Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
5 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
First topic message reminder :
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் – பகுதி 1
முகப்புரை
குறள் என்றதும் பலருக்கும் குறளுக்கு முன்னால் திரு என்பது போடாவிட்டாலும் திருக்குறளையும் அதை எழுதிய திருவள்ளுவருமே நினைவுக்கு வரும் .
ஆனாலும் ஔவை பிராட்டி இயற்றிய குறள் மற்றும் விநாயகர் அகவல்,சித்தர் இலக்கியத்தில் மிகத்தொன்மையானவைகளாக மதிக்கப்பட்டு ஞானப் பொக்கிஷம் என ஞானத்தைத் தேடும் சாதகர்களால் போற்றப்பட்டு வருகிறது . ஆனால் போற்றப்படவேண்டிய பல விஷயங்கள் இன்னமும் சற்று மறைவாகவே இருக்கிறது .பொது மக்களிடையே பரவலாக்கப்படவில்லை.
திருவள்ளுவரைப்போலவே ஔவைப் பிராட்டியும் இம்மானிடம் உய்வுபெற அரிய கருத்துக்களை இரு அடிகளில் ,குறள் வெண்பாக்களாக மொத்தம் 310 எண்ணிக்கையில் வீட்டு நெறிப்பால் ,திருவருட்பால் ,தன்பால் என்று மூன்று அதிகாராங்களாகப் பிரித்து இயற்றி இருக்கிறார்.
திருக்குறள் எடுத்தியம்பும் அறம் ,பொருள் ,இன்பம் போன்றே இக்குறள்களும் மானுட தேக அமைப்பு ,அதனுள் துலங்கும் ஆதி அறிவு , வாழ்வியல் குறிக்கோள் இவைகளை தெளிவுற எடுத்தியம்புகிறது.
அத்தனை உலக மதங்களும் வாழ்வின் முடிவில் சொர்க்கம் சென்று சேர்வதையே குறிக்கோளாகக் கொண்டு இயங்குகையில் ,நமது சனாதன நெறிதானே வீடுபேறு அல்லது முக்தி என்பதை வாழ்வின் இறுதிப பயனாகக் கூறுகிறது .
இதனை அடிப்படையாகக் கொண்டே ஔவையின் குறளும் ஒரு உத்தமமான யோகசாஸ்திரத்தின்,அத்துனை பரிமாணங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது .மனதை ஆராய்ந்து அறியும் கருவியாகக் கொண்டு ,மனதைப் பற்றியும் அதன் தன்மைகளைபற்றியும் ,அதன் மேன்மைகளை அறிந்துகொண்டு ,வாழ்வின் குறிக்கோளை அடைவது எப்படி என்பதை இயம்புகிறது .இன்னும் ஜனன மரணம் என்றால் எனன ? பஞ்சபூத சேர்க்கையால் இந்த உடம்பு எவ்வாறு உருவாகி ,செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ?அதன் தலையாய குறிக்கோள் என்னவாக இருக்கவேண்டும் அதை அடையும் வழி முறைகள் எனன ? வாசியோக நிலை , சரவோடுக்கம் இவைகளைப் பற்றியெல்லாம் விளக்குகிறது.
யோகத்தில் திளைத்த பல அனுபவபூதிகள் அருளாளர்கள் காட்டிய மார்கங்களைவிட ,ஔவைக்குறள் மிக இலகுவாக யோகத்தின் தன்மையைப் பற்றி விளக்குகிறது .
சங்கத் தமிழ் பாடல் தொகுப்பில் ஏறத்தாழ 457 புலவர்கள் பாடிய பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது .கி .மூ இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து கி .பி மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை சுமார் நானூறு ஆண்டுகளில் சுமார் ஐநூறு புலவர்கள் பாடிய அருமையான தமிழ் பாடல்கள் தொகுக்கப்பட்டிருப்பதும் ,அத்துணை தகுதி வாய்ந்த புலவர்கள் தொடர்ச்சியாக அந்தக்காலக்கட்டத்தில் வாழ்ந்திருப்பதும் ,தமிழின் சிறப்பினையும் ,அந்த காலகட்டத்தில் இடம்பெற்றிருந்த தமிழர் தம் அறிவின் திறனையும் ,தகுதியையும் எடுத்துக்காட்டுகிறது.
இன்னும் சொல்லப்போனால் அவர்கள் வெறும் தமிழ்படித்த புலவர்கள் மட்டுமல்லர் ,அவர்களில் ,சமுதாயத்தின் எல்லா பிரிவினைச் சேர்ந்த அனைத்து தரப்பினரும் இருந்திருக்கின்றனர் . பாடல்கள் புனைந்திருக்கின்றனர் .அந்தணர் ,வணிகர் ,கணக்கர் ,வேடர் ,குயவர் ,மருத்துவர் எல்லாபிரிவினரும் புலவர்களில் இருந்திருக்கின்றனர் .அத்துனைபேரும் தமிழில் புலமைபெற்று பாடல் புனையும் வல்லமை பெற்றிருக்கின்றனர்.
சங்கப்புலவர்களில் முப்பதுக்கும் மேல்பட்டவர்கள் பெண்கள் .அதாவது ஏறத்தாழ 7 % சதவிகித புலவர்கள் பெண்களாக இருந்திருக்கின்றனர் .அத்துணை உயர்கல்வி படைத்திருந்தனர் .
ஆனால் சங்ககாலம் தாண்டிப் பல்லவர் காலம் ,பாண்டியர் ,சோழர் ,நாயக்கர் ,முகமதியர் ,மராட்டியர் ,மேலை நாட்டவர் ஆட்சிக் காலங்களில் அத்துணை பெண் புலவர்கள் இடம்பெறவில்லை. ஏன் விடுதலைக்குப் பின் கூட அதிக அளவில் பெண் புலவர்கள் இடம் பெறவில்லை என்பது தெரியவில்லை.
ஆனால் சங்ககாலத்தில் ஔவையார் பாரி ,அதியமான் போன்றவர்க்கு அரசவை தூதர் போலும் அறிவுரை கூறிடும் அமைச்சர் போலும் இருந்திருக்கின்றனர் .அச்சமின்றி காடு மேடு சுற்றி அலைந்திருக்கின்றனர்.
தமிழில் பாடி அறநெறிக் காவலர்களாக இருந்திருக்கின்றனர் .ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஔவையார் ,காரைக்கால் அம்மையார,சித்தர்களில் திலோத்தமை மற்றும் பல பெண் ஞானிகள் தமிழ் நாட்டில் வாழ்திருப்பது ஒரு பெருமையளிக்கும் செய்தியே ..
அந்தக் காலகட்டத்தில் உலகின் எந்தப்பகுதியிலும் பெண்கள் இத்துனை உயர்வு பெற்றிருந்தார்களா என்பது சந்தேகமே .ஆனால் இடையில் இங்கு என்னதான் நடந்தது என்பதும் ஆய்வுக்குரியதே .
அந்த சங்ககால ஔவையார் தான் இந்த ஔவையின் ஞானக் குறளை எழுதினாரா என்பது ஆய்வுக்குரியதே . இன்னும் சொல்லப் போனால் விநாயகர் அகவல் எழுதிய ஔவையும் குறள் எழுதிய ஔவையும் ஒருவரேவா ? என்பதுக் கூட உறுதியில்லை.
ஆனால் சங்கக்காலத்தில் திருக்குறள் எழுதப்பட்டது .ஔவையின் குறளும் குறள் வெண்பாவிலே இருக்கிறது .பிற்காலத்தில் ஏனோ குறள் வெண்பாவில் எந்த இலக்கியமும் இயற்றப்படவில்லை.
இவற்றை எல்லாம் புலவர் பெருமக்கள் பார்த்துக்கொள்ளட்டும் .அவர்கள் விடுவிக்கவேண்டிய வரலாற்று புதிர்கள் நிரம்ப இருக்கிறது .நாம் ஔவையின் குறளில் கூறப்பட்டிருக்கும் ஞானத்தை மட்டும் பார்க்க மேலே செல்வோம்.நாம் இவ்வுலகில் வந்த வேலையை விரைவில் பார்க்கவேண்டும் அல்லவா ?
மனிதராய்ப் பிறந்தவர் அனைவரும் மனிதர் ஆகிவிடமுடியுமா ?
மனதை உடையவன் மனிதன் ,ஆனால் அதை கருவியாகப் பயன் படுத்தவேண்டும் .அதன்வழி போகக் கூடாது .உறங்குவது,உண்பது, மக்களைப் பெறுவது, உலாவுவது முதலியவை யாவையும் ,விலங்குகளும் தான் செய்கின்றன .இருவருக்கும் இவை பொதுவானவையே. பின் நாம் எப்படி விலங்கைக்காட்டிலும் மேல்?நினைக்க வேண்டும்.
நான் யார் ,எனது மனம் யார் , எதற்குப் பிறந்தேன் , எங்கிருந்துவந்தேன் , இந்த உடம்பு தானே வந்ததா ,ஒருவன் தந்ததா , அந்த ஒருவன் யார் , அந்த ஒருவன் தன்மை எனன , இவைகளை நினைக்க வேண்டும். இவைகளுக்கு விடையறிய அறவழியில் நிற்கவேண்டும் .நமது பிறப்பே, பிறப்பறுக்கும் வழி காணத்தான் .
விலங்குக்கும் ,மனிதனுக்கும் இருக்கும் எல்லைக் கோடு,இந்த இறைபற்றிய எண்ணம் தான் .விலங்கு இரை மட்டும் தேடுகிறது .மனிதன் இறையைத் தேடுகிறான் .
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பதறிவு —திருக்குறள் -358
அஞஞானம தான் பிறப்பைத் தருகிறது ,எனவே பிறப்பையே
அஞஞானம என்கிறார் திருவள்ளுவர் .
மனிதரிலும் பறவையுண்டு விலங்குண்டு
கல்லுண்டு மரமுண்டு
மனிதரிலும் நீர்வாழும் சாதியுண்டு
அநேககுல மனிதருண்டு
மனிதரிலும் மனிதருண்டு வானவரும்
மனிதராய் பிறப்பதுண்டு
மனிதரிலே பிறப்பறுக்க வந்ததுவே
அருமைஎன வகுத்தார் முன்னோர்
இது சிவானந்த போதம் அளிக்கும் அறிவு
இனி ஔவை கூறும் உடம்பு எனும் சடப்பொருள் பற்றிய அறிவையும் ,மனம் எனும் சூக்ஷும பொருள் பற்றியும் ,உயிர் எனும் அதிஷுக்ஷும பொருள் பற்றியும் விளக்கும் அறிவியலோடு இணைந்த ஆன்மீகப் பார்வையை அடுத்தப் பகுதியில் இருந்து பார்ப்போமா ? சித்தர்களின் சித்தாந்த தொன்மை விளக்கத்தைப் படிப்படியாகக் காணலாம்.
-தொடரும்
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் – பகுதி 1
முகப்புரை
குறள் என்றதும் பலருக்கும் குறளுக்கு முன்னால் திரு என்பது போடாவிட்டாலும் திருக்குறளையும் அதை எழுதிய திருவள்ளுவருமே நினைவுக்கு வரும் .
ஆனாலும் ஔவை பிராட்டி இயற்றிய குறள் மற்றும் விநாயகர் அகவல்,சித்தர் இலக்கியத்தில் மிகத்தொன்மையானவைகளாக மதிக்கப்பட்டு ஞானப் பொக்கிஷம் என ஞானத்தைத் தேடும் சாதகர்களால் போற்றப்பட்டு வருகிறது . ஆனால் போற்றப்படவேண்டிய பல விஷயங்கள் இன்னமும் சற்று மறைவாகவே இருக்கிறது .பொது மக்களிடையே பரவலாக்கப்படவில்லை.
திருவள்ளுவரைப்போலவே ஔவைப் பிராட்டியும் இம்மானிடம் உய்வுபெற அரிய கருத்துக்களை இரு அடிகளில் ,குறள் வெண்பாக்களாக மொத்தம் 310 எண்ணிக்கையில் வீட்டு நெறிப்பால் ,திருவருட்பால் ,தன்பால் என்று மூன்று அதிகாராங்களாகப் பிரித்து இயற்றி இருக்கிறார்.
திருக்குறள் எடுத்தியம்பும் அறம் ,பொருள் ,இன்பம் போன்றே இக்குறள்களும் மானுட தேக அமைப்பு ,அதனுள் துலங்கும் ஆதி அறிவு , வாழ்வியல் குறிக்கோள் இவைகளை தெளிவுற எடுத்தியம்புகிறது.
அத்தனை உலக மதங்களும் வாழ்வின் முடிவில் சொர்க்கம் சென்று சேர்வதையே குறிக்கோளாகக் கொண்டு இயங்குகையில் ,நமது சனாதன நெறிதானே வீடுபேறு அல்லது முக்தி என்பதை வாழ்வின் இறுதிப பயனாகக் கூறுகிறது .
இதனை அடிப்படையாகக் கொண்டே ஔவையின் குறளும் ஒரு உத்தமமான யோகசாஸ்திரத்தின்,அத்துனை பரிமாணங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது .மனதை ஆராய்ந்து அறியும் கருவியாகக் கொண்டு ,மனதைப் பற்றியும் அதன் தன்மைகளைபற்றியும் ,அதன் மேன்மைகளை அறிந்துகொண்டு ,வாழ்வின் குறிக்கோளை அடைவது எப்படி என்பதை இயம்புகிறது .இன்னும் ஜனன மரணம் என்றால் எனன ? பஞ்சபூத சேர்க்கையால் இந்த உடம்பு எவ்வாறு உருவாகி ,செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ?அதன் தலையாய குறிக்கோள் என்னவாக இருக்கவேண்டும் அதை அடையும் வழி முறைகள் எனன ? வாசியோக நிலை , சரவோடுக்கம் இவைகளைப் பற்றியெல்லாம் விளக்குகிறது.
யோகத்தில் திளைத்த பல அனுபவபூதிகள் அருளாளர்கள் காட்டிய மார்கங்களைவிட ,ஔவைக்குறள் மிக இலகுவாக யோகத்தின் தன்மையைப் பற்றி விளக்குகிறது .
சங்கத் தமிழ் பாடல் தொகுப்பில் ஏறத்தாழ 457 புலவர்கள் பாடிய பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது .கி .மூ இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து கி .பி மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை சுமார் நானூறு ஆண்டுகளில் சுமார் ஐநூறு புலவர்கள் பாடிய அருமையான தமிழ் பாடல்கள் தொகுக்கப்பட்டிருப்பதும் ,அத்துணை தகுதி வாய்ந்த புலவர்கள் தொடர்ச்சியாக அந்தக்காலக்கட்டத்தில் வாழ்ந்திருப்பதும் ,தமிழின் சிறப்பினையும் ,அந்த காலகட்டத்தில் இடம்பெற்றிருந்த தமிழர் தம் அறிவின் திறனையும் ,தகுதியையும் எடுத்துக்காட்டுகிறது.
இன்னும் சொல்லப்போனால் அவர்கள் வெறும் தமிழ்படித்த புலவர்கள் மட்டுமல்லர் ,அவர்களில் ,சமுதாயத்தின் எல்லா பிரிவினைச் சேர்ந்த அனைத்து தரப்பினரும் இருந்திருக்கின்றனர் . பாடல்கள் புனைந்திருக்கின்றனர் .அந்தணர் ,வணிகர் ,கணக்கர் ,வேடர் ,குயவர் ,மருத்துவர் எல்லாபிரிவினரும் புலவர்களில் இருந்திருக்கின்றனர் .அத்துனைபேரும் தமிழில் புலமைபெற்று பாடல் புனையும் வல்லமை பெற்றிருக்கின்றனர்.
சங்கப்புலவர்களில் முப்பதுக்கும் மேல்பட்டவர்கள் பெண்கள் .அதாவது ஏறத்தாழ 7 % சதவிகித புலவர்கள் பெண்களாக இருந்திருக்கின்றனர் .அத்துணை உயர்கல்வி படைத்திருந்தனர் .
ஆனால் சங்ககாலம் தாண்டிப் பல்லவர் காலம் ,பாண்டியர் ,சோழர் ,நாயக்கர் ,முகமதியர் ,மராட்டியர் ,மேலை நாட்டவர் ஆட்சிக் காலங்களில் அத்துணை பெண் புலவர்கள் இடம்பெறவில்லை. ஏன் விடுதலைக்குப் பின் கூட அதிக அளவில் பெண் புலவர்கள் இடம் பெறவில்லை என்பது தெரியவில்லை.
ஆனால் சங்ககாலத்தில் ஔவையார் பாரி ,அதியமான் போன்றவர்க்கு அரசவை தூதர் போலும் அறிவுரை கூறிடும் அமைச்சர் போலும் இருந்திருக்கின்றனர் .அச்சமின்றி காடு மேடு சுற்றி அலைந்திருக்கின்றனர்.
தமிழில் பாடி அறநெறிக் காவலர்களாக இருந்திருக்கின்றனர் .ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஔவையார் ,காரைக்கால் அம்மையார,சித்தர்களில் திலோத்தமை மற்றும் பல பெண் ஞானிகள் தமிழ் நாட்டில் வாழ்திருப்பது ஒரு பெருமையளிக்கும் செய்தியே ..
அந்தக் காலகட்டத்தில் உலகின் எந்தப்பகுதியிலும் பெண்கள் இத்துனை உயர்வு பெற்றிருந்தார்களா என்பது சந்தேகமே .ஆனால் இடையில் இங்கு என்னதான் நடந்தது என்பதும் ஆய்வுக்குரியதே .
அந்த சங்ககால ஔவையார் தான் இந்த ஔவையின் ஞானக் குறளை எழுதினாரா என்பது ஆய்வுக்குரியதே . இன்னும் சொல்லப் போனால் விநாயகர் அகவல் எழுதிய ஔவையும் குறள் எழுதிய ஔவையும் ஒருவரேவா ? என்பதுக் கூட உறுதியில்லை.
ஆனால் சங்கக்காலத்தில் திருக்குறள் எழுதப்பட்டது .ஔவையின் குறளும் குறள் வெண்பாவிலே இருக்கிறது .பிற்காலத்தில் ஏனோ குறள் வெண்பாவில் எந்த இலக்கியமும் இயற்றப்படவில்லை.
இவற்றை எல்லாம் புலவர் பெருமக்கள் பார்த்துக்கொள்ளட்டும் .அவர்கள் விடுவிக்கவேண்டிய வரலாற்று புதிர்கள் நிரம்ப இருக்கிறது .நாம் ஔவையின் குறளில் கூறப்பட்டிருக்கும் ஞானத்தை மட்டும் பார்க்க மேலே செல்வோம்.நாம் இவ்வுலகில் வந்த வேலையை விரைவில் பார்க்கவேண்டும் அல்லவா ?
மனிதராய்ப் பிறந்தவர் அனைவரும் மனிதர் ஆகிவிடமுடியுமா ?
மனதை உடையவன் மனிதன் ,ஆனால் அதை கருவியாகப் பயன் படுத்தவேண்டும் .அதன்வழி போகக் கூடாது .உறங்குவது,உண்பது, மக்களைப் பெறுவது, உலாவுவது முதலியவை யாவையும் ,விலங்குகளும் தான் செய்கின்றன .இருவருக்கும் இவை பொதுவானவையே. பின் நாம் எப்படி விலங்கைக்காட்டிலும் மேல்?நினைக்க வேண்டும்.
நான் யார் ,எனது மனம் யார் , எதற்குப் பிறந்தேன் , எங்கிருந்துவந்தேன் , இந்த உடம்பு தானே வந்ததா ,ஒருவன் தந்ததா , அந்த ஒருவன் யார் , அந்த ஒருவன் தன்மை எனன , இவைகளை நினைக்க வேண்டும். இவைகளுக்கு விடையறிய அறவழியில் நிற்கவேண்டும் .நமது பிறப்பே, பிறப்பறுக்கும் வழி காணத்தான் .
விலங்குக்கும் ,மனிதனுக்கும் இருக்கும் எல்லைக் கோடு,இந்த இறைபற்றிய எண்ணம் தான் .விலங்கு இரை மட்டும் தேடுகிறது .மனிதன் இறையைத் தேடுகிறான் .
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பதறிவு —திருக்குறள் -358
அஞஞானம தான் பிறப்பைத் தருகிறது ,எனவே பிறப்பையே
அஞஞானம என்கிறார் திருவள்ளுவர் .
மனிதரிலும் பறவையுண்டு விலங்குண்டு
கல்லுண்டு மரமுண்டு
மனிதரிலும் நீர்வாழும் சாதியுண்டு
அநேககுல மனிதருண்டு
மனிதரிலும் மனிதருண்டு வானவரும்
மனிதராய் பிறப்பதுண்டு
மனிதரிலே பிறப்பறுக்க வந்ததுவே
அருமைஎன வகுத்தார் முன்னோர்
இது சிவானந்த போதம் அளிக்கும் அறிவு
இனி ஔவை கூறும் உடம்பு எனும் சடப்பொருள் பற்றிய அறிவையும் ,மனம் எனும் சூக்ஷும பொருள் பற்றியும் ,உயிர் எனும் அதிஷுக்ஷும பொருள் பற்றியும் விளக்கும் அறிவியலோடு இணைந்த ஆன்மீகப் பார்வையை அடுத்தப் பகுதியில் இருந்து பார்ப்போமா ? சித்தர்களின் சித்தாந்த தொன்மை விளக்கத்தைப் படிப்படியாகக் காணலாம்.
-தொடரும்
sugumaran- இளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
Re: ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
நாடி வரும் பதிவர்களுக்கு நாடி பற்றிய செய்தி.
எனது சகோதரி ,நீண்ட நாட்களுக்கு பின் கருவுற்று இருந்த சமயம் , எனது உறவினர்,
நாடி பார்த்து கருவுற்று இருப்பதை கூறியது நினைவுக்கு வருகிறது.
ரமணியன்
எனது சகோதரி ,நீண்ட நாட்களுக்கு பின் கருவுற்று இருந்த சமயம் , எனது உறவினர்,
நாடி பார்த்து கருவுற்று இருப்பதை கூறியது நினைவுக்கு வருகிறது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
மேற்கோள் செய்த பதிவு: 1247280T.N.Balasubramanian wrote:நாடி வரும் பதிவர்களுக்கு நாடி பற்றிய செய்தி.
எனது சகோதரி ,நீண்ட நாட்களுக்கு பின் கருவுற்று இருந்த சமயம் , எனது உறவினர்,
நாடி பார்த்து கருவுற்று இருப்பதை கூறியது நினைவுக்கு வருகிறது.
ரமணியன்
இன்றுகூட கிராமத்தில் பாட்டிகள் , நாடி பிடித்துப்பார்த்து கர்ப்பமா இல்லையா என்று சொல்லிவிடுவார்கள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் -28
- -அண்ணாமலை சுகுமாரன்
அதிகாரம் 4 = நாடி தாரணை
32 ) நரம்பெனும் நாடி இவைகளுக்கெல்லம்
உரம் பெறும் நாடி ஒன்று உண்டு
நரம்பெனும் நாடி = நரம்பென்றுக்
கருதப்படும் நாடிகளில் ,
இவைகளுக்கெல்லாம் = இந்த
நாடிகளுக்கெல்லாம் ,
உரம் பெறும் = வலிமை
அளிக்கக்கூடிய
நாடி ஒன்று உண்டு = முக்கிய நாடி
ஒன்று உண்டு .
நாடிகளை நரம்பு என எண்ணுபவர்கள்
ஔவையின் காலத்திலும் இருந்திருக்கிறார்கள்
போலும் .எனவேதான் நரம்பெனும் நாடி
எனக்குறிக்கிறார் . நாடிகள் சூக்ஷுமமானவை
. எனவே இது ஞான நூல்களில் பேசப்படுகிறது
.மேலும் அவர் இவைகளுக்கு எல்லாம் என
பன்மையில் குறிப்பிடுவதால் நாடி வேறு நரம்பு
வேறு என்பதும் உறுதியாகிறது .
இன்னமும் நாடிகள் பற்றிய பல விஷயங்களை
இந்த அதிகாரத்தின் பத்து குறள்களில்
விவரிக்கிறார் .நாடிதாரணை ,வாயு தாரணை
,அங்கி தாரணை ,அமுத தாரணை என்று பல
அற்புத தகவல்களை இரண்டு அடிகளில் அருமைக்காக நம் பால் கொண்ட அன்பினால் நமது ஔவை பாட்டி அடுத்தெடுத்து அளித்திருக்கிறார் .இதைத் தொடர்ந்து படிக்கும் அன்பர்களுக்கு எனது நன்றி .
தமிழன் பெருமை ஆன்மீகத்திலும் அதிகம்
உள்ளது .
முக்கிய நாடி என்று ஔவை குறிப்பிடும் அந்த
முக்கியநாடி சுழுமுனை எனும் ஆற்றல் மிக்க
நாடிதான் .
சுழுமுனைநாடிமூலம் பிராணன் எனும்
உயிர்ப்பு சக்தி உடல் முழுவதும் பரவி உள்ளது
.பிராண சக்தி தன போக்கில் அந்த நாடிவழியே
பாதம் முதல் தலை உச்சி வரை சென்று
கொண்டுதான் இருக்கிறது .ஆனால் அது
மெதுவாக செல்கிறது .யோகத்தின் மூலம்
அதை வேகப்படுத்துகிறோம் .வேகமாக மேல
ஏற்றுவதால் இன்னமும் அதிக பிராணன்
உடலில் சேருகிறது .இது அசைந்து அசைந்து
மேலே செல்லும் போது இன்னமும் அதிக
பிராணன் உடலில் சேருகிறது .உடல் இளமை
ஆகிறது .முகம் பிரகாசிக்கிறது .
நரை திரை இல்லாமல் ஆகிறது .
'உருத்தரித்த நாடியில்ஒடுங்குகின்றவாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற
வல்லீரேல்விருத்தரும் பாலராவர் மேனியும்
சிவந்திடும்
சிவவாக்கியா;
இங்கு உருத்தரித்த நாடிஎன்பது சுழுமுனை ,
ஒடுங்குகின்ற வாயு பிராணன் ஆகும்
மூலாதாரத்தில் இருக்கும் பிராணனை
கருத்தினால் இருத்தியே உச்சிக்கு ஏற்றினால்
முதியவரும் இளையவராவார் .
என்கிறார் சிவவாக்கியர் .
மேலும் பல நாடிபற்றிய தகவல்களை அடுத்த
பகுதியில் காணலாம் .
அண்ணாமலை சுகுமாரன்
6/9/17
sugumaran- இளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
Re: ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் -29
- -அண்ணாமலை சுகுமாரன்
அதிகாரம் 4 = நாடி தாரணை
33 ) உந்தி முதலாய உறு முடி கீழ் மேலாய்ப்
பந்தித்து நிற்கும் பரிந்து .
உந்தி முதலாய = உந்தி என்பது நாடியின் மத்திய தளம்
நாபிக்கமலம் என்று கூறும் இடம்
அதுவே மணிப்பூரக ஸ்தானம் அது முதல் ,
முடி = உச்சி வரை
கீழ் மேலாய் = நாபிக்கு கீழாகவும் மேலாகவும்
உறு = பொருந்தி
பரிந்து = அன்புடன்
பந்தித்து நிற்கும் = உறுதியாக நிற்கும் .
இங்கு அவ்வை கூறும் நாடி முந்தய குறளில் கூறிய முக்கிய நாடியைப்பற்றியது
அந்த முக்கிய நாடியை குருநாடி .,ஓங்கார நாடி , குண்டலினி நாடி என பலவாறு அழைப்பார்கள் .அந்த ஒப்பற்ற நாடியே நாபிக்கு கீழாகவும் மேலாகவும் ஓடி உச்சிவரை செல்கிறது .
இந்த உந்தியை தொப்பூழ எனக்கூறுவாரும் உண்டு .
ஆயினும் அது உந்தி , நாபிக்கமலம் ,உந்திக்கமலம் , நாபி
என குறிப்பிடும் அனைத்தும் மணிபூரகம் எனும் மத்திய பாகத்தையே .என குருமார்கள் கூறுகிறார்கள் .இந்தமுக்கிய நாடியானது நேரடியாக ஆறு ஆதாரங்களுடன் எந்தவிததடையுமின்றி இணைந்துள்ள ஒரேயொரு
நாடியாகும்.
இதனூடாக நிரந்தரமாக பிராண சக்தி செலுத்தப்பட்டால்
சூஷ்ம சரீரத்தின்முழுமையான கட்டுப்பாடும்,
அழிவற்ற சக்தியும், காயகற்பநிலையும் கிடைக்கிறது.
நாடிகளைப்பற்றிக் கூறும் வைத்தியத்தில் பயன்பயன்படும்
நாடிகளைப்பற்றி சில நண்பர்கள் கேட்டிருந்தார்கள் .
ஆனால் ஞான நூல்களில் கூறப்படும் 72,000 நாடிகளில் முக்கிய நாடுகளான தசநாடியின் பெயர்களை நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன் .அவைகளில் வைத்திய நாடிகளான
வாத , பித்த ,கப நாடிகள் பற்றி குறிப்பு இல்லையே என வினா எழுப்பினார்கள் .
ஞான நூல்களில் வாத பித்த கப நாடிகளிலின் பெயர்கள் இடம்பெறவில்லை .அதே சமயம் அந்த நாடிகள் இல்லாமலும் இல்லை .
சித்த வைத்தியம் எனும் தத்துவமே நாடிகளைவைத்துதான்
எழுப்பப்படுகிறது .
சித்த மருத்துவத்தில் நோயினைக் கண்டறிவதற்கு அடிப்படையான பரிசோதனை முறைகள் எட்டு உள்ளன.
அவை, நாடி, ஸ்பரிசம், நாக்கு, நிறம்,மொழி (நோயாளியின் பேச்சு) விழி, மலம்,சிறுநீர்
இவற்றுள் முதன்மையானது நாடி பார்ப்பது ஆகும்
இருதயம் இரத்தத்தை இரத்தக் குழாய்களின் வழியாக உடலின் எல்லா பாகங்களுக்கும் உந்தித் தள்ளுகிறது. இப்படி ஓடும் இரத்தத்தினால் இரத்தக் குழாய்களில் உணரப்படும் துடிப்பே அலோபதியில் நாடிஎனக் கருதப்படுகிறது
பொதுவாக எந்த மருத்துவ முறையைச் சேர்ந்த மருத்துவரிடம் சென்றாலும் கையைப் பிடித்து நாடி பார்ப்பார்.
சாதாரணமாக அலோபதி மருத்துவர்கள் பார்க்கும் நாடி என்பது வெறும் எண்ணிக்கைதான். அதாவது ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 72 முறை துடிக்கவேண்டும்.
இதற்கு pulse rate என்று பெயர்.
இந்த எண்ணிக்கை கூடுவதை, குறைவதைக் கொண்டு உடலின் செயல்பாட்டை பொதுவாக அறிந்து கொள்ளலாம்.
ஆனால் இந்த நாடி கணிப்பு வேறு, சித்த மருத்துவமுறை நாடி கணிப்பு வேறு.ஞான நூல்களில் கூறப்படும் நாடிவேறு
இன்னமும் நாடி ஜோதிடம் என்ற ஒரு முறையும் உண்டு
ஆனால் ஞான நூல்களில் கூறப்படும் நாடி என்பது முற்றிலும் வேறானது .மிக முக்கியம் வாய்ந்தது .
ஒட்டுமொத்த தச நாடிகளின் சங்கமம்தான் நமது உடல் .
நமது உடலின் ஆரோக்கியம் வாதம் , பித்தம் , கபம் என்னும்
மூன்று தோஷங்களால் அமைகிறது .
இதில் வாதம் என்பது பஞ்ச பூதத்தில் காற்றின் அம்சம்
இதில் பித்தம் என்பது பஞ்ச பூதத்தில் தீயின் அம்சம்
இதில் கபம் என்பது பஞ்ச பூதத்தில் நீரின் அம்சம்
தசநாடிகளில் முதல் மூன்று நாடிகள் இடா , பிங்களா , நடுநாடி வாதத்தின் கூறு ஆகும் .
அடுத்த நான்கு நாடிகள் சுழுமுனை,காந்தாரி ,அத்தி ,சிங்குவை , ஆகியவை வெப்பம் எனும் பித்த நாடியாகும் .
இறுதியாக அலம்புடை ,புருடன் ,சங்கினி ஆகியவை மூன்றும் கப நாடியின் அம்சமாகும் .
நாடிகளைப்பற்றிய 10 குறள்களும் ,வாயு தாரணை எனும் அடுத்த 10 குறள்களையும் படித்த பின் உங்களுக்கு நல்ல தெளிவான நிலை ஏற்படும் .
சித்தர்களின் வைத்திய நாடி முறை மிக அற்புதமானது , அவர்களைப்பற்றிய பல தகவல்களைத் தனியே காணலாம் .
அண்ணாமலை சுகுமாரன்
12/9/17
sugumaran- இளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
Re: ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் -30
- -அண்ணாமலை சுகுமாரன்
அதிகாரம் 4 = நாடி தாரணை
34 )காலொடு கையின் நடு இடத்து தாமரை
நூல் போலு நாடி நுழைந்து
காலொடு = கால்களோடு
கையின் = கைகளிலும்
நடு = மத்திய பாகத்திலும்
இடத்து = ( உடல்முழுவதும் )பக்கங்களிலும்
நாடி = ஓம்கார நாடியானது
தாமரை
நூல் போலு = தாமரை தண்டில் இருக்கும் நூல் போன்று
நுழைந்து = உள்ளே நுழைந்து இருக்கிறது .
கால்களில் ஆரபித்து கைமுதலாக உடலின் எல்லா பகுதியிலும் ,
ஓம்கார நாடி தாமரை தண்டின் நூல் போல மெல்லியதாக வியாபித்து உள்ளது .
இந்த குறளில் முக்கிய நாடியின் அளவை தாமரைத் தண்டின் நூல் போல
அத்தனை மெல்லியதாக இருப்பதாகக் கூறுகிறார் .
இந்த ஓம்காரநாடி உடலில் வியாபித்து அறிவின் மயமாகவே இடம்பெற்றிருப்பதால் , ஒருவரை ஒருவர் பார்க்கும் போது கடவுளை கண்டதும் கும்பிடுவது போல கும்பிடுகிறோம் என்று கூறுகிறார் சுந்தரமாணிக்க யோகியேஸ்வரர் .
உடலில் முழுவதும் வியாபித்துள்ள 72,000 நாடிகளில் முக்கிய 10 நாடிகளின் பெயர்களை முன்பு பார்த்தோம் , அவைகள் எவ்வாறு உடலில் வியாபித்திருக்கிறது என்பதை இப்போது பார்க்கலாம் .
இடா = வலது கால் பெருவிரல் முதல் உடலில் பெருக்கல் குறிபோல மாறி மாறி சென்று இடது பக்கநாசியை அடைவது
பிங்களா = இடது கால் பெருவிரல் முதல் உடலில் பெருக்கல் குறிபோல மாறி மாறி சென்று வலது பக்க நாசியை அடைவது
நடு நாடி = மூலாதாரத்தில் தொடங்கி அனைத்து நாடுகளுக்கும் ஆதாரமாக
விளங்குவது .
சுழி முனை = இதுவே உச்சித தாமரை வரை சென்று விளங்குவது
காந்தாரி = கண்களில் சென்று செயல்படுவது
அத்தி =உடலெங்கும் வியாபித்து செயல்படுவது
சிங்குவை = உண்ணாக்கில் நின்று உணவு , நீர் இவைகளை விழுங்க செய்வது
தற்காலத்தில் முக்கியமாக மருந்து மாத்திரைகளையும் விழுங்க செயகிறது
அலம்புடை = இரு செவி வரை சென்று இயங்க செயகிறது .
புருடன் = புரு > புருவம்: கண்ணுக்குப் பாதுகாப்புத் தருவது.
புருவம் புருடன் (புருசன் ) புரு > புருவம்: கண்ணுக்குப் பாதுகாப்புத் தருவது., புரு > புருடன் பெண்ணுக்குப் பாதுகாப்புத் தருபவன்
இறைவனை தவிர அனைத்து ஆன்மாக்களும் பெண் தன்மை கொண்டவை
புருடனை நாடுவது ஆன்மாக்களின் இயல்பு .
இந்த புருடன் எனும் நாடி பரத்தை பற்றி நிற்பது .
இன்னமும் விரிவாக தனினயே விவாதிக்கலாம் .
சங்கினி = இது மார்பை பற்றி நிற்பது .இதய கமலத்துடன் தொடர்பு கொண்டு .
இவாறு நாடிகள் உடலெங்கும் வியாபித்து தாமரை தண்டின் நூல்போல
முக்கிய பங்காற்ற உதவுகிறது .
தச நாடிகளும் தசவாயுக்களும் மிக முக்கியமானவை , இவைகளை புரிந்து கொள்வது மிக முக்கியமானது .
இனி அடுத்த குறளை அடுத்தட்டுக்கனலாம் .
அண்ணாமலை சுகுமாரன்
16/9/17
sugumaran- இளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
Re: ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் -31
- -அண்ணாமலை சுகுமாரன்
அதிகாரம் 4 = நாடி தாரணை
35) ஆதித்தன்தனகதிர் போலஅந்த நாடிகள்
பேதித்தும் தாம் பரந்தவாறு
ஆதித்தன் = சூரியன்
தன கதிர் போல = தன்னுடைய கலைகளை இவ்வுலகெங்கும் பரப்புவதுபோல ,
அந்த நாடிகள் = அந்த தசை நாடிகள் மற்றும் 72,000 நாடிகளின் வழியே
பேதித்தும் தாம் பறந்தவாறு = உயிரின் ஆற்றலை உடலெங்கும் பரப்பி இயக்குகிறது .
ஆதவன் எவ்வாறு ஒளிர்ந்து தன கதிர்களை அனைத்து திசைகளிலும் பரப்பி மற்ற கோள்களையம் இந்த பூமியையும் இயக்குவது போல ,
உடலில் இடம் பெற்றுள்ள உயிரின் ஒளி நடு நாடியில் இருந்து தச நாடிகளின் வழியாக பொறிகளை இயக்கி , இதர
72,000 நாடிகள் வழியே உடலெங்கும் விரவி அனைத்து
உறுப்புகளையும் இயக்குகிறது .
நாடிகள் கண்ணுக்கு தெரியாத சூக்ஷுமமானது .
அந்த நாடிகள் வழியே பிராணன் எனும் சக்தி பரவி உடலை
இயக்குகிறது .
இப்போது நமது உடலில் அமைந்திருக்கும் 72,000 நாடிகள்
உடலில் எங்கனம் பரவி இருக்கிறது என்ற விபரத்தைக் காணலாம்
தலையில் 15000
கண்களில் 4000
செவியில் 3300
மூக்கில் 3380
பிடரியில் 6000
கண்டத்தில் 5000
கைகளில் 3000
முண்டத்தில் 2170
இடையின் கீழ் 8000
விரல்களில் 3000
லிங்கத்தில் 7000
மூலத்தில் 5000
சந்துகளில் 2000
பாதத்தில் 5150
மொத்தம் 72000
இவ்வாறு உடலெங்கும் பரவி பிராணனை செலுத்தி ஒரு வலைபின்னல் போல ஆராவில் உள்ள நாடிகள் சக்கரங்கள் மூலமாக உடலுடன் தொடர்பு கொள்கிறது.
நாடிகள் தடையின்றி பிராண சக்தியை உடல் முழுவதும் பாயச் செய்ய வேண்டியது மிகவும் அவசியம், நாடிகளில் அடைப்பு ஏற்பட்டு சக்தி தேக்கம் ஏற்பட்டால், உடலில் வலி, நோய் போன்ற பிரச்சினைகள் தோன்றும்.
உற்ற விபரம் உறுதியாம் என்நந்தி
பற்றிய மூலம் பகர்ந்திடும் நாடிதான்
எற்றியே எண்ணிடில் எழுபத்து ஈராயிரம்
மற்றதில் பத்து வளமான நாடியே.
வளமான பத்தில் வழங்குந் தசவாயு
உளமான இடைபின் சுழியென மூன்றுண்டு
களமான சக்கரம் காட்டியது ஆறுண்டு
தளமான மண்டலந் தான் மூன்றும் பாருமே
இவைகள் சித்தர் திருமூலர் தரும் சான்றுகள் ஆகும்
இனியும் நாடிகள் பற்றிய அதிக செய்திகளை அடுத்தப் பகுதியில் காணலாம் .
நண்பர்கள் சிலர் என்னுடன் பேசும் போது என்ன அய்யா எப்போது அவ்வையின் படத்தைப் போடுகிறீர்கள் ஔவைக்கு பதிலாக யாராவது அம்மணியின் படத்தைப்போட்டாலாவது இன்னமும் அதிகம் பேர் படிப்பார்கள் , ஏன் ஔவைக்கு பதில் ஓவியாவின் படத்தை போடுங்களேன் என்றார் .
நான் இதில் ஔவையின் படத்தையே இப்போதும் போடுகிறேன் .
நல்லவிஷயங்கள் நல்ல இடத்தைப் போய் சேர்ந்தால் போதும் என்பதே என் எண்ணம்
அண்ணாமலை சுகுமாரன்
21/9/17
sugumaran- இளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
Re: ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
நண்பர்கள் சிலர் என்னுடன் பேசும் போது என்ன அய்யா எப்போது அவ்வையின் படத்தைப் போடுகிறீர்கள் ஔவைக்கு பதிலாக யாராவது அம்மணியின் படத்தைப்போட்டாலாவது இன்னமும் அதிகம் பேர் படிப்பார்கள் , ஏன் ஔவைக்கு பதில் ஓவியாவின் படத்தை போடுங்களேன் என்றார்
பாருங்கள் மனிதர்களின் ரசனையை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் -31
- -அண்ணாமலை சுகுமாரன்
அதிகாரம் 4 = நாடி தாரணை
35) ஆதித்தன் தன கதிர் போல அந்தநாடிகள்
பேதித்துத் தாம் பரந்தவாறு
ஆதித்தன் தன கதிர்களை நீக்கமற இந்த அகிலம் எங்கும்
பரப்புவது போல நாடிகளும் , பிராணன் எனும் உயிராற்றலை நமது உடலெங்கும் பரப்பி செயல்படுகிறது என்கிறார் . சூரியன் மையமாக நின்று ,தன கதிர்களால் கோள்கள் அனைத்தையும் இயக்குவது போல , உடலின் உயிர் ஆற்றல் நாடிகளில் தச நாடிகள் மற்றும் 72,000 நாடிகள் வழியே பரவி உடலின் அத்தனை உறுப்புக்களையும் இயக்குகிறது .
அண்டத்தில் இருப்பதே இந்த பிண்டத்திலும் இருக்கிறது .
அண்டம் இயங்குவது போலவே இந்த பிண்டமும் இயங்குகிறது .
நாடிகளை பற்றி யூகிமுனிவர் ஒரு பாடல் மூலம் விளக்கியுள்ளாரஅதை பார்போம்…
சிறந்த இடை பிங்கலையும் சுழினையோடு
சிறப்பான காந்தாரி யத்திச் சிங்கூவையாம்
பிறந்த அலம் பூரூடனொடு குகுதன்றானூம்
பேரான சங்கினியும் வயிரவன்றான்
திறந்தவிவை பத்துந்தான் நாடியாகும்
திரிமூன்று நாளையினி லொடுங்கும்பாரு
பத்து நாடிகள் என்பவை இடா ,பிங்களா .சுழிமுனை… என்பவற்றோடுகாந்தாரி,அத்தி..சிங்கவை,அலம்புருடன்.. குகுதன்,சங்கினி,வயிரவன்…என பத்து நாடிகளாம்..
இதில்இடா ,பிங்களா .சுழிமுனை… இவை மூன்றும் …வாதத்தில் ஒடுங்கும் இயல்புடையவையாகும்.ீ. .
இடா …பிங்கலை…என்ற இரண்டு நாடிகளூம் உடம்பில் அடிபபாகமாகிய மூலத்திலிருந்துகிளம்பி….
சுழிமுனையோடு.. கூடி ஏறி சிரசு வரை சென்று முட்டி,அவை உகார வளைவில் திரும்பி,வரும் வழி நாசி,நடுப்புருவம் ,நெற்றி…ஆகிய இடங்களை தொட்டுக்கொண்டுமீண்டும் மூலத்தில் சேருகின்றது….
அடுத்துகந்தாரி என்ற நாடி உந்தி கமலத்தில் இருந்து கிளம்பி நரம்புகள் ஏழுக்கும் உருவமாகி மேலே சென்று சிரசில் மூட்டி மீண்டும் கண்டத்தில் புகுந்து நாவின் அடியில் வந்த அமர்ந்து விடுக்கின்றது
அடுத்து அத்தி சிங்குவை..
இரண்டும் மூலத்தின் மேற்பகுதியில் இருந்து கிளம்பி மேலே ஏறி இரண்டு செவிகளில் உள்ள காதுகளை தொட்டுக்கொண்டு..நரம்புகளில் எல்லாம் துடிப்புகளை உண்டாக்கிக் இரண்டு கண்களில் வந்து நிற்க்கும.
அடுத்து அலம்புருடன்,வயிரவனும் என்ற இரண்டு நாடிகளும் அடிமூலம் பற்றி மேலே ஏறி இரண்டுகன்னங்களிலும் வந்து நிற்க்கும்.
அடுத்து..சங்கினியும்குரு என்ற நாடிகள் நாபித் தளத்தில் தோன்றி குதம் வரையில்ஓடிக்கொண்டுயிருக்கும்..
இத்தனை செய்திகள் நாடிகளைப்பற்றி இருந்தும் நாம் இன்னும் முழுமையும் உணரவில்லை தெரிந்துகொள்ள பல வழியிருந்தும் நாம் தெரிந்துக்கொள்ள முயற்சிக்க வில்லை.பல நூற்று கக்காண சித்தர்கள் நூல்கள் இருந்தும் நாம் அதனை படிக்கமுற்படவில்லை.ஒருவேளைஅவைகள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதாலும் ,பாமரத்தமிழில் ,மறைபொருள் அதிகம் கொண்டு இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் ..
மனித உடலானது தொண்ணூற்றிஆறுதத்துவங்களால் ஆனது அதில் தசநாடிகளும் அடங்கியது . அது பற்றி திருமூலர் பின்வருமாறு உரைக்கிறார்.
"பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐந்துளும்
ஏதம் படஞ்செய்து இருந்து புறநிலை
ஓதும் மலம்குணம் ஆகும்ஆ தாரமொடு
ஆதி அவத்தைக் கருவிதொண் ணூற்றாறே------
இந்த தொண்ணூற்றி ஆறு தத்துவங்களை அறிந்து, தெளிந்து கொள்வதே சித்தர்களின்ஞானத்தின் அடிப்படையாகிறது
நமது ஔவைப் பிராட்டி அத்தனை ஞானத்தின் அடிப்படைச் செய்திகளையும் சுருக்கமாக இரண்டடியில் விளக்கியுள்ளார் .இந்த பத்துநாடிகளும் மனித உடம்பில் உள்ள ஆறுஆதாரங்களையும், மனதையும், உயிரையும்இயக்குகிறது என்பது சித்தர்களின்முடிவாகும்
அடுத்த செய்தியை அடுத்தப்பதிவில் காணலாம் .
அண்ணாமலை சுகுமாரன்
12/10/17
sugumaran- இளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
Re: ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் -32
- -அண்ணாமலை சுகுமாரன்
அதிகாரம் 4 = நாடி தாரணை
36) மெய்யெல்லாமாகி நரம்போ டெலும்பிசைந்து
பொய்யில்லை நாடிப் புணர்வு.
மெய்யெல்லாமாகி = இந்த உடல் முழுவதுமாகி
நரம்போடெலும்பிசைந்து = உடலெங்கும் இருக்கும் நரம்புகள் ,மற்றும் எலும்புகளுடன் இணைந்து
நாடிப் புணர்வு. = நாடிகள் செயல்படுகிறது .
பொய்யில்லை = பொய்யில்லை உண்மையே ,! கண்ணால் காணமுடியவில்லை என்பதால் பொய் என நினைக்க வேண்டாம்
நாடிகள் உடம்பெங்கும் வியாபித்து இருக்கும் நரம்புகள் மற்றும் எலும்புகளுடன் இணைந்து செயல் படுகிறது .இதை கண்ணால் காணமுடியவில்லை என்பதால் பொய் என நினைக்கவேண்டாம் என்கிறார் . அவர் பொய்யில்லை என்று சொல்லுவது கண்ணுக்குத் தெரியாத நாடிகளை பற்றிமட்டுமில்லை மெய்யெல்லாமாகி என்றுக் கூறி அதிலும் ஒரு நுட்பத்தை தெரிவிக்கிறார் என்று நினைக்கிறேன் .
மண்ணோடு மண்ணாக மறைந்தொழியும் இந்த மனித உடலைநாம்என்றும்உள்ளதுஎன்று பொருள்படும் மெய் என்ற சொல்லால் அழைக்கின்றோம்.
மனித உடல் அழியக்கூடியதே. ஆயினும், அதனுள் என்றும் உள்ளதான அறிவுப் பொருளாகிய ‘உயிர்’ இணைந்துள்ளது. இந்த உண்மையை சங்ககாலம் தொட்டு வழங்கிவரும் தமிழ்க் கவிதைகள் உயிருக்கு வழங்கியுள்ள ‘மன்’ என்னும் நிலைபேற்றுக்குறிப்பு முன்ஒட்டு. தமிழில் ‘மன்’ என்பதற்கு ‘என்றும் உள்ளது’ என்று பொருள். காட்டாக, சில பாடல்களைக் காண்போம்.
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை. - என்கிறது திருக்குறள்:244
அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல். என்கிறது (மணிமேகலை – 25:228-231)
மெய்யனான இறைவனும், என்றுமுள்ள நிலைப்பேறு பெற்ற உயிரும் உள்ளே உறைவதால், அழியும் தன்மையுள்ள,பொய்யான ஊன் உடம்பை மெய் எனத் தமிழர் காலம் காலமாக அழைத்துவருகின்றனர்
தமிழில் வெற்றுச் சொல் என்பதே கிடையாது., தமிழ் மொழி மெய் அநுபவம் மூலம் உருவாக்கப் பட்டுள்ளதால் எப்படிப்பட்ட இடையூறு இடை இடையே தோன்றி வந்தாலும் இந்த மொழி அசைக்க முடியாத சக்தியாக காலத்தை கடந்து நிலைத்து நிற்கிறது
நம் உடல் அவரவர் கையால் எட்டு ஜாண்! அவரவர் கையால் அவரவர் உடம்பு எட்டு ஜாணே! இன்றைய விஞ்ஞான உலகம் ஒவ்வொருவரும் உயரத்தில் 150 செமீ 160 செமீ என்ற பல கணக்குகளைச் சொல்கிறது! உலகிலுள்ள மனிதர் ஒவ்வொருவரின் உயரமும் வெவ்வேற என பிரித்தே காட்டுகிறது. ஆனால் நமது மெய்ஞ்ஞானிகளோ மனிதர்கள் ஆகிய நாம் அனைவரும் ஜீவாத்மாக்களே என்றும் அவர்களின் வடிவமைப்பும் ஒன்றே என என்றும் நிறுவுகிறது எவ்விதத்திலும் மனிதர்கள் தங்களுக்குள் வேற்றுமை கொள்ளக்கூடாது என்று எல்லோரின் உயரமும் எட்டு ஜாணே என்று உண்மையை கூறி விட்டனர்!
உடம்பு அழிந்தால் உயிர் அழியும். உயிர் அழிந்தால் மெய்ஞ்ஞானம் கிடைக்காது . எனவே உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்து உடம்பையும் வளர்க்கலாம் , விளைவாக உயிரையும் வளர்க்கலாம் . உயிரை வளர்த்தால் சீவன், சிவமாகும். ஞானம் சித்திக்கும் .
உடம்பார் அழியின் உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!!!
— திரு மூலர் —
உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே” – –திருமூலர் திருமந்திரம்.
இவ்வாறு மெய் எனும் இந்த உடலுக்குள்உறு பொருள் மறைவாக இருப்பது போல் இந்தஉடலுக்குள் கண்ணுக்குத் தெரியும் நரம்புகளும் எலும்புகளுக்கும் இடையே
நாடிகளும் இயைந்து வினையாற்றுகிறது என்கிறார் எனக் கொள்ளலாம் .
அடுத்து விரைவில் அடுத்ததக குறளைப் பார்க்கலாம் .
அண்ணாமலை சுகுமாரன்
22/10/17
sugumaran- இளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
Re: ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் -33
- -அண்ணாமலை சுகுமாரன்
அதிகாரம் 4 = நாடி தாரணை
37 ) உத்திமுதலாகி ஒங்காரத்து உட்ப்பொருளாய
நின்றது நாடி நிலை
உத்திமுதலாகி = நாபிக் கமலத்தை முதன்மையாக்கிக் கொண்டு ,
ஒங்காரத்து உட்ப்பொருளாய = ஓங்காரத்தின் உட்பொருளாக விளக்குவதாக ,
நின்றது = நிலைத்து இருக்கிறது
--நாடி நிலை = உடலில் இயங்குவது நாடிகளின் நிலை
ஓங்காரத்தின் மறைபொருளாக இருக்கும் பேருண்மையை ஆதாரமாகக் கொண்டு , உந்திக்கமலத்தில் இருந்து உதித்திருக்கும் நாடிகள், செயல்படுவதாகக் அவ்வாய்ப்பிராட்டி கூறுகிறார் .
.
முதலில் ஓங்காரம் என்பது என்ன என்பதை ,முழுமையாக அறியவேண்டும் . பின்புதான் அதன் உட்பொருளாக இருப்பது எது என அறியமுடியும் .
''ஓம் - என்ற ஒலியையே ஓங்காரம்-பிரணவம் என்று கூறுவர். உலகம் தோன்றுவதற்கு முன்பு ஓங்காரம்-பிரணவம் ஒலியே நிலவி இருந்தது என்றும் , ஓங்காரத்திலிருந்து விந்துவும், விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன.
"ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்
அருவுருவாய் நின்ற பரசிவமுமாகி
தோதியென்ற சிவனிடமாய்ச் சத்தியாகித்
தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி "
என்னும் சுப்பிரமணிய ஞானத்திலிருந்து அறியலாம்.
விஷயம் தெரிந்தவர்கள் இதை ஆங்கிலத்தில் Om என்று எழுதாமல் Aum என்றே எழுதுவார்கள். ‘அதுவே சரி .
சிவமே இவ்வாறு ஓங்காரத்தின் உட்பொருளாக இருந்து இருந்து உயிரையும் அந்தக்கரணங்களையும் இயக்கி மனவாக்கு காயங்களால் வினை செய்ய ஊக்குகின்றது என்பதனைத் தமக்கு இறைவன் அறிவுறுத்தியதாக
மாணிக்க வாசகர்,
“”பாசமெனும் தாழுருவி, உய்யுநெறி காட்டுவித்திட்டு ஓங்காரத் துட்பொருளை, ஐயனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே” --(திருவாசகம், அச்சோப்பதிகம்,7) எனக் கூறுகின்றார்.
.
அ, உ, ம ஆகியவை சேர்ந்த “ஓம்” எனும் பிரணவமாய் ஒலிக்கிறது
ஓம் என்பது அழகானதொரு இறை-ஒலித் தத்துவம்! சமணம் , புத்த மதம், சீக்கியர்கள், சைனாவில் கூட "ஓம்" புனிதமாக கருதப்படுகிறது .
சிவமே ஓங்காரத்தின் உட்பொருள் எனத் திருமுறைகள் அனைத்தும் கூறுகின்றன.
* ஒன்றவே உணர்திராகில் ஓங்காரத்து ஒருவனாகும்
* ஓங்காரன்காண்
* ஓங்காரத் துட்பொருளாய் நின்றான்காண்
* ஓங்காரத் தொருவனை
இவை போன்ற சொற்றொடர்கள் பல திருமுறைகளில் உள்ளன.
“ஓங்காரத்து உள்ளொளிக்கு உள்ளே முருகன் உருவம்கண்டுதூங்கார் … … என்செவார் யமதூதருக்கே”என்ற கந்தர் அலங்காரப் பாடலுள் முருகனே ஓங்காரத்துட்பொருள் என அருணகிரிநாதர் பாடுகின்றர்.
திருப்புகழ் ஒன்றில், “ஓரெழுத்தில் ஆறெழுத்தை ஓதுவித்த பெருமாளே” என்ற அடியில், ‘ஓம்” என்ற ஓரெழுத்து மந்திரமே, தன்னுள் அடங்கியிருந்த திருவைந்தெழுத்து மந்திரங்களையும் விரியச் செய்து ஆறெழுத்து மந்திரமாயிற்று என உணர்த்தினார்.
திருமந்திரத்தில் ஓங்காரத்தின் சிறப்புப்பற்றி ,
ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி
ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம்
ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம்
ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே
என்று திருமூலர் பாடியுள்ளார்.
சட்டைமுனி சூத்திரத்தில்
" ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு "
என்று சட்டைமுனி தனது சூத்திரத்தில் பாடியுள்ளார்.
இவ்வாறு ஓங்காரத்தின் சிறப்புகள் பல இருந்தாலும் ., அதன் உட்பொருளாதான் இந்த உடலை இயக்குகிறது என்பதை அறியமுடிகிறது
அகத்திய பெருமான் தனது மெய்ஞான சுத்திரத்தில் ,
" அவ்வாகி உவ்வாகி மவ்வுமாகி ,
- ஐம்பத்தோ ரெழுத்துக்கு தியாகி "
"அகாமுதல் அவ்வைமுத்தும் தியாகும்
அறிந்தோர்க்கு இதிலேதான் வெளியதாகும் "
என்று பாடியுள்ளத்தின் மூலம் நன்கு அறியலாம்.
உருவமும்- உடலும்.
உடம்பை உருவைக் குறிக்கும் போது ஏற்கனவே குறித்தப்பிட்டபடிஇதுவே கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக் காரணமாய் விளங்குகிறது.இறைவன் அவ்வெழுத்தின் உருவமாய் உடம்பினுள் அமைந்துள்ளார்
என்பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களது சூத்திரம் மூலம் விளங்கும்.
"கண்டது அவ்வென்னுங் கடைய தோரட்சாம்,
பிண்டத்துக் குற்பத்தி பிறக்கு மிதிலே"
- மச்சைமுனி தீட்சை ஞானம்
"உந்தியினுள்ளெ அவ்வும் உவ்வுமாய் மவ்வுமாகி
விந்துவாய் நாதமாகி விளங்கிய சோதிதன்னை "
- அகத்தியர் முதுமொழி ஞானம்.
இவ்வாறு உடம்பினுள்ளே இயங்கும் இறைசக்தியான ஓங்காரம் , நாடிகள் வழியே பிராணனாக பரவி இயங்குகிறது .
அண்ணாமலை சுகுமாரன்
2/11/17
sugumaran- இளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு
» ஔவையின் அகவலில் யோக நெறி
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» ஔவையின் அகவலில் யோக நெறி
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|