புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
25 Posts - 39%
heezulia
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
1 Post - 2%
Barushree
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
1 Post - 2%
M. Priya
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
7 Posts - 2%
prajai
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு ! எழுந்து நிற்க எழுது! கவிஞர் இரா. இரவி.


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Dec 09, 2016 12:55 pm

பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !

எழுந்து நிற்க எழுது!
கவிஞர் இரா. இரவி.

*****
தூங்கிக் கிடக்கும் தமிழ்ச் சமுதாயம் உடன்
எழுந்து நிற்க எழுது! விழித்தெழ எழுது!

கும்பகர்ணன் தூக்கம் தூங்கியது போதும்
குமுகாயம் சிறக்க எழுந்து நில்!

“தூங்காதே தம்பி தூங்காதே” என்று
திரைப்படத்தில் பட்டுக்கோட்டை எழுதினார்!

விழித்தெழு! விழித்தெழு! என்று பலரும்
வெள்ளித்திரையில் பாடல் பாடினார்கள்!

தமிழனின் தூக்கம் களைய வில்லை
தட்டி எழுப்புவோம் எழுத்தால் தட்டி எழுப்புவோம் !

உலகின் முதல்மொழி தமிழ் என்பதை
உணரவில்லை நம் தமிழர்!

உலகின் முதல்மனிதன் தமிழன் என்பதை
உணரவில்லை நம் தமிழர்!

அம்மா அப்பா என்று நல்ல
அழகிய தமிழ்ச் சொற்கள் இருக்கையில்!

ஆங்கிலத்தில் மம்மி டாடி என்கிறான்
ஆங்கில வழியில் கல்வி பயில்கின்றான்!

‘மம்மி’ என்றால் செத்தபிணமென்று பொருள்
மம்மியின் பொருள் அறியாது விரும்புகின்றான்!

உலகம் முழுவதும் தமிழன் வாழ்கின்றான்
உள்ளூரில் தமிழ் வாழ்கின்றதா? இல்லை!

பேருந்து நிலையத்தை 'பஸ் ஸ்டாண்டு' என்கிறான்
தொடர்வண்டி நிலையத்தை 'ரயில்வே ஸ்டேசன்' என்கிறான்!

இப்படியே தமிங்கிலம் பேசிப் பேசி
இனிய தமிழ்மொழியைக் கொல்கிறான்

தொலைக்காட்சியில் தமிழ்க்கொலை என்பது
தொடர்கதையாகத் தொடர்ந்து வருகின்றது!

பேசுகின்ற பேச்சில் ஆங்கிலத்தைக் கலந்து
பைந்தமிழ் மொழியைச் சிதைத்து வருகின்றான்!

பத்துச் சொற்கள் பேசினால் அதில்
பாதிக்கு மேல் ஆங்கிலச் சொற்கள்!

தாய்மொழி குசராத்தியை காந்தியடிகள் நேசித்தார்
தனது வரலாற்றை குசராத்தி மொழியில் எழுதினார்!

டால்சுடாயின் வழி திருக்குறளை நேசித்தார்
டால்சுடாயின் வழி தமிழை வாசித்தார்!

அடுத்த பிறவி இருந்தால் திருக்குறள் பயில
அற்புத தமிழனாகப் பிறக்க விரும்பினார்!

நோபல் நாயகர் ரவீந்திரநாத் தாகூர்
நாளும் விரும்பியது அவரது தாய்மொழி வங்க மொழி!

மாமனிதர் அப்துல்கலாம் பயின்றது தமிழ்வழி
மண்ணில் நல்லவண்ணம் வாழ்ந்து மனதில் நின்றார்!

விஞ்ஞானிகள் சாதனையாளர்கள் அனைவரும்
விரும்பிப் பயின்றது தாய்மொழி தமிழ்மொழி!

ஆரம்பக்கல்வி அழகுதமிழில் இருந்தால்
அறிவாளியாக குழந்தைகள் வளரும்!

என்ன வளம் இல்லை நம் தமிழ்மொழியில்
ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில்!

இல்லாதவன் பிச்சை எடுத்தால் தவறில்லை
எல்லாம் இருப்பவன் ஏன் பிச்சை எடுக்க வேண்டும்!

சொற்களின் களஞ்சியம் நம் தமிழ்மொழி
சொற்களின் சுரங்கம் நம் தமிழ்மொழி!

காவியங்கள் காப்பியங்கள் நிறைந்த மொழி
கற்கண்டு கவிதைகள் உள்ள மொழி!

உலகப்பொதுமறையை உலகிற்கு தந்த மொழி
உலகம் போற்றிடும் உன்னத தமிழ்மொழி!

ஆராய்ச்சியாளர்களின் அறிவிப்பு முதல்மொழி தமிழ்
அறியவில்லை புரியவில்லை நம் தமிழர்களுக்கு!

தமிழின் பெருமையை தமிழர்கள் அறியவில்லை
தரணியில் மற்றவர் நன்கு அறிந்துள்ளனர்!

தமிழைப் பிரிக்கும் சாதியும் மதமும் வேண்டாம்
தமிழரை இணைக்கும் தமிழ்மொழி வேண்டும்!

உலகில் தமிழன் இல்லாத நாடே இல்லை
உலகத் தமிழர் யாவரும் தமிழால் ஒன்றுபடுவோம்!

தமிழருக்கு ஓர் இன்னல் என்றால் உடனே
தட்டிக் கேட்போம்! தோள் கொடுப்போம்!

ஒருநூறு ஆண்டுகளில் அழியும் மொழிகளில் தமிழ் ஒன்று
ஓர் எச்சரிக்கை செய்துள்ளனர் ஆய்வாளர்கள்!

உலகின் முதல்மொழி தமிழைத் தமிழர்கள்
ஒருபோதும் அழியவிட மாட்டோம் என்று உறுதி ஏற்போம்!

தமிங்கிலப் பேச்சுக்கு முடிவு கட்டுவோம்
தமிழர்களோடு தமிழிலேயே உரையாடி மகிழ்வோம்!

குழந்தைகளுக்கு முதலில் தமிழ் கற்பிப்போம்
குழந்தைகள் வளர்ந்தபின்னே ஆங்கிலம் பயிலட்டும்!

ஏமாந்த காலம் முற்றுப் பெறட்டும்
ஏமாற்றமின்றி விழிப்புணர்வு பெற்றிடுவோம்!

மற்றவரின் ஒற்றுமையைக் கண்டு பாடம் கற்று
மண்ணில்உள்ள தமிழர்கள் ஒன்றிணைவோம்!

ஒரு கை தட்டினால் ஓசை வராது
ஒன்றுபடாமல் கத்தினால் யாருக்கும் கேட்காது!

தமிழ்மொழி காக்க ஒன்றுபடுவோம்!
தமிழஇனம் காக்க ஒன்றுபடுவோம்!

கொட்டக் கொட்டக் குனிபவன் அல்ல தமிழன்
கொட்டிய கரத்தை முறிப்பவன் தமிழன்!

எழுத்திலும் வடமொழி நஞ்சு கலந்து வருகின்றனர்
எழுத்துக் கலப்பிற்கும் முடிவு கட்டுவோம்!

தமிழைத் தமிழாக தமிழர்கள் எழுதிடுவோம்
தமிழைத் தமிழாக தமிழர்கள் பேசிடுவோம்!

உணவில் கலப்படம் உடலுக்குக் கேடு தரும்
மொழியில் கலப்படம் மொழிக்குக் கேடு தரும்!

முடிந்தமட்டும் நல்ல தமிழ் பேசுவோம்
முடிந்தமட்டும் நல்ல தமிழ் எழுதுவோம்

தமிழராகப் பிறந்ததற்காக பெருமை கொள்வோம்
தமிழர்கள் யாவரும் பெருமை கொள்வோம்!

‘தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!’
தரணிக்கு நாமக்கல் கவிஞர் வரிகளை பறைசாற்றிடுவோம்!

உலகஅளவில் பல சாதனைகள் நிகழ்த்தியவர்கள் தமிழர்கள்
உணர்ந்து தமிழ்வழி பயின்றதால் சாதித்துக் காட்டினார்கள்!

ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக உரைப்பது தமிழ்மொழி
உயிருக்காக இரங்கிட இரக்கம் காட்டுவது தமிழ்மொழி!

மனிதநேயத்தை மனதிற்கு கற்பிப்பது தமிழ்மொழி
மட்டற்ற இலக்கியத்தை தன்னில் கொண்ட்து தமிழ்மொழி

அகமும் புறமும் அழகாய் விளக்குவது தமிழ்மொழி
அய்ந்திணை இலக்கியங்கள் கொண்டது தமிழ்மொழி!

அறம் செய்ய விரும்பு என்று சொல்வது தமிழ்மொழி
அனைவரையும் நேசிக்க வைப்பது தமிழ்மொழி!

வீரத்தை போர்விதிகளை விளக்குவது தமிழ்மொழி
விவேகத்தை தன்னம்பிக்கையை விதைப்பது தமிழ்மொழி!

எல்லா மொழிகளின் தாய்மொழி தமிழ்மொழி
எல்லா மொழிகளின் மூலமொழி தமிழ்மொழி!

ஆங்கிலத்திலும் பல சொற்கள் உள்ள மொழி தமிழ்மொழி
ஆங்கிலேயரும் விரும்பிப் படித்த மொழி தமிழ்மொழி!

மதம் பரப்ப வந்தவரும் தமிழ் பரப்பிய வரலாறு உண்டு
மதம் கடந்து மனிதம் கற்பிக்கும் மொழி தமிழ்மொழி!

உலகத்தமிழ் மாநாடுகள் கண்ட மொழி தமிழ்மொழி
உலகமெங்கும் ஒலிக்கும் உன்னத மொழி தமிழ்மொழி!

எண்ணிலடங்காத சிறப்புப் பெற்ற மொழி தமிழ்மொழி
எண்ணத்தை தூய்மைப்படுத்திடும் மொழி தமிழ்மொழி!

கலை பண்பாடு கற்பிக்கும் மொழி தமிழ்மொழி
கனியை விட சிறந்த இனிமை மொழி தமிழ்மொழி!

தமிழ்சொற்கள் இல்லாத பிறமொழிகள் இல்லை
தரணியில் உள்ள மொழிகளில் வள்ளல் தமிழ்மொழி!

படைப்பாளிகள் அனைவருக்கும் வேண்டுகோள்
படைப்பில் விழிப்புணர்வு விதைத்திடுங்கள்!

ஆண்டாண்டு காலமாக தூங்கியது போதும்
அனைவரும் உடனே விழித்து எழுவோம்!

ஏமாளி அல்ல தமிழன் என்று மெய்ப்பிப்போம்
எப்பாடுபட்டாவது நம் தமிழ்மொழி காத்திடுவோம்!

அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்
அளவிற்கு மிஞ்சிய தூக்கமும் கேடாகும்

தமிழா! தமிழா! தூங்கி வழிந்தது போதும்
தமிழா! தமிழா! எழுந்து நில் எழுச்சி கொள்!

எழுந்து நிற்போம் எழுச்சி கொள்வோம்
எல்லோரும் ஒன்றிணைவோம் இன்பத்தமிழைக் காத்திடுவோம்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக