Latest topics
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக by T.N.Balasubramanian Today at 6:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:47 pm
» ஈத் வாழ்த்துகள்.
by T.N.Balasubramanian Today at 4:45 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Today at 2:28 pm
» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Today at 2:26 pm
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Today at 2:23 pm
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Today at 2:21 pm
» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm
» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Today at 2:09 pm
» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm
» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm
» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:05 pm
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:04 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am
» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am
» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am
» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am
» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am
» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am
» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am
» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூ.5,000 வரை மட்டுமே இனி பழைய நோட்டுகள் டெபாசிட்: ரிசர்வ் வங்கி அதிரடி
3 posters
Page 1 of 1
ரூ.5,000 வரை மட்டுமே இனி பழைய நோட்டுகள் டெபாசிட்: ரிசர்வ் வங்கி அதிரடி
ழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்காக இனி ரூ.5,000 வரை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும் என்று புதிய அதிரடி கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு இம்மாதம் 30-ம் தேதி வரையே காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.
நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பு நீக்கம் செய்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8-ம் தேதி இரவு அறிவித்தார். பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள், அஞ்சலகங்களில் டிசம்பர் 30-ம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
பழைய ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்படும்போது, ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமான தொகையை செலுத்தினால், வரிவிதிப்பு முறை பின்பற்றப்படுவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், கறுப்புப் பணத்துக்கு எதிரான பிடியை இன்னும் வலுப்படுத்தும் வகையில், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கு மேலும் சில கடுமையான கட்டுப்பாடுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பின்படி, 'டிசம்பர் 30 வரை, ஒரு கணக்கில் ரூ.5,000 வரை மட்டுமே பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்காக டெபாசிட் செய்ய முடியும்.
மேலும், மத்திய அரசின் அறிவிப்புக்குப் பின், இதுநாள் வரை பழைய நோட்டுகளை மாற்றிக்கொள்ளாததற்கான உரிய காரணங்களையும் வங்கி அதிகாரிகளிடம் வாடிக்கையாளர்கள் அளிக்க வேண்டும்.
வங்கி கணக்குகளில் கறுப்பு பணம் டெபாசிட் ஆகாமல் தடுப்பதற்காக இந்தப் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (பிஎம்ஜிகேஒய்) திட்டத்தை முறையாக செயல்படுத்துவதற்கு ஏதுவாகவும் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கணக்கில் காட்டப்படாத பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மத்திய அரசு மேலும் ஒரு வாய்ப்புதான் பிஎம்ஜிகேஒய் திட்டம். அதன்படி, கணக்கில் வராத தொகையை ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன்பாக வங்கியில் டெபாசிட் செய்து 50 சதவீதம் வரி மற்றும் அபராதம் செலுத்தி அந்த தொகையை வெள்ளையாக்கிக்கொள்ளலாம்.
மொத்த தொகையில் 25 சதவீத தொகையை நான்கு ஆண்டுகளுக்கு வட்டி இல்லாத டெபாசிட்டாக வைத்திருக்க வேண்டும். இந்த தொகை பாசனம், வீடு, கட்டுமானம், ஆரம்பகல்வி மற்றும் ஆரம்ப சுகாதாரத்துக்கு பயன்படுத்தப்படும்.
வரி ஏய்ப்பு செய்து பதுக்கிய கறுப்புப் பணத்துக்கு மட்டுமே இந்த விதிமுறை பொருந்தும். அந்நிய செலாவணி மோசடி வழக்கு, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டத்துக்கு புறம்பான வழிகளில் கிடைத்த பணத்துக்கு இந்த சட்டத்தின் மூலம் நிவாரணம் பெற முடியாது.
இந்த திட்டத்தின் கீழ் இன்று முதல் வரும் மார்ச் 31 வரை தங்கள் வசம் உள்ள கறுப்புப் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வரி செலுத்தி வெள்ளையாக்கிக் கொள்ளலாம் என்பது கவனிக்கத்தக்கது.
-
தி இந்து
பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு இம்மாதம் 30-ம் தேதி வரையே காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.
நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பு நீக்கம் செய்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8-ம் தேதி இரவு அறிவித்தார். பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள், அஞ்சலகங்களில் டிசம்பர் 30-ம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
பழைய ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்படும்போது, ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமான தொகையை செலுத்தினால், வரிவிதிப்பு முறை பின்பற்றப்படுவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், கறுப்புப் பணத்துக்கு எதிரான பிடியை இன்னும் வலுப்படுத்தும் வகையில், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கு மேலும் சில கடுமையான கட்டுப்பாடுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பின்படி, 'டிசம்பர் 30 வரை, ஒரு கணக்கில் ரூ.5,000 வரை மட்டுமே பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்காக டெபாசிட் செய்ய முடியும்.
மேலும், மத்திய அரசின் அறிவிப்புக்குப் பின், இதுநாள் வரை பழைய நோட்டுகளை மாற்றிக்கொள்ளாததற்கான உரிய காரணங்களையும் வங்கி அதிகாரிகளிடம் வாடிக்கையாளர்கள் அளிக்க வேண்டும்.
வங்கி கணக்குகளில் கறுப்பு பணம் டெபாசிட் ஆகாமல் தடுப்பதற்காக இந்தப் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (பிஎம்ஜிகேஒய்) திட்டத்தை முறையாக செயல்படுத்துவதற்கு ஏதுவாகவும் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கணக்கில் காட்டப்படாத பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மத்திய அரசு மேலும் ஒரு வாய்ப்புதான் பிஎம்ஜிகேஒய் திட்டம். அதன்படி, கணக்கில் வராத தொகையை ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன்பாக வங்கியில் டெபாசிட் செய்து 50 சதவீதம் வரி மற்றும் அபராதம் செலுத்தி அந்த தொகையை வெள்ளையாக்கிக்கொள்ளலாம்.
மொத்த தொகையில் 25 சதவீத தொகையை நான்கு ஆண்டுகளுக்கு வட்டி இல்லாத டெபாசிட்டாக வைத்திருக்க வேண்டும். இந்த தொகை பாசனம், வீடு, கட்டுமானம், ஆரம்பகல்வி மற்றும் ஆரம்ப சுகாதாரத்துக்கு பயன்படுத்தப்படும்.
வரி ஏய்ப்பு செய்து பதுக்கிய கறுப்புப் பணத்துக்கு மட்டுமே இந்த விதிமுறை பொருந்தும். அந்நிய செலாவணி மோசடி வழக்கு, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டத்துக்கு புறம்பான வழிகளில் கிடைத்த பணத்துக்கு இந்த சட்டத்தின் மூலம் நிவாரணம் பெற முடியாது.
இந்த திட்டத்தின் கீழ் இன்று முதல் வரும் மார்ச் 31 வரை தங்கள் வசம் உள்ள கறுப்புப் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வரி செலுத்தி வெள்ளையாக்கிக் கொள்ளலாம் என்பது கவனிக்கத்தக்கது.
-
தி இந்து
Re: ரூ.5,000 வரை மட்டுமே இனி பழைய நோட்டுகள் டெபாசிட்: ரிசர்வ் வங்கி அதிரடி
சிறப்பு சிறப்பு
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ரூ.5,000 வரை மட்டுமே இனி பழைய நோட்டுகள் டெபாசிட்: ரிசர்வ் வங்கி அதிரடி 865843](https://2img.net/u/1813/71/41/02/smiles/865843.gif)
![ரூ.5,000 வரை மட்டுமே இனி பழைய நோட்டுகள் டெபாசிட்: ரிசர்வ் வங்கி அதிரடி 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
![ரூ.5,000 வரை மட்டுமே இனி பழைய நோட்டுகள் டெபாசிட்: ரிசர்வ் வங்கி அதிரடி 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![ரூ.5,000 வரை மட்டுமே இனி பழைய நோட்டுகள் டெபாசிட்: ரிசர்வ் வங்கி அதிரடி 102564](https://2img.net/u/1813/71/41/02/smiles/102564.gif)
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|