ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருமான வரி உச்ச வரம்பு ரூ.4 லட்சமாக உயர்த்த பரிசீலனை:

2 posters

Go down

வருமான வரி உச்ச வரம்பு ரூ.4 லட்சமாக உயர்த்த பரிசீலனை: Empty வருமான வரி உச்ச வரம்பு ரூ.4 லட்சமாக உயர்த்த பரிசீலனை:

Post by ayyasamy ram Mon Dec 26, 2016 7:29 am

தற்போது பட்ஜெட் தயாரிக்கப்பட்டு வரும் நேரத்தில் வழக்கம்
போல் நடுத்தர குடும்பத்தையும், சம்பளதாரர்களையும்
குறிவைத்து வருமானவரி உச்சவரம்பு உயரப்போகிறது என்ற
செய்தி வெளியாகி இருக்கிறது. வருமான வரி உச்ச வரம்பு
தற்போது ரூ.2.50 லட்சமாக உள்ளது. 60 வயதை தாண்டிய
முதியோருக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பு
ரூ.3 லட்சமாகவும் உள்ளது.

80 வயதை தாண்டியவர்களுக்கு ரூ.5 லட்சம் வரையும் வருமானம்
வரை வரி கிடையாது என்ற நிலை உள்ளது.

2017ல் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் இந்த உச்ச வரம்பு
ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.
இது அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்ட
தகவல் அல்ல. இருப்பினும் ரூபாய் நோட்டு பிரச்னையில் கொந்தளித்து
போய் உள்ள நடுத்தர குடும்பத்தினரை குளிர்விக்கும் வகையில்
மத்திய அரசால் பரப்பப்பட்ட தகவலாக இருக்கலாம் என்ற சந்தேகம்
எழுந்துள்ளது.

ஏனெனில் 125 கோடிக்கும் மேற்பட்ட இந்திய மக்கள் தொகையில்
தற்போது வெறும் ஒரு சதவீதம் பேர் தான் வருமானவரி கட்டுகிறார்கள்.

இதை அதிகரிக்கத்தான் மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தனது
வலையை பெரிதாக விரிக்கிறது. ஆனால் பெரு முதலாளிகள் தப்ப
வங்கி கடன், நஷ்ட கணக்கு உள்பட பல்வேறு வழிகளை காட்டிவிட்டு
சம்பளதாரர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே குறி
வைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு தான் விடிவு காலம் எப்போது
என்று தெரியவில்லை.

ஒவ்வொரு முறை பட்ஜெட் வெளிவரும் போது அரசு ஊழியர் மற்றும்
மாதச்சம்பளம் வாங்கும் ஊழியர்களின் பெரும்பாலான கண்கள்
வருமானவரி உச்சவரம்பு குறித்த அறிவிப்பை நோக்கியே இருக்கும்.
அதன் உச்சவரம்பு உயர்ந்தால் தங்கள் மாத பட்ஜெட்டில் எவ்வளவு
லாபம் என்ற கணக்கு உடனே மனக்கணக்கில் ஓடும்.

இந்த முறை பட்ஜெட் ஜனவரி கடைசி அல்லது பிப்ரவரி
1ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
தற்போது பட்ஜெட் தயாரிப்பு பணிகள் மத்திய நிதியமைச்சகத்தில்
தீவிரமாக நடந்து வருகின்றன.

இப்போது எவ்வளவு

* ஆண்டு வருவாய் ரூ.2.5 லட்சம் வரை இருந்தால்,
வருமான வரி கிடையாது.

* ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் இருந்தால்
மீது 10 சதவீத வரி விதிக்கப்படும்.

* ரூ.5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையில் ஆண்டு வருவாய் இருந்தால்
20 சதவீத வரி விதிக்கப்படும்.

* 10 லட்சத்துக்கு மேல் வருவாய் இருந்தால், அதன் மீது, 30 சதவீத
வருமான வரி விதிக்கப்படும்.

1950 முதல் இன்று வரை

2006-07 பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ஆண்களுக்கு
ரூ.1 லட்சம், பெண்களுக்கு 1.35 லட்சம், மூத்த குடிமக்களுக்கு
ரூ.1.85 லட்சம் என இருந்தது.

2009-10ல் ஆண்கள், பெண்கள், மூத்த குடிமக்களுக்கான
வருமான வரி வரம்பு ரூ.1.6 லட்சம், ரூ.1.9 லட்சம், ரூ.2.4 லட்சம்
என இருந்தது.

இது பின்னர் ரூ.1.8 லட்சம், ரூ.1.9 லட்சம், ரூ.2.5 லட்சம் என
இருந்தது. தற்போது அனைவருக்கும் பொதுவாக ரூ.2.5 லட்சம்
என்று மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

வருமானவரி பிடித்தம் (Tax Deduction at Source, TDS)
என்பது வருமானத்திலிருந்து குறிப்பிட்ட சதவீத தொகையை
முன்கூட்டியே வருமான வரியாகப் பிடித்தம் செய்வது.
கூடுதலாக பிடித்தம் செய்து இருந்தால் அதற்குரிய படிவத்தை
நிரப்பி வருமானவரித்துறைக்கு அனுப்பி திரும்ப பெறலாம்.
வருமான வரி சட்ட விதி எண் 114 (4)-இன்படி, யாரிடமிருந்து
வருமானவரி பிடித்தம் (TDS) செய்யப்பட்டதோ, அவர்களுக்கு
வருமானவரிப் பிடித்த சான்றிதழ் தவறாது வழங்க வேண்டும்.
வருமானவரி பிடித்தம் செய்து அதனை வருமான வரித்துறைக்கு
கட்டாமல் இருப்பின் வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படும்
அல்லது சிறைத்தண்டனைக்கு ஆளாக நேரிடும்.

ஐ.டி பார்வையில் சிக்கும் நபர்கள்?

வருடத்துக்கு ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக பரிவர்த்தனை,
ஒரே நாளில் ரூ.50,000-க்கும் அதிகமாக அடிக்கடி டெபாசிட்,
வருடத்துக்கு ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக கிரெடிட் கார்டுக்குக்
கட்டணம் கட்டியிருந்தால், வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்றாலும்,
ஆடம்பரமாக திருமணம் செய்தாலும், ஏன் வெளிநாட்டுக்குப் படிக்கச்
சென்றாலும் வருமானவரித்துறை கண்களில் இருந்து நீங்கள் தப்ப
முடியாது.

* 125 கோடி இந்தியர்களில் வருமானவரி படிவம் தாக்கல் செய்யும்
நபர்கள் வெறும் 5.1 கோடி பேர்தான். சதவீதம் 4 மட்டுமே.
ஆனால் வரி கட்டுபவர்கள் 1.3 கோடி பேர். 1 சதவீதம் மட்டுமே.

* 1.7 கோடி பேர் வருமானவரி படிவம் தாக்கல் செய்கிறார்கள்.
ஆனால் வரிகட்டுவதில்லை

* இந்தியாவில் வருமானவரி மூலம் வசூலிக்கப்படும் ஒட்டுமொத்த
தொகையில் 53 சதவீதம் மகாராஷ்ட்டிரா(39.9), டெல்லி (13.1) ஆகிய
மாநிலங்களில் இருந்து மட்டும் கிடைக்கிறது.

* ரூ.1 கோடிக்கு மேல் வரிகட்டுவோர் 5430 பேர். ரூ.1 கோடி முதல்
ரூ.5 கோடி வரை வரிகட்டுவோர் 5000 பேர். இவர்கள் மூலம் அரசுக்கு
ரூ.8907 கோடி வரி கிடைக்கிறது.

* ரூ.100 கோடிக்கு மேல் வரி கட்டுவோர் 3 பேர். இவர்களிடம் இருந்து
அரசுக்கு ரூ. 437 கோடி வரி வருவாய் கிடைக்கிறது.

* 2000-01ல் இந்தியாவின் வரி வருவாய் 31,764 கோடிதான்.
2015-16ல் 2.86 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
* எம்பிக்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் இருந்து பிடித்தம்
செய்யப்படும் வரி மட்டும் ரூ.178 கோடி.

—————————–தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வருமான வரி உச்ச வரம்பு ரூ.4 லட்சமாக உயர்த்த பரிசீலனை: Empty Re: வருமான வரி உச்ச வரம்பு ரூ.4 லட்சமாக உயர்த்த பரிசீலனை:

Post by சிவனாசான் Mon Dec 26, 2016 10:35 am

நல்ல யோசனைதான் நான்கு லட்சம் வரை விலக்கு அளித்தால் பலநடுத்தர வர்க்கத்தினர் பலன் பெறுவர்.சரியான ஆய்வு தேவை. ஊழலை ஒழித்தாலே>>>>>>>>>>>>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum