Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சின்னமா !
5 posters
Page 1 of 1
சின்னமா !
அது ஓர் அடர்ந்த காடு . அந்தக் காட்டின் நடுவே ஒரு குடிசை . அந்தக் குடிசையில் வேடன் ஒருவன் , தன் மனைவியுடனும் ,இரண்டு மகன்களுடனும் வாழ்ந்துவந்தான் . தினமும் அவன் வேட்டைக்குச் செல்வான் .பறவைகள் , மிருகங்கள் ஆகியவற்றை வேட்டையாடிக் கொண்டுவருவான் . தன் குடும்பத் தேவைக்குப் போக மீதியுள்ள பறவைகளையும் , மிருகங்களையும் விற்றுவிடுவான் . அதில் கிடைத்த பணத்தைக்கொண்டு ஜீவனம் செய்து வந்தான் .
வேட்டைக்குச் செல்லும்போது தன் இரண்டு மகன்களையும் அழைத்துச் செல்வான் . வேட்டையின் நுணுக்கங்களை அவர்களுக்குக் கற்றுத் தருவான் . எந்த மிருகத்தை எப்படி வேட்டையாட வேண்டும் என்று சொல்லித் தருவான் .எதிரே புலியே வந்தாலும் , அஞ்சி ஓடாமல் துணிவுடன் எதிர்கொள்ளவேண்டும் என்று கூறுவான் .
ஒருநாள் வேடனுக்கு கடுமையான ஜுரம் வந்துவிட்டது .அவனால் வேட்டைக்குச் செல்லமுடியாது என்று நினைத்தான் . தன் இரண்டு மகன்களையும் அழைத்து , " செல்வங்களே ! இன்று என்னால் வேட்டைக்குச் செல்ல முடியாது ; உடல்நலம் சரியில்லை ; ஆகவே நீங்கள்தான் வேட்டைக்குச் செல்லவேண்டும் " என்று பணித்தான் .
மகன்கள் இருவரும் ," அப்படியே ஆகட்டும் அப்பா ! நாங்கள் வேட்டைக்குச் சென்று வருகிறோம் ; நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் !" என்று கூறிவிட்டு இருவரும் வேட்டைக்குப் புறப்பட்டனர் .
சகோதரர்கள் இருவரும் காட்டில் வெகுதூரம் அலைந்து திரிந்தார்கள் . ஒரு மிருகமும் கண்ணுக்குப் படவில்லை . நடந்து நடந்து இருவரும் சோர்ந்து போய்விட்டனர் . அங்கிருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணி , அந்த மரத்தை நோக்கி நடந்தனர் .
அப்போது திடீரென்று , ஒரு மதம் பிடித்த யானை ஒன்று , பயங்கரமாகப் பிளிறிக்கொண்டே அவர்களை நோக்கி வந்தது . அந்த யானையைக் கண்ட இளையவன் பயந்துபோய் ஓட்டம் பிடித்தான் ; ஆனால் மூத்தவன் அவ்வாறு ஓடவில்லை . தந்தை சொன்ன அறிவுரைகளை எண்ணிப் பார்த்தான் . புலியே வந்தாலும் துணிந்து எதிர்க்கவேண்டும் என்று தந்தை சொன்ன அறிவுரை அவன் நினைவுக்கு வந்தது .
சட்டென்று தன் கையிலிருந்த வேலை லாவகமாக ஓங்கி யானைமீது எறிந்தான் .அந்த வேல் யானையின் மத்தகத்தின் மீது பாய்ந்து குத்திட்டு நின்றது . வலி தாங்கமுடியாத யானை பின்வாங்கியது .தன் குன்றொத்த உடலைத் திருப்பி , வந்தவழியே ஓடத்தொடங்கியது . அப்போது அந்த வேல் தரையில் விழுந்தது . இரத்தம் தோய்ந்த அந்த வேலை எடுத்துக்கொண்டு பெரியவன் தம்பியைத் தேடினான் . ஆனால் அவன் அங்கில்லை .
ஒரு வழியாகத் தம்பியைத்தேடிக் கண்டுபிடித்தான் . அப்போது அவன் கையில் இறந்துபோன முயல் ஒன்று இருந்தது .மற்றோரு கையில் இரத்தம் தோய்ந்த அம்பு இருந்தது .
அண்ணனைக் கண்ட தம்பி ஏளனமாக , " என்ன அண்ணா ! வெறுங்கையோடு வந்திருக்கிறாய் : எந்த விலங்கும் உனக்குக் கிடைக்கவில்லையா ? என்னைப் பார் ! முயலை வேட்டையாடிக் கொண்டு வந்திருக்கிறேன் !" என்று சொன்னான் .
தம்பியும் அண்ணனும் வீட்டுக்குள் நுழைந்தனர் .
மகன்கள் இருவரையும் கண்ட தந்தை சந்தோஷ மிகுதியால் எழுந்து உட்கார்ந்தார் . வேட்டை எளிதாக இருந்ததா? என்னென்ன மிருகங்களை வேட்டையாடினீர்கள் ? என்று கேட்டார் .
சிறியவன் தான் முயல் வேட்டையாடிய பிரதாபங்களை எடுத்துச் சொன்னான் .தான் அம்பெய்து கொன்ற முயலையும் தந்தையிடம் காட்டினான் .
ஆனால் தந்தையின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை .
" பெரியவனே ! நீ ஏன் வெறுங்கையோடு வந்திருக்கிறாய்? உன் கையிலிருக்கும் வேல் இரத்தம் தோய்ந்து காணப்படுகிறது . காட்டிலே என்ன நடந்தது? "
பெரியவன் யானையுடன் போரிட்ட சம்பவத்தை எடுத்துச் சொன்னான் . அது தப்பி ஓடிய விவரத்தையும் எடுத்துச் சொன்னான் .
அதைக்கேட்ட தந்தை ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார் . கட்டிலைவிட்டு மெதுவாக எழுந்துவந்து தன் மகனைக் கட்டித் தழுவிக்கொண்டார் .
இந்தக் காட்சியைக்கண்ட தம்பி , " என்னப்பா ! வெறுங்கையோடு வந்த அண்ணனைக் கட்டித்தழுவி ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறீர்கள் ; ஆனால் முயல் வேட்டையாடிவிட்டு வந்த என்னைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள் ! ஏனப்பா இந்த ஓரவஞ்சனை ?
சின்னவனே ! கோபம் வேண்டாம்; நான் சொல்வதைப் பொறுமையாகக் கேள் ! மான் , முயல் போன்ற விலங்குகள் எல்லாம் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவை . அவற்றை வேட்டையாடுவதுவும் மிகவும் எளிது . அவைபோன்ற சின்ன மாக்களை அதாவது சிறிய விலங்குகளை சின்னஞ்சிறு சிறுவர்கள்கூட எளிதில் அம்புஎய்தி கொன்றுவிடுவார்கள் . ஆனால் பெரிய மாக்களை அதாவது சிங்கம் , புலி , யானை போன்ற பெரிய விலங்குகளை வேட்டையாடுவதற்கு கையில் ஆயுதம் மட்டும் இருந்தால் போதாது ; வீரமும் நெஞ்சில் துணிவும் இருக்கவேண்டும் .அந்த வீரமும் , துணிவும் உன் அண்ணனிடம் உள்ளது . அவன் யானையைக் கொல்லவில்லை என்றாலும் அந்தத் துணிவும் , வீரமும் எல்லோருக்கும் வருமா ? நீ யானையைக் கண்டவுட,ன் ஓடத்தானே செய்தாய் !
உன் அண்ணன் அடைந்தது தோல்வி அல்ல ; நீ பெற்ற வெற்றியைவிட அவன் அடைந்த தோல்விக்கு மதிப்பு அதிகம் . வார்டு மெம்பர் தேர்தலில் பெறுகின்ற வெற்றியைவிட MP தேர்தலில் சில நூறு ஓட்டுகள் வித்தியாசத்தில் ஒருவன் அடைகின்ற தோல்விக்கு மதிப்பு அதிகம் .எனவே இனிமேல் நீயும் சின்ன மாக்களை வேட்டையாடுவதை விட்டுவிட்டு பெரிய மாக்களை வேட்டையாட கற்றுக்கொள் ! " என்றார்.
" சரிப்பா ! என்று சொல்லி தம்பி தலை குனிந்தான் .
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது .
என்பது ஐயனின் வாக்கு .
வேட்டைக்குச் செல்லும்போது தன் இரண்டு மகன்களையும் அழைத்துச் செல்வான் . வேட்டையின் நுணுக்கங்களை அவர்களுக்குக் கற்றுத் தருவான் . எந்த மிருகத்தை எப்படி வேட்டையாட வேண்டும் என்று சொல்லித் தருவான் .எதிரே புலியே வந்தாலும் , அஞ்சி ஓடாமல் துணிவுடன் எதிர்கொள்ளவேண்டும் என்று கூறுவான் .
ஒருநாள் வேடனுக்கு கடுமையான ஜுரம் வந்துவிட்டது .அவனால் வேட்டைக்குச் செல்லமுடியாது என்று நினைத்தான் . தன் இரண்டு மகன்களையும் அழைத்து , " செல்வங்களே ! இன்று என்னால் வேட்டைக்குச் செல்ல முடியாது ; உடல்நலம் சரியில்லை ; ஆகவே நீங்கள்தான் வேட்டைக்குச் செல்லவேண்டும் " என்று பணித்தான் .
மகன்கள் இருவரும் ," அப்படியே ஆகட்டும் அப்பா ! நாங்கள் வேட்டைக்குச் சென்று வருகிறோம் ; நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் !" என்று கூறிவிட்டு இருவரும் வேட்டைக்குப் புறப்பட்டனர் .
சகோதரர்கள் இருவரும் காட்டில் வெகுதூரம் அலைந்து திரிந்தார்கள் . ஒரு மிருகமும் கண்ணுக்குப் படவில்லை . நடந்து நடந்து இருவரும் சோர்ந்து போய்விட்டனர் . அங்கிருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணி , அந்த மரத்தை நோக்கி நடந்தனர் .
அப்போது திடீரென்று , ஒரு மதம் பிடித்த யானை ஒன்று , பயங்கரமாகப் பிளிறிக்கொண்டே அவர்களை நோக்கி வந்தது . அந்த யானையைக் கண்ட இளையவன் பயந்துபோய் ஓட்டம் பிடித்தான் ; ஆனால் மூத்தவன் அவ்வாறு ஓடவில்லை . தந்தை சொன்ன அறிவுரைகளை எண்ணிப் பார்த்தான் . புலியே வந்தாலும் துணிந்து எதிர்க்கவேண்டும் என்று தந்தை சொன்ன அறிவுரை அவன் நினைவுக்கு வந்தது .
சட்டென்று தன் கையிலிருந்த வேலை லாவகமாக ஓங்கி யானைமீது எறிந்தான் .அந்த வேல் யானையின் மத்தகத்தின் மீது பாய்ந்து குத்திட்டு நின்றது . வலி தாங்கமுடியாத யானை பின்வாங்கியது .தன் குன்றொத்த உடலைத் திருப்பி , வந்தவழியே ஓடத்தொடங்கியது . அப்போது அந்த வேல் தரையில் விழுந்தது . இரத்தம் தோய்ந்த அந்த வேலை எடுத்துக்கொண்டு பெரியவன் தம்பியைத் தேடினான் . ஆனால் அவன் அங்கில்லை .
ஒரு வழியாகத் தம்பியைத்தேடிக் கண்டுபிடித்தான் . அப்போது அவன் கையில் இறந்துபோன முயல் ஒன்று இருந்தது .மற்றோரு கையில் இரத்தம் தோய்ந்த அம்பு இருந்தது .
அண்ணனைக் கண்ட தம்பி ஏளனமாக , " என்ன அண்ணா ! வெறுங்கையோடு வந்திருக்கிறாய் : எந்த விலங்கும் உனக்குக் கிடைக்கவில்லையா ? என்னைப் பார் ! முயலை வேட்டையாடிக் கொண்டு வந்திருக்கிறேன் !" என்று சொன்னான் .
தம்பியும் அண்ணனும் வீட்டுக்குள் நுழைந்தனர் .
மகன்கள் இருவரையும் கண்ட தந்தை சந்தோஷ மிகுதியால் எழுந்து உட்கார்ந்தார் . வேட்டை எளிதாக இருந்ததா? என்னென்ன மிருகங்களை வேட்டையாடினீர்கள் ? என்று கேட்டார் .
சிறியவன் தான் முயல் வேட்டையாடிய பிரதாபங்களை எடுத்துச் சொன்னான் .தான் அம்பெய்து கொன்ற முயலையும் தந்தையிடம் காட்டினான் .
ஆனால் தந்தையின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை .
" பெரியவனே ! நீ ஏன் வெறுங்கையோடு வந்திருக்கிறாய்? உன் கையிலிருக்கும் வேல் இரத்தம் தோய்ந்து காணப்படுகிறது . காட்டிலே என்ன நடந்தது? "
பெரியவன் யானையுடன் போரிட்ட சம்பவத்தை எடுத்துச் சொன்னான் . அது தப்பி ஓடிய விவரத்தையும் எடுத்துச் சொன்னான் .
அதைக்கேட்ட தந்தை ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார் . கட்டிலைவிட்டு மெதுவாக எழுந்துவந்து தன் மகனைக் கட்டித் தழுவிக்கொண்டார் .
இந்தக் காட்சியைக்கண்ட தம்பி , " என்னப்பா ! வெறுங்கையோடு வந்த அண்ணனைக் கட்டித்தழுவி ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறீர்கள் ; ஆனால் முயல் வேட்டையாடிவிட்டு வந்த என்னைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள் ! ஏனப்பா இந்த ஓரவஞ்சனை ?
சின்னவனே ! கோபம் வேண்டாம்; நான் சொல்வதைப் பொறுமையாகக் கேள் ! மான் , முயல் போன்ற விலங்குகள் எல்லாம் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவை . அவற்றை வேட்டையாடுவதுவும் மிகவும் எளிது . அவைபோன்ற சின்ன மாக்களை அதாவது சிறிய விலங்குகளை சின்னஞ்சிறு சிறுவர்கள்கூட எளிதில் அம்புஎய்தி கொன்றுவிடுவார்கள் . ஆனால் பெரிய மாக்களை அதாவது சிங்கம் , புலி , யானை போன்ற பெரிய விலங்குகளை வேட்டையாடுவதற்கு கையில் ஆயுதம் மட்டும் இருந்தால் போதாது ; வீரமும் நெஞ்சில் துணிவும் இருக்கவேண்டும் .அந்த வீரமும் , துணிவும் உன் அண்ணனிடம் உள்ளது . அவன் யானையைக் கொல்லவில்லை என்றாலும் அந்தத் துணிவும் , வீரமும் எல்லோருக்கும் வருமா ? நீ யானையைக் கண்டவுட,ன் ஓடத்தானே செய்தாய் !
உன் அண்ணன் அடைந்தது தோல்வி அல்ல ; நீ பெற்ற வெற்றியைவிட அவன் அடைந்த தோல்விக்கு மதிப்பு அதிகம் . வார்டு மெம்பர் தேர்தலில் பெறுகின்ற வெற்றியைவிட MP தேர்தலில் சில நூறு ஓட்டுகள் வித்தியாசத்தில் ஒருவன் அடைகின்ற தோல்விக்கு மதிப்பு அதிகம் .எனவே இனிமேல் நீயும் சின்ன மாக்களை வேட்டையாடுவதை விட்டுவிட்டு பெரிய மாக்களை வேட்டையாட கற்றுக்கொள் ! " என்றார்.
" சரிப்பா ! என்று சொல்லி தம்பி தலை குனிந்தான் .
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது .
என்பது ஐயனின் வாக்கு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: சின்னமா !
சின்னமாக்களை வேட்டையாட வேண்டாம் என்கிறீர் !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சின்னமா !
பிடித்து வைத்தால்தான் பிள்ளையாரு. வீசி எரிந்தால் சாணிங்க>>>>>>>>>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Similar topics
» தாஜ்மஹால் காதலின் சின்னமா.....?
» ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா?
» பெரிய மார்பகங்கள் அவமானச் சின்னமா? அளவை சிறிதாக்க அறுவை சிகிச்சையை நாடும் பெண்கள்
» ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா?
» பெரிய மார்பகங்கள் அவமானச் சின்னமா? அளவை சிறிதாக்க அறுவை சிகிச்சையை நாடும் பெண்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|