மத்தை மட்டுமே பொருளாகக் கொண்டவை என்பது அவரது விளக்கம்.

'இல்லை ஐயா. அவை பிரம்மத்தின் பொருளாக இருக்க இயலாது. அவை பிரம்மத்தின் பல்வேறு குணங்கள்'
'எப்படிச் சொல்கிறாய்?'

'ஒரு பூ வௌ்ளை வெளேரென்று இருக்கலாம். கமகமவென்று மணப்பதாக இருக்கலாம்.பார்த்தாலே பரவசமூட்டும் பேரழகு உடையதாக இரு்கலாம். ஆனால் மணம் மட்டும் பூவல்ல. நிறம் மட்டும் பூவல்ல. அழகு மட்டும் பூவல்ல. பன்மைத் தன்மை பூவின் இயல்பு. ஆனால், பூ ஒன்றுதான். அதே மாதிரிதான் இதுவும். சத்யம், ஞானம் எல்லாம் பிரம்மத்தின் பண்புகள். ஆனால், பிரம்மம் ஒன்றுதான். அதுதான் மூலம். அதுதான் எல்லாம்'

அன்றைக்கே யாதவப் பிரகாசருக்கு ராமானுஜரைப் பிடிக்கமல் போய் விட்டது. ஒன்று இவன் இருக்க வேண்டும்.அல்லது நான் இருக்க வேண்டும்.

'ஐயோ... எங்களுக்கு நீங்கள் வேண்டும் குருவே, நாம் அவனைக் களைந்து விடலாம்' என்றார்கள் மாணவர்கள்.

'அதுதான் சரி' என்று யாதவர் முடிவெடுத்த சமயத்தில் ராமானுஜரின் தந்தை இறந்து போனார்.

தொடரும்.....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 17, 2017 10:16 am

கரையாத பாவம் - 5

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! OVHFtiIwSEaD20UTtnxB+Ramanuja_embracing_Lord_Varadaraj

ஜடாயுவுக்கு ராமர் இறுதிச்சடங்கு செய்து மோட்சம் கொடுத்த தலம் அது. திருப்புட்குழி என்று பேர். அங்கு அருளும் விஜயராகவப் பெருமாளின் பேரழகைச் சொல்லி முடியாது. வலது தொடையில் ஜடாயுவையும், இடது தொடையில் மரகதவல்லித் தாயாரையும் ஏந்தியிருக்கும் எம்பெருமான் அவர்! பாடசாலை முடிந்த பிறகு தினமும் கோயிலுக்குப் போய் சேவித்துவிட்டு வரலாம் என்கிற எண்ணமே, ராமானுஜருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது.

ஆனால், திருப்புட்குழி யாதவப் பிரகாசர் விஜயராகவப் பெருமாளை சேவிக்கிற வழக்கம் கொண்டவரல்லர். அவர் அத்வைதி. சிவனை தவிர அவருக்கு வேறு தெய்வமில்லை.ஊர்க்காரர்களுக்கு அவரைத் தெரியும். பெரிய ஞானஸ்தன். வேதம் படித்த விற்பன்னர். பிராந்தியத்தில், அவரளவு வேதத்தில் கரை கண்டவர்கள் யாரும் கிடையாது. பயம் அளிக்கிற மரியாதை என்பது, ஒரு விலகல் தன்மையை உடன் அழைத்து வரும். யாதவர் விலகி இருந்தார். கனிவில் இருந்து. சிநேகங்களில் இருந்து. சக மனித உறவுகளில் இருந்து.நினைவு தெரிந்த தினம் முதல் தனது தந்தை கேசவ சோமயாஜியிடமே பாடம் படித்து வந்தவர் ராமானுஜர்.

அவரை, யாதவப் பிரகாசரிடம் அழைத்துக் கொண்டு போனார் சோமயாஜி.'சுவாமி, வேதங்களில் நான் கற்ற மிகச்சொற்பப் பாடங்களை இவனுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். ஆனால் அகக்கண் திறந்துவிடும் அளவுக்கல்ல. அதை நீங்கள்தான் செய்ய முடியும்.'இளையாழ்வாரை நிமிர்ந்து பார்த்தார் யாதவப் பிரகாசர். தகிக்கும் வெய்யோனின் கன்னத்தில் துளி கிள்ளி எடுத்து வந்து வைத்தாற் போன்ற அவரது கண்களின் சுடர், அவரது வேறெந்த மாணவர்களிட மும் இல்லாதது.

தவிரவும், அந்தச் சுடரின் மீது கவிந்து நின்ற விலை மதிப்பற்ற சாந்தம், ஞானத்தின் பூரணத்தை அடைந்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமான அபூர்வம். இந்தப் பையனுக்கு எப்படி இது? அவருக்குப் புரியவில்லை.உமது மகனுக்கு விவாகம் ஆகிவிட்டதா?''ஆம் சுவாமி. சமீபத்தில்தான்.' 'சொந்த ஊர் காஞ்சிதானா?' 'இல்லை. திருப்பெரும்புதுார். பிள்ளை வரம் கேட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளை வேண்டி, யாகம் செய்து பிறந்தவன் இவன்.

பிறப்பின் பொருள் படிப்பில் அல்லவா உள்ளது? அதனால்தான் தங்களைத் தேடி வந்திருக்கிறேன்.' 'நல்லது. விட்டுச் செல்லுங்கள்.' அது தமிழகத்தில் சோழர்களின் கொடி பறந்து கொண்டிருந்த காலம். மாமன்னன் ராஜேந்திர சோழனும், அவனது மகன் இளவரசர் ராஜாதிராஜ சோழனும் மாநிலத்தின் இண்டு இடுக்கு விடாமல் தமது அதிகாரத்தை நிலைநிறுத்தி ஆட்சி புரிந்து கொண்டிருந்த சமயம். தஞ்சைக்கு அருகே கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரமாக இருந்தது.

வடக்கே ஆந்திரம் வரை நீண்டிருந்தது நாட்டின் எல்லை. மைசூர் முதல் ஈழம் வரை வென்றெடுத்த பிராந்தியங்கள் யாவும் குறுநிலங்களாக அறியப்பட்டன. நிலத்துக்கொரு பிரதிநிதி. நீடித்த நல்லாட்சி. ஆனால், சைவம் தவிர இன்னொரு மதத்துக்குப் பெரிய இடம் கிடையாது. கோயிலற்ற ஊரில்லை, சிவனற்ற கோயிலில்லை.

யாதவப் பிரகாசர் போன்ற மகாபண்டிதர்களுக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருந்தது. அரசு மானியங்கள் இருந்தன. மாலை மரியாதைகள் இருந்தன. வீதியில் தமது சீடர் குழாத்துடன் நடந்து போனால், மக்கள் தாள் பணிந்து ஒதுங்கி நிற்பார்கள். அது கல்விக்கான மரியாதை.

ஞானத்துக்கான மரியாதை.ஆசூரி கேசவ சோமயாஜிக்கு, தனது மகன் ஒரு சரியான குரு குலத்தில் சேர்ந்துவிட்ட திருப்தி. திருமணத்தை முடித்து விட்டார். காலக்கிரமத்தில் வேதப்பாடங்களையும் நல்லபடியாகக் கற்றுத் தேறி விடுவான். இதற்குமேல் என்ன? தள்ளாத உடலத்தைத் தள்ளிக்கொண்டு போக சிரமமாக இருக்கிறது. நான் விடைபெற்றுக் கொள்கிறேன் என்று ஒருநாள் அமரராகிப் போனார். கடைசிவரை அவருக்குத் தெரியாது.

பாடசாலைக்குப் போக ஆரம்பித்த சிறிது காலத்திலேயே, ராமானுஜருக்கும் யாதவருக்கும் முட்டிக்கொண்ட சங்கதி. வியாதியின் படுக்கையில் கிடந்தவர் காதுகளுக்கு ராமானுஜர் இதை எடுத்துச் செல்லவில்லை. மனத்துக்குள் ஓர் இறுக்கம் இருந்தது. குருவுக்கும் தனக்கும் சரிப்பட்டு வராமல் போய்க்கொண்டிருக்கிற வருத்தம். பாடசாலையில் மற்ற மாணவர்கள் அப்படியில்லை.

சொல்லிக்கொடுப்பதை அப்படியே ஏந்திக்கொண்டு விடுகிறவர்களாக இருந்தார்கள். தனக்கு மட்டும் ஏன் வினாக்கள் எழுகின்றன? தனக்கு மட்டும் ஏன் வேறு பொருள் தோன்றுகிறது? மனத்தில் உதிப்பதைச் சொல்லாமலும் இருக்க முடிவதில்லை. ஆசிரியர் போதிக்கிற எதுவும் எளிய விஷயங்களல்ல. வேதத்தின் ஒவ்வொரு பதமும், ஒரு தீக்கங்கைத் தன்னகத்தே ஏந்தியிருப்பது. உரித்தெடுத்து உள்வாங்குவது எளிதல்ல.அது பிரம்மம் உணரச் செய்கிற பாதை. பிழைபடுவது தவறல்லவா?

தந்தையின் மறைவுக்குப் பிறகு, சிறிதுகாலம் ராமானுஜர் பாடசாலைக்குப் போகாமல் இருந்தார். போய் என்ன செய்வது? தினமும் விவாதம், தினமும் தர்க்கம். ஆசிரியரின் மனக்கசப்புக்கு இலக்காவது. ஆனாலும், பிழைபட்ட பொருள்களை அவர் தீவிரம் குறையாமல் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறாரே என்கிற ஏக்கம். 'ஆனால், அவன் வகுப்புக்கு வராததை நாம் நிம்மதி என்று எடுத்துக்கொண்டு விட முடியாது குருவே. பயல் வெளியே போய் அத்வைத துவேஷம் வளர்ப்பான்.

வேதங்களுக்கு நீங்கள் எடுத்துச் சொல்லும் அரும்பொருளையெல்லாம் நிராகரித்து, தன் இஷ்டத்துக்கு வேறு அர்த்தம் சொல்லுவான். அதையும் தலையாட்டி ஏற்க ஒரு கூட்டம் தயாராக இருக்கும்.' - யாதவரின் சீடர்கள் ஓய்வுப் பொழுதில் ஓதி விட்டார்கள். யாதவருக்கே அந்தக் கவலை இருந்தது. தனது கருத்துகளை மறுத்துச் சொல்லும் ராமானுஜருடன் ஒருநாளும் அவரல் எதிர்வாதம் புரிய முடிந்ததில்லை. 'வாயை மூடு' என்று அடக்கிவிடத்தான் முடிந்தது.

இயலாமைக்குப்பிறந்த வெற்றுக் கோபம்.அந்த அடக்குமுறை பிடிக்காத படியால் மாணவன் விலகிப் போயிருக்கிறான். ஆனால், அப்படியே விட்டுவிடவும் முடியவில்லை! அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது.

அவன் சாதாரணமான மாணவன் அல்ல. பிராந்தியத்தில் தனது புகழை அழித்துத் தனியொரு தேஜஸுடன் தனியொரு ஞான சமஸ்தானம் நிறுவும் வல்லமை கொண்டவன்.

அத்வைத சித்தாந்தத்தின் அடிப்படைகளையே அசைத்து ஆட்டம் காணச் செய்துவிடக் கூடியவன். 'அவன் எதற்கு இருக்கவேண்டும்?' என்றார்கள் அவரது அருமைச் சீடர்கள். யாதவப் பிரகாசர் யோசித்தார்; மிகத் தீவிரமாக. 'சரி, அவனை சமாதானப்படுத்தி திரும்ப அழைத்து வாருங்கள். நாம் அவனையும் அழைத்துக்கொண்டு காசிக்கு யாத்திரை செல்வோம்.

' 'ஐயா காசிக்கு எதற்கு இப்போது?' அவர் சில வினாடிகள் கண்மூடி அமைதியாக இருந்தார். கொலைஉள்ளம் என்றாலும் குரு முகம் அல்லவா? எப்படிப் புரிய வைப்பது? மிகக் கவனமாகச் சொற்களைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டார். 'கங்கை பாவங்களைக் கரைக்கவல்லது. மூழ்கி இறந்தோருக்கு மோட்சம் தரவல்லது.'

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 17, 2017 10:24 am

ஒரு அருமையான பின்னூட்டம் தினமலரில் இருந்து :

பஞ்ச சமஸ்காரங்கள் : - 1.தாபம்: செம்பிலான சங்கு சக்கர முத்திரைகளை தீயில் சூடு செய்து தோள்களிலே பதித்துக்கொள்வது.2.. புண்டரம் : துவாதச (12) ஊர்த்வ (மேல்நோக்கிய) புண்டரம் (திருமண) இட்டுக்கொள்வது.3. தாஸ்ய நாமம் : ராமானுஜ தாசன் என்கிற வகையிலே பெயர் வைத்துக்கொள்வது 4. மந்த்ரம் : விசிஷ்டாத்வைத தத்துவமான தத்வத்ரயம் பொருளை ஆசார்யன் மூலம் அறிவது. 5.யாகம்: பகவத் ஆராதனத்தை குரு மூலம் கற்பது. திருக்கச்சி நம்பிகள் தான் வைசியரானபடியால் ராமானுஜர் வேண்டிக்கொண்ட போதும் குருவாக இருக்க சம்மதிக்கவில்லை .ஆகவே நம்பிகளுடைய 'உச்சிஷ்டத்தை' உண்ட எச்சிலை ஆவது சாப்பிட விரும்பினார்.எனவே வீட்டிற்கு சாப்பிட அழைத்தார் . காரனம் காஞ்சி தேவப்பெருமாள் தன்னுடைய அர்ச்சை /சமாதி (சிலை வடிவ ) நிலையை கடந்து நம்பிகளிடம் உரையாடுவாராம் (அவருக்கு விசிறி வீசும் தொண்டு செய்யும்போது ) இது யாருக்கும் கிட்டாதது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 17, 2017 3:33 pm

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! VB2kHHkxRB6L9KJyPJXL+5_2914150f
-
பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! 103459460 பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! 3838410834
--
தொடருங்கள்....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 17, 2017 8:10 pm

ayyasamy ram wrote:பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! VB2kHHkxRB6L9KJyPJXL+5_2914150f
-
பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! 103459460 பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! 3838410834
--
தொடருங்கள்....
மேற்கோள் செய்த பதிவு: 1231629

நன்றி ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக