ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொல்லப்பட்ட கடவுள்

3 posters

Go down

கொல்லப்பட்ட கடவுள் Empty கொல்லப்பட்ட கடவுள்

Post by maheshpandi Mon Jan 02, 2017 12:01 pm

கொல்லப்பட்ட கடவுள்

நான் நானாய்
எனக்குள் ஒரு பயணம்
என்னைத்தேடி
விதும்பல்களும் வினாக்களும்
வியாபித்திருக்கின்றன என் நெஞ்சில்

என்னைப் புறந்தள்ள
இடுப்புவலி பொறுத்த தாயும்
பொடதி தள்ளி புறக்கணித்தது ஏனோ?

அண்ணன் தம்பியும் அக்கா தங்கையும்
என்னை அடித்து நொறுக்கி அவமானப்படுத்தியது ஏனோ?
என் உணர்வுகளை பந்தாடும் நிகழ்வில்
அம்மாவும் இணைந்து கொண்டாள்
அப்பாவும் தவறாமல் கலந்து கொண்டார்

ஒட்டு உறவும்,
ஓயாமல் உப்பு, புளி, மிளகென்று
கடன் கேட்டு நிற்கும் அண்டை வீட்டுக் கனகமும்
என் அறை தேடி வந்தால்
கண்ணாம்மூச்சி ஆட்டம் தொடங்கிவிடும்
என் கழிவறை இருப்பறை ஆகிவிடும்
இதுவரை யாரும் என்னைக் கண்டுபிடித்தில்லை
தொலைந்து விட்டேன் நான்
என்னைத் தேடியே என்னுள்

அற்பப் பிராணிகளுக்கும்
என் வீட்டில் அடுக்களை வரை இடமுண்டு
செல்லப் பிராணிகளும் சுதந்திரமாய் சுற்றித் திாிவதுண்டு
நான் யார் அவ்வீட்டில் யாரும் மதிக்காதொரு பொருளாய்

தலைவாாி புஉச்சூட்டி நெற்றிச்சுட்டிட்டு
கைவிரல்களை நெறித்து சொடக்கிட்டு
கண்திருஷ்டி கழித்து
நெஞ்சூட்டி வளர்த்த தாயே!
நான் உண்ணும் உணவில் விஷம் வைத்தாய் நீயே

என் பெயர் எனக்கு மறந்துவிட்டது
என்னை நானே மறந்து விட்டபொழுது
என் பெயர் மட்டும் மறந்தது பெரும் தவறல்ல
ஆயிரம் பெயர் சொல்லி அழைக்க
ஆடவர் இருக்கும் வரையில்

ஏய் அவ்வைக் கிழவியே
என்னை நீ என்ன சொன்னாய்
ஒச்சமான பிறவியென்றா?
சாதி, மத, மொழி என்ற கணத்த கட்டுக்களையும்
உயிர்த்தலத்தில் நுழையும் ஆண்குறியினையும்
எங்களின் உணர்விற்காக பிய்த்தெறிந்த நாங்கள்
ஆண் உடலின் எச்சமான பிறவிதான்.

தொல்காப்பியரே வாரும்
எங்களின் பெயர்களை
உயர்திணைப்பெயர் மயக்கத்தில்
சேர்ப்பிக்கும் உாிமையை
உங்களுக்கு யார் கொடுத்தது.

எண்ணற்ற கேள்விக்கணைகளே
என் கண்களே கேட்டுக்கொண்டிருந்தது.
உயிர் தொண்டைக்குழிக்கும்
இருதயத்திற்கும் இடையே சடுகுடு ஆடத்தொடங்கியது.

கள்ளிப்பால் கொடுத்து கருத்தம்மாக்களை
வழியனுப்பிய காலம் போனது.
அவர்களினும் மிஞ்சிய எஞ்சிய
எங்களையும் கூட்டிவரச்சொல்லி
எமனிடம் மரணத்தூது வந்தது.

நான் நானாகவே
ஆணும் பெண்ணுமாய்
பிறந்து தவறிழைத்து விடவில்லையே!
என்னை உன்னுள் உந்துத்தள்ளிய
உன் கணவணின் ஜீனில் தான்
எனக்கான உணர்வுகளும் கட்டமைக்கப்பட்டுள்ளது.
உங்களின் இயங்குநீர்ச்சுரப்பி பகிர்வில்
எனக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை செய்தீர்கள்.

அண்ணன் அக்காக்களே இங்கே வாருங்கள்
நீங்கள் மட்டுமென்ன சளைத்தவர்களா என்ன?
முந்திப் பிறந்த நீங்கள்
கருவறையின் ஒட்டுமொத்த ஊட்டச்சத்துக்களையும்
காலிசெய்த தாந்தின்னிகள்

அவசரம் பொறுக்காத அப்பாவே
கருவறை உறுதியடையும் முன்னே
என்னைக் கருமுளையமிட்டது நீயே!
பழிகளை மட்டும் என்மேல் சுமத்திவிட்டு
பாங்காய் நீங்கள் மட்டும் ஒங்கிவிட்டீர்கள்.

உங்கள் பாவங்கள் அனைத்தும்
சிலுவையாய் சுமந்த என்னை
இல்லறச் சிறையிலே அடைத்து சிதைத்து விட்டீர்கள்
மரணிக்கிறேன் நான்.

கொள்ளப்பணத்தையும் வறட்டுக் கௌரவத்தையும் கொண்டு
கொள்ளத் துணித்த செல்வந்தனின் செல்வனாய்.

என்னொருக் கோாிக்கையாவது நிறைவேற்றுங்கள்
உடலெங்கும் மஞ்சளிட்டுக் குளிப்பாட்டி
பொட்டிட்டு புவிட்டு காஞ்சிப்புரப்பட்டிட்டு
என்னைச் சுதையிலிடுங்கள் என் கட்டை வேகட்டும்
பொத்திவச்ச ஆசைகளிட்ட நெஞ்சாங்குழி எாியட்டும்
ஒவ்வொரு நொடியும் மரணிப்பதை விட
ஒரேயடியாய் இறப்பதே மேல் போய்வருகிறேன்.

போய்வருகிறேன் அப்பாவே
இனிமேல் நீங்கள் நெஞ்சம் நிமிர்த்தி நடந்து கொள்ளுங்கள்
நெஞ்சில் ஈரமில்லாமல் மகிழ்ந்து கொள்ளுங்கள்
உடன்பிறப்புகளே! சொத்துப் பகிர்வில் கூடுதல் கணமென்று.

சிவலோகம் பயணித்த ஆத்மா
அர்த்தநாதிஸ்வரா
உன்னையும் கொன்றுவிட்டார்களா
கொல்லப்பட்ட கடவுள்



maheshpandi
maheshpandi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016

Back to top Go down

கொல்லப்பட்ட கடவுள் Empty Re: கொல்லப்பட்ட கடவுள்

Post by T.N.Balasubramanian Mon Jan 02, 2017 2:27 pm

சோகம் தன்னை பின்னி வரைந்த கவிதை .
அருமை .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கொல்லப்பட்ட கடவுள் Empty Re: கொல்லப்பட்ட கடவுள்

Post by maheshpandi Mon Jan 02, 2017 3:26 pm

நன்றி தகைசால் உங்களின் வரவேற்பும் வாழ்த்தும் என்னை உற்சாகப்படுத்துகிறது.
maheshpandi
maheshpandi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016

Back to top Go down

கொல்லப்பட்ட கடவுள் Empty Re: கொல்லப்பட்ட கடவுள்

Post by krishnaamma Mon Jan 02, 2017 7:35 pm

மனம் கனக்கிறது மகேஷ் ! ..அருமையாக இருக்கிறது கவிதை !! ..வாழ்த்துகள் !!! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொல்லப்பட்ட கடவுள் Empty Re: கொல்லப்பட்ட கடவுள்

Post by maheshpandi Wed Jan 04, 2017 12:43 pm

நிர்வாகக் குழுவினர் அவர்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்களது கருத்துரைகள் மேலும் என்னை வளர்த்தெடுக்க உந்துதலாக அமைகிறது.
maheshpandi
maheshpandi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016

Back to top Go down

கொல்லப்பட்ட கடவுள் Empty Re: கொல்லப்பட்ட கடவுள்

Post by T.N.Balasubramanian Wed Jan 04, 2017 1:07 pm

உங்களது அடுத்தப்பதிவில் ,
தமிழில் எழுத்துப் பிழைகள் வராமல் சிறிது கவனமாக பதிவிடவும்.
தட்டச்சு செய்து, முன்னோட்டத்தை, ஒரு முறை படிக்கையில்
எழுத்துப் பிழைகள் உங்கள் கவனத்தை ஈர்க்கும். உடனடியாக அவைகளை மாற்றி
பிழையின்றி பதிவிடவும்.
ஆரம்ப கால பிழைகள்,ஆர்வத்தினால் அனைவருக்கும் ஏற்படுவதே.
ரமணியன்

@maheshpandi


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கொல்லப்பட்ட கடவுள் Empty Re: கொல்லப்பட்ட கடவுள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum