ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொன்னதில் பிடித்தது. (பாடல்)

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சொன்னதில் பிடித்தது. (பாடல்) Empty சொன்னதில் பிடித்தது. (பாடல்)

Post by Guest Fri Dec 30, 2016 12:06 am

சொன்னதில் பிடித்தது.

பேசரிய நவவாயில் பீற்றல் துருத்தி
பெருங்காற்று உள்புகுந்ததால் பேச்சு உண்டாச்சே
ஈசன்நிலை அறியாருக்கு இந்தத் துருத்தி
எரிமண்ணிற் இரையென்றே ஆடாய் பாம்பே!

காய்த்தமரம் அது மிகக் கல்லடி படும்
கன்மவினை கொண்டகாயம் தண்டனை பெறும்
வாய்த்த தவம் உடையவர் வாழ்பவர் என்றே
வஸ்துத் திருவடி தொழுது ஆடாய் பாம்பே!

சூரியனைக் கண்ட பனி தூர ஓடல்போல்
சொந்த பந்தஞ் சிந்தபரி சத்த தலத்தில்
சூரியனைக் கண்டுதரி சித்தே அன்புடன்
அகலாமல் பற்றித் தொர்டந்து ஆடாய் பாம்பே!

- பாம்பாட்டிச் சித்தர் -

(சொல்லப்பட்ட கருத்து பிடித்ததால் பகிருகிறேன்.)
avatar
Guest
Guest


Back to top Go down

சொன்னதில் பிடித்தது. (பாடல்) Empty Re: சொன்னதில் பிடித்தது. (பாடல்)

Post by krishnaamma Fri Dec 30, 2016 12:41 am

சொன்னதில் பிடித்தது. (பாடல்) 3838410834 சொன்னதில் பிடித்தது. (பாடல்) 103459460 சொன்னதில் பிடித்தது. (பாடல்) 1571444738


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சொன்னதில் பிடித்தது. (பாடல்) Empty Re: சொன்னதில் பிடித்தது. (பாடல்)

Post by ayyasamy ram Fri Dec 30, 2016 7:35 am

சொன்னதில் பிடித்தது. (பாடல்) 103459460
-
பாம்பாட்டி சித்தர்


முதன்மை சித்தர்கள் 18 பேரில் ஒருவராவார் .
பாம்பாட்டி சித்தரின் காலம் கி.பி 1200 ஆகும்.
கார்த்திகை மாதம் மிருகசீரிசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்.

கோயம்பத்தூர் அருகில் உள்ள மருதமலை ஸ்ரீ சுப்பிரமணியர்
திருக்கோவில் வளாகத்தில் மூலவர்க்கு சற்று தூரம் தள்ளி
கீழே படிக்கட்டில் இருந்து கீழே சென்றால் பாம்பாட்டி சித்தர்
கோவில் அமைந்துள்ளது .

இந்த இடத்தை பாம்பாட்டி சித்தரின் குகை என்றும் ஜீவசமாதி
என்றும் கூறுவது ஆய்வுக்குரியது . பாம்பாட்டி சித்தர்க்கு
முருகப்பெருமான் மருதமலையில் மருதமரத்தடியில் பெருகும்
மருததீர்த்தம் அளித்து சர்ப்ப ரூபத்தில் காட்சி கொடுத்ததாக
வரலாறு .

மருதமலை முருகர் சன்னதிக்கும் சித்தர்குகைக்கு வழி
உள்ளதாகவும் அதன் வழியே பாம்பாட்டி தினம் முருகப்பெருமானை
தரிசிப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றது.
-
-------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சொன்னதில் பிடித்தது. (பாடல்) Empty Re: சொன்னதில் பிடித்தது. (பாடல்)

Post by T.N.Balasubramanian Fri Dec 30, 2016 10:09 am

மூர்த்தி ,
உறவுகள் புரிந்து கொள்ள ,பாட்டின் பதவுரை கூறலாமே.
பகிர்வுக்கு நன்றி.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சொன்னதில் பிடித்தது. (பாடல்) Empty Re: சொன்னதில் பிடித்தது. (பாடல்)

Post by Guest Fri Dec 30, 2016 7:27 pm

மேலே உள்ள பாம்பாட்டி சித்தரின் பாடல்களையும் வேறு சில பாடல்களையும் சொல்லி உபதேசம் செய்தது அம்மா,கேட்டது நான்.

1.எப்படி துருத்தி வெளிக்காற்றை உள்வாங்கி ஒரு துளை மூலம் வெளியிட்டு நெருப்பை ஒளிவிட்டு எரியச் செய்கிறதோ அது போல் மனிதனின் உடலுமாகும்.
மனிதனின் உடலில் ஒன்பது துவாரங்கள் உள்ளன.அவை ஒழுங்காக இயங்க வேண்டும்.அதற்கு அடிப்படையாக இருப்பது உயிர்வளி ஆகும்.மூச்சை முறையாக கையாள்வதன் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தி இயங்க வைக்க முடியும்.இப்படிக் கட்டுப்படுத்தி ஈசனை உணராத மக்கள், நிலையில்லாத ஆனந்தங்களை தேடி அதனால் மகிழ்ச்சியாக வாழ்வதாக நினைப்பவர்கள், சுடுகாட்டில் எரியும் பிணத்தின் தன்மையை ஒத்தவர்களே.

2.எப்படி காய்த்த மரத்தை நோக்கி கல்லை எறிந்து காய் பழங்களை பறித்தாலும்,அந்த மரம் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாது தொடர்ந்து பழங்களை தருவது போல்,
பிறவிப்பயன் காரணமாய் கண்டனங்களை,வெறுப்புகளை எதிர்கொள்ளும் சிலர், தூய மனதோடு சமூகத் தொண்டு ஆற்றும் மனிதர்கள்,சோதனைகளை கடந்து தொண்டாற்றிக் கொண்டு இறைவனை தொழுது கொண்டு இருப்பார்கள்.எந்த சோதனைகள் கண்டனங்கள் அவர்களை எதுவும் செய்து விடாது.அதைப்பற்றி அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள்.


3.சூரியனைக் கண்டு பனித்துளிகள் மாயமாய் மறைவது போல்,பந்த பாசங்களால் பொய்யான சிற்றின்பங்களால் சூழப்பட்ட மனத்தை இயற்கையாக உள்ள இறைவனை துதிப்பதன் மூலம் மனம் தெளிவடைந்து அந்த மாயத்திரையை ஓட விரட்டி விடலாம்.

avatar
Guest
Guest


Back to top Go down

சொன்னதில் பிடித்தது. (பாடல்) Empty Re: சொன்னதில் பிடித்தது. (பாடல்)

Post by T.N.Balasubramanian Fri Dec 30, 2016 8:16 pm

முழுமை பெற்றது மூர்த்தி .
உங்களுக்கும் உங்கள் தாயாருக்கும் நன்றி .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சொன்னதில் பிடித்தது. (பாடல்) Empty Re: சொன்னதில் பிடித்தது. (பாடல்)

Post by krishnaamma Fri Dec 30, 2016 9:43 pm

மூர்த்தி wrote:மேலே உள்ள பாம்பாட்டி சித்தரின் பாடல்களையும் வேறு சில பாடல்களையும் சொல்லி உபதேசம் செய்தது அம்மா,கேட்டது நான்.

1.எப்படி துருத்தி வெளிக்காற்றை உள்வாங்கி ஒரு துளை மூலம் வெளியிட்டு நெருப்பை ஒளிவிட்டு எரியச் செய்கிறதோ அது போல் மனிதனின் உடலுமாகும்.
மனிதனின் உடலில் ஒன்பது துவாரங்கள் உள்ளன.அவை ஒழுங்காக இயங்க வேண்டும்.அதற்கு அடிப்படையாக இருப்பது உயிர்வளி ஆகும்.மூச்சை முறையாக கையாள்வதன் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தி இயங்க வைக்க முடியும்.இப்படிக் கட்டுப்படுத்தி ஈசனை  உணராத மக்கள், நிலையில்லாத ஆனந்தங்களை தேடி அதனால் மகிழ்ச்சியாக வாழ்வதாக நினைப்பவர்கள், சுடுகாட்டில் எரியும் பிணத்தின் தன்மையை ஒத்தவர்களே.

2.எப்படி காய்த்த மரத்தை நோக்கி கல்லை எறிந்து காய் பழங்களை பறித்தாலும்,அந்த மரம் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாது தொடர்ந்து பழங்களை தருவது போல்,
பிறவிப்பயன் காரணமாய் கண்டனங்களை,வெறுப்புகளை எதிர்கொள்ளும் சிலர், தூய மனதோடு சமூகத் தொண்டு ஆற்றும் மனிதர்கள்,சோதனைகளை கடந்து தொண்டாற்றிக் கொண்டு இறைவனை தொழுது கொண்டு இருப்பார்கள்.எந்த சோதனைகள் கண்டனங்கள் அவர்களை எதுவும் செய்து விடாது.அதைப்பற்றி அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள்.


3.சூரியனைக் கண்டு பனித்துளிகள் மாயமாய் மறைவது போல்,பந்த பாசங்களால் பொய்யான சிற்றின்பங்களால் சூழப்பட்ட மனத்தை இயற்கையாக உள்ள இறைவனை துதிப்பதன் மூலம் மனம் தெளிவடைந்து அந்த மாயத்திரையை ஓட விரட்டி விடலாம்.


மிக்க நன்றி மூர்த்தி !......உங்களுக்கு உங்கள் அம்மா சொன்னார் எனக்கு எங்கள் அப்பா சொன்னார் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சொன்னதில் பிடித்தது. (பாடல்) Empty Re: சொன்னதில் பிடித்தது. (பாடல்)

Post by Guest Sat Dec 31, 2016 5:40 pm

உங்களுக்கு அப்பா சொன்னார்,எனக்கு அம்மா சொன்னார். அப்பா எனக்கு சொல்லமாட்டார்.
காரணம்,என்னைப் போல் அவருக்கும் சில நம்பிக்கைகள் கிடையாது.ஆனாலும் யாருடைய நம்பிக்கையையும் கொச்சைப்படுத்த மாட்டார். வாதிடவும் மாட்டார். அம்மா செய்யும் அனைத்து சமய சம்பந்தமான விழாக்களுக்கும் கூடவே இருந்து உதவி செய்வார்.


புத்தாண்டு - சொன்னதும் கேட்டதும்.

புத்தியுள்ள யெனதைய ரசுவினியாந்தேவர்
புகலவே யான்கேட்ட வரைபாட்டோடும்
கத்தான கலியுகத்து வாழ்க்கையெல்லாம்
காவலரே யாம்கேட்டு நுந்தமாக்காய்
சத்தியமாய் யானுரைத்தே னன்புள்ளானே.


மேடமெனும் ராசியாம் மதனிற் கேளு
மேலான யசுவினி முதலாம்பாதம்
குலவியே கதிரவந்தான் வந்துதிக்க
வருசபுருசன் அவதரிப்பா னென்றே
பரிவுடன் உலகிற்க்கு நீசாற்றே.

- அகத்தியர் -

சுலபமாக புரிந்து கொள்ள முடியும் என்பதால் உரை தரப்படவில்லை.
avatar
Guest
Guest


Back to top Go down

சொன்னதில் பிடித்தது. (பாடல்) Empty Re: சொன்னதில் பிடித்தது. (பாடல்)

Post by T.N.Balasubramanian Sun Jan 01, 2017 12:31 pm

[quote="மூர்த்தி"]உங்களுக்கு அப்பா சொன்னார்,எனக்கு அம்மா சொன்னார். அப்பா எனக்கு சொல்லமாட்டார்.
காரணம்,என்னைப்  போல்  அவருக்கும்  சில நம்பிக்கைகள் கிடையாது.ஆனாலும் யாருடைய நம்பிக்கையையும் கொச்சைப்படுத்த மாட்டார். வாதிடவும் மாட்டார். அம்மா செய்யும் அனைத்து சமய சம்பந்தமான விழாக்களுக்கும் கூடவே இருந்து உதவி செய்வார்.


நானும் உங்கள் தந்தை போன்றே. பொதுவாக ஆண்கள் லாஜிக்களாக சில விஷயங்கள் பார்க்கிறார்கள். பெண்கள், பல விஷயங்களை, அவர்கள் அம்மா பாட்டி சொன்னதையே இன்னும் கடைபிடிக்கிறார்கள்.
அந்த காலத்தில் இருந்த கோவில்களும் அவைகளில் இருந்த சாந்நித்யம் இப்போதும் இருக்கிறதா என்பது சந்தேகம். கோவில்கள் வியாபார ஸ்தலங்கள் ஆகிவிட்டன. VIP க்கு தனி சலுகை, மற்றவர்களுக்கு ஏனோதானோ என்ற உபசரிப்பு. கோவில்களில் போனாலும் அங்கே இருக்கும் கும்பல்கள் குடும்ப மனஸ்தாபங்களை வெளியிட்டு தன் பக்க நியாயத்தை நிரூபிக்க முயற்சிக்கிறார்கள்.
மனதை ஒரு நிலைப் படுத்திஆண்டவனை த்யானம் செய்யாமல்சுய கவலைகளை போக்க, வம்பு பேசி  கோயில்களை  ஒரு வடிகாலாக வைத்துக்கொண்டு உள்ளனர்.
மனைவி விரும்பும் கோவில்களுக்கு கூட போவதும் உண்டு.
என்னைப் பொறுத்தவரையில், எங்கள் வீட்டு பூஜை அறையே, எனக்கு கோயில் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சொன்னதில் பிடித்தது. (பாடல்) Empty Re: சொன்னதில் பிடித்தது. (பாடல்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum