புதிய பதிவுகள்
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துணிச்சலுக்கு ஒரு விருது! Poll_c10துணிச்சலுக்கு ஒரு விருது! Poll_m10துணிச்சலுக்கு ஒரு விருது! Poll_c10 
5 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துணிச்சலுக்கு ஒரு விருது! Poll_c10துணிச்சலுக்கு ஒரு விருது! Poll_m10துணிச்சலுக்கு ஒரு விருது! Poll_c10 
47 Posts - 65%
heezulia
துணிச்சலுக்கு ஒரு விருது! Poll_c10துணிச்சலுக்கு ஒரு விருது! Poll_m10துணிச்சலுக்கு ஒரு விருது! Poll_c10 
21 Posts - 29%
mohamed nizamudeen
துணிச்சலுக்கு ஒரு விருது! Poll_c10துணிச்சலுக்கு ஒரு விருது! Poll_m10துணிச்சலுக்கு ஒரு விருது! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
துணிச்சலுக்கு ஒரு விருது! Poll_c10துணிச்சலுக்கு ஒரு விருது! Poll_m10துணிச்சலுக்கு ஒரு விருது! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துணிச்சலுக்கு ஒரு விருது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82356
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 23, 2016 7:12 am

துணிச்சலுக்கு ஒரு விருது! 68dlcjHQLWTSwiWzWSdT+m23
-
ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் நெருக்கடியான சூழ்நிலையில் தைரியமாக துணிச்சலாகப் பணிபுரியும் பத்திரிகையாளர்களைத் தேர்ந்தெடுத்து கவுரவித்து வருகிறது அனைத்துலக பத்திரிகையாளர் பாதுகாப்புக் குழு (Committe to Protect Journalists) அந்த வகையில், இந்தியா, எகிப்து, துருக்கி மற்றும் எல்சால்வடார் ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்த நான்கு பத்திரிகையாளர்களுக்கு, இந்த விருது 2016 நவம்பர் 22-இல் நியூயார்க் நகரில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது.

அதில் இந்தியாவின் சார்பாக மனித உரிமை மீறல்களை எதிர்த்து செய்திகளை வெளியிடுவதன் மூலமாக ஓர் ஊடகப் போராட்டத்தை நடத்தி வந்த மாலினி சுப்பிரமணியனுக்கு இந்த “அனைத்துலக பத்திரிகை சுதந்திர விருது’ வழங்கப்பட்டுள்ளது.
“ஸ்க்ரோல் இன் ஆன்லைன்’ செய்தி தளத்தில் கட்டுரைகள் எழுதி வருபவர் இவர். அவரே சொல்கிறார்:
“சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தார் பகுதி மாவோயிஸ்ட் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இடையே அடிக்கடி மோதல்.. துப்பாக்கி சண்டை… தாக்குதல்கள்.. கொலைகள்… என கலவர பூமியாக இருந்து வருகிறது. மனித உயிர்களைக் காவு வாங்கும் பிரச்னைக்குரிய இடமான காஷ்மீர் செய்திகளில் வரும் அளவிற்கு, பஸ்தாரில் அரங்கேறும் தாக்குதல்கள் குறித்து வெளி உலகிற்கு தெரிய வருவதில்லை.

பஸ்தார் சுற்றுவட்டாரத்தில் நடைபெறும் காவல்துறை மற்றும் பாதுகாப்பு குழுக்களின் மனித உரிமை மீறல்கள், அத்துமீறல்கள், பெண்கள் மீதான வன்முறை, வயதுக்கு வராத சிறிய வயதினரை சிறையில் அடைத்தல், பள்ளிகளை மூடுதல், என்கவுண்டர்கள் என்று பல உண்மைகளை எனது கட்டுரைகள் மூலம் வெளியுலகிற்கு கொண்டு வந்தேன். விளைவு.. பல இடங்களிலிருந்தும் மிரட்டல்கள் பயமுறுத்தல்கள் வந்தன. நான் அவற்றை சட்டை செய்யாமல் அங்கே நடக்கும் நிகழ்வுகளை விவரித்து எழுதி வருகிறேன். அதற்காகப் பலமுறை காவல்துறையினர் என்னிடம் விசாரணை நடத்தினார்கள்… மிரட்டவும் செய்தார்கள்.

கண்காணிப்பு குழு என்று கூறிக்கொள்ளும் சிலர், கொலை செய்துவிடுவோம்.. என்று மிரட்டினார்கள். பின்னிரவு நேரங்களில் நான் தங்கியிருந்த வீட்டுக்கு முன் வந்து மிரட்டல் கோஷங்களை எழுப்புவார்கள். என் வீடு நோக்கி கற்களை வீசி திகில் சூழலை உருவாக்குவார்கள்.. எனது காரின் கண்ணாடிகளை கல் வீசி நொறுக்கியிருக்கிறார்கள். நான் இல்லாத நேரத்தில் குடியிருந்த வீட்டை சேதப்படுத்தியுள்ளனர்.

எப்போது என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத மர்மச் சூழ்நிலை அந்தப் பகுதியில் ஏற்பட்டுவிட்டது. என்னைத் தொடரும் பிரச்னைகள் என் மகளையும் பாதிக்கும்… அக்கம் பக்கம் இருப்பவர்களையும் பாதிக்கும் என்பதால் வீட்டைக் காலி செய்து விட்டு பஸ்தார் பகுதியை விட்டு வெளியேறினேன். நான் அந்த இடத்தை விட்டு வந்ததும், அங்கு தங்கியிருந்த ஒரு சில பத்திரிகையாளர்கள், மனித உரிமைக்காக குரல் கொடுக்கும் வழக்கறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களும் அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர்… இதுதான் சத்தீஸ்கரில் உள்ள நிலை.

இந்நிலையில், அனைத்துலக பத்திரிகையாளர் பாதுகாப்பு குழு வழங்கியிருக்கும் இந்த விருதை பெறுவதில் அளவிட முடியாத பெருமை, மகிழ்ச்சி அடைகிறேன். என்னை அச்சுறுத்தி பயமுறுத்தி கலவரப்படுத்தி அந்தப் பகுதியை விட்டு விரட்டியது எனக்குள் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை எனக்கு நேர்ந்த அவமானமாகக் கருதுகிறேன்.

பஸ்தார் பகுதியில் வாழும் அப்பாவி ஆதிவாசி மக்கள் எல்லா கோணங்களிலிருந்தும் பன்முக வன்முறைக்கு ஆளாகி வருகின்றனர். மனித உரிமை மீறல், போலி கைதுகள் மற்றும் வற்புறுத்தி சரணடையச் செய்தல் அங்கே சர்வ சாதாரணமாக நிகழ்பவை. பத்திரிகையாளர்கள் அங்குள்ள யதார்த்த நிலையை எழுத முடியாமல் வெளியில் சொல்ல முடியாத கட்டாயத்தில் இருக்கின்றனர்.

எனக்குப் பக்க பலமாக நின்ற பத்திரிகை நண்பர்கள், குடும்பத்தினர், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவருக்கும் நன்றி கடமைப்பட்டுள்ளேன்”என்கிறார் மாலினி சுப்பிரமணியம்.

———————————–
– கண்ணம்மா பாரதி
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக