புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_m10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_m10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_m10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_m10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_m10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10 
3 Posts - 2%
jairam
கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_m10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10 
2 Posts - 1%
சிவா
கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_m10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10 
1 Post - 1%
Manimegala
கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_m10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10 
1 Post - 1%
Poomagi
கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_m10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_m10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_m10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_m10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10 
16 Posts - 4%
prajai
கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_m10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_m10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10 
7 Posts - 2%
jairam
கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_m10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10 
4 Posts - 1%
Jenila
கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_m10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_m10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10 
3 Posts - 1%
Rutu
கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_m10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_m10கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...!


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 03, 2017 4:45 pm

‘கோபல்ஸ்’ (Goebbels), வரலாற்றின் பக்கங்களை இருள் சூழவைத்த ஹிட்லரின் பரப்புரையாளன்; எந்தப் பொய்யையும் நயமாகச் சொல்லி, மக்களை நம்பவைக்கும் வித்தை அறிந்தவன்; ஒரு கருத்தியலை, மெல்லமெல்ல மக்களிடம் திணித்து... அதை, பொதுக் கருத்தாக்கி... அந்தக் கருத்தைச் சுற்றியே மக்களை உரையாடவைப்பவன்; பெரும் தந்திரக்காரன். அவன், பிரசாரத்துக்காக 19 யுக்திகளை வகுத்துச் சென்றான். அதை, அப்படியே சுவீகரித்துக் கொண்டு... அ.தி.மு.க பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா, மிகத் தந்திரமாக காய்களைக் கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

சசிகலா

பிரசாரத்துக்கு கோபல்ஸின் யுக்திகளும்... சசிகலாவின் நகர்வுகளும்!

கோபல்ஸ் வகுத்த சில பிரசார யுக்திகளை இங்கு பகிர்கிறேன். இதை, அப்படியே உங்களது இடது மூளையில் படரவிட்டுவிட்டு... சசிகலாவின் அரசியல் நகர்வுகளையும், அதனுடன் பின்னப்பட்டிருக்கும் சொற்களையும் உற்றுநோக்குங்கள்... பகுப்பாய்வு செய்யுங்கள்!

கோபல்ஸ்: ‘‘ஒரு பொய்யைத் திரும்பத்திரும்ப மக்களிடம் சொல். வேறுவேறு உணர்வு நிலைகளிலிருந்து சொல். அந்தப் பொய், வெறும் வார்த்தைகளால் மட்டும் கட்டமைக்கப்பட்டிருக்க கூடாது. உணர்வுகளால் அது, கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லை, நாம் சொல்வது பொய்யென்று எதிராளிகள் நிறுவ வேண்டுமென்றால், அந்த உணர்வுகளை கடந்து வரவேண்டும்.’’

சசிகலா: ‘அ.தி.மு.க-வில்.... சசிகலாவை தவிர்த்து பொதுச் செயலாளர் பொறுப்புக்கு தகுதி உடையவர் யார்...?’ என்பது ஒரு வாதம். “அ.தி.மு.க என்ன, தேசத்துக்குச் சுதந்திரம் வாங்கித் தந்த தியாகக் கட்சியா... அதன் கரங்கள் என்ன கறை படியாததா... ஏன் இவ்வளவு விவாதம்? அந்தக் கட்சிக்கு அவர்தான் பொருத்தமானவர்... சசிகலாவே பொதுச் செயலாளர் ஆகிவிட்டுப் போகட்டுமே...’ என்பது இன்னொரு வாதம். அதாவது, 100-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், 40-க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள கட்சியில், சசிகலாவைத் தவிர வேறு யாரும் தகுதியானவர்கள் இல்லை என்ற பிம்பம் முதலில் கட்டமைக்கப்பட்டது. இந்தப் பிம்பத்தை நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்றால், ‘அவர் தன் வாழ்க்கையையே ஜெயலலிதாவுக்காகத் தியாகம் செய்தார்’ என்ற அரணை கடந்துச் செல்ல வேண்டி இருந்தது. நடுநிலையாளர்கள் கேட்ட நியாயமான கேள்வியை முறையாக அணுகாமல், உணர்ச்சி வசப்படவைக்கும் இந்த வார்த்தைகளையே பதிலாக முன்வைத்தார்கள்.

சரி... பொதுச் செயலாளர் என்பது அவர்கள் கட்சியின் முடிவு. இது, தமிழக மக்களை நேரடியாகப் பாதிக்கப்போவதில்லை. ஆனால், இந்தப் பிரசார யுக்தி கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து முதல்வர் பதவியை மையம்கொள்ளத் தொடங்கி இருக்கிறது. இப்போது... அவர்களின் வாதம், “ஜெயலலிதா உடனே இருந்து அரசியல் மற்றும் நிர்வாகத்தைப் பயின்றவர், சசிகலா. ஜெயலலிதா எந்த முடிவையும் சசிகலாவைக் கேட்காமல் எடுக்க மாட்டார். ஜெயலலிதாவைப் பார்க்கச் சென்றீர்கள் என்றால்கூட... ‘சசிகலாவைப் பார்த்தீர்களா’ என்று கேட்பார்’’ என்பது.

கோபல்ஸ்: ‘‘நாம் விரும்பும் கருத்து, மரியாதைக்குரிய நபர்கள் மூலம் சொல்லப்படுபவை. அந்த மரியாதை, பொய்யுக்கு அரணாக நிற்கும். மெல்ல அந்தக் கருத்தை அங்கங்கு பேசவைத்து, ‘ஆம்... வேறு வாய்ப்பில்லை’ என்ற மனநிலையை உண்டாக்கு!’’

சசிகலா: ‘சசிகலாதான் பொதுச் செயலாளர்... சசிகலாதான் முதல்வர் பொறுப்புக்கு தகுதியானவர்’ என்ற வாதமெல்லாம் முதலில் தொடங்குவது தம்பிதுரையிடமிருந்துதான். தம்பிதுரை பெரிய ஊழல் குற்றச்சாட்டுகளில் எல்லாம் சிக்காதவர்; பாராளுமன்ற துணை சபாநாயகராக இருப்பவர். அவரிடமிருந்து தொடங்கும் வாதத்தை ஒன்றன்பின் ஒருவராக வழிமொழியத் தொடங்குகிறார்கள். இறுதியில், ‘ஆம்... வேறு வழியில்லை’ என்ற மனநிலையில் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்.

கோபல்ஸ்: சரியான நேரத்தில் காய்களை நகர்த்து!

சசிகலா: எம்.ஜி.ஆர் இறந்து சில தினங்களில்... ஜெயலலிதா, நடராஜனிடம் சொன்னாராம்... “நான் முதல்வராக வேண்டும்” என்று. அதற்கு நடராஜன், “எதையும் எடுத்தோம்... கவிழ்த்தோம் என்று செய்ய முடியாது. ஆட்சியை எப்போது வேண்டுமானாலும் கைப்பற்றிக் கொள்ளலாம். முதலில், கட்சியைக் கைப்பற்ற வேண்டும். கட்சி கட்டுக்குள் வந்தால்... ஆட்சியும் வரும்” என்றாராம். வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. சசிகலா அவசரப்படவில்லை. முதலில் கட்சியைக் கட்டுக்குள் கொண்டுவந்தார். இப்போது நேரம் கனிந்துவிட்டது. அதனால் தம்பிதுரை சொல்கிறார், “கட்சியும், ஆட்சியும் வெவ்வேறு மனிதர்கள் கையில் இருப்பது மாநிலத்துக்கு நல்லதல்ல” என்று.

இருளிலிருந்து, பேரிருளுக்கு!

“ஒப்பீடெல்லாம் சரிதான். இது அனைத்துக் கட்சிக்கும் பொருந்தும்தானே...? சசிகலாவுக்கு ஒரு வாய்ப்புத் தந்தால்தான் என்ன...?” நிச்சயம்... இது ஜனநாயக நாடு. இந்திய அரசியலமைப்பு வகுத்த கோட்பாட்டின்படி வென்று வருபவர்கள் அனைவரும் ஆட்சி செய்யலாம்தான்... மறுக்கவில்லை. ஆனால், அது நம்மை இருளிலிருந்து, பேரிருளுக்கு அழைத்துச் செல்வதாக இருக்கக் கூடாது.

ஜெயலலிதா மீது அனைவரும் வைத்த குற்றச்சாட்டு, அவர் ஏதேச்சையாகச் செயல்படுகிறார் என்பதாகும். ஜெயலலிதா பாதையில் பயணிப்பதாகச் சொல்லும் சசிகலா, தெளிவாக அதே வழிமுறையையே பின்பற்றுகிறார். டிசம்பர் 30-ம் தேதி ஜெயலலிதா நினைவிடத்தைப் பார்த்துவிட்டு வந்து, அவர் வெளியிட்ட அறிக்கையில்... அவர் பெயரைத் தவிர, வேற யார் பெயரும் இல்லை. அந்த நிகழ்வில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்துகொண்டார் என்பதை நினைவில்கொள்க!

அதே நிகழ்வின்போது... அவர் சென்று திரும்புவற்காக, சென்னையின் மையச் சாலையில் ஏறத்தாழ இரண்டு மணி நேரம் போக்குவரத்து முடக்கப்பட்டிருந்தது. சசிகலா தமிழக முதல்வர் எல்லாம் இல்லை... ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் மட்டுமே என்பதை இப்போது நினைவில்கொள்க!

இவை, இரண்டும் தமிழக மக்கள் விரும்பாத ஜெயலலிதாவின் குணங்கள். ஆனால், இதைத்தான் சசிகலா முதலில் சுவீகரித்துக் கொண்டிருக்கிறார்.

அ.தி.மு.க அதிஉயர் சித்தாந்தத்தின்படி, ஜெயலலிதா உடன் இருந்தது வேண்டுமானால்... சசிகலா பொதுச் செயலாளர் ஆவதற்கு போதுமான தகுதியாக இருக்கலாம். ஆனால், தமிழகத்தை ஆள இந்தக் தகுதி மட்டும் போதாது. மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். அதனைப் பெறாமல்... எங்களிடம் போதுமான சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று கோபல்ஸின் தந்திரத்தை மட்டுமே நம்பி... காய்களை நகர்த்துவார்களாயின், அது நிச்சயம் தமிழக மக்களுக்கு பேரிருள் நோக்கியப் பயணமாகத்தான் இருக்கும்!

நன்றி - விகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 03, 2017 5:59 pm

கோபாலபுரத்து கோயபல்ஸ் என ஒருவர் அறியப்பட்டார்.
இப்போது இவரை எப்பிடி அழைப்பது ?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jan 03, 2017 6:24 pm

ஜெயலலிதாவின் குணங்களை சுவீகரிப்பதில் தவறில்லை ; ஆனால் அவரது வீடு , கார் , அவர் உட்கார்ந்த நாற்காலி , அவர் பயன்படுத்திய பேனா ஆகியவற்றை சுவீகரிப்பதற்கு சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை !




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 03, 2017 6:38 pm

நானில்லை என்றால் அவர்களுக்கு இதெல்லாம் கிடைத்திருக்காது என்று ஒரு நாள் சொல்லுவார்கள் பாருங்கள்.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jan 03, 2017 6:45 pm

சொல்லலாம் ; ஆனால் ஒருவருக்கு வாரிசு இல்லையென்றால் , அவரது சொத்துக்கள் , இரத்த உறவுகளுக்குத்தானே சொந்தம் ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Tue Jan 03, 2017 7:46 pm

மிக அருமையான பகிர்வு சூப்பருங்க




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 03, 2017 8:03 pm

M.Jagadeesan wrote:சொல்லலாம் ; ஆனால் ஒருவருக்கு வாரிசு இல்லையென்றால் , அவரது சொத்துக்கள் , இரத்த உறவுகளுக்குத்தானே சொந்தம் ?
மேற்கோள் செய்த பதிவு: 1230473

சட்டம் அதைத்தான் சொல்லுகிறது.

( சட்டம் என்பது ஒரு இருட்டறை .
அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு .
அது ஏழைக்கு எட்டாத விளக்கு என்று
அன்று அறிஞர் அண்ணா அவர்கள் கூறியது
நினைவுக்கு வருகிறது )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக